ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )

3 posters

Go down

என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Empty என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )

Post by பிரசன்னா Sat Mar 10, 2012 1:50 pm

என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) BT_1330931370
குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )

என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) E_1330931725

சீறும் கோபம், செல்லச் சிரிப்பு, தலை சாய்ந்த வெட்கம் தளராத உள்ளம்... எல்லாம் கொண்ட ஏழைச் சிறுவன் சக்திக்கு இல்லாதது செல்வம் மட்டுமல்ல பாசத்தோடு தூக்கும் அம்மாவைச் சேர்த்தணைக்க இரண்டு கைகளும்தான்.

அம்மாவின் கைபிடித்து நடக்க வழியில்லை. ஓடிச்சென்று அம்மாவின் கழுத்தில் கைகோர்த்து ஆட முடியாது...

ஆனாலும் சக்தியிடம் சோர்வென்பது துளியும் இல்லை! “கை வீசம்மா கை வீசு’ பாடலைக்கூட கவலைப்படாமல் பாடும் சக்திக்கு பலம் அவன் கால்கள்தான்!

குளித்தலை அருகே மீனாட்சிபுரத்தில் தனது வீட்டில் காலாலயே “அ’ போட்டு டழகிக் கொண்டிருந்த சக்திவேல் நம்மைக் கண்டதும் புன்னகைத்தான்.

நாம் அன்பாக கொடுத்த பிஸ்கட்டை அழகாக காலில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டே “எங்கப்பாவ கூப்பிட எங்கம்மா போயிருக்கு. வந்துருவாங்க’ என்றான். அம்மா பரிமளமும், அப்பா ராஜாவும் வீட்டுக்க வந்ததும் நம்மைப் பற்றி சொன்னதும் கண்ணீருடன் பேச ஆரம்பித்தார்கள்.

“எங்களுக்கு ரெண்டு பொம்பளப் பிள்ளைங்களுக்கு அப்புறம் மூணாவதா கர்ப்பம் ஆனதும் கரூர் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் போயி செக் பண்ணினோம். பத்த மாசத்துக்குள்ள ஆறு தடவை ஸ்கேன் எடுத்து பார்த்தாங்க. அப்பெல்லாம் குழந்தை நல்லாயிருக்குனுதான் சொன்னாங்க! பிரசவ வலி வந்துச்சு. அதே கரூர் கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குத்தான் போனோம். கொஞ்ச நேரத்திலயே வெளிய வந்த நர்சம்மா “நல்லபடியா குழந்தை பொறந்திருச்சு. ஆம்பளைப் புள்ளை என்று சொன்னதும் மகிழ்ச்சியில் பக்கத்திலிருந்த என் இரண்டு மகள்களையும் கட்டி அணைத்து சந்தோஷப்பட்டேன். சிறிது நேரம் கழித்து உள்ளே அழைத்தார்கள். லேசாக கண் திறந்திருந்த என் மனைவியிடம் ஆம்பளப் பிள்ளையாம்’ என்றேன். அந்த வலியிலும் புன்னகைத்தாள். அப்போதுதான் நர்ஸ் கøயில் வைத்திருந்த குழந்தையைப் பார்த்த நான் உறைந்து போனேன். ஐயோ, எம் பையனுக்கு கையக் காணோமே என்று கதற, என் மனைவி துடிதுடித்துவிட்டாள்.

ஆறு தடவ ஸ்கேன் எடுத்தும் எப்படித் தெரியாமப்போச்சுனு டாக்டர்கிட்டயெல்லாம்கூட கேட்டோம், படிக்காத கிராமத்து ஏழைகளுக்கு சரியான பதில் கிடைக்குமா? மெட்ராஸ் குழந்தைங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுபோய் காட்டுங்க என்று முடித்துக் கொண்டார்கள்.

பார்ப்பவர்களின் பரிதாபத்திற்கு ஆளாகிறானே என்று துண்டில் எப்போதுமே உடம்பை மூடிக் கொண்டே பல தடவை மெட்ராஸ் சென்றோம். இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் பார்க்கலாம் என்றுதான் சொன்னார்கள்.

சரி, எதுவானாலும் ஆண்டவன் பார்த்துக்கட்டும் என்று நாங்களும் அவனை எங்களின் கவலை தெரியாமல் வளர்க்க ஆரம்பித்தோம். அவனும் தன் குறை தனக்குத் தடையில்லை என்பதுபோல் அவனாகவே கை ஊன்றாமல் உட்கார்ந்தான். கை ஊன்றாமல் உட்கார்ந்தே தவழ்ந்தான். நடை வண்டி இல்லாமல் நடந்தான். கை வீசாமல் ஆடினான். இதையெல்லாம் பார்த்ததும் எங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை வந்தது. கையால் செய்யக் கூடிய வேலைகளை காலால் செய்ய பழகிக் கொடுக்க ஆரம்பித்தோம்.

இப்பொழுது தண்ணீர் குடிப்பது, சாப்பிடுவது முதல் எழுதுவது வரை காலிலேயே செய்கிறான். காலில் கல்லை எடுத்து வீசி ஆடு, கோழிகளை விரட்டுகிறான். டவுசர், சட்டை மட்டும் போட ஆள் தேவை. மற்ற அனைத்தையும் தானாகவே செய்து வருகிறான். கூலி வேலைக்குச் சென்று கொண்டிருந்த என் மனைவி, சக்தியை தனியே விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல முடியாததால் வேலைக்கும் செல்வதில்லை. என்ன, சக்திக்கு மூணு வயசு ஆயிடுச்சி! இந்த வருஷம் ஸ்கூல்ல சேத்தணும்... பார்ப்போம், அவன் தலையில என்ன எழுதியிருக்குனு’ என்று முடித்துக் கொண்டார் தந்தை ராஜா.


சக்தியிடம் பேச்சுக் கொடுத்தோம்.

“எனக்கு பிஸ்கட்டும் முறுக்கும் புடிக்கும். நான் பால்வாடி ஸ்கூலுக்குப் போகப் போறேன். எங்கைய சாமி கொண்டு போயிடுச்சு... இல்லன்னா நானும் அக்கா மாதிரி அம்மா கையப்பிடிச்சிகிட்டு ஸ்கூலுக்குப் போவேன்!’ என்று வெகுளியாகச் சொல்லி, கலகலவென வாய்விட்டு சக்தி சிரிக்க, நமக்கு இந்த ஒட்டுமொத்த வாழ்க்கையின் தத்துவத்தையே புரிய வைத்தது போலிருந்தது அந்தச் சிரிப்பு.

ஆசையாய் நாமும் அவனைத் தூக்கினோம். பின்னால் சாய்ந்துவிடாமல் இருக்கு எவ்வளவுதான் நாம் அவனை அணைத்துப் பிடித்திருந்தாலும், அந்தக் குழந்தையின் கை ஸ்பரிசம் நம் உடம்பில் படாதது, நம் உடம்பில் ஏதோ ஒரு அங்கம் குறைந்தது போல் உணர்வை ஏற்படுத்தியது. அந்த வினாடியில் நம் கண்களில் தேங்கிய கண்ணீரை அந்தக் குழந்தைக்குத் தெரியாமல் மறைத்தாலும், அம்மா பரிமளம் பார்த்துவிட்டார்... இதே அனுபவத்தை ஒவ்வொரு நாளும் அந்தத் தாய் எத்தனை முறை அனுபவிப்பாள்! அந்த ஏழைத்தாய்க்கு விஞ்ஞானத்தில் இதற்கு ஒரு விடை கிடைக்குமா? ஆனால், இதுபோல் எந்தக் கலக்கமுமின்றி நம் தோளில் இருந்து இறங்கி சக்தி தன்னம்பிக்கையோடு நடந்து சென்று கொண்டிருந்தான்.



டாக்டர் என்ன சொல்கிறார்?

சக்தியை கரூர் எலும்பு முறிவு நிபுணர் டாக்டர் ரஜினிகாந்திடம் அழைத்துச் சென்று இந்த சிறுவனுக்கு கை கொடுக்க முடியுமா என்றோம்.

இரு தோள்களிலும் கொஞ்சம்கூட எலும்பு இல்லாததால் கை பொருத்துவது கடினம். விஞ்ஞானம் வளர்ந்தால் முதலில் செயற்கை எலும்பு பொருத்தி அதன் மூலம் செயற்கை கை பொருத்த வாய்ப்பிருக்கிறது. இப்போதைக்கு சிறுவனுக்கு கை கொடுக்க வாய்ப்பில்லை என்றார்.


- கரூர் அரவிந்த்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Empty Re: என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 10, 2012 2:00 pm

அய்யோ பாவம் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Empty Re: என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )

Post by அகிலன் Sat Mar 10, 2012 3:22 pm

இதற்கு முதல் காரணம் கருவிலேயே குறைபாட்டைக்கண்டுபிடிக்க தவறிய மருத்துவர்கள்தான் . மருத்துவர்கள் பணத்தில்தான் குறியாய் இருக்கிறார்களே தவிர மனித உயிரில் இல்லை.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Empty Re: என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum