புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் இந்த உலைவெறி? அணு உலைகள்- வரமா, சாபமா ?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு " நன்றி : ஞானி "
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
நண்பர்களே , திரு ஞானி அவர்களின் கேள்வி பதில் போன்ற இந்த கட்டுரைகளை முழுவதும் படியுங்கள் (குறிப்பாக அணு உலை திறக்கபடவேண்டும் என்பவர்கள்).
ஏன் இந்த உலைவெறி? அணு உலைகள்- வரமா, சாபமா ?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு
இது ஜனவரி 4,2012 அன்று என் பிறந்த நாளையொட்டி நான் எழுதி வெளியிட்டிருக்கும் சிறு நூல். அணு உலை வேண்டாம் என்று சொல்பவர்களிடம், ஏன் வேண்டுமென்று சொல்வோர் வைக்கும் வாதங்களுக்கெல்லாம் இதில் பதில்கள் உள்ளன.
ஏன் இந்த உலைவெறி?
அணு உலைகள்- வரமா, சாபமா ?-
ஒரு கேள்வி பதில் தொகுப்பு
——————
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
———————-
அணுகுண்டு சோதனைகள், அணுமின் நிலைய விபத்துகள்,
கதிரியக்கங்கள் ஆகியவற்றால் உலகில் இதுவரை இறந்துவிட்ட லட்சக்கணக்கான மக்களுக்கும், இன்னமும் நோய்களால் நடைபிணங்களாக வாழ்ந்து கொண்டிருப்போருக்கும், இதிலிருந்து பிடிவாதமாக எதையும் கற்றுக் கொள்ள மறுக்கிற எல்லோருக்கும் இந்த நூல் காணிக்கை.
———————————–
வணக்கம்
எந்தக் கட்சியும் எந்தத் தலைவரும் ஒரு போதும் அறிவிக்காத
ஒரு பிரும்மாண்டமான இலவசம் வாக்காளர்களான நமக்காகக்
காத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் இலவசக் கதிர்வீச்சு. அதற்கு
ஆணவம் மிகுந்த ஜெயலலிதாவா, தியாகதீபம் வைகோவா,
சூழ்ச்சிக்காரக் கருணாநிதியா, அப்பாவியான வாக்காளர்களா
என்றெல்லாம் பாரபட்சமே கிடையாது. எல்லாரையும் அழித்துவிடும்.
தமிழ்நாட்டை அழிக்க வடக்கே கல்பாக்கத்திலும் தெற்கே
கூடகுளத்திலும் அமைந்துள்ள அணு உலைகளே போதுமானவை.
பெரும் விபத்துக்குள்ளான அணு உலையிலிருந்து 140 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள டோக்கியோவில் கதிரியக்க அளவு 20 மடங்கு
அதிகமாகிவிட்டது. சென்னைக்கும் கல்பாக்கத்துக்கும் இடையில்
வெறும் 80 கிலோமீட்டர்தான். சென்னையில் சுனாமி வந்தபோது
கல்பாக்கம் உலையும் பாதிக்கப்பட்டது. பெரிய பாதிப்பு இல்லாததால்
தப்பித்துக் கொண்டோம். ஜப்பான் உலைக்கு நேர்ந்தது போல இங்கே
நேர்ந்தால் இப்போது இதை எழுத நானும் படிக்க நீங்களும் இருக்க
மாட்டோம்.
அணு உலையில் பெரும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக சில
லட்சம் பேரும் மெல்ல மெல்ல புற்று நோயில் மேலும் பல லட்சம்
பேரும் அழிவது நிச்சயம். அது பல தலைமுறைகளுக்கு நிலம், நீர்,
காற்று, மனிதர்களை நாசமாக்குகிறது. அணுக் கழிவுகளிலிருந்து
கதிரியக்கம் ஏற்படாமலும் பரவாமலும் கட்டுப்படுத்தி வைக்க
போதுமான தொழில்நுட்பம் உலகில் எங்கேயும் இன்னமும் நூறு
சத விகித உத்தரவாதத்துடன் உருவாக்கப்படவே இல்லை. விபத்து
ஏற்படாது என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது. ஏற்பட்டால் தீர்வுகள்,
நிவாரணங்கள் சாத்தியமும் இல்லை.
விபத்துக்கு பயந்தால் முன்னேற முடியாது என்று அப்துல் கலாம்
சொல்கிறார். விபத்துக்கு பயப்படாமல், அவர் கன நீரில் முகம்
கழுவி, யுரேனியம் படுக்கையில் படுத்து ஆராய்ச்சி செய்து மேடம்
கியூரியைப் போல நோபல் வாங்கிக் கொள்வதில் நமக்கு ஒரு
ஆட்சேபமும் இல்லை.ஆனால் ஒரு மக்கள் சமூகத்தையே அவர்கள்
சம்மதம் இல்லாமல் ஆபத்துக்கு உட்படுத்த மன்மோகனுக்கோ
கலாமுக்கோ எந்த அரசுக்குமோ துளிக் கூட உரிமை கிடையாது.
ஆனால் கூடங்குளத்தில் அதைத்தான் செய்கிறார்கள்.
எல்லாம் மின்சாரத்துக்காக என்கிறார்கள். அணு உலையின் மூலம்
ஒருபோதும் நம் மின் தேவை நிறைவேறவே போவதில்லை. அணு
உலை ஆதரவு தரப்பில் சொல்லப்படும் முழுப் பொய்கள், அரை
உண்மைகள், திசை திருப்பும் பிரசாரங்கள் எல்லாவற்றுக்கும் இந்த
சிறு தொகுப்பில் பதில்கள் உள்ளன.
ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப வருடக்கணக்காக
சொல்லவேண்டிய அவசியம் இருப்பது ஒரு எழுத்தாளனுக்கு
கொடுமையான விஷயம். அணு உலைகளுக்கு எதிராக நான்
எழுதி வருவதற்கு இது வெள்ளி விழா ஆண்டு ! எனக்கும் இருபது
வருடங்கள் முன்னாலிருந்தே இந்தியாவில் எண்ணற்ற அறிஞர்கள்,
பத்திரிகையாளர்கள், அமைப்புகள் இதைச் செய்து வருகிறார்கள்.
என்னை வழிப்படுத்தியவர்கள் அவர்கள்தான். பிரஃபுல் பித்வாய்,
தீரேந்திர சர்மா, கிளாட் ஆல்வாரிஸ், எம்.வி.ரமணா, மோகன் சர்மா,
பி.கே.சுந்தரம், சுப்பாராவ், தமிழகத்தில் பூவுலகின் நண்பர்கள்,
புனே, டெல்லி, திருவனந்தபுரம் என்று பல ஊர்களில் இருக்கும்
அணு எதிர்ப்பு இயக்கங்கள், அவற்றுக்கு உதவி வரும் விஞ்
ஞானிகள் என்று நீளும் பட்டியலில் உள்ள பலரும் வருடக்கணக்கில்
திரட்டித் தந்திருக்கும் தகவல் களஞ்சியத்திலிருந்தும், சம கால
உலகளாவிய நடப்புகளிலிருந்தும் எடுத்த ஒரு கரண்டி சத்துணவே
இந்த தொகுப்பு.
இதை தமிழக மக்களுக்கு என் பிறந்த நாள் பரிசாக அளிப்பதில்
மகிழ்ச்சியடைகிறேன்.
அன்புடன்
ஞாநி
ஜனவரி 4, 2012
சென்னை 78
நன்றி :
ஞாநி (http://gnani.net)
நண்பர்களே , திரு ஞானி அவர்களின் கேள்வி பதில் போன்ற இந்த கட்டுரைகளை முழுவதும் படியுங்கள் (குறிப்பாக அணு உலை திறக்கபடவேண்டும் என்பவர்கள்).
ஏன் இந்த உலைவெறி? அணு உலைகள்- வரமா, சாபமா ?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு
இது ஜனவரி 4,2012 அன்று என் பிறந்த நாளையொட்டி நான் எழுதி வெளியிட்டிருக்கும் சிறு நூல். அணு உலை வேண்டாம் என்று சொல்பவர்களிடம், ஏன் வேண்டுமென்று சொல்வோர் வைக்கும் வாதங்களுக்கெல்லாம் இதில் பதில்கள் உள்ளன.
ஏன் இந்த உலைவெறி?
அணு உலைகள்- வரமா, சாபமா ?-
ஒரு கேள்வி பதில் தொகுப்பு
——————
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
———————-
அணுகுண்டு சோதனைகள், அணுமின் நிலைய விபத்துகள்,
கதிரியக்கங்கள் ஆகியவற்றால் உலகில் இதுவரை இறந்துவிட்ட லட்சக்கணக்கான மக்களுக்கும், இன்னமும் நோய்களால் நடைபிணங்களாக வாழ்ந்து கொண்டிருப்போருக்கும், இதிலிருந்து பிடிவாதமாக எதையும் கற்றுக் கொள்ள மறுக்கிற எல்லோருக்கும் இந்த நூல் காணிக்கை.
———————————–
வணக்கம்
எந்தக் கட்சியும் எந்தத் தலைவரும் ஒரு போதும் அறிவிக்காத
ஒரு பிரும்மாண்டமான இலவசம் வாக்காளர்களான நமக்காகக்
காத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் இலவசக் கதிர்வீச்சு. அதற்கு
ஆணவம் மிகுந்த ஜெயலலிதாவா, தியாகதீபம் வைகோவா,
சூழ்ச்சிக்காரக் கருணாநிதியா, அப்பாவியான வாக்காளர்களா
என்றெல்லாம் பாரபட்சமே கிடையாது. எல்லாரையும் அழித்துவிடும்.
தமிழ்நாட்டை அழிக்க வடக்கே கல்பாக்கத்திலும் தெற்கே
கூடகுளத்திலும் அமைந்துள்ள அணு உலைகளே போதுமானவை.
பெரும் விபத்துக்குள்ளான அணு உலையிலிருந்து 140 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள டோக்கியோவில் கதிரியக்க அளவு 20 மடங்கு
அதிகமாகிவிட்டது. சென்னைக்கும் கல்பாக்கத்துக்கும் இடையில்
வெறும் 80 கிலோமீட்டர்தான். சென்னையில் சுனாமி வந்தபோது
கல்பாக்கம் உலையும் பாதிக்கப்பட்டது. பெரிய பாதிப்பு இல்லாததால்
தப்பித்துக் கொண்டோம். ஜப்பான் உலைக்கு நேர்ந்தது போல இங்கே
நேர்ந்தால் இப்போது இதை எழுத நானும் படிக்க நீங்களும் இருக்க
மாட்டோம்.
அணு உலையில் பெரும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக சில
லட்சம் பேரும் மெல்ல மெல்ல புற்று நோயில் மேலும் பல லட்சம்
பேரும் அழிவது நிச்சயம். அது பல தலைமுறைகளுக்கு நிலம், நீர்,
காற்று, மனிதர்களை நாசமாக்குகிறது. அணுக் கழிவுகளிலிருந்து
கதிரியக்கம் ஏற்படாமலும் பரவாமலும் கட்டுப்படுத்தி வைக்க
போதுமான தொழில்நுட்பம் உலகில் எங்கேயும் இன்னமும் நூறு
சத விகித உத்தரவாதத்துடன் உருவாக்கப்படவே இல்லை. விபத்து
ஏற்படாது என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது. ஏற்பட்டால் தீர்வுகள்,
நிவாரணங்கள் சாத்தியமும் இல்லை.
விபத்துக்கு பயந்தால் முன்னேற முடியாது என்று அப்துல் கலாம்
சொல்கிறார். விபத்துக்கு பயப்படாமல், அவர் கன நீரில் முகம்
கழுவி, யுரேனியம் படுக்கையில் படுத்து ஆராய்ச்சி செய்து மேடம்
கியூரியைப் போல நோபல் வாங்கிக் கொள்வதில் நமக்கு ஒரு
ஆட்சேபமும் இல்லை.ஆனால் ஒரு மக்கள் சமூகத்தையே அவர்கள்
சம்மதம் இல்லாமல் ஆபத்துக்கு உட்படுத்த மன்மோகனுக்கோ
கலாமுக்கோ எந்த அரசுக்குமோ துளிக் கூட உரிமை கிடையாது.
ஆனால் கூடங்குளத்தில் அதைத்தான் செய்கிறார்கள்.
எல்லாம் மின்சாரத்துக்காக என்கிறார்கள். அணு உலையின் மூலம்
ஒருபோதும் நம் மின் தேவை நிறைவேறவே போவதில்லை. அணு
உலை ஆதரவு தரப்பில் சொல்லப்படும் முழுப் பொய்கள், அரை
உண்மைகள், திசை திருப்பும் பிரசாரங்கள் எல்லாவற்றுக்கும் இந்த
சிறு தொகுப்பில் பதில்கள் உள்ளன.
ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப வருடக்கணக்காக
சொல்லவேண்டிய அவசியம் இருப்பது ஒரு எழுத்தாளனுக்கு
கொடுமையான விஷயம். அணு உலைகளுக்கு எதிராக நான்
எழுதி வருவதற்கு இது வெள்ளி விழா ஆண்டு ! எனக்கும் இருபது
வருடங்கள் முன்னாலிருந்தே இந்தியாவில் எண்ணற்ற அறிஞர்கள்,
பத்திரிகையாளர்கள், அமைப்புகள் இதைச் செய்து வருகிறார்கள்.
என்னை வழிப்படுத்தியவர்கள் அவர்கள்தான். பிரஃபுல் பித்வாய்,
தீரேந்திர சர்மா, கிளாட் ஆல்வாரிஸ், எம்.வி.ரமணா, மோகன் சர்மா,
பி.கே.சுந்தரம், சுப்பாராவ், தமிழகத்தில் பூவுலகின் நண்பர்கள்,
புனே, டெல்லி, திருவனந்தபுரம் என்று பல ஊர்களில் இருக்கும்
அணு எதிர்ப்பு இயக்கங்கள், அவற்றுக்கு உதவி வரும் விஞ்
ஞானிகள் என்று நீளும் பட்டியலில் உள்ள பலரும் வருடக்கணக்கில்
திரட்டித் தந்திருக்கும் தகவல் களஞ்சியத்திலிருந்தும், சம கால
உலகளாவிய நடப்புகளிலிருந்தும் எடுத்த ஒரு கரண்டி சத்துணவே
இந்த தொகுப்பு.
இதை தமிழக மக்களுக்கு என் பிறந்த நாள் பரிசாக அளிப்பதில்
மகிழ்ச்சியடைகிறேன்.
அன்புடன்
ஞாநி
ஜனவரி 4, 2012
சென்னை 78
நன்றி :
ஞாநி (http://gnani.net)
கொடுமைதான் ! அப்படியானால் மாற்று மின்சார தயாரிப்பு
வழிகள் பற்றிய உண்மைகள்தான் என்ன ?
உலக அளவிலேயே அணுமின்சாரத்துக்குக் கொட்டிக் கொடுத்தது
போல வேறு எந்த வழிமுறைக்கும் கொடுத்தது கிடையாது.
சோவியத் யூனியன் அதிபராக இருந்து அது பிரிவதற்கு காரணமாக
இருந்த அதிபர் மிக்கேல் கோர்பசேவ், அணு விஞ்ஞானிகளின்
பத்திரிகையின் மார்ச்/ஏப்ரல் 2011 இதழில் எழுதியதைப் பாருங்கள்:
“மின்சாரத் தேவைக்கோ, சூழல் பாதிப்பைத் தடுப்பதற்கோ சிலர்
சொல்வது போல அணுமின்சாரம் ஒன்றும அருமருந்தல்ல. அது
மலிவு என்பது மிகைப்படுத்தப்பட்ட பேச்சு. அதன் விலையில் பல
செலவுகள் காட்டப்படாமல் மறைக்கப்பட்டிருக்கின்றன. மான்யம்
அள்ளித் தரப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 1947 முதல் 1999
வரை நேரடியாக் கொடுத்த மான்யம் 115 பில்லியன் டாலர்கள் (சுமார்
ஐந்து லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்கள்). மறைமுக மான்யங்கள் ஏழு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்கள். இதே காலகட்டத்தில் காற்று சூரியசக்திக்கெல்லாமாக சேர்த்து கொடுத்த மொத்த மான்யம் வெறும் 5.5.பில்லியன் டாலர் (வெறும் 27 ஆயிரத்து 500 கோடி ரூபாய்கள்)”. செர்னோபில் விபத்துதான் சோவியத் யூனியன் அரசு இனி பகிரங்கமாக எல்லா உண்மைகளையும் மக்களிடம் சொல்லியே ஆகவேண்டும் என்ற கருத்து-தகவல் சுதந்திரத்தைக் கொண்டு வந்தது; செர்னோபில்தான் என் கண்களைத் திறந்தது என்கிறார் கோர்பசேவ் கலாமுக்கும் மன்மோகனுக்கும் கண் திறக்க இங்கே ஒரு செர்னோபில் கூடப் போதாது.
வழிகள் பற்றிய உண்மைகள்தான் என்ன ?
உலக அளவிலேயே அணுமின்சாரத்துக்குக் கொட்டிக் கொடுத்தது
போல வேறு எந்த வழிமுறைக்கும் கொடுத்தது கிடையாது.
சோவியத் யூனியன் அதிபராக இருந்து அது பிரிவதற்கு காரணமாக
இருந்த அதிபர் மிக்கேல் கோர்பசேவ், அணு விஞ்ஞானிகளின்
பத்திரிகையின் மார்ச்/ஏப்ரல் 2011 இதழில் எழுதியதைப் பாருங்கள்:
“மின்சாரத் தேவைக்கோ, சூழல் பாதிப்பைத் தடுப்பதற்கோ சிலர்
சொல்வது போல அணுமின்சாரம் ஒன்றும அருமருந்தல்ல. அது
மலிவு என்பது மிகைப்படுத்தப்பட்ட பேச்சு. அதன் விலையில் பல
செலவுகள் காட்டப்படாமல் மறைக்கப்பட்டிருக்கின்றன. மான்யம்
அள்ளித் தரப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 1947 முதல் 1999
வரை நேரடியாக் கொடுத்த மான்யம் 115 பில்லியன் டாலர்கள் (சுமார்
ஐந்து லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்கள்). மறைமுக மான்யங்கள் ஏழு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்கள். இதே காலகட்டத்தில் காற்று சூரியசக்திக்கெல்லாமாக சேர்த்து கொடுத்த மொத்த மான்யம் வெறும் 5.5.பில்லியன் டாலர் (வெறும் 27 ஆயிரத்து 500 கோடி ரூபாய்கள்)”. செர்னோபில் விபத்துதான் சோவியத் யூனியன் அரசு இனி பகிரங்கமாக எல்லா உண்மைகளையும் மக்களிடம் சொல்லியே ஆகவேண்டும் என்ற கருத்து-தகவல் சுதந்திரத்தைக் கொண்டு வந்தது; செர்னோபில்தான் என் கண்களைத் திறந்தது என்கிறார் கோர்பசேவ் கலாமுக்கும் மன்மோகனுக்கும் கண் திறக்க இங்கே ஒரு செர்னோபில் கூடப் போதாது.
இந்தியாவில் மின்சார தயாரிப்புக்கான மாற்று வழிகளின் நிலைமை என்ன ? அதற்குப் போதுமான பணம் ஒதுக்கப்படுகிறதா?
மிக முக்கியமான உண்மை – ஏற்கனவே அணு மின்சாரத்தை விட
அதிகமான மின்சாரம் நமக்கு மாற்று வழிகளான் காற்று, சூரியசக்தி
ஆகியவற்றிலிருந்துதான் கிடைக்கிறது. அணுமின்சாரம் வெறும்
2.5 சதவிகிதம். காற்றும் சூரியசக்தியும் ஏற்கனவே 7 சதவிகிதத்தை
எட்டிவிட்டன. ஆனால் அணு மின்சாரத்தோடு ஒப்பிடும்போது
அவற்றுக்கு அரசு ஒதுக்கும் தொகைகள் மிக மிகக் குறைவு.
இந்த வருடம்தான் இந்திய அரசு மிக அதிக தொகை
ஒதுக்கியிருக்கிறது. 1000 கோடி ரூபாய் ! கூடங்குளத்தில்
கொட்டியிருப்பது மட்டுமே 13 ஆயிரம் கோடி ரூபாய் !!
காற்றாலைகளிலிருந்து மட்டும் மொத்தம் ஒரு லட்சம் மெகாவாட்
மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு இந்தியாவில் உள்ளது. புனல் மின்சாரம் எனப்படும் நீர் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான அரசின் தேசிய புனல்மின் கழகம் இந்தியாவில் மொத்தமாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 700 மெகாவாட் தயாரிக்கமுடியும் என்றும் இப்போது அதில் வெறும் 19 சதவிகிதம் மட்டுமே தயாரிக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறது.
சூரியசக்தி பல மடங்கு பிரும்மாண்டமானது. மொத்தம் நான்கு
லட்சம் மெகாவாட் தயாரிக்க முடியும்.இந்தியாவின் மொத்தத்
தேவையை விட இது பல மடங்கு அதிகம். வருடத்தில் நான்கே
மாதம் மட்டும் வெயில் அடிக்கக்கூடிய ஜெர்மனி, நார்வே போன்ற
நாடுகளில் ஏற்கனவே மொத்த மின்சாரத்தில் 20 சதவிகிதத்தை
சூரியசக்தியிலிருந்து தயாரிக்கிறார்கள். இந்தியாவில் வருடத்தில்
300 நாட்களுக்கு மொத்தம் 2500 மணி நேரம் தெளிவான வெயில்
இருக்கிறது. சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் போட்டோ
வொல்டேய்க் செல் பேனல்கள் தங்கள் மொத்த திறனில் வெறும்
பத்து சதவிகிதம் மட்டுமே இயங்கினால் கூட, கிடைக்கும் மின்சாரம்
2015ல் இந்தியாவில் வீட்டுத் தேவைக்கான மின்சாரத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம் !
மிக முக்கியமான உண்மை – ஏற்கனவே அணு மின்சாரத்தை விட
அதிகமான மின்சாரம் நமக்கு மாற்று வழிகளான் காற்று, சூரியசக்தி
ஆகியவற்றிலிருந்துதான் கிடைக்கிறது. அணுமின்சாரம் வெறும்
2.5 சதவிகிதம். காற்றும் சூரியசக்தியும் ஏற்கனவே 7 சதவிகிதத்தை
எட்டிவிட்டன. ஆனால் அணு மின்சாரத்தோடு ஒப்பிடும்போது
அவற்றுக்கு அரசு ஒதுக்கும் தொகைகள் மிக மிகக் குறைவு.
இந்த வருடம்தான் இந்திய அரசு மிக அதிக தொகை
ஒதுக்கியிருக்கிறது. 1000 கோடி ரூபாய் ! கூடங்குளத்தில்
கொட்டியிருப்பது மட்டுமே 13 ஆயிரம் கோடி ரூபாய் !!
காற்றாலைகளிலிருந்து மட்டும் மொத்தம் ஒரு லட்சம் மெகாவாட்
மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு இந்தியாவில் உள்ளது. புனல் மின்சாரம் எனப்படும் நீர் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான அரசின் தேசிய புனல்மின் கழகம் இந்தியாவில் மொத்தமாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 700 மெகாவாட் தயாரிக்கமுடியும் என்றும் இப்போது அதில் வெறும் 19 சதவிகிதம் மட்டுமே தயாரிக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறது.
சூரியசக்தி பல மடங்கு பிரும்மாண்டமானது. மொத்தம் நான்கு
லட்சம் மெகாவாட் தயாரிக்க முடியும்.இந்தியாவின் மொத்தத்
தேவையை விட இது பல மடங்கு அதிகம். வருடத்தில் நான்கே
மாதம் மட்டும் வெயில் அடிக்கக்கூடிய ஜெர்மனி, நார்வே போன்ற
நாடுகளில் ஏற்கனவே மொத்த மின்சாரத்தில் 20 சதவிகிதத்தை
சூரியசக்தியிலிருந்து தயாரிக்கிறார்கள். இந்தியாவில் வருடத்தில்
300 நாட்களுக்கு மொத்தம் 2500 மணி நேரம் தெளிவான வெயில்
இருக்கிறது. சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் போட்டோ
வொல்டேய்க் செல் பேனல்கள் தங்கள் மொத்த திறனில் வெறும்
பத்து சதவிகிதம் மட்டுமே இயங்கினால் கூட, கிடைக்கும் மின்சாரம்
2015ல் இந்தியாவில் வீட்டுத் தேவைக்கான மின்சாரத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம் !
சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கச் செலவு அதிகம் என்று
அணு விஞ்ஞானிகளும் அவர்களின் ஆதரவாளர்களும்
பிரசாரம் செய்கிறார்களே ?
எதை விட இது செலவு அதிகம் ? அணுமின்சாரத்தின் அசல்
விலையை அவர்கள் மூடி மறைத்துவிட்டு மற்றவற்றை விலை
அதிகம் என்று பொய் பிரசாரம்தான் செய்கிறார்கள். ஜெய்தாபூரில்
பிரெஞ்ச் கம்பெனியிடமிருந்து அணு உலை வாங்கி நிறுவுவதற்கு
அவர்கள் போட்டிருக்கும் மதிப்பீடு ஒரு மெகாவாட்டுக்கு 21 கோடி
ரூபாய். ஆனால் ஏழு இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்கள்
அமைக்க தனியாருக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.
அங்கே நிறுவும் செலவு ஒரு மெகாவாட்டுக்கு 12 கோடி ரூபாய்தான்.
நிறுவியபின்னர் பராமரிப்பு செலவும் அணு உலையை விடக் குறைவு. ஆபத்து துளியும் இல்லை. அணு உலையை லட்சக்கணக்கான வருடத்துக்குப் பாதுகாத்தே திவாலாகிவிடுவோம்.
இப்போது சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும்
பொருட்களின் விலை படு வேகமாக சரிந்து வருகிறது. சோலார்
போட்டோவோல்டேய்க் செல் தயாரிக்கத் தேவைப்படும் பாலி-சிலிக்கான் விலை கடந்த மூன்று வருடங்களில் 93 சதவிகிதம் குறைந்துவிட்டது. அதனால் இந்த மின்சாரம் தயாரிக்க முன்வரும் தனியார் கம்பெனிகள் அரசுக்கு மின்சாரத்தை முன்பை விடக் குறைந்த விலையில் தர முன்வந்துவிட்டன. டிசம்பர் 2011ல் நடந்த ஏலத்தில் இந்திய அரசு ஒரு மெகாவாட்/மணி அளவு மின்சாரத்தை 15,390 ரூபாய்க்கு வாங்கத் தயார் என்று அறிவித்திருந்தது. ஆனால் பிரான்சின் இரண்டாவது பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனமான சோலேர் டைரக்ட் 7490 ரூபாய்க்கே விற்பதாக ஏலம் எடுத்திருக்கிறது. இது ஒரு வருடம் முன்பு இருந்த விலையை விட 34 சதவிகிதம் குறைவு. எனவே 2015க்குள் சூரிய மின்சாரத்தின் விலையும் இப்போது நிலக்கரியால் தயாரிக்கும் அனல் மின்சாரத்தின் விலையும் சமமாகிவிடும் என்று கருதுகிறார்கள்.
அணு விஞ்ஞானிகளும் அவர்களின் ஆதரவாளர்களும்
பிரசாரம் செய்கிறார்களே ?
எதை விட இது செலவு அதிகம் ? அணுமின்சாரத்தின் அசல்
விலையை அவர்கள் மூடி மறைத்துவிட்டு மற்றவற்றை விலை
அதிகம் என்று பொய் பிரசாரம்தான் செய்கிறார்கள். ஜெய்தாபூரில்
பிரெஞ்ச் கம்பெனியிடமிருந்து அணு உலை வாங்கி நிறுவுவதற்கு
அவர்கள் போட்டிருக்கும் மதிப்பீடு ஒரு மெகாவாட்டுக்கு 21 கோடி
ரூபாய். ஆனால் ஏழு இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்கள்
அமைக்க தனியாருக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.
அங்கே நிறுவும் செலவு ஒரு மெகாவாட்டுக்கு 12 கோடி ரூபாய்தான்.
நிறுவியபின்னர் பராமரிப்பு செலவும் அணு உலையை விடக் குறைவு. ஆபத்து துளியும் இல்லை. அணு உலையை லட்சக்கணக்கான வருடத்துக்குப் பாதுகாத்தே திவாலாகிவிடுவோம்.
இப்போது சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும்
பொருட்களின் விலை படு வேகமாக சரிந்து வருகிறது. சோலார்
போட்டோவோல்டேய்க் செல் தயாரிக்கத் தேவைப்படும் பாலி-சிலிக்கான் விலை கடந்த மூன்று வருடங்களில் 93 சதவிகிதம் குறைந்துவிட்டது. அதனால் இந்த மின்சாரம் தயாரிக்க முன்வரும் தனியார் கம்பெனிகள் அரசுக்கு மின்சாரத்தை முன்பை விடக் குறைந்த விலையில் தர முன்வந்துவிட்டன. டிசம்பர் 2011ல் நடந்த ஏலத்தில் இந்திய அரசு ஒரு மெகாவாட்/மணி அளவு மின்சாரத்தை 15,390 ரூபாய்க்கு வாங்கத் தயார் என்று அறிவித்திருந்தது. ஆனால் பிரான்சின் இரண்டாவது பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனமான சோலேர் டைரக்ட் 7490 ரூபாய்க்கே விற்பதாக ஏலம் எடுத்திருக்கிறது. இது ஒரு வருடம் முன்பு இருந்த விலையை விட 34 சதவிகிதம் குறைவு. எனவே 2015க்குள் சூரிய மின்சாரத்தின் விலையும் இப்போது நிலக்கரியால் தயாரிக்கும் அனல் மின்சாரத்தின் விலையும் சமமாகிவிடும் என்று கருதுகிறார்கள்.
காற்று சூரியசக்தி மின்சாரத்தையெல்லாம் தேசிய கிரிட்டில் இணைப்பது கடினம் என்றும் அவற்றைக் கொண்டு 500, 1000, 2000 மெகாவாட் நிலையங்களை நடத்த முடியாது என்றும் சொல்கிறார்களே ?
முதலில் ஏன் எல்லா மின்நிலையங்களையும் ஆயிரக்கணக்கான
மெகாவாட் உற்பத்தி நிலையமாக வைக்கவேண்டும் என்பதையே
நாம் கேள்வி கேட்கவேண்டும். போக்குவரத்துக்குப் பயன்படும்
வாகங்களை எடுத்துக் கொள்ளுவோம். சைக்கிள், டூ வீலர், கார்,
ஆட்டோ, பஸ், ரயில், விமானம், கப்பல் என்று வகைவகையாக
இருக்கின்றன. அடுத்த தெருவுக்குச் செல்வதற்கு விமான சர்வீஸ்
நடத்தச் சொல்வோமா ?
இதே போல மின் உபயோகமும் பலதரப்பட்டது. வீட்டு உபயோகம்,
விவசாய உபயோகம், தொழிற்சாலை உபயோகம், பொது உபயோகம், கிராமத் தேவை, நகரத் தேவை என்று மாறுபட்டவை. எல்லாவற்றையும் கிரிட் மூலம்தான் செய்யவேண்டும் என்ற அணுகுமுறையே தவறானது. இதனால்தான் மின்சாரத்தை அனுப்புவதில் டிரான்ஸ்மிஷன் லாஸ் என்பதே பெருமளவு ஏற்படுகிறது.
இப்போதுள்ள அனல், புனல் மின் நிலையங்களைக் கொண்டு
தொழிற்சாலை தேவைகளை பூர்த்தி செய்யலாம். வீட்டுத்
தேவைகள், விவசாயத் தேவைகளில் பெரும்பகுதி எல்லாம் சிறு மின் நிலையங்களாலேயே பூர்த்தி செய்யக்கூடியவை. கிரிட் மின்சாரம் இல்லாதபோது மின்வெட்டை சமாளிக்க ஒவ்வொரு வீட்டிலும் இன்வர்ட்டர் வைத்துக் கொள்வதை விட சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளைப் பொருத்திக் கொள்ளலாம்.
மின்சார விநியோக கண்ட்ரோல் அதிகாரத்தை ஒரே இடத்தில்
குவித்துவைத்துக் கொள்ளத்தான் கிரிட் முறை பயன்படுகிறது.
சென்னையில் ஒரு மணி நேரம்தான் பவர்கட். அத்திப்பட்டில்
ஆறு மணி நேரம் பவர்கட் என்பது கிரிட் அதிகாரத்தால் நடப்பது.
அத்திப்பட்டில் சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் இருந்தால் அங்கே
ஒரு மணி நேரம் கூட பவர் கட் இருக்காது.
சூரிய சக்தி, காற்று மட்டுமல்ல, கிராமங்களில் வீணாகக் கிடக்கும்
முள்மரங்களை, தேங்காய் சிரட்டைகளை ஆவியாக்கிக் கூட மின்சாரம் தயாரிக்கலாம். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயன்ஸ் உருவாக்கிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்லடம் அருகே சுல்தான்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனம் ஓர் ஒற்றை மெகாவாட் மின் நிலையத்தை ஆறாண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த மின்சாரத்தை தன் கிரிட்டுக்கு தமிழக மின் வாரியம் வாங்கிக் கொள்கிறது.
ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் இது போன்ற சிறு மின்
நிலையங்களை நிறுவி கிரிட்டுக்கே மின்சாரத்தை அனுப்பாமல்,
அந்த யூனியனின் இருக்கும் கிராமங்களுக்கு மட்டும் அனுப்பி
லோகல் மின்தேவையை அதிலேயே சந்தித்துவிடலாம். மின்வெட்டே
இல்லாமல் விவசாயம் சீராக நடக்கும். ஆந்திர மாநிலம் முழுக்க
இவ்வாறு சிறு மின் நிலையங்கள் நிறுவும் திட்டத்தை தீவிரமாக
பரிசீலித்து வருகிறது.
சூரியசக்தி மின்சாரத்தை பல விதமாக தயாரிக்கலாம்.
போட்டொவோல்டேய்க் செல் பேனல் முறை ஒன்று. இன்னொன்று
குவிசக்தி முறை. கண்ணாடிகள், லென்சுகளைப் பயன்படுத்தி
தீவிரமான ஒளிக்கற்றை மூலம் உருக்கிய உப்பை சூடாக்கி அந்த
வெப்பத்திலிருந்து தயாரிப்பதாகும். இந்தியாவில் எல்லா முறைகளையும் பயன்படுத்த வசதி இருக்கிறது. ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு இருக்கிறது. அங்கே மட்டும் பிரும்மாண்டமான சூரியசக்தி மின் நிலையங்களை ஏற்படுத்தினால் 15 ஆயிரம் மெகாவாட் வரை தயாரித்து கிரிட்டுக்கே அனுப்பலாம்.
முதலில் ஏன் எல்லா மின்நிலையங்களையும் ஆயிரக்கணக்கான
மெகாவாட் உற்பத்தி நிலையமாக வைக்கவேண்டும் என்பதையே
நாம் கேள்வி கேட்கவேண்டும். போக்குவரத்துக்குப் பயன்படும்
வாகங்களை எடுத்துக் கொள்ளுவோம். சைக்கிள், டூ வீலர், கார்,
ஆட்டோ, பஸ், ரயில், விமானம், கப்பல் என்று வகைவகையாக
இருக்கின்றன. அடுத்த தெருவுக்குச் செல்வதற்கு விமான சர்வீஸ்
நடத்தச் சொல்வோமா ?
இதே போல மின் உபயோகமும் பலதரப்பட்டது. வீட்டு உபயோகம்,
விவசாய உபயோகம், தொழிற்சாலை உபயோகம், பொது உபயோகம், கிராமத் தேவை, நகரத் தேவை என்று மாறுபட்டவை. எல்லாவற்றையும் கிரிட் மூலம்தான் செய்யவேண்டும் என்ற அணுகுமுறையே தவறானது. இதனால்தான் மின்சாரத்தை அனுப்புவதில் டிரான்ஸ்மிஷன் லாஸ் என்பதே பெருமளவு ஏற்படுகிறது.
இப்போதுள்ள அனல், புனல் மின் நிலையங்களைக் கொண்டு
தொழிற்சாலை தேவைகளை பூர்த்தி செய்யலாம். வீட்டுத்
தேவைகள், விவசாயத் தேவைகளில் பெரும்பகுதி எல்லாம் சிறு மின் நிலையங்களாலேயே பூர்த்தி செய்யக்கூடியவை. கிரிட் மின்சாரம் இல்லாதபோது மின்வெட்டை சமாளிக்க ஒவ்வொரு வீட்டிலும் இன்வர்ட்டர் வைத்துக் கொள்வதை விட சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளைப் பொருத்திக் கொள்ளலாம்.
மின்சார விநியோக கண்ட்ரோல் அதிகாரத்தை ஒரே இடத்தில்
குவித்துவைத்துக் கொள்ளத்தான் கிரிட் முறை பயன்படுகிறது.
சென்னையில் ஒரு மணி நேரம்தான் பவர்கட். அத்திப்பட்டில்
ஆறு மணி நேரம் பவர்கட் என்பது கிரிட் அதிகாரத்தால் நடப்பது.
அத்திப்பட்டில் சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் இருந்தால் அங்கே
ஒரு மணி நேரம் கூட பவர் கட் இருக்காது.
சூரிய சக்தி, காற்று மட்டுமல்ல, கிராமங்களில் வீணாகக் கிடக்கும்
முள்மரங்களை, தேங்காய் சிரட்டைகளை ஆவியாக்கிக் கூட மின்சாரம் தயாரிக்கலாம். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயன்ஸ் உருவாக்கிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்லடம் அருகே சுல்தான்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனம் ஓர் ஒற்றை மெகாவாட் மின் நிலையத்தை ஆறாண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த மின்சாரத்தை தன் கிரிட்டுக்கு தமிழக மின் வாரியம் வாங்கிக் கொள்கிறது.
ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் இது போன்ற சிறு மின்
நிலையங்களை நிறுவி கிரிட்டுக்கே மின்சாரத்தை அனுப்பாமல்,
அந்த யூனியனின் இருக்கும் கிராமங்களுக்கு மட்டும் அனுப்பி
லோகல் மின்தேவையை அதிலேயே சந்தித்துவிடலாம். மின்வெட்டே
இல்லாமல் விவசாயம் சீராக நடக்கும். ஆந்திர மாநிலம் முழுக்க
இவ்வாறு சிறு மின் நிலையங்கள் நிறுவும் திட்டத்தை தீவிரமாக
பரிசீலித்து வருகிறது.
சூரியசக்தி மின்சாரத்தை பல விதமாக தயாரிக்கலாம்.
போட்டொவோல்டேய்க் செல் பேனல் முறை ஒன்று. இன்னொன்று
குவிசக்தி முறை. கண்ணாடிகள், லென்சுகளைப் பயன்படுத்தி
தீவிரமான ஒளிக்கற்றை மூலம் உருக்கிய உப்பை சூடாக்கி அந்த
வெப்பத்திலிருந்து தயாரிப்பதாகும். இந்தியாவில் எல்லா முறைகளையும் பயன்படுத்த வசதி இருக்கிறது. ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு இருக்கிறது. அங்கே மட்டும் பிரும்மாண்டமான சூரியசக்தி மின் நிலையங்களை ஏற்படுத்தினால் 15 ஆயிரம் மெகாவாட் வரை தயாரித்து கிரிட்டுக்கே அனுப்பலாம்.
வெளிநாடுகளில் சூரியசக்தி மின்சாரம் நிலை எப்படி ?
இந்தியாவைப் போல வருடம் முழுவது வெயில் இல்லாத நாடுகள்
கூட முன்பே இதில் இறங்கிவிட்டன. ஸ்பெயினில் இப்போதே 12 சதவிகித மின்சாரம் சூரிய மின்சாரம்தான். இஸ்ரேலில் 90 சதவிகித வீடுகளில் சூரிய சக்தி ஹீட்டர் வந்துவிட்டது. சீனா போட்டோவொல்டெய்க் செல் தயாரிப்பில் உலகத்தில் முதலிடத்தில் இருக்கிறது. உலக அளவில் 3800 மெகாவாட்டுக்கான் சோலார் பேனல்களில் சரி பாதியை தயாரித்து ஏற்றுமதி செய்திருப்பது சீனாதான். சில மாதங்களே வெயில் அடிக்கும் ஜெர்மனியில் மொத்த மின்சாரத்தில் 25 சதவிகிதத்தை சூரியசக்தியில் தயாரிப்பதை 2050க்குள் சாதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இப்போது உலகம் முழுவதும் உற்பத்தியாகும் சூரியசக்தி
மின்சாரத்தில் சரிபாதி அமெரிக்காவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2020க்குள் அதன் மொத்த மின் தேவையில் 33 சதவிகிதம் சூரியசக்தியிலிருந்து பெறுவது என்ற இலக்குடன் திட்டங்கள் நடக்கின்றன. கிரிட்டுக்கே மின்சாரம் அனுப்பும் திட்டங்களையும் அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே சுமார் 500 மெகாவாட் சூரிய மின்சாரத்தை கிரிட்டுடன் இணைத்துவிட்டது.
இன்னொரு பக்கம் தனியார் வீடுகளிலும் அவரவர்
அலுவலகங்களிலும் சுயதேவைக்காக போட்டொ வோல்டெய்க் செல்
பேனல் அமைத்து மின்சாரம் தயாரித்துக் கொள்வதை ஊக்குவிக்கிறது. தங்கள் தேவைக்குப் போக உபரி சூரிய மின்சாரத்தை கம்பெனிக்கு விற்கும் வீடுகள் பெருகிவருகின்றன. மின் கட்டணமாக 2400 டாலர் வரை செலுத்திய ஒரு வீட்டில் 25 ஆயிரம் டாலர் செலவில் சூரிய மின்சார தயாரிப்பு பேனல் பொருத்தியதும் அந்த முழு மின்கட்டணம் மிச்சமாகிவிடுகிறது.
அமெரிக்காவில் கடந்த 30 வருடங்களாக ஒரு புதிய அணு உலை
கூடத் தொடங்கவில்லை என்பதை இத்துடன் சேர்த்து கவனிக்க
வேண்டும்.
இந்தியாவைப் போல வருடம் முழுவது வெயில் இல்லாத நாடுகள்
கூட முன்பே இதில் இறங்கிவிட்டன. ஸ்பெயினில் இப்போதே 12 சதவிகித மின்சாரம் சூரிய மின்சாரம்தான். இஸ்ரேலில் 90 சதவிகித வீடுகளில் சூரிய சக்தி ஹீட்டர் வந்துவிட்டது. சீனா போட்டோவொல்டெய்க் செல் தயாரிப்பில் உலகத்தில் முதலிடத்தில் இருக்கிறது. உலக அளவில் 3800 மெகாவாட்டுக்கான் சோலார் பேனல்களில் சரி பாதியை தயாரித்து ஏற்றுமதி செய்திருப்பது சீனாதான். சில மாதங்களே வெயில் அடிக்கும் ஜெர்மனியில் மொத்த மின்சாரத்தில் 25 சதவிகிதத்தை சூரியசக்தியில் தயாரிப்பதை 2050க்குள் சாதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இப்போது உலகம் முழுவதும் உற்பத்தியாகும் சூரியசக்தி
மின்சாரத்தில் சரிபாதி அமெரிக்காவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2020க்குள் அதன் மொத்த மின் தேவையில் 33 சதவிகிதம் சூரியசக்தியிலிருந்து பெறுவது என்ற இலக்குடன் திட்டங்கள் நடக்கின்றன. கிரிட்டுக்கே மின்சாரம் அனுப்பும் திட்டங்களையும் அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே சுமார் 500 மெகாவாட் சூரிய மின்சாரத்தை கிரிட்டுடன் இணைத்துவிட்டது.
இன்னொரு பக்கம் தனியார் வீடுகளிலும் அவரவர்
அலுவலகங்களிலும் சுயதேவைக்காக போட்டொ வோல்டெய்க் செல்
பேனல் அமைத்து மின்சாரம் தயாரித்துக் கொள்வதை ஊக்குவிக்கிறது. தங்கள் தேவைக்குப் போக உபரி சூரிய மின்சாரத்தை கம்பெனிக்கு விற்கும் வீடுகள் பெருகிவருகின்றன. மின் கட்டணமாக 2400 டாலர் வரை செலுத்திய ஒரு வீட்டில் 25 ஆயிரம் டாலர் செலவில் சூரிய மின்சார தயாரிப்பு பேனல் பொருத்தியதும் அந்த முழு மின்கட்டணம் மிச்சமாகிவிடுகிறது.
அமெரிக்காவில் கடந்த 30 வருடங்களாக ஒரு புதிய அணு உலை
கூடத் தொடங்கவில்லை என்பதை இத்துடன் சேர்த்து கவனிக்க
வேண்டும்.
ஆனால் இன்னமும் உலகம் முழுவதும் புது அணு உலைகள் தொடங்கப்படுவதாக அணு உலை ஆதரவாளர்கள் சொல்கிறார்களே?
அதுவும் பொய்தான். ஒவ்வொரு தகவலாகப் பார்க்கலாம். 1.
நான்கு வருடங்களாக் உலக அளவில் அணு மின்சாரத் தயாரிப்பு
அளவு தேக்கமடைந்தது மட்டுமல்ல, குறைந்தும் வருகிறது. 2006ல்
15.2 சதவிகிதமாக இருந்தது 2010ல் 13.5 ஆகிவிட்டது. 2. அதே
போல உலக அளவில் இருக்கும் அணுமின்சாரத் தயாரிப்புக்கான
நிறுவப்பட்ட திறன் அளவும் குறைந்துவிட்டது. 2006ல் இது 8.7 சதவிகிதம். 2010ல் 7.4தான். 3.வருகிற 2030க்குள் மொத்தம் 143 உலைகள் வயதாகிவிட்டதால் மூடியாக வேண்டிய நிலையில் நிரந்தர சமாதி வைக்கப்படவேண்டியவை. எனவே 2030ல் உலக நிலையைப் பார்த்தால் இப்போதுள்ளதை விட 30 சதவிகிதம் அணு உலைகள் குறைவாகவே இருக்கும். ஜெர்மனி 2020க்குள் தன் அணு உலைகள் அனிஅத்தையும் மூடப் போகிறது. ஆஸ்திரியா, ஸ்பெயின், ஸ்வீடன், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளும் தங்கள் அணு உலைகளைக் குறைக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன. 4. இப்போது மொத்தமாக 64 உலைகள் கட்டப்பட்டு வருவதாக உலக அணுசக்தி முகமை தெரிவித்தது. இதில் 12 உலைகள் 20 வருடங்களாகக் கட்டப்பட்டு வருபவை. மொத்தம் 64ல் 43 உலைகள் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய மூன்றே நாடுகளில் கட்டப்படுபவை. மேலை நாடுகளில் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.
அதுவும் பொய்தான். ஒவ்வொரு தகவலாகப் பார்க்கலாம். 1.
நான்கு வருடங்களாக் உலக அளவில் அணு மின்சாரத் தயாரிப்பு
அளவு தேக்கமடைந்தது மட்டுமல்ல, குறைந்தும் வருகிறது. 2006ல்
15.2 சதவிகிதமாக இருந்தது 2010ல் 13.5 ஆகிவிட்டது. 2. அதே
போல உலக அளவில் இருக்கும் அணுமின்சாரத் தயாரிப்புக்கான
நிறுவப்பட்ட திறன் அளவும் குறைந்துவிட்டது. 2006ல் இது 8.7 சதவிகிதம். 2010ல் 7.4தான். 3.வருகிற 2030க்குள் மொத்தம் 143 உலைகள் வயதாகிவிட்டதால் மூடியாக வேண்டிய நிலையில் நிரந்தர சமாதி வைக்கப்படவேண்டியவை. எனவே 2030ல் உலக நிலையைப் பார்த்தால் இப்போதுள்ளதை விட 30 சதவிகிதம் அணு உலைகள் குறைவாகவே இருக்கும். ஜெர்மனி 2020க்குள் தன் அணு உலைகள் அனிஅத்தையும் மூடப் போகிறது. ஆஸ்திரியா, ஸ்பெயின், ஸ்வீடன், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளும் தங்கள் அணு உலைகளைக் குறைக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன. 4. இப்போது மொத்தமாக 64 உலைகள் கட்டப்பட்டு வருவதாக உலக அணுசக்தி முகமை தெரிவித்தது. இதில் 12 உலைகள் 20 வருடங்களாகக் கட்டப்பட்டு வருபவை. மொத்தம் 64ல் 43 உலைகள் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய மூன்றே நாடுகளில் கட்டப்படுபவை. மேலை நாடுகளில் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.
ஆனால் நமக்கு அணு உலை விற்பதில் அவர்கள்
ஆர்வமாக இருக்கிறார்களே ?
ஆபத்தான தொழில்நுட்பத்துக்கு தங்கள் நாடுகளில் எதிர்ப்பு
பலமாக இருக்கும்போது அதை நம் போன்ற முட்டாள் நாடுகளின்
தலையில் கட்டுவதுதான் அவற்றின் வாடிக்கை.
அமெரிக்காவில் 1982ல் பத்து லட்சம் பேர் அணு உலைகளுக்கு
எதிராகப் பேரணி நடத்தியபிறகு அமெரிக்காவில் புது உலையே
கட்டவில்லை. சுமார் 80 இயக்கங்கள் அங்கே உள்ளன. அமெரிக்க
துணை ஜனதிபதியாக இருந்த அல் கோரே, நுகர்வோர் உரிமைப்
போராளி ரால்ப் நாடர் போன்றோரும் நூற்றுக்கணக்கான விஞ்
ஞானிகளும் அங்கே அணு உலைக்கு எதிராக பகிரங்கமாக குரல்
கொடுத்து வந்துள்ளனர்.
தோல் பதனிடுதல், துணிகளுக்கு சாயம் ஏற்றுதல் இரண்டும்
சுற்றுச் சூழலைக் கடுமையாக பாதிக்கின்றன என்று மேலை
நாடுகளில் எதிர்ப்பு வந்ததும், அந்த வேலையை நம் தலையில் அவை கட்டிவிட்டன. டாலருக்கும் யூரோவுக்கும் ஆசைப்பட்டுகொண்டு நம் தொழிலதிபர்கள் நம் ஆறுகளையும் விளைநிலங்களையும் தொடர்ந்து நாசமாக்கிவருகிறார்கள். நம் ஊரை நாசப்படுத்தி பொருட்களை தயாரித்து அவர்கள் உபயோகத்துக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். நொய்யல் ஆற்றை மாசுபடுத்தி அழித்த சாயப்பட்டறைகளுக்கோ பாலாறை நாசமாக்கிய தோல் பதனிடும் கூடங்களுக்கோ யாருக்கும் எந்த கோர்ட்டிலும் தண்டனை எதுவும் தரப்பட்டதில்லை. அவர்களிட்ம அபராதாம் வசூலித்ததில்லை. விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுத்ததில்லை. மாறாக அரசாங்கப் பணத்தைக் கோடிக்கணக்கில் சாயப்பட்டறை முதலாளிகளுக்கு போலி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதகாக மான்யமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
போபால் விஷ வாயு விபத்தில் தவறு செய்த அமெரிக்கக் கம்பெனி
முதலாளியை விமானத்தில் தப்பிச்செல்லவிட்டுவிட்டு அவரை கோர்ட்டில் ஒப்படைக்கும்படி கோரிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அடுத்தபடி அங்கேயுள்ள அணு உலை தயாரிப்பாளர்களுக்கு
அடுத்த மார்க்கெட்டாக இந்தியா போன்ற ஏமாளி நாடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கான சிறந்த வர்த்தக தரகராக
மன்மோகன்சிங் அவர்களுக்கு அமைந்திருக்கிறார்.
உலகத்திலேயே தன்வசம் அதிக அளவு யூரேனியத்தை (25 சதவிகிதம்) வைத்திருக்கும் ஆஸ்திரேலியாவிடம் யூரேனியம் கேட்டு இந்தியா மன்றாடுகிறது. அந்த ஆஸ்திரேலியாவில் ஒரு அணு உலை கூட கட்டப்படவில்லையே, ஏன் என்று யோசிக்க வேண்டாமா? பிரும்மாண்டமான பாலைவனம், ஆளற்ற பகுதிகள் இருந்தும் அணு உலை கட்டவே இல்லையே, ஏன் ? அது ஆபத்தானது என்பதால் அங்கே மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
ஆனால் கூடங்குள அணு உலை எதிர்ப்புக்குப் பின்னால்
அந்நிய சக்திகள் இருப்பதாக மன்மோகனும் கலாமும் பூச்சாண்டி
காட்டுகிறார்கள். உலகப் பொருளாதார ஏகாதிபத்ய சக்திகள் இந்தியா
முன்னேறவிடாமல் தடுக்க இப்படி செய்வதாகக் கலாம் சொல்கிறார்.
யார் அந்த சக்தி ? அமெரிக்காதானே ? அது மன்மோகன் அரசுடன்
போட்ட 123 ஒப்ப்ந்தத்தின் நோக்கம் இந்தியாவை முன்னேற்றுவதா?
அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளிடம் அணு உலைகளை வாங்க
இந்தியாவை சம்மதிக்கவைத்த திட்டம்தானே அது ? அதில் எப்படி
இந்தியா முன்னேறும் ?
விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈட்டை அணு உலை விற்ற கம்பெனி
முழுக்க தரமுடியாது. இந்திய அரசே ஏற்கவேண்டும் என்று சொல்லும் ஒப்பந்தம்தானே அது ? அதை கலாம் எதிர்க்கவில்லை ? அந்த ஒப்பந்தம் போடத் தடையாக இருந்த இந்திய இடதுசாரிகள் மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது, அதை முறியடிக்க முலாயம் சிங் யாதவின் உதவியை கலாம்தான் பெற்றுத் தந்தார். உண்மையில் அந்நிய நாடுகளுக்கும் வெளிநாட்டு சக்திகளுக்காகவும் இங்கே வேலை பார்ப்பது மன்மோகன்சிங்கும், அவரது ஆட்சியும் அணு உலை ஆதரவாளர்களும்தான். இதை எதிர்ப்பவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து தூண்டுதல், பண உதவி என்று இந்த போலி தேசபக்தர்கள்தான் பழி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆர்வமாக இருக்கிறார்களே ?
ஆபத்தான தொழில்நுட்பத்துக்கு தங்கள் நாடுகளில் எதிர்ப்பு
பலமாக இருக்கும்போது அதை நம் போன்ற முட்டாள் நாடுகளின்
தலையில் கட்டுவதுதான் அவற்றின் வாடிக்கை.
அமெரிக்காவில் 1982ல் பத்து லட்சம் பேர் அணு உலைகளுக்கு
எதிராகப் பேரணி நடத்தியபிறகு அமெரிக்காவில் புது உலையே
கட்டவில்லை. சுமார் 80 இயக்கங்கள் அங்கே உள்ளன. அமெரிக்க
துணை ஜனதிபதியாக இருந்த அல் கோரே, நுகர்வோர் உரிமைப்
போராளி ரால்ப் நாடர் போன்றோரும் நூற்றுக்கணக்கான விஞ்
ஞானிகளும் அங்கே அணு உலைக்கு எதிராக பகிரங்கமாக குரல்
கொடுத்து வந்துள்ளனர்.
தோல் பதனிடுதல், துணிகளுக்கு சாயம் ஏற்றுதல் இரண்டும்
சுற்றுச் சூழலைக் கடுமையாக பாதிக்கின்றன என்று மேலை
நாடுகளில் எதிர்ப்பு வந்ததும், அந்த வேலையை நம் தலையில் அவை கட்டிவிட்டன. டாலருக்கும் யூரோவுக்கும் ஆசைப்பட்டுகொண்டு நம் தொழிலதிபர்கள் நம் ஆறுகளையும் விளைநிலங்களையும் தொடர்ந்து நாசமாக்கிவருகிறார்கள். நம் ஊரை நாசப்படுத்தி பொருட்களை தயாரித்து அவர்கள் உபயோகத்துக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். நொய்யல் ஆற்றை மாசுபடுத்தி அழித்த சாயப்பட்டறைகளுக்கோ பாலாறை நாசமாக்கிய தோல் பதனிடும் கூடங்களுக்கோ யாருக்கும் எந்த கோர்ட்டிலும் தண்டனை எதுவும் தரப்பட்டதில்லை. அவர்களிட்ம அபராதாம் வசூலித்ததில்லை. விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுத்ததில்லை. மாறாக அரசாங்கப் பணத்தைக் கோடிக்கணக்கில் சாயப்பட்டறை முதலாளிகளுக்கு போலி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதகாக மான்யமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
போபால் விஷ வாயு விபத்தில் தவறு செய்த அமெரிக்கக் கம்பெனி
முதலாளியை விமானத்தில் தப்பிச்செல்லவிட்டுவிட்டு அவரை கோர்ட்டில் ஒப்படைக்கும்படி கோரிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அடுத்தபடி அங்கேயுள்ள அணு உலை தயாரிப்பாளர்களுக்கு
அடுத்த மார்க்கெட்டாக இந்தியா போன்ற ஏமாளி நாடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கான சிறந்த வர்த்தக தரகராக
மன்மோகன்சிங் அவர்களுக்கு அமைந்திருக்கிறார்.
உலகத்திலேயே தன்வசம் அதிக அளவு யூரேனியத்தை (25 சதவிகிதம்) வைத்திருக்கும் ஆஸ்திரேலியாவிடம் யூரேனியம் கேட்டு இந்தியா மன்றாடுகிறது. அந்த ஆஸ்திரேலியாவில் ஒரு அணு உலை கூட கட்டப்படவில்லையே, ஏன் என்று யோசிக்க வேண்டாமா? பிரும்மாண்டமான பாலைவனம், ஆளற்ற பகுதிகள் இருந்தும் அணு உலை கட்டவே இல்லையே, ஏன் ? அது ஆபத்தானது என்பதால் அங்கே மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
ஆனால் கூடங்குள அணு உலை எதிர்ப்புக்குப் பின்னால்
அந்நிய சக்திகள் இருப்பதாக மன்மோகனும் கலாமும் பூச்சாண்டி
காட்டுகிறார்கள். உலகப் பொருளாதார ஏகாதிபத்ய சக்திகள் இந்தியா
முன்னேறவிடாமல் தடுக்க இப்படி செய்வதாகக் கலாம் சொல்கிறார்.
யார் அந்த சக்தி ? அமெரிக்காதானே ? அது மன்மோகன் அரசுடன்
போட்ட 123 ஒப்ப்ந்தத்தின் நோக்கம் இந்தியாவை முன்னேற்றுவதா?
அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளிடம் அணு உலைகளை வாங்க
இந்தியாவை சம்மதிக்கவைத்த திட்டம்தானே அது ? அதில் எப்படி
இந்தியா முன்னேறும் ?
விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈட்டை அணு உலை விற்ற கம்பெனி
முழுக்க தரமுடியாது. இந்திய அரசே ஏற்கவேண்டும் என்று சொல்லும் ஒப்பந்தம்தானே அது ? அதை கலாம் எதிர்க்கவில்லை ? அந்த ஒப்பந்தம் போடத் தடையாக இருந்த இந்திய இடதுசாரிகள் மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது, அதை முறியடிக்க முலாயம் சிங் யாதவின் உதவியை கலாம்தான் பெற்றுத் தந்தார். உண்மையில் அந்நிய நாடுகளுக்கும் வெளிநாட்டு சக்திகளுக்காகவும் இங்கே வேலை பார்ப்பது மன்மோகன்சிங்கும், அவரது ஆட்சியும் அணு உலை ஆதரவாளர்களும்தான். இதை எதிர்ப்பவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து தூண்டுதல், பண உதவி என்று இந்த போலி தேசபக்தர்கள்தான் பழி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் நியாயமாகத்தான் இருக்கிறது. மீண்டும்
தொடக்கத்துக்கே வருவோம். கூடங்குளம் அணு உலை
திட்டத்தை இப்போது எதிர்க்கிற தீவிரத்துடன் 1987லேயே
எதிர்த்திருந்தால் கட்டாமலே நிறுத்தியிருக்கலாமே?
அப்போது மட்டுமல்ல, ஐம்பது வருடங்களாக இந்தியாவின்
பல்வேறு பகுதிகளில் அனு உலைகளுக்கு எதிராக பல விஞ்ஞானிகளும் அறிஞர்களும், சாதாரண மக்களின் இயக்கங்களும் குரலெழுப்பிக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அவற்றை அரசும் மீடியாவும் பொருட்படுத்தவில்லை.
கேரள மாநிலத்தின் எதிர்ப்பு மட்டும்தான் இதுவரை வெற்றி
பெற்றிருக்கிறது. அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்றுவதிலும்
இப்போது கூடங்குளத்தின் தலையில் கட்டப்பட்ட அணு உலையை
தங்கள் மாநிலத்துக்கு வர விடாமல் தடுத்ததிலும் அவர்கள் மட்டுமே
ஜெயித்தார்கள். அடுத்து மேற்கு வங்கத்தில் மம்தா அரசு சற்று
உறுதியாக எதிர்க்கிறது.
இங்கே 1987ல் போராடிய பலரை மிரட்டி, வழக்கு போட்டு ஊரை
விட்டே ஓடச் செய்து அரசு அந்த போராட்டத்தை முறியடித்தது.
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை அரசு பல இடங்களில் பின்பற்றும்
அதே முறைதான். இப்போதும் அப்படிப்பட்ட நடவடிக்கைகளை
எடுக்க ஆயத்தம் செய்துகொண்டுதான் இருக்கிறது. ஜெயலலிதா
அரசு இன்னமும் முழுமையாக ஒத்துழைக்காததால் தள்ளிப்
போகிறது. படித்தவர்கள், அறிவுஜீவிகள்,பாமர மக்களுடன் இணைந்து குரலெழுப்பி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை கேரள அரசு போல உறுதியாக இருக்கும்படி வற்புறுத்த வேண்டும்.
தொடக்கத்துக்கே வருவோம். கூடங்குளம் அணு உலை
திட்டத்தை இப்போது எதிர்க்கிற தீவிரத்துடன் 1987லேயே
எதிர்த்திருந்தால் கட்டாமலே நிறுத்தியிருக்கலாமே?
அப்போது மட்டுமல்ல, ஐம்பது வருடங்களாக இந்தியாவின்
பல்வேறு பகுதிகளில் அனு உலைகளுக்கு எதிராக பல விஞ்ஞானிகளும் அறிஞர்களும், சாதாரண மக்களின் இயக்கங்களும் குரலெழுப்பிக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அவற்றை அரசும் மீடியாவும் பொருட்படுத்தவில்லை.
கேரள மாநிலத்தின் எதிர்ப்பு மட்டும்தான் இதுவரை வெற்றி
பெற்றிருக்கிறது. அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்றுவதிலும்
இப்போது கூடங்குளத்தின் தலையில் கட்டப்பட்ட அணு உலையை
தங்கள் மாநிலத்துக்கு வர விடாமல் தடுத்ததிலும் அவர்கள் மட்டுமே
ஜெயித்தார்கள். அடுத்து மேற்கு வங்கத்தில் மம்தா அரசு சற்று
உறுதியாக எதிர்க்கிறது.
இங்கே 1987ல் போராடிய பலரை மிரட்டி, வழக்கு போட்டு ஊரை
விட்டே ஓடச் செய்து அரசு அந்த போராட்டத்தை முறியடித்தது.
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை அரசு பல இடங்களில் பின்பற்றும்
அதே முறைதான். இப்போதும் அப்படிப்பட்ட நடவடிக்கைகளை
எடுக்க ஆயத்தம் செய்துகொண்டுதான் இருக்கிறது. ஜெயலலிதா
அரசு இன்னமும் முழுமையாக ஒத்துழைக்காததால் தள்ளிப்
போகிறது. படித்தவர்கள், அறிவுஜீவிகள்,பாமர மக்களுடன் இணைந்து குரலெழுப்பி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை கேரள அரசு போல உறுதியாக இருக்கும்படி வற்புறுத்த வேண்டும்.
ஒரு சிலர் பெரும் தொகையான 13 ஆயிரம் கோடி ரூபாய்
இதில் இப்போது முடங்கியிருப்பதால் இந்த உலைகளை
மட்டும் அனுமதித்துவிடலாமா என்று கேட்கிறார்களே ?
மன்மோகன்சிங் கூட ரஷ்யாவில் நிருபர்களிட்ம பேசும்போது, சுமார்
13 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு அமைத்த உலையை அப்படி
எளிதில் மூடிவிட்டுப் போய்விடமுடியாது என்று பேசியிருக்கிறார்.
அதாவது அவருக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய்தான் முக்கியம்.
மக்களின் நலனோ, அச்சமோ அதை விட சின்ன விஷயம்தான்.
இடிந்தகரை கிராமத்திலிருந்து வந்த சாதாரணப் பெண்ணிடம்
சென்னை நிருபர் சந்திப்பில் ஒரு நிருபர் கேட்டார். இத்தனை கோடி
ரூபாய் செலவு செய்து கட்டிய பிறகு மூடச் சொல்வது நியாயமா?
பணம் வீணாகிறதே ? அந்தப் பெண் சொன்ன பதில்: உங்க மகளுக்கு
திருமணம் நிச்சயம் செய்து எல்லா செலவும் பண்ணி விடிந்தால்
கல்யாணம் நடத்தபோறீங்க. பையனுக்கு எய்ட்ஸ் இருக்குன்னு
முந்தின ராத்திரி தெரிய வந்தா, அடுத்த நாள் காலையில கல்யாணம்
செய்வீங்களா? இத்தனை செலவு பண்ணிட்டோம், கல்யாணம்
நடக்கட்டும்னு விடுவீங்களா?
பாமரப் பெண்ணுக்கு புரிகிற விஷயம் மெத்தப் படித்த மேதாவி
மன்மோகனுக்குப் புரிவதில்லை. அவருக்குப் புரிவதெல்லாம்
அவருடைய லட்சிய பூமியான அமெரிக்காவில் சொல்வதும்
செய்வதும்தான் என்பதால், அவருக்காக அமெரிக்க அணு உலைகள்
வரலாற்றிலிருந்து ஒரு தகவலைப் பார்ப்போம்.
1979ல் த்ரீ மைல் ஐலண்ட் அணு உலையில் விபத்து ஏற்படுவதற்கு
முன்பு 1973ல் நியூயார்க் பகுதியில் இருக்கும் லாங் ஐலண்ட் என்ற
இடத்தில் கட்ட ஆரம்பித்த ஷோர்ஹேம் ப்ளாண்ட்டை 1984ல் கட்டி
முடித்தார்கள்.இது. 1983ல் அமெரிக்க மத்திய அரசு இந்த உலையில்
விபத்து ஏற்பட்டால் எப்படி மக்களை வெளியேற்றவேண்டும்
என்பதற்கான அவசர கால திட்டத்தை உருவாக்கி வெளியிட்டது.
இதற்கு உள்ளூர் பஞ்சாயத்தான சஃபோக் பகுதி கவுண்ட்டியின் ஒப்புதல் வேண்டும். ஆனால் அதை ஏற்கமுடியாது என்று உலை இருக்கும் பகுதியான சஃபோக் கவுண்ட்டி (பஞ்சாயத்து) தெரிவித்தது.
ஆறு பில்லியன் டாலர் (சுமார் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணு
உலை வேண்டாம் என்று அங்கே மக்கள் வாக்களித்தார்கள். அதை
அரசு ஏற்றுக் கொண்டது. உலை சொந்தக்காரரான லில்கோ
கம்பெனிக்கு அந்தப் பணத்தை அரசு செலுத்தியது. உலை மூடும்
செலவான இன்னொரு 186 மில்லியன் டாலரையும் அரசு ஏற்றது.
இத்தனையும் கட்டி முடித்து இயங்கவே ஆரம்பிக்காத அணு
உலைக்கு! இப்படி உலையை மூடும் செலவுக்காக பொது மக்கள்
அடுத்த 30 வருடத்துக்கு மின் கட்டணத்தில் மூன்று சதவிகிதம்
சர்சார்ஜ் செலுத்தும்படி அரசு கோரியதை சஃபோக் கவுண்ட்டி ஏற்றுக்
கொண்டது. அங்கே யாரும் ‘அய்யோ மின்சாரம் தேவை’ என்று
கூப்பாடு போடவில்லை. இத்தனைக்கும் வருடந்தோறும் அப்போது
அங்கே மின் தேவை 1 சதவிகிதம் அதிகரித்துக் கொண்டிருந்தது.
மூடப்பட்ட அணு உலை சிறு மாற்றங்களுடன் 2002ல் இயற்கை
எரிவாயுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையாக மாற்றப்பட்டது. ஷோர்ஹேம் உலை மூடப்பட்டபிறகு அமெரிக்காவில் புதிய அணு உலை எதுவும் ஆரம்பிக்கப்படவே இல்லை.
அமெரிக்க தாசரான மன்மோகன் இந்த வரலாற்று நிகழ்விலிருந்து
சில பாடங்களைக் கற்க வேண்டும். பல கோடி ரூபாய் செலவழித்து
விட்டதற்காக ஆபத்தான உலையை ஆரம்பித்துவிடக் கூடாது.
உண்மையான ஜனநாயகம் என்பது மத்திய அரசு தன் விருப்பத்தை
பஞ்சாயத்துகளின் மீது திணிப்பது அல்ல. உலை இருக்கும் பகுதியின்
பஞ்சாயத்து எடுக்கும் முடிவுக்குதான் மத்திய அரசு கட்டுப்பட
வேண்டும். மத்திய அரசின் முடிவுக்குத் தலையாட்டுவது பஞ்சாயத்தில் வேலையல்ல.
கூடங்குளம் பகுதியில் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதமே எல்லா பஞ்
சாயத்துகளும் கூடி அணு உலை இங்கே வேண்டாம் என்று தீர்மானம்
நிறைவேற்றியிருக்கின்றன. கட்டிய உலையை வேறு எரிபொருள்
கொண்டு இயக்கமுடியுமா என்று ஆராய்வதுதான் விஞ்ஞானிகளின்
வேலை. அது முடியும். ஷோர்ஹேம் போல கூடங்குளத்தையும்
இயற்கை எரிவாயு அல்லது அனல் மின் நிலையமாக மாற்றமுடியும்.
இதில் இப்போது முடங்கியிருப்பதால் இந்த உலைகளை
மட்டும் அனுமதித்துவிடலாமா என்று கேட்கிறார்களே ?
மன்மோகன்சிங் கூட ரஷ்யாவில் நிருபர்களிட்ம பேசும்போது, சுமார்
13 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு அமைத்த உலையை அப்படி
எளிதில் மூடிவிட்டுப் போய்விடமுடியாது என்று பேசியிருக்கிறார்.
அதாவது அவருக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய்தான் முக்கியம்.
மக்களின் நலனோ, அச்சமோ அதை விட சின்ன விஷயம்தான்.
இடிந்தகரை கிராமத்திலிருந்து வந்த சாதாரணப் பெண்ணிடம்
சென்னை நிருபர் சந்திப்பில் ஒரு நிருபர் கேட்டார். இத்தனை கோடி
ரூபாய் செலவு செய்து கட்டிய பிறகு மூடச் சொல்வது நியாயமா?
பணம் வீணாகிறதே ? அந்தப் பெண் சொன்ன பதில்: உங்க மகளுக்கு
திருமணம் நிச்சயம் செய்து எல்லா செலவும் பண்ணி விடிந்தால்
கல்யாணம் நடத்தபோறீங்க. பையனுக்கு எய்ட்ஸ் இருக்குன்னு
முந்தின ராத்திரி தெரிய வந்தா, அடுத்த நாள் காலையில கல்யாணம்
செய்வீங்களா? இத்தனை செலவு பண்ணிட்டோம், கல்யாணம்
நடக்கட்டும்னு விடுவீங்களா?
பாமரப் பெண்ணுக்கு புரிகிற விஷயம் மெத்தப் படித்த மேதாவி
மன்மோகனுக்குப் புரிவதில்லை. அவருக்குப் புரிவதெல்லாம்
அவருடைய லட்சிய பூமியான அமெரிக்காவில் சொல்வதும்
செய்வதும்தான் என்பதால், அவருக்காக அமெரிக்க அணு உலைகள்
வரலாற்றிலிருந்து ஒரு தகவலைப் பார்ப்போம்.
1979ல் த்ரீ மைல் ஐலண்ட் அணு உலையில் விபத்து ஏற்படுவதற்கு
முன்பு 1973ல் நியூயார்க் பகுதியில் இருக்கும் லாங் ஐலண்ட் என்ற
இடத்தில் கட்ட ஆரம்பித்த ஷோர்ஹேம் ப்ளாண்ட்டை 1984ல் கட்டி
முடித்தார்கள்.இது. 1983ல் அமெரிக்க மத்திய அரசு இந்த உலையில்
விபத்து ஏற்பட்டால் எப்படி மக்களை வெளியேற்றவேண்டும்
என்பதற்கான அவசர கால திட்டத்தை உருவாக்கி வெளியிட்டது.
இதற்கு உள்ளூர் பஞ்சாயத்தான சஃபோக் பகுதி கவுண்ட்டியின் ஒப்புதல் வேண்டும். ஆனால் அதை ஏற்கமுடியாது என்று உலை இருக்கும் பகுதியான சஃபோக் கவுண்ட்டி (பஞ்சாயத்து) தெரிவித்தது.
ஆறு பில்லியன் டாலர் (சுமார் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணு
உலை வேண்டாம் என்று அங்கே மக்கள் வாக்களித்தார்கள். அதை
அரசு ஏற்றுக் கொண்டது. உலை சொந்தக்காரரான லில்கோ
கம்பெனிக்கு அந்தப் பணத்தை அரசு செலுத்தியது. உலை மூடும்
செலவான இன்னொரு 186 மில்லியன் டாலரையும் அரசு ஏற்றது.
இத்தனையும் கட்டி முடித்து இயங்கவே ஆரம்பிக்காத அணு
உலைக்கு! இப்படி உலையை மூடும் செலவுக்காக பொது மக்கள்
அடுத்த 30 வருடத்துக்கு மின் கட்டணத்தில் மூன்று சதவிகிதம்
சர்சார்ஜ் செலுத்தும்படி அரசு கோரியதை சஃபோக் கவுண்ட்டி ஏற்றுக்
கொண்டது. அங்கே யாரும் ‘அய்யோ மின்சாரம் தேவை’ என்று
கூப்பாடு போடவில்லை. இத்தனைக்கும் வருடந்தோறும் அப்போது
அங்கே மின் தேவை 1 சதவிகிதம் அதிகரித்துக் கொண்டிருந்தது.
மூடப்பட்ட அணு உலை சிறு மாற்றங்களுடன் 2002ல் இயற்கை
எரிவாயுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையாக மாற்றப்பட்டது. ஷோர்ஹேம் உலை மூடப்பட்டபிறகு அமெரிக்காவில் புதிய அணு உலை எதுவும் ஆரம்பிக்கப்படவே இல்லை.
அமெரிக்க தாசரான மன்மோகன் இந்த வரலாற்று நிகழ்விலிருந்து
சில பாடங்களைக் கற்க வேண்டும். பல கோடி ரூபாய் செலவழித்து
விட்டதற்காக ஆபத்தான உலையை ஆரம்பித்துவிடக் கூடாது.
உண்மையான ஜனநாயகம் என்பது மத்திய அரசு தன் விருப்பத்தை
பஞ்சாயத்துகளின் மீது திணிப்பது அல்ல. உலை இருக்கும் பகுதியின்
பஞ்சாயத்து எடுக்கும் முடிவுக்குதான் மத்திய அரசு கட்டுப்பட
வேண்டும். மத்திய அரசின் முடிவுக்குத் தலையாட்டுவது பஞ்சாயத்தில் வேலையல்ல.
கூடங்குளம் பகுதியில் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதமே எல்லா பஞ்
சாயத்துகளும் கூடி அணு உலை இங்கே வேண்டாம் என்று தீர்மானம்
நிறைவேற்றியிருக்கின்றன. கட்டிய உலையை வேறு எரிபொருள்
கொண்டு இயக்கமுடியுமா என்று ஆராய்வதுதான் விஞ்ஞானிகளின்
வேலை. அது முடியும். ஷோர்ஹேம் போல கூடங்குளத்தையும்
இயற்கை எரிவாயு அல்லது அனல் மின் நிலையமாக மாற்றமுடியும்.
அப்படிச் செய்துவிட்டால் பிரச்சினை முடிந்துவிடுமா?
இல்லை. அது ஒரு கட்டம். அடுத்த கட்டமாக இந்தியாவில்
இனி புது அணு உலைகள் தொடங்குவதில்லை என்ற முடிவை
எடுக்கவேண்டும். ஏற்கனவே இயங்கிவரும் உலைகளை ஒவ்வொன்றாக மூட வேண்டும். குறிப்பாக தமிழத்தில் தலைநகர் சென்னைக்கு அருகில் கடந்த இருபதாண்டுகளாக இயங்கும் கல்பாக்கம் உலைகள் பற்றி முழுமையான சுதந்திரமான ஆய்வு செய்யப்படவேண்டும். கல்பாக்கம் அணு உலைகளில் என்னென்ன விபத்துகள் நிகழ்ந்தன, ஏன் நிகழ்ந்தன என்பதையும், கல்பாக்கத்தை சுற்றிலும் இருக்கும் பகுதிகளில் கதிர் வீச்சு பாதிப்பு பற்றிய மருத்துவ ஆய்வையும் அணு சக்தித் துறைக்கு தொடர்பில்லாத விஞ்ஞானிகளைக் கொண்டு அடுத்த மூன்று மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தரச் சொல்லவேண்டும்
இந்தியாவில் ஏற்கனவே இயங்கிவரும் அணு உலைகளின் நிலை
என்ன? ஒவ்வொரு அணு உலை, யுரேனிய சுரங்கம், சுத்திகரிப்பு
வளாகங்கள் ஆகியவை இருக்கும் இடங்களில் அந்த சுற்று வட்டார
மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன ? மீனவர் வாழ்க்கையும்
மீன்வளமும் அந்தப் பகுதியில் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன?
பணி புரிவோரில் கதிரியக்கத்துக்கு உட்படுத்தப்படுவோர் யார் யார்?
அதில் தினக்கூலிகள் எத்தனை பேர்? இதுவரை நடந்த விபத்துகள்
என்ன? அவற்றின் விளைவுகள் என்ன? இதைப் பற்றியெல்லாம்
அரசுக்கு தொடர்பில்லாத சுயேச்சையான மருத்துவர்கள், அறிஞர்கள், நீதிபதிகள், சூழல் ஆர்வலர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தி விசாரிக்கவேண்டும். கல்பாக்கம் உடபட அனைத்து அணுசக்தி நிலையங்களிலும் பணியாற்றுவோர், பணியாற்றினோர் ரகசியமாக குழுவின் முன்பு தகவல் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும்.
ஊழலும் லஞ்சமும் ஒழுக்கக் கேடும் மலிந்து கிடக்கும் இந்தியச்
சூழலில், எந்த அமைச்சருக்கு எந்த இலாகா, எந்த இலாகாவுக்கு
யார் அமைச்சர் என்பதை தொழிலதிபர்களின் தரகர்கள் தீர்மானிக்கும்
கேடு கெட்ட அரசியலில், மனித குலத்தாலேயே இதுவரை தீர்வு
காணப்படாத ஆபத்தான அணு தொழில் நுட்பத்தை அமலாக்குவது
மிக மிக ஆபத்தானது. இரண்டு சதவிகித மின்சாரத் தயாரிப்பில்
இருக்கும் போதே முடிவெடுப்பது அவசியம். அணு உலைக்கு
இறைக்கும் கோடிக் கணக்கான பணத்தை மாற்று முயற்சிகளுக்கு
ஒதுக்க வேண்டும்.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை விட, இந்திய அணு
உலைகளை ஆய்வுக்குட்படுத்த சுயேச்சையான ஒரு லோக்பாலை
உருவாக்குவதுதான் என்னைப் பொறுத்த வரையில் இன்னும்
அவசரமான பிரச்சினை. ஏனென்றால் உயிரோடு இருந்தால்தான்
லஞ்சம் கொடுப்பது வாங்குவது அதை விசாரிப்பது பற்றியெல்லாம்
பேசமுடியும்.
வீட்டுக்கு வீடு இலவச டி.வி.பெட்டி, கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ்,
வாஷிங் மெஷின், குறைந்த வட்டிக் கடனில் ஏ.சி, கார், மெட்ரோ
ரயில், கேட்டட் கம்யூனிட்டியில் ஒரு சொகுசான வீடு கிடைத்தால்
போதும் என்று ஏங்கிக் கிடக்கும் முட்டாள்களாகிய நாம், சொல்லாமல் கொள்ளாமல் வரவிருக்கும் இலவசமான கதிர் வீச்சு பற்றி இப்போதே விழித்துக் கொள்ளாவிட்டால் பேரழிவுக்கு வழி வகுப்பது உறுதி.
இல்லாவிட்டால் பேரழிவு வரும்போது உங்களால் கரப்பான் பூச்சியாக மாறிவிடமுடியுமா என்று யோசிக்கவேண்டும்.
இல்லை. அது ஒரு கட்டம். அடுத்த கட்டமாக இந்தியாவில்
இனி புது அணு உலைகள் தொடங்குவதில்லை என்ற முடிவை
எடுக்கவேண்டும். ஏற்கனவே இயங்கிவரும் உலைகளை ஒவ்வொன்றாக மூட வேண்டும். குறிப்பாக தமிழத்தில் தலைநகர் சென்னைக்கு அருகில் கடந்த இருபதாண்டுகளாக இயங்கும் கல்பாக்கம் உலைகள் பற்றி முழுமையான சுதந்திரமான ஆய்வு செய்யப்படவேண்டும். கல்பாக்கம் அணு உலைகளில் என்னென்ன விபத்துகள் நிகழ்ந்தன, ஏன் நிகழ்ந்தன என்பதையும், கல்பாக்கத்தை சுற்றிலும் இருக்கும் பகுதிகளில் கதிர் வீச்சு பாதிப்பு பற்றிய மருத்துவ ஆய்வையும் அணு சக்தித் துறைக்கு தொடர்பில்லாத விஞ்ஞானிகளைக் கொண்டு அடுத்த மூன்று மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தரச் சொல்லவேண்டும்
இந்தியாவில் ஏற்கனவே இயங்கிவரும் அணு உலைகளின் நிலை
என்ன? ஒவ்வொரு அணு உலை, யுரேனிய சுரங்கம், சுத்திகரிப்பு
வளாகங்கள் ஆகியவை இருக்கும் இடங்களில் அந்த சுற்று வட்டார
மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன ? மீனவர் வாழ்க்கையும்
மீன்வளமும் அந்தப் பகுதியில் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன?
பணி புரிவோரில் கதிரியக்கத்துக்கு உட்படுத்தப்படுவோர் யார் யார்?
அதில் தினக்கூலிகள் எத்தனை பேர்? இதுவரை நடந்த விபத்துகள்
என்ன? அவற்றின் விளைவுகள் என்ன? இதைப் பற்றியெல்லாம்
அரசுக்கு தொடர்பில்லாத சுயேச்சையான மருத்துவர்கள், அறிஞர்கள், நீதிபதிகள், சூழல் ஆர்வலர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தி விசாரிக்கவேண்டும். கல்பாக்கம் உடபட அனைத்து அணுசக்தி நிலையங்களிலும் பணியாற்றுவோர், பணியாற்றினோர் ரகசியமாக குழுவின் முன்பு தகவல் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும்.
ஊழலும் லஞ்சமும் ஒழுக்கக் கேடும் மலிந்து கிடக்கும் இந்தியச்
சூழலில், எந்த அமைச்சருக்கு எந்த இலாகா, எந்த இலாகாவுக்கு
யார் அமைச்சர் என்பதை தொழிலதிபர்களின் தரகர்கள் தீர்மானிக்கும்
கேடு கெட்ட அரசியலில், மனித குலத்தாலேயே இதுவரை தீர்வு
காணப்படாத ஆபத்தான அணு தொழில் நுட்பத்தை அமலாக்குவது
மிக மிக ஆபத்தானது. இரண்டு சதவிகித மின்சாரத் தயாரிப்பில்
இருக்கும் போதே முடிவெடுப்பது அவசியம். அணு உலைக்கு
இறைக்கும் கோடிக் கணக்கான பணத்தை மாற்று முயற்சிகளுக்கு
ஒதுக்க வேண்டும்.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை விட, இந்திய அணு
உலைகளை ஆய்வுக்குட்படுத்த சுயேச்சையான ஒரு லோக்பாலை
உருவாக்குவதுதான் என்னைப் பொறுத்த வரையில் இன்னும்
அவசரமான பிரச்சினை. ஏனென்றால் உயிரோடு இருந்தால்தான்
லஞ்சம் கொடுப்பது வாங்குவது அதை விசாரிப்பது பற்றியெல்லாம்
பேசமுடியும்.
வீட்டுக்கு வீடு இலவச டி.வி.பெட்டி, கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ்,
வாஷிங் மெஷின், குறைந்த வட்டிக் கடனில் ஏ.சி, கார், மெட்ரோ
ரயில், கேட்டட் கம்யூனிட்டியில் ஒரு சொகுசான வீடு கிடைத்தால்
போதும் என்று ஏங்கிக் கிடக்கும் முட்டாள்களாகிய நாம், சொல்லாமல் கொள்ளாமல் வரவிருக்கும் இலவசமான கதிர் வீச்சு பற்றி இப்போதே விழித்துக் கொள்ளாவிட்டால் பேரழிவுக்கு வழி வகுப்பது உறுதி.
இல்லாவிட்டால் பேரழிவு வரும்போது உங்களால் கரப்பான் பூச்சியாக மாறிவிடமுடியுமா என்று யோசிக்கவேண்டும்.
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|