Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது
+2
யினியவன்
சிவா
6 posters
Page 1 of 1
ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது
பிரதமருக்கு ராணுவ தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதம், கசிய விடப்பட்ட பிரச்சினையால், டெல்லி மேல்-சபையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
மேல்-சபையில் புயல்
ராணுவத்தில் உள்ள பீரங்கிகளில் வெடிமருந்துகள் இல்லை என்பது போன்ற அதிமுக்கிய ராணுவ ரகசியங்களை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் எழுதிய ரகசிய கடிதம் அம்பலமாகிவிட்டது. இது டெல்லி மேல்-சபையில் நேற்று பெரும் புயலைக் கிளப்பியது.
டெல்லி மேல்-சபை நேற்று கூடியதும் பிரதமருக்கு ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதத்தில் கூறி இருப்பது என்ன, அந்த கடிதத்துக்கு அரசின் பதில் என்ன என்று பாரதீய ஜனதா தலைமையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
ஓரணியில் எதிர்க்கட்சிகள்
பாரதீய ஜனதா எம்.பி.க்கள் வெங்கையா நாயுடு, அலுவாலியா ஆகியோர் ராணுவ தளபதியின் கடிதத்தின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிந்துகொள்ள விரும்புவதாக கூறினர். ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் சிவானந்த் திவாரி பேசும்போது, "வி.கே.சிங் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும். ஊடகங்களுடன் அவர் பேசி வருகிற போக்கு, அவரது ஒட்டுமொத்த ஒழுங்கின்மையை காட்டுகிறது. அவர் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்'' என வலியுறுத்தினார்.
சபையில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியதால் உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு சபைத் தலைவர் ஹமீது அன்சாரி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. பாரதீய ஜனதாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சிவசேனா, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டனர்.
ஒத்திவைப்பு
அப்போது ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, "பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராணுவ தளபதி எழுதிய கடிதம் அதிமுக்கிய ரகசிய கடிதம். அந்த கடிதம் குறித்து நான் அறிவேன். அந்த கடிதம் வெளிவந்திருக்கக்கூடாது. இது குறித்து அரசு தகுந்த பதில் அளிக்கும்'' என்றார்.
ஆனால் ஏ.கே.அந்தோணியின் பதிலில் திருப்தி அடையாத பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள், இந்த பிரச்சினையில் அரசின் நடவடிக்கை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். சபையில் தொடர்ந்து அமளி நிலவியதின் காரணமாக, 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் ஒத்திவைப்பு
சபை மீண்டும் கூடியபோது, பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
அதற்கு சபைத்தலைவர் ஹமீது அன்சாரி, "சபையில் ராணுவ மந்திரி உள்ளார். உறுப்பினர்களின் கருத்துகளுக்கு அவர் ஏற்கனவே பதில் அளித்துள்ளார். சபையில் கூறப்பட்ட கருத்துக்களை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என நம்புகிறேன்'' என்று கூறி சபையை அமைதிப்படுத்தி, கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ள முயற்சித்தார். ஆனால் அது பலன் தரவில்லை. இதையடுத்து சபையை அவர் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
அந்தோணி விளக்கம்
பின்னர் சபை கூடியபோது ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உறுப்பினர்களின் கருத்துக்களை நான் மிகுந்த கவனத்துடன் குறித்துக்கொண்டேன். பிரதமர், சக மந்திரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து விட்டு இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுப்போம்.
நாட்டின் ராணுவம், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் பிரதமர் தனது கவனத்தை கவரும் விதத்தில் மார்ச் 12-ந் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராணுவ தளபதி கடிதம் எழுதி இருப்பது உண்மைதான். இந்த காரியங்கள் எல்லாம் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இருக்கின்றன. இந்த பிரச்சினைகளின் (நாட்டின் பாதுகாப்பு) முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அவற்றை வெளிப்படையாக விவாதிக்க இயலாது.
தாய் நாட்டை அரசு காக்கும்
நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்தையும் செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது. உலகின் சிறந்த படைகளாக நமது பாதுகாப்பு படைகள் திகழ ஏற்ற வகையில் என்னவெல்லாம் செய்ய இயலுமோ அத்தனையையும் அரசு செய்யும். எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்து எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்த நாட்டுக்கு புகழ் சேர்க்கக்கூடியதாகும். நம்மிடையே எத்தனை கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், தேசத்தின் பாதுகாப்பு என்று வருகிறபோது நாம் எல்லாரும் ஒன்றுதான்.
கொள்முதல்களைப் பொறுத்தமட்டில் 3 ஆண்டுகளுக்கு முன் செய்து கொள்ளப்பட்ட முக்கிய உடன்படிக்கையின்படிதான் மேற்கொள்ளப்படுகிறது. ரூ.100 கோடி ஒப்பந்தம் என்றாலும் அதன்படிதான் மேற்கொள்ளப்படுகிறது. அதில் ஏதேனும் மீறல்கள் நடந்தால், கறுப்புப்புள்ளி பட்டியலில் சேர்ப்பது, ஒப்பந்தங்களை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நேர்மை, வெளிப்படையான தன்மை ஆகியவற்றில் யாரும் சமரசம் செய்துகொள்ள அரசு இடம் அளிக்காது. நமது தாய் நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் காப்போம்.
இவ்வாறு ஏ.கே.அந்தோணி கூறினார்.
தினத்ந்தி
மேல்-சபையில் புயல்
ராணுவத்தில் உள்ள பீரங்கிகளில் வெடிமருந்துகள் இல்லை என்பது போன்ற அதிமுக்கிய ராணுவ ரகசியங்களை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் எழுதிய ரகசிய கடிதம் அம்பலமாகிவிட்டது. இது டெல்லி மேல்-சபையில் நேற்று பெரும் புயலைக் கிளப்பியது.
டெல்லி மேல்-சபை நேற்று கூடியதும் பிரதமருக்கு ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதத்தில் கூறி இருப்பது என்ன, அந்த கடிதத்துக்கு அரசின் பதில் என்ன என்று பாரதீய ஜனதா தலைமையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
ஓரணியில் எதிர்க்கட்சிகள்
பாரதீய ஜனதா எம்.பி.க்கள் வெங்கையா நாயுடு, அலுவாலியா ஆகியோர் ராணுவ தளபதியின் கடிதத்தின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிந்துகொள்ள விரும்புவதாக கூறினர். ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் சிவானந்த் திவாரி பேசும்போது, "வி.கே.சிங் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும். ஊடகங்களுடன் அவர் பேசி வருகிற போக்கு, அவரது ஒட்டுமொத்த ஒழுங்கின்மையை காட்டுகிறது. அவர் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்'' என வலியுறுத்தினார்.
சபையில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியதால் உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு சபைத் தலைவர் ஹமீது அன்சாரி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. பாரதீய ஜனதாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சிவசேனா, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டனர்.
ஒத்திவைப்பு
அப்போது ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, "பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராணுவ தளபதி எழுதிய கடிதம் அதிமுக்கிய ரகசிய கடிதம். அந்த கடிதம் குறித்து நான் அறிவேன். அந்த கடிதம் வெளிவந்திருக்கக்கூடாது. இது குறித்து அரசு தகுந்த பதில் அளிக்கும்'' என்றார்.
ஆனால் ஏ.கே.அந்தோணியின் பதிலில் திருப்தி அடையாத பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள், இந்த பிரச்சினையில் அரசின் நடவடிக்கை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். சபையில் தொடர்ந்து அமளி நிலவியதின் காரணமாக, 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் ஒத்திவைப்பு
சபை மீண்டும் கூடியபோது, பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
அதற்கு சபைத்தலைவர் ஹமீது அன்சாரி, "சபையில் ராணுவ மந்திரி உள்ளார். உறுப்பினர்களின் கருத்துகளுக்கு அவர் ஏற்கனவே பதில் அளித்துள்ளார். சபையில் கூறப்பட்ட கருத்துக்களை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என நம்புகிறேன்'' என்று கூறி சபையை அமைதிப்படுத்தி, கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ள முயற்சித்தார். ஆனால் அது பலன் தரவில்லை. இதையடுத்து சபையை அவர் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
அந்தோணி விளக்கம்
பின்னர் சபை கூடியபோது ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உறுப்பினர்களின் கருத்துக்களை நான் மிகுந்த கவனத்துடன் குறித்துக்கொண்டேன். பிரதமர், சக மந்திரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து விட்டு இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுப்போம்.
நாட்டின் ராணுவம், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் பிரதமர் தனது கவனத்தை கவரும் விதத்தில் மார்ச் 12-ந் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராணுவ தளபதி கடிதம் எழுதி இருப்பது உண்மைதான். இந்த காரியங்கள் எல்லாம் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இருக்கின்றன. இந்த பிரச்சினைகளின் (நாட்டின் பாதுகாப்பு) முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அவற்றை வெளிப்படையாக விவாதிக்க இயலாது.
தாய் நாட்டை அரசு காக்கும்
நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்தையும் செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது. உலகின் சிறந்த படைகளாக நமது பாதுகாப்பு படைகள் திகழ ஏற்ற வகையில் என்னவெல்லாம் செய்ய இயலுமோ அத்தனையையும் அரசு செய்யும். எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்து எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்த நாட்டுக்கு புகழ் சேர்க்கக்கூடியதாகும். நம்மிடையே எத்தனை கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், தேசத்தின் பாதுகாப்பு என்று வருகிறபோது நாம் எல்லாரும் ஒன்றுதான்.
கொள்முதல்களைப் பொறுத்தமட்டில் 3 ஆண்டுகளுக்கு முன் செய்து கொள்ளப்பட்ட முக்கிய உடன்படிக்கையின்படிதான் மேற்கொள்ளப்படுகிறது. ரூ.100 கோடி ஒப்பந்தம் என்றாலும் அதன்படிதான் மேற்கொள்ளப்படுகிறது. அதில் ஏதேனும் மீறல்கள் நடந்தால், கறுப்புப்புள்ளி பட்டியலில் சேர்ப்பது, ஒப்பந்தங்களை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நேர்மை, வெளிப்படையான தன்மை ஆகியவற்றில் யாரும் சமரசம் செய்துகொள்ள அரசு இடம் அளிக்காது. நமது தாய் நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் காப்போம்.
இவ்வாறு ஏ.கே.அந்தோணி கூறினார்.
தினத்ந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது
பீரங்கியில வெடி மருந்தும் இல்ல நம்ம ஆளுங்களுக்கு
ஊழல் பண்றதில அளவு முறையும் இல்ல - அது வெளில
வந்தா வெக்க மானம் சூடு சொரணையும் இல்ல
ஊழல் பண்றதில அளவு முறையும் இல்ல - அது வெளில
வந்தா வெக்க மானம் சூடு சொரணையும் இல்ல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது
பீரங்கியில வெடி மருந்தும் இல்லையா...
எங்கே போகிறது இந்தியா..!
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது
மானங்கெட்ட அரசியல் தலைவர்கள்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது
வி.கே.சிங்கை கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு திட்டம்?
தொடர்ந்து சர்ச்சை கிளப்பி வரும் ராணுவ தளபதி வி.கே.சிங்கை கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி வி.கே.சிங்கின் பதவிக்காலம், ராணுவ தலைமையகத்தில் பதிவாகியுள்ள பிறந்த தேதி அடிப்படையில் வரும் மே 31 அன்று நிறைவுக்கு வருகிறது. தனது உண்மையான பிறந்த தேதி அடிப்படையில் அடுத்த ஆண்டு தான் ஓய்வு பெற வேண்டும் என மத்திய அரசிடம் வி.கே.சிங் கோரிக்கை வைத்தார். இதனை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வி.கே.சிங் வழக்கு தொடர்ந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
இதை தொடர்ந்து வரும் மே 31 அன்று வி.கே.சிங் ஓய்வு பெறுவது உறுதியானது. புதிய தளபதி பெயரையும் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த வாரம் மத்திய அரசுக்கு எதிராக புதிய சர்ச்சையை வி.கே.சிங் கிளப்பினார். ராணுவத்துக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் வாகனங்களை வாங்க ஒப்புதல் அளித்தால் தனக்கு ரூ. 14 கோடி லஞ்சம் கொடுக்க ஒருவர் பேரம் பேசியதாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் தான் புகார் கூறியதாகவும் தகவல் வெளியிட்டு, மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினார்.
இந்த பரபரப்பு ஓய்வதற்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு வி.கே.சிங் கடந்த 12ம் தேதி எழுதிய ரகசிய கடிதம் வெளியாகி, இன்னொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ தளவாடங்களுக்கு வெடிமருந்துகள் இல்லை; விமானப்படை முற்றிலும் வலுவிழந்து உள்ளது. இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறன் குறைந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக அந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருந்தது. ரகசியமாக வைக்கப்பட வேண்டிய இந்தக் கடிதம் பத்திரிகைகளில் வெளியாகி மத்திய அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்னை நேற்று நாடாளுமன்றத்தில் பூதாகரமாக கிளம்பியது. வி.கே.சிங் கடிதம் வெளியானது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பா.ஜ. தலைவர்கள் கேள்வி எழுப்பினர். வி.கே.சிங்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த திவாரி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். கடிதத்தை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய ஏ.கே.அந்தோணி, ராணுவ பலம் தொடர்பாக பிரதமருக்கு ராணுவதளபதி எழுதிய கடிதம் வெளியாகி இருக்கக்கூடாது. இதில் அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்’’ என்றார். முன்னதாக இந்தப் பிரச்னை குறித்து பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம், ராணுவத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா ஆகியோருடன் பிரதமர் மன்மோகன்சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார். நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர் ராணுவ தளபதி வி.கே.சிங். ராணுவத்தில் நடைபெற்ற ஆதர்ஷ் குடியிருப்பு, சுகுணா நில மோசடி உள்பட பல்வேறு ஊழல் புகார்களில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது தயங்காமல் நடவடிக்கை எடுத்தவர் வி.கே.சிங். எல்லைக் காவல் படையில் ஆயுதங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அம்பிகா பானர்ஜி கடந்த மே மாதம் வி.கே.சிங்குக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்தை உடனடியாக சிபிஐக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வி.கே.சிங் உத்தரவிட்டார். இப்படி பல்வேறு சூழ்நிலையில் நேர்மையாக செயல்பட்டுள்ள வி.கே.சிங்கை டிஸ்மிஸ் செய்தால் அது மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் அவரை டிஸ்மிஸ் செய்வதற்கு பதிலாக கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடிதத்தை வெளியிட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
dinakaran.com
தொடர்ந்து சர்ச்சை கிளப்பி வரும் ராணுவ தளபதி வி.கே.சிங்கை கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி வி.கே.சிங்கின் பதவிக்காலம், ராணுவ தலைமையகத்தில் பதிவாகியுள்ள பிறந்த தேதி அடிப்படையில் வரும் மே 31 அன்று நிறைவுக்கு வருகிறது. தனது உண்மையான பிறந்த தேதி அடிப்படையில் அடுத்த ஆண்டு தான் ஓய்வு பெற வேண்டும் என மத்திய அரசிடம் வி.கே.சிங் கோரிக்கை வைத்தார். இதனை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வி.கே.சிங் வழக்கு தொடர்ந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
இதை தொடர்ந்து வரும் மே 31 அன்று வி.கே.சிங் ஓய்வு பெறுவது உறுதியானது. புதிய தளபதி பெயரையும் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த வாரம் மத்திய அரசுக்கு எதிராக புதிய சர்ச்சையை வி.கே.சிங் கிளப்பினார். ராணுவத்துக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் வாகனங்களை வாங்க ஒப்புதல் அளித்தால் தனக்கு ரூ. 14 கோடி லஞ்சம் கொடுக்க ஒருவர் பேரம் பேசியதாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் தான் புகார் கூறியதாகவும் தகவல் வெளியிட்டு, மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினார்.
இந்த பரபரப்பு ஓய்வதற்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு வி.கே.சிங் கடந்த 12ம் தேதி எழுதிய ரகசிய கடிதம் வெளியாகி, இன்னொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ தளவாடங்களுக்கு வெடிமருந்துகள் இல்லை; விமானப்படை முற்றிலும் வலுவிழந்து உள்ளது. இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறன் குறைந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக அந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருந்தது. ரகசியமாக வைக்கப்பட வேண்டிய இந்தக் கடிதம் பத்திரிகைகளில் வெளியாகி மத்திய அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்னை நேற்று நாடாளுமன்றத்தில் பூதாகரமாக கிளம்பியது. வி.கே.சிங் கடிதம் வெளியானது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பா.ஜ. தலைவர்கள் கேள்வி எழுப்பினர். வி.கே.சிங்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த திவாரி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். கடிதத்தை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய ஏ.கே.அந்தோணி, ராணுவ பலம் தொடர்பாக பிரதமருக்கு ராணுவதளபதி எழுதிய கடிதம் வெளியாகி இருக்கக்கூடாது. இதில் அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்’’ என்றார். முன்னதாக இந்தப் பிரச்னை குறித்து பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம், ராணுவத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா ஆகியோருடன் பிரதமர் மன்மோகன்சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார். நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர் ராணுவ தளபதி வி.கே.சிங். ராணுவத்தில் நடைபெற்ற ஆதர்ஷ் குடியிருப்பு, சுகுணா நில மோசடி உள்பட பல்வேறு ஊழல் புகார்களில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது தயங்காமல் நடவடிக்கை எடுத்தவர் வி.கே.சிங். எல்லைக் காவல் படையில் ஆயுதங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அம்பிகா பானர்ஜி கடந்த மே மாதம் வி.கே.சிங்குக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்தை உடனடியாக சிபிஐக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வி.கே.சிங் உத்தரவிட்டார். இப்படி பல்வேறு சூழ்நிலையில் நேர்மையாக செயல்பட்டுள்ள வி.கே.சிங்கை டிஸ்மிஸ் செய்தால் அது மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் அவரை டிஸ்மிஸ் செய்வதற்கு பதிலாக கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடிதத்தை வெளியிட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
dinakaran.com
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை
» ரூ.45 லட்சம் லஞ்ச பணத்துடன் துணை ராணுவ தளபதி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை
» பாகிஸ்தான் அதிபருக்கு ராணுவ தளபதி கியானி எச்சரிக்கை
» ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார்
» ஆப்கானிஸ்தான்: ஒபாமாவை விமர்சித்த அமெரிக்க ராணுவ தளபதி மாற்றம்
» ரூ.45 லட்சம் லஞ்ச பணத்துடன் துணை ராணுவ தளபதி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை
» பாகிஸ்தான் அதிபருக்கு ராணுவ தளபதி கியானி எச்சரிக்கை
» ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார்
» ஆப்கானிஸ்தான்: ஒபாமாவை விமர்சித்த அமெரிக்க ராணுவ தளபதி மாற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|