புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை......
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை......
வசனத்துறையில் தனக்கென்று ஒரு தனிப்பாணி உண்டு, சமூகக்கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு என்று கூறும் கண்ணதாசன் இன்றைக்கு சுமார் 52 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன குமரிக்கண்டத்தில் வாழ்ந்த பச்சைத் தமிழரின் பண்பாட்டு வாழ்க்கையைக் கடல்்கொண்ட தென்னாடு என்ற நாவலில் சித்தரித்து உள்ளார்.தென்னாட்டைக் கடல் கொண்டது. ஆனால் கவிஞரின் தென்னாடு காலத்தால் அழியாதது. அது குறித்து சமூகக் கண்ணோட்டத்தில் ஆய்கிறது இக்கட்டுரை.
இந்து மாக்கடலில் மூழ்கி மறைந்த கண்டத்தைப் பற்றிய ஆய்வு பல்துறை வல்லுநர்களால் நடத்தப்பட்டது. குமரிக்கண்டம் லெமுரியாக்கண்டம், கோண்டுவானா என்னும் முப்பெயர்களால் இப்பகுதி அழைக்கப்பட்டது. இத்தென்பகுதியில் குமரிக்கோடு, பன்மலையடுக்கம், பஃறுளியாறு மற்றும் 52 நாடுகள் இருந்தன.
தென்மதுரையைத் தலைநகராகக் கொண்டு இவையனைத்தையும் ஆண்டவன் நிலந்திரு திருவிற்பாண்டியன். இதனை கலித்தொகை (104) சிலப்பதிகாரம் (காடுகாண் காதை 18-22), தொல்காப்பியம் பாயிரத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை முதலியனவும் உறுதி செய்கின்றன.
கண்ணதாசன் இக்கதையைத் தேர்வு செய்ததற்குக் காரணம், தமிழ்நாட்டில் சிலர் தமிழன் வரலாற்றை மறைக்க முயன்று, லெமூரியாக் கதைகள் கட்டுக்கதைகள் என்றும் வாதித்தனர். அதற்கு கடல்கோள், ஏற்பனை, ஏழ்தெங்கம், பன்மலைய்டுக்கம்,
பஃறுளியாறு, குமரியாறு, நிலந்திரு திருவிற்பாண்டியன் போன்ற மிகச்சில உறுதியான தகவல்களோடு சற்று கற்பனையைச் கூட்டி கதையை நகர்த்தியுள்ளார். இக்குறிப்பை அவரது ’எனது சுயசரிதம்’ என்ற நூலில் காணலாம்.
கதைச் சுருக்கம்:
பாண்டியன் மகன் வில்லாளனும் அறுவா நாட்டு இளவரசி பூம்பாவையும் அந்நாளைய மணமுறைப்படி மணம் புரிகின்றனர்.
இளவரசனைக் காதலித்த நீலவிழி பாண்டிய நாட்டுக்கு வணிகம் செய்ய வந்த எபிரேய அரசன் செமோசியை மணக்கிறாள். ஆனால் அவள் மனதில் வில்லாளனே இருக்கிறான்.மணிச்சரம் தீவில் அம்ருதா என்ற ஒரு இளம்பெண் ஆவியாக வாழ்கிறாள். நீலவிழி அம்ருதாவின் உதவியுடன் பூம்பாவையையும் வில்லாளனையும் பழி வாங்குகிறாள். அவள் வஞ்சகத்தைப் புரிந்து கொண்ட செமோசி அவளைப் பாண்டிய நாட்டிற்கு அனுப்பி விடுகிறான்.அங்கு அவள் மரண தண்டனை அடைகிறாள். இறுதியில் கடல் கோள் வருகிறது. மன்னனும் மக்களும் தென்மதுரையை விட்டு வெளியேறுகின்றனர். பஃறுளியாறும் பன்மலை அடுக்கமும் கடலுள் மூழ்கின. நீலவிழி வில்லாளன் இருவர் ஆவியும் கடலின் மீது உலவுகின்றன.இதுதான்்கடல்கொண்ட தென்னாட்டின் கதைப்பின்னல் . இதனூடாக கண்ணதாசன் குமரிக்கண்டத்தின் வரலாற்றையும் பிணைத்துக் காட்டுகிறார்.
வரலாற்றின் நோக்கம் நாவலிலேயே முடிவு அடைகின்றன. ஏனென்றால் சமுதாயத்தின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை, பூகோள அமைப்புகளை, சின்னஞ்சிறு விஷயங்களை நாவல் சொல்வது போல சரித்திரம் சொல்வது இல்லை என்பர். இந்த அடிப்படையில் கடல் கொண்ட தென்னாட்டை ஆராயலாம்.
லெமூரிய பழந்தமிழர் வாழ்வில் திறந்த உடல் பற்றிய வெட்க உணர்வு கிடையாது. குளிக்கும் இடங்களில் இருபாலரும் ஆடையின்றிக் குளிப்பதிலும், நீந்தி விளையாடுவதிலும் அருவருப்பு அற்றவராய் இருந்தனர் என்னும் பழந்த்தமிழ் பண்பாட்டை நாவலில் புகுத்த பூம்பாவை -வில்லாளன், அபிராசி - நீலவிழி ஆகியோரின் நீர் விளையாடலில் புகுத்தியுள்ளார் கண்ணதாசன்.
வசனத்துறையில் தனக்கென்று ஒரு தனிப்பாணி உண்டு, சமூகக்கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு என்று கூறும் கண்ணதாசன் இன்றைக்கு சுமார் 52 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன குமரிக்கண்டத்தில் வாழ்ந்த பச்சைத் தமிழரின் பண்பாட்டு வாழ்க்கையைக் கடல்்கொண்ட தென்னாடு என்ற நாவலில் சித்தரித்து உள்ளார்.தென்னாட்டைக் கடல் கொண்டது. ஆனால் கவிஞரின் தென்னாடு காலத்தால் அழியாதது. அது குறித்து சமூகக் கண்ணோட்டத்தில் ஆய்கிறது இக்கட்டுரை.
இந்து மாக்கடலில் மூழ்கி மறைந்த கண்டத்தைப் பற்றிய ஆய்வு பல்துறை வல்லுநர்களால் நடத்தப்பட்டது. குமரிக்கண்டம் லெமுரியாக்கண்டம், கோண்டுவானா என்னும் முப்பெயர்களால் இப்பகுதி அழைக்கப்பட்டது. இத்தென்பகுதியில் குமரிக்கோடு, பன்மலையடுக்கம், பஃறுளியாறு மற்றும் 52 நாடுகள் இருந்தன.
தென்மதுரையைத் தலைநகராகக் கொண்டு இவையனைத்தையும் ஆண்டவன் நிலந்திரு திருவிற்பாண்டியன். இதனை கலித்தொகை (104) சிலப்பதிகாரம் (காடுகாண் காதை 18-22), தொல்காப்பியம் பாயிரத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை முதலியனவும் உறுதி செய்கின்றன.
கண்ணதாசன் இக்கதையைத் தேர்வு செய்ததற்குக் காரணம், தமிழ்நாட்டில் சிலர் தமிழன் வரலாற்றை மறைக்க முயன்று, லெமூரியாக் கதைகள் கட்டுக்கதைகள் என்றும் வாதித்தனர். அதற்கு கடல்கோள், ஏற்பனை, ஏழ்தெங்கம், பன்மலைய்டுக்கம்,
பஃறுளியாறு, குமரியாறு, நிலந்திரு திருவிற்பாண்டியன் போன்ற மிகச்சில உறுதியான தகவல்களோடு சற்று கற்பனையைச் கூட்டி கதையை நகர்த்தியுள்ளார். இக்குறிப்பை அவரது ’எனது சுயசரிதம்’ என்ற நூலில் காணலாம்.
கதைச் சுருக்கம்:
பாண்டியன் மகன் வில்லாளனும் அறுவா நாட்டு இளவரசி பூம்பாவையும் அந்நாளைய மணமுறைப்படி மணம் புரிகின்றனர்.
இளவரசனைக் காதலித்த நீலவிழி பாண்டிய நாட்டுக்கு வணிகம் செய்ய வந்த எபிரேய அரசன் செமோசியை மணக்கிறாள். ஆனால் அவள் மனதில் வில்லாளனே இருக்கிறான்.மணிச்சரம் தீவில் அம்ருதா என்ற ஒரு இளம்பெண் ஆவியாக வாழ்கிறாள். நீலவிழி அம்ருதாவின் உதவியுடன் பூம்பாவையையும் வில்லாளனையும் பழி வாங்குகிறாள். அவள் வஞ்சகத்தைப் புரிந்து கொண்ட செமோசி அவளைப் பாண்டிய நாட்டிற்கு அனுப்பி விடுகிறான்.அங்கு அவள் மரண தண்டனை அடைகிறாள். இறுதியில் கடல் கோள் வருகிறது. மன்னனும் மக்களும் தென்மதுரையை விட்டு வெளியேறுகின்றனர். பஃறுளியாறும் பன்மலை அடுக்கமும் கடலுள் மூழ்கின. நீலவிழி வில்லாளன் இருவர் ஆவியும் கடலின் மீது உலவுகின்றன.இதுதான்்கடல்கொண்ட தென்னாட்டின் கதைப்பின்னல் . இதனூடாக கண்ணதாசன் குமரிக்கண்டத்தின் வரலாற்றையும் பிணைத்துக் காட்டுகிறார்.
வரலாற்றின் நோக்கம் நாவலிலேயே முடிவு அடைகின்றன. ஏனென்றால் சமுதாயத்தின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை, பூகோள அமைப்புகளை, சின்னஞ்சிறு விஷயங்களை நாவல் சொல்வது போல சரித்திரம் சொல்வது இல்லை என்பர். இந்த அடிப்படையில் கடல் கொண்ட தென்னாட்டை ஆராயலாம்.
லெமூரிய பழந்தமிழர் வாழ்வில் திறந்த உடல் பற்றிய வெட்க உணர்வு கிடையாது. குளிக்கும் இடங்களில் இருபாலரும் ஆடையின்றிக் குளிப்பதிலும், நீந்தி விளையாடுவதிலும் அருவருப்பு அற்றவராய் இருந்தனர் என்னும் பழந்த்தமிழ் பண்பாட்டை நாவலில் புகுத்த பூம்பாவை -வில்லாளன், அபிராசி - நீலவிழி ஆகியோரின் நீர் விளையாடலில் புகுத்தியுள்ளார் கண்ணதாசன்.
லெமூரியாவில் வாழ்ந்த பழந்தமிழரில் ஒரு பிரிவினரில் (மலைச்சாதியினர்) வழக்கம். பெண் தன் கணவனுடன் உடன் பிறந்தவர்கள் பலர் இருப்பின் அவள் அவர்களுக்கும் மனைவியாக இருப்பாள். இந்த முறையையும் தம் நாவலில் இடம்பெறச்செய்தவர் கண்ணதாசன். காட்டில் விரதம் மேற்கொண்ட ஒருத்திக்கு
நான்கு கொழுந்தன்மார்கள். அவள் நாங்கள் இவ்விரத்தில் வெற்றி பெற்றால் எனக்கு ஐந்து புருஷர்கள் என்று சொன்னாளாம். இம்முறை இருந்தது என்றாலும் இருபாலருக்கும் பொதுவான ஒழுக்க முறைகளும் மணவினை முறைகளும் இருந்தன
என்பதையும் நாவல் அழுத்தமாகச் சுட்டிச்செல்ல மறுக்கவில்லை.
அன்றைய மணமுறை: மணமக்கள் இருவரும் சூரியன் கோவிலுக்குச் சென்று (அன்றைய காலம் சூரிய வழிபாட்டுக்காலம்) தங்களின் ககளை ஒன்றாக இணைத்துக்கொள்வர். அக்ககைகளின் மீது அனைவரும் தங்களின் கைகளை வைத்து ஆசிர்வாதம் செய்வர். குரு, பத்தினி என இருவர் ஊரில் இருப்பர். இவர்களுள் குருபத்தினி அவ்விருவருக்கும் தேன் கொடுத்த பிறகு அவர்கள் தங்கள் ஆடை அணிகளை அவிழ்த்துக் கொடுத்து விட்டு கம்பளி யானையின் (அந்த வகை யானை இருந்ததாக ஆய்வாளர் க. அப்பாதுரையும் நிறுவார்) மீதேரி காட்டுக்குச் செல்வர். இரு
மாதங்கள் காட்டில் இருந்து திரும்புவர். திரும்பிய பின்னர்.குரு
மணமக்களின் வலக்கைப் பெருவிரலின் நடுவில் கீரி இருவர் இரத்தமும் கலக்குமாறு இணைத்துக் கட்டுவார். மணமகளின் இடையில் புலிநகம், சங்கு முதலியவற்றைக் கோத்த ஐம்படைத்தாலியை மணமகன் க்ட்டுவான். சூரியன்
கோவிலுக்குச் சென்று தாங்கள் காட்டுக்குப் போகும்போது ஏற்றி வைத்து விட்டுப் போன விளக்கைக் கொண்டுவந்து வீட்டில் வைத்து ஏற்றுவார்களாம். இந்த மணச்சடங்குகளைப் பூம்பாவை - வில்லாளன், செவ்வல்லி - மாமாறன் ஆகியோர் திருமணம் மூலம் வடித்துக் காட்டி லெமூரியர் காலத்தில் மனிதர் விலங்கு
நிலையில் இல்லை. மிக உயர்ந்த பண்பாட்டின் காவலராக இருந்தமையை என்று காட்டியிருப்பார். இதன் மூலம் லெமூரியர்களை ஆய்ந்த பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையின் கருத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைத்து இருப்பார்..
ஒரு சுவையான தகவல். சிவபெருமானைப்போல லெமூரிய மக்களுக்கு நெற்றிக்கண் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆம் லெமூரிய மக்களுக்கு நெற்றியில் வாதுமைப் பருப்பு (பாதாம்) அளவில் ஒரு புடைப்பு இருந்தது. மென்மையும் நுட்ப ஆற்றலும் பொருந்தியதாகவும் இருந்ததாம். இதனை அவர்கள் நெற்றிக்கண்
என்றே கூறினராம். இச்சுவையான தகவலை நீலவிழியின் நெற்றிக்கண்ணில் பெரிய ராணி மையெழுதிச் சென்றார் என்று கண்ணதாசன் தன் நாவலில் சுட்டிக்காட்டுகிறார்.அழிந்து போன நம் பண்டைய இனத்தின் எந்த ஒரு தகவலும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் கவிஞர் காட்டும் அக்கறை இதில் புலனாகும்.
லெமூரிய மக்களிடம் இருந்த வியக்கத்ததிறம் அவர்கள் இறந்த உடலைக் கெடாமல் வைத்திருக்கும் திறம் படைத்தமை.. இதனை முதுமக்கள் தாழியில் இருந்த அம்ருதாவின் உடலில் அவள் ஆவிபகல் முழுவதும் உறங்கும். இரவில் விரும்பியவர் உடலில் புகும்என்றும், இது பறக்கும் தனமை கொண்டது என்றும், தன் காதலனை அடைய சூழ்ச்சி செய்கிறது என்றும் கதைக்கு ஏற்ப சுவையாகப் படைத்திருப்பார். இது இக்காலத்தில் உள்ள ஆவி நம்பிக்கையை ஒத்திருக்கிறது.
இறப்பவர் தமெக்கென கல்லறையைக் கட்டி அதில் இறப்பின் குறிக்கோள் (தற்கொலை செய்து கொள்பவர்கள்) போன்ற்வற்றை சாகும் முன்னே பொறித்துவிடும் வழக்கமும் இருந்திருக்கிறது. இது சங்க கால மக்களின் வடக்கிருத்தலை ஒத்திருக்கிறது. லெமூரியர்களில் பெண்களும் வடக்கிருப்பர். வடக்கிருக்கும் காரணங்களில் காதலும் அடங்கும். இக்கருத்தை அம்ருதாவின் தாழியில் பொறித்திருந்ததாகக் கவிஞர் கூறும் செய்தியால் அறியலாம்.
கை, கால் விரல்களோடு ஆறடிவரை உயரம் கொண்ட மனிதனை ஒத்த லெமூர் என்ற குரங்கினம் லெமூரியாவில் இருந்தன. இதனை மட்டும் கவிஞர் மந்தா குரங்கு என்று சுட்டுவது ஏன் எனத்தெரியவில்லை. மந்தாக் குரங்கு மனிதனைப் போல நடந்து கொண்டு மணியழகியைக் கற்பழித்தது என்று கவிஞர் சற்று சிந்திக்க வைக்கிறது. ஆய்வாளர்களுல் சிலர் லெமூர் குரங்கினமே அந்நாளைய மனித இனம் என்ற முடிவுக்கு வந்தனர். இந்தக் கருத்தை அணி செய்வதற்காக கவிஞர் இவ்வாறு அமைத்தாரா என்பது ஆய்வுக்கு உரியது. அல்லது கூர்தலறக் கோட்பாட்டு
அடிப்படையில் மனித முன்னோடி மனிதக் குரங்குகளே என்ற ஆய்வாளர்களின் க்ருத்தை நிலை நாட்ட இவ்வாறு படைத்துக் காட்டியுள்ளார் எனவும் கொள்ள இடமுண்டு.
அடுத்தமிக முக்கியமான செய்தி, தமிழர்களின் தொன்மை. அவர்க்ளே மனித நாகரிகத்தை உருவாக்கினர் என்பதைக் காட்டும் ஆதாரங்களில் ஒன்று தமிழ்ச்சங்கம். இச்சங்கக் கட்டிடம் லெமூரியர்கள் கட்டினர். இக்கட்டிடத்தை ஆண்களும் பெண்களும் சேர்ந்தே கட்டினர். நீர் நெருப்பிலிருந்து இக்கட்டிடத்தைக் காக்க இறையனார் (இந்த இறையனார் யாரென்று தெரியவில்லை) சூரியனை வேண்டினாராம். கடுமழையிலும் இக்கட்டிடம் நனையாது புதுமண் கட்டிடமான சங்கக் கட்டிடம் வெய்யிலால் பாதுகாக்கப் பட்டது என்று கூறுகிறார். அத்துடன் அந்நாளில் இருந்துதான் ஞாயிறு வழிபாடு உருவாயிற்று என்ற கருத்தையும் பதிவு
செய்துள்ளார். சங்கம் குறித்த விவாதம் இன்னும் முற்றுப்பெறாத நிலையில் சங்கம் இருந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இக்கருத்தை நிறுவுவதைப் பார்க்க முடிகிறது.
படைக்கும் திறன் வாய்ந்த ஒரு எழுத்தாளன் தன் சொந்த அனுபவத்தில் காணாத் ஒரு பொருளையும் தன் கற்பனை ஆற்றலால் நம்பத்தகுந்த வகையில் படைத்து விடுவான்
என்பதுதான் உண்மை. கவிஞரும் போதை தரும் கோதை நெல்லிக்கனி இவ்வகையானது. இந்நெல்லிக்கனியைத் தின்ற ஒருவன் பல நாட்கள் மயங்கிய நிலையில் தன்னை
முற்றிலும் மறந்து ஆட்டுவிப்பாரின் கைப்பாவையாக இருப்பான் என கவிஞர் படைத்திருப்பது சற்று கூடுதலாக இருப்பினும் கதையின் சுவக்கு அதுவும் வலுவேற்றுகிறது எனலாம்.
இயற்கைச் சீற்றங்களின் அறிகுறியை பறவைகள் அறிதல், அக்காலத்தில் வாழ்ந்த கம்பளி யானை, மிக நீளமான கடல் பாம்பு, செழித்து வளர்ந்து இருந்த யூகலிப்டஸ் மரங்கள் போன்ற லெமூரியாவின் சிறப்பு எவற்றையும் விட்டுவிடாமல், அவற்றையெல்லாம் ஆங்காங்கு கதைக் கோப்புடன் இணைத்துக்கொண்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்நாளைய வழக்குச்சொற்கள் அகப்படாத்து தமிழுலகத்திற்கு பேரிழப்பே. இந்த வருத்தம் கவிஞருக்கும் உண்டு.
தொல்தமிழர் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சி பல நிலைகளில் நடந்தபோது, அதை நாவல் மூலம் நிறுவியவர் கண்ணதாசன். இவர் முந்தையோர் வடித்து வைத்த வரலாற்று
உண்மைகளைக் கொண்டே கடல் கொண்ட தென்னாட்டைப் படைத்துள்ளார்.
நாவல் என்றால் கற்பனை இல்லாமல் இராது. ஆனால், அக்கற்பனையைச் சற்றுப் புறந்தள்ளி ’கடல் கொண்ட தென்னாடு’ என்ற இந்நாவலை நோக்கும்போது கடைநிலைத் தமிழனுக்கும் தன்னுடைய இன வரலாறு தெரிய வேண்டும் என்பதில் கவிஞர்
கண்ணதாசன் கொண்ட அக்கறை நன்கு புலப்படும்!!!
ஆதிரா...
நான்கு கொழுந்தன்மார்கள். அவள் நாங்கள் இவ்விரத்தில் வெற்றி பெற்றால் எனக்கு ஐந்து புருஷர்கள் என்று சொன்னாளாம். இம்முறை இருந்தது என்றாலும் இருபாலருக்கும் பொதுவான ஒழுக்க முறைகளும் மணவினை முறைகளும் இருந்தன
என்பதையும் நாவல் அழுத்தமாகச் சுட்டிச்செல்ல மறுக்கவில்லை.
அன்றைய மணமுறை: மணமக்கள் இருவரும் சூரியன் கோவிலுக்குச் சென்று (அன்றைய காலம் சூரிய வழிபாட்டுக்காலம்) தங்களின் ககளை ஒன்றாக இணைத்துக்கொள்வர். அக்ககைகளின் மீது அனைவரும் தங்களின் கைகளை வைத்து ஆசிர்வாதம் செய்வர். குரு, பத்தினி என இருவர் ஊரில் இருப்பர். இவர்களுள் குருபத்தினி அவ்விருவருக்கும் தேன் கொடுத்த பிறகு அவர்கள் தங்கள் ஆடை அணிகளை அவிழ்த்துக் கொடுத்து விட்டு கம்பளி யானையின் (அந்த வகை யானை இருந்ததாக ஆய்வாளர் க. அப்பாதுரையும் நிறுவார்) மீதேரி காட்டுக்குச் செல்வர். இரு
மாதங்கள் காட்டில் இருந்து திரும்புவர். திரும்பிய பின்னர்.குரு
மணமக்களின் வலக்கைப் பெருவிரலின் நடுவில் கீரி இருவர் இரத்தமும் கலக்குமாறு இணைத்துக் கட்டுவார். மணமகளின் இடையில் புலிநகம், சங்கு முதலியவற்றைக் கோத்த ஐம்படைத்தாலியை மணமகன் க்ட்டுவான். சூரியன்
கோவிலுக்குச் சென்று தாங்கள் காட்டுக்குப் போகும்போது ஏற்றி வைத்து விட்டுப் போன விளக்கைக் கொண்டுவந்து வீட்டில் வைத்து ஏற்றுவார்களாம். இந்த மணச்சடங்குகளைப் பூம்பாவை - வில்லாளன், செவ்வல்லி - மாமாறன் ஆகியோர் திருமணம் மூலம் வடித்துக் காட்டி லெமூரியர் காலத்தில் மனிதர் விலங்கு
நிலையில் இல்லை. மிக உயர்ந்த பண்பாட்டின் காவலராக இருந்தமையை என்று காட்டியிருப்பார். இதன் மூலம் லெமூரியர்களை ஆய்ந்த பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையின் கருத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைத்து இருப்பார்..
ஒரு சுவையான தகவல். சிவபெருமானைப்போல லெமூரிய மக்களுக்கு நெற்றிக்கண் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆம் லெமூரிய மக்களுக்கு நெற்றியில் வாதுமைப் பருப்பு (பாதாம்) அளவில் ஒரு புடைப்பு இருந்தது. மென்மையும் நுட்ப ஆற்றலும் பொருந்தியதாகவும் இருந்ததாம். இதனை அவர்கள் நெற்றிக்கண்
என்றே கூறினராம். இச்சுவையான தகவலை நீலவிழியின் நெற்றிக்கண்ணில் பெரிய ராணி மையெழுதிச் சென்றார் என்று கண்ணதாசன் தன் நாவலில் சுட்டிக்காட்டுகிறார்.அழிந்து போன நம் பண்டைய இனத்தின் எந்த ஒரு தகவலும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் கவிஞர் காட்டும் அக்கறை இதில் புலனாகும்.
லெமூரிய மக்களிடம் இருந்த வியக்கத்ததிறம் அவர்கள் இறந்த உடலைக் கெடாமல் வைத்திருக்கும் திறம் படைத்தமை.. இதனை முதுமக்கள் தாழியில் இருந்த அம்ருதாவின் உடலில் அவள் ஆவிபகல் முழுவதும் உறங்கும். இரவில் விரும்பியவர் உடலில் புகும்என்றும், இது பறக்கும் தனமை கொண்டது என்றும், தன் காதலனை அடைய சூழ்ச்சி செய்கிறது என்றும் கதைக்கு ஏற்ப சுவையாகப் படைத்திருப்பார். இது இக்காலத்தில் உள்ள ஆவி நம்பிக்கையை ஒத்திருக்கிறது.
இறப்பவர் தமெக்கென கல்லறையைக் கட்டி அதில் இறப்பின் குறிக்கோள் (தற்கொலை செய்து கொள்பவர்கள்) போன்ற்வற்றை சாகும் முன்னே பொறித்துவிடும் வழக்கமும் இருந்திருக்கிறது. இது சங்க கால மக்களின் வடக்கிருத்தலை ஒத்திருக்கிறது. லெமூரியர்களில் பெண்களும் வடக்கிருப்பர். வடக்கிருக்கும் காரணங்களில் காதலும் அடங்கும். இக்கருத்தை அம்ருதாவின் தாழியில் பொறித்திருந்ததாகக் கவிஞர் கூறும் செய்தியால் அறியலாம்.
கை, கால் விரல்களோடு ஆறடிவரை உயரம் கொண்ட மனிதனை ஒத்த லெமூர் என்ற குரங்கினம் லெமூரியாவில் இருந்தன. இதனை மட்டும் கவிஞர் மந்தா குரங்கு என்று சுட்டுவது ஏன் எனத்தெரியவில்லை. மந்தாக் குரங்கு மனிதனைப் போல நடந்து கொண்டு மணியழகியைக் கற்பழித்தது என்று கவிஞர் சற்று சிந்திக்க வைக்கிறது. ஆய்வாளர்களுல் சிலர் லெமூர் குரங்கினமே அந்நாளைய மனித இனம் என்ற முடிவுக்கு வந்தனர். இந்தக் கருத்தை அணி செய்வதற்காக கவிஞர் இவ்வாறு அமைத்தாரா என்பது ஆய்வுக்கு உரியது. அல்லது கூர்தலறக் கோட்பாட்டு
அடிப்படையில் மனித முன்னோடி மனிதக் குரங்குகளே என்ற ஆய்வாளர்களின் க்ருத்தை நிலை நாட்ட இவ்வாறு படைத்துக் காட்டியுள்ளார் எனவும் கொள்ள இடமுண்டு.
அடுத்தமிக முக்கியமான செய்தி, தமிழர்களின் தொன்மை. அவர்க்ளே மனித நாகரிகத்தை உருவாக்கினர் என்பதைக் காட்டும் ஆதாரங்களில் ஒன்று தமிழ்ச்சங்கம். இச்சங்கக் கட்டிடம் லெமூரியர்கள் கட்டினர். இக்கட்டிடத்தை ஆண்களும் பெண்களும் சேர்ந்தே கட்டினர். நீர் நெருப்பிலிருந்து இக்கட்டிடத்தைக் காக்க இறையனார் (இந்த இறையனார் யாரென்று தெரியவில்லை) சூரியனை வேண்டினாராம். கடுமழையிலும் இக்கட்டிடம் நனையாது புதுமண் கட்டிடமான சங்கக் கட்டிடம் வெய்யிலால் பாதுகாக்கப் பட்டது என்று கூறுகிறார். அத்துடன் அந்நாளில் இருந்துதான் ஞாயிறு வழிபாடு உருவாயிற்று என்ற கருத்தையும் பதிவு
செய்துள்ளார். சங்கம் குறித்த விவாதம் இன்னும் முற்றுப்பெறாத நிலையில் சங்கம் இருந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இக்கருத்தை நிறுவுவதைப் பார்க்க முடிகிறது.
படைக்கும் திறன் வாய்ந்த ஒரு எழுத்தாளன் தன் சொந்த அனுபவத்தில் காணாத் ஒரு பொருளையும் தன் கற்பனை ஆற்றலால் நம்பத்தகுந்த வகையில் படைத்து விடுவான்
என்பதுதான் உண்மை. கவிஞரும் போதை தரும் கோதை நெல்லிக்கனி இவ்வகையானது. இந்நெல்லிக்கனியைத் தின்ற ஒருவன் பல நாட்கள் மயங்கிய நிலையில் தன்னை
முற்றிலும் மறந்து ஆட்டுவிப்பாரின் கைப்பாவையாக இருப்பான் என கவிஞர் படைத்திருப்பது சற்று கூடுதலாக இருப்பினும் கதையின் சுவக்கு அதுவும் வலுவேற்றுகிறது எனலாம்.
இயற்கைச் சீற்றங்களின் அறிகுறியை பறவைகள் அறிதல், அக்காலத்தில் வாழ்ந்த கம்பளி யானை, மிக நீளமான கடல் பாம்பு, செழித்து வளர்ந்து இருந்த யூகலிப்டஸ் மரங்கள் போன்ற லெமூரியாவின் சிறப்பு எவற்றையும் விட்டுவிடாமல், அவற்றையெல்லாம் ஆங்காங்கு கதைக் கோப்புடன் இணைத்துக்கொண்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்நாளைய வழக்குச்சொற்கள் அகப்படாத்து தமிழுலகத்திற்கு பேரிழப்பே. இந்த வருத்தம் கவிஞருக்கும் உண்டு.
தொல்தமிழர் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சி பல நிலைகளில் நடந்தபோது, அதை நாவல் மூலம் நிறுவியவர் கண்ணதாசன். இவர் முந்தையோர் வடித்து வைத்த வரலாற்று
உண்மைகளைக் கொண்டே கடல் கொண்ட தென்னாட்டைப் படைத்துள்ளார்.
நாவல் என்றால் கற்பனை இல்லாமல் இராது. ஆனால், அக்கற்பனையைச் சற்றுப் புறந்தள்ளி ’கடல் கொண்ட தென்னாடு’ என்ற இந்நாவலை நோக்கும்போது கடைநிலைத் தமிழனுக்கும் தன்னுடைய இன வரலாறு தெரிய வேண்டும் என்பதில் கவிஞர்
கண்ணதாசன் கொண்ட அக்கறை நன்கு புலப்படும்!!!
ஆதிரா...
கடல் கொண்ட தென்னாடு படித்ததில்லை அக்கா. மிகவும் அழகாக விளக்கியுள்ளீர்கள். படிக்க வேண்டும் என்ற பேராவலை ஏற்படுத்திவிட்டது தங்களின் இக்கட்டுரை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்ல இலக்கியங்களைப் பற்றிய மதிப்புரை என்பது அப்படைப்பை வாசிக்க நம்மைத்தூண்டும் தூண்டுகோலாக அமைய வேண்டும்.. அந்த வகையில் கண்ணதாசனின் இந்த படைப்பை வாசிக்கும் ஆவல் தூண்டப்ப்பட்டது ஆதிரா...
இங்கு உங்கள் தமிழ்ச்சேவை மிகவும் பாராட்டும்படி அமைந்துள்ளது,
உங்களை நீங்கள் சேர்ந்த அன்றே கண்டுகொண்டேன்... உங்களில் இருக்கும் இந்த தமிழ்த்திறமையை...
பாராட்டுக்கள் ஆதிரா...
இங்கு உங்கள் தமிழ்ச்சேவை மிகவும் பாராட்டும்படி அமைந்துள்ளது,
உங்களை நீங்கள் சேர்ந்த அன்றே கண்டுகொண்டேன்... உங்களில் இருக்கும் இந்த தமிழ்த்திறமையை...
பாராட்டுக்கள் ஆதிரா...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா wrote:கடல் கொண்ட தென்னாடு படித்ததில்லை அக்கா. மிகவும் அழகாக விளக்கியுள்ளீர்கள். படிக்க வேண்டும் என்ற பேராவலை ஏற்படுத்திவிட்டது தங்களின் இக்கட்டுரை!
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி சிவா.. நாவல் என்பதை விட இந்நாவல் கடல்கோளால் அழிந்த குமரிக்கண்டத்தின், பண்டைய தமிழினத்தின் வரலாறு என்றே சொல்லலாம். அழகாக கவிஞரால் கதையுடன் பின்னப்பட்டது..
கலை wrote:நல்ல இலக்கியங்களைப் பற்றிய மதிப்புரை என்பது அப்படைப்பை வாசிக்க நம்மைத்தூண்டும் தூண்டுகோலாக அமைய வேண்டும்.. அந்த வகையில் கண்ணதாசனின் இந்த படைப்பை வாசிக்கும் ஆவல் தூண்டப்ப்பட்டது ஆதிரா...
இங்கு உங்கள் தமிழ்ச்சேவை மிகவும் பாராட்டும்படி அமைந்துள்ளது,
உங்களை நீங்கள் சேர்ந்த அன்றே கண்டுகொண்டேன்... உங்களில் இருக்கும் இந்த தமிழ்த்திறமையை...
பாராட்டுக்கள் ஆதிரா...
தங்களின் அவ்வப்போதைய பாராட்டும் ஊக்கமும் எனக்கு மிகுந்த பலம் அளிக்கிறது கலை. இயல்பாக என்னிடம் உள்ள தமிழ்ப் பற்றை மேலும் அதிகரிக்கச்செய்கிறது. இந்த நட்பு என்றும் தொடர ஏங்கும் மனத்துடன் நன்றியும் அன்பும்...
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
மிக அருமையான பகிர்வு நன்றிகள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
உங்கள் விழி எல்லா திசைக்கும் பயணம் செல்கிறதே.அருமை தோழியே.
இந்த கட்டுரை தந்த விளாக்கம் மேற்கொண்டு படிக்க ஆவல் வந்துவிட்டது.
இலக்கியத்தின் காலச்சுவடுகளை உங்கள் வழியில் ,இந்த வலையில் தாருங்கள்.
காத்திருக்கோம்.நன்றி தோழியே..
இந்த கட்டுரை தந்த விளாக்கம் மேற்கொண்டு படிக்க ஆவல் வந்துவிட்டது.
இலக்கியத்தின் காலச்சுவடுகளை உங்கள் வழியில் ,இந்த வலையில் தாருங்கள்.
காத்திருக்கோம்.நன்றி தோழியே..
kalaimoon70 wrote:உங்கள் விழி எல்லா திசைக்கும் பயணம் செல்கிறதே.அருமை தோழியே.
இந்த கட்டுரை தந்த விளாக்கம் மேற்கொண்டு படிக்க ஆவல் வந்துவிட்டது.
இலக்கியத்தின் காலச்சுவடுகளை உங்கள் வழியில் ,இந்த வலையில் தாருங்கள்.
காத்திருக்கோம்.நன்றி தோழியே..
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே...
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|