ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'காப்பியக் கவிஞர் வைரமுத்து

Go down

'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Empty 'காப்பியக் கவிஞர் வைரமுத்து

Post by dhilipdsp Fri Mar 16, 2012 12:06 am

• 40 ஆண்டுகளுக்கு முன்னால் கிராமத்தை விட்டுச் சென்னைக்கு வந்தாலும் இன்னும் மண் வாசனை மறக்காதவர். இப்போது ஊருக்குச் சென்றாலும் சாமைச் சோறு, வரகுச் சோறு காலையில் தயிரோடு உண்கிறார். வல்லாரையும் தூதுவளையும் கட்டாயம் இருந்தாக வேண்டிய கீரைகள்!
• மற்ற மொழிக் கவிஞர்களுக்கு இவர் மீது மதிப்பு அதிகம். 'ஆளவந்தான்' படப் பாடல்கள் ஊட்டியில் தயாரானபோது, அதன் ஹிந்திப் பதிப்புக்குப் பாட்டெழுத வந்த ஜாவேத் அக்தர், 'முதலில் வைரமுத்து பாட்டு எழுதட்டும். அவர் கற்பனையைக் கடன் வாங்கிப் பாட்டு எழுதுவது எனக்கு வசதியாக இருக்கும்' என்று சொல்லி வைரமுத்து எழுதும் வரை சீட்டாடிக்கொண்டு இருந்தாராம்!
• 'காப்பியக் கவிஞர்' என்று அந்த நாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இவரை அழைத்தாலும், 'கவிசாம்ராட்' என்று அந்நாள் பிரதமர் வாஜ்பாய் இவரை விளித்தாலும், கலைஞர் வழங்கிய கவிப்பேரரசு பட்டம்தான் நிலைத்துவிட்டது!
• கள்ளிக்காட்டு இதிகாசத்தின் 5 பிரதிகளை வாட்டர் ஃப்ரூப் செய்து வைகை அணை நீரில் வீசி எறிந்திருக்கிறார். நாளை அணையே தூர்ந்துபோனாலும், அந்த மண்ணின் ஆவணமாக அது இருக்குமாம்!
• கவிஞருக்கு மருத்துவத் துறையில் ஏராளமான நண்பர்கள் உண்டு. ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் யாருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலும், அவரே டாக்டர்களுக்கு போன் செய்து, அப்பாயின்மென்ட் வாங்கி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார். உணவு, மருத்துவம், கல்வி இதற்குச் செய்வதுதான் உதவி; மற்றது எல்லாம் ஆடம்பரம் என்பது கவிஞரின் கருத்து!
• 'கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் விளம்பரப் படங்களில் தோன்றுவது இல்லை. குரல் கொடுப்பது இல்லை' என்று கொள்கை வைத்திருக்கிறார்!
• பி.சுசீலா, சித்ரா இருவருக்கும் ரசிகர். பி.சுசீலாவின் சில பாடல்களை சித்ராவின் குரலில் பாடவைத்து, தனக்கென்று ஒரு தனி சி.டி. வைத்திருக்கிறார் இறுக்கமான மனசுக்கு இதமாக இருக்கிறதாம்!
• பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்தபோது வெளியிட்ட 'வைகறை மேகங்கள்' என்ற முதல் கவிதைத் தொகுதி, இவர் மாணவராக இருந்தபோதே ஒரு மகளிர் கல்லூரியில் பாடமாக இருக்கும் பெருமை பெற்றதாம். இப்போது விற்பனையாகிக்கொண்டு இருப் பது வைகறை மேகங்களின் 29-ம் பதிப்பு!
• எந்த ஊரில் இருந்தாலும் எந்த நாட்டில்இருந் தாலும் காலை 7 மணிக்குக் கலைஞரோடு பேசத் தவற மாட்டார். 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறதாம் இந்தத் தொலைபேசிக் காதல்!
• 8 மணி நேரம் எடுத்துக்கொண்டு இவர் எழுதிய பாடல்: 'சங்கீத ஜாதி முல்லை' (காதல் ஓவியம்) 8 நிமிடத்தில் எழுதி முடிக்கப்பட்ட பாடல்: 'எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோ!' (பாட்ஷா).
• கவிஞராக இருந்தாலும், இவர் ஒரு சிறுகதைப் பைத்தியம். ஓ ஹென்றி, மாப்பசான், ஆண்டன் செகாவ், மாக்சிம் கார்க்கி முதல் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, தஞ்சை பிரகாஷ் வரை உலக, உள்ளூர்ச் சிறுகதைகளைச் சேர்த்து வைத்திருக்கிறார்!
• '7 ஆயிரம் பாடல்கள், 34 புத்தகங்கள், மூன்று முறை உலகை வலம் வந்த அனுபவங்கள்... என்று இயங்கிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இளமை தீர்வதில்லை' என்பார்!
• தனக்குப் பரிசாகக் கிடைக்கும் தங்க நகைகளை ஒருபோதும் அணிந்துகொள்ள மாட்டார். உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, பணியாளர்களுக்கோ, திருமணத்துக்குக் காத்திருக்கும் பெண்களுக்கோ கொடுத்துவிடுவார். ஆனால், அண்ணாமலை, 'பாட்ஷா, முத்து, அருணாசலம் படங்களுக்கு ரஜினி தந்த தங்கச் சங்கிலிகளைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்!
• இரவு எவ்வளவு தாமதமாகத் தூங்கச் சென்றாலும், அதிகாலை 5 மணிக்கு எழுந்து நடைப் பயிற்சிக்குத் தயாராகிவிடுவார். இவரோடு யாரும் உடன் நடப்பதில்லை. நடந்தால் ஓட வேண்டி இருக்கும், அவ் வளவு வேகம்!
• கவிஞரின் ஆடைகள் சென்னையில் வெளுக்கப்படுவதில்லை. எல்லாத் துணிகளும் ஊருக்கு அனுப்பப்பட்டு சலவை செய்யப்பட்டு வருகின்றன. 20 ஜோடி போகும்; 20 ஜோடி திரும்பும். 'தண்ணீருக்கும் சலவைக்கும் சம்பந்தம் இருக்கிறது' என்பார்!
• கவிஞருக்கு மிகவும் பிடித்த உணவு: அம்மா அங்கம்மாள் வைக்கும் கோழிச் சாறும் குழைந்த சோறும்!
• கவிஞர் பேசினால் இளைய மகன் கபிலன் கேட்டுக்கொண்டே இருப்பார். ஆனால், மூத்த மகன் கார்க்கியைப் பேசவிட்டுக்கேட்டுக் கொண்டே இருப்பார்!
• மருத்துவமனையில் இருந்தும், சிறை யில் இருந்தும் வரும் கடிதங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் பதில் போடும் பழக்கம்கொண்டவர்!
• வாய்விட்டுச் சிரிப்பார்; சிரித்தால் பக்கத்து ஆளை அடிப்பார். அதனால் எல்லோரும் இரண்டு அடிகள் தள்ளியே உட்கார்வார்கள்!
• இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 5 முறை பெற்றவர். அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் மாநில விருதோடு சேர்த்து இரண்டு விருதுகளும் தலா 5 என்று சமன் செய்துவிட்டார்!
• 'அமெரிக்கன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்' இவரது கவிதைகளை, இவரது குரலில் ஒலிப்பதிவு செய்து, உலக இலக்கிய ஆவணங்களில் ஒன்றாக வாஷிங்டன் டி.சி-யில் பாதுகாத்து வருகிறது!
• கிராமத்து வரப்புகளில் நடக்கும்போது தொட்டாற்சிணுங்கிச் செடிகளைக் கண்டால் அப்படியே உட்கார்ந்துவிடுவார். தொட்டுத் தொட்டு அந்த இலைகள் அடங்கும் அழகை ரசிப்பார். சில நேரங்களில் மீண்டும் விரியுமா என்று காத்திருப்பதும் உண்டு!
• தான் மற்றவருக்குச் செய்ததை மறந்துவிடுவார். மற்றவர்கள் தனக்குச் செய்ததை மறக்கா மாட்டார். தன் வீட்டு வரவேற்பறையில் உள்ள ''ஏ.சி... ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிக் கொடுத்தது'' என்று பலபேருக்குச் சொல்லி இருக்கிறார்!
• கனடா நாட்டு அரசாங்கத்தோடு இணைந்து ஒரு தமிழ் அமைப்பு, இவர் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. இவரது அஞ்சல் தலை ஒட்டப்பட்டு இவருக்கு வந்த தபாலை இவரே பிரித்தார்!
• கவிஞரின் தோட்டத்துப் பண்ணை வீட்டில் இரண்டு உரல்கள் இருக்கின்றன. அவை தாய்வழி-தந்தைவழி தாத்தாக்களின் வீட்டில் இருந்தவையாம். வைகை அணைக்குள் மூழ்கிப்போன மெட்டூர், கரட்டுப்பட்டி இரண்டு ஊர்களில் இருந்தும் தோண்டி எடுத்து வரப்பட்டவை
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum