ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல்

2 posters

Go down

இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Empty இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல்

Post by சிவா Fri Oct 02, 2009 2:36 am

பதாங் :இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் தாக்கிய பூகம்பத்தில் 467 பேர் பலியான நிலையில், நேற்று இரண்டாவது முறையாக பூகம்பம் தாக்கியது. ரிக்டர் அளவில் 6.8 என பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தால், நேற்றும் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. இரண்டு நாட்கள் நிகழ்ந்த பூகம்பத்தால், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து, இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை 1,000த்தை தொடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், 2004ம் ஆண்டில் பூகம்பம் ஏற்பட்டது. இதில், ஏராளமானவர்கள் பலியாயினர். இந்நிலையில், நேற்று முன்தினமும் மேற்கு சுமத்ரா மாகாணத்தின் தலைநகரான, கடற்கரை நகரமான பதாங் தீவில் பூகம்பம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 7.6 என பதிவான இந்த பூகம்பத்தினால், வீடுகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், மார்க்கெட் வளாகங்கள் என, 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் சாலைகள் வெடித்ததோடு, பாலங்களும் இடிந்து நொறுங்கின.பூகம்பம் ஏற்பட்டு கட்டடங்கள் ஆடத் துவங்கியதும், மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இருப்பினும், நூற்றுக்கணக்கானவர்கள் பூகம்ப இடிபாடுகளில் சிக்கி பலியாயினர். நேற்று வரை இடிபாடுகளில் சிக்கிய 467 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால், இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000த்தை தொடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


மீட்கப்பட்ட 467 பேரின் உடல்களில், 376 பேர் உடல்கள் பதாங் நகரத்தில் மட்டும் மீட்கப்பட்டன. மீதமுள்ள உடல்கள் பதாங்கை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் இடிந்த கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக மற்ற சில தகவல்கள் தெரிவிக்கின்றன.மொத்தம் ஒன்பது லட்சம் பேர் வசிக்கும் பதாங் நகரத்தில் நிகழ்ந்த பூகம்பம் பெரிய பூகம்பம் என, இந்தோனேசிய சுகாதார அமைச்சர் சிதி பிடிலா சுபாரி கூறியுள்ளார்.மழை, தீ: பதாங் நகரில் உள்ள அம்பகேங் ஓட்டல் ஒன்று நேற்று முன்தினம் நிகழ்ந்த பூகம்பத்தில் இடிந்து விழுந்ததில், 80 பேர் பலியாகியுள்ளனர். பலத்த மழை பெய்து கொண்டிருந்த போதும், இங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. பூகம்பத்தினால், நிகழ்ந்த கடும் சேதத்தை பார்வையிட்ட மக்களில் பலர், நேற்று விடிய விடிய வெட்ட வெளியில் படுத்திருந்தனர்.


பதாங்கில் உள்ள ஜமீல் மருத்துவமனை இடிந்து விழுந்ததில், குறைந்தபட்சம் 40 பேர் பலியாகியுள்ளனர். பூகம்பத்தைத் தொடர்ந்து பல நோயாளிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டும் இந்நிலை தொடர்ந்தது.மேலும், நகரில் உள்ள சிட்டி சென்டர் ஒன்றும் முற்றிலும் சேதமடைந்தது. பல இடங்கள் தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன. மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து என்று கூறப்பட்டது.பூகம்பத்தில் சாலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதால், இந்தப் பகுதிகளில் இருந்து ரப்பரை மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வது தடைபட்டுள்ளது. பதாங்கில் உள்ள விமான நிலைய கட்டடமும் சேதம் அடைந்துள்ளது.பூகம்பத்தில் வீடுகளை இழந்த பலர், பதாங் விமான நிலையத்திற்கு வெளியே பாய்களை விரித்து படுத்திருந்தனர். நகரில் உள்ள கடைகள் பல தண்ணீரில் மூழ்கின.


பதாங் நகரில் இருந்து வேறு பாதுகாப்பான இடத்திற்கு விமானத்தில் செல்லவும் பலர் டிக்கெட் வாங்க போட்டி போட்டனர். நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பெட்ரோல் பங்க்குகள் இயங்கவில்லை. அதனால், சில கார்கள் மற்றும் டாக்சிகள் மட்டுமே ஓடின."நகரே சின்னாபின்னமாகி விட்டது. ஒரே கூச்சல், குழப்பமாக இருந்தது. எரிபொருட்கள் கிடைக்கவில்லை. பூகம்ப இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடைமைகளை கொள்ளையடிப்பதிலும் பலர் ஆர்வம் காட்டினர். "பலருக்கு உணவு கிடைக்கவில்லை. அவர்களிடம் பணமும் இல்லை. ஆயிரக்கணக்கானவர்கள் சாலை மார்க்கமாக நகரை விட்டு வெளியேற முற்பட்டனர். ஆனால், சாலைகள் சேதம் அடைந்திருந்ததால், அவர்களால் எங்கும் செல்ல முடியவில்லை' என, அமெரிக்காவைச் சேர்ந்த கிரக் ஹண்ட் என்பவர் கூறியுள்ளார்.


பதாங்கில், திருமண நிகழ்ச்சிக்காக களை கட்டியிருந்த வீடு ஒன்று இடிந்து விழுந்தது. அங்கிருந்த மணமகன், மணமகளுக்கு என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. பூகம்பத்தால், பாதிக்கப்பட்ட பலர், தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று காலையும் சுமத்ரா தீவில் பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 என பதிவான இந்த பூகம்பம், பதாங்கில் இருந்து 240 கி.மீ., தெற்கே 24 கி.மீ., ஆழத்திலும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.நேற்றைய பூகம்பத்தினால், சுமத்ரா தீவின் மற்றொரு நகரமான ஜாம்பியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. உயிர் பலி ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.


சுமத்ரா தீவில் தான் பல நாடுகளின் பெரிய எண்ணெய் வயல்கள் எல்லாம் உள்ளன. அத்துடன் மிகப்பழமையான இயற்கை எரிவாயு டெர்மினலும் உள்ளது.பூகம்பத்தால், இவற்றுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டதா என்பதைப் பற்றி தகவல் இல்லை. பதாங் நகரம் பூகம்பத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதியில் இருப்பதால், அந்த நகரம் பூகம்பத்தால், ஒரு நாள் முற்றிலும் அழிந்து விடும் என, நிலவியல் ஆய்வாளர்கள் முன்பே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Empty Re: இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல்

Post by ரூபன் Fri Oct 02, 2009 2:40 am

இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Icon_eek இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Icon_eek இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Icon_eek
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum