ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவை தாக்கும் கொடூர நோய்!

4 posters

Go down

இந்தியாவை தாக்கும் கொடூர நோய்! Empty இந்தியாவை தாக்கும் கொடூர நோய்!

Post by கேசவன் Mon Apr 02, 2012 8:25 am


,
வெகு நாட்களாகவே இந்திய சமுகத்தை ஒரு கொடிய நோய் ஆட்டுவித்து வருகிறது அந்த வியாதியின் வீரியம் சமிபகாலமாக உச்ச நிலைக்கு சென்று நமது சமூகத்தை பெரிய ஆபத்தில் தள்ள தயாரக இருக்கிறது

இந்தியாவை இந்திய பண்பாட்டை பிளக்க வேண்டும் என்றால் அழிக்க வேண்டும் என்றால் கூட்டு குடும்ப முறையை முற்றிலுமாக ஒழித்து கட்ட வேண்டும் என்று ஆங்கில அரசாங்கம் விரும்பியது

அதற்க்காக கருத்து முறையிலான யுத்தத்தை மக்கள் மத்தியில் நேர் முகமாகவும் மறைமுகமாகவும் திட்டமிட்டு செய்தார்கள்

அதன் விளைவாக வளர்ந்து வரும் சமூகம் சிறிய குடும்பங்களாக பிரிவது தவிர்க்க முடியாது என்ற மனோபாவம் மக்கள் மத்தியில் வேருன்ற ஆரம்பித்தது


தாத்தா பாட்டி சித்தப்பா பெரியப்பா என்றிருந்த குடும்ப அமைப்பு அழிந்து அம்மா அப்பா பிள்ளைகள் என்று சுருங்கி போய்விட்டது

ஒரு பெரிய குடும்பம் என்றால் ஒருவர் சம்பாத்தியத்தில் பலர் உட்க்கார்ந்து சாப்பிடும் தொல்லையிருக்கிறது உழைக்க வேண்டும் என்ற ஆர்வம் பலரிடம் இல்லாமல் போய்விடுகிறது என்ற எண்ணம் மேலோங்கி நின்றதே தவிர

கூட்டு குடும்பத்தில் உள்ள உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுதல் ஆளுக்கொரு வேலையை பிரித்து கொள்ளுதல் பொருளாதார சிக்கனம் குழந்தை வளர்ப்பு பரஸ்பரம் ஒத்தாசை செய்தல் போன்ற நல்ல தன்மைகள் சுலபமாக மறைக்கப் பட்டு விட்டது

இதனாலேயே இந்திய கிராம பொருளாதரம் சீர் குலைந்து மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு இடம் பெயர வேண்டிய சூழல் உருவானது


நகரத்தின் இட நெருக்கடி சுகாதார மின்மை போன்ற வற்றால் சுற்று சூழல் பாதிப்பு வரை ஏற்பட்டு இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மை கூட அந்திம காலத்தை நெருங்கி கொண்டிருக்கிறது

குதிரை குப்புற தள்ளியாதும் அல்லாமல் குழியும் பறித்த கதையாக இன்றைய அவசர சமூகம் அம்மா அப்பா குழந்தைகள் என்ற கையளவு வடிவத்தை கூட குறைத்து கொள்ள துவங்கி விட்டது

ஒரு பையனுக்கு பெண் பார்க்க துவங்கி விட்டாலே பையன் நல்லவனா கெட்டப் பழக்கங்கள் இல்லாதவனா பெண்ணை வைத்து நல்ல முறையில் குடும்பம் நடத்துவானா அவனை சார்ந்த குடும்ப உறுபினர்கள் நம் பெண்ணை நல்ல முறையில் வைத்து கொள்வார்களா என்று விசாரிக்கும் காலம் போய்

திருமணத்திற்கு பிறகும் மாப்பிளையின் தாய் தகப்பன் அவனோடு இருப்பார்களா அல்லது தனியாக போய்விடுவார்களா
என்று தான் கேள்வி கேட்கிறார்கள்

ஒரு குழந்தையை பெற்று ஈ எறும்பு அண்டாமல் பாதுகாத்து பசியும் நோயும் தாக்காமல் பராமரித்து படிக்க வைத்து வேலை வாங்கி கொடுத்து ஆறடி உயர மனிதனாக வளர்ந்த பின்பு தாலி கட்டி வந்த ஒரே ஒரு உறவுக்காக பெற்றவர்களை கைவிட்டு விட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எந்த வகை மனிதாபிமானம்?


பெண்ணை பெற்றவர்களுக்கு கஷ்டங்கள் இல்லை என்று நான் எப்போதும் சொல்வது கிடையாது

ஆண்கள் அனைவருமே பெண்மையை பூஜை செய்யும் உத்தமர்கள் என்றும் கருதுவது இல்லை

ஆனால் இன்றைய எதார்த்த நிலை பெருமளவு ஆண்களுக்கு சாதகமாக இருக்கிறது என்று சொல்லவும் இயலாது

எனது நண்பர் ஒருவரின் மகன் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான் அவனுக்கு பெற்றோர்களாக பார்த்து திருமணமும் செய்து வைத்தார்கள்

திருமணம் ஆன மூன்றே மாதத்தில் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று மனைவி சொல்லி இருக்கிறாள்

பையன் ஒத்துக் கொள்ள வில்லை என் பெற்றோருக்கு நான் ஒரே மகன் அவர்களுக்கு என்னை விட்டால் யாரும் இல்லை அதனால் அவர்களோடு நாம் குடும்பம் நடத்தலாம் என்று சொல்லி இருக்கிறான்

அவள் ஒத்துக் கொள்ள வில்லை நீ உன் பெற்றோரை விட்டு பிரிய மறுத்தால் நான் ஏன் என் தாய் தகப்பனை பிரிய வேண்டும்


எனவே உன்னோடு வாழ முடியாது என்று பிறந்த வீடு சென்று விட்டாள்

சென்றவள் சும்மா இருக்க வில்லை மாமனார் மாமியார் மற்றும் கணவன் எல்லோரும் சேர்ந்து என்னை கொடுமை படுத்துகிறார்கள் உன் தகப்பனிடம் இருந்து பணம் வாங்கி வா நகை வாங்கி வா என்று எப்போதும் தொல்லை செய்கிராகள் என காவல் நிலையத்தில் புகார் செய்து ஒரு பாவம் அறியாத அந்த குடும்பத்தாரை இரண்டு நாட்களுக்கு சிறையில் வைத்து விட்டாள்

இப்படி ஒரு சம்பவம் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் பல சம்பவங்கள் தினசரி நடந்து வருகிறது

குடும்ப நீதி மன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் பல நிஜமாகவே இப்படி தான் இருக்கிறது

இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்ன? தானும் வாழ்ந்து மற்றவரையும் வாழ விட்டு வாழுகின்ற எண்ணம் மனிதர்கள் மத்தியில் படிபடியாக குறைந்து போய் விட்டது


யார் எப்படி போனால் நமக்கென்ன நாம் சந்தோசமாக இருக்கிறோமா அது மட்டும் போதும் என்ற மன நிலை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது

நாடு முழுவதும் உள்ள ஐரோப்பிய கல்வி முறை குழந்தைகள் மனதில் ஈரத்தை முற்றிலுமாக அளித்து விட்டு விஷ விதையை தண்ணீர் விட்டு வளர்த்து வருகிறது

இப்படி நான் சொல்வதினால் சிலருக்கு குழப்பம் வரலாம்

இன்றைய உலகம் சுருங்கி வருகிறது இதில் எதிர் நீச்சல் போட்டு கரை சேர ஆங்கில அறிவும் படிப்பும் மிகவும் அவசியம் அதை குழந்தைகளுக்கு கொடுக்காமல் போனால் நமது குழந்தைகள் உலகத்தார் மத்தியில் முன்னேற முடியாமல் சிறகில்லாத பறைவைகள் போல சிக்கி தவிக்க வேண்டிய நிலை வரும் என்பார்கள்

நான் ஆங்கிலம் வேண்டாம் என்றோ அதானால் தான் கேடுகள் சூழ்ந்து விட்டது என்றோ சொல்ல வரவில்லை


ஆங்கிலம் குழந்தைக்கு தேவை தான் அனால் ஆங்கில தன்மை நமது குழைந்தைகளுக்கு தேவையே இல்லை

இந்திய சாயலில் இந்திய மரபு வழியில் ஆங்கிலம் கற்றால் எந்த கேடும் வராது

இன்று அயல் நாடுகளில் வாழும் இந்திய பெற்றோர்கள் எத்தகைய கஷ்டங்களை அனுபவிக்கிறார்களோ அதே கஷ்டத்தை இந்தியாவில் கொல்கத்தா,பெங்களூர்,சென்னை,டெல்லி,மும்பை போன்ற பெரு நகர பெற்றோர்களும் அனுபவிக்கிறார்கள்

விடலை பருவத்தை தொடுவதற்கு முன்பே நகர குழந்தைகள் நூற்றுக்கு எண்பது பேர்கள் போதை மற்றும் தவறான பாலுறவு பழக்கத்திற்கு அடிமையாகி சுய முகத்தை இழந்து நிற்கிறார்கள்

இப்படி பட்ட இளைய தலைமுறையினரால் பெற்றவர்களின் கஷ்டங்களை எப்படி புரிந்து கொள்ள இயலும்?

அதனால் தான் கல்யாணம் கட்டியவுடன் அப்பன் ஆத்தாவை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளி விட்டு நாம் மட்டுமே இருப்போம் என்று பிடிவாதம் செய்கிறார்கள்


தவறு செய்யும் போது பெரியவர்கள் தட்டி கேட்டால் மலையளவு குதித்து தங்களை தாங்களே குழி தோண்டி புதைத்து கொள்கிறார்கள்

நாளை தங்கள் பிள்ளைகளும் தங்களிடம் இப்படி தான் நடக்கும் என்பதை நினைத்து கூட பார்ப்பது இல்லை

சொந்த பெண் ஆண் நண்பர்களை வைத்து கொண்டாலும் மகன் பெண் பிள்ளைகளோடு ஊர் சுற்றினாலும் இதல்லாம் இந்த காலத்தில் சகஜம் என்ற மன நிலை தற்போதைய பெற்றோர்களிடம் அதிகரித்து இருப்பதற்கும்

இவர்களை கைவிட்டால் தான் குடும்பம் நடத்த முடியும் என பிள்ளைகள் நினைப்பதற்கும் அடிப்படை காரணமே கல்வி முறை தான் உள்ளது

விளையாட்டானாலும் படிப்பானாலும் நீ மட்டுமே வெற்றி பெற வேண்டும் எதிலும் நீதான் முதலாளாய் வர வேண்டும் என்றும் பள்ளியிலேயே போதிக்க படுவதினால் தோல்விகளை எதிர்கொள்ள பிள்ளைகள் தயாராக இல்லை

எதிலும் எப்படியாவது எந்த வழியிலாவது இன்பத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற வெறியில் எதையும் அதாவது பெற்றவர்களையும் உற்றவர்களையும் ஒழித்துக்கட்ட இன்றைய தலைமுறையினர் தயாராகி விட்டனர்

இப்படியே நிலைமை தொடர்ந்தால் காலகாலமாக பின்பற்ற பட்டுவரும் இதிய பண்பாடு என்பதை ஏட்டில் கூட காண முடியாமல் போய் விடும்

எனவே சமச்சீர் கல்வி முறையை சீர்படுத்த முனைந்திருக்கும் இக்கால கட்டத்தில் அறிஞர்கள் இதையும் சேர்த்து சிந்தித்தால் நன்றாக இருக்கும்

http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_13.html


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்தியாவை தாக்கும் கொடூர நோய்! 1357389இந்தியாவை தாக்கும் கொடூர நோய்! 59010615இந்தியாவை தாக்கும் கொடூர நோய்! Images3ijfஇந்தியாவை தாக்கும் கொடூர நோய்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இந்தியாவை தாக்கும் கொடூர நோய்! Empty Re: இந்தியாவை தாக்கும் கொடூர நோய்!

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 9:26 am

///
ஆங்கிலம் குழந்தைக்கு தேவை தான் அனால் ஆங்கில தன்மை நமது குழைந்தைகளுக்கு தேவையே இல்லை///

சூப்பர்... ஆமோதித்தல்


இந்தியாவை தாக்கும் கொடூர நோய்! 224747944

இந்தியாவை தாக்கும் கொடூர நோய்! Rஇந்தியாவை தாக்கும் கொடூர நோய்! Aஇந்தியாவை தாக்கும் கொடூர நோய்! Emptyஇந்தியாவை தாக்கும் கொடூர நோய்! Rஇந்தியாவை தாக்கும் கொடூர நோய்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இந்தியாவை தாக்கும் கொடூர நோய்! Empty Re: இந்தியாவை தாக்கும் கொடூர நோய்!

Post by யினியவன் Mon Apr 02, 2012 9:40 am

கேசவன் wrote:
இந்தியாவை இந்திய பண்பாட்டை பிளக்க வேண்டும் என்றால் அழிக்க வேண்டும் என்றால் கூட்டு குடும்ப முறையை முற்றிலுமாக ஒழித்து கட்ட வேண்டும் என்று ஆங்கில அரசாங்கம் விரும்பியது

அதற்க்காக கருத்து முறையிலான யுத்தத்தை மக்கள் மத்தியில் நேர் முகமாகவும் மறைமுகமாகவும் திட்டமிட்டு செய்தார்கள்

அதன் விளைவாக வளர்ந்து வரும் சமூகம் சிறிய குடும்பங்களாக பிரிவது தவிர்க்க முடியாது என்ற மனோபாவம் மக்கள் மத்தியில் வேருன்ற ஆரம்பித்தது
நம் பண்பாடு மாறி வருகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

கூட்டுக் குடும்ப முறையை அழிக்க வேண்டும் என்று ஆங்கில ராசாங்கம் விரும்பியதா?

முதன் முறையாக இதை கேள்விப் படுகிறேன். பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளும் மன்னர்களிடம் தானே செய்தார்கள்?

இன்றைய வளர்ச்சியில் நாம் தான் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல் ஆங்கில மோகத்தில் நம் பண்பாடை நாமே அழிக்கிறோம். இதற்கு அவர்களை குறை சொல்ல இயலுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியாவை தாக்கும் கொடூர நோய்! Empty Re: இந்தியாவை தாக்கும் கொடூர நோய்!

Post by வின்சீலன் Mon Apr 02, 2012 11:08 am

சென்றவள் சும்மா இருக்க வில்லை மாமனார் மாமியார் மற்றும் கணவன் எல்லோரும் சேர்ந்து என்னை கொடுமை படுத்துகிறார்கள் உன் தகப்பனிடம் இருந்து பணம் வாங்கி வா நகை வாங்கி வா என்று எப்போதும் தொல்லை செய்கிராகள் என காவல் நிலையத்தில் புகார் செய்து ஒரு பாவம் அறியாத அந்த குடும்பத்தாரை இரண்டு நாட்களுக்கு சிறையில் வைத்து விட்டாள்

மிகவும் நல்ல பதிவு . அணைவரும் படிது யோசித்து செயல்படுத வேண்டிய விஷயம் :வணக்கம்:


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

இந்தியாவை தாக்கும் கொடூர நோய்! Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

இந்தியாவை தாக்கும் கொடூர நோய்! Empty Re: இந்தியாவை தாக்கும் கொடூர நோய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum