Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரட்டை வேடம் போடும் கருணாநிதி : பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
+8
மகா பிரபு
pgasok
உதயசுதா
அருண்
யினியவன்
ராஜா
sshanthi
சிவா
12 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
இரட்டை வேடம் போடும் கருணாநிதி : பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
First topic message reminder :
சென்னை : பிராமணர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில், "பார்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதை வன்மையாகக் கண்டித்து, தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்கால அரசியலுக்கு ஒவ்வாத நிலைப்பாடாக, 1912ம் ஆண்டு திராவிட இயக்கக் கூட்டத்தில், டாக்டர் நடேசன் மற்றும் டி.எம்.நாயர் கூறிய கருத்துக்கு, மெருகு பூசி சினிமா பாணியில் புதிதாகக் கதை அளக்கிறார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது, 1912ல் நடைபெற்றது பிரிட்டிஷ் அரசாங்கம் - தமிழ்நாடு என்று அப்போது இல்லாமல், சென்னை மாகாணம் ராஜதானி என்று அழைக்கப்பட்டு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று பிரிக்கப்படாமல் இருந்தது. அப்போது திராவிட இயக்கத்தின் தலைவர்கள் என்று கூறப்பட்ட டி.எம்.நாயர் (மலையாளம் பேசுபவர்) சர்.பி.டி.தியாகராஜன் (தெலுங்கு பேசுபவர்) டாக்டர் நடேசன் போன்றவர்கள் நீதிக் கட்சியின் சார்பில் வெள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள்; நமது சுதந்திர போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள். சுதந்திர நாளை, துக்க நாளாகக் கொண்டாடியவர்கள்.
கடந்த, 1960 வரை பல ஆயிரக்கணக்கான பிராமண தமிழ் ஆசிரியர்கள் தமிழகத்தில் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிறப்பாக பணியாற்றியதை யாரும் மறந்திருக்கமுடியாது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், தான் ராமேஸ்வரத்தில் படித்தபோது, உதவி செய்த ஆசிரியரான சுப்பிரமணிய அய்யரை தன் பதவியேற்புக்கு டில்லிக்கு அழைத்துச் சென்று மரியாதை செய்தார் .
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய நிலைமைக்கு ஒவ்வாத பிராமண எதிர்ப்புக் கொள்கையை, தனக்கு சிக்கல், தோல்வி வரும்போதெல்லாம் ஒரு ஆயுதமாக எடுப்பதில் கருணாநிதி வல்லவர்.
பிராமணர்களின் அறிவுரைப்படி, ஆலோசனை உதவியுடன் தனது கட்சியையும், குடும்ப வியாபாரத்தையும் வளர்த்தவர் தான் இந்த தலைவர்.
தயாளுவில் ஆரம்பித்து, ஸ்டாலின் மனைவி மற்றும் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கு பிரசவம் பார்த்தது பிராமணரான டாக்டர் பி.ராமமூர்த்தியும், அவரது மனைவியுமான டாக்டர் இந்திரா ராமமூர்த்தியும் தான். பல ஆண்டுகளாக இவருக்கு ஆடிட்டராக இருப்பது ஜெகதீசன் அன்ட் கம்பெனி. தற்போது எங்கு போனாலும் உடன் வந்து மருத்துவம் செய்வது பிராமணரான டாக்டர் கோபால் தான்.
கடந்த, 1996ல், 2006ல் ஆட்சி செய்தபோது ஆலோசனை வழங்கியது, டாக்டர் எம்.எஸ்.குகன் ஐ.ஏ.எஸ்., 2006- 2011 வரை தலைமைச் செயலராகவும், கோப்புகளில் தனியாகக் கையெழுத்து இடும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக எஸ்.ஸ்ரீபதி ஐ.ஏ.எஸ்., உள்துறைச் செயலராக (ஹோம் செகரட்டரி) மாலதி ஐ.ஏ.எஸ்., மேடைகளில், விழாக்களில் தன்னைப் பற்றி புகழ்பாட கவிஞர் வாலி, குடும்ப பிசினஸ் பார்ட்னராக இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், தனக்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்க தேசிகாச்சாரி என்று இவரது தேவைகளுக்கான பிராமணர் பட்டியல் தொடரும். தனக்குத் தேவை என்றால் இவர்கள் எல்லோரும் பிராமணர்கள் அல்லாதவர்கள்.
ஏன் இந்த இரட்டை வேஷம் - போலி நாடகம்?
தன் வீட்டுக் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் சென்னை டி.ஏ.வி., பள்ளியில் இந்தி படிக்கலாம்; மற்றவர்கள் தமிழ் தான் படிக்க வேண்டும். தமிழ் சுதந்திரப் போராட்ட தியாகி கோட்டாவில் தனது பேரன் (மு.க.அழகிரி மகன்) அண்ணா பல்கலைக்கழகத்தில், பி.இ., படிக்கலாம். தன் வீட்டு குழந்தைகளுக்கு ஸ்டாலின், தயாநிதி, கலாநிதி, சூர்யா, ஆதித்யா போன்ற சம்ஸ்கிருத பெயர்கள். தனது 'டிவி'க்களுக்கு சூரியா, ஆதித்யா, தேஜா, உதயா, ஜெமினி, சன் நெட்வொர்க் என்று வேற்று மொழிப் பெயர்கள். எத்தனை வருடங்களுக்குத்தான் இந்தப் பெரிய பித்தலாட்டம், ஏமாற்று வேலை?
எந்த பிராமணனும் ஊரை அடித்து உலையில் போடவில்லை. அரசாங்கப் பணத்தை, மக்களது வரிப் பணத்தை, கொள்ளையடித்து கோடீஸ்வரன் ஆனதில்லை. டெலிகாம் ஊழல், சேது சமுத்திரத் திட்ட ஊழல், வீராணம் ஊழல் என்றெல்லாம் விஞ்ஞான முறையில் பொதுச் சொத்தை கொள்ளையடித்து, இந்தியாவிலேயே ஒரு பெரிய கோடீஸ்வர குடும்பம் என்று பெயர் பெறவில்லை!
கடந்த 1967க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி செய்த , அமைச்சர்கள் பலர் இப்போது குறைந்தபட்சம், 100-200 கோடி ரூபாய்க்கு அதிபதி. இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துக் கல்லூரி, சினிமா தயாரிப்பு என்றெல்லாம் பல துறைகளில் பெரிய முதலாளிகள். இதெல்லாம் எப்படி வந்தது? கருணாநியின் மகள் டில்லி திகார் சிறையில் எட்டு மாதம் கம்பி எண்ணியது எதற்காக?
தனது குடும்பத்தில் நடக்கும் வாரிசு பிரச்னையை, கட்சியின் தோல்வியை திசை திருப்பவே, இந்த பிராமணர் எதிர்ப்பு நாடகம். ஆனால், நமது அரசியல் சாசனப்படி எந்த ஜாதியையும், பழித்துச் சொல்ல, இழிவுபடுத்த சட்டத்தில் இடமில்லை.
எல்லா மக்களுடன் அமைதியாக, நட்பாக வாழும் பிராணமர்கள் மீது வன்முறையை தூண்டும்படி, அச்சுறுத்தும் படியாக பேசும், தி.மு.க., தலைவர்கள் கருணாநிதி மீதும், அன்பழகன் மீதும் மத்திய, மாநில அரசுகள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிராமணர் சங்கம் கூறியுள்ளது.
தினமலர்
சென்னை : பிராமணர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில், "பார்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதை வன்மையாகக் கண்டித்து, தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்கால அரசியலுக்கு ஒவ்வாத நிலைப்பாடாக, 1912ம் ஆண்டு திராவிட இயக்கக் கூட்டத்தில், டாக்டர் நடேசன் மற்றும் டி.எம்.நாயர் கூறிய கருத்துக்கு, மெருகு பூசி சினிமா பாணியில் புதிதாகக் கதை அளக்கிறார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது, 1912ல் நடைபெற்றது பிரிட்டிஷ் அரசாங்கம் - தமிழ்நாடு என்று அப்போது இல்லாமல், சென்னை மாகாணம் ராஜதானி என்று அழைக்கப்பட்டு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று பிரிக்கப்படாமல் இருந்தது. அப்போது திராவிட இயக்கத்தின் தலைவர்கள் என்று கூறப்பட்ட டி.எம்.நாயர் (மலையாளம் பேசுபவர்) சர்.பி.டி.தியாகராஜன் (தெலுங்கு பேசுபவர்) டாக்டர் நடேசன் போன்றவர்கள் நீதிக் கட்சியின் சார்பில் வெள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள்; நமது சுதந்திர போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள். சுதந்திர நாளை, துக்க நாளாகக் கொண்டாடியவர்கள்.
கடந்த, 1960 வரை பல ஆயிரக்கணக்கான பிராமண தமிழ் ஆசிரியர்கள் தமிழகத்தில் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிறப்பாக பணியாற்றியதை யாரும் மறந்திருக்கமுடியாது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், தான் ராமேஸ்வரத்தில் படித்தபோது, உதவி செய்த ஆசிரியரான சுப்பிரமணிய அய்யரை தன் பதவியேற்புக்கு டில்லிக்கு அழைத்துச் சென்று மரியாதை செய்தார் .
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய நிலைமைக்கு ஒவ்வாத பிராமண எதிர்ப்புக் கொள்கையை, தனக்கு சிக்கல், தோல்வி வரும்போதெல்லாம் ஒரு ஆயுதமாக எடுப்பதில் கருணாநிதி வல்லவர்.
பிராமணர்களின் அறிவுரைப்படி, ஆலோசனை உதவியுடன் தனது கட்சியையும், குடும்ப வியாபாரத்தையும் வளர்த்தவர் தான் இந்த தலைவர்.
தயாளுவில் ஆரம்பித்து, ஸ்டாலின் மனைவி மற்றும் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கு பிரசவம் பார்த்தது பிராமணரான டாக்டர் பி.ராமமூர்த்தியும், அவரது மனைவியுமான டாக்டர் இந்திரா ராமமூர்த்தியும் தான். பல ஆண்டுகளாக இவருக்கு ஆடிட்டராக இருப்பது ஜெகதீசன் அன்ட் கம்பெனி. தற்போது எங்கு போனாலும் உடன் வந்து மருத்துவம் செய்வது பிராமணரான டாக்டர் கோபால் தான்.
கடந்த, 1996ல், 2006ல் ஆட்சி செய்தபோது ஆலோசனை வழங்கியது, டாக்டர் எம்.எஸ்.குகன் ஐ.ஏ.எஸ்., 2006- 2011 வரை தலைமைச் செயலராகவும், கோப்புகளில் தனியாகக் கையெழுத்து இடும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக எஸ்.ஸ்ரீபதி ஐ.ஏ.எஸ்., உள்துறைச் செயலராக (ஹோம் செகரட்டரி) மாலதி ஐ.ஏ.எஸ்., மேடைகளில், விழாக்களில் தன்னைப் பற்றி புகழ்பாட கவிஞர் வாலி, குடும்ப பிசினஸ் பார்ட்னராக இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், தனக்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்க தேசிகாச்சாரி என்று இவரது தேவைகளுக்கான பிராமணர் பட்டியல் தொடரும். தனக்குத் தேவை என்றால் இவர்கள் எல்லோரும் பிராமணர்கள் அல்லாதவர்கள்.
ஏன் இந்த இரட்டை வேஷம் - போலி நாடகம்?
தன் வீட்டுக் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் சென்னை டி.ஏ.வி., பள்ளியில் இந்தி படிக்கலாம்; மற்றவர்கள் தமிழ் தான் படிக்க வேண்டும். தமிழ் சுதந்திரப் போராட்ட தியாகி கோட்டாவில் தனது பேரன் (மு.க.அழகிரி மகன்) அண்ணா பல்கலைக்கழகத்தில், பி.இ., படிக்கலாம். தன் வீட்டு குழந்தைகளுக்கு ஸ்டாலின், தயாநிதி, கலாநிதி, சூர்யா, ஆதித்யா போன்ற சம்ஸ்கிருத பெயர்கள். தனது 'டிவி'க்களுக்கு சூரியா, ஆதித்யா, தேஜா, உதயா, ஜெமினி, சன் நெட்வொர்க் என்று வேற்று மொழிப் பெயர்கள். எத்தனை வருடங்களுக்குத்தான் இந்தப் பெரிய பித்தலாட்டம், ஏமாற்று வேலை?
எந்த பிராமணனும் ஊரை அடித்து உலையில் போடவில்லை. அரசாங்கப் பணத்தை, மக்களது வரிப் பணத்தை, கொள்ளையடித்து கோடீஸ்வரன் ஆனதில்லை. டெலிகாம் ஊழல், சேது சமுத்திரத் திட்ட ஊழல், வீராணம் ஊழல் என்றெல்லாம் விஞ்ஞான முறையில் பொதுச் சொத்தை கொள்ளையடித்து, இந்தியாவிலேயே ஒரு பெரிய கோடீஸ்வர குடும்பம் என்று பெயர் பெறவில்லை!
கடந்த 1967க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி செய்த , அமைச்சர்கள் பலர் இப்போது குறைந்தபட்சம், 100-200 கோடி ரூபாய்க்கு அதிபதி. இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துக் கல்லூரி, சினிமா தயாரிப்பு என்றெல்லாம் பல துறைகளில் பெரிய முதலாளிகள். இதெல்லாம் எப்படி வந்தது? கருணாநியின் மகள் டில்லி திகார் சிறையில் எட்டு மாதம் கம்பி எண்ணியது எதற்காக?
தனது குடும்பத்தில் நடக்கும் வாரிசு பிரச்னையை, கட்சியின் தோல்வியை திசை திருப்பவே, இந்த பிராமணர் எதிர்ப்பு நாடகம். ஆனால், நமது அரசியல் சாசனப்படி எந்த ஜாதியையும், பழித்துச் சொல்ல, இழிவுபடுத்த சட்டத்தில் இடமில்லை.
எல்லா மக்களுடன் அமைதியாக, நட்பாக வாழும் பிராணமர்கள் மீது வன்முறையை தூண்டும்படி, அச்சுறுத்தும் படியாக பேசும், தி.மு.க., தலைவர்கள் கருணாநிதி மீதும், அன்பழகன் மீதும் மத்திய, மாநில அரசுகள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிராமணர் சங்கம் கூறியுள்ளது.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இரட்டை வேடம் போடும் கருணாநிதி : பிராமணர் சங்கம் கடும் கண்டனம் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இரட்டை வேடம் போடும் கருணாநிதி : பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
மதர் தெரசாவிற்கு அப்புறம் இவங்களுக்குத்தான் இளகின மனசாம்.
குடுத்துட கிடுத்திடப் போறாங்க.
குடுத்துட கிடுத்திடப் போறாங்க.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இரட்டை வேடம் போடும் கருணாநிதி : பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
அவரை பற்றி பேசும்போதே அவரின் வார்த்தை ஜாலங்களை பயன்படுத்த வேண்டி வருகிறதே ( அவர் சொன்ன அறிக்கை ஒவ்வொன்றிற்கும் தமிழ் கற்று தேர்ந்த புலவர்களாலும் கூட விளங்கி கொள்ள முடியாத அளவுக்கு பொருள் ( அர்த்தம் ) இருக்கும் )
pgasok- இளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
Re: இரட்டை வேடம் போடும் கருணாநிதி : பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
என்ன இப்படி சொல்லிட்டீங்க , நீங்க ஒரு தடவை மாமா முகத்த பாருங்க எவ்வளவு கரண்டி , பூரிக்கட்டை தழும்புகள் இருக்கு என்று தெரியும்கொலவெறி wrote:மதர் தெரசாவிற்கு அப்புறம் இவங்களுக்குத்தான் இளகின மனசாம்.குடுத்துட கிடுத்திடப் போறாங்க.
Re: இரட்டை வேடம் போடும் கருணாநிதி : பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
அப்ப விடுங்க அவருக்குத் தான் இந்த வருஷத்தைய
பொறுமைக்கும் அமைதிக்கும்மான நொபெல் பரிசு.
பொறுமைக்கும் அமைதிக்கும்மான நொபெல் பரிசு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இரட்டை வேடம் போடும் கருணாநிதி : பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
அது அவருடைய திறமை.pgasok wrote:அவரை பற்றி பேசும்போதே அவரின் வார்த்தை ஜாலங்களை பயன்படுத்த வேண்டி வருகிறதே ( அவர் சொன்ன அறிக்கை ஒவ்வொன்றிற்கும் தமிழ் கற்று தேர்ந்த புலவர்களாலும் கூட விளங்கி கொள்ள முடியாத அளவுக்கு பொருள் ( அர்த்தம் ) இருக்கும் )
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இரட்டை வேடம் போடும் கருணாநிதி : பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
அவருடைய தமிழை பாராட்டாமல் இருக்க இயலாது.
அரசியலிலும் அவர் தமிழ் விளையாடுவதை வேணா தப்பு சொல்லலாம்.
அரசியலிலும் அவர் தமிழ் விளையாடுவதை வேணா தப்பு சொல்லலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இரட்டை வேடம் போடும் கருணாநிதி : பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
கருணாநிதியின் மனசாட்சி என்றும், மூளை என்றும் கூறப்பட்ட முரசொலி மாறனின் மனைவி , மல்லிகா , கல்யாணசுந்தரம் ஐய்யர் என்பவரின் மகள். கலாநிதி மாறனின் மனைவி காவேரி கூர்க் ஐய்யர் .
தயாநிதியின் மனைவி ஹிந்து ரங்கராஜன் வம்சாவளி.
நாளையோ வருங்காலத்தில் ஏதாவது ஒரு நாள் இவர்கள் மூலமாக ஏதாவது கஷ்டம் வரும் என்றால் பார்பனாரால் நான் கெட்டேன் என்று தயங்காமல் கூறக் கூடியவர்தான் கருணாநிதி. பணம் வந்தால் பார்ப்பார் இவர். சுயமரியாதை என்று கூறி நெடுஞ்செழியன் ,அன்பழகன் ,மதியழகன் என்று தங்கள் பெயரை தமிழ் படுத்தி கொண்டிருந்த அண்ணாவின் அருமை தம்பிகளின் மத்தியில் தன் பெயரை கருணா நிதி என்று மாற்றிக் கொண்டு பணத்தில் இருக்கும் ஈடுபாட்டை காட்டியவர் இவர்.
பணம் பணம் என்று பணம் சேர்க்கும் யாவரும் பணத்தால் உடல் நலம் மனச்சந்தோஷம் அடைகிறார்களா? மடியும் போது பணம் கூடவருமா?
(சுவிஸ் பாங்கில் கோடிகோடியாக பணம் போட்டுவிட்டு வாரிசுகளுக்கு அதை முறையாக கூறமுடியாமல் மரணம் அடைந்தவர் பணம் சுவிஸ் பாங்கில் கேட்பார் அற்றுக்கிடக்கிறதாமே! )
ரமணியன்.
தயாநிதியின் மனைவி ஹிந்து ரங்கராஜன் வம்சாவளி.
நாளையோ வருங்காலத்தில் ஏதாவது ஒரு நாள் இவர்கள் மூலமாக ஏதாவது கஷ்டம் வரும் என்றால் பார்பனாரால் நான் கெட்டேன் என்று தயங்காமல் கூறக் கூடியவர்தான் கருணாநிதி. பணம் வந்தால் பார்ப்பார் இவர். சுயமரியாதை என்று கூறி நெடுஞ்செழியன் ,அன்பழகன் ,மதியழகன் என்று தங்கள் பெயரை தமிழ் படுத்தி கொண்டிருந்த அண்ணாவின் அருமை தம்பிகளின் மத்தியில் தன் பெயரை கருணா நிதி என்று மாற்றிக் கொண்டு பணத்தில் இருக்கும் ஈடுபாட்டை காட்டியவர் இவர்.
பணம் பணம் என்று பணம் சேர்க்கும் யாவரும் பணத்தால் உடல் நலம் மனச்சந்தோஷம் அடைகிறார்களா? மடியும் போது பணம் கூடவருமா?
(சுவிஸ் பாங்கில் கோடிகோடியாக பணம் போட்டுவிட்டு வாரிசுகளுக்கு அதை முறையாக கூறமுடியாமல் மரணம் அடைந்தவர் பணம் சுவிஸ் பாங்கில் கேட்பார் அற்றுக்கிடக்கிறதாமே! )
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: இரட்டை வேடம் போடும் கருணாநிதி : பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
ரொம்ப வேகமா கண்டு பிடிச்சிடாங்க ! போய் பிள்ள குட்டிய படிக்க வைங்கயா
Guest- Guest
Re: இரட்டை வேடம் போடும் கருணாநிதி : பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
உதயசுதா wrote:pgasok wrote:என்னை பொறுத்த வரையுலும் கூட பாரதிய ஜனதா விட வித்தியாச முறையில் ஜாதி மற்றும் மத அரசியலில் வல்லவர் கருணாநிதி ராஜாவை கைது செய்யும் போது கூட நான் நாளை கண்டிப்பாக ராஜா ஒரு தலித் என்பதால் கைது செய்யப்பட்டார் என்று அறிக்கை விடுவார் என்று சொன்னேன் மறுநாள் எல்லா ஏடுகளிலும் தான் அறிக்கை
அதேபோல் எனக்கு ஒரு சந்தேகம் கருணாநிதி கடவுளுக்கு விரோத போக்கு கொண்டவரா இல்லை இந்து மத விரோத போக்கு கொண்டவரா உதயசுதா அக்கா கொஞ்சம் சொல்லுங்கள்
குறிப்பு : சத்தியமாக நான் பிரமினன் இல்லை
avaru இந்து மத கடவுளுக்கும் ,இந்துக்களுக்கும் மட்டும் விரோதமானவர்.
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
Re: இரட்டை வேடம் போடும் கருணாநிதி : பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
கருணா அப்பப்போ இப்படி தான் பேசுவாறு பின்ன மறுநாளே நான் சொன்னதா பதிரிகைகள் தவறாக வெளி இட்டு விட்டன என்பார்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
![இரட்டை வேடம் போடும் கருணாநிதி : பிராமணர் சங்கம் கடும் கண்டனம் - Page 3 Mgr](https://2img.net/h/1.bp.blogspot.com/__vnK9wWtIw0/R-uyKD6vzYI/AAAAAAAAAsA/5_Z-IuYXtqY/s400/mgr.jpg)
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இரட்டை வேடம் போடும் கம்யூனிஸ்ட்-கருணாநிதி கவிதை( ஹா..ஹா...)
» மூவரின் தூக்கு விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம்: தமிழருவி மணியன்
» ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!
» விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
» “அம்மா” அனுமதித்தால்தான் நடைப்பயணம்! சீமானின் இரட்டை வேடம்!
» மூவரின் தூக்கு விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம்: தமிழருவி மணியன்
» ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!
» விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
» “அம்மா” அனுமதித்தால்தான் நடைப்பயணம்! சீமானின் இரட்டை வேடம்!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|