ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!!

+4
பிஜிராமன்
யினியவன்
சிவா
அருண்
8 posters

Go down

பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Empty பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!!

Post by அருண் Thu Mar 08, 2012 12:07 pm

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும், இன்று காலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியது. தேர்வு அறைக்கு செல்லும் முன்பாக வகுப்புகளின் வெளியே மிக ஆர்வமாக படித்து கொண்‌டிருந்தனர். ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகளை வாழ்த்தி அனுப்பினர். மேலும் தேர்வு அறைக்கு செல்லும் முன்பு ஆங்காங்கே கூடி நின்று தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கினர். "தேர்வு முடியும் வரை தொடர்ந்து மின்சாரம் வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. புக்கிங், "புல்': தமிழகத்தில், மின்வெட்டு பிரச்னையால், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, பள்ளிகளில் ஜெனரேட்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் என, பல்வேறு தொழில் நிறுவனங்களால், ஜெனரேட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால், பள்ளிகளுக்கு கிடைக்கவில்லை.அரசுப் பள்ளிகளில் ஜெனரேட்டர்கள் வசதி, சுத்தமாகக் கிடையாது. பெரிய தனியார் பள்ளிகளில் மட்டும், ஓரளவுக்கு இந்த வசதிகள் இருந்தாலும், பள்ளி முழுவதிற்கும் மின்சாரம் வினியோகிக்கும் அளவுக்கு, சக்தி வாய்ந்த ஜெனரேட்டர்கள் இல்லை. நேற்று வரை, பல்வேறு இடங்களில் அலைந்தும், ஜெனரேட்டர்கள் கிடைக்கவில்லை என, பள்ளி நிர்வாகிகள் புலம்புகின்றனர். அதிக திறன் தேவை: இதுகுறித்து, சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள நடேசன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர், ராமசுப்பிரமணியன் கூறியதாவது:எங்களது பள்ளியில், 500 மாணவர்கள், பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். ஒரு அறையில், 20 மாணவர்கள் தான் தேர்வு எழுத வேண்டும் என, அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படியெனில், மாணவர்கள், தேர்வு கண்காணிப்பாளர், துறை அதிகாரிகள், பள்ளி முதன்மை கண்காணிப்பாளர் என, 30 அறைகள்
வரை தேவைப்படும்.இத்தனை அறைகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்றால், அதிக திறனுள்ள ஜெனரேட்டர் தேவை. பத்து நாட்களுக்கும் மேலாக, பல்வேறு இடங்களில் அலைந்தும், ஜெனரேட்டர் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில், கல்வித் துறை அதிகாரிகளும் போதிய ஒத்துழைப்பு தரவில்லை.இவ்வாறு ராமசுப்பிரமணியன் தெரிவித்தார். "முதல்வர் தலையிடணும்': தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின், சென்னை மாவட்டத் தலைவர் ஆதியப்பன் கூறியதாவது:ஜெனரேட்டர் வாங்கிக் கொள்ளுங்கள் என, சாதாரணமாக கூறிவிட்டனர். ஆனால், நடைமுறையில் இந்த உத்தரவு நிறைவேறவில்லை. பள்ளி நிர்வாகிகள் முயற்சித்தும், ஜெனரேட்டர்கள் கிடைக்கவில்லை. ஏழு அல்லது எட்டு நாட்கள் வரை தான், தேர்வுகள் நடக்கப் போகின்றன. அது வரையாவது, காலை 10 மணியில் இருந்து, பிற்பகல் 1.15 வரை தொடர்ந்து மின்சாரம் வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு ஆதியப்பன் கூறினார். மின் துறை ஒப்புதல்: மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், 5,000 பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்கள் தேவை என, பட்டியல் வந்துள்ளது. மின் வாரியத்திற்கு சொந்தமான, 500 ஜெனரேட்டர்களுடன், தனியாரிடம் வாடகைக்கு பெற்று, மொத்தம் 2,000 ஜெனரேட்டர்கள்வழங்கப்பட்டுள்ளன.சில ஜெனரேட்டர்கள் பழுதாகியுள்ளன; அவற்றை சரி செய்யும் பணியில், மின் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள 3,000 பள்ளிகளுக்கு, தேர்வு நடக்கும் மூன்று மணி நேரத்தில், மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்க முடிவாகியுள்ளது.இல்லையெனில், பள்ளிகள் இருக்கும் பகுதிகளுக்கு, தேர்வு நேரம் தவிர மாற்று நேரத்தில் மின்வெட்டை அமல்படுத்த, முடிவெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். தலைகீழ் வெட்டு: இதனால், இன்று முதல், தேர்வு நடக்கும் நாட்களில், தமிழகம் முழுவதும், வழக்கமான நேரத்தில் இல்லாமல், மாற்று நேரத்தில் மின்வெட்டு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. காலை 10 மணி முதல், பகல் 1 மணி வரை, பள்ளிகள் இருக்கும் பகுதிகளின் மின்னூட்டிகளை தேர்ந்தெடுத்து, அந்தப் பகுதியில் மட்டும் மின்வெட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அந்த நேரத்தில், பள்ளிகள் இல்லாத இடங்களில், அறிவிக்கப்படாத
மின்வெட்டு அமலாகும். இதனால், இன்று முதல், மின்வெட்டு நேரத்தில் தலைகீழ் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது. நடைமுறை சாத்தியமில்லை: பள்ளிகள் இருக்கும் பகுதிகளுக்கு மட்டும், மின்வெட்டை மாற்ற முடியுமா என்பதில், நடைமுறை பிரச்னை உள்ளது. அனைத்து இடங்களிலும், பரவலாக பள்ளிகள் உள்ளன. அதனால், ஒரே நேரத்தில், பல இடங்களுக்கும் மின்வெட்டு விலக்கு தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெரும்பாலான இடங்களில், வியர்வை சொட்டச் சொட்ட, மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய நிலை இருக்கும் என்றே தெரிகிறது.
தேர்வு நடப்பது 18 நாட்கள் தான்!: பிளஸ் 2 தேர்வுகள், இன்று துவங்கி, 30ம் தேதி முடிகிறது என்றாலும், மொத்தம் 11 நாட்கள் மட்டுமே தேர்வுகள் நடக்கின்றன.
இதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் 4ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரை நடந்தாலும், தேர்வு நடப்பது ஏழு நாட்கள் மட்டும் தான்.இரு வகுப்புகளுக்கும் சேர்த்து, மொத்தம் 18 நாட்கள் தான் தேர்வுகள் நடக்கின்றன. எனவே, இந்த 18 நாட்களுக்கும், காலை 10 மணி முதல், பிற்பகல் 1.15 வரை தொடர்ந்து மின்சாரம் வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுத்தால், இக்கட்டான நேரத்திலும் மாணவர்களின் நலன்களைக் காத்த பெருமை, முதல்வரைச் சேரும்.
மாநகராட்சி பள்ளிகள் பற்றி கவலை இல்லை:
சென்னையில், 38 உயர்நிலைப் பள்ளிகளும், 32 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், தேர்வு நடக்கும் நேரத்தில், தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளதால், இந்த பட்டியலில் மாநகராட்சி பள்ளிகள் வராது என, மின் துறையினர் தெரிவித்தனர். அதனால், மாநகராட்சி பள்ளி பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு, தடையில்லா மின்சாரம் கிடைக்குமா என்பது சந்தேகமே!

- ஏ.சங்கரன்/ ஹெச்.ஷேக்மைதீன்
தினமலர்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Empty Re: பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!!

Post by சிவா Thu Mar 08, 2012 12:27 pm

தேர்வு எழுதும் அனைத்து மாணவச் செல்வங்களும் வெற்றி பெற்று மேற்படிப்பைத் தொடர வாழ்த்துகள்.


பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Empty Re: பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!!

Post by யினியவன் Thu Mar 08, 2012 12:42 pm

வாழ்த்துகள் மாணவர்களுக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Empty Re: பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!!

Post by பிஜிராமன் Thu Mar 08, 2012 12:48 pm

நேற்று மாலையில் இருந்து காலை வரை மின்சாரம் தடை படவே இல்லை......

மாணவ மணிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Empty Re: பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!!

Post by பிரசன்னா Thu Mar 08, 2012 12:52 pm

சிவா wrote:தேர்வு எழுதும் அனைத்து மாணவச் செல்வங்களும் வெற்றி பெற்று மேற்படிப்பைத் தொடர வாழ்த்துகள்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Empty Re: பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!!

Post by மகா பிரபு Thu Mar 08, 2012 12:57 pm

மாணவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

தினமும் பொதுத்தேர்வு வச்சா மின்சாரமே நிற்காது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Empty Re: பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!!

Post by ராஜா Thu Mar 08, 2012 12:59 pm

சிவா wrote:தேர்வு எழுதும் அனைத்து மாணவச் செல்வங்களும் வெற்றி பெற்று மேற்படிப்பைத் தொடர வாழ்த்துகள்.
சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Empty Re: பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!!

Post by ரேவதி Thu Mar 08, 2012 2:17 pm

மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Empty Re: பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum