Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள்
+7
ஆரூரன்
வேலவன்
krishnaamma
பேகன்
யினியவன்
மகா பிரபு
சிவா
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள்
First topic message reminder :
மாவட்டங்களில் 10 மணி நேரம் நிலவும் மின்வெட்டால், மக்கள் விழி பிதுங்குகின்றனர்.தேர்வுக்குத் தயாராகும் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள், மன ரீதியான பாதிப்புக்கு ஆளாகினர். பொதுத் தேர்வுக்கு அவர்கள் தயாராக முடியாத அளவு மின்வெட்டு நிலவுகிறது. சிறுதொழில்கள், வீட்டு சமையல் வேலைகள் கூட, மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. சிறு தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. குடிசைத் தொழில்கள் முடங்கியுள்ளன.
மதுரை: 10 மணி நேரம் - காலை 9 -12, பகல் 3-6, மாலை 7.30 - 8.25, இரவு 9.45 - 10.30, நள்ளிரவு 12 - 12.45, அதிகாலை 2.15 - 3, காலை 5.15-6.மதுரையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல், ஒவ்வொரு ஒரு மணி நேர இடைவெளியில், 45 நிமிடம் மின்வெட்டு செய்யப்பட்டது. கொசுக்கடியை தாங்க முடியாமல், தூக்கத்தை தொலைத்தனர் மக்கள்.
திண்டுக்கல்: 11 மணி நேரம், காலை 9 -12, பகல் 3 - 6, மாலை 7.45 - 8.15, இரவு 9.45 - 10.15, அதிகாலை 4.30 - 5.30. அவ்வப்போது அரை மணி நேரம்.தேனி: 11 மணி நேரம்- காலை 5 - 8, பகல் 12 - 3, மாலை 6 - 7, இரவு 10 - 11, நள்ளிரவு 12 - 1, காலை 7.30 - 8.30.
ராமநாதபுரம்: 9 மணிநேரம்- அதிகாலை 3.30 - 4, காலை 4.30 - 5, காலை 6 - 9, பகல் 12-3, மாலை 6.15 - 6.45, இரவு 8.15 - 9, இரவு 10 -11.
சிவகங்கை: 12 மணிநேரம்- காலை 6 - 9, பகல் 12 - 3, மாலை 6.45 - 7.30, இரவு 9 - 9.45, இரவு 11.15 -12, அதிகாலை 1.30 - 2.15, காலை 4 - 5. அவ்வப்போது அரை மணி நேரம்.
விருதுநகர்: 12 மணி நேரம் - காலை 6 - 7, காலை 9 - 12, பகல் 3 - 6, மாலை 6.30 -7.30, இரவு 9 - 9.30, இரவு 10.30 - 11.30. அவ்வப்போது அரை மணி நேரம்.
திருச்சி, தஞ்சை மாவட்டத்தில், மின்சாரம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை.திருச்சியில், மொத்தம் 6 மணி நேரமும், தஞ்சையில் 5 மணி நேரமும் தான் மின்சாரம் வருகிறது.சேலம், ஈரோடு மாவட்டத்திலும் இதே நிலை நீடிக்கிறது.-
கேள்விக்குறியாகும் கோடை சாகுபடி:பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை, பருத்தி, மக்காச்சோளம், கம்பு, பாசிப்பயறு, உளுந்து, சூரியகாந்தி, நிலக்கடலை ஆகியவற்றை கோடைகால சாகுபடியாக செய்வது, விவசாயிகளின் வழக்கம்.விருதுநகர் மாவட்டத்தில், 3,000 ஹெக்டேரில் மக்காச்சோளம், 800 ஹெக்டேரில் பயறு வகை, 300 ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படும் . இதில், கோடைகால சாகுபடியில், 80 சதவீதம் கிணற்று பாசனத்தை நம்பியே உள்ளது. மாவட்டத்தில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசன கிணறுகள் உள்ளன. கிணறுகளில், கோடை சாகுபடிக்குத் தேவையான நீரும் உள்ளது.தற்போது வழக்கமாக, 8 முதல் 10 மணிநேரம் வரை மின் தடை ஏற்படுகிறது. விவசாயத்திற்கு, பகலில் 3 மணிநேரம், இரவில் 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. இரவில் வழங்கப்படும் 2 மணிநேர மின்சாரமும் அடிக்கடி தடைபடுகிறது. இதனால், இரவில் தண்ணீர் பாய்ச்ச முடிவதில்லை.அதிகபட்சமாக, 5 மணி நேரம் கிடைக்கும் மின்சாரத்தை வைத்து, கோடை சாகுபடி செய்தால், நஷ்டமின்றி மகசூல் கிடைக்குமா என்ற சந்தேகத்தில், விவசாயிகள் உள்ளனர்.
மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழக்கமாக ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்கும் மின்சாரத்தில், புதன் இரவு மட்டும், 500 மெகா வாட் மின்சாரத்தில், திடீரென ராமகுண்டம் என்ற இடத்தில் தடை ஏற்பட்டது. அத்தடை நீங்கி தமிழகத்துக்கு கிடைக்க, அதிகாலை 2.15 மணியாகி விட்டது. இதனால் தான், தவிர்க்க முடியாமல் தொடர்ந்து மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் மனோகரன்: ஈரோடு மாவட்டத்துக்கு திங்கள்கிழமை மின் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும், 5ம் தேதி தான் அமலாகிறது. ஆலைகளை தொடர்ந்து கண்காணித்த பிறகே, மின்சாரம் மிச்சமாகும். 7ம் தேதிக்கு பிறகே, கூடுதலாக இரண்டு மணி நேரம் மின்சாரம் வழங்க முடியும். எனினும், மாவட்டத்தில் தினமும் நான்கு மணி நேர மின்தடை என்பது கட்டாயமாக்கப்படும். அதன் மூலம், கூடுதலாக மிச்சமாகும் மின்சாரத்தை விவசாயத்துக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்.
சேலம் மின் வாரிய கோட்ட மேற்பார்வை பொறியாளர் சுந்தரேசன்:நேற்று முதல், "பவர் ஹாலிடே' அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு மின் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வரும் நாளில் மின் வெட்டு நேரம் குறையும் என எதிர்பார்க்கலாம்.
கோவை, திருப்பூரில் கடும் பாதிப்பு:கோவை மாவட்டத்தில் நேற்று, முதல் முறையாக மின் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன." சேமிக்கப்படும் மின்சாரத்தை வழங்கும் பட்சத்தில், மின்தடை நேர அளவு குறையும்' என்று, பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, நேற்று, கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில், எட்டு மணி நேரம் மின் தடை செய்யப்பட்டது. இரவு 10.00 மணி, அதிகாலை 3.00 மணி, 5.00 மணி என, சரமாரியாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டதால், மக்கள் தூக்கமிழந்து பரிதவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்திலும் நேற்று, எட்டு மணி நேரம் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. இரவில், 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, ஒரு மணி நேரம் மின் தடை, ஒரு மணி நேரம் மின் வினியோகம் என்று சமாளிக்கும் வேலையை, அதிகாரிகள் செய்தனர். பெரும்பாலான கிராமப் பகுதிகளில், பத்து மணி நேரத்துக்கும் மேலாக மின் வெட்டு இருந்தது.திருப்பூர் மாவட்டத்தில், இன்று வெள்ளிக் கிழமையும், வரும் ஞாயிற்றுக் கிழமையும், மின் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க, உதவி செயற்பொறியாளர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப் பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர்
மாவட்டங்களில் 10 மணி நேரம் நிலவும் மின்வெட்டால், மக்கள் விழி பிதுங்குகின்றனர்.தேர்வுக்குத் தயாராகும் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள், மன ரீதியான பாதிப்புக்கு ஆளாகினர். பொதுத் தேர்வுக்கு அவர்கள் தயாராக முடியாத அளவு மின்வெட்டு நிலவுகிறது. சிறுதொழில்கள், வீட்டு சமையல் வேலைகள் கூட, மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. சிறு தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. குடிசைத் தொழில்கள் முடங்கியுள்ளன.
மதுரை: 10 மணி நேரம் - காலை 9 -12, பகல் 3-6, மாலை 7.30 - 8.25, இரவு 9.45 - 10.30, நள்ளிரவு 12 - 12.45, அதிகாலை 2.15 - 3, காலை 5.15-6.மதுரையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல், ஒவ்வொரு ஒரு மணி நேர இடைவெளியில், 45 நிமிடம் மின்வெட்டு செய்யப்பட்டது. கொசுக்கடியை தாங்க முடியாமல், தூக்கத்தை தொலைத்தனர் மக்கள்.
திண்டுக்கல்: 11 மணி நேரம், காலை 9 -12, பகல் 3 - 6, மாலை 7.45 - 8.15, இரவு 9.45 - 10.15, அதிகாலை 4.30 - 5.30. அவ்வப்போது அரை மணி நேரம்.தேனி: 11 மணி நேரம்- காலை 5 - 8, பகல் 12 - 3, மாலை 6 - 7, இரவு 10 - 11, நள்ளிரவு 12 - 1, காலை 7.30 - 8.30.
ராமநாதபுரம்: 9 மணிநேரம்- அதிகாலை 3.30 - 4, காலை 4.30 - 5, காலை 6 - 9, பகல் 12-3, மாலை 6.15 - 6.45, இரவு 8.15 - 9, இரவு 10 -11.
சிவகங்கை: 12 மணிநேரம்- காலை 6 - 9, பகல் 12 - 3, மாலை 6.45 - 7.30, இரவு 9 - 9.45, இரவு 11.15 -12, அதிகாலை 1.30 - 2.15, காலை 4 - 5. அவ்வப்போது அரை மணி நேரம்.
விருதுநகர்: 12 மணி நேரம் - காலை 6 - 7, காலை 9 - 12, பகல் 3 - 6, மாலை 6.30 -7.30, இரவு 9 - 9.30, இரவு 10.30 - 11.30. அவ்வப்போது அரை மணி நேரம்.
திருச்சி, தஞ்சை மாவட்டத்தில், மின்சாரம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை.திருச்சியில், மொத்தம் 6 மணி நேரமும், தஞ்சையில் 5 மணி நேரமும் தான் மின்சாரம் வருகிறது.சேலம், ஈரோடு மாவட்டத்திலும் இதே நிலை நீடிக்கிறது.-
கேள்விக்குறியாகும் கோடை சாகுபடி:பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை, பருத்தி, மக்காச்சோளம், கம்பு, பாசிப்பயறு, உளுந்து, சூரியகாந்தி, நிலக்கடலை ஆகியவற்றை கோடைகால சாகுபடியாக செய்வது, விவசாயிகளின் வழக்கம்.விருதுநகர் மாவட்டத்தில், 3,000 ஹெக்டேரில் மக்காச்சோளம், 800 ஹெக்டேரில் பயறு வகை, 300 ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படும் . இதில், கோடைகால சாகுபடியில், 80 சதவீதம் கிணற்று பாசனத்தை நம்பியே உள்ளது. மாவட்டத்தில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசன கிணறுகள் உள்ளன. கிணறுகளில், கோடை சாகுபடிக்குத் தேவையான நீரும் உள்ளது.தற்போது வழக்கமாக, 8 முதல் 10 மணிநேரம் வரை மின் தடை ஏற்படுகிறது. விவசாயத்திற்கு, பகலில் 3 மணிநேரம், இரவில் 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. இரவில் வழங்கப்படும் 2 மணிநேர மின்சாரமும் அடிக்கடி தடைபடுகிறது. இதனால், இரவில் தண்ணீர் பாய்ச்ச முடிவதில்லை.அதிகபட்சமாக, 5 மணி நேரம் கிடைக்கும் மின்சாரத்தை வைத்து, கோடை சாகுபடி செய்தால், நஷ்டமின்றி மகசூல் கிடைக்குமா என்ற சந்தேகத்தில், விவசாயிகள் உள்ளனர்.
மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழக்கமாக ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்கும் மின்சாரத்தில், புதன் இரவு மட்டும், 500 மெகா வாட் மின்சாரத்தில், திடீரென ராமகுண்டம் என்ற இடத்தில் தடை ஏற்பட்டது. அத்தடை நீங்கி தமிழகத்துக்கு கிடைக்க, அதிகாலை 2.15 மணியாகி விட்டது. இதனால் தான், தவிர்க்க முடியாமல் தொடர்ந்து மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் மனோகரன்: ஈரோடு மாவட்டத்துக்கு திங்கள்கிழமை மின் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும், 5ம் தேதி தான் அமலாகிறது. ஆலைகளை தொடர்ந்து கண்காணித்த பிறகே, மின்சாரம் மிச்சமாகும். 7ம் தேதிக்கு பிறகே, கூடுதலாக இரண்டு மணி நேரம் மின்சாரம் வழங்க முடியும். எனினும், மாவட்டத்தில் தினமும் நான்கு மணி நேர மின்தடை என்பது கட்டாயமாக்கப்படும். அதன் மூலம், கூடுதலாக மிச்சமாகும் மின்சாரத்தை விவசாயத்துக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்.
சேலம் மின் வாரிய கோட்ட மேற்பார்வை பொறியாளர் சுந்தரேசன்:நேற்று முதல், "பவர் ஹாலிடே' அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு மின் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வரும் நாளில் மின் வெட்டு நேரம் குறையும் என எதிர்பார்க்கலாம்.
கோவை, திருப்பூரில் கடும் பாதிப்பு:கோவை மாவட்டத்தில் நேற்று, முதல் முறையாக மின் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன." சேமிக்கப்படும் மின்சாரத்தை வழங்கும் பட்சத்தில், மின்தடை நேர அளவு குறையும்' என்று, பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, நேற்று, கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில், எட்டு மணி நேரம் மின் தடை செய்யப்பட்டது. இரவு 10.00 மணி, அதிகாலை 3.00 மணி, 5.00 மணி என, சரமாரியாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டதால், மக்கள் தூக்கமிழந்து பரிதவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்திலும் நேற்று, எட்டு மணி நேரம் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. இரவில், 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, ஒரு மணி நேரம் மின் தடை, ஒரு மணி நேரம் மின் வினியோகம் என்று சமாளிக்கும் வேலையை, அதிகாரிகள் செய்தனர். பெரும்பாலான கிராமப் பகுதிகளில், பத்து மணி நேரத்துக்கும் மேலாக மின் வெட்டு இருந்தது.திருப்பூர் மாவட்டத்தில், இன்று வெள்ளிக் கிழமையும், வரும் ஞாயிற்றுக் கிழமையும், மின் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க, உதவி செயற்பொறியாளர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப் பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள்
கரண்ட் பில் மிச்சம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள் - Page 2 Rosehk](https://2img.net/r/ihimizer/img338/8179/rosehk.jpg)
- இவண்
[i]பேனாமுனைபாரதி
[/i]
பேனாமுனைபாரதி- பண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012
Re: மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள்
கடந்த திங்கள் முதல் 4 மணிநேரமாக ஆக்கப்படும் என்று சொல்லிருந்தார்களே எல்லாம் சொல்வதொடு சரி! பாவம் மக்கள்..!
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நெருக்கடிக்கு மேல் நெருக்கடி! விழி பிதுங்கும் பிரபுதேவா
» உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!
» தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:(
» தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு
» அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு !
» உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!
» தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:(
» தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு
» அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு !
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|