ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட ஆயுளுக்கான ரகசியம்

4 posters

Go down

நீண்ட ஆயுளுக்கான ரகசியம் Empty நீண்ட ஆயுளுக்கான ரகசியம்

Post by கேசவன் Sat Mar 24, 2012 5:48 pm

சாப்பிட உட்கார்ந்தால் நமக்கு முன்பு இருக்கும் உணவுகளை பார்த்து முதலில் கண்கள் ஆசைப்படும், பிறகு கைகள், அதன்பிறகு நாக்கு, கடைசியாகத்தான் வயிறு! ஆனால், உணவை பார்த்து ஆசைப்படுவதுடன் கண்களின் வேலை முடிந்துவிடும். உணவை எடுத்து வாயில் வைத்தவுடன் கையின் வேலையும், ருசிப்பதுடன் நாக்கின் வேலையும் முடிந்து போகிறது.

ஆனால், நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்யும் முக்கியமான, கடினமான வேலையை வயிறுதான் செய்கிறது. வேடிக்கை என்னவென்றால், தேவைப்படும் உணவு கிடைத்தவுடன் `இனி வேண்டாம், போதும்’ என்று வயிறு மூளைக்கு சிக்னல் செய்துவிடுகிறது. உடனே மூளை, இந்த சிக்னலை கைகள், கண்கள், நாக்கு என எல்லாவற்றுக்கும் அனுப்பி `உணவு உண்பதை நிறுத்து’ என்று ஆணையிடுகிறது.

ஆனால், உணவின் மீதுள்ள பேராசையால் கண்கள், கைகள், நாக்கு எல்லாம் சேர்ந்து தேவைக்கு அதிகமான உணவுகளை தொடர்ந்து வயிற்றுக்குள்ளே தள்ளிக்கொண்டே இருக்கின்றன. விளைவு, உடல் பருமன், அதைத்தொடர்ந்து வரும் இதய நோய்கள், மூளைக் குறைபாடுகள் என பல ஆரோக் கியம் சார்ந்த பிரச்சினைகள் உருவாகின்றன. இதனால், மனிதனின் ஆயுட்காலம் வெகுவாக குறைந்துவிடுகிறது என்கிறது அறிவியல்.

இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு உணவுக் கட்டுப்பாடுதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம். ஆனால், `ஒரு நாள் விட்டு ஒரு நாள் விரதம் இருந்தால் மூளையின் திறன் அதிகமாகிறது, உடல் எடையும் குறைகிறது. இதனால் ஆயுட்காலம் அதிகரிக்கிறது’ என்கிறது அமெரிக்காவின் `நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஏஜிங்’ ஆய்வு மையத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று.

விலங்குகள் மீதான முதற்கட்ட ஆய்வில், மிகவும் குறைந்தபட்ச கலோரிகளை உண்டுவந்த விலங்குகள் சாதாரண விலங்குகளை விட இரு மடங்கு அதிக நாட்கள் வாழ்ந்தது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வுக்கு பின்னர், இந்த உணவுக்கட்டுப்பாட்டு முறையை மனிதர்கள் மீதான ஆய்விலும் பயன்படுத்தினர். ஆய்வின் இறுதியில், இந்த உணவுக்கட்டுப்பாட்டு முறை இதயம், ரத்த நாளங்கள் மற்றும் மூளை ஆகியவற்றை வயோதிகம் சார்ந்த நோய்களான அல்சீமர்ஸ் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரியவந்தது.

`உணவுக் கட்டுப்பாட்டில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு உண்ணும் முறையை கடைபிடிப்பதால், உடல் செயல்பாடுகள் சார்ந்த உளைச்சல்களை, பாதிப்புகளை சமாளிக்கும் திறன் நரம்புகளில் (நரம்பு உயிரணுக்கள்) தூண்டிவிடப்படுகிறது என்பதை கண்டுபிடித்தோம்’ என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட மூத்த ஆய்வாளர் பேராசிரியர் மார்க் மேட்சன்.

இந்த ஆய்வுக்கான சோதனையில், இரு குழுக்களாக பிரிக்கப்பட்ட எலிகளில் ஒரு குழு எலிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு கொடுக்கப்பட்டது. மற்றொரு குழு எலிகளுக்கு தினமும் உணவு கொடுக்கப்பட்டது. இந்த இரு குழுக்களில் உள்ள எலிகள் அனைத்துக்கும் உணவு கொடுக்கப்பட்டபோது, தேவைக்கு அதிகமான அளவுகளில் கொடுக்கப்பட்டது. ஆனால், அவை அனைத்தும் ஒரே அளவு கலோரிகளை எடுத்துக்கொண்டன.

முக்கியமாக, ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு கொடுக்கப்பட்ட எலிகள் நீரிழிவு நோயுடன் தொடர்புடைய `இன்சுலின்’ என்னும் ஹார்மோனை குறைவான அளவிலேயே உற்பத்தி செய்தன. உணவுக்குப் பின்னான உடலின் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தும் பண்புள்ள இன்சுலின் ஹார்மோன், அதிக அளவுகளில் சுரந்தால் மூளையின் திறன் குறைந்து போவதோடு, நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சோதனைக்கு பின்னர் இரு குழுவின் எலிகளுடைய மூளைகளும் பரிசோதிக்கப்பட்டது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு கொடுக்கப்பட்ட எலிகளின் மூளையிலுள்ள `சினாப்ஸ்’ என்னும், மூளை உயிரணுக்களுக்கு இடையிலான தொடர்புகளின் செயல்பாடுகள் மேம்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த சினாப்ஸ், மூளையில் புதிய உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, அவற்றுக்கு உளைச்சல் அல்லது பாதிப்புகளை தாங்கும் சக்தியையும் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முந்தைய உணவு கட்டுப்பாடு தொடர்பான ஆய்வுகளில், சில நாட்கள் உணவு உண்ணாமல் விரதம் இருப்பதன் மூலம் புற்றுநோய் சிகிச்சையின் பலனை அதிகரிக்கலாம் என்று கண்டறியப்பட்டது. ஆரோக்கியமான உயிரணுக்களை பட்டினி போடுவதன் மூலம் அவற்றை `சர்வைவல் மோடு’க்கு கொண்டு செல்கிறோம். இதனால் அவற்றுக்கு புற்றுநோய் சிகிச்சையான கீமோதெரபியினால் ஏற்படும் சேதங்களை எதிர்கொண்டு தாக்குப்பிடிக்கும் திறன் கிடைக்கிறது என்பதே இதற்கு காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதிலிருந்து, `உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் சொன்னது அறிவியல்பூர்வமாக உண்மைதான் என்பது புரிகிறது. ஆக, உணவுக்கட்டுப்பாடுதான் `ஆரோக்கியமான நீண்ட ஆயுட்காலத்தை பெறுவதற்கான சுலபமான வழி’.

முனைவர் பத்மஹரி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நீண்ட ஆயுளுக்கான ரகசியம் 1357389நீண்ட ஆயுளுக்கான ரகசியம் 59010615நீண்ட ஆயுளுக்கான ரகசியம் Images3ijfநீண்ட ஆயுளுக்கான ரகசியம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

நீண்ட ஆயுளுக்கான ரகசியம் Empty Re: நீண்ட ஆயுளுக்கான ரகசியம்

Post by யினியவன் Sat Mar 24, 2012 6:00 pm

நல்ல தகவல் கேசவன் - பகிர்வுக்கு நன்றி.


சின்ன வயசில எல்லாத்தையும் திங்க ஆசை - வாங்கித் தர வசதி இல்ல

சம்பாரிக்கிற காலத்தில - பேயா பணத்து பின்னாடி போறதுக்கே டைம் இல்ல

வயசான காலத்தில - வசதி இருக்கு வாங்கித் திங்க ஆனா உடம்புக்கு ஆகாத நோய்கள் வந்து திங்க விடாது


இப்ப இருக்கற வேகமான உலகத்தில இந்த நிலை தான் நிறைய பேருக்கு - ஒரு பெலன்சோடு வாழக் கத்துகிட்டா நமக்கு நல்லது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நீண்ட ஆயுளுக்கான ரகசியம் Empty Re: நீண்ட ஆயுளுக்கான ரகசியம்

Post by பது Sat Mar 24, 2012 6:26 pm

கொலவெறி wrote:நல்ல தகவல் கேசவன் - பகிர்வுக்கு நன்றி.


சின்ன வயசில எல்லாத்தையும் திங்க ஆசை - வாங்கித் தர வசதி இல்ல

சம்பாரிக்கிற காலத்தில - பேயா பணத்து பின்னாடி போறதுக்கே டைம் இல்ல

வயசான காலத்தில - வசதி இருக்கு வாங்கித் திங்க ஆனா உடம்புக்கு ஆகாத நோய்கள் வந்து திங்க விடாது


இப்ப இருக்கற வேகமான உலகத்தில இந்த நிலை தான் நிறைய பேருக்கு - ஒரு பெலன்சோடு வாழக் கத்துகிட்டா நமக்கு நல்லது.
சரியா சொன்னிங்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

நீண்ட ஆயுளுக்கான ரகசியம் Empty Re: நீண்ட ஆயுளுக்கான ரகசியம்

Post by அசுரன் Sat Mar 24, 2012 8:08 pm

கொலவெறி உலகத்த நல்லா புரிஞ்சவரு புன்னகை

அருமையான தகவல், மனஅடக்கம் நாவடக்கம் இருந்தால் நெடுநாள் வாழலாம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நீண்ட ஆயுளுக்கான ரகசியம் Empty Re: நீண்ட ஆயுளுக்கான ரகசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum