ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல்

2 posters

Go down

இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Empty இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல்

Post by சிவா Fri Oct 02, 2009 2:36 am

பதாங் :இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் தாக்கிய பூகம்பத்தில் 467 பேர் பலியான நிலையில், நேற்று இரண்டாவது முறையாக பூகம்பம் தாக்கியது. ரிக்டர் அளவில் 6.8 என பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தால், நேற்றும் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. இரண்டு நாட்கள் நிகழ்ந்த பூகம்பத்தால், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து, இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை 1,000த்தை தொடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், 2004ம் ஆண்டில் பூகம்பம் ஏற்பட்டது. இதில், ஏராளமானவர்கள் பலியாயினர். இந்நிலையில், நேற்று முன்தினமும் மேற்கு சுமத்ரா மாகாணத்தின் தலைநகரான, கடற்கரை நகரமான பதாங் தீவில் பூகம்பம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 7.6 என பதிவான இந்த பூகம்பத்தினால், வீடுகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், மார்க்கெட் வளாகங்கள் என, 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் சாலைகள் வெடித்ததோடு, பாலங்களும் இடிந்து நொறுங்கின.பூகம்பம் ஏற்பட்டு கட்டடங்கள் ஆடத் துவங்கியதும், மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இருப்பினும், நூற்றுக்கணக்கானவர்கள் பூகம்ப இடிபாடுகளில் சிக்கி பலியாயினர். நேற்று வரை இடிபாடுகளில் சிக்கிய 467 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால், இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000த்தை தொடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


மீட்கப்பட்ட 467 பேரின் உடல்களில், 376 பேர் உடல்கள் பதாங் நகரத்தில் மட்டும் மீட்கப்பட்டன. மீதமுள்ள உடல்கள் பதாங்கை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் இடிந்த கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக மற்ற சில தகவல்கள் தெரிவிக்கின்றன.மொத்தம் ஒன்பது லட்சம் பேர் வசிக்கும் பதாங் நகரத்தில் நிகழ்ந்த பூகம்பம் பெரிய பூகம்பம் என, இந்தோனேசிய சுகாதார அமைச்சர் சிதி பிடிலா சுபாரி கூறியுள்ளார்.மழை, தீ: பதாங் நகரில் உள்ள அம்பகேங் ஓட்டல் ஒன்று நேற்று முன்தினம் நிகழ்ந்த பூகம்பத்தில் இடிந்து விழுந்ததில், 80 பேர் பலியாகியுள்ளனர். பலத்த மழை பெய்து கொண்டிருந்த போதும், இங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. பூகம்பத்தினால், நிகழ்ந்த கடும் சேதத்தை பார்வையிட்ட மக்களில் பலர், நேற்று விடிய விடிய வெட்ட வெளியில் படுத்திருந்தனர்.


பதாங்கில் உள்ள ஜமீல் மருத்துவமனை இடிந்து விழுந்ததில், குறைந்தபட்சம் 40 பேர் பலியாகியுள்ளனர். பூகம்பத்தைத் தொடர்ந்து பல நோயாளிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டும் இந்நிலை தொடர்ந்தது.மேலும், நகரில் உள்ள சிட்டி சென்டர் ஒன்றும் முற்றிலும் சேதமடைந்தது. பல இடங்கள் தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன. மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து என்று கூறப்பட்டது.பூகம்பத்தில் சாலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதால், இந்தப் பகுதிகளில் இருந்து ரப்பரை மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வது தடைபட்டுள்ளது. பதாங்கில் உள்ள விமான நிலைய கட்டடமும் சேதம் அடைந்துள்ளது.பூகம்பத்தில் வீடுகளை இழந்த பலர், பதாங் விமான நிலையத்திற்கு வெளியே பாய்களை விரித்து படுத்திருந்தனர். நகரில் உள்ள கடைகள் பல தண்ணீரில் மூழ்கின.


பதாங் நகரில் இருந்து வேறு பாதுகாப்பான இடத்திற்கு விமானத்தில் செல்லவும் பலர் டிக்கெட் வாங்க போட்டி போட்டனர். நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பெட்ரோல் பங்க்குகள் இயங்கவில்லை. அதனால், சில கார்கள் மற்றும் டாக்சிகள் மட்டுமே ஓடின."நகரே சின்னாபின்னமாகி விட்டது. ஒரே கூச்சல், குழப்பமாக இருந்தது. எரிபொருட்கள் கிடைக்கவில்லை. பூகம்ப இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடைமைகளை கொள்ளையடிப்பதிலும் பலர் ஆர்வம் காட்டினர். "பலருக்கு உணவு கிடைக்கவில்லை. அவர்களிடம் பணமும் இல்லை. ஆயிரக்கணக்கானவர்கள் சாலை மார்க்கமாக நகரை விட்டு வெளியேற முற்பட்டனர். ஆனால், சாலைகள் சேதம் அடைந்திருந்ததால், அவர்களால் எங்கும் செல்ல முடியவில்லை' என, அமெரிக்காவைச் சேர்ந்த கிரக் ஹண்ட் என்பவர் கூறியுள்ளார்.


பதாங்கில், திருமண நிகழ்ச்சிக்காக களை கட்டியிருந்த வீடு ஒன்று இடிந்து விழுந்தது. அங்கிருந்த மணமகன், மணமகளுக்கு என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. பூகம்பத்தால், பாதிக்கப்பட்ட பலர், தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று காலையும் சுமத்ரா தீவில் பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 என பதிவான இந்த பூகம்பம், பதாங்கில் இருந்து 240 கி.மீ., தெற்கே 24 கி.மீ., ஆழத்திலும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.நேற்றைய பூகம்பத்தினால், சுமத்ரா தீவின் மற்றொரு நகரமான ஜாம்பியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. உயிர் பலி ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.


சுமத்ரா தீவில் தான் பல நாடுகளின் பெரிய எண்ணெய் வயல்கள் எல்லாம் உள்ளன. அத்துடன் மிகப்பழமையான இயற்கை எரிவாயு டெர்மினலும் உள்ளது.பூகம்பத்தால், இவற்றுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டதா என்பதைப் பற்றி தகவல் இல்லை. பதாங் நகரம் பூகம்பத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதியில் இருப்பதால், அந்த நகரம் பூகம்பத்தால், ஒரு நாள் முற்றிலும் அழிந்து விடும் என, நிலவியல் ஆய்வாளர்கள் முன்பே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Empty Re: இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல்

Post by ரூபன் Fri Oct 02, 2009 2:40 am

இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Icon_eek இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Icon_eek இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல் Icon_eek
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum