Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை ரயில் மியூசியம்
3 posters
Page 1 of 1
சென்னை ரயில் மியூசியம்
சென்னை ரயில் மியூசியம்
நமக்கு நெருக்கமான, மட்டும் பிரியமான விஷயத்தில் ரயில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். எத்தனை முறை பார்த்தாலும், எத்தனை முறை பயணம் செய்தாலும், எந்த வயதிலும் களைப்பிற்கு பதிலாக களிப்பே தரும் ரயிலின் வரலாறுதான் எத்தனை சுவாரசியமானது
150 வருட இந்திய ரயில்வேயின் வரலாறை சொல்லும் சென்னை புது ஆவடி ரோட்டில் உள்ள மண்டல ரயில் அருங்காட்சியகம் அவசியம் அனைவரும் காணவேண்டிய ஒன்றாகும். 1853ம் வருடம் அன்றைய பாம்பாயில் இருந்து தானேக்கு (34கி.மீ) முதல் முறையாக ரயில் ஒடியது முதல், இன்றைக்கு வரையிலான வரலாறை அருங்காட்சியகத்தில் உள்ள படங்களும், ரயில் பெட்டிகளும், என்ஜின்களும் படிப்படியாக விளக்குகின்றன.
எப்படி தகடாக இருந்து முழு ரயில் உருவாகிறது என்பதை சொல்வதில் துவங்கி, ரயில் என்ஜினை நிலம் உழுவதற்காக பயன்படுத்தியதும், அந்தக்கால ராஜாக்கள், மற்றும் செல்வந்தர்கள் ஆங்காங்கே ரயில் போக்குவரத்து நடத்தியதும், பல ஆண்டுகளுக்கு முன்பே மாடி ரயில் விட்டதும் என பல விஷயங்கள் இங்கே போனால் தெரிந்து கொள்ளலாம்.
Narrow Gauge Engine(Darjeeling Himalayan Railways)
Fowler ploughing Engine ( Road Roller Type)1895.
48 வகையான நிஜமான ரயில் என்ஜின்கள், பெட்டிகள், கிரேன்கள் இங்கு உள்ளன. இப்போது இவை செயல்பாட்டில் இல்லாவிட்டாலும் இவை எப்படியெல்லாம் செயல்பட்டன என்பதை அறியும் போது வியக்காமல் இருக்கமுடியாது, அதிலும் நீராவி என்ஜின் ரயிலை நெருப்பில் வெந்தபடி ஒட்டிய ஒட்டுனர்கள் உள்ளபடியே பெரும் தியாகிகள் என்றே சொல்ல தோன்றும்.
இப்போது பர்ஸ்ட் கிளாஸ் துவங்கி ஸ்லீப்பர் கிளாஸ் வரை தெரியும். ஆனால் அப்போது மூன்றாம் வகுப்பு பெட்டி என்று ஒன்று இருந்ததும் அதில் எளியவர்கள் மற்றும் ஏழைகள் உட்கார்ந்தே பயணித்ததும், அந்த பெட்டியில்தான் இந்தியா முழுவதும் மகாத்மாகாந்தி விரும்பி பயணித்தது போன்ற விவரங்களை போட்டோ கேலரி விளக்குகிறது.
பரந்து விரிந்த பசுமையான பரப்பில் நீராவி என்ஜின் முதல் ஊட்டி மலை ரயில் வரையிலான கோச்சுகள் புது வண்ணம் பூசி நிற்கின்றன. அதிலும் ஊட்டி மலை ரயில் பல் சக்கரத்தை பிடித்தபடி எப்படி மலையேறுகிறது என்பதை இங்கே போனால் புரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளை குஷிப்படுத்த ஜாய் டிரெய்ன் உள்ளது. டார்ஜிலிங் ரயில் என்ஜின் உள்ளிட்ட என்ஜின்கள், கோச்சுகளை பார்த்தபடி, சுரங்கத்தினுள் நுழைந்தபடி 500 மீட்டர் தூரம் ரயிலில் குஷியாக பயணிக்கலாம், பயணத்தின் ஆரம்பத்தில் பெரியவர்ளாக இருப்பவர்கள் பயண முடிவில் குழந்தைகளாக மாறிவிடுவார்கள்.
இதே போல மாடல் ரயில்கள் ஒடுகின்றன, சிக்னல் செயல்படும் விதம் குறித்து மாதிரி மின்சார ரயில்களை ஒடவிட்டு காட்டுகிறார்கள், அருமையாக உள்ளது. பராம்பரிய பொருட்கள் கூடத்தில் 134 வருடத்திற்கு முந்திய கடிகாரம் இன்னமும் துல்லியமாக நேரம் காட்டியபடி ஒடிக்கொண்டு இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் விளையாட இரண்டு மைதானங்கள் உள்ளன. நீங்களே சாப்பாடு கொண்டு வந்து பசுமையான குடும்பத்தோடு சாப்பிடுவதே ஒரு சந்தோஷமான அனுபவம்தான்.
கடந்த 2002-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த ரயில் மியூசியம் இந்தியாவில் ஐந்தாவதாக விளங்குகிறது. இதனை முதன்மையான மியூசியமாக்கும் முயற்சியில் கியூரேட்டர் வி.கல்யாண சுந்தரம் தலைமையிலான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் கொஞ்ச நாளில் இங்கே நிறைய மாற்றங்கள் வர உள்ளன. வரும் பார்வையாளர்களுக்கு தேவையான வசதிகளும் நிறைய செய்து கொடுக்கப்படும், அப்புறம் பாருங்க இந்த மியூசியத்திற்கு திரும்ப, திரும்ப வருவீங்க என்கின்றனர் நம்பிக்கையுடன்.
தண்டாவாளத்தின் ஸ்லீப்பர் கட்டைகள் ஏன் வளைந்து காணப்படுகின்றன? முன்பெல்லாம் ஒடும் ரயிலில் இருந்தபடியே ஒரு வளையத்தை ஒட்டுனர்கள் லாவகமாக வாங்குவார்களே அது என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு இங்கே வழிகாட்டியாகவரும் ஊழியர்கள் தெளிவான விளக்கம் தருகிறார்கள். நீங்கள் காது கொடுத்து கேட்பீர்கள் என்றால் போர் காட் என்ற வெளிநாட்டு பெண்தான் இந்தியாவின் முதல் ரயில் தண்டாவாளத்தை உருவாக்கினார் என்பதும், இரவில் ஸ்டேசனில் வந்து நிற்கும் ரயிலின் ஜன்னல், ஜன்னலாய் நிலைய பணியாளர் ஒருவர் லாந்தர் விளக்கை பிடித்தபடி நிலையத்தின் பெயரை உரக்க கூவியபடியே செல்வார் என்பது போன்ற பழங்கால சுவாராசியமான கதைகள் சொல்வார்கள்.
வாரத்தில் திங்கள் கிழமை விடுமுறை, மற்ற நாட்கள் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை மியூசியம் திறந்து இருக்கும். அனுமதி கட்டணம் 10 ரூபாய். மேலும் விவரங்களுக்கு போன் எண்:044-26201014ட
நன்றி:தினமலர்
நமக்கு நெருக்கமான, மட்டும் பிரியமான விஷயத்தில் ரயில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். எத்தனை முறை பார்த்தாலும், எத்தனை முறை பயணம் செய்தாலும், எந்த வயதிலும் களைப்பிற்கு பதிலாக களிப்பே தரும் ரயிலின் வரலாறுதான் எத்தனை சுவாரசியமானது
150 வருட இந்திய ரயில்வேயின் வரலாறை சொல்லும் சென்னை புது ஆவடி ரோட்டில் உள்ள மண்டல ரயில் அருங்காட்சியகம் அவசியம் அனைவரும் காணவேண்டிய ஒன்றாகும். 1853ம் வருடம் அன்றைய பாம்பாயில் இருந்து தானேக்கு (34கி.மீ) முதல் முறையாக ரயில் ஒடியது முதல், இன்றைக்கு வரையிலான வரலாறை அருங்காட்சியகத்தில் உள்ள படங்களும், ரயில் பெட்டிகளும், என்ஜின்களும் படிப்படியாக விளக்குகின்றன.
எப்படி தகடாக இருந்து முழு ரயில் உருவாகிறது என்பதை சொல்வதில் துவங்கி, ரயில் என்ஜினை நிலம் உழுவதற்காக பயன்படுத்தியதும், அந்தக்கால ராஜாக்கள், மற்றும் செல்வந்தர்கள் ஆங்காங்கே ரயில் போக்குவரத்து நடத்தியதும், பல ஆண்டுகளுக்கு முன்பே மாடி ரயில் விட்டதும் என பல விஷயங்கள் இங்கே போனால் தெரிந்து கொள்ளலாம்.
Narrow Gauge Engine(Darjeeling Himalayan Railways)
Fowler ploughing Engine ( Road Roller Type)1895.
48 வகையான நிஜமான ரயில் என்ஜின்கள், பெட்டிகள், கிரேன்கள் இங்கு உள்ளன. இப்போது இவை செயல்பாட்டில் இல்லாவிட்டாலும் இவை எப்படியெல்லாம் செயல்பட்டன என்பதை அறியும் போது வியக்காமல் இருக்கமுடியாது, அதிலும் நீராவி என்ஜின் ரயிலை நெருப்பில் வெந்தபடி ஒட்டிய ஒட்டுனர்கள் உள்ளபடியே பெரும் தியாகிகள் என்றே சொல்ல தோன்றும்.
இப்போது பர்ஸ்ட் கிளாஸ் துவங்கி ஸ்லீப்பர் கிளாஸ் வரை தெரியும். ஆனால் அப்போது மூன்றாம் வகுப்பு பெட்டி என்று ஒன்று இருந்ததும் அதில் எளியவர்கள் மற்றும் ஏழைகள் உட்கார்ந்தே பயணித்ததும், அந்த பெட்டியில்தான் இந்தியா முழுவதும் மகாத்மாகாந்தி விரும்பி பயணித்தது போன்ற விவரங்களை போட்டோ கேலரி விளக்குகிறது.
பரந்து விரிந்த பசுமையான பரப்பில் நீராவி என்ஜின் முதல் ஊட்டி மலை ரயில் வரையிலான கோச்சுகள் புது வண்ணம் பூசி நிற்கின்றன. அதிலும் ஊட்டி மலை ரயில் பல் சக்கரத்தை பிடித்தபடி எப்படி மலையேறுகிறது என்பதை இங்கே போனால் புரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளை குஷிப்படுத்த ஜாய் டிரெய்ன் உள்ளது. டார்ஜிலிங் ரயில் என்ஜின் உள்ளிட்ட என்ஜின்கள், கோச்சுகளை பார்த்தபடி, சுரங்கத்தினுள் நுழைந்தபடி 500 மீட்டர் தூரம் ரயிலில் குஷியாக பயணிக்கலாம், பயணத்தின் ஆரம்பத்தில் பெரியவர்ளாக இருப்பவர்கள் பயண முடிவில் குழந்தைகளாக மாறிவிடுவார்கள்.
இதே போல மாடல் ரயில்கள் ஒடுகின்றன, சிக்னல் செயல்படும் விதம் குறித்து மாதிரி மின்சார ரயில்களை ஒடவிட்டு காட்டுகிறார்கள், அருமையாக உள்ளது. பராம்பரிய பொருட்கள் கூடத்தில் 134 வருடத்திற்கு முந்திய கடிகாரம் இன்னமும் துல்லியமாக நேரம் காட்டியபடி ஒடிக்கொண்டு இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் விளையாட இரண்டு மைதானங்கள் உள்ளன. நீங்களே சாப்பாடு கொண்டு வந்து பசுமையான குடும்பத்தோடு சாப்பிடுவதே ஒரு சந்தோஷமான அனுபவம்தான்.
கடந்த 2002-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த ரயில் மியூசியம் இந்தியாவில் ஐந்தாவதாக விளங்குகிறது. இதனை முதன்மையான மியூசியமாக்கும் முயற்சியில் கியூரேட்டர் வி.கல்யாண சுந்தரம் தலைமையிலான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் கொஞ்ச நாளில் இங்கே நிறைய மாற்றங்கள் வர உள்ளன. வரும் பார்வையாளர்களுக்கு தேவையான வசதிகளும் நிறைய செய்து கொடுக்கப்படும், அப்புறம் பாருங்க இந்த மியூசியத்திற்கு திரும்ப, திரும்ப வருவீங்க என்கின்றனர் நம்பிக்கையுடன்.
தண்டாவாளத்தின் ஸ்லீப்பர் கட்டைகள் ஏன் வளைந்து காணப்படுகின்றன? முன்பெல்லாம் ஒடும் ரயிலில் இருந்தபடியே ஒரு வளையத்தை ஒட்டுனர்கள் லாவகமாக வாங்குவார்களே அது என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு இங்கே வழிகாட்டியாகவரும் ஊழியர்கள் தெளிவான விளக்கம் தருகிறார்கள். நீங்கள் காது கொடுத்து கேட்பீர்கள் என்றால் போர் காட் என்ற வெளிநாட்டு பெண்தான் இந்தியாவின் முதல் ரயில் தண்டாவாளத்தை உருவாக்கினார் என்பதும், இரவில் ஸ்டேசனில் வந்து நிற்கும் ரயிலின் ஜன்னல், ஜன்னலாய் நிலைய பணியாளர் ஒருவர் லாந்தர் விளக்கை பிடித்தபடி நிலையத்தின் பெயரை உரக்க கூவியபடியே செல்வார் என்பது போன்ற பழங்கால சுவாராசியமான கதைகள் சொல்வார்கள்.
வாரத்தில் திங்கள் கிழமை விடுமுறை, மற்ற நாட்கள் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை மியூசியம் திறந்து இருக்கும். அனுமதி கட்டணம் 10 ரூபாய். மேலும் விவரங்களுக்கு போன் எண்:044-26201014ட
நன்றி:தினமலர்
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: சென்னை ரயில் மியூசியம்
கிழக்கு சீமையிலே ரயிலை மறக்க முடியுமா
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: சென்னை ரயில் மியூசியம்
நல்ல பதிவு-பகிர்வு முஹைதீன்...நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சென்னை ரயில் மியூசியம்
அதி wrote:கிழக்கு சீமையிலே ரயிலை மறக்க முடியுமா
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Similar topics
» பயணிகளின் வசதிக்காக ரயில் சேவை அதிகரிப்பு - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
» சென்னை பறக்கும் ரயில் போக்குவரத்து நிறுத்தம்!
» சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்
» சென்னை: நாளை(அக்.,3) அதிகாலையில் மெட்ரோ ரயில்
» ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து
» சென்னை பறக்கும் ரயில் போக்குவரத்து நிறுத்தம்!
» சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்
» சென்னை: நாளை(அக்.,3) அதிகாலையில் மெட்ரோ ரயில்
» ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|