Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேலும் 12 பேருக்கு பன்றி காய்ச்சல், நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை
2 posters
Page 1 of 1
மேலும் 12 பேருக்கு பன்றி காய்ச்சல், நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை
தமிழ்நாட்டில் மேலும் 12 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தெரியவந்து உள்ளது. இதனால் அந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
உலக நாடுகளில் கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதன் முதலாக பன்றி காய்ச்சல் நோய் பரவ தொடங்கியது.
பன்றி காய்ச்சல்
`எச்1 என்1' என்ற வைரஸ் கிருமியால் உருவாகும் இந்த நோய் அப்போது இந்தியாவிலும் பரவியது. அப்போது இந்த நோயினால் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
3 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்திய பன்றி காய்ச்சல் இப்போது மீண்டும் பரவ தொடங்கி உள்ளது. வட மாநிலங்கள் மட்டுமின்றி சென்னை உள்பட தமிழ்நாட்டிலும் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது.
விவசாயி பலி
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவருக்கும், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பன்றி காய்ச்சல் இருப்பது, கிண்டி கிங் இன்ஸ்டிடிïட்டில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளின் மூலம் கண்டு அறியப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள எல்லப்பாளையத்தைச் சேர்ந்த 70 வயதான கந்தசாமி என்ற விவசாயி பன்றி காய்ச்சலுக்கு பலி ஆனார்.
12 பேர் பாதிப்பு
இந்தநிலையில் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த 2 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் பன்றி காய்ச்சல் சிகிச்சைக்கு பயந்து ஆஸ்பத்திரியை விட்டு ஓடிவிட்டனர். 10 வயது மற்றும் 8 வயதான அவர்கள் இருவரும் சிறுமிகள் என விசாரணையில் தெரிய வந்தது.
இவர்களையும் சேர்த்து சென்னையில் 5 பேரும், கோவையில் 7 பேரும் என தமிழ்நாட்டில் மேலும் 12 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்து உள்ளது.
ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு
தமிழகம் முழுவதும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்ட தலைநகர மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அல்லது தனி படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. சென்னையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றில் தனி படுக்கைகள் கொண்ட வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் உள்ள 1,612 ஆரம்ப சுகாதார மையங்களின் டாக்டர்களும், பன்றிக்காய்ச்சல் குறித்து `உஷார்' படுத்தப்பட்டு இருக்கிறார்கள். யாருக்காவது பன்றி காய்ச்சல் இருப்பது பற்றிய அறிகுறி காணப்பட்டால் அதுபற்றி உடனடியாக சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அமைச்சர் விஜய் ஆலோசனை
இதற்கிடையே முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் தலைமையில் பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், பன்றி காய்ச்சல் நோய் பரவும் விதம், தடுப்பு நடவடிக்கைகள், தேவையான மருத்துவ வசதிகளை ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்துவது ஆகியவை குறித்தும், இதற்கான டாக்டர்கள் தயார் நிலையில் இருக்கிறார்களா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பன்றி காய்ச்சல் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கைபாண்டியன், பொதுத்துறை கூடுதல் இயக்குனர் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குனர் வம்சதாரா, சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி குகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுபற்றி சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கைபாண்டியன் கூறியதாவது:-
4 லட்சம் மாத்திரைகள்
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு பரவலாக இல்லை. பாதிப்பு என்பது குறிப்பிட்ட சில பகுதிகளில்தான் உள்ளது. மேலும், யாருக்காவது பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது அறியப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அனைத்து டாக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
பன்றி காய்ச்சலை குணப்படுத்த அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் `டாமிபுளு' என்ற மாத்திரை தேவையான அளவு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 4 லட்சம் `டாமிபுளு' மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இது முதல் கட்ட நடவடிக்கையாகும். இதில் நோய் கட்டுப்படாமல் தீவிரம் அடைவதாக இருந்தால், அடுத்த கட்டமாக தடுப்பு ஊசி போடவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு பொற்கைபாண்டியன் கூறினார்.
கோவை
கோவையில், பன்றி காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்டு உள்ள 20 தனியார் ஆஸ்பத்திரிகளின் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று அங்குள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், துணை இயக்குனர் எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அவர் கூறுகையில்; கோவை மாவட்ட சுகாதாரத்துறையிடம் பன்றி காய்ச்சல் நோய்க்கான 18 ஆயிரம் `டாமிபுளு' மாத்திரைகள் கையிருப்பில் உள்ளதாகவும், மேலும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் மாத்திரைகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
பன்றி காய்ச்சல் நோய் குறித்து தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அறிகுறிகள்
பன்றி காய்ச்சல் நோய் சாதாரணமாகவும், சில வேளைகளில் மட்டும் தீவிரமாகவும் உடல் நிலையை பாதிக்கும். குறிப்பாக வயதானவர்கள், சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல் நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் தீவிரமாக உடல் நிலையை பாதிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதாலும், `டாமிபுளு' மருந்துகளை உட்கொள்ளுவதாலும் இறப்பினை தவிர்க்க முடியும்.
பன்றிக்காய்ச்சல் நோய், பாதிக்கப்பட்ட நபரின் தும்மல் மற்றும் இருமலின் மூலமாக பரவுகிறது. காய்ச்சல், தொண்டைவலி, இருமல், உடல்வலி, தலைவலி, சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.
தடுப்பு நடவடிக்கைகள்
* பன்றி காய்ச்சல் அறிகுறிகள் காணப்படும் நபர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரி அல்லது டாக்டர்களை அணுகி சரியாக சிகிச்சை மற்றும் அறிவுரை பெற்றுக்கொள்ளவேண்டும்.
* காய்ச்சல் குணமாகும் வரை வெளியில் செல்லாமல் அவர்களின் வீட்டிலேயே இருக்கவேண்டும்.
* தும்மல் மற்றும் இருமலின்போது துணியால் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளவேண்டும்.
* தினமும் 4 அல்லது 5 முறை கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தினதந்தி
உலக நாடுகளில் கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதன் முதலாக பன்றி காய்ச்சல் நோய் பரவ தொடங்கியது.
பன்றி காய்ச்சல்
`எச்1 என்1' என்ற வைரஸ் கிருமியால் உருவாகும் இந்த நோய் அப்போது இந்தியாவிலும் பரவியது. அப்போது இந்த நோயினால் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
3 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்திய பன்றி காய்ச்சல் இப்போது மீண்டும் பரவ தொடங்கி உள்ளது. வட மாநிலங்கள் மட்டுமின்றி சென்னை உள்பட தமிழ்நாட்டிலும் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது.
விவசாயி பலி
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவருக்கும், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பன்றி காய்ச்சல் இருப்பது, கிண்டி கிங் இன்ஸ்டிடிïட்டில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளின் மூலம் கண்டு அறியப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள எல்லப்பாளையத்தைச் சேர்ந்த 70 வயதான கந்தசாமி என்ற விவசாயி பன்றி காய்ச்சலுக்கு பலி ஆனார்.
12 பேர் பாதிப்பு
இந்தநிலையில் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த 2 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் பன்றி காய்ச்சல் சிகிச்சைக்கு பயந்து ஆஸ்பத்திரியை விட்டு ஓடிவிட்டனர். 10 வயது மற்றும் 8 வயதான அவர்கள் இருவரும் சிறுமிகள் என விசாரணையில் தெரிய வந்தது.
இவர்களையும் சேர்த்து சென்னையில் 5 பேரும், கோவையில் 7 பேரும் என தமிழ்நாட்டில் மேலும் 12 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்து உள்ளது.
ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு
தமிழகம் முழுவதும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்ட தலைநகர மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அல்லது தனி படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. சென்னையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றில் தனி படுக்கைகள் கொண்ட வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் உள்ள 1,612 ஆரம்ப சுகாதார மையங்களின் டாக்டர்களும், பன்றிக்காய்ச்சல் குறித்து `உஷார்' படுத்தப்பட்டு இருக்கிறார்கள். யாருக்காவது பன்றி காய்ச்சல் இருப்பது பற்றிய அறிகுறி காணப்பட்டால் அதுபற்றி உடனடியாக சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அமைச்சர் விஜய் ஆலோசனை
இதற்கிடையே முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் தலைமையில் பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், பன்றி காய்ச்சல் நோய் பரவும் விதம், தடுப்பு நடவடிக்கைகள், தேவையான மருத்துவ வசதிகளை ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்துவது ஆகியவை குறித்தும், இதற்கான டாக்டர்கள் தயார் நிலையில் இருக்கிறார்களா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பன்றி காய்ச்சல் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கைபாண்டியன், பொதுத்துறை கூடுதல் இயக்குனர் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குனர் வம்சதாரா, சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி குகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுபற்றி சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கைபாண்டியன் கூறியதாவது:-
4 லட்சம் மாத்திரைகள்
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு பரவலாக இல்லை. பாதிப்பு என்பது குறிப்பிட்ட சில பகுதிகளில்தான் உள்ளது. மேலும், யாருக்காவது பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது அறியப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அனைத்து டாக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
பன்றி காய்ச்சலை குணப்படுத்த அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் `டாமிபுளு' என்ற மாத்திரை தேவையான அளவு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 4 லட்சம் `டாமிபுளு' மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இது முதல் கட்ட நடவடிக்கையாகும். இதில் நோய் கட்டுப்படாமல் தீவிரம் அடைவதாக இருந்தால், அடுத்த கட்டமாக தடுப்பு ஊசி போடவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு பொற்கைபாண்டியன் கூறினார்.
கோவை
கோவையில், பன்றி காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்டு உள்ள 20 தனியார் ஆஸ்பத்திரிகளின் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று அங்குள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், துணை இயக்குனர் எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அவர் கூறுகையில்; கோவை மாவட்ட சுகாதாரத்துறையிடம் பன்றி காய்ச்சல் நோய்க்கான 18 ஆயிரம் `டாமிபுளு' மாத்திரைகள் கையிருப்பில் உள்ளதாகவும், மேலும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் மாத்திரைகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
பன்றி காய்ச்சல் நோய் குறித்து தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அறிகுறிகள்
பன்றி காய்ச்சல் நோய் சாதாரணமாகவும், சில வேளைகளில் மட்டும் தீவிரமாகவும் உடல் நிலையை பாதிக்கும். குறிப்பாக வயதானவர்கள், சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல் நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் தீவிரமாக உடல் நிலையை பாதிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதாலும், `டாமிபுளு' மருந்துகளை உட்கொள்ளுவதாலும் இறப்பினை தவிர்க்க முடியும்.
பன்றிக்காய்ச்சல் நோய், பாதிக்கப்பட்ட நபரின் தும்மல் மற்றும் இருமலின் மூலமாக பரவுகிறது. காய்ச்சல், தொண்டைவலி, இருமல், உடல்வலி, தலைவலி, சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.
தடுப்பு நடவடிக்கைகள்
* பன்றி காய்ச்சல் அறிகுறிகள் காணப்படும் நபர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரி அல்லது டாக்டர்களை அணுகி சரியாக சிகிச்சை மற்றும் அறிவுரை பெற்றுக்கொள்ளவேண்டும்.
* காய்ச்சல் குணமாகும் வரை வெளியில் செல்லாமல் அவர்களின் வீட்டிலேயே இருக்கவேண்டும்.
* தும்மல் மற்றும் இருமலின்போது துணியால் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளவேண்டும்.
* தினமும் 4 அல்லது 5 முறை கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மேலும் 12 பேருக்கு பன்றி காய்ச்சல், நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை
மிகவும் பயமாக இருக்கிறதே இந்த நோய் எங்க கொண்டு விடபோகிறது என்று தெரியவில்லை..
அப்பா ஏழாம் அறிவு போல் படத்தில் கந்தது போல் ஆகபோகிறதா...!
அப்பா ஏழாம் அறிவு போல் படத்தில் கந்தது போல் ஆகபோகிறதா...!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Similar topics
» பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை
» எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்க புதிய யோசனை சொல்லும் மத்திய அமைச்சர் !
» கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? - முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27-ந்தேதி ஆலோசனை
» பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
» டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை
» எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்க புதிய யோசனை சொல்லும் மத்திய அமைச்சர் !
» கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? - முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27-ந்தேதி ஆலோசனை
» பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
» டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|