ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
ayyasamy ram
8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 Poll_c108 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 Poll_m108 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்

+11
அப்துல்
முஹைதீன்
பிஜிராமன்
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
கேசவன்
தர்மா
அதி
ரா.ரா3275
அசுரன்
15 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 Empty 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்

Post by அசுரன் Sat Apr 07, 2012 9:38 pm

First topic message reminder :

அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள்

எங்கள் பள்ளியில் போன வாரம் ஒரு மூன்று மாணவர்கள் உடற்பயிற்சி வகுப்பில் மைதானத்தில் இருந்தபோது... கழிவறைக்கு சென்று ஒரு மாணவன் கொண்டு வந்த சிகரெட்டை பற்றவைத்து பிடித்துள்ளனர். இதை பள்ளி முதல்வரின் கவனத்திற்கு மற்ற மாணவர்கள் கொண்டுவந்தபோது அவர்களை கையாள வழக்கம் போல என்னை முதல்வர் கேட்டுக்கொண்டார்

நானும் எனது ஆட்டத்தை ஆரம்பித்தேன். முதலில் முதல்வரிடம் போட்டுக்கொடுத்த மாணவனை அழைத்து பேசினேன்.அவனிடம் கேட்டு தெரிந்துக்கொண்ட பெயர்களை ஒருகுறிப்பில் எழுதிக்கொண்டேன். பிறகு அவன் திரும்ப திரும்ப சொன்ன ஒரு மாணவனின் பெயரை மட்டும் சிறப்புக் குறி இட்டுக்கொண்டேன்.

இப்போது அந்த சிறப்புக்குறியிட்ட மாணவனை அழைத்தேன், அவனிடம் முதலில் அவனை பற்றியும் அவனது படிப்பு மற்றும் குடும்பம் பற்றியும் தெரிந்துக்கொண்டேன். பிறகு முழு ஆண்டுத்தேர்வுக்காக அறிவுரை கூறுவதற்காக அழைத்ததாக சொன்னேன். கடவுளிடம் வேன்டிக்கொள்ளும்படியும் அறிவுரை கூற அவன் அனைத்தையும் கேட்டுக்கொண்டான்.

பிறகு அவனிடம் நீ இன்று நேற்று அதற்கு முன் செய்த தவறுகளை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதி எனது குப்பை தொட்டியில் போட்டுவிடு கடவுள் உன்னை மன்னித்துவிடுவார் என்று சொன்னேன். அவனும் அவ்வாறே செய்தான். பிறகு அவனிடம் கேட்டேன், "சரி இப்ப நீ கடவுளின் பிள்ளை, அதனால் பொய் பேசமாட்டாய் சரிதானே" என்றேன். அவனும் "ஆமாம்" என்றான்.

சரி போன வாரம் இந்த தேதியில் இந்த கிழமையில் இந்த வகுப்பில் மைதானத்தில் எல்லாரும் இருந்தபோது நீ என்ன செய்துக்கொடிருந்தாய் என்றேன், அவ்வளவு தான் அவன் முகம் குப்பென்று வியர்த்துவிட்டது. மீண்டும் நான் அவனிடம் நீ உன் தவறுகளையெல்லாம் தான் எழுதி குப்பையில் போட்டுவிட்டு மன்னிப்பு பெற்றுவிட்டாயே! ஏன் பயப்படுகிறாய் சொல் என்றேன். அவன் இல்ல சார் அந்த தவறை மட்டும் எழுதவில்லை. அதான் பயமாக இருக்கிறது என்றான்.

சரி போகட்டும் இப்ப மீண்டும் எழுதி போடு என்றேன். மேலும் அவன் இப்போது தயக்கம் இல்லாமலும் ஒருவிதமான அழுத்தமும் இல்லாமலும் பேச ஆரம்பித்தான். அந்த வகுப்பில் இரண்டாவது ஆண்டு படித்துவரும் மாணவன் ஒருவன் (8 வது பெயில் ஆகி இரண்டாவது வருடம் படிக்கிற மாணவன்) தான் என்னையும் இன்னொரு மாணவனையும் வற்புருத்தி இதை செய்ய வைத்தான் என்று சொன்னதும் அவனை அதன் பிறகு இனி இவ்வாறு செய்வதில்லை என்று எழுதி தருமாறு கேட்டுக்கொண்டேன், அதை எனது கோப்புகளில் பைல் செய்துகொண்டேன்.

இதே போல மற்ற இரு மாணவர்களையும் அழைத்து பேசி அவர்களையும் தான் செய்தது தவறு என்று உணர வைத்து அதை அவர்களிடமே எழுதி வாங்கி கோப்பில் வைத்துக்கொண்டு பிறகு தவறுக்கு காரணமான அந்த பெரிய மாணவனை அழைத்து அவனுக்கு நிறைய புத்திமதிகள் சொன்னேன், கடைசியில் அவன் சொன்னது என்னை மிகவும் வருந்தவும் சிந்திக்கவும் வைத்தது. அது என்னவென்றால் "எங்க அப்பா என்னை தான் சிகெரெட் வாங்க கடைக்கு அனுப்புவார், வீட்டிலெயே தான் பிடிப்பார், அம்மா அவரை ஒன்றும் சொல்ல மாட்டார்கள், எனது அண்ணனும் திருட்டுதனமாக சிகரெட் பிடிப்பான், அதனால் நானும் முயற்சி செய்தேன்" என்றான்.

பிறகு சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகளை அவனுக்கு விளக்கி அவனது குற்ற உணர்வை போக்கி அவனை சகஜமாக பேசவைத்து இப்போது அவன் அந்த தவறை மீண்டும் செய்வதில்லை என்று உறுதிமொழி எடுத்திருக்கிறான். எல்லாம் முடிந்த பின் கோப்பை முதல்வரிடம் எடுத்துச்சென்று எனது கேஸ் இஸ்டரியை அவரிடம் விளக்கினேன். தவறுக்கு காரணமான அந்த மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து பேசுவதாக முதல்வர் சொன்னார். அன்று மதியம் அந்த மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். வந்தவுடன் அந்த மாணவனின் அம்மா, ஒரு பஜாரியை போல என் பையன் தப்பு செய்ய மாட்டான் ஆ ஊ என கத்தினார், கோப்பில் மாணவன் கைப்பட எழுதி தந்ததை காண்பித்ததும் அந்த அம்மா உடனே தனது நிலையை மாற்றி வேறுவிதமாக பேச ஆரம்பித்தார், இந்த பள்ளி நல்ல பள்ளி இல்லை, இங்கு மாணவர்கள் மோசம் எனது பையனை இந்த ஆண்டு தேர்வு முடிந்ததும் டி.சி. வாங்கி வேறு பள்ளிக்கு மாற்றிவிடுகிறேன். எங்களுக்கு அட்வைஸ் பண்ணுவதை நீங்க நிறுத்திக்கோங்க என்று கோபமான எழுந்து சென்றார்.

மீண்டும் ஒரு அரைமணி நேரத்தில் வந்தவர் டி.சி கொடுக்குமாறு ஒரு லட்டருடன் வந்து முதல்வரை பார்த்து சென்றுள்ளார் என கேள்விப்பட்டேன். அந்த மாணவன் எனது கண்பார்வையில் இன்னும் கொஞ்ச மாதங்களாவது இருந்திருந்தால் அவனை முழுவதுமாக மாற்ற என்னால் முடிந்திருக்கும் சோகம்

இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மற்றவர் குறை சொல்வதை விரும்புவதே இல்லை... மேலும் வீட்டில் தவறு செய்யும் பெரியவர்கள் அந்த வீட்டு சின்ன பிள்ளைகளில் எதிர்காலத்தையும் கருத்திலும் கவனத்திலும் கொள்வதே இல்லை. சோகம்

