புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_m10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_m10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_m10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_m10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_m10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_m10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_m10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_m10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_m10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_m10தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 26, 2012 9:57 am

சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த புரட்சியாளர் யார் என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் சே குவேரா என்பார்கள். பலர் லெனினையும் ஸ்டாலினையும் குறிப்பிடுவார்கள். பலருக்கு மா சே துங் பிடிக்கும்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை எதிர்த்து அரசை நடத்தி வரும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்தப் பட்டியலில் நிரந்தரமான இடமுண்டு.

தமிழர்களுக்காக உலகமெங்கும் குரல் கொடுப்பவர்களில் பலர் தங்களைப் புரட்சியாளர்களாக முன்னிறுத்திக் கொள்வதற்கு இவர்களில் ஒருவரைத்தான் இன்று வரைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களில் பலருக்கு இவர்கள்தான் முன்னோடிக் கதாநாயகர்கள். தமிழக அரசியலிலும் இவர்களுக்கு முக்கியப் பங்குண்டு.
இப்படி உணர்வுப்பூர்வமாக இணைந்திருந்த தமிழர்களையும் அவர்களுக்காகப் போராடி வருவோரையும் சே குவேரா உள்ளிட்ட புரட்சியாளர்களின் வழி வந்தவர்கள்தான் இப்போது ஒட்டுமொத்தமாகக் கைவிட்டிருக்கிறார்கள். எப்படி என்கிறீர்களா?

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா வலுவிழக்கச் செய்துவிட்டது என்று பெரும்பாலானவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். புரட்சியாளர்களை நெஞ்சுக்குள் ஒட்டி வைத்திருப்பவர்களும் இதையேதான் சொல்கிறார்கள்.

உண்மையில் இந்தத் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து, பத்தோடு பதினொன்றாக தூக்கிப் போட்டது யார் தெரியுமா? புரட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கியூபா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள்தான்.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் கடுமையான எந்தக் கோரிக்கையையும் முன் வைக்கவில்லை. இலங்கை அரசே அமைத்த ஒரு ஆணையத்தின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதைப் பற்றி மட்டுமே அந்தத் தீர்மானம் பேசியது.

பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களைப் போன்று தாக்குதல் நடத்துவதற்கு முன் அனுமதி பெறும் அவசரமும் இந்தத் தீர்மானத்துக்குக் கிடையாது. இவ்வளவு பலவீனமான ஒரு தீர்மானத்தை "இறையாண்மை', "அன்னியத் தலையீடு கூடாது' எனத் திருத்தத்தைப் போட்டு மேலும் பலவீனமாக்கியது இந்தியா.

உறவுகளைத் தக்கவைத்துக் கொள்வது, புவியியல் ஒருமைப்பாடு என சாதாரண மக்களுக்குப் புரியாத பல்வேறு ராஜதந்திர அம்சங்களைக்கூறி நியாயப்படுத்தினாலும், இந்தியா அந்தத் தீர்மானத்தைப் பலவீனமாக்கியது என்பதுதான் உண்மை.

இந்தியாவின் திருத்தத்தால், இலங்கையை நிர்பந்திக்காமல் செயல்பட விட வேண்டும் என்பதாக தீர்மானத்தின் நோக்கம் திரிந்துபோனது. அதேநேரத்தில் மதில்மேல் பூனை போன்ற மனநிலையில் இருந்த நாடுகள் இந்தத் திருத்தம் காரணமாக தீர்மானத்துக்கு ஆதரவளிக்க முடிந்தது; எதிர்த்து வாக்களிக்க இருந்த சில நாடுகள் மெüனமாக இருந்தன என்பதையும் மறுக்க முடியாது.

இப்படியொரு வலுவற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், தமிழர்களுக்கு உரிமை கிடைக்கச் செய்வதிலும், போர்க்குற்றங்கள் தொடர்பாக நீதி கிடைக்கச் செய்வதிலும் முழு வெற்றிபெற்று விட்டதாகக் கருத முடியாது. அதற்கெல்லாம் இது முதற்படியாக வேண்டுமானால் இருக்க முடியும்.

இந்தத் தீர்மானத்தால் தமிழர்களுக்கு நேரடியான ஒரேயொரு நன்மைதான் கிடைத்திருக்கிறது.
நெருக்கடிகள் சூழ்ந்திருக்கும்போதுதான் உன் நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காண முடியும் என்று சொல்வார்கள்.

அதைப்போல, இந்தத் தீர்மானம் தமிழர்களுக்கு தங்களது உலக அளவிலான நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காட்டியிருக்கிறது.

சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் புலப்படாத எத்தனையோ ராஜதந்திரங்கள் இருக்கும். அதில் ஒரு பகுதிதான் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம். ஆனாலும், லிபியா, சிரியா, வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிராக பல அவைகளில் கொண்டு வந்த தீர்மானங்களைப் போன்றது கிடையாது. அப்படிப்பட்ட கடுமையான தீர்மானங்களின்போதுகூட ஐ.நா.வின் வெவ்வேறு தளங்களில் ரஷியாவும் சீனாவும் பல நேரங்களில் மெüனமாக இருந்திருக்கின்றன.

அதே நாடுகள்தான் இப்போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன. கியூபா ஒருபடி மேலேபோய், "இலங்கை எங்களது நண்பன்' என்றது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், அதற்கான நல்லிணக்க முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவாதித்துக் கொண்டிருந்தபோது, முதலில் குவாண்டனாமோ சிறையை மூடுவதாக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள், மற்றவற்றை பிறகு பார்க்கலாம் என்று ஒபாமாவைக் குற்றம்சாட்டியது கியூபாதான்.

""லிபியாவில் பன்னாட்டுப் படைகள் நடத்திய மனித உரிமை மீறல்களை விசாரித்து விட்டு இலங்கையை விசாரிக்கலாம்'' என்று விவகாரத்தின் திசையை மாற்றியது. இந்தியாவின் திருத்தத்துக்குப் பிறகுகூட, கியூபா தனது நிலையை திருத்திக் கொள்ளவில்லை.

இத்தனைக்கும் பிரபாகரன் எத்தகைய போரை நடத்தினாரோ, கிட்டத்தட்ட அதே மாதிரியான போராட்டத்தால் புதிய அதிகாரத்தைப் பெற்ற நாடு அது. அதை நடத்திய தலைவர்கள்தான் இன்றைக்கும் ஆட்சி செய்து வருகிறார்கள். அமெரிக்கா கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக இந்தத் தீர்மானத்தை கியூபா எதிர்த்தது என்றால், உண்மை நிலையை உணர்த்தி அந்த நாட்டை வழிக்குக் கொண்டுவர முடியாதது தமிழ் அதிகாரக் குழுக்களின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய அடி என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியாவின் திருத்தம் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்தது என்றால், சீனா, ரஷியா, கியூபா ஆகியவற்றின் எதிர்ப்புதான் அந்தத் தீர்மானத்துக்கு "வழக்கமான அமெரிக்க தீர்மானம்' என்கிற தோற்றத்தை அளித்தது. இராக்கில் புகுந்தீர்கள், ஆப்கானிஸ்தானை தரைமட்டமாக்கினீர்கள், கடாஃபியை கொன்றீர்கள் இப்போது இலங்கைக்குள் நுழையப் பார்க்கிறீர்களா என்பது போன்ற கேள்வியை முன்னிறுத்தியது.

அந்த நாடுகளின் எதிர்ப்பையும் மீறி எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானம் வெற்றிபெற்றுவிட்டது. ஆனால், ஐ.நா.வின் பிற தளங்களுக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டுமானால், நிச்சயம் சீனாவும் ரஷியாவும் தமிழர்களுக்கு முக்கியம். கியூபாவை நம் பக்கம் இழுக்க வேண்டியது உணர்வுப்பூர்வமான பிரச்னை என்றால், சீனாவையும் ரஷியாவையும் இழுக்க வேண்டியதுதான் உண்மையான ராஜதந்திரப் பிரச்னை.

dinamani


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Mar 26, 2012 10:06 am

சோகம் சோகம் சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 10:21 am

வரலாற்று பிழையில் இந்த புரட்சி நாடுகள் சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Mar 26, 2012 10:26 am

அசுரன் wrote:வரலாற்று பிழையில் இந்த புரட்சி நாடுகள் சோகம்

பாஸ் இந்தியாவுலயே நம்மள கேப்பாரில்லா இதுல அண்டை நாடுகள் ஆதரிக்கலெனு அழுதா எப்படி அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 26, 2012 10:28 am

சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Mon Mar 26, 2012 10:33 am

தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை விட இவர்கள் எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் அல்ல ..

சே வும் மாவோவும் இதற்கு விதி விலக்கு ....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 26, 2012 10:52 am

ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும் , ஆட்டுமந்தைகளாக தான் இருப்பேன். கடவுள் போல ஒருவர் வந்து காப்பாற்ற வேண்டும் என கனவு கண்டு கொண்டு இருக்கும் வரை உலக தமிழர்களின் நிலை இப்படி தான் இருக்கும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Mar 26, 2012 10:58 am

ராஜா wrote:ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும் , ஆட்டுமந்தைகளாக தான் இருப்பேன். கடவுள் போல ஒருவர் வந்து காப்பாற்ற வேண்டும் என கனவு கண்டு கொண்டு இருக்கும் வரை உலக தமிழர்களின் நிலை இப்படி தான் இருக்கும்.

ஆமாம் உங்களுக்குள் இருக்குற வேலாயுதத்தை நீங்கதான் தேடவேண்டும் வேலாயுதம் வெளியில் இல்லை அதானே தல



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 26, 2012 11:01 am

balakarthik wrote:ஆமாம் உங்களுக்குள் இருக்குற வேலாயுதத்தை நீங்கதான் தேடவேண்டும் வேலாயுதம் வெளியில் இல்லை அதானே தல
தெளிவா சொல்லுங்க பாலா , அப்புறம் எல்லோரும் தெனாலி கமல் மாதிரி வந்துட போறாங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Mar 26, 2012 11:08 am

ராஜா wrote:தெளிவா சொல்லுங்க பாலா , அப்புறம் எல்லோரும் தெனாலி கமல் மாதிரி வந்துட போறாங்க

வேலாயுதம் கிளைமாஸ் பார்க்கசொலுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி'கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக