Latest topics
» கேலிகளை கேலி செய்த அர்னால்டுby ayyasamy ram Today at 7:18 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm
» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm
» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm
» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm
» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Rutu | ||||
raajmithun |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலை தீபாவளி
2 posters
Page 1 of 1
தலை தீபாவளி
புள்ளைக
கொண்டாடுவதற்காக
அப்பன் ஆத்தா
கெடந்து திண்டாடுறத
பார்த்ததால என்னமோ...
'தீபாவளி'ன்னாலே
சின்ன வயசிலிருந்தே
எனக்குப் புடிக்காது...
பட்டுப்புடவையை
கட்டிக் களிக்கிற
மேட்டுக்குடி ஆளுகளுக்கு
வேணும்னா தீபாவளி
பண்டிகையா இருக்கலாம்
ஆனா,
கந்துவட்டிக்கு
கடன் வாங்கி
சாலையோர
சந்தையில
தள்ளுபடியில
துணிவாங்கி
கண்ணீர் சிந்திப்
பொழைக்கிற
ஏழை பாழைகளுக்கு
வருசம் தவறாம
வந்து போற
'தீராதவலி'தானே!
மச்சு வீட்டுக்காரங்க
கொளுத்திப்போட்ட
சரவெடியில
வெடிக்க மறந்து
உதிர்ந்த மிச்சத்த
பொறுக்கி
தங்களோட
பட்டாசு ஆசைகளை
தணிச்சுக்குது
ஒரு கூட்டம்...
அப்பல்லாம்
எங்க ஆத்தாவோட
அரைப்பவுன் தோடு
அடகுகடைக்குப்
போனாத்தான்
எங்களுக்கு
புது டிரஸ்
வீடு வந்து சேரும்
ஏற்றத் தாழ்வுகளை
ஏகத்துக்கும்
பட்டவர்த்தமா காட்டுற
பணக்கார
பண்டிகையா பட்டதால
'தீபாவளி'ன்னாலே
ஒரு பிடிப்பில்லாம போச்சு;
ஆனா,
எனக்கு
இது 'தலை தீபாவளி'
இன்ஜீனியரு
மாப்புளைன்னு
மாமனாரு
கையளவு கரைவச்ச
பட்டுவேட்டி சட்டை
எடுத்திருக்காரு!
அடுப்படியே
கெடைன்னு கெடந்து
அதிரசம் முறுக்கு
தேன்குழல் சீடைன்னு
மாமியாரு
அண்டா பூராவும்
பலகாரமா ரொப்பி
வச்சிருக்காக!
மச்சினனோ
சிவகாசி போயி
அணில் மார்க்
கம்பெனியிலேயே
அய்யாயிரம் ரூபாய்க்கு
வெடி வாங்கி
லோடு வண்டியில போட்டு
வீடு வந்து
சேந்திருக்கான்!
வீடே திருவிழாக் கோலந்தான்!
ஆனா,
எனக்கு
மனசு கெடந்து
அலை பாயுது
பொறந்ததிலிருந்து
அப்பான் ஆத்தாவோடவே
இருந்திட்டு...
புதுசா பண்டிகையும் நாளுமா
தலை தீபாவளின்னு
மாமனாரு வீட்டுல வந்து
கெடக்குறது
மனசுக்கு
சங்கடமா இருக்கு...
சலும்ப, சலும்ப
அப்பா தேச்சுவிடும்
நல்லெண்ணெய்...
அத... தலையிலிருந்து
அப்புறப்படுத்த
புலிமார்க் சீயக்காயை போட்டு
பலங்கொண்ட மட்டும்
தேய்ச்சு குளிப்பாட்டும்
எங்க ஆத்தா!
பலகாரமா
சுட்டிருக்கே!
நீ பலகாரத்தை
பார்த்ததே...
என்னையை
கட்டிக்கிட்டு இங்க வந்த
பொறகு தானேன்னு
அப்பாவோட நையாண்டியும்...
அதுக்கு ஆத்தா காட்டும்
'போலிக் கோபமும்'
இப்படி,
எங்க வீட்டை நோக்கியே
கெடந்த,
என் நெனப்பை
மாமனாரு வந்து
கலச்சு எழுப்பனாரு...
என்ன மாப்ளே!
ஒரு வருசம் ஒங்க
தாய் தகப்பனை
விட்டு இருக்கிறது
ஒங்களுக்கு கவலையா
இருக்குதாக்கும்...
ஆனா இத்தனை வருசமா
நாங்க வளர்த்த
எங்க பொண்ணு
எங்களோட கொண்டாடுற
கடைசி தீபாவளி
இதுதானே!
ஒங்களுக்கு இது
தலை தீபாவளி..
எங்களுக்கு
இது தலை போற
தீபாவளி...
ஒரு தலை
எங்களவுட்டு போற
தீபாவளி இது
அதனால தான்
பொண்ண பெத்த
ஒவ்வொருத்தனும்
கடன ஒடன
வாங்கியாவது
மொதல் தீபாவளியை
மொகம் மலர
கொண்டாடுறது வழக்கம்...
தலை தீபாவளியை
மனசுல வச்சிக்கிட்டு
ஒவ்வொரு தீபாவளியையும்
பொண்டாட்டி புருசன்
சந்தோசம் கொறையாம
கொண்டாடனும்தான்
இவ்வளவும்!...
ஒரு காலத்துல
வறுமையில
திண்டாடுனதுக்காக
வளமையில்
கொண்டாடுறது தப்பில்ல
பழச மறக்காம
புதுச பழகிக்கிறது
குத்தமில்ல
மனசால
செல்வந்தர் ஆயிட்டோம்னா
குடிக்கிற கூழும் கூட
பாதாம் அல்வா தான்
குடியிருக்கிற குடிசையும்
'கோட்டை' மாதிரிதான்
மாமனாரு
சொன்ன வாக்கியங்கள்
என் வைராக்கியத்தை
ஒடச்சிப் புடிச்சு...
மகிழ்ச்சிங்கிறது
கட்டுற
துணியில இல்லை
வெடிக்கிற பட்டாசுல
இல்லை
மத்தாப்பா சிதறுற
மகிழ்ச்சி நெறஞ்ச
மனசுல தான்னு
புரிஞ்சு போச்சு
எனக்கு
இது தலை தீபாவளி
மட்டுமில்ல
பலவருச தலைவலி
போக்குன தீபாவளியும் கூட!
----மருது அழகுராஜ்---
கொண்டாடுவதற்காக
அப்பன் ஆத்தா
கெடந்து திண்டாடுறத
பார்த்ததால என்னமோ...
'தீபாவளி'ன்னாலே
சின்ன வயசிலிருந்தே
எனக்குப் புடிக்காது...
பட்டுப்புடவையை
கட்டிக் களிக்கிற
மேட்டுக்குடி ஆளுகளுக்கு
வேணும்னா தீபாவளி
பண்டிகையா இருக்கலாம்
ஆனா,
கந்துவட்டிக்கு
கடன் வாங்கி
சாலையோர
சந்தையில
தள்ளுபடியில
துணிவாங்கி
கண்ணீர் சிந்திப்
பொழைக்கிற
ஏழை பாழைகளுக்கு
வருசம் தவறாம
வந்து போற
'தீராதவலி'தானே!
மச்சு வீட்டுக்காரங்க
கொளுத்திப்போட்ட
சரவெடியில
வெடிக்க மறந்து
உதிர்ந்த மிச்சத்த
பொறுக்கி
தங்களோட
பட்டாசு ஆசைகளை
தணிச்சுக்குது
ஒரு கூட்டம்...
அப்பல்லாம்
எங்க ஆத்தாவோட
அரைப்பவுன் தோடு
அடகுகடைக்குப்
போனாத்தான்
எங்களுக்கு
புது டிரஸ்
வீடு வந்து சேரும்
ஏற்றத் தாழ்வுகளை
ஏகத்துக்கும்
பட்டவர்த்தமா காட்டுற
பணக்கார
பண்டிகையா பட்டதால
'தீபாவளி'ன்னாலே
ஒரு பிடிப்பில்லாம போச்சு;
ஆனா,
எனக்கு
இது 'தலை தீபாவளி'
இன்ஜீனியரு
மாப்புளைன்னு
மாமனாரு
கையளவு கரைவச்ச
பட்டுவேட்டி சட்டை
எடுத்திருக்காரு!
அடுப்படியே
கெடைன்னு கெடந்து
அதிரசம் முறுக்கு
தேன்குழல் சீடைன்னு
மாமியாரு
அண்டா பூராவும்
பலகாரமா ரொப்பி
வச்சிருக்காக!
மச்சினனோ
சிவகாசி போயி
அணில் மார்க்
கம்பெனியிலேயே
அய்யாயிரம் ரூபாய்க்கு
வெடி வாங்கி
லோடு வண்டியில போட்டு
வீடு வந்து
சேந்திருக்கான்!
வீடே திருவிழாக் கோலந்தான்!
ஆனா,
எனக்கு
மனசு கெடந்து
அலை பாயுது
பொறந்ததிலிருந்து
அப்பான் ஆத்தாவோடவே
இருந்திட்டு...
புதுசா பண்டிகையும் நாளுமா
தலை தீபாவளின்னு
மாமனாரு வீட்டுல வந்து
கெடக்குறது
மனசுக்கு
சங்கடமா இருக்கு...
சலும்ப, சலும்ப
அப்பா தேச்சுவிடும்
நல்லெண்ணெய்...
அத... தலையிலிருந்து
அப்புறப்படுத்த
புலிமார்க் சீயக்காயை போட்டு
பலங்கொண்ட மட்டும்
தேய்ச்சு குளிப்பாட்டும்
எங்க ஆத்தா!
பலகாரமா
சுட்டிருக்கே!
நீ பலகாரத்தை
பார்த்ததே...
என்னையை
கட்டிக்கிட்டு இங்க வந்த
பொறகு தானேன்னு
அப்பாவோட நையாண்டியும்...
அதுக்கு ஆத்தா காட்டும்
'போலிக் கோபமும்'
இப்படி,
எங்க வீட்டை நோக்கியே
கெடந்த,
என் நெனப்பை
மாமனாரு வந்து
கலச்சு எழுப்பனாரு...
என்ன மாப்ளே!
ஒரு வருசம் ஒங்க
தாய் தகப்பனை
விட்டு இருக்கிறது
ஒங்களுக்கு கவலையா
இருக்குதாக்கும்...
ஆனா இத்தனை வருசமா
நாங்க வளர்த்த
எங்க பொண்ணு
எங்களோட கொண்டாடுற
கடைசி தீபாவளி
இதுதானே!
ஒங்களுக்கு இது
தலை தீபாவளி..
எங்களுக்கு
இது தலை போற
தீபாவளி...
ஒரு தலை
எங்களவுட்டு போற
தீபாவளி இது
அதனால தான்
பொண்ண பெத்த
ஒவ்வொருத்தனும்
கடன ஒடன
வாங்கியாவது
மொதல் தீபாவளியை
மொகம் மலர
கொண்டாடுறது வழக்கம்...
தலை தீபாவளியை
மனசுல வச்சிக்கிட்டு
ஒவ்வொரு தீபாவளியையும்
பொண்டாட்டி புருசன்
சந்தோசம் கொறையாம
கொண்டாடனும்தான்
இவ்வளவும்!...
ஒரு காலத்துல
வறுமையில
திண்டாடுனதுக்காக
வளமையில்
கொண்டாடுறது தப்பில்ல
பழச மறக்காம
புதுச பழகிக்கிறது
குத்தமில்ல
மனசால
செல்வந்தர் ஆயிட்டோம்னா
குடிக்கிற கூழும் கூட
பாதாம் அல்வா தான்
குடியிருக்கிற குடிசையும்
'கோட்டை' மாதிரிதான்
மாமனாரு
சொன்ன வாக்கியங்கள்
என் வைராக்கியத்தை
ஒடச்சிப் புடிச்சு...
மகிழ்ச்சிங்கிறது
கட்டுற
துணியில இல்லை
வெடிக்கிற பட்டாசுல
இல்லை
மத்தாப்பா சிதறுற
மகிழ்ச்சி நெறஞ்ச
மனசுல தான்னு
புரிஞ்சு போச்சு
எனக்கு
இது தலை தீபாவளி
மட்டுமில்ல
பலவருச தலைவலி
போக்குன தீபாவளியும் கூட!
----மருது அழகுராஜ்---
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தலை தீபாவளி
இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா அருமை, உங்களுக்கு தல தீபாவளி இனிமலே தானே
முடிஞ்சு போச்சு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தலை தீபாவளி
மன்னிக்கவும்...இதை எழுதியது மருது அழகுராஜ் என்பவர்...என்னைக் கவர்ந்த கவிதை என்பதால் 'ரசித்த கவிதைகள்' பகுதியில் பதிவிட்டேன்...இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா அருமை
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தலை தீபாவளி
இரா.பகவதி wrote:முடிஞ்சு போச்சு...
அண்ணா மோதுரம் எல்லாம் போட்டாங்களா
யப்பா....குரு-சிஷ்யன் ரெண்டு பேருக்கும் இப்படி அறுப்புப் போடறதே வேலையாப் போச்சா?...ஆள விடுங்க சாமீகளா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|