புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_m10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_m10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_m10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_m10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_m10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_m10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_m10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_m10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_m10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_m10ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:20 am

கபடமில்லாமல் இருப்போம்


* புத்திசாலியான மகன் தந்தையை மகிழ்விக்கிறான். ஆனால், புத்தியில்லாத முட்டாளோ தாய்க்குப் பாரமாயிருக்கிறான்.

* பாம்புகளைப் போல விவேகமும், புறாக்களைப் போல கபடமில்லாமலும் இருங்கள்.

* கிழட்டு முட்டாள் ராஜாவாய் இருப் பதை விட, புத்திசாலியான ஏழைக் குழந்தையாய் இருப்பது சிறந்தது.

* அறிவில்லாத மனிதன் கவுரவம் உள்ளவனாய் இருந்தாலும், அழிந்து போகும் மிருகங்களுக்குச் சமமானவனாயிருக்கிறான்.

* விண்ணிலிருந்து வரும் அறிவானது முதலில் தூய்மையானது. பிறகு அமைதியானது. கண்ணியமானது. இணக்கமுள்ளது. நற்கனிகளும், கருணையும் நிறைந்தது. பாரபட்சமோ பாசாங்கோ அதற்கு இல்லை.

* ஒருவன் தன் நண்பர்களுக்காகத் தன் உயிரைக் கொடுப்பதை விடப் பெரும் அன்பு எவனிடத்திலும் இல்லை.

* பகைவரிடம் அன்பு காட்டுங்கள். உங்களைச் சபிப் பவரை வாழ்த்துங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.

* கண்ணீருடன் விதைப்பவர்கள் மகிழ்ச்சியுடன் அறுவடை செய்வர்.

* மனிதன் எதை விதைக்கிறானோ அதன் விளைச் சலையே அறுவடை செய்வான்.

- பைபிள் பொன்மொழிகள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:22 am

குழந்தைகளே! இதைப்படிங்க முதல்லே...!


ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Tblanmegamnews_78835260869


நாம் இந்த உலகில் செல்வச்செழிப்புடனும், புகழுடனும் நடமாட காரணமானவர்களே பெற்றோர் தான். சில பிள்ளைகள் பெற்றோர் சொல் கேளாமல், தாங்களே தறுதலைகளாக திரிந்துவிட்டு, இறுதியில் பெற்றோர் மீது பழி போடுவார்கள். பெற்றவர்கள் சம்பாதித்து தந்த காசை படிப்பதற்கு பயன்படுத்தாமல், பயனற்றதும், தீமை தருவதுமான பொழுதுபோக்குகளில் செலவிட்டு, பெற்றவர்களைப் பழிப்பதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? மேலும், சிலர் நன்றி மறந்து தங்களை ஆளாக்கிய பெற்றோருக்கு ஒரு வேளை கஞ்சி கூட தராமல் கொடுமை செய்வார்கள். பெற்றோரைக் கொடுமை செய்யும் பிள்ளைகள் குறித்து பத்திரிகைகளில் நிறையவே நாம் படிக்கிறோம்.


மத்திய அரசாங்கம் முதியோரின் நலன் கருதி, முதியோர் குறைதீர்ப்பு ஆணையம் ஒன்றை அமைத்து, கொடுமைக்கார பிள்ளைகளிடமிருந்து பெற்றவர்களைக் காப்பாற்றும் சட்டம் கொண்டு வருமளவுக்கு நிலைமை போய் விட்டது.


பெற்றோரைக் கொடுமை செய்யும் பிள்ளைகள், பைபிளைப் படித்திருந்தால் இப்படி செய்திருப் பார்களா?


உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக,'' என்பதும், உன்னைப் பெற்ற தகப்பனுக்கு செவிகொடு, உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே,'' என்பதும் பைபிள் வசனங்கள்.


பெற்றோரை மதிக்காமல் அகால மரணம் அடைவதை விட, அவர்களை மதித்து ஆயுளை அதிகரித்துக் கொள்வதுடன், ஆண்டவரின் ஆசிர்வாதத்தையும் பெறுவோம். நம் அன்புக்குழந்தைளுக்கு இந்த வசனங்களை கற்றுத்தந்து, இளமையிலேயே பெற்றோரைக் காப்பாற்றும் நல்லெண்ண விதையை ஊன்றுவோம்.

மூன்று முத்தான வசனங்கள்




* மூச்சு உள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக.




*வாலிபர்களே, கன்னி பெண்களே, கிழவர்களே, குழந்தைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.




* கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்கு திறக்கப்படும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:24 am

100 மார்க் வேண்டுமா?





ஒரு மனிதன் இறந்தவுடன் பரலோகத்துக்கு (சொர்க்கம்) சென்றான்.



வாசலில் தேவதூதன் தடுத்து நிறுத்தி, ""இதன் உள்ளே செல்ல உனக்கென்ன தகுதியிருக்கிறது என்பதை பத்து வாக்கியங்களில் சொல்லிவிட்டு போக வேண்டும். நீ சொல்வது எனக்கு திருப்தியாகி 100 மார்க் வாங்கினால் தான் உள்ளே அனுமதிப்பேன் ,'' என்றான்.


அந்த மனிதன், ""நான் ஞாயிறுதோறும் ஆலயம் போவேன்,'' என்றதும், தூதன் 2 மார்க் போட்டான்.



காணிக்கை கொடுப்பேன் என்றதும் 3 மார்க் கிடைத்தது. குழந்தைகளுக்கு இயேசுவைப் பற்றி கதைகள் சொல்வேன் என்றதும் 5 மார்க் கிடைத்தது. இப்படியே பதில் சொல்லியும் 20 மார்க்கை தாண்டவில்லை. ஒன்பதாவது பதில் முடிந்ததும், பயந்து போன அந்த மனிதன், ""ஐயா! இயேசு என் பாவத்தை ஏற்று ஏற்கனவே ரத்தம் சிந்திவிட்டார், எனவே நான் பாவமற்றவன். இந்த ஒரு தகுதியே நான் முழுமார்க் பெற தகுதியாகும்,'' என்றதும், சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன. ஆம்...இயேசுவை விசுவாசிக்க வேண்டும். அவரது கருத்துக்களை மதித்து வாழ வேண்டும். சமாதானம், கடவுள் மீதான விசுவாசம்..இன்னும் பைபிளில் சொல்லப் பட்டுள்ள நற்கருத்துக்களை மதித்து, பாவம் செய்யாமல் எவர் வாழ்கிறாரோ, அவர் பூமியில் நூற்றுக்கு நூறு மார்க் பெற்று, பரலோகத்தில் எளிதில் நுழைவார்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:25 am

நம்பிக்கை உங்களைக் காப்பாற்றும்நம்பிக்கை உங்களைக் காப்பாற்றும்



ஒரு குளத்தில் இரண்டு தவளைகள் வசித்தன. நண்பர்களான, அந்த தவளைகள் வித்தியாசமாக சிந்தனை செய்தபடியே இருந்தன. ஒருநாள் தன் நண்பனிடம் பேசிய இன்னொரு தவளை, "நண்பா! இந்தக்குளத்து வாழ்க்கை போரடித்து விட்டது. நாம் யார் வீட்டுக்குள்ளாவது புகுந்து, மனிதர்களைப் போல் வாழ்ந்து பார்ப்போமே," என்றது. நண்பன் தவளையும் ஒப்புக்கொண்டது. இரண்டும் குளத்தில் இருந்து வெளியேறி ஒரு வீட்டுக்குள் புகுந்து மறைந்து கொண்டன. அந்த வீட்டுத்தலைவி, பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பற்ற வைத்து விட்டு, வீட்டுக்குள் ஏதோ வேலை யாகப் போய்விட்டாள். வெள்ளை நிறத்தில் ஏதோ ஒரு திரவத்தைப் பார்த்த இரண்டு தவளைகளும், அதற்குள் குதித்து விளையாடுவோமே என குதித்து நீந்தின. சற்றுநேரத்தில் சூடு அதிகமாகவே இரண்டும் திணறின. ஒரு தவளை, "நண்பா! பயப்படாதே. கடவுள் இருக்கிறார். நம்மைக் காப்பாற்றுவார்," என்றது.



இன்னொரு தவளையோ பயத்தில் உளறியது, இந்த நிலையில் கடவுளால் கூட நம்மைக் காப்பாற்ற முடியாது என்ற பயத்திலேயே இறந்து விட்டது.

கடவுள் நம்பிக்கையுள்ள தவளை, பால் பொங்கும் சமயத்தில் மேலே எழும்பி வந்து, குதித்து சிறு காயத்துடன் தப்பி விட்டது.



பைபிளில், நம்பிக்கையைப் பற்றிய வசனங்கள் இருக்கின்றன.



* நாம் நடப்பது நம்பிக்கையினால் தான்; பார்வையால் அல்ல.



* உயிரற்ற உடல் செத்ததாயிருப்பது போலவே, நம்பிக்கையற்ற செயலும் செத்ததே.



* மனிதனிடம் அந்தரங்க நம்பிக்கை வைப்பதை விட, கர்த்தரிடம் நம்பிக்கை வைத்திருப்பதே நல்லது. ஆம்...நம்பிக்கையுடன், பயமின்றி வாழ்க்கையை நடத்தினால், ஆண்டவர் நம்முடன் துணை வருவார்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:27 am

தாயன்புக்கும் மேலான அன்பு


இங்கிலாந்து நாட்டில், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம் தாய் தன் பச்சிளம் குழந்தையுடன் தெற்குவேல்ஸ் மலையில் நடந்து கொண்டிருந்தாள். அப்போது, எதிர்பாராத விதமாக கடும் பனிப்புயல் அடித்தது. குளிர் தாளாமல் அந்தத்தாய் மரணமடைந்தாள். அவளது உடலைத் தேடி மீட்புக்குழுவினர் சென்றனர்.

ஓரிடத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்த இடத்தில் கிடந்த தாயின் சடலத்தை படையினர் புரட்டினர். சடலத்துக்கு கீழே சுற்றப்பட்ட ஒரு கோட் மற்றும் துணிக்குள் குழந்தை இருந்தது. குழந்தையை படையினர் மீட்டனர்.

கடும் குளிரால் தான் இறந்தாலும் பரவாயில்லை, தன் குழந்தை பிழைக்க வேண்டும் எனக்கருதிய அந்தத்தாய், தன் கோட்டைக் கழற்றி, குழந்தையின் உடலில் சுற்றியிருந்தாள். அதனால் குழந்தை பிழைத்தது. அந்தக் குழந்தை வேறு யாருமல்ல! 1916ம் ஆண்டில் இங்கிலாந்து பிரதமராக இருந்த டேவிட் லாயிட் ஜார்ஜ் தான்.

"ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ?" என்று பைபிள் சொல்கிறது.

தாயன்புக்கு ஈடு இணை இல்லை தான்!

ஆனால், தாயன்புக்கும் மேலானது கர்த்தருடைய அன்பு. இந்த உலகத்தில் ஒரு நல்லவன் காப்பாற்றப்பட வேண்டுமென்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த சிலர் இருக்கலாம். ஆனால், பாவிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக யாராவது உயிர் விடுவார்களா? அத்தகைய தியாகத்தைச் செய்தவர் இயேசுநாதர்.

"நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத்துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில், கிறிஸ்து நமக்கு மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணுகிறார்" என்ற வசனம் அவரது தியாகத்தை நிரூபிக்கிறது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:29 am

கடவுளுக்கு நன்றி சொல்வோம்

ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Tblanmegamnews_60557192565



ஒரு பங்களாவில், அதன் உரிமையாளரும் அவரது பேரக்குழந்தைகளும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்தப் பெரியவரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. "தாத்தா! குழம்பு காரமாக இருக்கிறதா?" என்று கேட்டனர் விபரம் தெரியாத குழந்தைகள்.


தாத்தா அவர்களிடம், "என் அன்பு செல்வங்களே! இந்த உணவு மிகவும் சுவையாக இருக்கிறது. ஒரு காலத்தில் எங்கள் ஓலை வீட்டில் எந்த வசதியும் கிடையாது. உடைந்த தட்டு இருந்தால் கூட அதிலாவது சாப்பிட்டிருக்கலாம். அது கூட இல்லாததால், சிமென்ட் தரையைக் கழுவி அதில் சாப்பாடு போடுவாள் அம்மா. நான் அதைச்சாப்பிடுவேன். ஆனால், இப்போது அவள் இல்லை. அவளது மகனான நான் இவ்வளவு பெரிய பங்களாவில், வெள்ளித்தட்டில் நெய்ச்சாதம் போட்டு, அதையும் இந்த விலை உயர்ந்த மேஜையின் மீது வைத்து சாப்பிடுகிறேன். இந்த வளர்ச்சிக்கு காரணம் யார் என்று எண்ணினேன். என் தாய், தந்தைக்கு செய்யாத கிருபையை கர்த்தர் எனக்கு செய்துள்ளார்.



என் இளவயது நிலையை நினைத்துப் பார்த்தேன். கண்கள் நன்றியை கண்ணீராக கொட்டுகின்றன," என்றார். அன்பு இதயங்களே! நம் பழைய நிலைமையை எக்காரணம் கொண்டும் மறந்து விடக்கூடாது. அதில் துளியளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும், அது கடவுளால் கிடைப்பது. அந்நேரத்தில் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்கக்கூடாது.


"நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது," என்கிறது பைபிள்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:30 am

வாழ்வின் பொருள் என்ன?




அமெரிக்க பேராசிரியரான ஹியூஜ் மூர்ஹெட் என்பவர், உலகத்தின் தலைசிறந்த அறிவாளிகள் 250 பேரைத் தேர்ந்தெடுத்து, "வாழ்வின் அர்த்தம் என்ன?' என்று ஒரு கேள்வி கேட்டார். அந்த அறிவு ஜீவிகள் ஆளுக்கொரு கருத்தைக் கூறினர். அவற்றைத் தொகுத்து அவர் ஒரு புத்தகம் வெளியிட்டார்.


வாழ்வைப் பற்றி அவர்கள் சொன்னது எல்லாமே வெறும் யூகங்களாகவும், தற்பெருமை கொண்டதாகவுமே அமைந்திருந்தன. ஒருவர் கூட "கடவுளின் சித்தப்படியே நமது வாழ்வு அமைந்திருக்கிறது' என சொல்லவில்லை.


மூர்ஹெட் வாழ்வைப் பற்றி எழுதும் போது, "சிருஷ்டிப்பின் நோக்கம் இறைவனுக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் நாம் தாயின் கருவில் உருவாகும் முன்பே தேவனுடைய சிந்தையில் இருந்தோம் என்பது உறுதியான விஷயம்,' என்று சொல்லியிருந்தார்.


""நான் உனக்கு போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்,'' என்று இயேசு சொன்னது பைபிளில் இருக்கிறது.


ஆம்...ஆண்டவரே நம்மை வழி நடத்த முடியும். "நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களே வாழ்க்கை, இதன் அர்த்தம் என்ன?' என்று யாராவது உங்களிடம் கேட்டால், "அது ஆண்டவனின் சித்தத்தைப் பொறுத்தது, அவர் எண்ணப்படியே எல்லாம் நடக்கும்' என பதில் சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:30 am

நன்றி தினமலர். ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் 678642

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 12, 2009 10:14 am

தளபதி இருக்கும் வரை இந்த ஈகையில் ஆன்மீக தகவலுக்கு பஞ்சம் இல்லை..... "தாமு" தொடருங்கள் உங்கள் அறிய பணியை.......... ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் 678642



ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Eegaraitkmkhan
ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் Logo12
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 11:04 am

ஆன்மிக தகவல்கள் » பைபிள் பொன்மொழிகள் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக