புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
62 Posts - 39%
heezulia
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
57 Posts - 36%
mohamed nizamudeen
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
10 Posts - 6%
prajai
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
3 Posts - 2%
mruthun
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
193 Posts - 42%
ayyasamy ram
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
21 Posts - 5%
prajai
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
7 Posts - 2%
mruthun
பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_m10பந்து இப்போது இந்தியாவிடம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பந்து இப்போது இந்தியாவிடம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 01, 2012 3:39 pm

பந்து இப்போது இந்தியாவிடம் 3ecf46ef75bd65c2ad8b991aaa521076

essay "தி வீக்என்ட் லீடர்' என்ற ஆங்கில ஊடகத்தில் வெளியான கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. இதில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்கா தலைமையில் மேற்குலகு முயற்சிக்கிறது, இந்திய அரசு இந்த விடயத்தில் தீர்மானத்துக்குச் சாதகமான நிலைப்பாட்டையே எடுக்கும் என அவதானிகள் கருதுகின்றனர்.

மே 2009 இல் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 11 ஆவது கூட்டத் தொடரிலும் இலங்கைக்கு எதிராக 17 நாடுகள் பிரேரணை ஒன்றை முன்வைத்தன. அதனை எதிர்ப்பதில் இந்தியா விடாப்பிடியாக நின்றது. அதனால் அந்தப் பிரேரணை பின்னர் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரேரணையாக மாற்றப்பட்டது.

இலங்கையின் இறுதிப் போரின் கடைசியில் அரச படைகளாலும், தமிழ் புலிகளாலும் மிக மோசமான மீறல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததை 2009 மே பிரேரணையில் சுட்டிக்காட்டி இருந்த 17 நாடுகளும், இடம்பெயர்ந்த மக்களுக்கு உரிய பராமரிப்பு, மனிதாபிமான அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றல், ஊடக சுதந்திரத்தை மதித்தல், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாப்பாளர்கள் ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளல் போன்றவற்றை இலங்கை அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின.

மனித உரிமைகள் சபையின் 11 ஆவது கூட்டத் தொடரின்போது இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்த இந்தியா, "மேற்கு நாடுகள் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, மூன்றாம் உலக நாடுகள் தீவிரவாதத்தை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது எவ்விதத்தில் நியாயமானது?'' எனக் கேள்வி எழுப்பி இருந்தது.

இந்தியாவால் இலங்கைக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பரப்புரை வெற்றியடைந்தது. இதன் மூலம் இலத்தீன் அமெரிக்க நாடுகள், அரபு நாடுகள் போன்றவை இலங்கைக்கு ஆதரவாக தமது வாக்குகளை வழங்கின.

இதன் பின்னர், அந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக இலங்கை அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்தது. விடுதலைப்புலிகள் மீது குற்றம்சாட்டியது.

இலங்கைப் படைகள் மேற்கொண்ட மனித உரிமை மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அன்று நிறைவேற்றப்பட்ட பிரேரணையின்போது கருத்தில் எடுக்கப்படவில்லை.

47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் இலங்கையை ஆதரித்து 29 வாக்குகளும் எதிர்த்து 12 வாக்குகளும் வழங்கப்பட்டன. 06 உறுப்பு நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை.

பிராந்திய அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டே அப்போது இலங்கைக்கு ஆதரவாக இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தியது. ஆனால் இப்போது நிலைமைகள் அப்படியல்ல.

கடந்த மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு பயணம் செய்திருந்தார். பெருந்தொகையான நிதியை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக வழங்குவதற்கான உடன்படிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குகின்ற, இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கையின் ஜனாதிபதி உடன்பட்டுள்ளார் எனவும் அறிவித்தார். இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால், கிருஷ்ணா இலங்கைக்கான தனது "வெற்றிகரமான பயணத்தை'' முடித்துக் கொண்டு இந்தியா திரும்பி ஒரு நாள் ஆவதற்குள் 600 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழ் நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதலை மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் 200 படகுகள் வரை சேதமடைந்தன. தமிழ் நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் கற்களைக் கொண்டு சரமாரியான தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டேயுள்ளன. இதற்கான தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை.

இலங்கை என்ற மிகச் சிறிய நாடானது, வல்லரசான இந்தியாவை எதிர்த்து நிற்பதானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கைக் கடற்படையால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை இந்திய அரசு கவனத்தில் எடுக்காததாலேயே, தற்போது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கிருஷ்ணாவிடம் மஹிந்த ராஜபக்ஷவால் எந்தவொரு வாக்குறுதியும் வழங்கப்படவில்லை என வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் "இனப்பிரச்சினைக்கு தீர்வு காண புதிய பரிந்துரையானது வெளிநாட்டு சக்திகளிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. அது இலங்கையின் நாடாளுமன்றில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்'' எனவும் மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இது இந்தியாவை வெளிப்படையாக எதிர்க்கின்ற செயல்.

எனவே இலங்கை தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையை இந்தியா மீளாய்வு செய்யவேண்டிய காலம் நெருங்கி விட்டது.

இந்த மாதத்தின் இறுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை எதிர்த்து இந்தியா வாக்களிக்குமா? இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பிலான தனது நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொள்ளுமா? பந்து இப்போது புதுடில்லியின் அரங்கிலேயே உள்ளது.


(நன்றி: புதினப்பலகை & உதயன்)




பந்து இப்போது இந்தியாவிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 01, 2012 3:46 pm

ஆம், பந்து இப்போது இந்தியாவிடம் தான் உள்ளது. ஆனால் இந்தியாவின் ஆளுமை சோனியாவிடம் அல்லவா உள்ளது. சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 3:47 pm

அண்ணா இந்திய காங்க்ரெஸ் ஆட்சி ஒரு பொது தமிழனுக்கு ஆதரவாக செயல் படாது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 3:55 pm

மம்மி பீசு ஆளர இடத்துல
மந்திரிசபை வெறும் டம்மி பீசுதான்.

மம்மி என்ன சொல்லுதோ அதுவே செல்லும்.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 3:58 pm

கொலவெறி அண்ணா நீங்கள் சொல்லுவது மத்தியில இல்லை மாநிலதில்லா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 4:05 pm

இரா.பகவதி wrote:கொலவெறி அண்ணா நீங்கள் சொல்லுவது மத்தியில இல்லை மாநிலதில்லா
ரெண்டுக்குமே அதே கதி தான் பகவதி.

மேற்கு வங்காளம் அப்புறம் யுபி அங்கயும் இப்படித்தான்.
யுபி ல ரிசல்ட்டு வந்தவுடன் மாறுதா பாப்போம்.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 4:20 pm

இந்தியா சேம் சைடு கோல் போட்டு விடும்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 01, 2012 4:24 pm

இலங்கை என்ற மிகச் சிறிய நாடானது, வல்லரசான இந்தியாவை எதிர்த்து நிற்பதானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்

போர் எடுத்து இலங்கை அழிக்க 10 நிமிடங்கள் கூட ஆகாது ..ஆனால் போர் அதோடு நிற்காது .... சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பந்து இப்போது இந்தியாவிடம் Ila
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Mar 01, 2012 4:30 pm

பலதடவை இந்தியா இலங்கையிடம் தோற்றுப்போனாலும் இந்தியா தனது போக்கை மாற்றியதாகத்தெரியவில்லை இனியும் மாற்றவில்லையென்றால் அது இந்தியாவிற்கு ஆபத்தாக முடியலாம்.

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Thu Mar 01, 2012 6:58 pm

நமது எதிரிகளுக்கு ஆதவரளிக்கும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அறிவில்லாமல் உதவி வருவது வருத்ததிற்குரியது.... அதிர்ச்சி



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக