Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்
5 posters
Page 1 of 1
ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்
புதுடெல்லி : ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தலைமை தளபதியிடம் பேரம் பேசப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கின் பிறந்த தேதி தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதிய சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பிட்ட நிறுவனத்தின் 600 வாகனங்களை வாங்க ஒப்புதல் அளித்தால் ரூ.14 கோடி லஞ்சம் தருவதாக தன்னிடம் ஒருவர் பேரம் பேசியதாக வி.கே.சிங் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டிஅளித்தார்.
இதற்கு முன் இருந்த ராணுவ தலைமை தளபதியாக இருந்தவர்கள் லஞ்சம் வாங்கியதாகவும் அந்த ஆசாமி கூறியதாக வி.கே.சிங் குறிப்பிட்டிருந்தார். இது பற்றி பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் புகார் செய்ததாகவும் பேட்டியில் அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எதிரொலித்தது. மாநிலங்களவை யில், பாஜ, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர்கள் இந்த பிரச்னையை எழுப்பினர். பா.ஜ. உறுப்பினர் பிரகாஷ் ஜாவேத்கர் பேசுகையில்,ÔÔராணுவ தலைமை தளபதியின் குற்றச்சாட்டு தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும்ÕÕ என்று கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக அமளி ஏற்பட்டதால், மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை மீண்டும் கூடியபோதும் வி.கே.சிங்கின் பேட்டி வெளியான நாளிதழை கையில் ஏந்தியபடி இந்த விவகாரம் பற்றி எம்.பி.க்கள் பேசினர். இது மிக முக்கியமான பிரச்னை. இது பற்றி அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ எம்.பி. அலுவாலியா கூறினார். இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக டி.வி.க்களில் செய்தி வெளியானதாக கூறி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதுபற்றி நாடாளுமன்றத்துக்கு அரசு தகவல் தெரிவிக்காதது ஏன்? என்று அவர்கள் ஆவேசத்துடன் முழங்கினர்.
அதே நேரத்தில் தெலங்கானா விவகாரம் தொடர்பாகவும் பல எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளி நிலவியதால் மதியம் 2 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையிலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. அவையில் அமளி நிலவியதால் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோது, தெலங்கானா பிரச்னை பற்றி டி.ஆர்.எஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் ரகளை செய்தனர். இதனால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திப்போடப்பட்டது.
பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, ராணுவ தலைமை தளபதியின் புகார் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டம் நடப்பதால் வேறு எதையும் தெரிவிக்க முடியாது என்று அந்தோணி மறுத்துவிட்டார்.
போலீசிடம் பிடித்து கொடுக்காதது ஏன்?
தளபதி வி.கே.சிங் விளக்கம்
புதுடெல்லி : ரூ.14 கோடி லஞ்சம் தர பேரம் பேசியவரை போலீசிடம் பிடித்து கொடுக்காதது ஏன் என்று ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து இணைய தளம் ஒன்றுக்கு வி.கே.சிங் அளித்த பேட்டி: குறிப்பிட்ட வாகனங்களை வாங்க உத்தரவிட்டால் ரூ.14 கோடி கிடைக்கும் என்று என்னிடம் சொல்லியவர், சில நாட்களுக்கு முன் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்.
இதற்கு முன் இப்படி ஒரு விஷயத்தை நான் கேட்டதே இல்லை. அதனால், அவர் அப்படி சொன்னதும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அவர் சொன்னதன் முழு அர்த்தம் கூட எனக்கு புரியவில்லை. உடனே என் அறையில் இருந்து வெளியே செல்லும்படி அவரிடம் கூறினேன். பின்னர் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் நடந்ததை தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார். பேரம் பேசியவரை போலீசிடம் பிடித்து கொடுக்காதது ஏன் என்று கேட்டதற்கு, ''ஒப்புதல் அளித்தால் ரூ.14 கோடி கிடைக்கும் என்றுதான் அவர் சொன்னார். கையில் பணத்தை திணிக்கவில்லை. இதனால்தான் அவரை கைது செய்யவில்லை'' என்றார்.
தினகரன்
Re: ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்
பொறுப்பான ராணுவ அதிகாரியின் பருப்பான பேச்சு இது
இவரு மட்டும் வயச கொறச்சு போட்டது தப்பில்லையாமா?
அந்தோனி கிட்ட சொல்லிட்டேன்னு சொன்னா அப்ப
அந்தோனி வாங்கிட்டாருன்னு சொல்றாரா?
வாலண்டரி டிஸ் கிளோஷர் சட்டப் படி உள்ள போடனூன்னு நினைக்கிறேன் இவர.
இவரு மட்டும் வயச கொறச்சு போட்டது தப்பில்லையாமா?
அந்தோனி கிட்ட சொல்லிட்டேன்னு சொன்னா அப்ப
அந்தோனி வாங்கிட்டாருன்னு சொல்றாரா?
வாலண்டரி டிஸ் கிளோஷர் சட்டப் படி உள்ள போடனூன்னு நினைக்கிறேன் இவர.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்
என்ன பகவதி, இந்த செய்தியை வாழ்த்து திரி இல் போட்டு இருக்கீங்க?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்
கிருஷ்ணா அம்மா என்னால் புதிய பதிவு இட முடிய வில்லை எப்போதாவது தான் இந்த ஆப்ஷன் வருகிறது , அதனால் நான் கொன்ஃபூசிஒன்லில் இவ்வாறு மாற்றி பதித்து விட்டேன் மன்னிக்கவும் ,
Re: ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்
இந்திய ராணுவம் பலவீனமானது : பிரதமருக்கு ராணுவ தளபதி எழுதிய கடிதத்தால் சர்ச்சை
இந்திய ராணுவம் மற்ற நாடுகளின் படை பலத்தை எதிர்கொள்ளாத அளவிற்கு பலவீனமாக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்-க்கு ராணுவ தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதத்தால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 12ந் தேதி ராணுவ தளபதி வி.கே.சிங் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், 'இந்திய ராணுவம் பலவீனமாக உள்ளதாகவும், எதிரிகளை எதிர்கொள்ள நவீன ஆயுதங்கள் இல்லாமல் இருப்பதாகவும்' கூறியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் 'நாட்டின் வான்வழி பாதுகாப்பு படு மோசமாக இருப்பதாக' வி.கே.சிங் குறிப்பிட்டுள்ளார். இந்த குறைபாடுகளை விரைவில் சரி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் ராணுவத்தை நவீனப்படுத்துவது அவசியமாகிறது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ தளபதி வி.கே.சிங்-கின் இந்த திடீர் கடிதத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக பிறந்தநாள் விவகாரம் உட்பட லஞ்ச புகார் என பல சர்ச்சையில் சிக்கியிருக்கும் ராணுவ தளபதியின் இந்த கடிதம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராணுவ தளபதியின் கடிதம் பற்றி அரசு போதிய கவனம் செலுத்தி வருவதாகவும், போதுமான அளவிற்கு ராணுவத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. ராணுவ தளபதியின் இந்த கடிதத்தை மத்திய அரசு அலட்சியமாக கருதக் கூடாது என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
.dinakaran.com
இந்திய ராணுவம் மற்ற நாடுகளின் படை பலத்தை எதிர்கொள்ளாத அளவிற்கு பலவீனமாக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்-க்கு ராணுவ தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதத்தால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 12ந் தேதி ராணுவ தளபதி வி.கே.சிங் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், 'இந்திய ராணுவம் பலவீனமாக உள்ளதாகவும், எதிரிகளை எதிர்கொள்ள நவீன ஆயுதங்கள் இல்லாமல் இருப்பதாகவும்' கூறியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் 'நாட்டின் வான்வழி பாதுகாப்பு படு மோசமாக இருப்பதாக' வி.கே.சிங் குறிப்பிட்டுள்ளார். இந்த குறைபாடுகளை விரைவில் சரி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் ராணுவத்தை நவீனப்படுத்துவது அவசியமாகிறது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ தளபதி வி.கே.சிங்-கின் இந்த திடீர் கடிதத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக பிறந்தநாள் விவகாரம் உட்பட லஞ்ச புகார் என பல சர்ச்சையில் சிக்கியிருக்கும் ராணுவ தளபதியின் இந்த கடிதம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராணுவ தளபதியின் கடிதம் பற்றி அரசு போதிய கவனம் செலுத்தி வருவதாகவும், போதுமான அளவிற்கு ராணுவத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. ராணுவ தளபதியின் இந்த கடிதத்தை மத்திய அரசு அலட்சியமாக கருதக் கூடாது என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
.dinakaran.com
Re: ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்
அதை என் இப்படி பப்ளிக சொல்லி தூங்கி கிட்டு இருக்குற எதிரிய எழுப்பி விடுறாங்க , குறை இருந்தால் சிலெண்ட சரி செய்ய வேண்டியது தானே
Re: ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்
காங்கிரஸ் ஆளு கின்ற போதுதான் ஆயுத ஊழல் தொடரும் ஏனென்றால் போபர்ஸ் ஊழல் ஆட்சியை மாற்றியது .இந்த ஆட்சியில் ஊழ்லுக்கு பஞ்சமில்லை .தினமணி இல் முன்பு நாட்டுக்காக காங்கிரஸ் தியாகம் செதார்கள் இன்று நாட்டையே தியாகம் செய்ய முன்வந்துவிட்டார்கள் .......
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்
காங்கிரஸ் ஆளு கின்ற போதுதான் ஆயுத ஊழல் தொடரும் ஏனென்றால் போபர்ஸ் ஊழல் ஆட்சியை மாற்றியது .இந்த ஆட்சியில் ஊழ்லுக்கு பஞ்சமில்லை .தினமணி இல் முன்பு நாட்டுக்காக காங்கிரஸ் தியாகம் செதார்கள் இன்று நாட்டையே தியாகம் செய்ய முன்வந்துவிட்டார்கள் .......
நீங்கள் சொல்லுவது பீரங்கி ஊழல் வழக்கு தானே
Similar topics
» ரூ.10 கோடி லஞ்சம் சீன அதிகாரிக்கு ஆயுள் தண்டனை: சொத்துக்கள் பறிமுதல்
» எம்.எல்.ஏ.,க்களுக்கு பல கோடி பேரம் பேசிய Sasikala,OPS
» பத்ரா மேல் அணை திட்டத்தில் எடியூரப்பா ரூ.4 கோடி லஞ்சம் பெற்றார் காங்கிரஸ் குற்றச்சாட்டு
» ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.100 கோடி பேரம் பேசினார்கள் - நித்யானந்தா
» ரூ.25 கோடி போதை மாத்திரை கடத்திய ராணுவ அதிகாரிகள் கைது .
» எம்.எல்.ஏ.,க்களுக்கு பல கோடி பேரம் பேசிய Sasikala,OPS
» பத்ரா மேல் அணை திட்டத்தில் எடியூரப்பா ரூ.4 கோடி லஞ்சம் பெற்றார் காங்கிரஸ் குற்றச்சாட்டு
» ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.100 கோடி பேரம் பேசினார்கள் - நித்யானந்தா
» ரூ.25 கோடி போதை மாத்திரை கடத்திய ராணுவ அதிகாரிகள் கைது .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|