புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
35 Posts - 36%
T.N.Balasubramanian
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
401 Posts - 48%
heezulia
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Apr 07, 2012 7:48 pm

First topic message reminder :

நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி

தமிழில் இருக்கும் அறநூல்களில் பதினெண் கீழ் கணக்கு நூல்களில் வராத நூல்களில் மேலும் ஒரு சிறப்பான நூல் நன்னேறி. இதை எழுதியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி தேசிகருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். தாமிரவர்ணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றார்.

இவர் நால்வர் நான்மணிமாலை, சோண சைல மாலை, கூவப் புராணம், பழமலை அந்தாதி, பிட்சாடன் நவமணிமாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரிய நாயகியம்மைக் கட்டளைக் கலித்துறை, பிரபுலிங்க லீலைக்கு விருத்தியுரை, வேதாந்த சூடாமணி, நெஞ்சு விடு தூது, சிவஞான பாலைய தேசிகர் தாலாட்டு, தர்க்க பரிபாஷை சதமணிமாலை, சிவப்பிரகாச விகாசம், திருவெங்கை அலங்காரம், திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கைக் கோவை, திருச்செந்தூர் நீரோட்டகயமக அந்தாதி, ஏசுமத நிராகரணம் முதலான பல நூல்களை இயற்றியுள்ளார்.

இவருடைய காலம் பதினேழாம் நூற்றாண்டு. இவர் தம்முடைய முப்பத்திரண்டாம் வயதில் சிவபதம் அடைந்தார்.

மூதுரை, நல்வழி போல் சொல்ல வந்த கருத்தும் அதை புரிய அழகான ஒரு உதாரணத்துடன் கூடிய அழகிய வெண்பாவானால் ஆனது நன்னேறி. ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும், 40 நேரிசை வெண்பா பாடல்களும் உடையது இந்நூல். நன்னெறி என்றால் நன்மை நெறி என்று பொருள்படும்.

நல்ல தமிழ் தொடர் பதிவில் இந்த அறிய நன்னெறிப் பாடல்களைக் காண்போம்.




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 09, 2012 6:10 pm

நல்ல விளக்கம் சதாசிவம் மகிழ்ச்சி மகிழ்ச்சி கடை பிடிப்பது தான் கடினம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Apr 12, 2012 6:00 pm

இளமாறன் wrote: நல்ல விளக்கம் சதாசிவம் மகிழ்ச்சி மகிழ்ச்சி கடை பிடிப்பது தான் கடினம்

நன்றி இளமாறன், நீங்கள் கூறுவது உண்மை தான், குறைந்த பட்சம் இவைகளை அடிக்கடி நினைவு படுத்தி கொண்டு இருப்போம். இயன்ற வரை செயல்படுத்த முயல்வோம்.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Apr 12, 2012 6:24 pm

9 . துணையுடையார் வலிமையுடையார்
மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தம்மைத்தான் மருவின் - பலியேல்
கடவுள் அவிர்சடைமேல் கட்செவி யஞ்சாதே
படர்சிறைய புள்ளரசைப் பார்த்து.

பொருள் விளக்கம்
வலிமை குறைந்தவர் வலிமை நிறைந்தவரை கண்டு பயன்படத் தேவையில்லை அவர்கள் வேறு ஒரு வலிமையுடையவருடன் சேரும் போது. பரமசிவன் காதுகளில், கழுத்தில் ஆபரணமாக இருக்கும் பாம்பு, பறவைகளின் அரசரான கருடனைக் கண்டு அஞ்சாமல் இருப்பது போல். யாருக்கும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே. ஆகையால் நம்முடைய வலிமைக்கு தகுந்து அதனினும் வலிமையுடையவருடன் நட்பு ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

10. தன்னலம் கருதலாகாது
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதாது உலகின்
நிறையிருளை நீக்குமேல் நின்று.

பொருள் விளக்கம்
சிறந்த மனிதர்கள் வறுமை உற்ற காலத்திலும் அவர்களை விட வறுமையில் இருப்பவரை கண்டால், தங்களுக்கு என்று வைத்து இருக்கும் பொருளையும் கொடுத்து உதவுவார்கள். நிலவு தன் பின்புறம் இருட்டு இருந்தாலும் அதை நீக்காமல் , இருளாக இருக்கும் இந்த உலகத்துக்கு வெளிச்சம் கொடுத்து உதவுவதைப் போல்.


11. அறிஞர் ஐம்புலன்கட்கு அடிமையாகார்

பொய்ப்புலன்கள் ஐந்துநோய் புல்லியர் பாலன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பிற்
சுழன்றுகொல் கல்தூணைச் சூறா வளிபோய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு.

பொருள் விளக்கம்
நிலையற்ற இன்பத்தை அளிக்கும் பொய்யான இந்த மெய்யில் இருக்கும் ஐந்து புலன்களும் மன உறுதி அற்றவரைத் தான் தாக்கி துன்பத்தில் ஆழ்த்தும் மன உறுதியுடன் இருப்பவரை ஒன்றும் செய்ய இயலாது. வெகு வேகமாக அடிக்கும் சூறாவளிக் காற்று பெரிய கல் தூணைப் புரட்டிப் போடாமல், சிறு துரும்பை பந்தாடுவதைப் போல்

12. உடம்பில் உயிர் அமைந்த வியப்பு.
வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை - தீருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு.

பொருள் விளக்கம்
அழகு நிறைந்தவளே, ஓட்டை பானையில் நீர் சிந்துவது ஒன்றும் புதுமையில்லை, நம்மை வருத்தம் செய்யும் உயிர் உடலில் ஒன்பது துளை இருந்தும் இறைவன் விதிக்கும் வேலை வரும் வரை வெளியேராமல் தங்குவதே புதுமை.

தொடரும்...



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Apr 14, 2012 10:40 am

13. அன்பொடு உதவுக
பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் - சுரக்கும்
மலையளவு நின்றமுலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.

பொருள் விளக்கம்
அமுதம் சுரக்கும் மலை போன்ற தனங்களை உடைய பெண்ணே, நிலவு தன் பிறை அளவு மாறுதலுக்கு ஏற்ப ஒளி வீசுவது போல். உயர்ந்த குணம் உடையவர்கள் தங்கள் வருமானத்தைப் பொறுத்து விருப்புடன் வறுமையுடன் இருப்பவருக்கு உதவுவார்கள்.

14. செல்வச் செருக்குக் கூடாது
தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்று
கலையா யாவர் செருக்குச் சார்தல் - இலையால்
இரைக்கும்வண்டு ஊதுமலர் ஈர்ங்கோதாய் மேரு
வரைக்கும்வந் தன்று வளைவு.

பொருள் விளக்கம்
வண்டுகள் மொய்க்கும் மலர் மணக்கும் கூந்தல் உடையே பெண்ணே, மேரு மலையும் ஒரு நாள் கடலில் மூழ்கியது, அதைப் போல் தன்னிடம் இருக்கும் செல்வம் நிலையில்லாதது, ஓரிடம் தங்காமல் சென்று விடும் என்பதை உணர்ந்து அறிவு உடையவர்கள் செல்வம் வரும் போது செருக்கு கொள்ளக் கூடாது.

15. அன்பற்ற செல்வம் பயனற்றது
இல்லானுக்கு அன்பிங்கு இடம்பொருள் ஏவல்மற்று
எல்லாம் யிருந்துமவர்க் கென்செய்யும் - நல்லாய்
மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும்
விழிலார்க்கு ஏது விளக்கு

பொருள் விளக்கம்
எழுதப் படிக்க தெரியாத கல்வி அறிவு இல்லாதவருக்கு பழமையான அரிய நூல்கள் இருப்பதால் ஒரு பயனும் இல்லை. கண் தெரியாத குருடனுக்கு விளக்கு இருந்து என்ன பயன் ? அதைப் போல் மனிதர்களின் மேல் அன்பு இல்லாதவர்களுக்கு இடம், பொருள், வேலைக்காரர்கள், சொத்து, சுகம் இருந்து என்ன பயன் ?

தொடரும்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 14, 2012 10:49 am

சதாசிவம் wrote:15. அன்பற்ற செல்வம் பயனற்றது
இல்லானுக்கு அன்பிங்கு இடம்பொருள் ஏவல்மற்று
எல்லாம் யிருந்துமவர்க் கென்செய்யும் - நல்லாய்
மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும்
விழிலார்க்கு ஏது விளக்கு

பொருள் விளக்கம்
எழுதப் படிக்க தெரியாத கல்வி அறிவு இல்லாதவருக்கு பழமையான அரிய நூல்கள் இருப்பதால் ஒரு பயனும் இல்லை. கண் தெரியாத குருடனுக்கு விளக்கு இருந்து என்ன பயன் ? அதைப் போல் மனிதர்களின் மேல் அன்பு இல்லாதவர்களுக்கு இடம், பொருள், வேலைக்காரர்கள், சொத்து, சுகம் இருந்து என்ன பயன் ?
நன்றி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Apr 21, 2012 5:29 pm

16. மேலோர் இழிந்தோர்க்கும் உதவுவார்
தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துயர்ந்தோர்
தம்மை மதியார் தமையடைந்தோர் - தம்மின்
இழியினும் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல்.

பொருள் விளக்கம்

மிகப்பெரிய கடலும் உப்பக்கழிக்குள் வந்து நீரை நிறைக்கும் பிறருக்கு உப்பு வழங்குவதற்காக, அதைப் போல்தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும், தலைமைப் பதவி வகித்தாலும் தன் நிலையிலும் கீழே உள்ளவருக்கும் உதவி புரிவர் உயர்ந்த குணம் உடைய மேலோர்.

17. வள்ளல்கள் வறுமையிலும் உதவிபுரிவார்கள்
எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன்
மைந்தர்தம் ஈகைமறுப்பரோ - பைந்தொடிஇ
நின்று பயனுதவில்லா அரம்பையின் கீழ்க்
மன்றும் உதவும் கனி.

பொருள் விளக்கம்

அழகான மென்னிடையை உடைய பெண்ணே, வாழை மரம் கனி ஈன்றியவுடன் வெட்டப்பட்டாலும், அதன் கன்று மீண்டும் வளர்த்து கனி கொடுக்கும். அது போல் வள்ளற் குணம் படைத்த பெரியவர்கள் கொடுத்து கொடுத்து வறுமை நிலை வந்தாலும், அவரின் மகன் அடுத்தவருக்கு கொடுத்துதவ மறுக்க மாட்டார்.

18. இன்சொல்லையே உலகம் விரும்பும்
இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்குங் கடல்.

பொருள் விளக்கம்

பொன் போன்ற கதிர்களை உடைய கொதிக்கும் சூரியன் கதிர்களைக் கண்டு கடல் பொங்குவதில்லை, ஆனால் குளிர்ந்த ஒளியை உண்டாக்கும் நிலவின் ஒளியை கண்டு தான் கடல் பொங்கும். அது போல் வன் சொல்லை கண்டு இந்த நீர் சூழ்ந்த உலகத்தின் மக்கள் மகிழ்ச்சி அடைவதில்லை, மாறாக இன்சொல்லால் தான் மகிழ்கின்றனர். ஆதலால் இன்சொல் பேசுங்கள்.

தொடரும்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Apr 29, 2012 5:07 pm

19. நல்லார் வரவு இன்பம் பயக்கும்
நல்லோர் வரவால் நகைமுகங்கொண் டின்புறீஇ
அல்லோர் வரவால் அழுங்குவார் - வல்லோர்
திருந்தும் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா
வருந்துங் கழற்கால் வர.

பொருள் விளக்கம்

வசந்த காலத்தில் வரும் குளிர்ந்த தென்றலைக் கண்டு மாமரம் மகிழ்ந்து பூ பூக்கும். ஆனால் வேனிர் காலத்தில் வரும் வெப்பக் காற்றில் மலரும் பூக்களும் காய்ந்து உதிரும். அது போல் நல்ல குணம் உடையவர் விருந்தினராக வரும் போது இல்லத்தில் இருப்பவர்கள் இன்முகத்துடன் வரவேற்று மகிழ்வர், அதற்கு மாறாக உள்ளவர் உள் நுழையும் போது தவித்து வருத்தப்படுவர்.

20. பெரியோர் பிறர் துன்பம் கண்டிரங்குவார்
பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண் டுள்ளம்
எரியின் இழுதாவார் என்க - தெரியிழாய்
மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்
கண்டு கழலுமே கண்.

பொருள் விளக்கம்

பிற உறுப்புகள் துன்பப்படும் போது, கண்கள் தனக்கு துன்பம் வந்தது போல் நீர் கசியும். அது போல் மேன்மை குணம் பொருந்திய பெரியவர்கள் பிறருடைய துன்பத்தைக் கண்டு தன் துன்பமாய் கருதி நெருப்பில் இட்ட மெழுகாய் வருந்தி அவர் துன்பம் போக்க வழி செய்வர்.

21. இலக்கணம் கல்லார் அறிவு கற்றார் அறிவுக்குமன் செல்லாது
எழுத்தறியார் கல்விப்பெருக்கம் அனைத்தும்
எழுத்தறிவார்க் காணின் இலையாம் - எழுத்தறிவார்
ஆயும் கடவுள் அவிர்சடைமுடி கண்டளவில்
வீயும் சுரநீர் மிகை.

பொருள் விளக்கம்

பொங்கி வழிந்து பெருமிதப்படும் கங்கை, சிவபெருமானின் தலையில் சென்றவுடன் அமைதியாய் யாருக்கும் தெரியாமல் அடங்கி மறைந்து இருக்கும். அது போல் முறையாகக் கல்வியின் இலக்கணம் கற்காமல், கேட்டதை வைத்து பாவனையாகப் பேசும் கல்லா ஒருவன் சொல்லும் வார்த்தை கற்றறிந்த அறிஞர்கள் இருக்கும் சபையில் எடுபடாது.

22. அறிவுடையோர் உயர்குலத்தவர் அறிவிலார் இழிகுலத்தவர்
ஆக்கும் அறிவான் அல்லது பிறப்பினால்
மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்க
பவர்ஆர் அரவின் பருமணிகண்டு என்றும்
கவரார் கடலின் கடு.

பொருள் விளக்கம்
பாம்பிடம் இருந்தாலும் ரத்தினத்தின் மதிப்பு குறைந்து விடாது, ஆழமாக அகலமாக இருந்தாலும் கடல் நீர் குடிக்கப் பயன் படாது. அதுபோல் உயர் குலத்தில் பிறந்தவன் என்பதால் ஒருவன் பெருமை மிக்கவனாக மாட்டான், தாழ் குலத்தில் பிறந்ததால் ஒருவன் சிறுமை படைத்தவனாக மாட்டான். ஒருவனின் பெருமை அவரவரின் அறிவைப் பொருத்துக் கொண்டாடப்படும்.

தொடரும்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sun Apr 29, 2012 8:04 pm

சதாசிவம் wrote:நல்லார் வரவு இன்பம் பயக்கும்

இன்பம் பயக்கும் நன்னெறி . நன்றி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue May 01, 2012 5:49 pm

பத்மநாபன் wrote:
சதாசிவம் wrote:நல்லார் வரவு இன்பம் பயக்கும்

இன்பம் பயக்கும் நன்னெறி . நன்றி

நன்றி பத்மநாபன் நன்றி



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon May 07, 2012 2:35 pm

சதாசிவம் wrote: ஒருவனின் பெருமை அவரவரின் அறிவைப் பொருத்துக் கொண்டாடப்படும்.

நூறு சதவிகிதம் உண்மை ஐயா

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக