ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவானந்தவேல் கவிதை தொகுப்பு

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Empty சிவானந்தவேல் கவிதை தொகுப்பு

Post by சிவா Thu Mar 01, 2012 4:47 am

First topic message reminder :

எழுக பாரதம்

விடுதலைக்கு வித்திட்டோராய்
விதியை மாற்றியவனாய்
விலங்குகளை விரட்டியவனாய்
விடிவெள்ளியாய் அன்று
விடிந்துவிட்டது இன்று. . .
தன்னிகரோடு பாரினிலே
தத்தலிப்போர் பார்வையிலே
தரிசு நிலத்திலே
தங்கமாய் விலையுதே
தமயரெல்லாம் ஏன் பிரிந்தோமென. . .
சாதனையை தொடக்கிவிட்டோம்
சாதிகள் தத்தலிக்கின்றன
சாரணனாய் வலம் வருகின்றோம்
சாலைகளாய் மாறுகின்றோம்
சாடுவோரெல்லாம் ஏன் என. . .
விண்ணுக்கு ஏவி விட்டோம்
விந்தையை பரப்புகின்றன
விசாலம் எங்களுக்குள்ளே
விவேகமும் நமக்குள்ளே
விடிந்துவிட்டது பாரதம் ஒளிர. . .
வேளாண்மை வேர்விட்டுவிட்டது
வேதம் ஒளியுடன் உலாகிறது
வேதனையெல்லாம் எங்கோ. . .
வேடுவர் நாடாளுகின்றனர்
வேள்வி நீ பாரதத்துக்குள்ளே. . .
எழுக எழுக பாரதமே. . .


சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Empty Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு

Post by சிவா Thu Mar 01, 2012 5:00 am

புது(மை) கவி(தை)

புத்துணர்ச்சி பெற்றேன்
புதுகவிதை வரைந்தேன்
புதுமைபித்தன் ஆனேன்
பாரதியாராய் மாறினேன்
புதுமை பல செய்தேன்
பாவைகளை சமமாக்கினேன்
பட்டணத்தின் நாகரீகத்தை
பட்டிக்காட்ற்கு கொண்டு வந்தேன்
பலர் என்னை பார்த்தனர்
பல்லக்கில் சென்றதை!
பணக்காரனாய் மாறினேன்
பஞ்சத்தை எட்டி உதைத்ததால்
பம்பரமாய் சுற்றினேன்
பல கருவியும் சுற்றியதால்
பந்தை தூக்கி எரிந்தேன்
பந்து என் முகத்தில் விழுந்தது
பல்கலைகழகத்திற்கு சென்றேன்
பட்டத்தை பெறுவதற்கு
பல படிகள் ஏறினேன்
பணத்தை தேடுவதற்கு
பருவங்கள் வீணாக்கினேன்
பண்பாட்டை தேடியதால்
பக்குவமாய் கடித்தேன்
பல் இரண்டு இல்லாதால்
பறவைகளாய் மாறினேன்
பறந்து செல்வதற்கு
பரீட்சை எழுதினேன்
பதில் தேடி அலைகிறேன்
பகலை தேடி அலைந்தேன்
பைத்தியங்களுக்கிடையே!
பச்சை கொடி காட்டினேன்
பட்டணத்து இரயிலுக்கு
பாப்பா பாட்டு பாடினேன்
பாரதியாருக்கு எதிராய்
பாக்கிஸ்தானை எதிர்த்தேன்
படபட சப்தத்திலும்


சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Empty Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு

Post by சிவா Thu Mar 01, 2012 5:01 am

சுட்டி பையன் சுட்டி இளைஞன் ஆவானா?

சாதி மத பேதமற்ற
ஒற்றுமை என்னும் பலத்தை
சாதிக்க பிறந்தவர்கள்
சிறார் தொழிலாளர்களிடம் கண்டேன்
சாலையில் நடந்து கொண்டிருந்தேன்
அக்கம் பக்கம் பார்த்தும் நடந்தேன்
சாலையோர காட்சியில் வியந்தேன்
தன் வேலைக்காகவும் பிறருக்காகவும்
சாலையில் நடப்பவர் ஏராளம்
நின்றேன் பேருந்திற்காக
சாலையின் அந்தபுறத்தில்
கடை ஒன்றை பார்த்தேன்
சாதிக்க பிறந்த மகாராசாக்கள்
கடையில் விற்பனை செய்தனர்-அது
சான்றிதழ் இல்லாத உயர் பதவி
சாமர்த்தியத்தை காட்டும் பதவி
சிறுவர்கள் இருவர் நின்றனர்
வருவோருக்கு உதவினர்-இடையே
சைக்கிள் சக்ரம் சுற்றினர்
மகிழ்ச்சியை தேடிக் கொண்டனர்
சராசரியாக பையன்கள்
எங்கும் இருப்பதை கண்டு மகிழ்வார்கள்
சராசரி ஒன்பது வயது
பாலகர்கள் இருவருக்கும்
சமுதாயம் உயர்கிறது
குறுக்கு வழியில் உயர்வது தெரியாதே!
சண்டை போடும் முதலாளிகள்
கடினம் இல்லாமல் சம்பாதிப்பதற்கு
சிறார் தொழிலாளர் தேவையானால்
சிறார் கல்வியை மறக்கனுமோ!
சந்தை அறியும் சிறுவர்கள்
பள்ளி அறிவை அறியவில்லையே
சுட்டி பையன் என்று பெயர் எடுத்தான்
சுட்டி இளைஞன் என்று பெயர் எடுப்பானோ
சிறார் தொழிலாளர் எனபவர்
பப்பாளி பழம் போன்றவர்
சிந்தனை விருந்து வழங்கும் பப்பாளி
பருவம் முடிந்ததும் விழும்
சிறார் தெபழிலாளர்களை கண்டேன்
பருவம் முடிந்ததும் வீழ்வாரோ!
சின்ன ஆசை நிறைவேற்றும் சிறார்
பெரிய ஆசையை நிரைறவேற்றுவாரோ!
இந்தியா சிறார் தொழிலாளர்களை ஒழிக்கும்
இங்கா இந்த கொடுமை!


சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Empty Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு

Post by சிவா Thu Mar 01, 2012 5:01 am

இன்பக் கோட்டை

அமைதிக்கோட்டையை
குத்தகை விட்டனர் அதில்
உன்னை குத்தகைக்கு எடுத்தேன்
தூக்கி சென்றனர் மாமியார் வீட்டிற்கு


சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Empty Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு

Post by சிவா Thu Mar 01, 2012 5:02 am

இன்பமோ இன்பம்

மங்களூர் மல்லியிடம்
மல்லிகையை அள்ளி கொடுத்தேன்
கள்ளி அள்ளி கொடுத்தால்-கன்னத்தில்
இன்பத்தில் மயங்கி தப்பி ஓடினேன்


சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Empty Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு

Post by சிவா Thu Mar 01, 2012 5:02 am

ஒற்றுமை

ஒரிசாவில் புயல்
பஞ்சாபில் பஞ்சம்-இதுதான்
இந்தியாவின் வேற்றுமையே-இதில்
பசிதான் இந்தியாவின் ஒற்றுமையோ!


சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Empty Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு

Post by சிவா Thu Mar 01, 2012 5:03 am


தாகத்தை சுத்திகரிக்க

தாகத்தை போக்கதான் எண்ணுவர்
தாகத்தை வளர்க்க எண்ணினரே
தாகம் ஏற்பட குரங்கை
உப்பு திங்க வைப்பது போல்
உப்பு சத்தியாகிரகத்தை ஏற்படுத்தி
இந்தியர்களுக்கு தாகத்தை ஏற்படுத்தினர்
தாகம் தாகம் தாகம்
சுதந்திர தேவியை தட்டியெழுப்ப
சுதந்திர தாகம் சுத்திகரிக்கப்பட்டதாய்
சாதி என்னும் பற்றை விட்டோம்
மதம் எனும் வெறியை மறந்தோம்
மொழி எனும் முகத்தை மறைத்தோம்
ஒன்று பட்டு நிற்க
நிந்தனை செய்தோம் ஆங்கிலேயனை
சாட்டையடி பட்டோம்
சாத்தானை விட்டு விலக முடியாமல்
திருப்பியடிக்க மறந்தோம்
அகிம்சையில் மகாத்மா ஆகினோம்
என்னை சுரண்டி சுரண்டி எடுத்தனர்
குருதி சிந்தும் அளவிற்கு
குற்றம் செய்தவர்கள் அவர்கள்
பழிவாங்கப்பட்டது நாங்கள்
எதிர்த்து நின்றோம்
எதிரிகளை விரட்டுவதில்
வெள்ளையனே!
பெயரில்தான் வெள்ளை
மனதோ கருப்பு
வெள்ளையனே வெளியேறு
இந்தியர்களே முன்னேறு
முட்டுக்கட்டையை அகற்றிடுவோம் இல்லையேல்
முட்டாள்களாய் ஆக்கிவிடுவர்
ஆரம்பித்தேன் கைகளை ஓங்க
அடியெடுத்து வைத்ததில் ஓடிவிட்டனர்-எனினும்
குறுதியை குடித்துவிட்டனர்
உயிரை உறிஞ்சிவிட்டனர்
தியாகம் செய்து வாங்கிய சுதந்திரம்
சுத்திகரிக்கப்பட்டதா?
எழுத சுத்திகரிக்க
இல்லவே இல்லை
சுதந்திரத்திற்காக மறைந்த
சாதி, மத, மொழி முகங்களை
சுதந்திரத்திற்கு பின் திறந்தனரே!
ஒற்றுமை எனும் பலம்
சுதந்திரத்திற்கு முன்தானோ!
சுதந்திரம் பெற்றுவிட்டு நிம்மதியடையாதே!
பொருளாதாரம் என்னும் வளம் சேர்க்க வேண்டாமே!
ஒற்றுமை என்னும் பலம் எதிரிகளை விரட்டதானே!
பொருளாதாரத்தை விரட்ட வேண்டாமோ!
பல துறைகளிலும் முன்னேற வேண்டும்
சுதந்திரம் பெற்றதற்கு அடையாளமாய்
சுதந்திரத்திற்கு முன் சமத்துவம் பெண்களுக்கு இல்லை
சுதந்திரத்திற்கு பின்னாவது சம்த்துவம் வேண்டுமே
சுதந்திரம் என்னும் தேனீரே
சுத்திகரிகக்கப்பட்டதாய் அருந்துவோமே!


சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Empty Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு

Post by சிவா Thu Mar 01, 2012 5:03 am

தூது

தூது தூரத்தை துரத்தி விட்டது
மனதில் கருத்துகளை நிரப்பியது
தூது தூரத்தை குறைத்துவிட்டது
பேனா நண்பர்களை நெருக்கியது
தூது தூரத்தை உறவுகளாக்கியது
காதலர்களின் கனவு சிறையை களைத்தது
தூது துரோகியை தூய்மையாக்கியது
படையெடுத்து வந்தவனை வதைத்தது
தூது தூறெடுத்து தண்ணியாக்கியது
பல தேசங்களின் உறவு வலுத்தது
தூது தூங்குபவனை தூண்டியது
பகைவனை பந்தமாக்கியது
தூது மிதந்து நீச்சலடிக்கிறது
மூழ்குபவரை நீந்த செய்கிறது
தூது தூரத்தை துரத்தி விட்டது
மனதில் கருத்துகளை நிரப்பியது


சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Empty Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு

Post by சிவா Thu Mar 01, 2012 5:05 am

கலைகிறது பண்பாடு

பருவம் தொட்ட வரும் சிந்தனையே -உன்மீது
பழியொன்று போட்டு பண்பாட்டை கலைத்தனர்
கலைந்தது களிமண்பானையல்ல
கோபுரத்தின் உச்சியிலிருந்து தமிழ் பண்பாட்டையே!
பருவம் தொட்டு வரும் சிந்தனையே-உன்மீது
உலகமே பற்று கொண்டது
உல்லாசமாய் சுற்றி வரும் கப்பல் எங்கே?
கப்பலில் நிலையாய் குடிகொண்டு
கலை மகளையும் குடிகொள்ள செய்தாயே!
பருவம் தொட்டு வரும் சிந்தனையே-உன்மீது
பழியொன்று போட்டு நஞ்கை வதைத்தனரே!
கல்வி வாங்க பள்ளி சென்றவன்
கரைந்த நெஞ்சுடன் திரும்புவதும் ஏன்?
கையில் எழுதுகோல் பிடிக்க
கரைந்து செல்லும் புகையை பிடிப்பதும் ஏன்?
பருவம் தொட்டு வரும் சிந்தனையே-உன்மீது
மதங்களும், சாதிகளும் பற்று கொண்டன
மதன் மன்மத கலைகளில் புதுமை கொண்டது
மதம் மதத்தை மனிதனிடமிருந்து விரட்டியது
சாதியை காட்டி சாதிக்க சொல்லியது
சாதி சால்ராக்களை ஒழித்தது
பருவம் தொட்டு வரும் சிந்தனையே-உன்மீது
மனிதர்களின் கண்டுபிடிப்பும் பற்று கொண்டது
பறந்து செல்வது பறவை இனம்
நடந்து சென்ற பறவையை
மறந்து செல்வது பறவை இனம்-இதை
நினைவில் கொள்ள செய்தது கணிப்பொறி
உலக உயிர்களுடன் போட்டியிடலாமே?
பருவம் தொட்டுவரும் சிந்தனையே-உன்மீது
உலகமே பற்று கொண்டது
கடல் தாண்டி, கண்டம் தாண்டி
குடி புகுந்தவன் கோள் தாண்டி
குடிபுக துடிக்கிறான்-இது
இதய துடிப்பு அல்ல
இளைய தலைமுறையின் இணைந்த ஓர் துடிப்பு
பருவம் தொட்டு வரும் சிந்தனையே-உன்மீது
புரியாத புதிர் உள்ளது
புத்தர், கிருஷ்ணன், இயேசு, அல்லா
எல்லா கடவுளும் சிந்தனையிச்
சிறகடித்து கிடைத்த முத்துக்களே!


சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Empty Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு

Post by சிவா Thu Mar 01, 2012 5:05 am

இளம் நெருப்பே . . .

துடிப்புடன் துளிர்விடும் இளம் நெருப்பே!
இளம் நெருப்பு என தீயிட மறக்காதே!
சமுதாயத்தில் சஞ்சரிக்கும் சபலத்தை
சவபெட்டியாக இளம்நெருப்பில் இடாதே!
இடர்தரும் இழிவுகளை இந்நாளுடனும்
இனளே தரும் இன்பங்களை எந்நாளும்
இதய வாசலில் இணைந்த கைகளாமே!
இரவே இந்நொடியில் தீர்ந்துவிடு
தீர்க்கப்படா திருப்புமுனையே
தீர்க்கம் தெளித்து விலக்கிவிட
அறிவு அருகாமல் அமர
அமரர் அறிவை மிஞ்ச
அமராமல் இளம் நெருப்பே எழுந்துவா!
பூத்த புதனை புன்னகையோடு
விழுந்த வியாழனை விழிப்புடனும்
வரவேற்கும் விடிவெள்ளியே!
எளிமையான இதழை
ஏமாறாமல் பார்க்க பாமரர்களுக்கு
ஏற்றமிக்கவனாய் எழுந்து வா!
வட்டமேஜையில் வளையாமல் நின்று
வளர் கலைகளை பறிக்க
கருமையை எளிமைஎன மாற்று
கலங்கமில்லா கருமையாய்
கனிந்து கொடுக்கும் கருப்பான கடலாய் வா!
நட்பை மறந்தவன் நடுவாசலிவ்
நடப்பு கணக்கில் நட்டத்தையும்
நல்லோர்களின் நந்தா விளக்காய்
நத்தையின் சொத்து போல்
நடைபாதையில் நடந்துவா!
கனிய வைத்த காதல் கசக்கும்
கனிந்த காதல் இனிக்கும்
கனியும் காதல் கேட்பன கேட்கும்
கன்னியாய் காதலை காப்பவனே எழுந்து வா!
பேச்சை மறந்தால் மூச்சு மறக்கும்
பேசியே பிசாசை விரட்டியவனே
பேசியே பதவியை பெற்றவனே!
பேசாமல் நின்று விடாதே!
பேச்சை மூச்சென மதித்து வா!
கவிதை வரைந்து
கனிவான சமுதாயத்தையும்-அதில்
கருத்துள்ள வண்ணத்தை தீட்டு
கற்பனையில் சஞ்சரிக்கவே கலையாமல் எழுந்து வா!


சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Empty Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு

Post by சிவா Thu Mar 01, 2012 5:06 am

தம்பி அறிய வேண்டும்

விளைந்த உடன்
விதைக்க முடியாது தம்பி
பொறுத்திருந்தால்
பெருத்த லாபம் தம்பி
அவசரப்படுத்தினால்
அழிவு வரும் தம்பி
வெற்று புகழ் தேடி
வெம்பி விடாதே தம்பி
உலக ஒளி அறிந்தால்
உயர்ந்துவிடலாம் தம்பி
அழகை தேடியவன்
அழிவில் முடிவான் தம்பி
அறிவை தேடியவன் தம்பி
அசூர பலம் பெருவான் தம்பி
கடுமையாய் உழைத்தவனை
கல்லரையும் பேசும் தம்பி
கடுமையாய் உழைக்காதவன்
கண்ணாடியில் தெரிவான் தம்பி
முயற்சியை கொண்டவன்
மூக்கு கண்ணாடி அணிந்தவன் தம்பி
பண்பாட்டை மறந்தவன்
பனியில் பட்ட ஆவியாய் மறைவான் தம்பி
உள்ளத்தால் உயர்ந்தவன்
உழியால் செதுக்கப்பட்டவன் தம்பி
உலகை அளப்பவன்
உறியாள் வெட்டுப்படுவான் தம்பி
பயிற்சியை பெற்றவன்
பயில்வானை உதைப்பான் தம்பி
வெற்றி பெற்றவன்
வீரனாக காட்டப்படமாட்டான் தம்பி
ஓயாமல் உழைப்பவன்
ஒளியில் தெரிபவன் தம்பி
ஏணியில் ஏறியவன்
எதிரிக்கு பணிய வேண்டும் தம்பி
ஐயத்தை மறந்தவன்
ஐம்புலனை வென்றவன் தம்பி
ஐயத்தை பெற்றவன்
ஐந்தறிவை பெற்றவன் தம்பி
சுகத்தை தேடுபவன்
சுற்றத்தை தொலைத்தவன் தம்பி
சிந்தனையை தேடி
சீகைக்காயுடன் குளிக்க வேண்டும் தம்பி
கலகம் செய்தால்தான்
கருத்து நிலைக்கும் என்பது தவறு தம்பி
சட்டத்தை சட்டையாக
சரித்திரத்தை சட்டமாக்க முடியாது தம்பி
நடந்ததை நினைக்காமல்
நடப்பதை நினைக்க வேண்டும் தம்பி
படித்ததையும் நினைக்க வேண்டும்
படிக்க போவதையும் நினைக்க வேண்டும் தம்பி
பழகிக்கொள்
புரிந்து கொள்ள தம்பி
தேடித்தேடி அலையாதே
தேவர்களின் அமுதத்திற்கு தம்பி. . .


சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவானந்தவேல் கவிதை தொகுப்பு - Page 5 Empty Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum