Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவி உயிர் பலி வேண்டாமே!
5 posters
Page 1 of 1
அப்பாவி உயிர் பலி வேண்டாமே!
சென்னை உயர்நீதிமன்றத்தில், கற்றறிந்த ஞானவான்களாகிய நமது நீதியரசர்கள் வழங்கும் தீர்ப்புகளையெல்லாம், தொகுத்து வைத்துக்கொண்டால், அவை, ஒருவழிகாட்டுதல்போல இருக்கும் என்பது எல்லோருமே மனதில் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு கருத்தாகும். சமூக அக்கறையோடு நீதியரசர்கள் பார்க்கும் பார்வைகள் எல்லாம் ஒரு வித்தியாசமான கோணத்தில் இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அரசுக்கு மட்டுமல்லாமல், சமுதாயத்தில் அனைத்து தரப்பினருக்கும் மட்டுமல்லாமல், நீதிபரிபாலனம் செய்யும் தங்கள் துறையிலேயே கீழ்க்கோர்ட்டு மாஜிஸ்திரேட்டுகளுக்கும் ஒரு நல்ல பாதையை அவ்வப்போது காட்டி வருகிறார்கள்.
மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு விபத்து தொடர்பான வழக்கில் நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், நீதித்துறையில் கீழ்க்கோர்ட்டுகளில் பணியாற்றும் நீதிபதிகளுக்கு ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். குடிபோதையில் மோட்டார் வாகனத்தை ஓட்டி, விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள் மீது, பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிடுகிற சூழ்நிலையிலும், இந்திய தண்டனை சட்டம் 304(ஏ) (அதாவது கவனக்குறைவு காரணமாக அடுத்தவரின் மரணத்துக்கு காரணமாக இருப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை பற்றியது. இந்தப்பிரிவின்கீழ் அதிகபட்ச தண்டனையே இரண்டு ஆண்டுகள் சிறை, அபாரதம் அல்லது இரண்டும் சேர்த்து), 337-வது பிரிவு, மோட்டார் வாகன சட்டம் 184 ஆகியவைகளின் கீழ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்வது வழக்கம்.
சமீபத்தில் சென்னையில், ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி, சாலையில் மஞ்சள் கோட்டைத் தாண்டி, எதிரே வந்த 2 மோட்டார் சைக்கிள்களையும், ஒரு ஆட்டோ ரிக்ஷாவையும் இடித்து தள்ளி, நடைபாதையில் இருந்த பலர் மீது மோதி, அதில் ஒருவர் இறப்பதற்கும், பலர் காயம் அடைவதற்கும் காரணமாக இருந்தார் என முதலில், வழக்கமான பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பிறகு இந்திய தண்டனை சட்டம் 304(மிமி), மற்றும் 337 ஆகியவற்றோடு மோட்டார் வாகன சட்டத்தில் சில பிரிவுகளையும் சேர்த்து வழக்குப்பதிவு செய்தனர். `என்மீது இந்தப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கூடாது' என்று பாதிக்கப்பட்டவர் ஐகோர்ட்டுக்கு போனார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் மாஜிஸ்திரேட்டுகள் மிக கடுமையாக இதற்கு தண்டனை விதிக்க வேண்டும். இந்த விபத்து ஏற்பட்டதற்கான சூழ்நிலைகள், காரணங்களையெல்லாம் மிக ஆழ்ந்து ஆராய்ந்து, வெறுமனே இயந்திரகதியில் அபராதத்தை மட்டும் விதிக்காமல், தகுந்த தண்டனையை விதிக்க வேண்டும். குடிபோதையில் வாகனத்தை ஓட்டி, சாலை விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள்மீது இந்திய தண்டனை சட்டம் 304(மிமி) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இத்தகைய தண்டனைக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். பொதுவாக, மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் இதுபோல குற்றங்களுக்கு அபராதத்தை மட்டும் விதித்துவிடுகிறார்கள். இது, சட்டத்துக்கும், பொதுநலனுக்கும் முரணானது என்று கூறி உள்ளார். குடிபோதையில் தன் நிலையில் இல்லாமல், மோட்டார் வாகனத்தை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தி, அப்பாவி உயிர்களை பலிகொடுக்க வேண்டிய நிலை தொடர்ந்து அடிக்கடி நடந்து வருகிறது. நமது நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் கூறியதுபோல், இதுபோன்ற குற்றங்களை செய்து பிடிபட்டோம் என்றால், நிச்சயமாக அதிகபட்ச தண்டனையை மாஜிஸ்திரேட்டுகள் விதித்துவிடுவார்கள் என்ற அச்ச உணர்வு மக்களிடையே இருந்தால்தான் குற்றங்கள் குறையும்.
கிருஷ்ணகிரி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு அ.சாந்தி முன்னிலையில் ஒரு வழக்கு சென்றால், அது நிரூபிக்கப்படும் பட்சத்தில், நிச்சயமாக அதிகபட்ச தண்டனை உண்டு என்று ஒரு அச்ச உணர்வு அந்தப்பகுதியில் இருக்கிறது. இப்படியொரு அச்ச உணர்வு இருந்தால்தான், குற்றங்கள் குறையும். இதுபோல, பல மாஜிஸ்திரேட்டுகள் பற்றி கோர்ட்டுகளில் பயம் கலந்த நியாய உணர்வு இருக்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதி, போலீசாருக்கும், மாஜிஸ்திரேட்டுகளுக்கும் கையில் ஆயுதங்களை கொடுத்துவிட்டார். இதுபோன்று, குடிபோதையில் வாகனத்தை ஓட்டி, விபத்து ஏற்படுத்துவோர்மீது கடுமையான தண்டனை விதிக்கவேண்டும். போக்குவரத்து போலீசாரும் இந்த சோதனைகளை இன்னும் கடுமையாக கடைபிடிக்கவேண்டும். மாநிலம் முழுவதிலும், போக்குவரத்து போலீசாருக்கு அதிக அளவில் இந்த கருவியை கொடுத்து, சோதனையிட செய்யவேண்டும். மொத்தத்தில், விபத்துக்களின் எண்ணிக்கையே குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால்தான் உயர்ந்துகொண்டிருக்கிறது. `விபத்து இல்லாத தமிழ்நாடு' என்ற இலக்கை நோக்கிச் செல்லவேண்டுமென்றால், இரும்புக்கரம் கொண்டு இந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்பாவி உயிர் பலி வேண்டாமே!
இவர் சொல்ற மாதிரி சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் வாகன விபத்து குறையும். நம்ம நாட்டில் தான் இயற்கையாக இறப்பவர்களை காட்டிலும் விபத்தில் இறப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
சும்மா எதுக்கெடுத்தாலும் அபராதம் என்ற ஒரு அல்ப தண்டனையா கொடுத்து அதுக்கு பேரு ஜனநாயகம் என்று மார் தட்டி கொண்டு இருக்கிறார்கள்
சும்மா எதுக்கெடுத்தாலும் அபராதம் என்ற ஒரு அல்ப தண்டனையா கொடுத்து அதுக்கு பேரு ஜனநாயகம் என்று மார் தட்டி கொண்டு இருக்கிறார்கள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அப்பாவி உயிர் பலி வேண்டாமே!
அச்சம் வரவேண்டாம் மற்ற உயிர்களுக்கு பரிதாபம் வந்தாலே போதும் எந்த தீங்கும் எந்த தவறும் எவரும் செய்யமாட்டார்கள்......
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அப்பாவி உயிர் பலி வேண்டாமே!
மரண தண்டனையே விதிக்கலாம் என்பேன் நான். குடிச்சுட்டு வண்டி ஓட்டுறவன் இருந்தா என்ன செத்தா என்ன..?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: அப்பாவி உயிர் பலி வேண்டாமே!
குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்
» அப்பாவி ஆண்களுக்கு
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» அப்பாவி கணவன்கள்..!
» அப்பாவி ஆண்கள்
» அப்பாவி ஆண்களுக்கு
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» அப்பாவி கணவன்கள்..!
» அப்பாவி ஆண்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|