ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ்

+2
யினியவன்
இரா.பகவதி
6 posters

Go down

ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Empty ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ்

Post by இரா.பகவதி Mon Mar 19, 2012 11:50 am

சென்னை : டெல்லியில் இருந்து கடந்த 15ம் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ், நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்தது. பயணிகள் இறங்கி சென்றதும், துப்புரவு பணியாளர்கள் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்தனர். இன்ஜினுக்கு அடுத்திருந்த முன்பதிவு இல்லாத சாதாரண 2ம் வகுப்பு பெட்டியில் துர்நாற்றம் வீசியது. ஒரு இருக்கையின் கீழ் இருந்த டிரங்க் பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதை பணியாளர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரயில்வே போலீசார் வந்து அந்த பெட்டியை கீழே இறக்கினர். பூட்டை உடைத்து பார்த்த போது, அதற்குள் கறுப்பு நிற பிளா ஸ்டிக் பேப்பரில் சுற்றப்பட்டு மூட்டை இருந்தது. அதை பிரித்து பார்த்த போது கை, கால்கள் கட்டப்பட்டு, தலையில்லாத ஆண் சடலம் இருந்தது. 30 முதல் 35க்குள் வயதுடைய ஆண் உடலில் டிரவுசர், பனியன் மட்டும் இருந்தது. ஒல்லியான உடல் வாகு உடையவராக காணப்பட்டார். அதிர்ச்சி அடைந்த போலீசார், தலையில்லா சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நேற்று முன்தினம் மாலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். சுமார் 12 மணி நேரத்துக்கு முன்பு தான் கொலை நடந்திருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். சென்னை மாநகர போலீசில் உள்ள அறிவியல் உதவியாளர்களும் உடலை ஆய்வு செய்தனர். சடலம் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டி, பிளாஸ்டிக் பேப்பர் மற்றும் சடலத்தின் உடல்களில் ஏதாவது ரேகைகள் உள்ளதாக என்பது பற்றி கைரேகை நிபுணர்கள் சோதனையிட்டனர். மேலும் சடலம் வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியின் சீட் முழுவதும் ரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் டெல்லி மெட்ரோ ரயில் ஒன்றில் தலையில்லா பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னைக்கு வந்த தலையில்லா ஆண் சடலத்துக்கும் டெல்லியில் கிடந்த பெண்ணின் சடலத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சென்னை ரயில்வே போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு சென்னை ரயில்வே போலீசார் தகவல் அனுப்பியுள்ளனர். சென்னைக்கு வந்த சடலத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை சில நாட்களில் கிடைத்து விடும்.

இதுகுறித்து ரயில்வே உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னைக்கு ரயிலில் வந்தவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்து, பின்னர் தலையை துண்டித்து இருக்கலாமா என்று சந்தேகப்படுகிறோம். வயிற்று பகுதி உள்ளே தள்ளப்பட்டது போல் உள்ளது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை எதுவும் சொல்ல முடியாது. டெல்லியில் தலையில்லாமல் கிடந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கலாம். அந்த பெண்ணின் கைகள் அறுக்கப்பட்டிருக்கின்றன. 2 கொலைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். எனவே தனிப்படை போலீசார் 3 நாட்களில் டெல்லி சென்று தீவிர விசாரணை நடத்த உள்ளனர்ÕÕ என்றார்.

34 ரயில் நிலையங்களில் உள்ள ரகசிய கேமராக்களில் சோதனை

டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை, மொத்தம் 34 ரயில் நிலையங்களில் ஜிடி எக்ஸ்பிரஸ் ரயில் நின்று வருகிறது. அந்த ரயில் நிலையங்களில் உள்ள போலீசுக்கு, தலையில்லாமல் வந்த ஆண் சடலம் பற்றி சென்னை ரயில்வே போலீசார் தகவல் அனுப்பி உள்ளனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்யும்படியும் கேட்டுள்ளனர்.

மேலும் டெல்லி ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் சோதனை செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து ஜிடி எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு பிளாட்பாரத்துக்கு வந்ததோ அந்த நேரத்தில் இருந்து ரயில் புறப்படும் வரை என்ன காட்சிகள் பதிவாகி இருக்கிறது என்பதை டெல்லி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமணி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Empty Re: ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ்

Post by யினியவன் Mon Mar 19, 2012 12:23 pm

என்ன கொடுமைடா சாமீ?

மம்தாம்மா அவங்க பழைய மத்திய ரயில்வே அமைச்சர பயண சீட்டு கட்டணத்தை உயர்த்தியதுனால அவர இப்படி பேக் பண்ணி அனுப்பி இருக்கப் போறாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Empty Re: ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ்

Post by ராஜா Mon Mar 19, 2012 12:39 pm

அதான் இந்தியாவில் 135 கோடி தலைகள் இருக்குதே , ஒண்ணு ரெண்டு தலையில்லாம இருந்தா என்ன குறைந்துட போகுதாம் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Empty Re: ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ்

Post by உமா Mon Mar 19, 2012 12:42 pm

இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ.
சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Empty Re: ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ்

Post by யினியவன் Mon Mar 19, 2012 1:43 pm

ராஜா wrote:அதான் இந்தியாவில் 135 கோடி தலைகள் இருக்குதே , ஒண்ணு ரெண்டு தலையில்லாம இருந்தா என்ன குறைந்துட போகுதாம் .
தலையில்லாமல் நானில்லை
தலையில்லாமல் எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தலை இருந்தது
இன்று அதை காணவில்லை ன்னு

வாத்தியார் மாதிரி பாடுச்சாம் ராஜா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Empty Re: ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ்

Post by ராஜா Mon Mar 19, 2012 1:51 pm

கொலவெறி wrote:தலையில்லாமல் நானில்லை
தலையில்லாமல் எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தலை இருந்தது
இன்று அதை காணவில்லை ன்னு
வாத்தியார் மாதிரி பாடுச்சாம் ராஜா.
தலை இருக்குதா இல்லியா என்பது முக்கியமில்லை கொலவெறி, தலை உள்ளே மூளை இருக்குதான்னு பார்க்கணும் இல்லன்னா என்னை போல ஆயிடும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Empty Re: ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ்

Post by யினியவன் Mon Mar 19, 2012 1:53 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:தலையில்லாமல் நானில்லை
தலையில்லாமல் எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தலை இருந்தது
இன்று அதை காணவில்லை ன்னு
வாத்தியார் மாதிரி பாடுச்சாம் ராஜா.
தலை இருக்குதா இல்லியா என்பது முக்கியமில்லை கொலவெறி, தலை உள்ளே மூளை இருக்குதான்னு பார்க்கணும் இல்லன்னா என்னை போல ஆயிடும்.
அட நா என்ன வேற க்ரூப்பு மாதிரி சொல்றீங்க?
நானும் உங்கள மாதிரி தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Empty Re: ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ்

Post by கேசவன் Mon Mar 19, 2012 2:07 pm

அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்யும்படியும் கேட்டுள்ளனர்.
கண்காணிப்பு காமிரா எந்த இலட்சணத்தில் வேலை செய்ததோ என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் 1357389ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் 59010615ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Images3ijfரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Empty Re: ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ்

Post by ஜாஹீதாபானு Mon Mar 19, 2012 2:30 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ் Empty Re: ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சனிக்கிழமை உலகிற்கு காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்..! வடகொரியாவால் வந்த வினை: அமெரிக்கா போர்க்கப்பல் விரைகிறது..!
» தற்கொலை செய்த இளைஞர் சடலம் புதைப்பு: போலீஸ் விசாரணை
» சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ; உடல் கருகி 50 பேர் பலி
» டி.டி.வி.தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்!
» கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum