Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிழவியுடனும் கிளியுடனும்-2
+3
யினியவன்
இரா.பகவதி
ரா.ரா3275
7 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
கிழவியுடனும் கிளியுடனும்-2
சூரிய வெளிச்சம்
இலைக் கிழிசல்களாய்
என் வீட்டையும் தைத்தது
இப்படிச் சூரியன் வந்து துயிலெழுப்பும்
சொர்க்கச் சூத்திரம் யாருக்கு வாய்க்கும்
என்னைப்போல?
கனவில்
கிளியின் றெக்கைப் படபடப்பைவிட
கிழவியின் நேசமே
நெஞ்சக்கூட்டிலும் இலைப்பரப்பி-கிளைப்பரப்பி
என்னை இன்னும் ஈரமாக்கியது
வாழ்க்கைச் சுருக்கத்தை
வயசும் முகமும் வாசித்தாலும்
சலவை செய்யப்பட்ட-சுருக்கமற்ற
மனசுக்குச் சொந்தக்காரி அந்தக் கிழவி
எழுந்தும் கூட நினைவின் இடுக்குகளிலும்
நேர்க்கோட்டுச் சித்திரமாய்க் கிழவியே
கிளிகளின் கானம்
செவிகளைத் திருடும் யதார்த்தமது-
வாலிப வானத்தின் வசந்த மின்னல்!
ஆனால் அன்பானவர்களே
கிழவிகளின் பாசம் சிலவேளைகளில்
கிழக்கையே சிருஷ்டித்துவிட்டுப் போகும்
நமக்குள்
அந்தக் கிழட்டுக் கிழக்கில்
பேரன்புச் சூரியனே வெளிச்சிக்கும் எப்போதும்
நித்தியமாய்-சத்தியமாய்
தாயைப் பெற்றக் கிழவியும்
தந்தையைப் பெற்றக் கிழவியும்
தாய்க்கிழவிகள் என்பதைவிட
மூத்தத் தாய்மையின் முகவரிகள் என்பேன்
அப்படித்தான் இந்த மூத்தத் தாய்மை
பேருந்தில் எனக்காக என் அப்பனைப் பெற்ற
அழகுக் கிழவி (ஆனதும்)
அவளின் அந்தச் சடுதி நேர அன்பைச் சொல்ல
என்னிடம் இல்லை தமிழ்க் கிளவி
கால்களில் காற்றின் வேகம்
கண்களில் கிழவியும் கிளியும் மாறி மாறி
பேருந்து நிறுத்தம் நெருங்க நெருங்க
பேரன்புக் கிழவிப் புள்ளியாய்த் தெரிந்தாள்
கூடுதலன்புக்காரியான அந்தக் கிழவிக்
கூடைக் கீரை சுமந்தபடி
பாசச் சிரிப்பு
உதடுகளைத் தாண்டியும்
பற்களில் பகடை ஆடியது இருவருக்கும்
இறக்க உதவலாமே கூடையை என்றே
எத்தனித்தால்
இறுமாப்புடன் மறுத்தாள் அன்புக் கிழவி
"இன்னைலேருந்து ஒன் ஆகாசத்துல
இனிப்பு மழதான் ராசா"...
என்று ஆருடம் சொல்ல
"என்ன பாட்டி சொல்றீங்க?"
-கேட்டேன்
“பஸ்ஸு வரட்டும்...
உனக்குள்ள பட்டாசு வெடிப்பா அந்தச் சிறுக்கி"
என்று எனக்குள் ஒரு பூகம்ப வெடியைப்
பொசுக்கென்று வீசினாள் கிழவி
பேசிக்கொண்டிருக்கையிலேயே
பேருந்தின் சக்கரங்கள் இறுக்கிச் சறுக்கிக்
'கிரீச்'சிட்டன
அண்ணாந்து பார்த்தால்
அத்துணைப் பெரிய ஆகாயத்தில்
மொத்தமாய் ஓர் வானவில்
----------தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்-----------
Last edited by ரா.ரா3275 on Mon Mar 12, 2012 11:25 pm; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கிழவியுடனும் கிளியுடனும்-2
அண்ணா ரொம்ப அருமையா இருக்கு அண்ணா ,அண்ணா நான் கவிதை எழுத ட்ரை பண்ணி இருக்கேன் ரெண்டு வரிக்குமேல் இதுவரை வந்ததில்லை உண்மைலேயே நீங்க க்ரேட்
இந்த மாதிரி பாட்டிகளை நான் பார்த்துள்ளேன் அண்ணாஇறக்க உதவலாமே கூடையை என்றே
எத்தனித்தால்
இறுமாப்புடன் மறுத்தாள் அன்புக் கிழவி
Re: கிழவியுடனும் கிளியுடனும்-2
இரா.பகவதி wrote:அண்ணா ரொம்ப அருமையா இருக்கு அண்ணா ,அண்ணா நான் கவிதை எழுத ட்ரை பண்ணி இருக்கேன் ரெண்டு வரிக்குமேல் இதுவரை வந்ததில்லை உண்மைலேயே நீங்க க்ரேட்இந்த மாதிரி பாட்டிகளை நான் பார்த்துள்ளேன் அண்ணாஇறக்க உதவலாமே கூடையை என்றே
எத்தனித்தால்
இறுமாப்புடன் மறுத்தாள் அன்புக் கிழவி
என்னைப் பொறுத்தவரை பாட்டிகளும் அழகுதான் பாசத்தில்...
நன்றி பகவதி...
எழுத்து யாருக்கும் வரும்...எனவே இதில் யாரும் 'கிரேட்'டும் இல்லை...
எந்தக் 'கிரேடு'ம் இல்லை...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கிழவியுடனும் கிளியுடனும்-2
நான் ட்ரை பண்ட்ரென் வரமாடுக்குதேஎழுத்து யாருக்கும் வரும்...எனவே இதில் யாரும் 'கிரேட்'டும் இல்லை...
எந்தக் 'கிரேடு'ம் இல்லை...
Re: கிழவியுடனும் கிளியுடனும்-2
இரா.பகவதி wrote:நான் ட்ரை பண்ட்ரென் வரமாடுக்குதேஎழுத்து யாருக்கும் வரும்...எனவே இதில் யாரும் 'கிரேட்'டும் இல்லை...
எந்தக் 'கிரேடு'ம் இல்லை...
வராமல் எங்கே போகும்...
தமிழ் தன் கதவுகளை எல்லோருக்கும் திறக்கும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கிழவியுடனும் கிளியுடனும்-2
“பஸ்ஸு வரட்டும்...
உனக்குள்ள பட்டாசு வெடிப்பா அந்தச் சிரிக்கி"
என்ன ஒரு யதார்த்தமான கிராமீய மனம் வீசும்
வெள்ள மனசு வெள்ளந்தி வார்த்தை.
கிராமீயமும், யதார்த்தமும் அழகிய கவிதையாகி
எங்களுக்கு இனிய பதார்த்தமானது ராரா.
நிறைய பசிக்குது நிறைய நிறைய மனம் நிறைய
நிறைய பதார்த்தம் வேணும் நித்தம் நித்தம்.
உனக்குள்ள பட்டாசு வெடிப்பா அந்தச் சிரிக்கி"
என்ன ஒரு யதார்த்தமான கிராமீய மனம் வீசும்
வெள்ள மனசு வெள்ளந்தி வார்த்தை.
கிராமீயமும், யதார்த்தமும் அழகிய கவிதையாகி
எங்களுக்கு இனிய பதார்த்தமானது ராரா.
நிறைய பசிக்குது நிறைய நிறைய மனம் நிறைய
நிறைய பதார்த்தம் வேணும் நித்தம் நித்தம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிழவியுடனும் கிளியுடனும்-2
கொலவெறி wrote:“பஸ்ஸு வரட்டும்...
உனக்குள்ள பட்டாசு வெடிப்பா அந்தச் சிரிக்கி"
என்ன ஒரு யதார்த்தமான கிராமீய மனம் வீசும்
வெள்ள மனசு வெள்ளந்தி வார்த்தை.
கிராமீயமும், யதார்த்தமும் அழகிய கவிதையாகி
எங்களுக்கு இனிய பதார்த்தமானது ராரா.
நிறைய பசிக்குது நிறைய நிறைய மனம் நிறைய
நிறைய பதார்த்தம் வேணும் நித்தம் நித்தம்.
நன்றிகள் நண்பரே...
நான் கிராமத்தான் என்று உரக்கக் கூவி உலகுக்குச் சொல்வதில்
ஓர் ஆனந்தம்-பேரானந்தம் எனக்கு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கிழவியுடனும் கிளியுடனும்-2
இரா.பகவதி wrote:சீருக்கி என்பதன் சரியான பொருள் என்ன ராஜசேகர் அண்ணா
சிரிக்கி என்று திட்டவும் கொஞ்சவும் பயன்படுத்தும் ஒரு சொல் என்பது மட்டுமே என்று தெரியும்...
தமிழறிஞர் பெருமக்கள் தெரிந்தால் அர்த்தம் சொல்லுங்கள்...
அனைவருக்கும் உதவும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கிழவியுடனும் கிளியுடனும்-1
» கிழவியுடனும் கிளியுடனும்-3
» கிழவியுடனும் கிளியுடனும் -4
» கிழவியுடனும் கிளியுடனும்-5
» கிழவியுடனும் கிளியுடனும்-3
» கிழவியுடனும் கிளியுடனும் -4
» கிழவியுடனும் கிளியுடனும்-5
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|