புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
285 Posts - 45%
heezulia
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
20 Posts - 3%
prajai
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆன்மீக சிந்தனைகள் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக சிந்தனைகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 2:28 am

சத்ய சாய் பாபா

* நாம் நம் கடமையைச் செய்கிறோம் என்பதை மட்டுமே எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதில் வெற்றி கிடைக்குமா அல்லது தோல்வியில் முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே கடமையைத் தள்ளிப் போடக் கூடாது. அப்பொறுப்பினை ஆண்டவனிடம் ஒப்படைத்து விட வேண்டும். இந்த மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் வெற்றி தோல்விகள் எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை.


* இருண்ட அறையில் அசுத்தமும், தூசியும் நிறைந்து இருக்கும். நாளடைவில் தேள், பாம்பு போன்ற விஷஜந்துக்களும் ஒளிந்து கொள்ள ஏதுவாகும். அதே அறையை சுத்தமாக்கி, கதவு ஜன்னல்களைத் திறந்து வைத்தால் வெளிச்சமும், நல்லகாற்றும் வர வழியுண்டாகும். அதுபோல, மனம் என்னும் வீட்டில் காமம், கர்வம், பொறாமை போன்ற விஷஜந்துக்களை நுழைய விடாமல் அன்பு என்னும் ஒளியை பரப்புங்கள். தூய்மை என்னும் காற்றையும் நிரப்புங்கள்.


* கண்ணிமையில் பூசிய கருநிற மை கண்ணுக்குள் படிவதில்லை. நீரில் இருக்கும் தாமரை மலர் சேற்றினைத் தீண்டுவதில்லை. கடவுளை முற்றிலுமாக உணர்ந்த மனிதர்கள் உலகவாழ்வில் ஈடுபட்டாலும், அவர்கள் மனம் அதில் ஈடுபடுவதில்லை. எப்போதும் இறைவனையே எண்ணிக் கொண்டு இருப்பர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 2:31 am

காஞ்சிப் பெரியவர்


இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிரினங்களும் ஒரு நாள் இந்த உலகை விட்டு பிரிந்து செல்லத்தான் வேண்டும். மனிதர்களாகிய நாம், ஆடு மாடு மாதிரி இறக்க கூடாது. ஆனந்தமும், அமைதியும் நிரம்பி அதன்பின் இந்த உடலில் இருந்து உயிர் பிரிந்தால் அதுதான் பூரணத்துவம் ஆகும்.
பூரணத்துவத்திற்கு வேண்டிய காரியங்களை நாம் செய்வதாக இருந்தால் நம்மை நாம் அறிய வேண்டும். நமக்கு சாப்பாடு வேண்டும். உத்தியோகம் வேண்டும். கல்யாணம் செய்து மக்களை பெற்று இல்லற தர்மத்தை கடைப்பிடித்தாக வேண்டும்.

ஒழுக்கமாக நான்கு பேருக்கு உதவியாக நல்ல பெயருடன் வாழ்ந்த மனிதன், இந்த உலகத்தை விட்டு பிரியும் போது சமுதாயம் அவனுக்காக கண்ணீர் வடிக்கிறது. தானும் அமைதியடைந்து பிறருக்கும் தன்னால் முடிந்தவரை அமைதியை தந்து வாழக்கற்று கொள்பவனே மனிதர்களுள் சிறந்தவனாகிறான்.

தாயிற் சிறந்த தெய்வம் இல்லை;
சந்நியாசம் வாங்கிவிட்ட மகன் எதிரே வந்தால் தந்தையாக இருந்தாலும் வணங்க வேண்டும். ஆனால் சந்நியாசம் வாங்கிவிட்டாலும் தாயை வணங்கித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் தாயை விட சிறந்த தெய்வம் வேறெதுவும் இல்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 2:39 am

ஸ்ரீ அரவிந்தர்

* வலிமை, ஆனந்தம் போன்ற குணங்களின் பிறப்பிடமாக அமைதி உள்ளது. அத்தகைய அமைதி ஒவ்வொருவரின் உள்மனதிலும் உள்ளது. எனவே, அதனை வேறு எங்கேயோ இருப்பதாக எண்ணி வெளியில் தேட வேண்டாம். தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்கும் திறனுள்ள மனம், அமைதியின் வடிவமாக இருக்கும். அமைதியாக இருப்பவர்கள் எந்த செயலையும் சிறப்பாகவும், குறையில்லாமலும் செய்பவர்களாகவுமே இருப்பார்கள். எனவே, மனதில் இருக்கும் அமைதியை உணர்ந்து கொண்டு செயலாற்றுங்கள்.


* மனதிற்குள் மறைந்திருக்கும் ஞானத்தை வெளிப்படுத்த அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். உங்களிடம் யாரும் சத்தமிட்டு பேசினால், நீங்களும் பதிலுக்கு அப்படியே பேச வேண்டுமென்பதில்லை. அவரது பேச்சிற்கு அமைதியை பதிலாக கொடுங்கள். அதிலேயே அவர் எதிர்பார்க்கும் பல பதில்கள் புதைந்திருக்கும். அதனை புரிந்து கொள்ளும்வரையில்தான் அவர் சத்தமிட்டுக் கொண்டிருப்பார். எதிர்பார்த்த விடை கிடைத்துவிட்டால் அமைதியாக சென்று விடுவார். ஏனென்றால், அமைதியானது விவரிக்கமுடியாத பல அர்த்தங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.


* எந்த செயலையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யுங்கள். நீங்கள் செய்யும் சிறு செயல்கூட இறைவனின் கருணையால்தான் நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தியானம் செய்து இறைவனை வழிபடுவதால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன், அர்ப்பணிப்பிலும் கிடைக்கும். ஏனெனில் அர்ப்பணிப்பும் ஒரு தியானம்தான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 2:41 am

ஸ்ரீ அன்னை

யாராவது ஒருவர் உங்கள் மீது கோபப்பட்டால் அவருடைய கோப அதிர்வுகளில் அகப்பட்டுக் கொள்ளாமல் விலகியே நில்லுங்கள். எவ்விதமான ஆதரவோ, பதிலோ கிடைக்காவிட்டால் கோபக்காரரின் வேகம் தணிந்து விடும். தவறு என்பது அறியாமல் செய்யும் பிழையாகும். ஆனால், தவறினால் உண்டாகும் பாடத்தை உணர்ந்து திருத்திக் கொள்வது சரியான வழிமுறையாகும்.

மிகவும் கடுமையான உடல் வேதனையைக் கூட, அமைதியுடன் எதிர்கொள்ளும் போது கடுமை குறைந்து விடும். அதைத் தாங்கக் கூடிய சக்தி உடலுக்கு கிடைத்து விடும். பயம் என்பது ஒரு பெரும் குற்றமாகும். இந்த உலகத்தில் கடவுளின் செயலை நிறைவேற விடாமல், அதை அழிக்கக் கூடிய கடவுள் விரோத சக்திகளில் ஒன்றாக பயம் இருக்கிறது.

அதனால் பயத்தை அறவே விட்டொழியுங்கள். "என்னுடைய அறிவு தான் மிகமிக உயர்ந்தது. மற்ற எல்லாரையும் விட நான் எல்லா வகையிலும் சிறந்தவன். ஆகவே, மற்றவர்கள் சொல்வது யாவும் தவறானவை' என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.கடவுள் உணர்வு ஒன்று தான் மனிதர்களுக்குக் கிடைக்கும் உண்மையான உதவியாகும். அதில் தான் நாம் உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும். கடவுளிடமிருந்தே நமக்கு எல்லா வல்லமையும் உண்டாகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 2:43 am

விவேகானந்தர்

மகத்தான பணிகளைச் செய்ய பிறந்திருக்கும் என் குழந்தைகளே! சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகா யத்தில் முழங்கும் இடியோசை கேட்டும் நீங்கள் அஞ்சாதீர்கள். எதற்கும் துணிவு கொண்டவர்களாய் எழுந்து நின்று போராடுங்கள். மிருகபலத்தால் யாரும் எழுச்சி பெறமுடியாது. ஆன்மிக பலம் ஒன்றால் மட்டுமே நாம் வீறு கொண்டு எழமுடியும். உண்மை, நேர்மை, அன்பு போன்ற நற்பண்புகள் உங்களுக்கு துணை செய்வதாக அமையட்டும். சுயநலமில்லாத மனிதன் மரணத்திற்குக் கூட அஞ்ச வேண்டியதில்லை.

ஆடம்பர வாழ்வில் ஈடுபாடு கொண்டவர்கள், வாழ் வில் எப்போதும் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தாதவர் கள், ஆசை வயப்பட்டு அதன் பின்னர் செல்பவர்கள், சுயநலம் கொண்டவர்கள், பிறர் துன்பம் கண்டு மகிழ்பவர்கள் இவர்கள் எல்லாம் ஒரு நாளும் இறையனுபவத்தை பெற இயலாது.
மனிதகுலம் பிழையிலிருந்து உண்மைக்குச் செல்லவில்லை. மாறாக, உண்மையிலிருந்து உண்மைக்குத் தான் பிரயாணம் செய்கிறது. அதாவது நாம் அனைவருமே தாழ்ந்த உண்மையிலிருந்து உயர்ந்த உண்மைக்கு செல்கிறோம் என்பதை உணருங்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 2:43 am

ஔவையார்


பசிப்பிணி என்ற பாவி ஒருவனைப் பிடித்து விட்டால் தன்மானம், குடிப்பெருமை, கல்வி, வளமை, அறிவுடைமை, கொடை, தவம், உயர்வு, ஊக்கம், காதல் ஆகிய குணங்கள் மறைந்து விடும். தி வருவாய்க்குத் தக்க வகையில் செலவு செய்ய வேண்டும். வரவுக்கு மீறிச் செலவு செய்பவன் மானத்தை இழப்பான். நல்லது கெட்டதை பிரித்தறியும் அறிவினை இழந்து விடுவான். திருடன் என்று பெயர் எடுப்பான். ஏழு பிறப்பிலும் பாவத்தைச் செய்ய வேண்டி வரும்.

துன்பங்களைச் சேர்த்து வைக்கும் இடமாக உடல் இருக்கிறது. இந்த பொய்யான வாழ்க்கை நிலையானது என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். சேர்த்து வைத்த பொருளைக் கொண்டு வறியவர்களுக்கு உதவி செய்யுங்கள். நாம் செய்யும் தர்மமே நம் துன்பத்தைப் போக்க வல்லது.நெல்லுக்கு பாய்ச்சிய நீர் வாய்க்கால் வழியாகப் புல்லுக்கும் பாய்வது போல, மண்ணுலகில் நல்லவர் ஒருவர் இருந்தாலும் அவருக்காகவே மழை பொழிகிறது. அம்மழைநீரால் உலகில் உள்ள அனைவரும் பயன் பெறுகின்றனர். நாம் வருந்தி அழைத்தாலும் நமக்கில்லாத பொருள் கிடைக்காது. நமக்கான பொருளை வேண்டாம் என்று புறக்கணித்தாலும், அது நம்மை விட்டு நீங்காது. இந்த உண்மையை அறியாமல் மனிதர்கள் வருந்துகின்றனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 2:44 am

கிருஷ்ண பிரேமி சுவாமி

* ரோஜா செடியிலிருந்து புஷ்பத்தை மட்டுமே பறிக்க வேண்டும். அதிலுள்ள முள்ளை சீவ வேண்டிய தில்லை. அதுபோல, படிக்கும் நூல்களில் இருந்து தேவையான சாரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையற்றவற்றை தள்ளிவிடுங்கள்.


* கடலில் ஒரு அலை முடிந்ததும் மற்றொரு அலை கிளம்பிக் கொண்டே இருக்கும். அது போல, அஞ்ஞானிகளின் மனதில் பல சந்தேகங்கள் கிளம்பிக் கொண்டே இருக்கும். அதை தீர்க்க நினைப்பது கடல் அலைகளை அடக்க முயல்வதாகும்.


* கடிகாரம் இயற்கையாகவே இயங்குவது போலத் தோன்றினாலும், சாவி கொடுக்க ஒருவன் எப்படி வேண்டுமோ அதுபோல், உலகம் இயங்க காரணகர்த்தாவாக கடவுள் ஒருவர் இருக்கிறார்.


* உடலுக்குள் உள்ள உயிரையே யாராலும் காண முடியவில்லை. அப்படியிருக்க உயிருக்கும் உயிரான கடவுளை யார் தான் காண முடியும்? உடலின் இயக்கத்தைக் கொண்டு உயிர் இருப்பதை அறிகிறோம். அதுபோல, உலகத்தின் இயக்கமே கடவுளின் இருப்பினை உணர்வதற்கு போதுமானதாக இருக்கிறது.


* காற்றுக்கு உலர்த்துவது தர்மம். நெருப்புக்கு சுடுவது தர்மம். தண்ணீருக்கு நனைப்பது தர்மம். அதுபோல மனிதர்களுக்கு ஒழுக்கம் ஒன்றே தர்மமாக இருக்கிறது.


* ஈரமண்ணில் தான் செடி வளர்கின்றது. காய்ந்த மண்ணில் பட்டு விடுகிறது. அது போல, இரக்கம் உள்ள மிருதுவான இதயத்தில் தான் பக்தி வளர்கிறது. கடினமான இதயத்தில் பக்தி போன்ற உயர்ந்த விஷயங்கள் தோன்றுவதில்லை

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 2:45 am

தாயுமானவர்

* உலகில் அனைத்துமே நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப்பார்ப்பவர்களின் கோணத்தில்தான் அதில் வேறுபாடு தெரிகிறது. வெள்ளை நிறப்பொருளை எந்த நிறத்தில் கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தாலும், அதன் நிறத்தில்தான் அது தெரியும். இதைப்போலவே கடவுளை, மனம் எனும் கண்ணாடி வழியாக பார்ப்பவர்களின் தன்மைக்கு ஏற்றவாறு அவர் காட்சி கொடுக்கிறார். மனதுக்குள் மாயக் கண்ணாடி அணியாமல், பரிசுத்தமானதான, உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கக் கூடியதாக அணிந்து கொள்ள வேண்டும்.


* மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியான மனமே புத்துணர்வுடனும், செயலாக்கம் மிக்கதாகவும் இருக்கும். சோர்வடைந்த உள்ளத்தால் எவ்வித பயனும் இல்லை. அவர்களால் அடுத்தவருக்கும் நன்மைகள் செய்ய முடிவதில்லை. அத்துடன் உடன் இருப்பவர்களுக்கும் துன்பம்தான் விளைகிறது. சோர்வுடன் இருக்கும் ஒருவரைக் காணும் மற்றொருவர், தனக்கும் துன்பம் வந்துவிட்டது போலவே கவலை கொள்கிறார். எனவே, துன்பத்துடன் இருப்பவர்கள், யாரையும் சந்திக்காமல் தனிமையில் இருப்பதே நல்லது. அந்த வேளையில் தனக்கு துன்பம் நேர்ந்ததற்கான காரணத்தை அவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சிறிது நேரம் தனிமையில் அதற்கான காரணத்தை சிந்தித்து விட்டாலே, அதனால் பயன் ஒன்றுமில்லை என்பது புலப்பட்டுவிடும். ஆகவே, ஒன்றுமில்லாத சோர்வை விரட்டி, மகிழ்ச்சியுடன் இருங்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 2:46 am

சாந்தானந்தர்

* நெருப்பு காட்டையே அழித்து விட்டு மேலும் பெரிய காடு கிடைக்காதா என்று ஏங்கி இருப்பதைப் போல பேராசையாகிய காமசிந்தனையும் மனிதனை உயிருடன் சித்ரவதை செய்து அடியோடு அழிக்கக் காத்திருக்கிறது.

* கர்ப்ப கிரகத்தில் இருக்கும் தெய்வத்தை திரைச்சீலை மறைத்து இருப்பது போல, மனிதனின் ஆத்மாவை, ஆசை எனும் திரை மறைத்து இருக்கிறது.

*விருப்பும் வெறுப்பும் ஆகிய இரண்டுமே நரகத்தின் வாசலில் நம்மைக் கொண்டு சேர்க்கும். கடவுள் இவ்விரண்டும் அற்றவராக இருக்கிறார். அவருடைய வடிவம் சத்திய சொரூபமாகும்.

*விருப்பு வெறுப்பு உடையவனை அழிக்க தனியாக எதிரி எவனும் வேண்டியதில்லை. அவன் மனநிலையே அவனை அழிக்க தயாராக நிற்கிறது. கொடிய சத்துருவாக இருக்கும் தீயஎண்ணங்களை விடுத்து அருள் எண்ணங்களை மனம் நாட வேண்டும்.

* கடவுளை அடையும் தகுதியை வளர்த்துக் கொள்பவன் தானே கடவுளாக மாறிவிடுகிறான்.

* தங்கத்தைத் தேடாதே. மனதை மாசற்ற தங்கமாக மாற்றிக் கொள். தங்கப்பாத்திரத்தில் எது வைத்தாலும் கெடுவதில்லை. அதனால் மனதை தங்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 2:47 am

ராமகிருஷ்ணர்


மக்களில் பலர் புகழ் வேண்டியோ அல்லது புண்ணியம் பெற வேண்டியோ தர்மம் செய்கின்றனர். அத்தகைய செயல்கள் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை. பரோபகாரம் செய்பவர்கள் இறைவனுக்காக மட்டுமே செய்வதே சிறந்ததாகும். இறைவனுடைய நியதியில், உலகில் உள்ள அனைத்து விஷயங்களுக்கும் இடமுண்டு. அதனால், நம்முடைய கொள்கை தான் சிறந்தது. மற்றவர்கள் கொள்கைகள் தப்பானவை என்று எண்ணம் கொள்வது கூடாது. பிறருக்குப் போதிப்பது சுலபமல்ல.

ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே பிறருக்குப் போதனை செய்ய முன்வர வேண்டும். அப்போது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும். மனிதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அவனைப் பெரிதும் பாதிக்கின்றன. அதனால் தெய்வீகப் படங்களை, நாம் இருக்குமிடத்தில் எப்போது கண்ணில் படும் வகையில் வைத்திருப்பது நல்லது. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும். செடி பெரிய மரமான பிறகு, அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கும் அளவிற்கு வலிமை அந்த மரத்திற்கு உண்டாகி விடும். அதைப் போல பக்குவம் உண்டான மனிதனுக்கும் உலக விஷயங்கள் எந்த இன்னலையும் உண்டாக்குவதில்லை.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக