Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20
+35
sureshyeskay
rudran
SajeevJino
சிங்கம்
redindian
C.DEVARAJ
பார்த்திபன்
ரேவதி
ரா.ரமேஷ்குமார்
sakthi
nandhtiha
dharmaraajk
மகா பிரபு
அருண்
கே. பாலா
கேசவன்
யினியவன்
நவீன்
anandkce
ஹர்ஷித்
அசுரன்
றினா
இளமாறன்
malik
Manik
இரா.பகவதி
அதி
பிரசன்னா
உதயசுதா
balakarthik
சிவா
பாலாஜி
ரா.ரா3275
ராஜா
ராஜ்அருண்
39 posters
Page 4 of 14
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20
First topic message reminder :
வணக்கம்
21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியாது என்று இன்னொரு பிரிவினரும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் ,அவர்கள் அவ்வாறு கூற காரணமாக இருப்பது மாயன் ,
அதான் தெரியுமே மாயன் கலெண்டர் 2012 ல முடியுது அதனால அழியும் னு சொல்றாங்க இது எல்லாருக்கும் தெரியுமே
புதுசா நீ என்ன சொல்லபோரன்னு கேட்குறீங்களா ?
கண்டிப்பா இது ஒரு புது விஷயம் தான் ,இந்த கட்டுரை யை இப்போ படிக்கிறவங்களுக்கு ஒரு புது விஷயம் தான்
உதாரணமா இந்த கட்டுரை ல இருக்குற 2 சின்ன தகவல்கள்
1.இப்போ உலகமே பயப்படுற குலோபல் வார்மிங் திட்டமிட்டு பரப்புன ஒரு பொய்
2.உலகம் அழிஞ்சதும் தப்பி பிழைக்குறவங்களுக்காக நோர்வே நாட்டுக்குச் சொந்தமாக, வட துருவத்தில் 'ஸ்வால்பார்ட்' (Svalbard) எனும் தீவுல உலகில் உள்ள அனைத்து விதமான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றின் விதைகளும் (Seeds), கிழங்குகளும், தண்டுகளும் கோடிக்கணக்கில், டன் டன்னாக பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்படுகிறது
சரி இப்போ இந்த கட்டுரையை பத்தி சொல்லிட்றேன்
இது ஒரு ஆராய்சி கட்டுரை இத எழுதுனவரு ராஜ்சிவா
உயிர்மை.கொம் தளத்துல உயிரோசை ங்க்ர வார இதழ் ல வாராவாரம் வந்தது ......இது ரொம்ப பெரிய கட்டுரையா இருக்கிறதல டெய்லி கொஞ்சம் கொஞ்சம் பதிவிட்றேன்
சரி டா மேட்டர் அ சொல்லு னு சொல்றீங்களா .....................வாங்க கட்டுரைக்கு போவோம்
பகுதி 1
இன்னும் 8 மாதங்களில், 2012ம் ஆண்டு டிசம்பர் . இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது '2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது' என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Ruins](https://2img.net/h/uyirmmai.com/Images/ContentImages/uyirosai-165/ruins.jpg)
"சரியாக டிசம்பர் 21 உலகம் அழியப் போகிறதா?" என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது.
இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.
அது….! 'மாயா'.
மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் இந்த அழிவு பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படிச் சொல்லியிருந்தால், என்னதான் சொல்லியிருப்பார்கள்? அதை ஏன் நாம் நம்ப வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்.
இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்ற நினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 P-4](https://2img.net/h/uyirmmai.com/Images/ContentImages/uyirosai-165/P-4.jpg)
என்ன என்பது இது பற்றி விளக்கமாகப் பார்க்கலாமா…..?
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும், ஒருநாள் திடீரென அந்த வீட்டிலிருந்து, அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்? திகைத்துப் போய்விட மாட்டீர்களா? ஆச்சரியத்துக்கும், மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா?
சரி, அதுவே ஒரு வீடாக இல்லாமல், உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவே திடீரென ஒரே இரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கே இப்படி என்றால், ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள் மறைந்தால்….?
ஆம்....! வரலாற்றில் இது நடந்தது. ஒரு நாட்டில் வாழ்ந்த, மிக மிக மிகச் சிறிய அளவினரை விட, மற்ற அனைத்து மக்களும், திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்த ஒரு அடையாளங்களையும், மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Maya](https://2img.net/h/uyirmmai.com/Images/ContentImages/uyirosai-165/maya.jpg)
ஏன் மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம் வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே போனார்கள்? எப்படிப் போனார்கள்? யாருக்கும் தெரியவில்லை. எதுவும் புரியவில்லை.
இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள் பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.
அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவை அவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.
இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர் பின்வாங்கத் தொடங்கினார்கள்.
மாயா என்றாலே மர்மம்தானா? என நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 What-Do-the-Mayan-Carvings-Depict-2](https://2img.net/h/uyirmmai.com/Images/ContentImages/uyirosai-165/What-Do-the-Mayan-Carvings-Depict-2.jpg)
சரி, அப்படி என்னதான் நடந்தது? ஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டு கொண்டார்கள்? ஆராய்ந்த சுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?
இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம். ஒன்று விடாமல் பார்க்கலாம். அவற்றை நீங்கள் அறிந்து கொண்டால், இதுவரை பார்த்திராத, கேட்டிராத, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்.
வணக்கம்
21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியாது என்று இன்னொரு பிரிவினரும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் ,அவர்கள் அவ்வாறு கூற காரணமாக இருப்பது மாயன் ,
அதான் தெரியுமே மாயன் கலெண்டர் 2012 ல முடியுது அதனால அழியும் னு சொல்றாங்க இது எல்லாருக்கும் தெரியுமே
புதுசா நீ என்ன சொல்லபோரன்னு கேட்குறீங்களா ?
கண்டிப்பா இது ஒரு புது விஷயம் தான் ,இந்த கட்டுரை யை இப்போ படிக்கிறவங்களுக்கு ஒரு புது விஷயம் தான்
உதாரணமா இந்த கட்டுரை ல இருக்குற 2 சின்ன தகவல்கள்
1.இப்போ உலகமே பயப்படுற குலோபல் வார்மிங் திட்டமிட்டு பரப்புன ஒரு பொய்
2.உலகம் அழிஞ்சதும் தப்பி பிழைக்குறவங்களுக்காக நோர்வே நாட்டுக்குச் சொந்தமாக, வட துருவத்தில் 'ஸ்வால்பார்ட்' (Svalbard) எனும் தீவுல உலகில் உள்ள அனைத்து விதமான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றின் விதைகளும் (Seeds), கிழங்குகளும், தண்டுகளும் கோடிக்கணக்கில், டன் டன்னாக பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்படுகிறது
சரி இப்போ இந்த கட்டுரையை பத்தி சொல்லிட்றேன்
இது ஒரு ஆராய்சி கட்டுரை இத எழுதுனவரு ராஜ்சிவா
உயிர்மை.கொம் தளத்துல உயிரோசை ங்க்ர வார இதழ் ல வாராவாரம் வந்தது ......இது ரொம்ப பெரிய கட்டுரையா இருக்கிறதல டெய்லி கொஞ்சம் கொஞ்சம் பதிவிட்றேன்
சரி டா மேட்டர் அ சொல்லு னு சொல்றீங்களா .....................வாங்க கட்டுரைக்கு போவோம்
பகுதி 1
இன்னும் 8 மாதங்களில், 2012ம் ஆண்டு டிசம்பர் . இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது '2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது' என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Ruins](https://2img.net/h/uyirmmai.com/Images/ContentImages/uyirosai-165/ruins.jpg)
"சரியாக டிசம்பர் 21 உலகம் அழியப் போகிறதா?" என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது.
இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.
அது….! 'மாயா'.
மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் இந்த அழிவு பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படிச் சொல்லியிருந்தால், என்னதான் சொல்லியிருப்பார்கள்? அதை ஏன் நாம் நம்ப வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்.
இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்ற நினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 P-4](https://2img.net/h/uyirmmai.com/Images/ContentImages/uyirosai-165/P-4.jpg)
என்ன என்பது இது பற்றி விளக்கமாகப் பார்க்கலாமா…..?
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும், ஒருநாள் திடீரென அந்த வீட்டிலிருந்து, அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்? திகைத்துப் போய்விட மாட்டீர்களா? ஆச்சரியத்துக்கும், மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா?
சரி, அதுவே ஒரு வீடாக இல்லாமல், உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவே திடீரென ஒரே இரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கே இப்படி என்றால், ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள் மறைந்தால்….?
ஆம்....! வரலாற்றில் இது நடந்தது. ஒரு நாட்டில் வாழ்ந்த, மிக மிக மிகச் சிறிய அளவினரை விட, மற்ற அனைத்து மக்களும், திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்த ஒரு அடையாளங்களையும், மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Maya](https://2img.net/h/uyirmmai.com/Images/ContentImages/uyirosai-165/maya.jpg)
ஏன் மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம் வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே போனார்கள்? எப்படிப் போனார்கள்? யாருக்கும் தெரியவில்லை. எதுவும் புரியவில்லை.
இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள் பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.
அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவை அவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.
இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர் பின்வாங்கத் தொடங்கினார்கள்.
மாயா என்றாலே மர்மம்தானா? என நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 What-Do-the-Mayan-Carvings-Depict-2](https://2img.net/h/uyirmmai.com/Images/ContentImages/uyirosai-165/What-Do-the-Mayan-Carvings-Depict-2.jpg)
சரி, அப்படி என்னதான் நடந்தது? ஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டு கொண்டார்கள்? ஆராய்ந்த சுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?
இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம். ஒன்று விடாமல் பார்க்கலாம். அவற்றை நீங்கள் அறிந்து கொண்டால், இதுவரை பார்த்திராத, கேட்டிராத, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்.
Last edited by ராஜ்அருண் on Thu Apr 26, 2012 11:04 am; edited 18 times in total
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20
ஒரு தமிழர் தான் மாயன்களுக்கு பல நுட்பங்களை சொல்லி குடுத்து உள்ளார் , அவரை கடவுளாக வழி பட்டு உள்ளார்கள் என இந்த கட்டுரை தெளிவு படுத்துகிறது
ஓ சரி சரி , தமிழர்கள் தான் மயன்ஸ் என்று நண்பர்கள் கூற கேட்டுள்ளேன் , இப்போது தான் உண்மை புரிகிறது
Re: உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20
இரா.பகவதி wrote:ஒரு தமிழர் தான் மாயன்களுக்கு பல நுட்பங்களை சொல்லி குடுத்து உள்ளார் , அவரை கடவுளாக வழி பட்டு உள்ளார்கள் என இந்த கட்டுரை தெளிவு படுத்துகிறது
ஓ சரி சரி , தமிழர்கள் தான் மயன்ஸ் என்று நண்பர்கள் கூற கேட்டுள்ளேன் , இப்போது தான் உண்மை புரிகிறது
ராஜ் அருண் தொடர்வார் .... நான் இங்கே கதைக்க வேணாம் பகவதி
Guest- Guest
Re: உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20
மிகவும் அருமையான கட்டுரை.. ஆவல் மேலோங்கிவிட்டது அருண். இனி முடிவு வரை நான் பின்னூட்டமிட மாட்டேன்... விருப்பம் கொத்தானை அழுத்துகிறேன்... நீங்கள் தொடர்ச்சியாக கூட தொடரலாம். நன்றி
Last edited by அசுரன் on Fri Apr 13, 2012 12:20 am; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20
பகுதி ---3
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%201](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%201.jpg)
"கடந்த தொடரில் ஏதோ ஒரு படத்தைப் போட்டுவிட்டு, அந்தப் படத்துக்கும், ராக்கெட்டுக்கும் (Rocket) சம்பந்தம் இருப்பதாகச் சொல்வதை எல்லாம் நாம் எப்படி நம்புவது? சொல்லப் போனால் அந்தப் படத்தில் இருப்பது ஏதோ ஒரு விதமான சித்திரம் அவ்வளவுதான்" என்று நீங்கள் நினைப்பீர்கள். அதில் தவறும் இல்லை. நானும் ஆரம்பத்தில் அப்படியேதான் நினைத்தேன், மாயா மக்களை முழுமையாக அறியும் வரை.
அந்தச் சித்திரத்தை மிகச் சரியாக உற்று நோக்கிப் பாருங்கள். அதில் ஒரு ஒழுங்கு முறையையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாத அமைப்பையும், காட்சியையும் அது கொண்டிருப்பது, நிச்சயம் எமக்குத் தெரிகிறது. எதுவுமே இல்லாத ஒரு காலத்தில், எதையும் பார்க்காத ஒன்றை வைத்து இப்படி ஒரு கலை வடிவைப் படைக்கும் சாத்தியம் அக்காலங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. அத்துடன் இந்தச் சித்திரம் மாயன்களால் கட்டப்பட்ட 'பிரமிட்' (Pyramid) வடிவக் கட்டடங்களுக்குக் கீழே இருந்த ஒரு சுரங்கத்தில், பாதுகாப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது (இந்தப் பிரமிட்டுகள்தான் எமக்கு மாயன்கள் பற்றிய ஆச்சரியங்களைப் பின்னர் கொடுக்கப் போகின்றன
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%202](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%202.jpg)
அந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்ட பிரமிட்டை மேலேயும், அதன் சுரங்கவழியைக் கீழேயும் தந்திருக்கிறேன். இதைப் பார்க்கும்போது, மாயாக்கள் இந்தச் சித்திரத்துக்குக் கொடுத்த முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%203](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%203.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%204](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%204.jpg)
அதெல்லாம் சரிதான். இது ஒன்றை வைத்துக் கொண்டு மாயாக்களுக்கும், ராக்கெட்டுக்கும் சம்பந்தம் உண்டு என்று, எப்படி முடிவெடிக்க முடியும்" என்னும் கேள்வி சுலபமாக எமக்குத் தோன்றுவது இயல்புதான். ராக்கெட்டுடன் சம்பந்தம் என்றால், அப்புறம் விண்வெளிதானே! இதற்கெல்லாம் சாத்தியம் என்பதே கிடையாது என்று அடித்துச் சொல்லும் உங்கள் மனது.
அதனால் மாயன்கள் வாழ்ந்த இடங்களில் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த இவற்றை முதலில் பாருங்கள். நவீன வின்வெளிப் பிரயாணியின் படத்துக்கும், மாயாக்களின் மற்ற இரண்டு படங்களுக்கும் உள்ள தொடர்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%205](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%205.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%206](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%206.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%207](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%207.jpg)
இத்துடன் இவை முடிந்து விடவில்லை. மாயன்களின் ஆச்சரியங்கள் எம்மைத் தொடர்ந்தே தாக்குகின்றன. அந்த ஆச்சரியங்களை நான் சொற்களால் வடிப்பதை விடப் படங்களாகவே உங்களுக்குத் தந்தால்தான், அதிகமான விளக்கங்கள் உருவாகும்
'ஆயிரம் வார்த்தைகள் சொல்லும் கருத்தை ஒரு காட்சி சொல்லிவிடும்' என்பார்கள். அதனால் உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, நான் படங்களைத்தான் இனி அதிகமாகத் தரலாம் என நினைக்கிறேன்.
மாயன் கட்டடங்களை மேலும் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மாயன் பிரதேசமான மத்திய அமெரிக்காவில், அடுத்ததாக ஒன்றைக் கண்டதும் வெலவெலத்தே போய்விட்டனர். அவர்கள் ஏன் வெலவெலத்தனர் என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் எதைக் கண்டெடுத்தார்கள் என்பதை நீங்களே பாருங்க
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%208](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%208.jpg)
இந்தப் படத்தைத் தனியாகப் பார்த்தால் உங்களுக்குப் புரிவதற்கு சற்றுக் கடினமாக இருக்கலாம். எனவே, ஒரு நவீன விண்கலத்தில் நெருப்பைக் கக்கும் கீழ்ப்பகுதியையும், இந்தப் பொருளையும் சற்று ஒப்பிட்டுத்தான் பாருங்கள்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%209](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%209.jpg)
இவற்றையும் தற்செயலென்றே நாம் வைத்துக் கொள்வோம். மாயன் சமூகத்தினர் எதையோ செய்து வைத்திருக்க, நான் அதை ராக்கட்டுடன் (Rocket) ஒப்பிட்டு சும்மா தேவையில்லாமல் பீதியைக் கிளப்புகின்றேன், அறிவியல் பற்றிப் பேசுவதாகச் சொல்லிவிட்டு ஒட்டுமொத்தமாக மூட நம்பிக்கையை வளர்க்கிறேன் என்றே வைத்துக் கொள்வோம்.
ஆனால் அடுத்து அகப்பட்டவை, எல்லாவற்றையும் அடியோடு தூக்கிச் சாப்பிட்டது. அதைப் பார்ததும் நான் சொல்வதில் ஏதும் உண்மை இருக்கலாமோ என்றும் நீங்கள் நினைப்பீர்கள். ராக்கெட்டைப் படமாக வரைந்திருப்பவர்கள் அதில் பயணம் செய்தவர்களையும் படமாக வரைந்துதானே இருக்க வேண்டும். இப்போது இந்தப் படங்களையும் பாருங்கள்.
இது ஒரு தற்கால, விண்வெளிக்குச் செல்லும் நவீன மனிதனின் படம்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2010](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2010.jpg)
இவை மாயன்களிடம் இருந்து பெறப்பட்ட வடிவங்கள்............!
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Mayan-astronaut](https://2img.net/h/www.ufo-contact.com/wp-content/uploads/2011/05/mayan-astronaut.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2012](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2012.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2013](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2013.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2014](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2014.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2015](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2015.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2016](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2016.jpg)
இதற்கு மேலும் நான் இந்த விண்வெளி உடை போன்ற தோற்றத்துடன் படம் போடத் தேவையே இல்லை என்றே நினைக்கிறேன். இந்தப் படங்களே உங்களுக்குப் பல செய்திகளை விளக்கியிருக்கும்.
மாயா சமூகத்தினரின் கலாச்சாரத்தை ஆராயும்போது கிடைத்த ஓவியங்கள், சிலைகள் போன்றவற்றில், நவீன விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தமான பலவற்றைக் காணக் கூடியதாக இருந்தது என்னவோ உண்மை. அவை உண்மையிலேயே விண்வெளி சம்பந்தமானவைதானா? அல்லது வேறு அர்த்தங்கள் உள்ளனவா என்னும் கேள்வி தொடர்ந்து எமக்குத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. ஆனாலும் இது விண்வெளி சம்பந்தமானதுதான் என்றால், அதற்கு இதுவரை நான் கொடுத்த சாட்சியங்கள் போதுமானவைதானா?
அட, எப்பவும் விண்வெளி உடையிலேயே இருக்கிறீர்களே, வேறு எதுவுமேயில்லையா? என்கிறீர்களா!
சரி, இப்பொழுது இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இது எப்படிச் சாத்தியம் என்று சொல்லுங்கள். இவை எதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்ல முடிகிறதா...?
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2017](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2017.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2018](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2018.jpg)
பறவைகளா? பூச்சிகளா? இல்லை மீன்களா?
அல்லது................!
ஆகாய விமானங்களா....?
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்........!
பூச்சிகள், பறவைகள், மீன்கள் என்றால், முதல் படத்தில் அந்த நடுவே இருக்கும் உருவத்தில், எப்படிக் காற்றாடி போன்ற அமைப்பு வந்தது?
என்ன தலை சுற்றுகிறதா.....? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட, தங்கத்தினால் செய்யப்பட்ட இந்த உருவங்கள் சொல்லும் உண்மைகளை நாம் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால், மேலும் பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். அந்த உண்மைகள் இவற்றை விடக் கனமானவை.
அந்த உண்மைகளைப் பற்றி நாளை பார்ப்போம்...........!
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%201](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%201.jpg)
"கடந்த தொடரில் ஏதோ ஒரு படத்தைப் போட்டுவிட்டு, அந்தப் படத்துக்கும், ராக்கெட்டுக்கும் (Rocket) சம்பந்தம் இருப்பதாகச் சொல்வதை எல்லாம் நாம் எப்படி நம்புவது? சொல்லப் போனால் அந்தப் படத்தில் இருப்பது ஏதோ ஒரு விதமான சித்திரம் அவ்வளவுதான்" என்று நீங்கள் நினைப்பீர்கள். அதில் தவறும் இல்லை. நானும் ஆரம்பத்தில் அப்படியேதான் நினைத்தேன், மாயா மக்களை முழுமையாக அறியும் வரை.
அந்தச் சித்திரத்தை மிகச் சரியாக உற்று நோக்கிப் பாருங்கள். அதில் ஒரு ஒழுங்கு முறையையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாத அமைப்பையும், காட்சியையும் அது கொண்டிருப்பது, நிச்சயம் எமக்குத் தெரிகிறது. எதுவுமே இல்லாத ஒரு காலத்தில், எதையும் பார்க்காத ஒன்றை வைத்து இப்படி ஒரு கலை வடிவைப் படைக்கும் சாத்தியம் அக்காலங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. அத்துடன் இந்தச் சித்திரம் மாயன்களால் கட்டப்பட்ட 'பிரமிட்' (Pyramid) வடிவக் கட்டடங்களுக்குக் கீழே இருந்த ஒரு சுரங்கத்தில், பாதுகாப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது (இந்தப் பிரமிட்டுகள்தான் எமக்கு மாயன்கள் பற்றிய ஆச்சரியங்களைப் பின்னர் கொடுக்கப் போகின்றன
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%202](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%202.jpg)
அந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்ட பிரமிட்டை மேலேயும், அதன் சுரங்கவழியைக் கீழேயும் தந்திருக்கிறேன். இதைப் பார்க்கும்போது, மாயாக்கள் இந்தச் சித்திரத்துக்குக் கொடுத்த முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%203](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%203.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%204](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%204.jpg)
அதெல்லாம் சரிதான். இது ஒன்றை வைத்துக் கொண்டு மாயாக்களுக்கும், ராக்கெட்டுக்கும் சம்பந்தம் உண்டு என்று, எப்படி முடிவெடிக்க முடியும்" என்னும் கேள்வி சுலபமாக எமக்குத் தோன்றுவது இயல்புதான். ராக்கெட்டுடன் சம்பந்தம் என்றால், அப்புறம் விண்வெளிதானே! இதற்கெல்லாம் சாத்தியம் என்பதே கிடையாது என்று அடித்துச் சொல்லும் உங்கள் மனது.
அதனால் மாயன்கள் வாழ்ந்த இடங்களில் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த இவற்றை முதலில் பாருங்கள். நவீன வின்வெளிப் பிரயாணியின் படத்துக்கும், மாயாக்களின் மற்ற இரண்டு படங்களுக்கும் உள்ள தொடர்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%205](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%205.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%206](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%206.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%207](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%207.jpg)
இத்துடன் இவை முடிந்து விடவில்லை. மாயன்களின் ஆச்சரியங்கள் எம்மைத் தொடர்ந்தே தாக்குகின்றன. அந்த ஆச்சரியங்களை நான் சொற்களால் வடிப்பதை விடப் படங்களாகவே உங்களுக்குத் தந்தால்தான், அதிகமான விளக்கங்கள் உருவாகும்
'ஆயிரம் வார்த்தைகள் சொல்லும் கருத்தை ஒரு காட்சி சொல்லிவிடும்' என்பார்கள். அதனால் உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, நான் படங்களைத்தான் இனி அதிகமாகத் தரலாம் என நினைக்கிறேன்.
மாயன் கட்டடங்களை மேலும் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மாயன் பிரதேசமான மத்திய அமெரிக்காவில், அடுத்ததாக ஒன்றைக் கண்டதும் வெலவெலத்தே போய்விட்டனர். அவர்கள் ஏன் வெலவெலத்தனர் என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் எதைக் கண்டெடுத்தார்கள் என்பதை நீங்களே பாருங்க
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%208](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%208.jpg)
இந்தப் படத்தைத் தனியாகப் பார்த்தால் உங்களுக்குப் புரிவதற்கு சற்றுக் கடினமாக இருக்கலாம். எனவே, ஒரு நவீன விண்கலத்தில் நெருப்பைக் கக்கும் கீழ்ப்பகுதியையும், இந்தப் பொருளையும் சற்று ஒப்பிட்டுத்தான் பாருங்கள்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%209](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%209.jpg)
இவற்றையும் தற்செயலென்றே நாம் வைத்துக் கொள்வோம். மாயன் சமூகத்தினர் எதையோ செய்து வைத்திருக்க, நான் அதை ராக்கட்டுடன் (Rocket) ஒப்பிட்டு சும்மா தேவையில்லாமல் பீதியைக் கிளப்புகின்றேன், அறிவியல் பற்றிப் பேசுவதாகச் சொல்லிவிட்டு ஒட்டுமொத்தமாக மூட நம்பிக்கையை வளர்க்கிறேன் என்றே வைத்துக் கொள்வோம்.
ஆனால் அடுத்து அகப்பட்டவை, எல்லாவற்றையும் அடியோடு தூக்கிச் சாப்பிட்டது. அதைப் பார்ததும் நான் சொல்வதில் ஏதும் உண்மை இருக்கலாமோ என்றும் நீங்கள் நினைப்பீர்கள். ராக்கெட்டைப் படமாக வரைந்திருப்பவர்கள் அதில் பயணம் செய்தவர்களையும் படமாக வரைந்துதானே இருக்க வேண்டும். இப்போது இந்தப் படங்களையும் பாருங்கள்.
இது ஒரு தற்கால, விண்வெளிக்குச் செல்லும் நவீன மனிதனின் படம்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2010](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2010.jpg)
இவை மாயன்களிடம் இருந்து பெறப்பட்ட வடிவங்கள்............!
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Mayan-astronaut](https://2img.net/h/www.ufo-contact.com/wp-content/uploads/2011/05/mayan-astronaut.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2012](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2012.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2013](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2013.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2014](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2014.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2015](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2015.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2016](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2016.jpg)
இதற்கு மேலும் நான் இந்த விண்வெளி உடை போன்ற தோற்றத்துடன் படம் போடத் தேவையே இல்லை என்றே நினைக்கிறேன். இந்தப் படங்களே உங்களுக்குப் பல செய்திகளை விளக்கியிருக்கும்.
மாயா சமூகத்தினரின் கலாச்சாரத்தை ஆராயும்போது கிடைத்த ஓவியங்கள், சிலைகள் போன்றவற்றில், நவீன விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தமான பலவற்றைக் காணக் கூடியதாக இருந்தது என்னவோ உண்மை. அவை உண்மையிலேயே விண்வெளி சம்பந்தமானவைதானா? அல்லது வேறு அர்த்தங்கள் உள்ளனவா என்னும் கேள்வி தொடர்ந்து எமக்குத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. ஆனாலும் இது விண்வெளி சம்பந்தமானதுதான் என்றால், அதற்கு இதுவரை நான் கொடுத்த சாட்சியங்கள் போதுமானவைதானா?
அட, எப்பவும் விண்வெளி உடையிலேயே இருக்கிறீர்களே, வேறு எதுவுமேயில்லையா? என்கிறீர்களா!
சரி, இப்பொழுது இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இது எப்படிச் சாத்தியம் என்று சொல்லுங்கள். இவை எதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்ல முடிகிறதா...?
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2017](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2017.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2018](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2018.jpg)
பறவைகளா? பூச்சிகளா? இல்லை மீன்களா?
அல்லது................!
ஆகாய விமானங்களா....?
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்........!
பூச்சிகள், பறவைகள், மீன்கள் என்றால், முதல் படத்தில் அந்த நடுவே இருக்கும் உருவத்தில், எப்படிக் காற்றாடி போன்ற அமைப்பு வந்தது?
என்ன தலை சுற்றுகிறதா.....? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட, தங்கத்தினால் செய்யப்பட்ட இந்த உருவங்கள் சொல்லும் உண்மைகளை நாம் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால், மேலும் பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். அந்த உண்மைகள் இவற்றை விடக் கனமானவை.
அந்த உண்மைகளைப் பற்றி நாளை பார்ப்போம்...........!
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
நன்றி
இன்னும் எத்தனை பதிவுகள் உண்டு சொல்லுங்கள் நண்பரே . மிக்க ஆவலாக உள்ளேன் .
இதை புத்தகமாக சேகரிக்கிறேன் . நன்றி .
இதை புத்தகமாக சேகரிக்கிறேன் . நன்றி .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
anandkce- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
Re: உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20
anandkce wrote:இன்னும் எத்தனை பதிவுகள் உண்டு சொல்லுங்கள் நண்பரே . மிக்க ஆவலாக உள்ளேன் .
இதை புத்தகமாக சேகரிக்கிறேன் . நன்றி .
பதிப்புரிமை (Copyright) ராஜ்அருணிடம்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20
வணக்கம்
இன்னியோட பகுதிக்கு போக முன்னால ஒரு சின்ன விஷயம்
நேத்து
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2018](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2018.jpg)
இந்த படத்துல இருக்கிறது விமானமாங்க்ர சந்தேகம் எனக்கும் இந்த கட்டுரைய படிக்கும் போது இருந்தது ,அதுக்காக இதபத்தி இணயத்துல தகவல் தேட ஆரம்பிச்சேன்
அப்போ எனக்கு கிடச்ச தகவல்கள் ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Sa2](https://2img.net/h/4.bp.blogspot.com/_mXGon_GfcbA/TFMZHj4gWCI/AAAAAAAABtc/fhm8ghctaY4/s1600/sa2.png)
இந்த படத்துல அந்த விமானம் 4 வது இடத்துல இருக்கிறது ,இதுல என்ன ஆச்சர்யம் னா
1.இந்த விமான உருவம் கிடச்சது மாயன்கள் கிட்டருந்து ஆனா மேல நான் குடுத்திருக்கிற படம் நம்ம புராணங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்ட விமானங்கள்
2.இந்த விமானத்த பயன்படுத்துனது தேவர்களின் தலைவன் இந்திரன்
3.இந்த படத்துல 8வது இருக்குற விமானம் புஷ்பக விமானம்
புஷ்பக விமானம் எங்கயோ படிச்ச மாதிரி இருக்கே னு தோணுதா?
ராமாயணத்துல ராவணன் சீதைய கடத்தி கூட்டிட்டு போனது இந்த புஷ்பக விமானம்தான்
உண்மயவே இந்த விமானங்கள் லாம் இருந்துதுதானு ஆச்சர்யமா இருக்கா,
இந்த ஆச்சர்யத்த அப்டியே pause பண்ணி வச்சிகோங்க,இந்த விமானத்தோட பெயர்கள் ,எப்படி இயங்கும் ,புராண காலத்துல என்ன எரிபொருள் பயன்படுத்துனாங்க ,யார்லாம் பயன்படுத்துனாங்க எல்லா தகவல்களயும் கட்டுரையோட இன்னொரு பகுதில சொல்றேன் ,
இப்போ கட்டுரையோட ஆச்சர்யத்துக்குள்ள நுழைவோம்
பகுதி ---------4
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%201](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%201.jpg)
மேலே உள்ள படத்தில் இருக்கும் இந்த மாயா இன மனிதன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இந்தப் படத்தைப் பார்க்கும் போது, ஏதோ வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் உங்களுக்கு இருக்கும். அது என்னவாக இருக்கும் என்னும் பிரச்சினையை உங்களிடமே விட்டுவிட்டு நான் தொடர்கிறேன்.......!
கடந்த தொடரில் கொடுத்திருந்த படங்களில் இருப்பவை பறவைகளா? பூச்சிகளா? மீன்களா? இல்லை விமானங்களா? என்னும் சந்தேகத்துடன் கடந்த பதிவில் உங்களிடமிருந்து விடைபெற்றிருந்தேன். அந்த உருவங்கள் ஏற்படுத்திய பாதிப்பு உங்களை விட்டு அகலச் சிறிது காலமாகும், அந்த அளவுக்கு உருவங்கள் இருந்தது என்னவோ நிஜம்தான். இல்லையா?
இதுவரை, 'ரைட் சகோதரர்கள்' விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், அவற்றைப் புறம் தள்ளும் பல இரகசியங்கள் எங்கோ ஒரு மூலையில், மத்திய அமெரிக்காவில், எப்போதோ மறைந்திருக்கின்றது என்பது ஆச்சரியம்தானே! அதைவிட ஆச்சரியம், இந்தச் சிறிய விமானங்கள் போலுள்ளவற்றை விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது, அவை விமானப் பறப்புச் சக்திக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டு கொண்டார்கள். ரைட் சகோதரர்கள் கண்டு பிடித்த விமானம் கூட மிகப் பழமை வாய்ந்தது. ஆனால், இந்த உருவங்கள் நவீன விமானங்கள் போல வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
இதுவெல்லாம் எப்படிச் சாத்தியம்? விஞ்ஞான அறிவையும், விண்வெளி அறிவையும் மாயா இனத்தவர் பெற்றது எப்படி? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காட்டுவாசிகள் போல வாழ்ந்த மக்கள், எப்படி இவ்வளவு அறிவைக் கொண்டிருக்க முடியும்? இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாக, நாம் உடன் புரிந்துகொள்ளக் கூடியது, விண்ணிலிருந்து மாயன் இனத்தவரை நோக்கி யாராவது வந்திருக்க வேண்டும் என்பதும், அவர்கள் மூலமாக மாயா இனத்தவர்களுக்கு இந்தளவுக்கு அறிவு கிடைத்திருக்க வேண்டும் என்பதும்தான். அப்படி இல்லையெனில், ஒன்றுமே இல்லாத ஒன்றுக்கு இவ்வளவு ‘பில்டப்‘பை நான் கொடுப்பதாகவும் இருக்கலாம்.
ஒருவேளை விண்வெளியில் இருந்து அயல்கிரகவாசிகள் வந்திருந்தால், அவர்களை மாயாக்கள் பதிவு செய்திருப்பார்கள் அல்லவா? அப்படியானால் அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்? 'ஏலியன்' என்று அழைக்கப்படும் அயல்கிரகவாசியின் வினோத தலையுடன் உள்ள உருவங்களை எத்தனை படங்களில்தான் நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட உருவங்களை மாயன்களும் பார்த்திருப்பார்களோ?
ஆம்! அதற்கு சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுவது போல மாயன் உருவாக்கிய வடிவங்கள் சில உள்ளன. அவற்றை நீங்களே பாருங்கள்.......!
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%202](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%202.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%203](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%203.jpg)
இந்த உருவங்களைப் பார்த்தீர்கள் அல்லவா? இவை அயல்கிரகவாசிகளின் உருவம்தான் என்றால், அவர்கள் மாயன்களிடம் மட்டும்தான் வந்திருக்க வேண்டுமா...? இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் மாயன் இனத்தவருக்கு மட்டும்தான் ஏற்பட்டதா அல்லது வேறு யாருக்காவது ஏற்பட்டதா? அப்படி வேறு இனத்தவருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதா எனப் பார்க்கும் போது, அங்கும் எமக்கு ஆச்சரியங்களே காத்திருந்ததன.
பிரபலமான எகிப்திய பிரமிட்களை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். பல மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கிய உலக அதிசயமாகப் பார்க்கப்படுவது இந்தப் பிரமிட்கள். இந்தப் பிரமிட்கள் என்றாலே எமக்குத் தோன்றுவது பிரமிப்புத்தான்.
எகிப்தியப் பிரமிட்களில் இருந்த சித்திர வடிவ எழுத்துகளை ஆராய்ந்த போது அங்கு கிடைத்ததும் அதிர்ச்சிதான்.
அப்படி என்னதான் இருந்தது?
கொஞ்சம் மூச்சை அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்............!
இப்போ இவற்றைப் பாருங்கள்..........!!
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%204](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%204.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%205](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%205.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%206](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%206.jpg)
என்ன உங்களால் நம்பமுடியவில்லையல்லவா? சினிமாப் படங்களில் வருவது போன்று, அதே வடிவிலான உருவம். ஆச்சரியமாக இல்லை அல்லது சினிமாப் படங்களில் இவற்றைப் பார்த்துதான் ஏலியன் உருவங்களை உருவாக்கினார்களா?
சரி, இதுக்கே அசந்தால் எப்படி? இன்னும் இருக்கிறது பாருங்கள்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%207](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%207.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%208](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%208.jpg)
மேலே காட்டப்படிருக்கும் இரண்டு படங்களிலும் உள்ள வித்தியாசமான தலைகளுடன் கூடிய மனிதர்களைக் கவனியுங்கள். அப்படி உருவத்துடன் ஒப்பிடக்கூடிய எந்த ஒரு எகிப்தியரும் இருந்திருக்கவில்லை என்பதுதான் இங்கு ஆச்சரியம். மனித இனத்தின் தலையானது அன்று முதல் இன்று வரை சில குறிப்பிட்ட பரிமாணங்களைக் கொண்டதாகவே கூர்ப்படைந்து வந்திருக்கிறது. அது தாண்டிய எதையும் மனிதனாக எம்மால் பார்க்க முடிவதில்லை. ஆனால் பின்னால் நீண்டதாகக் காணப்படும் இத்தலையுள்ள உருவங்கள் எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.
இப்போது நான் தரும் இந்த உருவத்தைப் பாருங்கள்.........!
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%209](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%209.jpg)
எகிப்திய மன்னன் பாரோ அகெனாட்டன் (Pharaoh Akhenaten) என்பவனின் மனைவி இவள். மகாராணி. இவள் வாழ்ந்த காலம் கி.மு.1370 இலிருந்து கி.மு.1330. இவள் பெயர் ‘நெபர்டிடி‘ (Nefertiti). இவளைப் பற்றி இங்கு ஏன் நான் சொல்கிறேன் என்று யோசிப்பீர்கள். காரணம் உண்டு.
இவளது தலைக் கவசம் இல்லாத சிலை ஒன்று கண்காட்சிச் சாலையில் இருக்கிறது. அது இதுதான்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2010](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%2010.jpg)
இவளது தலை ஏன் இவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்? எகிப்திய வரலாற்றில் நெபர்டிடியின் சரித்திரம் மர்மம் வாய்ந்ததாகவே இருக்கிறது. இவள் அயல்கிரகத்தில் இருந்து வந்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா...?
சரி, நெபர்டிடியின் தலை கொஞ்சம் பெரிதென்றே நாம் வைத்துக் கொள்ளலாம். இவளுக்கும் ஏலியனுக்கும் சம்பந்தம் இல்லையென்றே எடுத்துக் கொள்வோம். ஆனால் நெபர்டிடியும் அவளது கணவனும் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் இந்தச் சித்திரத்தைப் பார்த்ததும் அந்த நம்பிக்கையும் அடியோடு தகர்ந்து விடுகிறதல்லவா?
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2011](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%2011.jpg)
இவை எல்லாவற்றையும் விட்டுவிடலாம். எதுவுமே இல்லாததை நாங்கள் என்னென்னவோ சொல்லி மாற்றிவிடுகிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் இந்தப் படம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா..?
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2012](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%2012.jpg)
இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். சரி, கொஞ்சம் பெரிதாக்கிப் பார்க்கலாம்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2013](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%2013.jpg)
விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட் படத்தில் தெரிகிறதா...? அதன் அளவு எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதை அதன் அருகே இருக்கும் மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
அடப் போப்பா ....! சும்மா கூராக இருப்பதெல்லாம் உங்களுக்கு ராக்கெட்டா என்று கேட்கத் தோன்றுகிறதா?
சரி, அப்போ, இதையும் பாருங்கள்........!
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2014](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%2014.jpg)
இந்தக் காலத்தில் இருக்கும் அனைத்து விதமான விமானங்களும் அடங்கிய ஓவியம் இது,என்ன சொல்றதுன்னே தெரியாம வாயாடச்சு போச்சா ?
இதற்கு மேலேயும் சொன்னால் தாங்கமுடியாமல் போகலாம். எனவே நாளை மீதியை பார்ப்போம்
இன்னியோட பகுதிக்கு போக முன்னால ஒரு சின்ன விஷயம்
நேத்து
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2018](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-168/Photo%2018.jpg)
இந்த படத்துல இருக்கிறது விமானமாங்க்ர சந்தேகம் எனக்கும் இந்த கட்டுரைய படிக்கும் போது இருந்தது ,அதுக்காக இதபத்தி இணயத்துல தகவல் தேட ஆரம்பிச்சேன்
அப்போ எனக்கு கிடச்ச தகவல்கள் ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Sa2](https://2img.net/h/4.bp.blogspot.com/_mXGon_GfcbA/TFMZHj4gWCI/AAAAAAAABtc/fhm8ghctaY4/s1600/sa2.png)
இந்த படத்துல அந்த விமானம் 4 வது இடத்துல இருக்கிறது ,இதுல என்ன ஆச்சர்யம் னா
1.இந்த விமான உருவம் கிடச்சது மாயன்கள் கிட்டருந்து ஆனா மேல நான் குடுத்திருக்கிற படம் நம்ம புராணங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்ட விமானங்கள்
2.இந்த விமானத்த பயன்படுத்துனது தேவர்களின் தலைவன் இந்திரன்
3.இந்த படத்துல 8வது இருக்குற விமானம் புஷ்பக விமானம்
புஷ்பக விமானம் எங்கயோ படிச்ச மாதிரி இருக்கே னு தோணுதா?
ராமாயணத்துல ராவணன் சீதைய கடத்தி கூட்டிட்டு போனது இந்த புஷ்பக விமானம்தான்
உண்மயவே இந்த விமானங்கள் லாம் இருந்துதுதானு ஆச்சர்யமா இருக்கா,
இந்த ஆச்சர்யத்த அப்டியே pause பண்ணி வச்சிகோங்க,இந்த விமானத்தோட பெயர்கள் ,எப்படி இயங்கும் ,புராண காலத்துல என்ன எரிபொருள் பயன்படுத்துனாங்க ,யார்லாம் பயன்படுத்துனாங்க எல்லா தகவல்களயும் கட்டுரையோட இன்னொரு பகுதில சொல்றேன் ,
இப்போ கட்டுரையோட ஆச்சர்யத்துக்குள்ள நுழைவோம்
பகுதி ---------4
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%201](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%201.jpg)
மேலே உள்ள படத்தில் இருக்கும் இந்த மாயா இன மனிதன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இந்தப் படத்தைப் பார்க்கும் போது, ஏதோ வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் உங்களுக்கு இருக்கும். அது என்னவாக இருக்கும் என்னும் பிரச்சினையை உங்களிடமே விட்டுவிட்டு நான் தொடர்கிறேன்.......!
கடந்த தொடரில் கொடுத்திருந்த படங்களில் இருப்பவை பறவைகளா? பூச்சிகளா? மீன்களா? இல்லை விமானங்களா? என்னும் சந்தேகத்துடன் கடந்த பதிவில் உங்களிடமிருந்து விடைபெற்றிருந்தேன். அந்த உருவங்கள் ஏற்படுத்திய பாதிப்பு உங்களை விட்டு அகலச் சிறிது காலமாகும், அந்த அளவுக்கு உருவங்கள் இருந்தது என்னவோ நிஜம்தான். இல்லையா?
இதுவரை, 'ரைட் சகோதரர்கள்' விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், அவற்றைப் புறம் தள்ளும் பல இரகசியங்கள் எங்கோ ஒரு மூலையில், மத்திய அமெரிக்காவில், எப்போதோ மறைந்திருக்கின்றது என்பது ஆச்சரியம்தானே! அதைவிட ஆச்சரியம், இந்தச் சிறிய விமானங்கள் போலுள்ளவற்றை விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது, அவை விமானப் பறப்புச் சக்திக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டு கொண்டார்கள். ரைட் சகோதரர்கள் கண்டு பிடித்த விமானம் கூட மிகப் பழமை வாய்ந்தது. ஆனால், இந்த உருவங்கள் நவீன விமானங்கள் போல வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
இதுவெல்லாம் எப்படிச் சாத்தியம்? விஞ்ஞான அறிவையும், விண்வெளி அறிவையும் மாயா இனத்தவர் பெற்றது எப்படி? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காட்டுவாசிகள் போல வாழ்ந்த மக்கள், எப்படி இவ்வளவு அறிவைக் கொண்டிருக்க முடியும்? இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாக, நாம் உடன் புரிந்துகொள்ளக் கூடியது, விண்ணிலிருந்து மாயன் இனத்தவரை நோக்கி யாராவது வந்திருக்க வேண்டும் என்பதும், அவர்கள் மூலமாக மாயா இனத்தவர்களுக்கு இந்தளவுக்கு அறிவு கிடைத்திருக்க வேண்டும் என்பதும்தான். அப்படி இல்லையெனில், ஒன்றுமே இல்லாத ஒன்றுக்கு இவ்வளவு ‘பில்டப்‘பை நான் கொடுப்பதாகவும் இருக்கலாம்.
ஒருவேளை விண்வெளியில் இருந்து அயல்கிரகவாசிகள் வந்திருந்தால், அவர்களை மாயாக்கள் பதிவு செய்திருப்பார்கள் அல்லவா? அப்படியானால் அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்? 'ஏலியன்' என்று அழைக்கப்படும் அயல்கிரகவாசியின் வினோத தலையுடன் உள்ள உருவங்களை எத்தனை படங்களில்தான் நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட உருவங்களை மாயன்களும் பார்த்திருப்பார்களோ?
ஆம்! அதற்கு சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுவது போல மாயன் உருவாக்கிய வடிவங்கள் சில உள்ளன. அவற்றை நீங்களே பாருங்கள்.......!
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%202](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%202.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%203](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%203.jpg)
இந்த உருவங்களைப் பார்த்தீர்கள் அல்லவா? இவை அயல்கிரகவாசிகளின் உருவம்தான் என்றால், அவர்கள் மாயன்களிடம் மட்டும்தான் வந்திருக்க வேண்டுமா...? இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் மாயன் இனத்தவருக்கு மட்டும்தான் ஏற்பட்டதா அல்லது வேறு யாருக்காவது ஏற்பட்டதா? அப்படி வேறு இனத்தவருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதா எனப் பார்க்கும் போது, அங்கும் எமக்கு ஆச்சரியங்களே காத்திருந்ததன.
பிரபலமான எகிப்திய பிரமிட்களை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். பல மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கிய உலக அதிசயமாகப் பார்க்கப்படுவது இந்தப் பிரமிட்கள். இந்தப் பிரமிட்கள் என்றாலே எமக்குத் தோன்றுவது பிரமிப்புத்தான்.
எகிப்தியப் பிரமிட்களில் இருந்த சித்திர வடிவ எழுத்துகளை ஆராய்ந்த போது அங்கு கிடைத்ததும் அதிர்ச்சிதான்.
அப்படி என்னதான் இருந்தது?
கொஞ்சம் மூச்சை அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்............!
இப்போ இவற்றைப் பாருங்கள்..........!!
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%204](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%204.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%205](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%205.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%206](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%206.jpg)
என்ன உங்களால் நம்பமுடியவில்லையல்லவா? சினிமாப் படங்களில் வருவது போன்று, அதே வடிவிலான உருவம். ஆச்சரியமாக இல்லை அல்லது சினிமாப் படங்களில் இவற்றைப் பார்த்துதான் ஏலியன் உருவங்களை உருவாக்கினார்களா?
சரி, இதுக்கே அசந்தால் எப்படி? இன்னும் இருக்கிறது பாருங்கள்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%207](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%207.jpg)
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%208](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%208.jpg)
மேலே காட்டப்படிருக்கும் இரண்டு படங்களிலும் உள்ள வித்தியாசமான தலைகளுடன் கூடிய மனிதர்களைக் கவனியுங்கள். அப்படி உருவத்துடன் ஒப்பிடக்கூடிய எந்த ஒரு எகிப்தியரும் இருந்திருக்கவில்லை என்பதுதான் இங்கு ஆச்சரியம். மனித இனத்தின் தலையானது அன்று முதல் இன்று வரை சில குறிப்பிட்ட பரிமாணங்களைக் கொண்டதாகவே கூர்ப்படைந்து வந்திருக்கிறது. அது தாண்டிய எதையும் மனிதனாக எம்மால் பார்க்க முடிவதில்லை. ஆனால் பின்னால் நீண்டதாகக் காணப்படும் இத்தலையுள்ள உருவங்கள் எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.
இப்போது நான் தரும் இந்த உருவத்தைப் பாருங்கள்.........!
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%209](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%209.jpg)
எகிப்திய மன்னன் பாரோ அகெனாட்டன் (Pharaoh Akhenaten) என்பவனின் மனைவி இவள். மகாராணி. இவள் வாழ்ந்த காலம் கி.மு.1370 இலிருந்து கி.மு.1330. இவள் பெயர் ‘நெபர்டிடி‘ (Nefertiti). இவளைப் பற்றி இங்கு ஏன் நான் சொல்கிறேன் என்று யோசிப்பீர்கள். காரணம் உண்டு.
இவளது தலைக் கவசம் இல்லாத சிலை ஒன்று கண்காட்சிச் சாலையில் இருக்கிறது. அது இதுதான்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2010](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%2010.jpg)
இவளது தலை ஏன் இவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்? எகிப்திய வரலாற்றில் நெபர்டிடியின் சரித்திரம் மர்மம் வாய்ந்ததாகவே இருக்கிறது. இவள் அயல்கிரகத்தில் இருந்து வந்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா...?
சரி, நெபர்டிடியின் தலை கொஞ்சம் பெரிதென்றே நாம் வைத்துக் கொள்ளலாம். இவளுக்கும் ஏலியனுக்கும் சம்பந்தம் இல்லையென்றே எடுத்துக் கொள்வோம். ஆனால் நெபர்டிடியும் அவளது கணவனும் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் இந்தச் சித்திரத்தைப் பார்த்ததும் அந்த நம்பிக்கையும் அடியோடு தகர்ந்து விடுகிறதல்லவா?
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2011](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%2011.jpg)
இவை எல்லாவற்றையும் விட்டுவிடலாம். எதுவுமே இல்லாததை நாங்கள் என்னென்னவோ சொல்லி மாற்றிவிடுகிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் இந்தப் படம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா..?
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2012](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%2012.jpg)
இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். சரி, கொஞ்சம் பெரிதாக்கிப் பார்க்கலாம்.
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2013](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%2013.jpg)
விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட் படத்தில் தெரிகிறதா...? அதன் அளவு எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதை அதன் அருகே இருக்கும் மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
அடப் போப்பா ....! சும்மா கூராக இருப்பதெல்லாம் உங்களுக்கு ராக்கெட்டா என்று கேட்கத் தோன்றுகிறதா?
சரி, அப்போ, இதையும் பாருங்கள்........!
![உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20 - Page 4 Photo%2014](https://2img.net/h/www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-167/Photo%2014.jpg)
இந்தக் காலத்தில் இருக்கும் அனைத்து விதமான விமானங்களும் அடங்கிய ஓவியம் இது,என்ன சொல்றதுன்னே தெரியாம வாயாடச்சு போச்சா ?
இதற்கு மேலேயும் சொன்னால் தாங்கமுடியாமல் போகலாம். எனவே நாளை மீதியை பார்ப்போம்
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20
நல்ல பதிவு நண்பா தொடரட்டும்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலக அழிவும் மாயா இன மக்களும்
» உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா
» நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு
» அனனத்து சுவிஸ் மக்களும் போகவும்
» இந்த நாடும் நாட்டு மக்களும் !
» உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா
» நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு
» அனனத்து சுவிஸ் மக்களும் போகவும்
» இந்த நாடும் நாட்டு மக்களும் !
Page 4 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|