ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவும் துறவும் - காத்தருந்தான் கண்ணன்!

Go down

உறவும் துறவும் - காத்தருந்தான் கண்ணன்! Empty உறவும் துறவும் - காத்தருந்தான் கண்ணன்!

Post by பிரசன்னா Sun Feb 26, 2012 2:25 pm

உறவும் துறவும் - காத்தருந்தான் கண்ணன்! E_1329734451
தன் அகக்கண்ணால் ராம தியானத்தின் மூலம் திருமாலை தரிசித்துக் கொண்டிருந்த வால்மீகி முனிவர், திருமால் காட்டிய எதிர்காலக் காட்சிகளைப் பெரும் வியப்போடு பார்த்தவாறிருந்தார்....

யாதவர்கள் அனைவரும் நாணல் புல்லால் சண்டையிட்டு அழிந்ததைக் கண்டு பலராமர் கானத்தின் உள்ளே சென்று யோகத்தில் அமர்ந்தார். யோக நிலையில் உயிரற்ற உடல்போல் அசைவே இல்லாமல் வீற்றிருந்த பலராமரின் வாய் திடீரென்று தானாகத் திறந்தது.

அப்போது பலராமரைத் தேடிக் கொண்டு அங்கே வந்தான் கண்ணன். பலராமர் சலனமே இல்லாமல் யோக நிலையில் வீற்றிருப்பதைப் பார்த்தான். அடுத்த கணம் நிகழ்ந்த சம்பவத்தைப் பார்த்து லீலைகள் பல புரிந்த கண்ணனே ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்...

வெள்ளை வெளேர் என்று, பார்க்க மிகவும் பவித்திரமான ஒரு நாகம் பலராமரின் அகலத் திறந்த வாயிலிருந்து வெளிப்பட்டது. அந்த நாகத்தின் ஒளி சுற்றுப்புறத்தையெல்லாம் பிரகாசப்படுத்துவதாய் இருந்தது.

பலராமரின் வாயிலிருந்து அது கீழே இறங்கி எதையும் லட்சியம் செய்யாமல், தன் குறிக்கோளையே குறியாகக் கொண்டு, மெல்ல மெல்ல ஊர்ந்து யமுனை நதியை அடைந்தது. பின் அந்த நதியில் இறங்கி நீந்திச் சென்று கடலில் கலந்தது... அந்த நாகம் உடலிலிருந்து வெளியேறிய மறுகணம் பலராமரின் பொன்னுடல் வேரற்ற மரம்போல் மண்ணில் சாய்ந்தது.

தன் அண்ணா தானே விரும்பி ஸித்தியடைந்ததைப் பார்த்துக் கொண்டே நின்றான் கண்ணன். அனைத்துச் சம்பவங்களுக்கும் சாட்சியாக நிற்கும் கடவுளான அவன் கண்களும் பனித்தன.

தானும் தன் அண்ணனுமாக ஆடியும் பாடியும் வாழ்ந்த காலங்கள் படம் படமாய்க் கண்ணனின் மனத்திரையில் ஓடின. என்னென்ன விளையாட்டுகள்! என்னென்ன உல்லாசங்கள்! எத்தனை தயிர்க்குடங்களை உடைத்திருப்பார்கள்! எத்தனை வெண்ணெயைத் திருடித் தின்றிருப்பார்கள்! குழந்தைப் பருவம் தொட்டு உடன்வந்த ஓர் உறவு இதோ இன்று விடைபெற்றுக் கொண்டுவிட்டது.

யாதவ குலத்தில் அனைவரையும் பிரிந்தேன். எல்லோரும் நாணல் புல்லால் சண்டையிட்டு ஒருவர் பாக்கியில்லாமல் மாண்டு போனார்கள்.

இதோ என்மேல் மட்டற்ற பாசம் செலுத்திய அண்ணனையும் பிரிந்தேன். அவனது புனிதமான ஆன்மா பாம்பின் வடிவில் வெளியேறி உலகிலிருந்து விடைபெற்றதையும் பார்த்தேன்.

உறவுகளின் பொருள்தான் என்ன? மானிட உறவுகள் எதுவும் நிலையில்லை. பக்தனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவு ஒன்று மட்டுமே நிலையானது. பற்றற்றான் பற்றினைப் பற்றியவர்களே நிலைத்த ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள்.

பக்தனின் இதயத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனை யாராலும் அகற்ற இயலாது. அந்த ஒரே ஒரு உறவைத் தவிர மீதி எல்லா உறவுகளும் ஒவ்வொரு காலகட்டத்தில் தானே அகன்றுதான் போகும்.

இந்த உண்மையை முழுமையாய் உணர்பவர்களே பாக்கியசாலிகள். இதை உலகிற்கு உணர்த்தவல்லவோ கடவுளான நான் மண்ணில் அவதரிக்கிறேன்.

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாயச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே!

நல்லவர்களை ரட்சிப்பதற்காக, தீயவர்களை அழிப்பதற்காக நான் யுகங்கள் தோறும் தோன்றுகிறேன்.
யார் நல்லவர்கள் யார்? யார் சாதுக்கள்? இறைவன் ஒருவனைத் தவிர மற்ற எந்த உறவும் நிலையல்ல என்பதை உணர்ந்தவர்களே நல்லவர்கள். அவர்களை ரட்சிப்பதே என் கடமை.

கண்ணனிடமிருந்து ஒரு பெருமூச்சு எழுந்தது. தன் அண்ணா ஸித்தியடைந்த முறை கண்ணனைச் சிந்தனையில் ஆழ்த்தியது.

பாம்பு கண்ணனுக்குப் புதிதல்லவே? பாம்புத் தலைமேலே நடம்செய்த பாதம் கண்ணனின் பாதம். கொடும் நஞ்சைக் கொண்ட காளிங்கன் என்ற பாம்பின் கர்வத்தை அடக்கியவன் அவன். எல்லா உயிர்களுக்கும் துன்பம் தந்துகொண்டிருந்த பாம்பு அது.

காளிங்கமர்த்தனத்தின் போது, அந்தப் பாம்பின் மனைவியரெல்லாம் கண்ணனைக் கைகூப்பித் தொழுதார்கள். தங்கள் கணவனைக் கொல்லாமல் விட்டுவிட வேண்டும் என்று பரிதாபமாய்க் கெஞ்சினார்கள்.

கணவன்-மனைவி உறவு என்பது எத்தனை புனிதமான உறவு! பிறவி தோறும் தொடரும் உறவல்லவா அது! கணவனைக் கொன்று, மனைவியரைத் தவிக்க வைப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

நஞ்சை உமிழந்த காளிங்கன் மன்னிப்புக் கேட்டதும் அவன் மனைவியர் கெஞ்சியதும் இணைந்து கண்ணன் மனத்தில் கருணையைப் பெருக்கெடுக்கச் செய்தது. காளிங்கனை மன்னித்து, அவன் மனைவியர் விரும்பியபடி அவனுக்கு உயிர்ப்பிச்சை அளித்தான் கண்ணன்.

காளிங்கமர்த்தன நினைவோடு கூடவே, சொர்க்கத்தில் நிகழந்த சம்பவங்களின் நினைவுகளும் கடவுளேயான கண்ணன் மனத்தில் எழுந்தன.

தேவர்கள் அமிர்தம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தார்களே! வடவரையை மத்தாக்கி அவர்கள் கடைந்தபோது கயிறாகப் பயன்பட்டது வாசுகி என்ற பாம்பு தானே? அப்படிக் கடையப்பட்ட போது எத்தனையோ செல்வங்களெல்லாம் கடலிலிருந்து உதித்தன. குதிரையும் பொன்னும் மணியும்... ஏன் இதுபோன்ற அனைத்துச் செல்வங்களையும் வாரி வழங்கும் லட்சுமி தேவியும் கூட அதிலிருந்து உதித்தாள்!
லட்சுமிதேவி தானே மனம் விரும்பி கண்ணனாகிய திருமாலைக் கைப்பற்றினாள். எழிலின் மொத்த வடிவமான லட்சுமியைத் தன் இதயத்தில் வைத்துப் போற்றினான் திருமால்.

ஆனால் லட்சுமிதேவி மட்டுமா பாற்கடலில் உதித்தாள்? கூடவே கொடூரமான ஆலகால விஷமும் அல்லவா அதிலிருந்து வெளிப்பட்டது!

தனது சகோதரி மீனாட்சியின் கணவர் சுந்தரேசராகிய சிவபெருமான் வாசுகி என்ற பாம்பு உமிழ்ந்த அந்த ஆலகால விஷத்தைக் கருணையோடு அள்ளிப் பருகினார். இல்லாவிட்டால் அந்தக் கடும் விஷத்தின் காரணமாக அகில உலகமும் அழிந்திருக்கும்.

அழிவேயில்லாத சிவபெருமான் நஞ்சை உண்டு அழிந்துவிடுவாரோ என்று பார்வதி பதறித் தடித்ததை என்ன சொல்ல! அவள் அல்லவா பரமசிவனின் கழுத்தைப் பிடித்து விஷம் கழுத்தைவிட்டுக் கீழே இறங்காமல் செய்து, ஆலகால விஷத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாள்! நஞ்சுண்ட கண்டனின் கருணையால் அல்லவோ இந்த உலகம் பிழைத்தது!

சிவனைப் பாம்பின் விஷம் என்ன செய்துவிட முடியும்? அரவங்களையே அணிகலனாக அணிபவன் அல்லவா அவன்! நாகாபரணனுக்கு நாகத்தின் விஷத்தால் எப்படிக் கெடுதல் வரும்?

இதை அகில உலகையும் ரட்சிக்கும் அன்னை பார்வதி அறியமாட்டாளா என்ன? கண்ணனாகிய திருமாலின் சகோதரி மீனாட்சி, கணவன் மனைவி உறவு எப்படி இருக்கவேண்டும் என்று உலகிற்குப் புலப்படுத்துவதற்காக ஆடிய நாடகம் அல்லவா அது! கணவனுக்கு ஒரு கெடுதல் வரக் கூடும் என்றால் உத்தமமான பத்தினியின் மனம் என்ன பாடுபடும் என்பதையல்லவா இந்த நிகழ்ச்சி புலப்புடுத்துகிறது!
கண்ணன் மனத்திற்குள் நகைத்துக் கொண்டான். அவன் தங்கை கணவனான சிவனுக்கு நாகம் ஆபரணம் என்றால் திருமாலாகிய தனக்குப் பாம்பு தானே படுக்கை! பாற்கடலில் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும் பரந்தாமன், ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல் அல்லவோ காலம் காலமாகப் பள்ளி கொண்டிருக்கிறான்!
ராமாவதாரத்தில் அந்த ஆதிசேஷன் ராமனுக்குத் தம்பியாய் லட்சுமணனாய்ப் பிறந்தான். சங்கும் சக்கரமும் பரத சத்துருக்கனர்களாய்ப் பிறந்தன.

கிருஷ்ணாவதாரத்திலோ அதே ஆதிசேஷன் கண்ணனுக்கு அண்ணனாய் பலராமனாய்ப் பிறந்தான். சங்கு சக்கரங்கள் கண்ணனின் ஆயுதங்களாகவே பொருந்திக் கொண்டன.

ஆதிசேஷன் உடனில்லாமல் திருமால் ஏது? ஆதிசேஷன் இல்லாத இடத்தில் திருமாலுக்கு வேலையேது?
இதோ பலராமனின் வாயிலிருந்து வெளிப்பட்ட பாம்பு நதிவழியே கடலுக்கும் அதன் வழியே பாற்கடலுக்கும் சென்றுவிட்டது. இந்நேரம் அங்கே அது ஆதிசேஷனாக உருமாறி பரந்தாமனுக்குப் படுக்கையாய்ச் சேவகம் செய்யக் காத்துக் கொண்டிருக்கும்.

யார் இல்லாத இழப்பையும் தன்னால் தாங்க இயலும். ஆனால் ஆதிசேஷன் உடன் இல்லாத இழப்பைத் தான் தாங்குவதென்பது இயலாது.

இதற்கு முந்தைய ராமாவதாரத்திலும் சீதாதேவி மண்ணுக்குள் சென்றபிறகும் கூடச் சிலகாலம் நான் வாழ்ந்தேன். ஆனால் லட்சுமணன் நதியில் நடந்து மறைந்த பின்னர் என்னால் அவன் பிரிவைத் தாங்க இயலவில்லையே? பரத சத்துருக்கனர்களோடு விரைவில் நானும் லட்சுமணனைத் தொடர்ந்தேனே?
இதோ ஆதிசேஷனாகிய பலராமர் மறைந்த பின் என் மனம் விண்ணுக்குச் செல்வதையே விரும்புகிறது. காந்தாரியின் சாபம் பலித்தது. கணவன் கண்ணில்லாதவன் என்பதற்காக தானும் கண்ணைக் கட்டிக் கொண்டு வாழ்ந்த உயர்நிலைப் பத்தினி அல்லவா அவள்? அவள் தந்த சாபம் எப்படிப் பலிக்காமல் போகும்? அதைப் பலிக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது என் கடமையல்லவா?
உறவுகள் அனைத்தும் அழிந்தபின் அநாதரவாய் நீ மறைவாய்! என்றல்லவா அந்தப் பெண்ணரசி சபித்தாள்? பலராமனும் போனபிறகு இனி அழிய என்ன உறவு பாக்கி இருக்கிறது? நான் விண்ணுலகம் புக வேண்டியது மட்டுமே பாக்கி.

அதுசரி, விதிகளை வகுத்த கடவுள், தான் வகுத்த விதிகளுக்குத் தானும் கட்டுப்பட வேண்டியது அவசியமல்லவா? ராமாவதாரத்தில் இந்த உண்மையை நான் மறந்தேன். கடல் எனக்க வழிவிடவில்லையே என்று கடல் மீது அம்பெய்ய முனைந்தேன்.

கடலரசன் என் முன் தோன்றி நான் யாருக்கும் வழிவிடாமல் அகலமாய்ப் படுத்துக் கிடக்க வேண்டும் என்பது உலகைத் தோற்றுவிக்கும்போதே நீ வகுத்த விதி. அதை நான் மட்டுமல்ல ராமா, நீயும் மீற இயலாது. எனவே என்னிடம் சீற்றம் கொள்ளாதே. என்மீது அம்பு போடாதே! என்மேல் பாலம் கட்டிக்கொண்டு என்னைக் கடப்பாய்! அதற்கான வழிவகை என்ன என்று யோசிப்பாய்! என்று அறிவுறுத்தினானே?
காந்தாரியின் சாபம் பலிக்கட்டும். வாலி வதத்தில் நான் மறைந்திருந்து கொண்றேனே? அந்த வாலி இந்தப் பிறவியில் ஜரா என்ற வேடனாகப் பிறந்திருக்கிறான். தான் யார் என்பதை அறியாதவன் அவன். அந்த வேடன் வரும்வரை நான் பொறுமையாய்க் காத்திருப்பேன்.

நான் முற்பிறவியில் அவனை மறைந்திருந்து கொன்றதுபோல், இப்போது அவன் மறைந்திருந்து கொன்றதுபோல், இப்போது அவன் மறைந்திருந்து என்னைக் கொல்லட்டும். அவ்விதம் ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்செயல் தானே விளையும் என்ற உண்மையை நான் கொல்லப்படுவதாலும் இந்த உலகம் அறியட்டும்.

கண்ணன் இலைகள் அடர்ந்திருந்த ஒரு மரத்தின் மேல் தாவி ஏறினான். ஒய்யாரமாக ஒரு மரக் கிளையில் சாய்ந்துகொண்டான். தன் நிலநிறப் பாதங்களை ஒரு கிளைக்குக் கீழே தாழ்வாகத் தொங்கவிட்டுக் கொண்டான்.

வைகுந்தத்தில் லட்சுமிதேவியால் நாள்தோறும் பிடித்து விடப்படும் பாதங்கள். ராமாவதாரத்தில் பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் நடந்து நடந்து நொந்துபோன பாதங்கள். தன்னைச் சரணடைந்தவர்களையெல்லாம் கருணையோடு காத்து ரட்சிக்கும் கடவுளின் தாமரைப் பூம் பாதங்கள்.

நீலவண்ணக் கண்ணனின் அந்தப் பெருமைபெற்ற பாதங்கள் நீலநிலத்தில் ஒரு புறாவைப் போல் அந்த மரத்தின் இலைகளின் இடையே காட்சி தந்தன. தான் வகுத்த விதியைத் தானே பின்பற்றுவதன் பொருட்டு வேடனின் வருகைக்காகக் கண்ணன் காத்திருந்தான்.

வாலியின் மறுபிறப்பான வேடன், வேட்டையாடும் நோக்கத்தோடு கையில் வில்லோடும் அம்போடும் அந்தக் கானகத்தின் உள்ளே மிக விரைவாய் நடந்து வந்து கொண்டிருந்தான். குலத்தைக் கெடுத்த கோடரிக் காம்பின் எஞ்சிய ஒரே ஒரு கூர்முனை, அவனது அம்பின் நுனியில் பொருத்தப்பட்டு, முனிவர் சாபத்தை நிறைவேற்றுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தது....

- திருப்பூர் கிருஷ்ணன்

குமுதம் பக்தி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum