புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
29 Posts - 38%
ayyasamy ram
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
12 Posts - 16%
Rathinavelu
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
7 Posts - 9%
mohamed nizamudeen
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
1 Post - 1%
mruthun
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
104 Posts - 48%
ayyasamy ram
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_lcapஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_voting_barஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 01, 2012 4:36 am




மகாநதி' என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். தொலைந்துபோன தனது மகளை கொல்கத்தாவில் உள்ள விபசார விடுதிகளில் தேடும் கதாநாயகன், அங்கே சின்னஞ்சிறு சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதைக் கண்டு உறைந்துபோய் நிற்பார். அவருக்குப் பின்னே புன்னகையோடு காட்சி தரும் அன்னை துர்கையின் புகைப்படம் தென்படும். பெண்ணை தெய்வமாக வழிபடும் பாரத தேசத்தில்தான் இதுபோன்ற சமூக இழிவுகள் நடந்தேறுகின்றன என்பதைச் சிந்திக்கத் தூண்டும் காட்சி அமைவு.

நிஜத்திலும் இதுபோன்ற இழிவுகள் அரங்கேறுகின்றன என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தக் கொடுமையை நிகழ்த்துபவர்களில் ஒருவர்கூட ஆன்மிக நாட்டம் உடையவர்கள் இல்லையா? அனைவருமே இறை மறுப்பாளர்களா? அவர்கள் அன்னையை ஒருமுறைகூட வழிபட்டதில்லையா? அண்மையில் 19 வயது இளம்பெண்ணை, அதுவும் சக மாணவியை, 4 பொறியியல் கல்லூரி மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்பதைக் கேள்விப்படும்போது இவ்வாறுதான் மனம் கோபம் கொள்கிறது.

அந்த நான்கு இளைஞர்களின் பெற்றோர் அவர்களுக்கு இறை வழிபாட்டை போதித்திருக்க மாட்டார்கள் என்று கூற முடியாது. அப்படியிருந்தும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறுவதற்குக் காரணம் ஆன்மிகம் இன்மையே என்று கூற இயலாது. ஆன்மிகம் சரியாகப் புகட்டப்பட்டதா என்பதுதான் சந்தேகமாக இருக்க முடியும்.

நமது ஆன்மிகவாதிகளும், மூத்த தலைமுறையினரும் ஆன்மிகத்தைப் போதிக்கும்போது ஒழுக்கத்தையும் சேர்த்தே போதிக்கின்றனர். அந்தப் போதனைகள் முழுமையாக மனித அறிவில் புகுந்தால், சமூகத்தில் ஒழுக்கப் பிறழ்வுகளுக்கு வழியே இருக்காதே.

ஆன்மிகமும், ஊழலும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. அவை இரண்டும் இந்தியாவில் காணப்படுவது வியப்பளிக்கிறது என்று தலாய்லாமா கூறுகிறார். அவரின் சந்தேகத்துக்கு விளக்கமளிக்கக் கடமைப்பட்டவர்கள் நமது ஆன்மிகவாதிகள்.

உண்மையாதெனில், ஆன்மிகத்துக்கு மூத்த தலைமுறையினர் தரும் முக்கியத்துவம் வெறும் சடங்குகளோடும், வழிபாடோடும் முடிந்து போவதுதான். இறைவனைத் துதிப்பதையும், மந்திரங்களைப் பாராயணம் செய்வதையும் மட்டுமே கொண்டு இளைஞர்களின் ஒழுக்கத்தை மூத்த தலைமுறையினர் அளந்து விடுகின்றனர்.

புகைக்காதே, மது அருந்தாதே, அவர்களோடு சேராதே, இவர்களோடு கூடாதே என்பதோடு அவர்களின் போதனைகள் நின்றுபோயின. பாதிக்கப்பட்ட அந்த அப்பாவிக் கல்லூரி மாணவி, ஆண் நண்பர்களோடு பழகாமல் தடுக்கப்பட்டிருந்தால் மட்டும் தவறுகள் நிகழாதா? அப்போதைக்கு தள்ளிப்போயிருக்குமே தவிர, திருத்தப்பட்டிருக்காது. அந்த மாணவர்களின் நெஞ்சிலிருந்து வஞ்சகம் அழிந்திருக்காது. அதை மாற்ற வேண்டியது ஆன்மிகத்தின் பொறுப்பன்றோ?

அவ்வாறு பார்த்தால், இறுதிவரை புகைக்காத, மதுவின் வாசனையே அறியாத, மரணிக்கும் கடைசி தறுவாயில் தனது ஒரே காதலியை நேர்மையாகக் கரம்பிடித்த அடால்ஃப் ஹிட்லர் எனும் ஒழுக்கசீலன் அல்லவா வரலாற்று நாயகனாக இருந்திருக்க வேண்டும். மாறாக, சதாசர்வ காலமும் சுருட்டும் கையுமாயிருந்த வின்சன்ட் சர்ச்சில்தானே வரலாற்று ஏடுகளில் கதாநாயகனாய் உலா வருகிறார்.

ஒழுக்க விதிகளை வரையறுப்பதோடு மூத்த தலைமுறையினர் நின்றுபோனதுதான் தோல்விக்குக் காரணம். கனிவான அணுகுமுறையால் கிடைக்கும் மனநிம்மதி, அனைத்து உயிர்களையும் நேசிக்கும் ஜீவகாருண்யத்தால் விளையும் அருளுடைமை, உழைப்பில் கரைந்து போவதால் கிடைக்கும் பேரின்பம், குடும்ப உறவுகளில் விளையும் பாதுகாப்பு உணர்வு, பிறருக்கு விட்டுக் கொடுப்பதால் நட்பில் ஏற்படும் ஆத்மார்த்த ஈர்ப்பு, நேர்மையான வாழ்வில் உள்ள மெய்மை இன்பம், பிறரின் வலியை உணர்வதற்கு அடிப்படையான சகோதர மனப்பான்மை, மாதர்குலத்தின் தியாகத்தை நேசிக்கும் மேன்மை நிலை இவற்றை உணர்த்தியல்லவா இளைஞர்களுக்குப் போதித்திருக்க வேண்டும்.

இவ்வாறு வாழ்வதால் மட்டுமே இறைவனின் நிழலில் இளைப்பாற முடியும். அன்னையின் அரவணைப்பில் கதகதப்பை உணர முடியும். வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இன்பமாய் கரைந்துபோக முடியும் என்றல்லவா ஆன்மிகவாதிகள் இளைஞர்களுக்கு எடுத்துக் கூறியிருக்க வேண்டும்.

மாறாக ஆன்மிகத்தை கோவிலோடும், மந்திர போதனைகளோடும், சடங்குகளை வறட்டுத்தனமாகக் கடைப்பிடிப்பதோடும் குறுக்கியது யார் குற்றம்?

ஆன்மிகம் என்றால் உற்சாகம். அது ஒரு குதூகலம் என்பதை இளைஞர்களிடத்தில் சொல்லத் தவறியவர்கள் யார்? நேர்மையான உழைப்பால் ஈட்டும் நற்பெயரைக் காட்டிலும், சீக்கிரம் செல்வம் சேர்ப்பதில் இளைஞர்கள் வேகம் காட்ட யார் காரணமோ, அதே பெற்றோர்களும், மூத்த தலைமுறையினரும்தான் இதற்கு முழுப் பொறுப்பு.

எதிர்காலத்தைப் பற்றிய பயம், சீக்கிரமே செல்வம் சேர்த்துவிடும் படபடப்பு, நில புலன்கள் இருப்பதே செüகர்யமான வாழ்க்கை என்ற உணர்வு - இப்படியான மனப்பான்மை இளைஞர்களுக்குள் விதைத்தது யாரோ, அவர்களால்தான் போலி ஆன்மிகமும் சமூகத்தில் போற்றப்படுகிறது.

நேர்மையை, கனிவை, அன்பை, தெளிவை நெஞ்சில் நிறுத்துவதே ஆன்மிகம். இவற்றிற்கு முக்கியத்துவம் தந்து அந்த இளைஞர்கள் போதிக்கப்பட்டிருந்தால், சக மாணவியோடு அவர்களால் தெளிவான புரிதலோடு நட்பு பாராட்டியிருக்க முடியும்.

உண்மையில் அங்கே தோற்றுப்போனது ஆன்மிகவாதிகளும், மூத்த தலைமுறையினரும்தானே தவிர ஆன்மிகமல்ல. அனைத்து நிகழ்வுகளையும் ஆழமாய் உள்வாங்கிக் கொண்டு மெüனமாய் புன்னகைக்கிறாள் அன்னை துர்கை. அன்னையின் இதழ்களில் தவழும் அசாதாரண புன்னகையின் உள்ளார்ந்த பொருளை நமக்கு உணர்த்துவார்களா ஆன்மிகவாதிகள்?

செஞ்சி கு.இரா.பிரபு



ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Mar 01, 2012 5:55 am

நீங்கள் சொல்ல்வதைப்போல பாமர மக்களால் ஆன்மீகம் என்பது சரியாக உணரப்படவில்லை என்றே தோன்றுகிறது. கோவிலுக்குப்போவதும்,விரதமிருப்பதும்,மந்திரம் சொல்வதும்,தேவாரம் பாடுவதும்,காவடிஎடுப்பதும்,சாமியார்களின் வித்தைகாளைக்கண்டு பரவசமடைவதும்,பணம் பொருள் அன்பளிப்புச்செய்வதும்,இவைபோன்ற விடையங்கள்தான் ஆன்மீகம் என்று பெரும்பாலானோர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்,
ஆன்மீகம் உணரப்படாமைக்கு முக்கியமான காரணம் கல்வியறிவு இன்மையே காரணம் என்று கருதுகிறேன்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Mar 01, 2012 2:00 pm

ஆன்மீகம் என கூறுவதை விட நமது வேதாந்த நெறி எதை கூறுகிறது என்பதையும் அதன் சிறப்புகளையும் அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்து செல்லவில்லை, காரணம் அமெரிக்காவில் தன்னை மணக்க விரும்பிய பெண்ணிடம் அதன் காரணத்தை அறிந்த விவேகானந்தர் உனக்கு என்னை போல மகன் வேண்டுமெனில் என்னை தெங்கள் மகனாக நினைத்து கொள்ளுங்கள் என்ற போதும் அங்கே எங்கள் நாட்டில் தாய்தான் முக்கிய இடம் பெறுகிறாள் பிறகுதான் மற்றவை போன்றவற்றை பேசியதும் நாம் அறிந்ததே ஆனால் அதை நாம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பதே இல்லை,சகிப்பு தன்மை என்ற பெயரில் சவுங்கை தனத்தை வளர்த்து விட்டுள்ளோம்,நம்முடைய இயல்பான நற்க்குனங்களை நாம் இழந்து விட்டோம், பிறன் மனை நோக்காமையே பேராண்மை என்ற கருத்தை ஆழ நெஞ்சில் கொண்டவன் நிச்சயம் ராமனாக திகழ்வான் என்பதில் மாற்று உண்டா, ஆன்மீகம் என்று தனியாக ஏதும் இல்லை வாழும் நெறியை செம்மையாக அமைத்து கொள்வதே ஆன்மீகம்.இது நல்ல பகிர்வு நன்றி

kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Sat Mar 10, 2012 10:12 pm

அப்படி சொல்லுங்க நல்லத சொன்னதான் நம்மள கேட்டவனு சொல்றாங்கள்ள. யார் சொல்ல இப்ப உள்ள இளசுகளுக்கு. நானும் இளயவன் தான் ஆனா நான் சொன்னா போடா பழய பஞ்சாங்கம்நு ஒதுக்குறாங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக