புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாங்களேன் ............ஒரு கப்  'டீ'   சாப்பிடலாம்  Poll_c10வாங்களேன் ............ஒரு கப்  'டீ'   சாப்பிடலாம்  Poll_m10வாங்களேன் ............ஒரு கப்  'டீ'   சாப்பிடலாம்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
வாங்களேன் ............ஒரு கப்  'டீ'   சாப்பிடலாம்  Poll_c10வாங்களேன் ............ஒரு கப்  'டீ'   சாப்பிடலாம்  Poll_m10வாங்களேன் ............ஒரு கப்  'டீ'   சாப்பிடலாம்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வாங்களேன் ............ஒரு கப்  'டீ'   சாப்பிடலாம்  Poll_c10வாங்களேன் ............ஒரு கப்  'டீ'   சாப்பிடலாம்  Poll_m10வாங்களேன் ............ஒரு கப்  'டீ'   சாப்பிடலாம்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்


   
   
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed May 23, 2012 12:37 pm

வாங்களேன் ............ஒரு கப்  'டீ'   சாப்பிடலாம்  Tea-Leaves-Picked

தேயிலை (Tea, Camellia sinensis) ஒரு பசுமைத் தாவரம். இது ஒரு வாணிகப் பயிராகும் இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

தேயிலை முதலில் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின் சீனாவிற்கு புத்த மதத்தைக் கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரரகள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840-50 களில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு தென்கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது.

போதிதர்மர் (தாமோ) தவம் செய்யும் போது உறங்கிவிடாமல் இருக்க தன் இரு மேல் இமைகளை வெட்டி எறிந்ததாகவும் ,அது நிலத்தில் தேயிலை பயிராக வளர்ந்த்தது என்றும் சீன கதைகள் உண்டு

மூன்று வகைத் தேயிலைகள்:

தேயிலையை பக்குவப்படுத்தும் முறையைப் பொறுத்து 3 வகைப்படும். பச்சை தேயிலை(Green Tea), ஊலூங் தேயிலை(Oolong Tea), மற்றும் கருப்பு தேயிலை (நாம் பயன்படுத்தும் Black Tea).

நாம் பயன்படுத்தும் தேயிலை இலையின் அளவைப் பொறுத்து அதன் தரம் பிரிக்கப்படுகிறது. பொதுவாக பெரிய இலைகள் உள்ள நல்ல தரமான தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகின்றது. தூள் தேயிலை (Dust Tea) உள்நாட்டில் விற்கப்படுகின்றது.

இந்தியாவில் சிறந்த தேயிலை என்ற இடத்தை டாட்டா தேயிலை பிடித்துள்ளது

இலங்கை கறுப்புத் தேயிலை இலங்கையில் வளர்க்கப்படும் கறுப்புத் தேயிலையாகும்.இது நல்ல நறுமணத்தைக் கொண்டிருப்பதோடு சிற்றஸ் அமிலத்தின் மணத்துக்கு ஒப்பானதாகும். தேயிலை சுவையூட்டிகள் கலந்தோ அல்லது கலக்கப்படாமலோ அருந்தப்படுகிறது. தேயிலை பல பெருந்தோட்டங்களில் பல உயரங்களில் வளர்க்கப்படுகிறது, உயரத்துக்கமைய சுவையும் வேறுபடுகிறது.

டீ வகைகள்

கிரீன் டீ
வாங்களேன் ............ஒரு கப்  'டீ'   சாப்பிடலாம்  Greentea

தற்போது இந்த தேயிலையின் முக்கியத்தும் பரவியுள்ளதால் பெரிய கடைகளில் சாதாரணமாக கிடைக்கின்றது. இந்த தேயிலை கரும்பச்சையாக சுருண்டு நீளமாக காணப்படும். தண்ணீரில் போடப்பட்டபின் இதன் அளவு பெரிதாகி நிறம் பச்சையாக மாறும். மற்ற தேயிலைகளை விட இந்த தேயிலையின் விலை சற்று அதிகம். பல நாடுகளில் தயாரிக்கப்பட்டாலும் சீனாவின் பச்சைத் தேயிலை தான் சிறந்ததாகும்.

பச்சைத் தேயிலையிலிருந்து தேனீர் தயாரித்தல்:

மற்ற தேயிலை போன்று இதை கொதிக்க வைக்கக்கூடாது. தேனீர் தயாரிக்க 70 – 85 டிகிரி வெப்பம் போதுமானது. தண்ணீரை கொதிக்க வைத்து – இரண்டு நிமிடங்கள் அப்படியே வைத்தால் சரியான வெப்பநிலைக்கு வந்து விடும்.

பின் தேவையான பச்சைத் தேயிலையை ஒரு குவளையில்(glass) போட்டு (ஒரு கிளாசுக்கு 2 கிராம் = ஒரு டீஸ்பூன்) சிறிது வெந்நீரை தேயிலையை மூடும் அளவிற்கு ஊற்றி உடனே தண்ணீரை கீழே கொட்டி விட வேண்டும். இதனால் தேயிலை கழுவப்படுவது மட்டுமன்றி அதில் உள்ள காஃபீனும் ஓரளவு அகற்றப்படும். அதன் பின் தேவையான அளவு வெந்நீரை ஊற்றி ஒன்று அல்லது இரண்டு நிமிடம் ஊற வைக்கவும். இதில் பயன்படுத்தப் பட்ட இலையை இன்னும் சில முறைகள் வெந்நீர் விட்டு அருந்தலாம். கண்டிப்பாக பால் இதனுடன் சேர்க்கக்கூடாது. சர்க்கரையை தவிர்ப்பது நலம். சுவையை மேலும் அதிகரிக்க “தோலுடன் நறுக்கிய எலுமிச்சை பழத்தின”் சிறிய துண்டை தேனீரில் போட்டும் குடிக்கலாம்.

பச்சைத் தேயிலையை கொதிக்க வைப்பதால் இதன் தன்மை மாறிவிடும். எனவே மேலே கூறிய முறைப்படி தயாரித்து மணம் – சுவை – மருத்துவ குணமுடைய தேனீரை அருந்தலாம்

மசாலா டீ

வாங்களேன் ............ஒரு கப்  'டீ'   சாப்பிடலாம்  Gujaratfoodproducts-small10-250x250

தேவையான பொருட்கள்:
பால் - 1 கப்
டீ பேக் - 1
சர்க்கரை - இனிப்புக்கேற்ப

பொடிக்க:
ஏலக்காய் -7
பட்டை - 1 சிறுதுண்டு
சுக்கு - 1 சிறுதுண்டு
கிராம்பு - 2
மிளகு - 3

செய்முறை :
*பொடிக்க கொடுத்துள்ளவைகளை பொடிக்கவும்.

*பாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து கொதித்ததும் டீ பேக் சேர்த்து கொதிக்கவிடவும்.பின் பாலை சேர்த்து கொதிக்க வைத்து பொடித்த பொடியில் 1 1/2 டீஸ்பூன் சேர்க்கவும்.

*கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை சேர்த்து குடிக்கவும்.சுவையும் மணமும் ரொம்ப நல்லாயிருக்கும்.

ஹை டீ (High Tea)

வாங்களேன் ............ஒரு கப்  'டீ'   சாப்பிடலாம்  Images?q=tbn:ANd9GcTr-R0xeVYe92A5np1Z1oZ2pMhkXpWn75mNzdPXlacChMvDEc5ulpHLVXljTg

பிரிட்டீஷ்காரர்களின் சமையல் கலையில் இந்த ‘ஹை டீ’ க்கு மிக உயர்ந்த இடம். இதன் ரிஷிமூலம் நதிமூலம் தெரிந்து கொள்ள 1800 ஆண்டுக்குச் செல்லவேண்டும். இந்த காலகட்டத்தில் பிரிட்டனில் காஸ் விளக்கு, மற்றும் எண்ணெய் விளக்குகள் குறிப்பாக செல்வந்தர்களின் வீடுகளில் புழக்கத்துக்கு வர ஆரம்பித்து இருந்தன. இதனால் இரவு சாப்பாடு தாமதமாக சாப்பிடுவது நாகரிகம் ஆனது

ஹை டீயைப் பற்றிய கதை என்னவென்றால், பெட்போர்ட் என்ற இடத்தில் இருந்த சீமாட்டி ஒருவருக்கு மதிய வேளையில் மிகவும் ‘போர்’ அடிக்கவே அவ்வப்போது தனது தோழியரை அழைத்து சில நொறுக்குத் தீனிகளுடன் டீ சாப்பிடும் வழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். டீ சாப்பிடுவதே ஒரு பெரிய நாகரீகமாகக் கருதப்பட்டது அப்போது! சீமாட்டி ஆரம்பித்த வழக்கம் வேகமாகப் பரவ ஆரம்பித்து, பெண்களின் விருப்பமான பொழுது போக்கானது. செல்வந்தர்களிடம் ஆரம்பித்த இந்தப் பழக்கம் சாதாரண மக்களிடையேயும் பரவிற்று.

வீடுகளில் ஹை டீ பார்ட்டி என்றால், 4 மணிக்கு தொடங்க வேண்டும். இந்தப் விருந்துகளில் பயன்படுத்த படும் மேசைகள், தேநீர் கோப்பைகள், தேநீர் பாத்திரங்கள் என்று எல்லாமே ஸ்பெஷல் தான். சீனா களிமண்ணால் செய்யப்பட்ட தேநீர் கோப்பைகள், தேநீர் கெட்டில்கள், கைத்தறி துணியால் ஆன கை துடைக்கும் சின்ன துண்டுகள், வெள்ளியால் செய்யப்பட்ட பரிமாறும் பாத்திரங்கள் என்று இவற்றிற்கு ஒரு பாரம்பரியம் உண்டு.

ப்ளாக் டீ

வாங்களேன் ............ஒரு கப்  'டீ'   சாப்பிடலாம்  Black-tea-1
தேவையானவை

எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,
டீத்தூள் - 1 தேக்கரண்டி,
செய்முறை
டீத்தூளுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் வடிகட்டி, எலுமிச்சம் பழம் பிழிந்து குடிக்கவும்.

மருத்துவகுணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் மருத்துவ-நிபுணர்கள். மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க டீ உதவுகின்றது. ஒரு கப் டீ, யில் காபியை விடவும் குறைவாக 'காபினே' உள்ளது . எனவே கொழுப்பை பற்றி கவலைபட தேவையில்லை .

இருபினும் "உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள்" தினமும் ஒரு கப் டீ மட்டும் அருந்தினால் நன்று . உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்தஅழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும்.

பற்சிதைவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை கட்டுப்படுத்த இதில் இயற்கையாக உள்ள ஃபுளோரைடு பயன்படுகிறது.

எலும்புவளர்ச்சிக்கு அவசியமான மேங்கனீஸும் இருதய துடிப்பை கட்டுப்படுத்தும் போட்டாஷியமும் இதில் அபரிதமாக உள்ளது.

பச்சைத் தேயிலையில் பி1,பி2,பி6, ஃபோளிக் அமிலம் மற்றும் கால்சியம் (B1,B2,B3,Folic Acid and Calcium) போன்றனவும் அடங்கியுள்ளன.

ஓஹியோவில் உள்ள வெஸ்ட்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிடியின்(Case Western Reserve University,Cleveland) சமீப ஆராய்ச்சியின்படி மூட்டு வலி (ஆர்டரிடிஸ்) நோயின் தன்மையை பச்சைத் தேயிலையில் உள்ள பாலிபினால்(polyphenols) குறைக்கின்றது.

ஒரு சிலர் டீயை கொதிக்க கொதிக்க தொண்டைக்குள் இறக்குவார்கள். இப்படியே இவை தொடர்ந்தால் தொண்டை புற்று நோய் உருவாக வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய மருத்துவ-ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 23, 2012 12:48 pm

நல்ல பதிவு அருண் , நன்றி

எங்கள் அலுவலகத்தில் condensed milk உபயோகபடுத்துவதால் , நான் பச்சை தேநீர் தான் சில வருடங்களாக குடித்து வருகிறேன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 23, 2012 12:59 pm

நல்லதொரு பதிவு ..

ஆனா நான் இப்போ டீடோட்டளர் சோகம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 23, 2012 1:02 pm

வை.பாலாஜி wrote:நல்லதொரு பதிவு ..ஆனா நான் இப்போ டீடோட்டளர் சோகம்
சிரி சிரி தல இது ரொம்ப ஓவர் , சொல்லிட்டேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக