ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)

5 posters

Go down

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Empty எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)

Post by priyamudanprabu Wed Mar 14, 2012 8:45 am

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)
செருப்பைப் போட்டுக்கொண்டு வாசல் தாண்டி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நாம் எதிர்பார்ப்பதை விட காலம் வெகு வேகமாகத்தான் சென்றுவிடுகிறது, 2 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்திருப்பதால், ஊருக்குள் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. பாவாடை சட்டையோடு வீட்டு வெளித்திண்ணையில் பல்லாங்குழி விளையாடிய பெண்கள் தாவணி பாவாடையோடு ஓரக்கண்ணில் பார்ப்பது போல இருந்தது எங்க ஊர் எனக்கு.

காமாட்சி அம்மன் கோவில் தெரு தாண்டி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் நுழைந்ததுமே "வா மாப்ள எப்ப வந்த..?" என்ற குரல் சற்றே துரத்தில் இருந்து வந்தது . குரல் வைத்தே அது கதிர் மாமாதான் என என்னால் யூகிக்க முடிந்தது, துரத்தில் இருந்து என்னை அடையாளம் கண்டு கூப்பிடுகிறார் .

கதிர் மாமா என்றதும் அவரின் சிரித்த முகமே எல்லோருக்கும் நினைவில் வரும், நான் கூட நினைப்பதுண்டு "எப்படித்தான் எந்த நேரமும் சிரித்த முகமாக இருக்க முடிகிறது" என்று, அதற்கு என் அம்மா சொல்வார் "அது சாமி கொடுத்த வரம்டா..." என்று


அவரை அருகில் சென்று பார்த்ததும் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான், அவர் சிரித்தபடி இருந்தாலும் முகத்தில் அந்த இயல்பான சிரிப்பு இல்லை.

"என்ன மாமா ,உடம்பு சரியில்லையா ..முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு?.."


"அட அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா , வயசாகிடுச்சுல்ல.." என்று சொல்லி சிரித்தவர்
"காலைலதான் வந்தியா .. அப்பா சொன்னாரு.." -என்று பேசிக்கொண்டே சட்டைப்பையில் இருந்த சாவியை எடுத்து வீட்டுக்கதவை திறந்து உள்ளே அழைத்தார்.

சிறிய ஓட்டில்வீடுதான்.தன் சாப்பாட்டு தூக்குபோணியை கழுவும் இடத்தில் வைத்துவிட்டு வந்தவர்

"காப்பி சாப்பிடுறியா மாப்ள .." என்றார்
"இல்ல மாமா வேணாம்"
" அட நான் நல்லத்தான் காப்பி போடுவேன் பயப்படாத" என்று சொல்லிவிட்டு சமையல்கட்டு பக்கம் சென்றார்.

ரொம்ப நாள் ஆச்சு இந்த வீட்டுக்குள் வந்து. சுற்றிலும் பார்த்தேன் துவைக்காத துணிகள் கட்டிலின் மேல் களைந்து கிடந்தன. ஒட்டடை அடிக்காமல் வேறு இருந்தது. சுவற்றில் மாமாவின் பையனும் பொண்ணும் பள்ளி சீருடையில் இருக்கும் படமும் அதன் அருகில் மாமா மட்டும் இருக்கும் அவரின் இளமைகால படமும் தொங்கியபடி இருந்தது. முன்பு அங்கே அவரின் திருமண புகைப்படம் இருந்ததாக நினைவு எங்கே அது இப்போது ? மாமாவிடம் கேட்கலாம் என நினைத்தபோது, பள்ளி விட்டு குழந்தைகள் இருவரும் விட்டுக்குள் வந்தார்கள்.
பெரியவன் "ஐ மாமா.." என்றபடி என்னை வந்து கட்டிக்கொண்டான்..சின்னவள் சோர்வாக தூக்க கலக்கத்தில் இருந்தாள்.எல்லோருக்கும் காப்பி கொண்டுவந்து கொடுத்தார் மாமா.

"சிக்கிரம் ட்ரஸ் மாத்திகிட்டு டியூஷன் -க்கு புறப்படுங்க " என்று குழந்தைகளிடம் சொல்லிக்கொண்டிருந்த மாமாவை வெளியில் யாரோ அழைக்க அவரும் சென்றுவிட்டார். நான் குழந்தைகளோடு பேசிக்கொண்டு இருந்தேன்..பேச்சுவாக்கில் "எங்க பாப்பா உங்க அம்மா " என்று கேட்டேன்,அவளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை,அப்போது பையன் சொன்னான் "ம்ம்ம் ஏங்க அம்மா செத்துப் போச்சு.." என்று.அப்போது அவன் முகம் வித்தியாசமாக இருந்தது.பின் இயல்பாக அவன் ஆடைகளை மாற்றிக்கொண்டு தயாரானான்.

மாமா வந்ததும் அவர்களிடம் விடைபெற்றுkகொண்டு என் வீட்டுக்கு வந்தேன். முன்வாசலில் காய்கறி வெட்டிக்கொண்டிருந்த அம்மா என்னை பார்த்ததும்
"காப்பி போடட்டுமாப்பா.. " - என்றார் .

"இல்லம்மா இப்பத்தான் கதிர்மாமா வீட்டுல சாப்பிட்டேன் "

"ஓ அங்க போயிருந்தியாப்பா.. அவன பாத்தியா.." என்று கேட்டவர் என் பதிலுக்கு காத்திருக்காமல் தொடர்ந்தார் "ம்ம்ம் என்னமோ அவன் வாழ்க்கை இப்படி ஆச்சு ..அவனா ஆச பட்டுத்தான் அவள கட்டிகிட்டான் ,நல்லாத்தானே இருந்தா ..இப்படி பண்ணுவான்னு யாரு கண்டா !ரெண்டு புள்ளைய பெத்தவ, கூட வேல செய்யுற மேஸ்திரிய கூட்டிகிட்டு ஓடிட்டா ,என்ன திமிரு அவளுக்கு, அந்த ****பயலுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு புள்ள இருக்கு, ரெண்டுக்கும் புத்தி போயிருக்கு பாரு..ம்ம்ம் உன்கிட்ட சொல்ல வேணாமுன்னு உங்க அப்பா சொன்னாரு அதனாலத்தான் போன்ல எதுவும் சொல்லல." என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் சென்றார். எனக்கு ஏனோ அந்த பையனின் கண்ணும் "எங்க அம்மா செத்துப் போச்சு.." என்ற வார்த்தையும் எனக்கு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது..

**
http://priyamudan-prabu.blogspot.com/2012/03/blog-post.html

என்றென்றும்
பிரியமுடன் பிரபு ..
.



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Empty Re: எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)

Post by உதயசுதா Wed Mar 14, 2012 10:13 am

அந்த பையன் சொன்னது சரிதானே. தன் பிள்ளைகளை பற்றி எண்ணி பார்க்காமல் ஓடி போனவள் செத்து போனதுக்கு சமம்தான்.

நல்ல கதை பிரபு.வாழ்த்துகள்


எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Uஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Dஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Aஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Yஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Aஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Sஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Uஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Dஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Hஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Empty Re: எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)

Post by ரா.ரா3275 Wed Mar 14, 2012 10:54 am

எனக்கு ஏனோ அந்த பையனின் கண்ணும் "எங்க அம்மா செத்துப் போச்சு.." என்ற வார்த்தையும் எனக்கு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது..

சோகம் கதையே இங்குதான் தொடங்குகிறது என்பது என் கருத்து...
ஒரு நல்ல குறும்படத்திற்கான கனம் இருக்கிறது கதையில்...
வாழ்த்துகள்...


எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  224747944

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Rஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Aஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Emptyஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Rஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Empty Re: எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)

Post by இரா.பகவதி Wed Mar 14, 2012 12:23 pm

சோகம் சோகம்
கதையே இங்குதான் தொடங்குகிறது என்பது என் கருத்து...
ஒரு நல்ல குறும்படத்திற்கான கனம் இருக்கிறது கதையில்...
வாழ்த்துகள்...
இதுதான் இயக்குனர் பார்வையா ரா அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Empty Re: எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)

Post by ஹர்ஷித் Wed Mar 14, 2012 12:43 pm

மனதை ஏதோ செய்கிறது இக்கதை!!! மகிழ்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Empty Re: எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum