ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபாலபுரத்திலும் சி.ஐ.டி. காலனியிலும் இரண்டு கேன்களில் கெரசின் வைத்தது யார்?

Go down

கோபாலபுரத்திலும் சி.ஐ.டி. காலனியிலும் இரண்டு கேன்களில் கெரசின் வைத்தது யார்? Empty கோபாலபுரத்திலும் சி.ஐ.டி. காலனியிலும் இரண்டு கேன்களில் கெரசின் வைத்தது யார்?

Post by பிரசன்னா Mon Mar 26, 2012 12:34 pm

வணக்கம்…. தமிழ்நாட்டில் பிறந்த அரசியல்வாதிகளின் சார்பில் விசேஷ வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏன் தெரியுமா?

இங்கே என்ன செய்தாலும், அதிக பட்சம் மக்கள் ஓட்டுப் போடமாட்டார்கள். அவ்வளவுதான். ஆனால், ஒடிசா, பீகார் போன்ற மாநிலமாக இருந்தால் அரசியல்வாதிகளின் கதியை நினைத்தால் பயமாக இருக்கிறது.

ஒடிசாவில் ஆளும்கட்சியான பிஜூ ஜனதா தள கட்சியைச் சேர்ந்த ஜினாவுக்கா என்ற எம்.எல்.ஏ.வை மாவோயிஸ்ட்கள் கடத்தி விட்டார்களாம். தமிழ்நாட்டில் 234 எம்.எல்.ஏ.க்களுக்கும் அந்த கவலையேயில்லை.

எம்.எல்.ஏ.வாகவும் எம்.பி.யாகவும் என்ன லட்சியத்துக்காக என்று யோசித்துப்பார்த்தேன்.

அப்போதுதான், கருணாநிதியின் கபட நாடக அறிக்கையை படித்தேன். அரசியல்வாதியாக வரக்கூடியவனுக்கு கபட நாடகம் ஆட தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் அதன் முதல் தகுதி.

இவர் ஜெயலலிதாவை கபட நாடகி என்கிறார். கருணாநிதியை ஜெயலலிதா கபட நாடகதாரி என்கிறார்.

மன்மோகன் தமிழர்கள் விஷயத்தில் கபட நாடகம் ஆடுகிறார்.

ராஜபக்/**/ஷே ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் கபட நாடகம் ஆடுகிறார்.

இதையெல்லாம் விட, கனிமொழியின் நாடகம் இருக்கிறதே…. அது கபடத்தை விட கடினமான நாடகம் போலிருக்கிறது.

கனிமொழி என்ன சொல்கிறார். டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்கிறார்.

அந்த மனுவில், “கலைஞர் "டிவி'க்காக 200 கோடி ரூபாய் பெறப்பட்டது என்பது என் மீது சி.பி.ஐ., கூறுகிற குற்றச்சாட்டு. இந்த பணப்பரிமாற்றம், 2008 டிசம்பர் மாதத்திலிருந்து 2009 ஆகஸ்ட் மாதத்திற்குள் நடந்தது என்றும் கூறியுள்ளது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் நான் கலைஞர் "டிவி'யில் 20 சதவீத பங்குகள் மட்டுமே வைத்திருந்தேன். கலைஞர் "டிவி' எடுத்த முக்கிய முடிவுகளில் நான் பங்கேற்கவில்லை. இந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக, எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை. மேலும், 2007ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டு வாரங்கள் மட்டும்தான், கலைஞர் "டிவி'யின் இயக்குனராக இருந்தேன். நிதி தொடர்பாக அப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. கலைஞர் "டிவி'யின் மூளையாகச் செயல்பட்டதாக சி.பி.ஐ., கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், லஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தினால், நான் எந்த ஆதாயமும் பேற்றேன் என்றோ, அந்தப் பணம் என் வங்கிக் கணக்கில் இருந்தது என்றோ சி.பி.ஐ., குற்றச்சாட்டில் எதுவும் கூறப்படவில்லை. எனவே, என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. அவற்றை நீக்க வேண்டும்” என்று கனிமொழி கோரிக்கை வைத்திருக்கிறார்.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்…

கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் கடன் கொடுத்தது யார்? ஒரு ரூபாய் இல்லை… இரண்டு ரூபாய் இல்லை… பத்து ரூபாய் இல்லை…. சுளையாக 200 கோடி ரூபாய்…

இத்தனை ரூபாய் கடனாக வருகிறது… 20 சதவிகித பங்கு வைத்திருக்கும் கனிமொழிக்கு தெரியாது… 60 சதவிகித பங்கு வைத்திருக்கும் தயாளும்மாளுக்கு தெரியாது… அப்படியென்றால்… 20 சதவிகித பங்கு வைத்திருக்கும் சரத்குமாருக்கு மட்டுமே தெரியுமா?

மற்ற இயக்குனர்களுக்கு தெரியாமல், கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் மட்டும், யாருக்கும் தெரியப்படுத்தாமல் 214 கோடியை கடனாக வாங்கி இருக்க முடியுமா?

அந்தக் கடன் தொகையை யாருக்கும் தெரியப்படுத்தாமல் திருப்பிக் கொடுக்க முடியுமா?

அம்மா… கனிமொழி எதிர்காலத்தில் சிறந்த இடம் காத்திருக்கிறதும்மா…. அடடா… அடடா .ஆ…

இதையெல்லாம் யார் நம்புவார்கள். அப்படியென்றால், இந்த நாடகத்துக்கு என்ன பெயர் என்று முத்தமிழையும் அரிந்தவர்(!) சொல்ல வேண்டும்!

இதையெல்லாம் விட ஒரு அதிர்ச்சி தி.மு.க. தரப்பில் நடந்திருக்கிறது. ஆனால், கடப்பாறையை முழுங்கிவிட்டு, கஷாயம் குடித்து கடப்பாறையை கரைக்கும் வல்லமை படைத்தவர்களாயிற்றே!

அட… என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா?

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மார்ச் 15ம் தேதி இரவு கருணாநிதி ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

“அண்ணா நூலகத்தை மாற்றும் நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்” என்று அறிவிப்பு வெளியிட்டார்.

இது அரசியல்வாதிகளை திடுக்கிடவே செய்யவில்லை. திக்குமுக்காட வைத்துவிட்டது.

90 வயதில் இப்படி ஒரு காமெடி வரியை சொல்லிவிட்டாரே என்று நடுநிலை அரசியல்வாதிகள் வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

மறுநாள், அதாவது 16ம் தேதி காலை சி.ஐ.டி. காலனியிலும் கோபாலபுரத்திலும் இரண்டு வாட்டர் கேன்கள் இருந்தன. ஒவ்வொன்றும் இருபது லிட்டர் தண்ணீர் பிடிக்கும் பப்புள்டாப் வாட்டர் கேன்கள் அவை.

அந்த கேனில் தண்ணீர் போல தெரிந்ததே தவிர, நிறம் ஒரு மாதிரியாக இருந்தது. அதை அங்கிருந்த போலீசார் பரிசோதித்தப் பார்த்தால்… அந்த கேனில் இருந்தது கெரசின்.

சி.ஐ.டி. காலனியின் காம்பவுண்டு வாசலிலும், கோபாலபுரத்தின் போலீஸார் நிற்கும் பகுதியிலும் இந்த கெரசின் கேன்கள் வைக்கப்பட்டிருந்தன.

உடனே, அங்கிருந்த பாதுகாப்பு போலீஸார் அப்புறப்படுத்தி, விஷயத்தை அடக்கிவைத்துவிட்டனர்.

காரணம், கருணாநிதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட பாதுகாப்பில் இருக்கும் போது, இரண்டு கெரசின் கேன்களை வைத்துவிட்டுச் சென்ற குறும்புக்காரனை, நக்கல்காரனை பிடிக்காமல் விட்டுவிட்டால் பல கேள்வி வருமே என்று விஷயத்தை அமுக்கிவிட்டார்கள்.

இது லேசாக கசிந்த பிறகு விசாரித்தால், தீக்குளிப்பேன் என்று அறிவித்தாரே அன்று இரவே, சைக்கிளில் வந்த நபர் ஒருவர், வாட்டர் கேனை இறக்கி வைத்திருக்கிறார். அதை போலீஸார் பார்த்திருக்கிறார்கள். வழக்கமாக போலீஸாருக்கு வரும் வாட்டர் கேன் என்று இரவு பாதுகாப்பில் இருந்த போலீஸார் கருதிக் கொண்டார்களாம். ஒரே நபர் தான் சி.ஐ.டி. காலனியிலும் வைத்துவிட்டு, கோபாலபுரத்திலும் வைத்து சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.

ஒரு வேளை, தீக்குளிப்பேன் என்று அறிவித்த பிறகு கெரசினுக்கு பஞ்சம் வந்துவிட்டால்… என்று நினைத்த தமிழ் உணர்வு கொண்ட நக்கல் வாதியின் செயலாகவே இது இருக்கும் என்று மூத்த உடன் பிறப்புக்களே சிலாகித்துக் கொண்டார்கள்…

ஆக, இனிமேல் கருணாநிதியுடன் செல்லும் இசட் பிளஸ் போலீஸ் அதிகாரிகள் உஷாரக இருந்து அவரை எதிர்காலத்தில் விழா மேடை அருகேயும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி… வணக்கம் !

http://www.tamiltorrents.net/forums/93410-2979.html
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum