ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது - தினமணி ஆசிரியர் தலையங்கம்

Go down

இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது - தினமணி ஆசிரியர் தலையங்கம்  Empty இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது - தினமணி ஆசிரியர் தலையங்கம்

Post by பது Mon Mar 26, 2012 11:50 am

உள்நாட்டு அரசியலின் நெருக்கடியால்தான் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ், வாக்கெடுப்பின்போது மறைமுகமாக இந்தியாவைக் குறிப்பிட்டாலும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முதல்முறையாக இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

இவ்வாறு சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழான தினமணி தனது ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

அத்தலையங்கத்தின் முழுவிபரமாவது,

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியிருப்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி. அதைவிட, இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தந்த இந்தியாவின் நிலைப்பாடு இந்தியத் தமிழர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் முடிவு.

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுற்றிருக்கும் சூழலில் பாதிக்கப்பட்டு, நிராதரவாக நிற்கும் இலங்கையின் பூர்வகுடியினரான ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இந்திய அரசு வெளிப்படையாகச் செயல்பட்டிருப்பது இதுவே முதல் முறை. கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமும், துரதிருஷ்டவசமாக, தமிழக அரசியலுக்கான நாடகமாக அமைந்ததே தவிர, உளப்பூர்வமான நடவடிக்கைகளாக அமையவில்லை என்கிற தோற்றத்தை ஏற்படுத்தியது.

உள்நாட்டு அரசியலின் நெருக்கடியால்தான் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ், வாக்கெடுப்பின்போது மறைமுகமாக இந்தியாவைக் குறிப்பிட்டாலும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முதல்முறையாக இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் முடிந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அறிவித்த எந்தப் பணிகளையும் கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜபட்ச அரசு செய்யவில்லை. இதற்காக இந்திய அரசு பல முறை அரசு அதிகாரிகளை அனுப்பியும் அதை அவர்கள் சட்டை செய்யவில்லை. இலங்கை உறுதி கூறியபடி, இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13-வது சட்டத்திருத்தம் நடக்கவே இல்லை.

இத்தனை காலம், இலங்கையிடம் அண்டை நாட்டுடனான நல்லுறவு கெட்டுவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் பணிவாக இருந்து வந்ததுதான் இந்திய அரசு செய்த மிகப்பெரிய தவறு. தற்போதுதான், கடுமையாகவும் நடந்துகொள்ள முடியும் என்பதை முதன்முறையாக நாம் இலங்கைக்குப் புரிய வைத்திருக்கிறோம். இந்த நிலைப்பாட்டை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருந்தால், இந்தியா நேரடியாகக் களத்தில் இறங்கி, இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்கியிருக்காவிட்டாலும், இலங்கை அரசின் செயல்பாடுகளை நாம் கண்காணித்திருக்க முடியும். வெறுமனே இலங்கை அரசிடம் பணமும் பொருளும் கொடுத்துவிட்டு, அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பிக் கெட்ட துரதிருஷ்டவசமான நிலைமை ஏற்பட்டிருக்காது.

நம்மைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் - ரஷியா, சீனா, வங்கதேசம், மாலத்தீவு, சவூதி அரேபியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக நின்றபோது, இலங்கையை வெளிப்படையாக இந்தியா எதிர்த்து நின்று, அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் திருப்திக்காக இதைச் செய்தது என்று இந்த முடிவை அவசரப்பட்டு மலினப்படுத்துவது நியாயமில்லை. நாளையும் ராஜீய உறவுகள் அறுந்துபோகக்கூடாது என்ற உணர்வுடன் இந்திய அரசு செயல்பட்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தீவிரமாக இயங்கும் அரசியல் அமைப்புகள் சில, இந்தியா மேற்கொண்டுள்ள ராஜதந்திர முடிவை இரட்டை வேடம் என்று விமர்சனம் செய்துள்ளன. தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு முன்பே, தனியொரு நாட்டின் மீது இத்தகைய தீர்மானம் கொண்டுவருவது சரியல்ல என்று சுற்றறிக்கை அனுப்பிய இந்தியா மீது தமிழக அரசியல் கட்சிகளுக்கு வருத்தம் இருந்தது. தீர்மானத்தின் சில பத்திகளில் இந்தியா திருத்தம் செய்தபோது இந்தக் கோபம் மேலும் அதிகமானது. அதாவது, போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக்குப் பின்னர், ஐ.நா. சொல்லும் நடவடிக்கைகளை இலங்கை ஏற்று நடத்த வேண்டும் என்ற வார்த்தைகளை, "இலங்கை அரசின் ஒப்புதலுடன்' என்று இந்தியா மாற்றியிருப்பதைத்தான் இவ்வாறு இரட்டை வேடம் என்று குறை காண்கிறார்கள். இது உணர்ச்சியின் மீது எழுப்பப்படும் வாதங்களே தவிர, ஓர் அரசாங்கம் என்று பார்க்கும்போது இத்தகைய அணுகுமுறை தவறல்ல. அதற்குப் பெயர் ராஜதந்திரம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், ராமேஸ்வரம் மீனவர்கள் பிடித்துச் செல்லப்பட்டார்கள் என்றால், அப்போது இந்திய அரசுதான் பேசியாக வேண்டும். மற்ற நாடுகள் வரப்போவதில்லை. அக்கறை கொள்ளப்போவதில்லை. ஒரேயடியாக இலங்கையை எதிர்ப்பது இத்தகைய ராஜீய நடவடிக்கைகளுக்குக் குந்தகமாக அமைந்துவிடும்.

"செய்வதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டீர்கள், உங்கள் மீது நான் கோபமாக இருக்கிறேன்' என்று சொல்லும்போது, பேச்சுக்கும் நட்புக்கும் இடம் இருக்கிறது. "நீ என் விரோதி' என்று சொல்லும்போது நட்பு முற்றிலுமாக முறிந்துபோகும்.

எல்லைப் பிரச்னையால் சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் வங்கதேசத்துடனும் ஏற்கெனவே பிரச்னைகள் இருக்கும் நிலையில், இலங்கையுடன் பிரச்னை ஏற்பட்டு போர் மூளும் சூழலை இந்தியா ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரிவினை சக்திகளும், தீவிரவாத சக்திகளும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. முள்ளில் விழுந்த சேலையைக் கிழியாமல் எடுக்கும் லாவகம் இந்தப் பிரச்னையில் தேவைப்படுகிறது.

கோபம் கொள்ளவும் வேண்டும். காரியம் சாதிக்கவும் வேண்டும். முதல்முறையாக கோபத்தைக் காட்டியுள்ள இந்திய அரசு, காரியத்தையும் சாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தலாமே தவிர, இரட்டை வேடம் போடுகிறது இந்திய அரசு என்று குற்றம் கூறுபவர்கள் பிரச்னையை வளர்க்க விரும்புகிறவர்கள். சொல்லித் தெரிவதில்லை நாடாளும் வித்தைகள் என்பதைப் புரிந்துகொள்ளாதவர்கள்! ___
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum