Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்
+11
அப்துல்
முஹைதீன்
பிஜிராமன்
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
கேசவன்
தர்மா
அதி
ரா.ரா3275
அசுரன்
15 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்
First topic message reminder :
அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள்
எங்கள் பள்ளியில் போன வாரம் ஒரு மூன்று மாணவர்கள் உடற்பயிற்சி வகுப்பில் மைதானத்தில் இருந்தபோது... கழிவறைக்கு சென்று ஒரு மாணவன் கொண்டு வந்த சிகரெட்டை பற்றவைத்து பிடித்துள்ளனர். இதை பள்ளி முதல்வரின் கவனத்திற்கு மற்ற மாணவர்கள் கொண்டுவந்தபோது அவர்களை கையாள வழக்கம் போல என்னை முதல்வர் கேட்டுக்கொண்டார்
நானும் எனது ஆட்டத்தை ஆரம்பித்தேன். முதலில் முதல்வரிடம் போட்டுக்கொடுத்த மாணவனை அழைத்து பேசினேன்.அவனிடம் கேட்டு தெரிந்துக்கொண்ட பெயர்களை ஒருகுறிப்பில் எழுதிக்கொண்டேன். பிறகு அவன் திரும்ப திரும்ப சொன்ன ஒரு மாணவனின் பெயரை மட்டும் சிறப்புக் குறி இட்டுக்கொண்டேன்.
இப்போது அந்த சிறப்புக்குறியிட்ட மாணவனை அழைத்தேன், அவனிடம் முதலில் அவனை பற்றியும் அவனது படிப்பு மற்றும் குடும்பம் பற்றியும் தெரிந்துக்கொண்டேன். பிறகு முழு ஆண்டுத்தேர்வுக்காக அறிவுரை கூறுவதற்காக அழைத்ததாக சொன்னேன். கடவுளிடம் வேன்டிக்கொள்ளும்படியும் அறிவுரை கூற அவன் அனைத்தையும் கேட்டுக்கொண்டான்.
பிறகு அவனிடம் நீ இன்று நேற்று அதற்கு முன் செய்த தவறுகளை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதி எனது குப்பை தொட்டியில் போட்டுவிடு கடவுள் உன்னை மன்னித்துவிடுவார் என்று சொன்னேன். அவனும் அவ்வாறே செய்தான். பிறகு அவனிடம் கேட்டேன், "சரி இப்ப நீ கடவுளின் பிள்ளை, அதனால் பொய் பேசமாட்டாய் சரிதானே" என்றேன். அவனும் "ஆமாம்" என்றான்.
சரி போன வாரம் இந்த தேதியில் இந்த கிழமையில் இந்த வகுப்பில் மைதானத்தில் எல்லாரும் இருந்தபோது நீ என்ன செய்துக்கொடிருந்தாய் என்றேன், அவ்வளவு தான் அவன் முகம் குப்பென்று வியர்த்துவிட்டது. மீண்டும் நான் அவனிடம் நீ உன் தவறுகளையெல்லாம் தான் எழுதி குப்பையில் போட்டுவிட்டு மன்னிப்பு பெற்றுவிட்டாயே! ஏன் பயப்படுகிறாய் சொல் என்றேன். அவன் இல்ல சார் அந்த தவறை மட்டும் எழுதவில்லை. அதான் பயமாக இருக்கிறது என்றான்.
சரி போகட்டும் இப்ப மீண்டும் எழுதி போடு என்றேன். மேலும் அவன் இப்போது தயக்கம் இல்லாமலும் ஒருவிதமான அழுத்தமும் இல்லாமலும் பேச ஆரம்பித்தான். அந்த வகுப்பில் இரண்டாவது ஆண்டு படித்துவரும் மாணவன் ஒருவன் (8 வது பெயில் ஆகி இரண்டாவது வருடம் படிக்கிற மாணவன்) தான் என்னையும் இன்னொரு மாணவனையும் வற்புருத்தி இதை செய்ய வைத்தான் என்று சொன்னதும் அவனை அதன் பிறகு இனி இவ்வாறு செய்வதில்லை என்று எழுதி தருமாறு கேட்டுக்கொண்டேன், அதை எனது கோப்புகளில் பைல் செய்துகொண்டேன்.
இதே போல மற்ற இரு மாணவர்களையும் அழைத்து பேசி அவர்களையும் தான் செய்தது தவறு என்று உணர வைத்து அதை அவர்களிடமே எழுதி வாங்கி கோப்பில் வைத்துக்கொண்டு பிறகு தவறுக்கு காரணமான அந்த பெரிய மாணவனை அழைத்து அவனுக்கு நிறைய புத்திமதிகள் சொன்னேன், கடைசியில் அவன் சொன்னது என்னை மிகவும் வருந்தவும் சிந்திக்கவும் வைத்தது. அது என்னவென்றால் "எங்க அப்பா என்னை தான் சிகெரெட் வாங்க கடைக்கு அனுப்புவார், வீட்டிலெயே தான் பிடிப்பார், அம்மா அவரை ஒன்றும் சொல்ல மாட்டார்கள், எனது அண்ணனும் திருட்டுதனமாக சிகரெட் பிடிப்பான், அதனால் நானும் முயற்சி செய்தேன்" என்றான்.
பிறகு சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகளை அவனுக்கு விளக்கி அவனது குற்ற உணர்வை போக்கி அவனை சகஜமாக பேசவைத்து இப்போது அவன் அந்த தவறை மீண்டும் செய்வதில்லை என்று உறுதிமொழி எடுத்திருக்கிறான். எல்லாம் முடிந்த பின் கோப்பை முதல்வரிடம் எடுத்துச்சென்று எனது கேஸ் இஸ்டரியை அவரிடம் விளக்கினேன். தவறுக்கு காரணமான அந்த மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து பேசுவதாக முதல்வர் சொன்னார். அன்று மதியம் அந்த மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். வந்தவுடன் அந்த மாணவனின் அம்மா, ஒரு பஜாரியை போல என் பையன் தப்பு செய்ய மாட்டான் ஆ ஊ என கத்தினார், கோப்பில் மாணவன் கைப்பட எழுதி தந்ததை காண்பித்ததும் அந்த அம்மா உடனே தனது நிலையை மாற்றி வேறுவிதமாக பேச ஆரம்பித்தார், இந்த பள்ளி நல்ல பள்ளி இல்லை, இங்கு மாணவர்கள் மோசம் எனது பையனை இந்த ஆண்டு தேர்வு முடிந்ததும் டி.சி. வாங்கி வேறு பள்ளிக்கு மாற்றிவிடுகிறேன். எங்களுக்கு அட்வைஸ் பண்ணுவதை நீங்க நிறுத்திக்கோங்க என்று கோபமான எழுந்து சென்றார்.
மீண்டும் ஒரு அரைமணி நேரத்தில் வந்தவர் டி.சி கொடுக்குமாறு ஒரு லட்டருடன் வந்து முதல்வரை பார்த்து சென்றுள்ளார் என கேள்விப்பட்டேன். அந்த மாணவன் எனது கண்பார்வையில் இன்னும் கொஞ்ச மாதங்களாவது இருந்திருந்தால் அவனை முழுவதுமாக மாற்ற என்னால் முடிந்திருக்கும்
இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மற்றவர் குறை சொல்வதை விரும்புவதே இல்லை... மேலும் வீட்டில் தவறு செய்யும் பெரியவர்கள் அந்த வீட்டு சின்ன பிள்ளைகளில் எதிர்காலத்தையும் கருத்திலும் கவனத்திலும் கொள்வதே இல்லை.
Good Citizen Club (GCC)
எனது இந்த குட் சிட்டிசென் கிளப் மாணவர்களே இப்போது மற்ற மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலிங் செய்ய பயிற்றுவித்துக்கொண்டிருக்கிறேன். சிலர் தயாராகவும் இருக்கிறார்கள். தவறு செய்பவர்களை மென்மையாக எப்படி திருத்துவது என்று இன்டர்வெல் வேளையிலும் மதிய உணவு வேளையிலும் சிறிதும் ஓய்வின்றி 50 முதல் 100 மாணவர்கள் வரை பள்ளி வளாகத்தை கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடனும் கையில் பிளாஸ்டிக் கிளவுஸ் மாட்டிக்கொண்டும் கீழே மற்ற மாணவர்கள் சிந்தும் உணவு மற்றும் குப்பைகளை மணி அடிப்பதற்குள் சுத்தம் செய்து பெரிய குப்பை தொட்டிகளில் வீசிவிடுவோம்... (எனது இந்த சிறிய அமைப்பிற்கு பள்ளியில் அஃப்சியலாக அங்கிகாரம் கொடுக்க மறுத்துவிட்டார்கள், நீங்க இருக்குற வரைக்கும் செய்யுங்க என்கிறார்கள் )
தினமும் மாலை 3.30 மணிக்கு இவர்கள் அனைவரும் ஒரு 5 முதல் 10 நிமிடங்கள் வரை என்னிடம் பேசிவிட்டு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் மதியம் உணவு வேளைகளில் எங்களுக்கான மீட்டிங் நடைபெறும். அதில் நான் நல்லொழுக்கம் என்றால் என்ன? அதை நாம் மற்றவரிடம் எதிர்பார்ப்பதை விட நம்மிடமிருந்தே முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பேன். வருட இறுதியில் சிறந்த GCC ஆப் த இயர் மாணவனை தேர்ந்தெடுத்து பரிசும் வழங்குவேன்.
அனுபவங்கள் தொடரும்
அன்புடன்
அசுரன்
அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள்
எங்கள் பள்ளியில் போன வாரம் ஒரு மூன்று மாணவர்கள் உடற்பயிற்சி வகுப்பில் மைதானத்தில் இருந்தபோது... கழிவறைக்கு சென்று ஒரு மாணவன் கொண்டு வந்த சிகரெட்டை பற்றவைத்து பிடித்துள்ளனர். இதை பள்ளி முதல்வரின் கவனத்திற்கு மற்ற மாணவர்கள் கொண்டுவந்தபோது அவர்களை கையாள வழக்கம் போல என்னை முதல்வர் கேட்டுக்கொண்டார்
நானும் எனது ஆட்டத்தை ஆரம்பித்தேன். முதலில் முதல்வரிடம் போட்டுக்கொடுத்த மாணவனை அழைத்து பேசினேன்.அவனிடம் கேட்டு தெரிந்துக்கொண்ட பெயர்களை ஒருகுறிப்பில் எழுதிக்கொண்டேன். பிறகு அவன் திரும்ப திரும்ப சொன்ன ஒரு மாணவனின் பெயரை மட்டும் சிறப்புக் குறி இட்டுக்கொண்டேன்.
இப்போது அந்த சிறப்புக்குறியிட்ட மாணவனை அழைத்தேன், அவனிடம் முதலில் அவனை பற்றியும் அவனது படிப்பு மற்றும் குடும்பம் பற்றியும் தெரிந்துக்கொண்டேன். பிறகு முழு ஆண்டுத்தேர்வுக்காக அறிவுரை கூறுவதற்காக அழைத்ததாக சொன்னேன். கடவுளிடம் வேன்டிக்கொள்ளும்படியும் அறிவுரை கூற அவன் அனைத்தையும் கேட்டுக்கொண்டான்.
பிறகு அவனிடம் நீ இன்று நேற்று அதற்கு முன் செய்த தவறுகளை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதி எனது குப்பை தொட்டியில் போட்டுவிடு கடவுள் உன்னை மன்னித்துவிடுவார் என்று சொன்னேன். அவனும் அவ்வாறே செய்தான். பிறகு அவனிடம் கேட்டேன், "சரி இப்ப நீ கடவுளின் பிள்ளை, அதனால் பொய் பேசமாட்டாய் சரிதானே" என்றேன். அவனும் "ஆமாம்" என்றான்.
சரி போன வாரம் இந்த தேதியில் இந்த கிழமையில் இந்த வகுப்பில் மைதானத்தில் எல்லாரும் இருந்தபோது நீ என்ன செய்துக்கொடிருந்தாய் என்றேன், அவ்வளவு தான் அவன் முகம் குப்பென்று வியர்த்துவிட்டது. மீண்டும் நான் அவனிடம் நீ உன் தவறுகளையெல்லாம் தான் எழுதி குப்பையில் போட்டுவிட்டு மன்னிப்பு பெற்றுவிட்டாயே! ஏன் பயப்படுகிறாய் சொல் என்றேன். அவன் இல்ல சார் அந்த தவறை மட்டும் எழுதவில்லை. அதான் பயமாக இருக்கிறது என்றான்.
சரி போகட்டும் இப்ப மீண்டும் எழுதி போடு என்றேன். மேலும் அவன் இப்போது தயக்கம் இல்லாமலும் ஒருவிதமான அழுத்தமும் இல்லாமலும் பேச ஆரம்பித்தான். அந்த வகுப்பில் இரண்டாவது ஆண்டு படித்துவரும் மாணவன் ஒருவன் (8 வது பெயில் ஆகி இரண்டாவது வருடம் படிக்கிற மாணவன்) தான் என்னையும் இன்னொரு மாணவனையும் வற்புருத்தி இதை செய்ய வைத்தான் என்று சொன்னதும் அவனை அதன் பிறகு இனி இவ்வாறு செய்வதில்லை என்று எழுதி தருமாறு கேட்டுக்கொண்டேன், அதை எனது கோப்புகளில் பைல் செய்துகொண்டேன்.
இதே போல மற்ற இரு மாணவர்களையும் அழைத்து பேசி அவர்களையும் தான் செய்தது தவறு என்று உணர வைத்து அதை அவர்களிடமே எழுதி வாங்கி கோப்பில் வைத்துக்கொண்டு பிறகு தவறுக்கு காரணமான அந்த பெரிய மாணவனை அழைத்து அவனுக்கு நிறைய புத்திமதிகள் சொன்னேன், கடைசியில் அவன் சொன்னது என்னை மிகவும் வருந்தவும் சிந்திக்கவும் வைத்தது. அது என்னவென்றால் "எங்க அப்பா என்னை தான் சிகெரெட் வாங்க கடைக்கு அனுப்புவார், வீட்டிலெயே தான் பிடிப்பார், அம்மா அவரை ஒன்றும் சொல்ல மாட்டார்கள், எனது அண்ணனும் திருட்டுதனமாக சிகரெட் பிடிப்பான், அதனால் நானும் முயற்சி செய்தேன்" என்றான்.
பிறகு சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகளை அவனுக்கு விளக்கி அவனது குற்ற உணர்வை போக்கி அவனை சகஜமாக பேசவைத்து இப்போது அவன் அந்த தவறை மீண்டும் செய்வதில்லை என்று உறுதிமொழி எடுத்திருக்கிறான். எல்லாம் முடிந்த பின் கோப்பை முதல்வரிடம் எடுத்துச்சென்று எனது கேஸ் இஸ்டரியை அவரிடம் விளக்கினேன். தவறுக்கு காரணமான அந்த மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து பேசுவதாக முதல்வர் சொன்னார். அன்று மதியம் அந்த மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். வந்தவுடன் அந்த மாணவனின் அம்மா, ஒரு பஜாரியை போல என் பையன் தப்பு செய்ய மாட்டான் ஆ ஊ என கத்தினார், கோப்பில் மாணவன் கைப்பட எழுதி தந்ததை காண்பித்ததும் அந்த அம்மா உடனே தனது நிலையை மாற்றி வேறுவிதமாக பேச ஆரம்பித்தார், இந்த பள்ளி நல்ல பள்ளி இல்லை, இங்கு மாணவர்கள் மோசம் எனது பையனை இந்த ஆண்டு தேர்வு முடிந்ததும் டி.சி. வாங்கி வேறு பள்ளிக்கு மாற்றிவிடுகிறேன். எங்களுக்கு அட்வைஸ் பண்ணுவதை நீங்க நிறுத்திக்கோங்க என்று கோபமான எழுந்து சென்றார்.
மீண்டும் ஒரு அரைமணி நேரத்தில் வந்தவர் டி.சி கொடுக்குமாறு ஒரு லட்டருடன் வந்து முதல்வரை பார்த்து சென்றுள்ளார் என கேள்விப்பட்டேன். அந்த மாணவன் எனது கண்பார்வையில் இன்னும் கொஞ்ச மாதங்களாவது இருந்திருந்தால் அவனை முழுவதுமாக மாற்ற என்னால் முடிந்திருக்கும்
இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மற்றவர் குறை சொல்வதை விரும்புவதே இல்லை... மேலும் வீட்டில் தவறு செய்யும் பெரியவர்கள் அந்த வீட்டு சின்ன பிள்ளைகளில் எதிர்காலத்தையும் கருத்திலும் கவனத்திலும் கொள்வதே இல்லை.
Good Citizen Club (GCC)
எனது இந்த குட் சிட்டிசென் கிளப் மாணவர்களே இப்போது மற்ற மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலிங் செய்ய பயிற்றுவித்துக்கொண்டிருக்கிறேன். சிலர் தயாராகவும் இருக்கிறார்கள். தவறு செய்பவர்களை மென்மையாக எப்படி திருத்துவது என்று இன்டர்வெல் வேளையிலும் மதிய உணவு வேளையிலும் சிறிதும் ஓய்வின்றி 50 முதல் 100 மாணவர்கள் வரை பள்ளி வளாகத்தை கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடனும் கையில் பிளாஸ்டிக் கிளவுஸ் மாட்டிக்கொண்டும் கீழே மற்ற மாணவர்கள் சிந்தும் உணவு மற்றும் குப்பைகளை மணி அடிப்பதற்குள் சுத்தம் செய்து பெரிய குப்பை தொட்டிகளில் வீசிவிடுவோம்... (எனது இந்த சிறிய அமைப்பிற்கு பள்ளியில் அஃப்சியலாக அங்கிகாரம் கொடுக்க மறுத்துவிட்டார்கள், நீங்க இருக்குற வரைக்கும் செய்யுங்க என்கிறார்கள் )
தினமும் மாலை 3.30 மணிக்கு இவர்கள் அனைவரும் ஒரு 5 முதல் 10 நிமிடங்கள் வரை என்னிடம் பேசிவிட்டு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் மதியம் உணவு வேளைகளில் எங்களுக்கான மீட்டிங் நடைபெறும். அதில் நான் நல்லொழுக்கம் என்றால் என்ன? அதை நாம் மற்றவரிடம் எதிர்பார்ப்பதை விட நம்மிடமிருந்தே முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பேன். வருட இறுதியில் சிறந்த GCC ஆப் த இயர் மாணவனை தேர்ந்தெடுத்து பரிசும் வழங்குவேன்.
அனுபவங்கள் தொடரும்
அன்புடன்
அசுரன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்
நல்லதா போச்சி இனிமேல் ஆங்கிலத்தில் என்ன சந்தேகமாக இருந்தாலும் அப்துல் அண்ணாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் undefined
Re: 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்
பகவதி தம்பி அவர்களே,தங்களை போல் ஒரு அறிவாளிக்கு சந்தேகமே வராது.மீறி வந்தால் கண்டிப்பாக நான் உங்களுக்கு உதவ காத்திருக்கிறேன்.
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Re: 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்
அப்துல் wrote:பகவதி தம்பி அவர்களே,தங்களை போல் ஒரு அறிவாளிக்கு சந்தேகமே வராது.மீறி வந்தால் கண்டிப்பாக நான் உங்களுக்கு உதவ காத்திருக்கிறேன்.
அப்துல் அண்ணா நான் உங்களுக்கு டீ வங்கி கொடுத்த காசு வீணாகலை கொடுத்த காசை விட அதிகமாகவே பேசிடிங்க , இந்த அறிவிலிக்கு உதவுவேன் என்ற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
Re: 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்
அவரு சொன்னதுல என்ன தப்பு, நீங்க அறிவாளி தான்.இரா.பகவதி wrote:அப்துல் wrote:பகவதி தம்பி அவர்களே,தங்களை போல் ஒரு அறிவாளிக்கு சந்தேகமே வராது.மீறி வந்தால் கண்டிப்பாக நான் உங்களுக்கு உதவ காத்திருக்கிறேன்.
அப்துல் அண்ணா நான் உங்களுக்கு டீ வங்கி கொடுத்த காசு வீணாகலை கொடுத்த காசை விட அதிகமாகவே பேசிடிங்க , இந்த அறிவிலிக்கு உதவுவேன் என்ற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
கற்றுக்கொள்ள வேன்டும் என்ற வெறியுடைய அனைவருமே அறிவாளிகள் தான். உங்கள் ஆங்கில சந்தேகங்களை ஒரு தனி திரி துவக்கி அங்கே கேளுங்க, நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்
அவரு சொன்னதுல என்ன தப்பு, நீங்க அறிவாளி தான்.
கற்றுக்கொள்ள வேன்டும் என்ற வெறியுடைய அனைவருமே அறிவாளிகள் தான். உங்கள் ஆங்கில சந்தேகங்களை ஒரு தனி திரி துவக்கி அங்கே கேளுங்க, நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள்
கண்டிப்பாக கேட்கிறேன் மிக்க நன்றி அசுரன் அண்ணா
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன்
» பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன்
» பெண்கள் எப்பொழுது புகை பிடிக்க கற்றுக்கொள்ளுகிறார்கள்?
» பொது இடங்களுக்குள் புகை பிடிக்க சீனா தடை
» சவூதி அரேபியா: விமான நிலையங்களில் புகை பிடிக்க தடை
» பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன்
» பெண்கள் எப்பொழுது புகை பிடிக்க கற்றுக்கொள்ளுகிறார்கள்?
» பொது இடங்களுக்குள் புகை பிடிக்க சீனா தடை
» சவூதி அரேபியா: விமான நிலையங்களில் புகை பிடிக்க தடை
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|