Good Citizen Club (GCC)
எனது இந்த குட் சிட்டிசென் கிளப் மாணவர்களே இப்போது மற்ற மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலிங் செய்ய பயிற்றுவித்துக்கொண்டிருக்கிறேன். சிலர் தயாராகவும் இருக்கிறார்கள். தவறு செய்பவர்களை மென்மையாக எப்படி திருத்துவது என்று இன்டர்வெல் வேளையிலும் மதிய உணவு வேளையிலும் சிறிதும் ஓய்வின்றி 50 முதல் 100 மாணவர்கள் வரை பள்ளி வளாகத்தை கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடனும் கையில் பிளாஸ்டிக் கிளவுஸ் மாட்டிக்கொண்டும் கீழே மற்ற மாணவர்கள் சிந்தும் உணவு மற்றும் குப்பைகளை மணி அடிப்பதற்குள் சுத்தம் செய்து பெரிய குப்பை தொட்டிகளில் வீசிவிடுவோம்... (எனது இந்த சிறிய அமைப்பிற்கு பள்ளியில் அஃப்சியலாக அங்கிகாரம் கொடுக்க மறுத்துவிட்டார்கள், நீங்க இருக்குற வரைக்கும் செய்யுங்க என்கிறார்கள் சோகம் )

தினமும் மாலை 3.30 மணிக்கு இவர்கள் அனைவரும் ஒரு 5 முதல் 10 நிமிடங்கள் வரை என்னிடம் பேசிவிட்டு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் மதியம் உணவு வேளைகளில் எங்களுக்கான மீட்டிங் நடைபெறும். அதில் நான் நல்லொழுக்கம் என்றால் என்ன? அதை நாம் மற்றவரிடம் எதிர்பார்ப்பதை விட நம்மிடமிருந்தே முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பேன். வருட இறுதியில் சிறந்த GCC ஆப் த இயர் மாணவனை தேர்ந்தெடுத்து பரிசும் வழங்குவேன்.

அனுபவங்கள் தொடரும்
அன்புடன்
அசுரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 Empty Re: 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்

Post by முஹைதீன் Sun Apr 08, 2012 12:19 am

தங்களின் பணி சிறப்புடன் திகழ இறைவனை வேண்டுகிறேன்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 Empty Re: 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்

Post by அப்துல் Sun Apr 08, 2012 6:35 am

மிக மிக பொறுமையான பணிகளில் ஒன்று ஆசிரியர் பணி.இன்று அரசு,மக்கள்,பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள்(ஒரு சில நல்ல மாணவர்களை தவிர) அனைவராலும் விமர்சனதுக்குள்ளாக்கும் ஒரு ஜீவன் ஆசிரியர் தான்.2 மாதங்களுக்கு முன்னர் நண்பர் அசுரனின் அனுபவம் போல் சற்று வேறுபட்ட அனுபவத்தை சந்தித்தேன்.9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே வகுப்பில் படிக்கும் பொண்ணுக்கு காதல் கடிதம் மற்றும் மிரட்டல் கடிதம் இரண்டயும் கொடுத்து விட்டான்.அந்த மாணவி என்னிடம் வந்து புகார் கூற,மாணவனை அலைத்து அன்பாக புரியும்படி கூறி அதை தப்பு என்று உணர்த்தி இதுபோல் செய்ய கூடாது என்று அவனுக்கு விளங்க வைத்து விட்டேன்.இது எப்படியோ அந்த மாணவனின் தந்தைக்கு தெரிந்து அவர் பள்ளிக்கு வந்து ஆடிய ஆட்டம் ஈனும் என் கண்ணுக்குள் நிற்கிறது.அந்த மாணவன் தான் செய்த தப்பை அவன் தந்தையிடம் ஒத்துகொள்கின்றான்.ஆனால் அவர் தந்தையோ என் மகன் அப்படி செய்ய மாட்டான் என்கிறார்.
இன்றைய நிலை பெற்றோர்கள் தான் தங்களது பிள்ளைகளுக்கு செல்லம் கொடுத்து அவர்கள் தவறே செய்தாலும் அதனை சரி என்று அடித்து கூறுகிறார்கள்.பெற்றோர்கள் திருந்தினால் தான் பிள்ளைகளின் எதிர்காலம் சிறந்து விளங்கும்.
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 Empty Re: 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்

Post by அசுரன் Sun Apr 08, 2012 7:56 am

பிஜிராமன் wrote:மிக மிக அருமையான செயல் சார்.......
நான் சென்னை வந்திருந்த பொது, தங்களின் ஜி‌சி‌சி மாணவர்களை எனக்கு அறிமுகம் செய்கிறீர்கள் என்று கூறியிருந்தீர்கள் ஆனால், காலத்தின் கட்டாயத்தால், காண முடியாது போனது, மறுமுறை நான் சென்னை வருகையில் நிச்சயம் வருகிறேன் சார்......

தங்களின் நல்லாசிரியப் பணிக்கு என் தலை தாழ்ந்த நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி பிஜிராமன், அடுத்த முறை சென்னை வரும்போது அவசியம் சந்திக்கலாம். ஓகேவா?

முஹைதீன் wrote:தங்களின் பணி சிறப்புடன் திகழ இறைவனை வேண்டுகிறேன்.

மிக்க நன்றி முகைதீன்.

அப்துல் wrote:9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே வகுப்பில் படிக்கும் பொண்ணுக்கு காதல் கடிதம் மற்றும் மிரட்டல் கடிதம் இரண்டயும் கொடுத்து விட்டான்.அந்த மாணவி என்னிடம் வந்து புகார் கூற,மாணவனை அலைத்து அன்பாக புரியும்படி கூறி அதை தப்பு என்று உணர்த்தி இதுபோல் செய்ய கூடாது என்று அவனுக்கு விளங்க வைத்து விட்டேன்.

அப்துல் சார் நீங்களும் ஆசிரியரா? சபாஷ் நல்ல காரியம் தான் செய்தீர்கள். இந்த வயசில் அவனுக்கு இது தேவையற்றது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 Empty Re: 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்

Post by தர்மா Sun Apr 08, 2012 9:50 am

ஈகோவின் உச்சம் இன்றய பெற்றோர்கள். நான் சிறுவனாக இருந்த போது ஒரு முறை என் ஆசிரியர் என்னை ஏதோ ஒரு தவறுக்காக நன்றாக அடித்து விட்டார் பின்னர் கோவம் அடங்காமல் என் பெற்றோரிடம் சொல்ல போவதாக கூறினார் நான் அவரின் காலை பிடித்து இனியும் இரண்டு அடிக்கூட அடித்து விடுங்கள் ஆனால் வீட்டில் சொல்லி விடாதீர்கள் என்று கூறினேன். ஏன் என்றால் வீட்டில் வாத்தியார் அடித்தால் என்ன அப்படி தவறு செய்தாய் என்று அதை விட அதிக அடி கிடைக்கும். நாங்கள் வாழ்ந்த காலத்தில் "வீட்டடிக்கு வேம்படி தேவல" என்பது தான் மந்திரம்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 Empty Re: 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்

Post by இரா.பகவதி Sun Apr 08, 2012 9:50 am

அசுரன் அண்ணா உங்கள் முயற்சி அருமை , ஆனால் பெற்றோரிடம் இந்த விஷயத்தை கூறி தவறு செய்து விட்டீர்கள் அண்ணா , சில பெற்றோர்கள் மட்டுமே புரிந்து கொண்டு நடப்பார்கள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 Empty Re: 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்

Post by இரா.பகவதி Sun Apr 08, 2012 9:54 am

ஈகோவின் உச்சம் இன்றய பெற்றோர்கள். நான் சிறுவனாக இருந்த போது ஒரு முறை என் ஆசிரியர் என்னை ஏதோ ஒரு தவறுக்காக நன்றாக அடித்து விட்டார் பின்னர் கோவம் அடங்காமல் என் பெற்றோரிடம் சொல்ல போவதாக கூறினார் நான் அவரின் காலை பிடித்து இனியும் இரண்டு அடிக்கூட அடித்து விடுங்கள் ஆனால் வீட்டில் சொல்லி விடாதீர்கள் என்று கூறினேன். ஏன் என்றால் வீட்டில் வாத்தியார் அடித்தால் என்ன அப்படி தவறு செய்தாய் என்று அதை விட அதிக அடி கிடைக்கும். நாங்கள் வாழ்ந்த காலத்தில் "வீட்டடிக்கு வேம்படி தேவல" என்பது தான் மந்திரம்
சிப்பு வருது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 Empty Re: 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்

Post by பிரசன்னா Sun Apr 08, 2012 12:22 pm

மீண்டும் ஒரு அரைமணி நேரத்தில் வந்தவர் டி.சி கொடுக்குமாறு ஒரு லட்டருடன் வந்து முதல்வரை பார்த்து சென்றுள்ளார் என கேள்விப்பட்டேன். அந்த மாணவன் எனது கண்பார்வையில் இன்னும் கொஞ்ச மாதங்களாவது இருந்திருந்தால் அவனை முழுவதுமாக மாற்ற என்னால் முடிந்திருக்கும்

இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மற்றவர் குறை சொல்வதை விரும்புவதே இல்லை... மேலும் வீட்டில் தவறு செய்யும் பெரியவர்கள் அந்த வீட்டு சின்ன பிள்ளைகளில் எதிர்காலத்தையும் கருத்திலும் கவனத்திலும் கொள்வதே இல்லை.
இன்று நல்ல-ஒழுக்க பாடம் நடத்த வேண்டியது பிள்ளைகளுக்கு மட்டும் இல்லை பெற்றோருக்கும் தான்...

Good Citizen Club (GCC)
உங்கள் சிறப்பான பணி தொடரட்டும் ஆசிரியரே... மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 Empty Re: 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்

Post by அருண் Sun Apr 08, 2012 1:52 pm

பிள்ளைகளை பேணும் காக்கும் பணி பெற்றோர்களை விட ஆசிரியருக்கு தான் அதிகம் பங்கு வகிக்கிறது வீட்டில் இருப்பதை விட பள்ளிகளில் அதிகம் காணப்படுவார்கள் மாணவர்கள் ஒழுக்கதுடன் நடக்கதிற்கு ஆசிரியரும் பொறுப்பாகும் தங்கள் பணி சிறப்பாக செய்துள்ளீர்கள் அண்ணா..!
தொடர்ந்து சிறப்பாக வழிநடத்துங்கள்..
இப்படிக்கு உங்கள் மாணவன்..!
சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 Empty Re: 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்

Post by உதயசுதா Sun Apr 08, 2012 3:48 pm

நல்ல ஆசிரியரா நீங்க செய்து இருக்கும் செய்து கொண்டு இருக்கும் பணி மகத்தானது அசுரன்.

வாழ்த்துகள்.தொடரட்டும் உங்கள் சேவை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 U8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 D8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 A8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 Y8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 A8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 S8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 U8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 D8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 H8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 Empty Re: 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்

Post by அப்துல் Tue Apr 10, 2012 7:03 am

வீட்டில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியராகவும் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒரு சிறந்த பெற்றோராகவும் இருக்க வேண்டும். நண்பர் அசுரன் அவர்களுக்கு என் வணக்கம்,நானும் ஈகரையின் குடும்பத்தில் உள்ள ஒரு ஆசிரிய உறுப்பினர் தான்.ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணி புரிகிறேன்.
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் - Page 3 Empty Re: 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum