ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !

+8
Aathira
ஜாஹீதாபானு
யினியவன்
கே. பாலா
முஹைதீன்
இரா.பகவதி
ரா.ரா3275
ayyamperumal
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Empty பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !

Post by ayyamperumal Fri Apr 06, 2012 2:45 pm

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !( ஜெயகாந்தன் )


இறப்பும் அதன் பிரிவும் மனிதர்களை நிலைகுலைய செய்யும் என்பது புதிதல்ல. எந்த மனிதன் உயிர்வாழ வேண்டுமென்று, செவ்வாய் கிழமை மாலை நானும் ஆதிரா அக்காவும் பேசினோமோ .... அந்த மனிதனின் இறப்பு செய்தி புதன்கிழமை வந்தாள் எப்படி இருக்கும். ஆம் ரபீக்கின் இறப்பு செய்தியினை அறிந்தவுடன் எந்நிலையில் என்னால் இருப்புகொள்ள முடியவில்லை. எப்படியேனும் அவரது ஊருக்கு செல்லவேண்டும் என்று முடிவுசெய்தேன்.

என் உடல் நிலைஅறிந்த பாலசாரின் வேண்டுகோளையும் மீறி ...... வையம்பட்டியில் நான் இறங்கும் போது மதியம் 12 க்கு மேல் இருக்கும் . அங்கே மகாபிரபு , ஆதிரா அக்கா உடனான உரையாடலுக்கு பின்பு இலங்காகுறிச்சி செல்ல நின்றிருந்தேன். அங்கே நம் உள்ளம் எல்லாம் நிறைந்திருந்த ரபீக்கின் இல்லத்தை முகமது என்கிற முதியவரின் உதவியோடு அடைந்தேன்.

சாலையோரத்தில் இருந்த, நடுத்தர பொருளாதாரம் உடைய அந்த வீட்டினுள் பெண்கள் மௌனமாய் அமர்ந்திருந்தார்கள். பொன்னிற சிலையின்று புழுதியில் கிடந்ததை போல ,,, அந்த கண்ணாடி பெட்டிக்குள் ரபீக் கிடத்தப்பட்டிருந்தார்.அந்த காட்சி இவரா இறந்தார் என்கிற சந்தகத்தை கொடுத்தது.

இப்போது நாம் பார்க்கிற ஆஜானுபாகுவான ரபீக்கின் முகத்தை அங்கு காணமுடியவில்லை. ஒல்லியான தேகம் , உயரமான உடல் ,ஆனாலும் ஒளிபொருந்திய முகம்.... உறங்குவது போலும் சாக்காடு என்றானே வள்ளுவன் அது உணமை என உறுதி செய்தார் ரபீக்.

அந்த ஒன்பதுவாசல் உள்ள உடலை பார்க்கும் போது .. மனது கொண்டிருக்கும் எண்பது வாசல்களிலும் துக்கம் அடைத்து கொண்டது. அதனாலோ என்னவோ என்னைபோலவே அங்கிருந்த பெண்களின் முகத்திலும் கண்ணீர் இல்லை. ஆனாலும் அந்த அறை எங்கும் சோக இருள் சுடரிட்டு எரிந்துகொண்டிருந்தது.

தலையில் குல்லா ( நாடிக்கட்டு இருந்ததால் முகத்தில் குறுந்தாடி இருந்ததா என உறுதி செய்யமுடியவில்லை. ). MA அராபிக் படித்த ஒருவர் எப்படி இருப்பாரோ அப்படி இருந்தார் ரபீக். இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்கு பின்பு நானும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். எனது கண்கள் ரபீக்கின் தந்தையினை தேடியது. அதிகமான உணர்ச்சிகளை அடக்கியதாலோ என்னவோ அவருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது. அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணி அவரது நண்பர்களிடத்தில் பேசினேன்.

தன்னுடைய மூன்றே வயதில் தாயாரை இழந்த ரபீக் ... ஒன்றரை ஆண்டுகளிலேயே தன்னுடைய மகனையும் இழந்துவிட்டு சென்றுவிட்டார். அந்த குடும்பத்தின் ஆணிவேறாய் இருந்த ரபீக்கை கால கரையான் அரித்துவிட்டது. மத கொள்கைகளுக்கும் , மனதின் உணர்வுகளுக்கும் இடையே ஊஞ்சலாடி கொண்டிருக்கும் அவரது குடும்பத்திற்கு நாம் எந்தவகையிலும் ஆறுதல் சொல்லமுடியாது. ஏனென்றால் ரபீக்கின் பிரிவிற்காக நமக்கே ஆறுதல் தேவைப்படும் நேரம் இது .......

கேளுங்கள் தரப்படும் என்கிறார்கள் ... ரபீக் நம்முடன் இருந்த தருணங்களை இனி நாம் யாரிடம் கேட்பது.

தேடுங்கள் கண்டடைவீர்கள் என்கிறது ஆகமம். ரபீக்கை இனி நாம் எங்கே தேடுவது.

என்னால் ரபீக்கின் இறுதியாத்திரையில் கலந்துகொள்ளமுடியவில்லை.அதற்காக எல்லோரும் என்னை மன்னிக்கவும். இந்த பதிவினை விரைவாய் பதிவுசெய்ய முடியாமைக்கும் மன்னிக்கவும்.


Last edited by அய்யம் பெருமாள் .நா on Fri Apr 06, 2012 3:06 pm; edited 2 times in total


பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Empty Re: பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !

Post by ரா.ரா3275 Fri Apr 06, 2012 2:47 pm

///அந்த ஒன்பதுவாசல் உள்ள உடலை பார்க்கும் போது .. மனது கொண்டிருக்கும் எண்பது வாசல்களிலும் துக்கம் அடைத்து கொண்டது. அதனாலோ என்னவோ என்னைபோலவே அங்கிருந்த பெண்களின் முகத்திலும் கண்ணீர் இல்லை. ஆனாலும் அந்த அறை எங்கும் சோக இருள் சுடரிட்டு எரிந்துகொண்டிருந்தது.///

சோகம் அழுகை


பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! 224747944

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Rபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Aபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Emptyபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Rபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Empty Re: பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !

Post by இரா.பகவதி Fri Apr 06, 2012 2:53 pm

ஆமாம் அண்ணா என்னாலும் தாங்க முடியவில்லை அந்த கண்ணாடி பெட்டியினில் அடைக்க பட்ட நிகழ்வை சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Empty Re: பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !

Post by முஹைதீன் Fri Apr 06, 2012 2:57 pm

நேரில் பார்க்கவிட்டாலும் ரபீக்கின் கடைசி உடல்நிலையை பற்றி அறிந்தேன். மனம் துடித்து போய்விட்டது.
இன்னும் அவன் என்னுடன் இருப்பதை போன்றே இருக்கிறது. அழுகை அழுகை அழுகை
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Empty Re: பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !

Post by கே. பாலா Fri Apr 06, 2012 2:59 pm

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

ஒருவன் நேற்று இருந்தான் இன்று இல்லை- என்று சொல்லும் இரங்கத்தக்க நிலையை உடையது இவ்வுலகம்.
ரபீக் நினைவில் கலந்து ....உலகெங்கும் நினைவில் ஏங்கி நிற்க்கும் உறவுகளுக்கு ..
இறுதி அஞ்சலி செலுத்திய ..தருணங்களை சொற்சித்திரம் ஆக்கி அறியதந்த உங்களுக்கு நன்றி பெருமாள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Empty Re: பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !

Post by யினியவன் Fri Apr 06, 2012 3:02 pm

இறப்பு என்பது சிலருக்கு பிறக்கும் முன்பே கூட
நிகழ்ந்து விடுவதுண்டு அன்னையின் வயிற்றிலேயே.

தப்பும் பலருக்கு பிறந்தவுடன் வாழ்க்கையில் போராட்டத்திற்கு
இடையில் கண்டிப்பாக நிகழ்ந்து விடும்.

இறப்பென்பது பிறத்திலினும் நிச்சயமான ஒன்றென அறிந்தும்
நாம் ஆடும் ஆட்டங்கள் தான் எத்துணை எத்துணை?

இள வயதிலேயே நமை விட்டுச் சென்ற ரபீக்கின் மறைவு
நம் அகந்தைக் கண்ணை மூடி அறிவுக் கண்ணை திறக்கட்டும்.

உடல் நலமின்றி நீங்கள் சென்று வந்தது
அறியா நட்பிர்க்கு அடையாளம் பெருமாள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Empty Re: பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !

Post by ஜாஹீதாபானு Fri Apr 06, 2012 3:05 pm

நீங்க பார்த்ததை விவரிக்கும் போதே மனதில் இனந்தெரியாத கலக்கம் வருகிறது........... அழுகை அழுகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Empty Re: பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !

Post by Aathira Fri Apr 06, 2012 3:08 pm

//பொன்னிற சிலையின்று புழுதியில் கிடந்ததை போல ,,, அந்த கண்ணாடி பெட்டிக்குள் ரபீக் கிடத்தப்பட்டிருந்தார்.அந்த காட்சி இவரா இறந்தார் என்கிற சந்தகத்தை கொடுத்தது. //
கண்ணில்லா கடவுளுக்கு ரசிக்கத் தெரியாது பெருமாள். பொன்னையே மண்ணுக்குள் வைத்தவன் தானே அவன்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை சிறுமை உடைத்துஇவ் வுலகு.

வார்த்தையில் சொன்னத்தை வரிகளாக்கித் தந்துள்ளீர்கள் பெருமாள். நம் மனத்தில் பதிந்த அன்பு உறவைப் பற்றிய தங்கள் பதிவைப் படிட்க்கும் போது விழிநீர் மறைக்கிறது எழுத்துகளை. அழுகை இருந்தாலும் படித்துத் தானே ஆக வேண்டும். நன்றி பெருமாள்.


பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Aபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Aபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Tபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Hபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Iபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Rபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Aபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Empty Re: பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !

Post by சிவா Fri Apr 06, 2012 3:57 pm

தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாது, நம் சகோதரனின் இறுதி யாத்திரை நிகழ்வில் கலந்து கொண்டதற்கு நன்றி அய்யம்பெருமாள்! அங்கு நிகழ்ந்தவற்றைக் கண்முன்னே நிறுத்தி மேலும் மனதைக் கலங்கப்படுத்திவிட்டீர்கள்!


பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! Empty Re: பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum