Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழங்கள் பற்றி அறியலாமா? - அன்னாசிப்பழம் !
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பழங்கள் பற்றி அறியலாமா? - அன்னாசிப்பழம் !
First topic message reminder :
பப்பாளி
பப்பாளி உலகின் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் ஏராளமாக வளர்கிறது. இந்தியா முழுவதும் பரவலாகத் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. பச்சையும், மஞ்சளும் கலந்த பப்பாளிப் பழங்களில் “என்ஸைம்” எனப்படும் நொதிகள் அடங்கியுள்ளன. இவை தோலிலுள்ள செல்களை மிருதுவாக்கி, அழுக்குகளையும் இறந்த செல்களையும் போக்கக் கூடியவை.
பழத்தின் மஞ்சள் நிற சதைப்பகுதியை எல்லாவித சருமத்தினரும், முகத்திற்கு மாஸ்க்காகப் போடலாம். மற்றைய பழங்களை விட பப்பாளியில் கரோட்டின், வைட்டமின் ‘ஏ’, ‘சி’ சத்துகள் நிறைந்துள்ளன. குறைந்த கலோரியில் நிறைந்த சத்துகளைக் கொடுக்கக்கூடிய எளிய மிகவும் மலிவான பப்பாளி எல்லாப் பருவத்திலும் கிடைக்கும் இனிய பழம் ஆகும்.
பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்னும் நொதிப் பொருள் ஜுரண சக்திக்கு ஏற்றது. கண்களின் கீழுள்ள கருவளையம் மற்றும் சருமத்தின் சுருக்கங்களை நீக்கும் (AHA) “ஆல்ஃபா ஹைடிராக்ஸி ஆஸிட்” எனப்படும் பழ ஆசிட் பப்பாளியில் இருப்பதால் இது சருமத்தை மிருதுவாக்கும்.
அஸ்கார்பிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, தயாமின், ரிபோபிளேவின் மற்றும் நயாசின் சத்துகள் அடங்கியுள்ளன. சோடியம் பொட்டாசியம் சத்துகளும், குறைந்த சர்க்கரை அளவும் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.
அழகு சாதனப் பொருட் தயாரிப்பிற்கும், தலை கழுவிகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. சருமத்தில் உள்ள மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும்.
பப்பாளி மரத்தின் உச்சியில் இலைகள் திரளாக இருக்கும். இது பனை ஒலை போன்று பரந்து அகன்று இருக்கும். பப்பாளி மரம் பூக்க ஐந்து ஆண்டுகளாகும். இதிலே ஆண்மரம், பெண்மரம் என உள்ளது. ஆண்மரம் பூத்தும் பலன் ஏதும் இல்லை. பெண் மரம் பூத்தால் தான் அது காயாகி கனியாகும். பழம் 7.5 முதல் 50 செ.மீ. நீளம் வரை இருக்கும். இதன் மேல் தோல் பருமனாக இருக்கும். உள்ளே பழச்சதை இறுகிய கூழ் போலிருக்கும். அதனுள் கறுப்பு நிறத்தில் சிறிய விதைகள் பொதிந்திருக்கும். சதைப்பகுதி இனிப்பாகவும், கஸ்தூரி மணத்துடனும் இருக்கும்.
பப்பாளி மரத்தின் இலை, காய், பழம், பால் எல்லாமே மருத்துவ பயன்கள் உடையது. உடல் பருமனைக் குறைக்கவும் தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது பப்பாளிக்காய்.
பப்பாளிப் பழத்திற்கு உடல்வலிமை, ஆண்மை தரும் சக்தி உண்டு. சொறி, சிரங்கு, காயம் ஆகியவற்றைப் போக்கிவிடும். கண்பார்வை கூர்மையடையவும், நீரடைப்பு குணமாகவும், இரத்தம் ஊறவும், பல் சம்பந்தமான கோளாறுகள் நீக்கவும் இது பயன்படுகிறது.
பப்பாளி இலையை கசக்கிச் சாறுபிழிந்து அதை தினமும் படர் தாமரையின் மேல் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவி வர படர்தாமரை குணமாகும்.
பப்பாளிக் காயால் உடலில் ஏற்படும் வாதவலி நீங்கும். இதை பாலூட்டும் தாய்மார்கள் சமைத்து உண்டுவர தாய்ப்பால் பெருகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு சிக்கல் தீரும். மேலும் வயிற்றிலுள்ள கிருமிகள் அழியும். பப்பாளிக்காயின் பாலை தேள்கொட்டிய இடத்தில் தேய்க்க விஷம் இறங்கும். இந்த பாலை நமைச்சல் உண்டாக்கும் படைகளுக்கு தடவிவர நமைச்சல் அடங்கி விரைவில் மறைந்து விடும்.
வாரம் இருமுறை பப்பாளிக் காயை சமைத்து உண்டு வர உடல் பருமன் குறைய வாய்ப்புள்ளது. இதை அதிகமாக வேக வைத்தால் வைட்டமின் ‘இ’ சத்து குறைந்து விடும்.
வைட்டமின் ‘ஏ’ என்ற உயிரிச்சத்து நிறைந்தது. உடலில் அதிக இரத்தத்தை உண்டு பண்ணும். மனித உடல் வளர்ச்சியடையவும், உடல் பலம் பெறவும், இரத்தத்தை விருத்தி செய்யும் நரம்புகளுக்கு உறுதியைக் கொடுக்கவும், கண்பார்வையைக் கூர்மைப்படுத்தவும், பற்களைப் கெட்டிப்படுத்தி ஈறுகளுக்கு பலத்தைக் கொடுக்கவும், பல் சம்பந்தமான நோய் வராமல் தடுக்கவும், அறிவை வளரச் செய்யவும், நல்ல ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் கூடிய அபார சக்தி வைட்டமின் ‘ஏ’ உயிரிச்சத்துக்குத்தான் உண்டு.
அடிக்கடி பப்பாளிப்பழம் சாப்பிட்டு வருபவர்கள் எந்தவகையான வியாதிக்கும் ஆளாக வேண்டி இருக்காது. தொற்று நோய் இவர்களைத் தாக்காது. பப்பாளிப் பழத்தில் இயற்கையாகவே விஷக் கிருமிகளைக் கொல்லும் ஒரு வகைச் சத்து நிறைந்திருப்பதால் பழங்களில் இப்பழம் மிகவும் நல்ல பழம். அளவுக்கதிகமான உடல் பருமனை உடையவர்கள், முற்றிய பப்பாளிக்காயைத் தோல் சீவி, பருப்புடன் கூட்டு வைத்தோ, பொரியல், சாம்பார் வைத்தோ வாரம் இருமுறை சாப்பிட்ட வந்தால், நாளா வட்டத்தில் உடல் பருமன் குறையும். இளைத்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.
பப்பாளி இலையை வெந்நீரில் போட்டெடுத்து நரம்புத் தளர்ச்சி, நரம்பு வலி முதலியவைகளுக்கு ஒற்றிடமிடலாம் அல்லது நெருப்பில் வாட்டி வைத்து கட்டலாம்.
பப்பாளி பாலுடன் வெங்காயமும் நீரும் சேர்த்துக் குழப்பி, வேர்க்குரு போன்ற தோலில் எழும்பும் குருவிற்குத் தடவ அவை விழுந்து விடும்.
பப்பாளி
பப்பாளி உலகின் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் ஏராளமாக வளர்கிறது. இந்தியா முழுவதும் பரவலாகத் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. பச்சையும், மஞ்சளும் கலந்த பப்பாளிப் பழங்களில் “என்ஸைம்” எனப்படும் நொதிகள் அடங்கியுள்ளன. இவை தோலிலுள்ள செல்களை மிருதுவாக்கி, அழுக்குகளையும் இறந்த செல்களையும் போக்கக் கூடியவை.
பழத்தின் மஞ்சள் நிற சதைப்பகுதியை எல்லாவித சருமத்தினரும், முகத்திற்கு மாஸ்க்காகப் போடலாம். மற்றைய பழங்களை விட பப்பாளியில் கரோட்டின், வைட்டமின் ‘ஏ’, ‘சி’ சத்துகள் நிறைந்துள்ளன. குறைந்த கலோரியில் நிறைந்த சத்துகளைக் கொடுக்கக்கூடிய எளிய மிகவும் மலிவான பப்பாளி எல்லாப் பருவத்திலும் கிடைக்கும் இனிய பழம் ஆகும்.
பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்னும் நொதிப் பொருள் ஜுரண சக்திக்கு ஏற்றது. கண்களின் கீழுள்ள கருவளையம் மற்றும் சருமத்தின் சுருக்கங்களை நீக்கும் (AHA) “ஆல்ஃபா ஹைடிராக்ஸி ஆஸிட்” எனப்படும் பழ ஆசிட் பப்பாளியில் இருப்பதால் இது சருமத்தை மிருதுவாக்கும்.
அஸ்கார்பிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, தயாமின், ரிபோபிளேவின் மற்றும் நயாசின் சத்துகள் அடங்கியுள்ளன. சோடியம் பொட்டாசியம் சத்துகளும், குறைந்த சர்க்கரை அளவும் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.
அழகு சாதனப் பொருட் தயாரிப்பிற்கும், தலை கழுவிகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. சருமத்தில் உள்ள மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும்.
பப்பாளி மரத்தின் உச்சியில் இலைகள் திரளாக இருக்கும். இது பனை ஒலை போன்று பரந்து அகன்று இருக்கும். பப்பாளி மரம் பூக்க ஐந்து ஆண்டுகளாகும். இதிலே ஆண்மரம், பெண்மரம் என உள்ளது. ஆண்மரம் பூத்தும் பலன் ஏதும் இல்லை. பெண் மரம் பூத்தால் தான் அது காயாகி கனியாகும். பழம் 7.5 முதல் 50 செ.மீ. நீளம் வரை இருக்கும். இதன் மேல் தோல் பருமனாக இருக்கும். உள்ளே பழச்சதை இறுகிய கூழ் போலிருக்கும். அதனுள் கறுப்பு நிறத்தில் சிறிய விதைகள் பொதிந்திருக்கும். சதைப்பகுதி இனிப்பாகவும், கஸ்தூரி மணத்துடனும் இருக்கும்.
பப்பாளி மரத்தின் இலை, காய், பழம், பால் எல்லாமே மருத்துவ பயன்கள் உடையது. உடல் பருமனைக் குறைக்கவும் தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது பப்பாளிக்காய்.
பப்பாளிப் பழத்திற்கு உடல்வலிமை, ஆண்மை தரும் சக்தி உண்டு. சொறி, சிரங்கு, காயம் ஆகியவற்றைப் போக்கிவிடும். கண்பார்வை கூர்மையடையவும், நீரடைப்பு குணமாகவும், இரத்தம் ஊறவும், பல் சம்பந்தமான கோளாறுகள் நீக்கவும் இது பயன்படுகிறது.
பப்பாளி இலையை கசக்கிச் சாறுபிழிந்து அதை தினமும் படர் தாமரையின் மேல் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவி வர படர்தாமரை குணமாகும்.
பப்பாளிக் காயால் உடலில் ஏற்படும் வாதவலி நீங்கும். இதை பாலூட்டும் தாய்மார்கள் சமைத்து உண்டுவர தாய்ப்பால் பெருகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு சிக்கல் தீரும். மேலும் வயிற்றிலுள்ள கிருமிகள் அழியும். பப்பாளிக்காயின் பாலை தேள்கொட்டிய இடத்தில் தேய்க்க விஷம் இறங்கும். இந்த பாலை நமைச்சல் உண்டாக்கும் படைகளுக்கு தடவிவர நமைச்சல் அடங்கி விரைவில் மறைந்து விடும்.
வாரம் இருமுறை பப்பாளிக் காயை சமைத்து உண்டு வர உடல் பருமன் குறைய வாய்ப்புள்ளது. இதை அதிகமாக வேக வைத்தால் வைட்டமின் ‘இ’ சத்து குறைந்து விடும்.
வைட்டமின் ‘ஏ’ என்ற உயிரிச்சத்து நிறைந்தது. உடலில் அதிக இரத்தத்தை உண்டு பண்ணும். மனித உடல் வளர்ச்சியடையவும், உடல் பலம் பெறவும், இரத்தத்தை விருத்தி செய்யும் நரம்புகளுக்கு உறுதியைக் கொடுக்கவும், கண்பார்வையைக் கூர்மைப்படுத்தவும், பற்களைப் கெட்டிப்படுத்தி ஈறுகளுக்கு பலத்தைக் கொடுக்கவும், பல் சம்பந்தமான நோய் வராமல் தடுக்கவும், அறிவை வளரச் செய்யவும், நல்ல ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் கூடிய அபார சக்தி வைட்டமின் ‘ஏ’ உயிரிச்சத்துக்குத்தான் உண்டு.
அடிக்கடி பப்பாளிப்பழம் சாப்பிட்டு வருபவர்கள் எந்தவகையான வியாதிக்கும் ஆளாக வேண்டி இருக்காது. தொற்று நோய் இவர்களைத் தாக்காது. பப்பாளிப் பழத்தில் இயற்கையாகவே விஷக் கிருமிகளைக் கொல்லும் ஒரு வகைச் சத்து நிறைந்திருப்பதால் பழங்களில் இப்பழம் மிகவும் நல்ல பழம். அளவுக்கதிகமான உடல் பருமனை உடையவர்கள், முற்றிய பப்பாளிக்காயைத் தோல் சீவி, பருப்புடன் கூட்டு வைத்தோ, பொரியல், சாம்பார் வைத்தோ வாரம் இருமுறை சாப்பிட்ட வந்தால், நாளா வட்டத்தில் உடல் பருமன் குறையும். இளைத்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.
பப்பாளி இலையை வெந்நீரில் போட்டெடுத்து நரம்புத் தளர்ச்சி, நரம்பு வலி முதலியவைகளுக்கு ஒற்றிடமிடலாம் அல்லது நெருப்பில் வாட்டி வைத்து கட்டலாம்.
பப்பாளி பாலுடன் வெங்காயமும் நீரும் சேர்த்துக் குழப்பி, வேர்க்குரு போன்ற தோலில் எழும்பும் குருவிற்குத் தடவ அவை விழுந்து விடும்.
Last edited by krishnaamma on Sat Mar 19, 2022 10:44 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழங்கள் பற்றி அறியலாமா?
திராட்சை:
திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இனிப்பு மற்றும் சுவைமிகுந்தது திராட்சை. கருப்பு, வயலட், பச்சை கலர்களில் கிடைக்கிறது. இதன் இனிப்பு உடனடியாக இரத்தத்தில் கலக்கும் சிறப்பை பெற்றது. நோயாளிகளுக்கு ஆரஞ்சுக்கு அடுத்தபடியாக திராட்சை அருமையான உணவு.
திராட்சைச்சாறு தினமும் சாப்பிட மலச்சிக்கல் விலகும். முகம் அழகு பெறும். மூலவியாதி, மூலச்சூடு குறையும். கண் பார்வைத் தெளிவடையும். குடல் புண் விலகும். இரத்தம் சுத்தமடையும். வயிற்றுவலி, வயிற்று உளைச்சல் சரியாகும். உடல் பருமனாக உள்ளவர்கள் தினமும் திராட்சைச் சாறு சாப்பிடுவது நல்லது. திராட்சைச் சாறு மட்டும் சாப்பிட்டுவர பல வியாதிகளைக் குணப்படுத்தும். இயற்கைச் சாறுகளில் திராட்சைச்சாறு மிகவும் அவசியமானது.
அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!".
திராட்சைப் பழம் முகச்சுருக்கத்தைப் போக்கும். திராட்சைப் பழத்தை நன்கு அரைத்து கூல் போல மாற்றவும். இதன் முகம், கழுத்து பகுதிகளில் பூசி ஊறவைக்கவும். நன்கு உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனால் முகம் புத்துணர்ச்சியாகும். சுருக்கம் ஏற்படாது.
திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இனிப்பு மற்றும் சுவைமிகுந்தது திராட்சை. கருப்பு, வயலட், பச்சை கலர்களில் கிடைக்கிறது. இதன் இனிப்பு உடனடியாக இரத்தத்தில் கலக்கும் சிறப்பை பெற்றது. நோயாளிகளுக்கு ஆரஞ்சுக்கு அடுத்தபடியாக திராட்சை அருமையான உணவு.
திராட்சைச்சாறு தினமும் சாப்பிட மலச்சிக்கல் விலகும். முகம் அழகு பெறும். மூலவியாதி, மூலச்சூடு குறையும். கண் பார்வைத் தெளிவடையும். குடல் புண் விலகும். இரத்தம் சுத்தமடையும். வயிற்றுவலி, வயிற்று உளைச்சல் சரியாகும். உடல் பருமனாக உள்ளவர்கள் தினமும் திராட்சைச் சாறு சாப்பிடுவது நல்லது. திராட்சைச் சாறு மட்டும் சாப்பிட்டுவர பல வியாதிகளைக் குணப்படுத்தும். இயற்கைச் சாறுகளில் திராட்சைச்சாறு மிகவும் அவசியமானது.
அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!".
திராட்சைப் பழம் முகச்சுருக்கத்தைப் போக்கும். திராட்சைப் பழத்தை நன்கு அரைத்து கூல் போல மாற்றவும். இதன் முகம், கழுத்து பகுதிகளில் பூசி ஊறவைக்கவும். நன்கு உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனால் முகம் புத்துணர்ச்சியாகும். சுருக்கம் ஏற்படாது.
Last edited by krishnaamma on Thu Dec 12, 2013 2:57 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழங்கள் பற்றி அறியலாமா? - அன்னாசிப்பழம் !
ஏன் ஒவ்வொரு பதிவுக்கும் தலைப்பை மாற்றுகிறீர்கள் ...
பப்பாளி , ஆப்பிள் போன்றவைகளுக்கு நான் வைத்துள்ளது போல அந்தந்த பாராவுக்கு மட்டும் Bold ஆக தலைப்பை வைத்தால் , படிப்பவர்களுக்கு குழப்பமில்லாமல் இருக்கும்
பப்பாளி , ஆப்பிள் போன்றவைகளுக்கு நான் வைத்துள்ளது போல அந்தந்த பாராவுக்கு மட்டும் Bold ஆக தலைப்பை வைத்தால் , படிப்பவர்களுக்கு குழப்பமில்லாமல் இருக்கும்
Re: பழங்கள் பற்றி அறியலாமா? - அன்னாசிப்பழம் !
மேற்கோள் செய்த பதிவு: 1037958ராஜா wrote:ஏன் ஒவ்வொரு பதிவுக்கும் தலைப்பை மாற்றுகிறீர்கள் ...
பப்பாளி , ஆப்பிள் போன்றவைகளுக்கு நான் வைத்துள்ளது போல அந்தந்த பாராவுக்கு மட்டும் Bold ஆக தலைப்பை வைத்தால் , படிப்பவர்களுக்கு குழப்பமில்லாமல் இருக்கும்
அப்படித்தானே வைத்திருக்கேன் ராஜா ! தலைப்பு பொதுவாக பழங்கள் பற்றி அறியலாமா? தானே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழங்கள் பற்றி அறியலாமா? - அன்னாசிப்பழம் !
மேற்கோள் செய்த பதிவு: 1037963அது நேற்று நான் மாற்றினேன் ஒவ்வொரு பதிவுக்கும்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037958ராஜா wrote:ஏன் ஒவ்வொரு பதிவுக்கும் தலைப்பை மாற்றுகிறீர்கள் ...
பப்பாளி , ஆப்பிள் போன்றவைகளுக்கு நான் வைத்துள்ளது போல அந்தந்த பாராவுக்கு மட்டும் Bold ஆக தலைப்பை வைத்தால் , படிப்பவர்களுக்கு குழப்பமில்லாமல் இருக்கும்
அப்படித்தானே வைத்திருக்கேன் ராஜா ! தலைப்பு பொதுவாக பழங்கள் பற்றி அறியலாமா? தானே?
Re: பழங்கள் பற்றி அறியலாமா? - அன்னாசிப்பழம் !
மேற்கோள் செய்த பதிவு: 1037965ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037963அது நேற்று நான் மாற்றினேன் ஒவ்வொரு பதிவுக்கும்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037958ராஜா wrote:ஏன் ஒவ்வொரு பதிவுக்கும் தலைப்பை மாற்றுகிறீர்கள் ...
பப்பாளி , ஆப்பிள் போன்றவைகளுக்கு நான் வைத்துள்ளது போல அந்தந்த பாராவுக்கு மட்டும் Bold ஆக தலைப்பை வைத்தால் , படிப்பவர்களுக்கு குழப்பமில்லாமல் இருக்கும்
அப்படித்தானே வைத்திருக்கேன் ராஜா ! தலைப்பு பொதுவாக பழங்கள் பற்றி அறியலாமா? தானே?
ஒ........நன்றி ராஜா சரி இப்போ , பொது தலைப்பு எல்லா பதிவுகளிலும் வரணும் +பழங்கள் பேர் வரணும் என்று சொல்லறிங்களா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழங்கள் பற்றி அறியலாமா? - அன்னாசிப்பழம் !
இப்போ மாற்றிவிட்டேன் மேலும் நான் புது ரெசிப் அல்லது படம் போடும்போது பொது தலைப்புடன் அப்போது போட்டதையும் சேர்த்து போடுவேன் அது ஓகே வா? இப்போ போட்டது போல
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழங்கள் பற்றி அறியலாமா? - அன்னாசிப்பழம் !
சூப்பர் இதுக்கு தான் சொன்னேன் இதை பார்த்தால் உங்களுக்கு தலைப்பும் , கன்டென்ட்டும் சரியா இருக்கிறமாதிரி தெரியுதா
Re: பழங்கள் பற்றி அறியலாமா? - அன்னாசிப்பழம் !
தகலுக்கு நன்றி..
பழங்கள் உடலுக்கு தேவையான எல்லா விட்டமின்களையும் கொண்டுள்ளது.,..அந்தந்த சீசனுக்கு வரும் பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும்....
பழங்கள் உடலுக்கு தேவையான எல்லா விட்டமின்களையும் கொண்டுள்ளது.,..அந்தந்த சீசனுக்கு வரும் பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஏன் என்று அறியலாமா?
» தொப்பை குறைக்க உதவும் அன்னாசிப்பழம் பற்றிய தகவல் !!!
» செக்ஸ் சந்தேகங்கள்
» கட்சித் தலைவர்களைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் சொன்ன கருத்து - கலைஞரைப் பற்றி - சூப்பர்
» சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !
» தொப்பை குறைக்க உதவும் அன்னாசிப்பழம் பற்றிய தகவல் !!!
» செக்ஸ் சந்தேகங்கள்
» கட்சித் தலைவர்களைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் சொன்ன கருத்து - கலைஞரைப் பற்றி - சூப்பர்
» சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|