ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள்

+2
ரா.ரா3275
சிவா
6 posters

Go down

ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள் Empty ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள்

Post by சிவா Sat Apr 07, 2012 10:18 pm

ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள் TN_120407153549000000

அப்போது அங்கிருந்த கடவுளின் தூதன் அவர்களை நோக்கி, அவர் அங்கே இல்லை, தாம் சொன்னபடி உயிர்த்தெழுந்தார் என்றார்.

உலக வரலாற்றில் கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியை ஈஸ்டர் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஆதாம், முதல் மனிதனாக கடவுளால் படைக்கப்பட்டு, அவனில் இருந்து 60வது தலைமுறையில் கிறிஸ்து எனப்பட்ட தீர்க்கதரிசி, கடவுளின் மகனாக கன்னிப்பெண்வயிற்றில் பாலகனாக பிறப்பார் என்ற செய்தியை கூறும் பைபிள், "பாடுபட்ட சிலுவை மரணத்தைச் சந்திப்பார். மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்றும் முன்னறிவித்தது. உலகத்தை எகிப்து, மேதியா, பாரசீகம், பாபிலோன், கிரேக்கம், ரோம் என ஆறு பேரரசுகள் ஆட்சி செய்தன. கி.பி. 1ல் ரோம் நாட்டின் பேரரசராக திபேரியு என்பவர் ஆட்சி செய்தார். அந்தக் காலத்தில் இஸ்ரேல் நாட்டில் உள்ள யூதகுலத்தில் கன்னி மரியாளின் வயிற்றில் இயேசு பிறந்தார். கி.பி. 34ல் யூதாஸ் என்ற சீடனால் 30 வெள்ளிக்காசுக்காக காட்டிக் கொடுக்கப்பட்டார். யூத மதக்குருக்கள் அவர் மீது பொய்க்குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்து கொன்றனர். இயேசுவின் சரீரம் கன்மலையில் உள்ள கல்லறையில் வைக்கப்பட்டது. மரணத்திற்குப் பின்பு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று இயேசு முன்னறிவித்து இருந்ததால் ரோம் நாட்டின் போர்ச் சேவகர்கள் அவரது கல்லறையைக் காவல் காத்தனர். மூன்றாம் நாள் அதிகாலையில் வானத்தில் இருந்து வந்த கடவுளின் தூதன், கல்லறையில் வைக்கப்பட்டிருந்த பெரிய கல்லைப் புரட்டி அதன் மீது அமர்ந்தான். போர்ச்சேவகர்கள் தரையில் விழுந்து செத்தவர்கள் போல ஆனார்கள்.

அப்போது இயேசுவின் கல்லறைக்கு மரியாதை செலுத்த சிலர் வந்தனர். கல் புரட்டிப் போட்டிருப்பதைக் கண்டதும், சரீரத்தை யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டனர் என்று புலம்பினர். அப்போது அங்கிருந்த கடவுளின் தூதன் அவர்களை நோக்கி, ""அவர் அங்கே இல்லை, தாம் சொன்னபடி உயிர்த்தெழுந்தார், என்றார். இயேசு <உயிர்த்தெழுந்ததை அறிந்த யூத குருக்கள் மறைந்திருந்தனர். அவரது சீடர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், ""குற்றமற்ற ரத்தத்தைக் காட்டிக் கொடுத்தேன், என்று மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டான். பின்பு 11 சீடர்களில் தோமா என்பவரைத் தவிர பத்து பேர் பூட்டியிருந்த ஓர் அறையில் இருந்தனர். இயேசு அவர்களின் நடுவே காட்சியளித்தார். தோமாவுக்கு இந்த தகவலை அவர்கள் கூறினர். தோமாவோ இதை நம்பவில்லை. அப்போது, இயேசு அங்கு வந்தார், தோமாவை நோக்கி, ""சந்தேகப்படாதே என்று கூறி அவனது கைவிரலால் தன் காயங்களைத் தொட்டுக் காட்டினார். அவன் உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுதான். இயேசு சீடர்களை நோக்கி, ""கண்டு நீங்கள் விசுவாசிப்பீர்கள். காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள், என்று கூறினார். அன்று முதல் இயேசு 40 நாட்கள் வரை தம்மை நம்பிய சீடர்களுக்கு காட்சியளித்து, 40வது நாள் பரலோகத்திற்கு ஏறிச் சென்றார். உலக வரலாற்றின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சி. அந்த நிகழ்வே அவரை நடுமைய நாயகனாக(கி.மு.,-கி.பி.,) இன்று வரை சாதிக்க வைத்துள்ளது.

சீடர்களுக்கு பிறப்பித்த கட்டளை

உலகில் பிறந்த எவரும் மரிப்பது கட்டாயமான ஒன்று. ஆனால், இயேசு கிறிஸ்து மட்டும் பிறந்து இறந்து உயிர்த்து எழுந்தார் என்ற நிகழ்ச்சி ஒரு சாதனை நிகழ்வாகும். உயிர்த்தெழுந்த பின் அவர் கூறியதைக் கேளுங்கள்.

""நான் மரித்தேன். ஆனாலும் சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன். என் பெயரால் இரண்டு அல்லது மூன்று பேர் எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன். வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். நீங்கள் ஜெருசலம் தொடங்கி உலகமெங்கும் சர்வ ஜாதியாருக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். மனம் திரும்புதலுக்கென்று பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள், என்றார். இவ்வாறு சீடர்களுக்குக் கட்டளையிட்ட பிறகு அவர் வானத்திற்கு ஏறிப்போனார்.

ஈஸ்டர் முட்டை

அமெரிக்காவில் ஈஸ்டர் விழா அரசு விழாவாக நடத்தப்படுகிறது. அன்று நன்றாக வேக வைக்கப்பட்ட முட்டையை சர்க்கரைப்பாகு ஊற்றி பதப்படுத்தி வண்ணம் பூசி அழகுபடுத்துகின்றனர். அதை கூடைகளில் வைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கின்றனர். பெரும்பாலும் இதில் சிவப்பு வண்ணம் தடவுவது வழக்கம். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உலக மக்களுக்காக ரத்தம் சிந்தியதை நினைவு கூரும் வகையில் இந்த வண்ணம் தடவப்படுகிறது. ஈஸ்டர் திருநாளுக்கு மறுநாள் அமெரிக்க ஜனாதிபதி தமது வெள்ளை மாளிகையில் குழந்தைகளுக்கு ஈஸ்டர் முட்டை வழங்குகிறார். நியூயார்க் நகரில் ஈஸ்டர் அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

ஈஸ்டர் அன்று கண்டுபிடிக்கப்பட்ட தீவு

பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்குப் பகுதியில் ஈஸ்டர் தீவு இருக்கிறது. 1722ம் ஆண்டு போர்த்துக்கீசிய மாலுமியான ஜேக்கப் ரோக்கிவீன் என்பவர் டேவிட்தீவைக் கண்டுபிடிக்கச் சென்றபோது, வழியில் இந்த தீவை கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த நாள் ஈஸ்டர் திருநாள் என்பதால், அந்த தீவுக்கும் ஈஸ்டர் என்று பெயர் சூட்டினார். அந்த தீவில் வசித்த மக்கள், "ரப்பா நூய் என்ற மொழியைப் பேசியதால் பிற்காலத்தில் அப்பெயரையே தங்கள் நாட்டிற்குச் சூட்டினர். இருப்பினும், "ஈஸ்டர் தீவு என்ற பெயரே மீண்டும் சூட்டப்பட்டது. இந்த தீவு தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.சிலி நாட்டின் அதிகாரத்திற்கு உட்பட்ட இத்தீவின் தலைநகரம்,"ஹாங்கா ரோவா இந்த தீவின் மொத்த மக்கள் தொகையே 4000க்குள் தான். இவர்களை ஆள்வதற்கு ஒரு கவர்னரும், ஒரு மேயரும் பணி செய்கின்றனர்.

தினமலர்


ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள் Empty Re: ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள்

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 10:20 pm

ஈஸ்டர் தகவல்களுக்கு நன்றி சிவா...


ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள் 224747944

ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள் Rஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள் Aஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள் Emptyஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள் Rஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள் Empty Re: ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள்

Post by அதி Sat Apr 07, 2012 10:21 pm

ஈகரை உறவுகள் அனைவருக்கும் இயேசு பிரான் உயிர்த்தெழுந்த திருநாள் வாழ்த்துக்கள்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள் Empty Re: ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 07, 2012 10:24 pm

உறவுகளுக்கு ஈஸ்டர் தின நல் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி சிவாவின் பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள் Empty Re: ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள்

Post by யினியவன் Sat Apr 07, 2012 10:30 pm

ஈஸ்டர் தின வாழ்த்துகள் அனைவருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள் Empty Re: ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள்

Post by இரா.பகவதி Sun Apr 08, 2012 12:23 am

உறவுகள் அனைவருக்கும் இனிய ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் , சிவா அண்ணா பதிவிற்கு நன்றி அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள் Empty Re: ஏப் 8 - இயேசு உயிர்த்தெழுந்த நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum