Latest topics
» நாவல்கள் வேண்டும்by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளிர் அணிக்கு மரியாதை...
+11
அதி
யினியவன்
உதயசுதா
பிரசன்னா
ராஜா
ஹர்ஷித்
உமா
இரா.பகவதி
ஜாஹீதாபானு
dhilipdsp
ரா.ரா3275
15 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
மகளிர் அணிக்கு மரியாதை...
First topic message reminder :
நண்பர்களே...நேற்று என் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தோம் குடும்பத்துடன்.அங்கே ஓர் அபூர்வ சத்திப்பு.அதிசயத் தித்திப்பு.14வயது சிறுமி ஒருத்தி-எங்கள் உறவினரின் குடும்ப நண்பரின் குழந்தை-என்னைப் புரட்டிப்போட்டாள் புத்தியைத் தலைகீழாக.மிரண்டு மீண்டு- மீண்டும் மீண்டும் மிரண்டு அரண்டு போனேன் ஆச்சர்யத்தில்.அவளது தாயார் தமிழகத்தின் பிரபல மேடைகளில் எல்லாம் சொற்சிலம்பம் ஆடும் வித்தகப் பேச்சாளர்.அதிலொன்றும் வியப்பில்லை எனக்கு-எங்களுக்கு.ஆனால் அந்தச் சிறுமியோ இந்த வயதிலேயே தமிழக அளவிலானப் பேச்சுப்போட்டியில் முதல் பரிசும்,கம்பன் கழகம்,பாரதிப் பேரவை போன்ற இன்ன பிற அமைப்புகளில் பேச்சுக் கச்சேரி நடத்திப் பெரும் புகழ்ப் பெற்று வருகிறாள்.
இதிலென்ன அதிசயம்? என்ற கேள்வி எனக்குள்ளும் எழுந்தது உங்களைப் போலவே. அவளது தாயார் பிரபலமானப் பேச்சாளர்.இதில் அவரது மகள் அப்படி ஆவதில் அதிசயமென்ன என்ற தார்மீகக் கேள்விதான் எனக்கும் எழுந்தது. ஆனால் கேள்வி அதுவன்று.அந்தச் சிறுமிக்குத் தந்தையில்லை.குடும்பச் சூழல்களால் இந்தச் சூழல் இன்று அவளுக்கு. ஆகவேதான் என் மகளே இனி என் வாழ்க்கை.அவளுக்காகவே உடல்-பொருள்-ஆவி அனைத்தும் என்று வரிந்துக் கட்டிக்கொண்டு வளர்க்கிறார் மக்களை அந்தப் பெண் பேச்சாளர்.பேச்சுக்கலையில் மட்டுமன்று,கர்நாடக சங்கீதத்தில் சுருதி பிசகாமல் சூப்பராகப் பாடுகிறாள்.லண்டனுக்கனுப்பி என் மகளை மிகப் பெரும் வழக்கறிஞராக உச்ச நீதி மன்றத்திலே வலம் வர வைப்பேன்.அதுவே என் லட்சியம் என்று அந்தத் தாய் நெஞ்சுறுதியோடு நிமிர்ந்து கூறும்போது நம் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.
இந்த நிகழ்வு என் மனதை இன்னும் ஆழமாகக் கிளறி விட்டுவிட்டது. மனசின் ஆழத்தில் அசைக்க முடியாத நங்கூற நிகழ்வுகள் எல்லாம் மெல்ல மெல்ல மிதந்து மிதந்து மேலே வந்து மென்னியைப் பிடித்து இறுக்குகிறது.அதில் இருதயம் கூட இடம் மாறிப்போகிறது. ஆம்...கணவன் இல்லாமலோ-இழந்தோ இன்று இந்தப் போட்டி உலகின் புதிர்நிறைப் பூமியில் வால் வீசாமல் சமர் புரியும் இன்னும் சில சத்தியப் பெண்களை நான் இங்கு நினைவு கூர்கிறேன்.
ஹைதராபாத்தில் இருக்கும் என் மரியாதைக்குரிய ஒரு தோழி, தன் சொந்த அத்தை மகனையே திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று மொத்தமாய் மூன்று பேருக்கும் தாயானார்.ஆனால் பாருங்கள்...காலம் தன் கூரியக் கத்தியை அந்தக் கூடும்பத்தின் மீதும் வீசியது.அதில் பிளவுண்டு, தந்தை ஸ்தானத்திலிருந்து அந்த ஆண்மகன் தள்ளிப் போய் இன்னொரு பெண்ணைப் பெண்டாள,விவாகரத்து வந்து என் தோழியின் வாழ்க்கையில் தன் விழாவைக் கொண்டாடியது.
மிகப் பெரும் வசதி இருக்கிறது என்றாலும் கணவன்-தந்தை இல்லா அந்தக் குடும்பம் நிறைய இடங்களில் தத்தளித்ததைக் கண்டும்-கேட்டும் இருக்கிறேன்.இன்று என் தோழி ஆந்திராவின் மிகப் பெரிய தொலைக்காட்சி சேனலில் நல்ல சம்பளத்துடன் உயர் பதவியில் இருக்கிறார்.என் கணவருக்கு முன்னால் என் குழந்தைகளை இந்த சமூகத்தின் முக்கிய மகளிராக்கிக் கண்கொண்டு பார்ப்பேன் என்று என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறார்.அப்போதெல்லாம் அதைப் பார்த்து பிரமித்துத் தலைவணங்கி இருக்கிறேன்.அந்த இரண்டு பெண் பிள்ளைகளும் அற்புதமாய் மிளிர்கின்றனர் தங்கள் கல்வியிலும் தனித் திறமையிலும்.
இன்னுமொரு பெண் எங்கள் கிராமத்தில்-எதிர் வீட்டில் இருந்த குடும்பத் தலைவி.சுருட்டுத் தொழிலாளியான அந்தக் குடும்பத் தலைவன் கடன் சுமையால் விஷம் குடுத்து விடுதலை பெற்றான் தன்னை மட்டும் மாய்த்துத் தப்பிப்பதாய் நினைத்து.இரண்டு பெண்கள்-ஒரு ஆண் குழந்தைகள் அவர்களுக்கு.அந்தக் கோழைக் குடும்பத் தலைவன் சாகும்போது அத்துணை குழந்தைகளும் ஐந்து வயதிற்குள்.
இன்று அந்தப் பெண்மணி அற்புதமாகத் தன் குழந்தைகளைப் படிக்கவைத்து இரு பெண்களும் கல்லூரியிலும் மகன் பள்ளி இறுதி வகுப்பிலும் இருப்பதாகவும் என் அம்மா சொல்வார்.ஊரில் முறுக்குச் சுட்டு விற்றே இந்த நிலையை எய்தியிருக்கிறார் வணக்கத்திற்குரிய அந்த சகோதரி.
இறுதியாக ஒரு பிரும்மாண்ட தாய்மையை அண்மையில் சந்தித்தேன்.மேற்சொன்ன என் தோழியைப் போலவே இரண்டு குழந்தைகளின் தாய் அந்த அசாத்தியத் துணிச்சல்காரர்.பொறியியல் கல்லூரியில் ஒன்றும் பள்ளியில் ஒன்றும் என தன் இரண்டு கண்களையும் பொக்கிஷமாய்ப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்-படிக்க வைக்கிறார்.இதைப் பார்க்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது என் பேறு.இந்தத் தாயும் அலுலவலகப் பணிக்குச் சென்றே தான் நிகழ்த்தப் போகும் அதிசயத்திற்கு அஸ்திவாரத்தைப் பலமாக்குகிறார்.
இந்த உலகம் கண்டது-கேட்டதுதான் இந்த நிகழ்வுகளும் மனிதர்களும்.மனைவி இல்லாமல் போனாலோ-இழந்து போனாலோ, எண்ணிச் சரியாக ஆறாவது மாதம் அடுத்த சாந்தி முகூர்த்தம் கொண்டாடும் நம் ஆண் சமூகம் என்பதே பெரும்பான்மை உண்மை.இதில் சில விதிவிளக்குத் தங்கத் தந்தைகளும் இல்லாமல் இல்லை நண்பர்களே. ஆயினும் ஆண்களோடு ஒப்பிடுகையில் இந்தத் தங்கத் தாய்மைகளை இருகரம் இருதயத்தில் மரியாதைப் பீறிட இருகரம் கூப்பிப்
பிரும்மாண்டமாய் வணங்கத்தோன்றுகிறது என்பதே இந்தப் பதிவின் இறுதிச் சூத்திரம்.
இதுபோல் தெரிந்த தங்கத் தாய்மைகளைவிட கண்ணுக்குத் தெரியாத இன்னும் எத்துனைத் தாய்களோ இந்தப் பூமிப் பந்தில்.தெரியாவிட்டால் என்ன?...
நெற்றித் தரை தொட நெடுஞ்சாண்கிடையாக நிலத்தில் விழுந்து வணங்குவோம் அந்தப் பிரும்மாண்டத் தங்கத் தாய்மைகளை.
நண்பர்களே...நேற்று என் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தோம் குடும்பத்துடன்.அங்கே ஓர் அபூர்வ சத்திப்பு.அதிசயத் தித்திப்பு.14வயது சிறுமி ஒருத்தி-எங்கள் உறவினரின் குடும்ப நண்பரின் குழந்தை-என்னைப் புரட்டிப்போட்டாள் புத்தியைத் தலைகீழாக.மிரண்டு மீண்டு- மீண்டும் மீண்டும் மிரண்டு அரண்டு போனேன் ஆச்சர்யத்தில்.அவளது தாயார் தமிழகத்தின் பிரபல மேடைகளில் எல்லாம் சொற்சிலம்பம் ஆடும் வித்தகப் பேச்சாளர்.அதிலொன்றும் வியப்பில்லை எனக்கு-எங்களுக்கு.ஆனால் அந்தச் சிறுமியோ இந்த வயதிலேயே தமிழக அளவிலானப் பேச்சுப்போட்டியில் முதல் பரிசும்,கம்பன் கழகம்,பாரதிப் பேரவை போன்ற இன்ன பிற அமைப்புகளில் பேச்சுக் கச்சேரி நடத்திப் பெரும் புகழ்ப் பெற்று வருகிறாள்.
இதிலென்ன அதிசயம்? என்ற கேள்வி எனக்குள்ளும் எழுந்தது உங்களைப் போலவே. அவளது தாயார் பிரபலமானப் பேச்சாளர்.இதில் அவரது மகள் அப்படி ஆவதில் அதிசயமென்ன என்ற தார்மீகக் கேள்விதான் எனக்கும் எழுந்தது. ஆனால் கேள்வி அதுவன்று.அந்தச் சிறுமிக்குத் தந்தையில்லை.குடும்பச் சூழல்களால் இந்தச் சூழல் இன்று அவளுக்கு. ஆகவேதான் என் மகளே இனி என் வாழ்க்கை.அவளுக்காகவே உடல்-பொருள்-ஆவி அனைத்தும் என்று வரிந்துக் கட்டிக்கொண்டு வளர்க்கிறார் மக்களை அந்தப் பெண் பேச்சாளர்.பேச்சுக்கலையில் மட்டுமன்று,கர்நாடக சங்கீதத்தில் சுருதி பிசகாமல் சூப்பராகப் பாடுகிறாள்.லண்டனுக்கனுப்பி என் மகளை மிகப் பெரும் வழக்கறிஞராக உச்ச நீதி மன்றத்திலே வலம் வர வைப்பேன்.அதுவே என் லட்சியம் என்று அந்தத் தாய் நெஞ்சுறுதியோடு நிமிர்ந்து கூறும்போது நம் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.
இந்த நிகழ்வு என் மனதை இன்னும் ஆழமாகக் கிளறி விட்டுவிட்டது. மனசின் ஆழத்தில் அசைக்க முடியாத நங்கூற நிகழ்வுகள் எல்லாம் மெல்ல மெல்ல மிதந்து மிதந்து மேலே வந்து மென்னியைப் பிடித்து இறுக்குகிறது.அதில் இருதயம் கூட இடம் மாறிப்போகிறது. ஆம்...கணவன் இல்லாமலோ-இழந்தோ இன்று இந்தப் போட்டி உலகின் புதிர்நிறைப் பூமியில் வால் வீசாமல் சமர் புரியும் இன்னும் சில சத்தியப் பெண்களை நான் இங்கு நினைவு கூர்கிறேன்.
ஹைதராபாத்தில் இருக்கும் என் மரியாதைக்குரிய ஒரு தோழி, தன் சொந்த அத்தை மகனையே திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று மொத்தமாய் மூன்று பேருக்கும் தாயானார்.ஆனால் பாருங்கள்...காலம் தன் கூரியக் கத்தியை அந்தக் கூடும்பத்தின் மீதும் வீசியது.அதில் பிளவுண்டு, தந்தை ஸ்தானத்திலிருந்து அந்த ஆண்மகன் தள்ளிப் போய் இன்னொரு பெண்ணைப் பெண்டாள,விவாகரத்து வந்து என் தோழியின் வாழ்க்கையில் தன் விழாவைக் கொண்டாடியது.
மிகப் பெரும் வசதி இருக்கிறது என்றாலும் கணவன்-தந்தை இல்லா அந்தக் குடும்பம் நிறைய இடங்களில் தத்தளித்ததைக் கண்டும்-கேட்டும் இருக்கிறேன்.இன்று என் தோழி ஆந்திராவின் மிகப் பெரிய தொலைக்காட்சி சேனலில் நல்ல சம்பளத்துடன் உயர் பதவியில் இருக்கிறார்.என் கணவருக்கு முன்னால் என் குழந்தைகளை இந்த சமூகத்தின் முக்கிய மகளிராக்கிக் கண்கொண்டு பார்ப்பேன் என்று என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறார்.அப்போதெல்லாம் அதைப் பார்த்து பிரமித்துத் தலைவணங்கி இருக்கிறேன்.அந்த இரண்டு பெண் பிள்ளைகளும் அற்புதமாய் மிளிர்கின்றனர் தங்கள் கல்வியிலும் தனித் திறமையிலும்.
இன்னுமொரு பெண் எங்கள் கிராமத்தில்-எதிர் வீட்டில் இருந்த குடும்பத் தலைவி.சுருட்டுத் தொழிலாளியான அந்தக் குடும்பத் தலைவன் கடன் சுமையால் விஷம் குடுத்து விடுதலை பெற்றான் தன்னை மட்டும் மாய்த்துத் தப்பிப்பதாய் நினைத்து.இரண்டு பெண்கள்-ஒரு ஆண் குழந்தைகள் அவர்களுக்கு.அந்தக் கோழைக் குடும்பத் தலைவன் சாகும்போது அத்துணை குழந்தைகளும் ஐந்து வயதிற்குள்.
இன்று அந்தப் பெண்மணி அற்புதமாகத் தன் குழந்தைகளைப் படிக்கவைத்து இரு பெண்களும் கல்லூரியிலும் மகன் பள்ளி இறுதி வகுப்பிலும் இருப்பதாகவும் என் அம்மா சொல்வார்.ஊரில் முறுக்குச் சுட்டு விற்றே இந்த நிலையை எய்தியிருக்கிறார் வணக்கத்திற்குரிய அந்த சகோதரி.
இறுதியாக ஒரு பிரும்மாண்ட தாய்மையை அண்மையில் சந்தித்தேன்.மேற்சொன்ன என் தோழியைப் போலவே இரண்டு குழந்தைகளின் தாய் அந்த அசாத்தியத் துணிச்சல்காரர்.பொறியியல் கல்லூரியில் ஒன்றும் பள்ளியில் ஒன்றும் என தன் இரண்டு கண்களையும் பொக்கிஷமாய்ப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்-படிக்க வைக்கிறார்.இதைப் பார்க்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது என் பேறு.இந்தத் தாயும் அலுலவலகப் பணிக்குச் சென்றே தான் நிகழ்த்தப் போகும் அதிசயத்திற்கு அஸ்திவாரத்தைப் பலமாக்குகிறார்.
இந்த உலகம் கண்டது-கேட்டதுதான் இந்த நிகழ்வுகளும் மனிதர்களும்.மனைவி இல்லாமல் போனாலோ-இழந்து போனாலோ, எண்ணிச் சரியாக ஆறாவது மாதம் அடுத்த சாந்தி முகூர்த்தம் கொண்டாடும் நம் ஆண் சமூகம் என்பதே பெரும்பான்மை உண்மை.இதில் சில விதிவிளக்குத் தங்கத் தந்தைகளும் இல்லாமல் இல்லை நண்பர்களே. ஆயினும் ஆண்களோடு ஒப்பிடுகையில் இந்தத் தங்கத் தாய்மைகளை இருகரம் இருதயத்தில் மரியாதைப் பீறிட இருகரம் கூப்பிப்
பிரும்மாண்டமாய் வணங்கத்தோன்றுகிறது என்பதே இந்தப் பதிவின் இறுதிச் சூத்திரம்.
இதுபோல் தெரிந்த தங்கத் தாய்மைகளைவிட கண்ணுக்குத் தெரியாத இன்னும் எத்துனைத் தாய்களோ இந்தப் பூமிப் பந்தில்.தெரியாவிட்டால் என்ன?...
நெற்றித் தரை தொட நெடுஞ்சாண்கிடையாக நிலத்தில் விழுந்து வணங்குவோம் அந்தப் பிரும்மாண்டத் தங்கத் தாய்மைகளை.
Last edited by ரா.ரா3275 on Mon Mar 19, 2012 2:43 pm; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மகளிர் அணிக்கு மரியாதை...
"ஆவதும் பெண்ணால் " என்பதற்கு ஏற்ப --------மனம் இருந்தால் மலையையும் புரட்டமுடியும் -------
நல்லதொரு பதிவு.
ரமணியன்
நல்லதொரு பதிவு.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மகளிர் அணிக்கு மரியாதை...
அருமையான பதிவு...ரா.ரா. வுக்கு நன்றி
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: மகளிர் அணிக்கு மரியாதை...
அருமை அருமை ரா ரா மனம் ரொம்ப நெகிழ்ந்துவிட்டது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மகளிர் அணிக்கு மரியாதை...
பானுவின் பின்னூட்டம் ரொம்ப அற்புதம் , யதார்த்தம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மகளிர் அணிக்கு மரியாதை...
உதயசுதா wrote:நன்றி ரா.ரா.உங்கள் பதிவுக்கு.
பெண்ணுக்கே ஒரு இயல்பான குணம் உண்டு.தன்னை தாங்கும் தலை மகன் இருக்கும் வரை அவர்களின் எந்த குணமும் மற்றவர்களுக்கு தெரியாது.ஆனால் ஒரு கட்டத்தில் தன்னால் தான் குடும்பம் தலை நிமிர வேண்டும் என்ற நிலை வரும்போது அவர்கள் எடுக்கும் விஸ்வரூபம் மற்றவர்கள் பார்த்து பொறாமை படும் அளவுக்கும்,சில சமயம் பயப்படும் அளவுக்கும் இருக்கும்.
உங்களின் இந்த பதிவை வீட்டுக்காகவும், நாட்டுக்காகவும் உழைக்கும் அனைத்து பெண்களின் மரியாதையாக எடுத்து கொள்கிறேன்
ஆமாம் சுதா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மகளிர் அணிக்கு மரியாதை...
கொலவெறி wrote:
ஒரே ஒரு வினா? ஏன் பாதிக்கப் படும்போது தான் தாய்மை உயர்ந்தோங்க வேண்டும்?
அது ஏன் என்றால், ரொம்ப வேகமாய் வீசும் பந்து வேகமாக தாக்குவது போல அல்லது, இழுக்கப்படும் வேகத்துக்கு ஏற்ப ஆற்றல் பெறும் 'ரப்பர் பாண்ட்' போல பொறுத்து பொறுத்து , விரு கொண்டு எழும் போது அந்த வேகம் உங்களுக்கு விஸ்வரூபமாக தெரியும். காளி போல வணங்க தோன்றும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மகளிர் அணிக்கு மரியாதை...
krishnaamma wrote:அருமை அருமை ரா ரா மனம் ரொம்ப நெகிழ்ந்துவிட்டது
மிக்க நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மகளிர் அணிக்கு மரியாதை...
krishnaamma wrote:கொலவெறி wrote:
ஒரே ஒரு வினா? ஏன் பாதிக்கப் படும்போது தான் தாய்மை உயர்ந்தோங்க வேண்டும்?
அது ஏன் என்றால், ரொம்ப வேகமாய் வீசும் பந்து வேகமாக தாக்குவது போல அல்லது, இழுக்கப்படும் வேகத்துக்கு ஏற்ப ஆற்றல் பெறும் 'ரப்பர் பாண்ட்' போல பொறுத்து பொறுத்து , விரு கொண்டு எழும் போது அந்த வேகம் உங்களுக்கு விஸ்வரூபமாக தெரியும். காளி போல வணங்க தோன்றும்
சூப்பர் பதில் ...அசத்தல் கிருஷ்ணாம்மா அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மகளிர் அணிக்கு மரியாதை...
ரா.ரா3275 wrote:krishnaamma wrote:கொலவெறி wrote:
ஒரே ஒரு வினா? ஏன் பாதிக்கப் படும்போது தான் தாய்மை உயர்ந்தோங்க வேண்டும்?
அது ஏன் என்றால், ரொம்ப வேகமாய் வீசும் பந்து வேகமாக தாக்குவது போல அல்லது, இழுக்கப்படும் வேகத்துக்கு ஏற்ப ஆற்றல் பெறும் 'ரப்பர் பாண்ட்' போல பொறுத்து பொறுத்து , விரு கொண்டு எழும் போது அந்த வேகம் உங்களுக்கு விஸ்வரூபமாக தெரியும். காளி போல வணங்க தோன்றும்
சூப்பர் பதில் ...அசத்தல் கிருஷ்ணாம்மா அவர்களே...
நன்றி நண்பரே !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மகளிர் அணிக்கு மரியாதை...
krishnaamma wrote:பானுவின் பின்னூட்டம் ரொம்ப அற்புதம் , யதார்த்தம்
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் போட்டி தொடர்: இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாக நீடிக்கிறார் மித்தாலி
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» தடைசெய்யப்பட்ட மகளிர் குழு.. ( மகளிர் அணி மன்னிக்க..)
» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
» ஓ.பி.எஸ். அணிக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» தடைசெய்யப்பட்ட மகளிர் குழு.. ( மகளிர் அணி மன்னிக்க..)
» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
» ஓ.பி.எஸ். அணிக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|