ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிலை

2 posters

Go down

வெற்றிலை Empty வெற்றிலை

Post by சிவா Mon Mar 26, 2012 9:09 am



இந்திய மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று, வெற்றிலை. அது நல்ல தருணங்களின் சின்னம். திருமணம், வழிபாடு முதலியவற்றில் முக்கிய இடம் பெறுவது வெற்றிலை. சுபகாரியங்களில் வெற்றிலை `தாம்பூலம்' என்ற சிறப்புப் பெயர் பெறுகிறது.

மருத்துவ குணம் வாய்ந்த வெற்றிலை, வரலாற்றுக் காலத்திலேயே புகழ்பெற்றுத் திகழ்ந்திருக்கிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிலை போடும் பழக்கம் இருந்து வந்திருப்பதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. பண்டைக் காலத்துப் பெண்கள் தமது அழகுப் பொருட்களில் வெற்றிலைக்கு முக்கியமான இடத்தைக் கொடுத்தனர்.

அரசர்களும் வெற்றிலையைப் போற்றிப் பயன்படுத்தினர். உதாரணமாக, மொகலாய மன்னர்கள் இதற்கு ஏற்றம் தந்தனர். மொகலாய அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு மொகலாய மன்னர்கள் வெற்றிலை போடுவதற்காகத் தனியாக மானியமே அளித்துவந்தனர்.

அழகான வெற்றிலைப் பேழையில் வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு மட்டுமின்றி கிராம்பும், வேறு வாசனைப் பொருட்களும் சேர்ந்திருக்கும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த தாம்பூலம், தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட இலைகளில் பொதியப்பட்டிருக்கும். அந்த மரியாதை, மொகலாய அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கிடைக்கும்.

மொகலாய மன்னர்கள் வெற்றிலைப் பழக்கத்துக்காக பெரும் பணத்தைச் செலவு செய்தனர். ஷாஜகான் மன்னர் தனது மகளின் தாம்பூலச் செலவுக்காக சூரத் மாநிலத்தின் வருவாய் முழுவதையும் ஒதுக்கி வைத்தாராம்.

ராஜதந்திர விஷயங்களிலும் வெற்றிலை இடம்பெற்றது. பெர்ஷியாவின் ஷா மன்னர், இந்தியாவை தனது ஆட்சிக்கு உட்படுத்த எண்ணம் கொண்டிருந்தார். அதை அறிந்த மொகலாய மன்னர் அவுரங்கசீப், ஷா மன்னரைத் திருப்தி செய்யும்பொருட்டு அவருக்கு உயர்ந்த ரக வெற்றிலையை அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

புதிய கண்டங்களையும், நிலப்பகுதிகளையும் கண்டுபிடித்து வந்த மார்க்கோபோலோ, ஷான் மார்ஷ் போன்ற சர்வதேசப் பயணிகள் இந்திய மக்களின் வெற்றிலை போடும் பழக்கத்தைப் பற்றி சுவையான கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

பல கவிஞர்கள் வெற்றிலையின் புகழைப் பாடியிருக்கின்றனர். ஆகவே இறவாத இலக்கியங்களிலும் வெற்றிலை இடம்பெற்றிருப்பது அதன் சிறப்பைக் காட்டுகிறது. வெற்றிலை கொடி வகையைச் சேர்ந்தது. அது படர்வதற்கு ஆதரவு வேண்டும். எனவே தென்னை, கமுகு போன்றவற்றுடன் வெற்றிலையைப் பயிரிடுகிறார்கள். வெற்றிலைச் சாகுபடி ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த தொழிலாகும்.

வெப்பப் பிரதேசங்களில் வெற்றிலை அதிகம் பயிராகிறது. இதற்கு எப்போதும் நிழலும், தண்ணீரும் தேவைப்படுகின்றன. வறட்சிப் பகுதிகளைத் தவிர இந்தியாவில் ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் வெற்றிலை பயிராகிறது.


வெற்றிலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெற்றிலை Empty Re: வெற்றிலை

Post by அசுரன் Mon Mar 26, 2012 9:10 am

வெத்தல இல்லாத கல்யாணமா? வெற்றிலை செரிமானத்துக்கு மிகவும் நல்லது.. அருமையான தகவல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வெற்றிலை Empty Re: வெற்றிலை

Post by சிவா Wed Mar 01, 2023 6:49 pm

வெற்றிலை 7KtKtLY
தாம்பத்யக் குறைபாடு நீக்கும் வெற்றிலை



தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என பல பெயர்களில் அழைக்கப்படும் மூலிகை, வெற்றிலை. கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை என சில வகைகள் உள்ளன. இது, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம்கொண்டது.



• இதில் கரோட்டின், தயாமின், ரிபோஃபிளேவின், வைட்டமின் சி சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சவிக்கால் (Chavicol) என்ற வேதிப் பொருளும் இருக்கிறது.

• இளம் வெற்றிலையை மட்டுமே மருந்தாகப் பயன்படுத்த வேண்டும். காம்பு, நரம்புகளை நீக்கிவிட்டுப் பயன்படுத்தினால், அதன் மருத்துவ குணங்கள் முழுமையாகக் கிடைக்கும்.

• வெற்றிலையுடன் மிளகு சேர்த்து மென்றால், அது நார்ச்சத்தாகி உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றும்; உடலில் தேங்கியிருக்கும் கெட்ட நீரை அகற்றும்; மலச்சிக்கல் கோளாறு நீங்கும்.

• வெற்றிலையை மென்றால், உமிழ்நீர் நன்றாகச் சுரந்து பசி உண்டாகும். இரண்டு டீஸ்பூன் வெற்றிலைச் சாற்றுடன் அரை டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், நரம்புகளுக்கு பலம் கிடைக்கும்; தொடர்ந்து சாப்பிட்டால், தாம்பத்யக் குறைபாடுகள் நீங்கும்.

• வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, கஸ்தூரி, ஏலக்காய், லவங்கம், பாதாம், முந்திரி, திராட்சை, குல்கந்து சேர்த்து இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டால் ரத்தம் ஊறும்.

• வெற்றிலைச் சாற்றுடன் தேவையான அளவு நீர், பால் சேர்த்துப் பருகினால் சிறுநீர் நன்றாகப் பிரியும்.

• கடுகு எண்ணெயில் வெற்றிலையைப் போட்டு சூடுபடுத்தி (பொறுக்கும் சூட்டில்) மார்பில் கட்டி வந்தால் மூச்சுத்திணறல், இருமல் கட்டுப்படும்.

• வெற்றிலைச் சாற்றுடன் தேன் சேர்த்துக் கொடுத்தால், குழந்தைகளின் சளி, இருமல் தீரும்.

• வெற்றிலையில் ஆமணக்கு எண்ணெயைத் தடவி, தீயில் வாட்டி, கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால், உடைந்து சீழ் வெளியேறும். இதை இரவில் செய்வது நல்லது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெற்றிலை Empty Re: வெற்றிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum