Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
5 posters
Page 1 of 1
வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
வெறும் கையில் மோதிரம் வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் வருவது எல்லாம் மந்திரங்களால் முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள் அவர்களுக்கு பதிலையும் தெளிவையும் தரவேண்டியது அவசியம்
மந்திர வித்தைகள் என்பது வேறு, கண்கட்டி வித்தைகள் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக போட்டு நாம் குழப்பிக் கொண்டிருக்கிறோம். இந்த குழப்பல் வேலையை பல புகழ் பெற்ற சாமியார்கள் செய்து பல கோடி ரூபாய்க்கு அதிபதிகளாகவும் ஆகிவிட்டார்கள் இதற்கு எல்லாம் காரணம் மந்திர சாஸ்திரங்கள் பற்றிய அறிவு மக்களிடம் இல்லாததே ஆகும்.
ஒரு முறை திபெத் நாட்டிற்கு பண்டிதர் நேரு சென்ற போது அந்த நாட்டை சேர்ந்த ஒரு புத்த மத லாமா தனது மந்திர சக்தியால் நேருவின் தலைக்கு மேல் ஒரு மேக கூட்டத்தை வரவழைத்து பன்னீர் தெளிப்பது போல மழையை பெய்வித்தார். இத்தகைய மந்திர சக்திகளை பெற்ற பல லாமாக்கள் இன்று கூட திபெத் நாட்டில் உள்ளனர். அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆதிக்க வெறி பிடித்த சீனாவிடமிருந்து தங்களது நாட்டை மீட்டு கொள்ள முடியாதா? முடியும். ஆனால் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். காரணம் மந்திர சாஸ்திரம் அறிந்தவர்கள் கர்ம சாஸ்திரத்தையும் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். இந்த மாதிரி இத்தனை காலம் நடக்க வேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை மீறும் துணிச்சல் அவர்களுக்கு இருக்காது.
நடுத்தெருவில் மோடி மஸ்தான் வித்தை காட்டுவதை பலர் பார்த்திருப்பீர்கள். அந்த வித்தையில் சாதாரண கோழி முட்டை அந்தரத்தில் பறப்பதையும் பார்த்து வியந்திருப்பீர்கள். குருவி பறக்கலாம். முட்டை பறக்க முடியுமா? முடியும் ஒரு நல்ல கோழி முட்டையை மேல் புறத்தில் சிறிதாக ஓட்டை போட்டு உள்ளே இருக்கும் கருவை வேளியே எடுத்துவிட வேண்டும்.
வெறும் முட்டை ஓட்டை மட்டும் மார்கழி மாத பனியில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக பத்து, இருபது நாள் வைத்து எடுத்து உள்ளே இருக்கும் பனித்துளி வெளியில் போகாத வண்ணம் மெழுகால் அடைத்து விட வேண்டும். பிறகு வெய்யிலில் வைத்தால் உள்ளே இருக்கின்ற பனி உருகி ஆவியாகி மேல் எழும்பும் கூடவே முட்டையும் தூக்கி கொண்டு பறக்கும். சுற்றி இருக்கும் கூட்டத்தார் கூத்தாடியின் சக்தியை பார்த்து வியப்பார்கள். சிலர் பயப்படவும் செய்வார்கள்
இப்படி மந்திரத்தோடு சம்பந்தப்படாத எத்தனையோ வித்ததைகள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாமியாரின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக ஒரு பெரிய தகவலே பரவியது. இப்படி விபூதி கொட்டுவது ஒன்றும் தெய்வீகமானது அல்ல. நீங்கள் விரும்பினால் உங்கள் படத்தில் இருந்து கூட விபூதி கொட்ட வைக்கலாம்.
உங்களுக்கு தெரிந்த நாட்டு வைத்தியர் யாரவது இருந்தால் அவரிடம் சிறிதளவு திமிர் பாஷானம் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் இது நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அறிமுகம் இல்லாதவர்களுக்கு திமிர்பாஷானத்தை விற்கமாட்டார்கள்.
நீங்கள் வைத்தியரிடம் வாங்கிய திமிர் பாஷானத்தில் ஒரே ஒரு சொட்டு மட்டும் எடுத்து உங்கள் படத்தின் கண்ணாடியில் வைத்து விடுங்கள். அடுத்து ஆறு மணி நேரத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்து விடும். இது எப்படி நிகழ்கிறது என்றால் திமிர் பாஷானத்தின் தன்மை காற்றில் உள்ள தூசிகளை தனக்குள் இழுத்து வெளியிடுவதாகும். காற்றில் உள்ள தூசிகள் தான் வெள்ளை விபூதியாக கொட்டும்.
மேலும் இந்த திமிர்பாஷானத்தை வைத்து சில வித்தைகள் செய்யலாம். கற்பூரத்தை ஒரு பத்து நிமிடம் இதில் ஊர வைத்து ஒரு பாட்டலில் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். எதாவது யாகம், ஹோமம் நடக்கும் இடத்திற்கு சென்று சமித்து என்ற மர குச்சிகளின் மீது அந்த கற்புரத்தை வைத்து மந்திரம் சொல்வது போல் முணுமுணுத்து குப் என்று ஊதுங்கள், கரியமலவாயு பட்டவுடன் கற்பூரம் தானாக பற்றி கொள்ளும்,
நல்ல பருமனான கடப்பாறை கம்பியை வளைத்து ஒடிக்க விரும்புகிறீர்களா? அதற்கு ஒன்றும் நீங்கள் பயில்வானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒடிக்க விரும்பும் கடப்பாரையை பத்து நாட்களுக்கு முன்பாகவே குலை தள்ளிய வாழை மரத்தில் நடுவில் சொறுகி வைத்துவிட வேண்டும். வாழை மர சாரானது இரும்பின் கட்டி தன்மையை நீர்த்து போக செய்துவிடும். பிறகு சுலபமாக ஒடித்து விடலாம்.
இப்படி கொதிக்கும் எண்ணெயில் கை விடுவது ஒன்றரை மணி நேரத்தில் கம்பு விதையை பயிராக்கி கதிர் தள்ள செய்தல் என்று எத்தனையோ வித்தைகள் உள்ளன. இவற்றை செய்து பார்க்க மந்திரம் தேவையில்லை. குறுக்கு புத்தி இருந்தால் போதும். இந்த மாதிரியான வித்தைகளை கற்று கொண்டவர்கள் தான் வெறுங்கையில் விபூதி வரவழைப்பது உட்பட பல வேலைபாடுகளை செய்கிறார்கள்.
இது தவிர குண்டலினி யோகத்தை முறைப்படி கற்றவர்களுக்கு நீர் மேல் நடக்க முடியும். காற்றில் மிதக்க முடியும். கண்ணுக்கு தெரியாமல் மறையவும் முடியும். ஆனால் அத்தகையவர்கள் அதை வெளியில் காட்டி பிழைப்பு நடத்தமாட்டார்கள்.
நமது சித்தர்களும், ஞானிகளும் செய்கின்ற சித்து விளையாடல்கள் ஆன்மிக நோக்கம் கொண்டதே தவிர இலாப நோக்கம் கொண்டது அல்ல என்பதை நன்கு உணர வேண்டும்.
மேலும் யோக பாதையில் செல்லுகின்ற துவக்க பயிற்சியாளர்களுக்கு இத்தகைய சித்துக்கள் மனதில் தெம்பையும், உற்சாகத்தையும் கொடுத்து அவர்களது முயற்சிக்கு நல்ல ஊக்க மருந்தாக அமையும்.
மேலும் ஒரு யோக பயிற்சியாளனுக்கு இறுதி நோக்கம் என்பது கடவுளை அடைவதை தவிர சித்துக்களை அடைவதில்லை. ஒரு யோகி சித்துக்களை காட்ட துவங்கிவிட்டால் அவன் தன் நிலையிலிருந்து கீழே நிலைக்கு வருகிறான் என்று அர்த்தம். சாதாரண மனிதர்களை திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துவது ஒரு வித வியாபாரமே ஆகும்
http://www.ujiladevi.blogspot.in/2010/12/blog-post_5384.html
மந்திர வித்தைகள் என்பது வேறு, கண்கட்டி வித்தைகள் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக போட்டு நாம் குழப்பிக் கொண்டிருக்கிறோம். இந்த குழப்பல் வேலையை பல புகழ் பெற்ற சாமியார்கள் செய்து பல கோடி ரூபாய்க்கு அதிபதிகளாகவும் ஆகிவிட்டார்கள் இதற்கு எல்லாம் காரணம் மந்திர சாஸ்திரங்கள் பற்றிய அறிவு மக்களிடம் இல்லாததே ஆகும்.
ஒரு முறை திபெத் நாட்டிற்கு பண்டிதர் நேரு சென்ற போது அந்த நாட்டை சேர்ந்த ஒரு புத்த மத லாமா தனது மந்திர சக்தியால் நேருவின் தலைக்கு மேல் ஒரு மேக கூட்டத்தை வரவழைத்து பன்னீர் தெளிப்பது போல மழையை பெய்வித்தார். இத்தகைய மந்திர சக்திகளை பெற்ற பல லாமாக்கள் இன்று கூட திபெத் நாட்டில் உள்ளனர். அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆதிக்க வெறி பிடித்த சீனாவிடமிருந்து தங்களது நாட்டை மீட்டு கொள்ள முடியாதா? முடியும். ஆனால் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். காரணம் மந்திர சாஸ்திரம் அறிந்தவர்கள் கர்ம சாஸ்திரத்தையும் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். இந்த மாதிரி இத்தனை காலம் நடக்க வேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை மீறும் துணிச்சல் அவர்களுக்கு இருக்காது.
நடுத்தெருவில் மோடி மஸ்தான் வித்தை காட்டுவதை பலர் பார்த்திருப்பீர்கள். அந்த வித்தையில் சாதாரண கோழி முட்டை அந்தரத்தில் பறப்பதையும் பார்த்து வியந்திருப்பீர்கள். குருவி பறக்கலாம். முட்டை பறக்க முடியுமா? முடியும் ஒரு நல்ல கோழி முட்டையை மேல் புறத்தில் சிறிதாக ஓட்டை போட்டு உள்ளே இருக்கும் கருவை வேளியே எடுத்துவிட வேண்டும்.
வெறும் முட்டை ஓட்டை மட்டும் மார்கழி மாத பனியில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக பத்து, இருபது நாள் வைத்து எடுத்து உள்ளே இருக்கும் பனித்துளி வெளியில் போகாத வண்ணம் மெழுகால் அடைத்து விட வேண்டும். பிறகு வெய்யிலில் வைத்தால் உள்ளே இருக்கின்ற பனி உருகி ஆவியாகி மேல் எழும்பும் கூடவே முட்டையும் தூக்கி கொண்டு பறக்கும். சுற்றி இருக்கும் கூட்டத்தார் கூத்தாடியின் சக்தியை பார்த்து வியப்பார்கள். சிலர் பயப்படவும் செய்வார்கள்
இப்படி மந்திரத்தோடு சம்பந்தப்படாத எத்தனையோ வித்ததைகள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாமியாரின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக ஒரு பெரிய தகவலே பரவியது. இப்படி விபூதி கொட்டுவது ஒன்றும் தெய்வீகமானது அல்ல. நீங்கள் விரும்பினால் உங்கள் படத்தில் இருந்து கூட விபூதி கொட்ட வைக்கலாம்.
உங்களுக்கு தெரிந்த நாட்டு வைத்தியர் யாரவது இருந்தால் அவரிடம் சிறிதளவு திமிர் பாஷானம் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் இது நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அறிமுகம் இல்லாதவர்களுக்கு திமிர்பாஷானத்தை விற்கமாட்டார்கள்.
நீங்கள் வைத்தியரிடம் வாங்கிய திமிர் பாஷானத்தில் ஒரே ஒரு சொட்டு மட்டும் எடுத்து உங்கள் படத்தின் கண்ணாடியில் வைத்து விடுங்கள். அடுத்து ஆறு மணி நேரத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்து விடும். இது எப்படி நிகழ்கிறது என்றால் திமிர் பாஷானத்தின் தன்மை காற்றில் உள்ள தூசிகளை தனக்குள் இழுத்து வெளியிடுவதாகும். காற்றில் உள்ள தூசிகள் தான் வெள்ளை விபூதியாக கொட்டும்.
மேலும் இந்த திமிர்பாஷானத்தை வைத்து சில வித்தைகள் செய்யலாம். கற்பூரத்தை ஒரு பத்து நிமிடம் இதில் ஊர வைத்து ஒரு பாட்டலில் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். எதாவது யாகம், ஹோமம் நடக்கும் இடத்திற்கு சென்று சமித்து என்ற மர குச்சிகளின் மீது அந்த கற்புரத்தை வைத்து மந்திரம் சொல்வது போல் முணுமுணுத்து குப் என்று ஊதுங்கள், கரியமலவாயு பட்டவுடன் கற்பூரம் தானாக பற்றி கொள்ளும்,
நல்ல பருமனான கடப்பாறை கம்பியை வளைத்து ஒடிக்க விரும்புகிறீர்களா? அதற்கு ஒன்றும் நீங்கள் பயில்வானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒடிக்க விரும்பும் கடப்பாரையை பத்து நாட்களுக்கு முன்பாகவே குலை தள்ளிய வாழை மரத்தில் நடுவில் சொறுகி வைத்துவிட வேண்டும். வாழை மர சாரானது இரும்பின் கட்டி தன்மையை நீர்த்து போக செய்துவிடும். பிறகு சுலபமாக ஒடித்து விடலாம்.
இப்படி கொதிக்கும் எண்ணெயில் கை விடுவது ஒன்றரை மணி நேரத்தில் கம்பு விதையை பயிராக்கி கதிர் தள்ள செய்தல் என்று எத்தனையோ வித்தைகள் உள்ளன. இவற்றை செய்து பார்க்க மந்திரம் தேவையில்லை. குறுக்கு புத்தி இருந்தால் போதும். இந்த மாதிரியான வித்தைகளை கற்று கொண்டவர்கள் தான் வெறுங்கையில் விபூதி வரவழைப்பது உட்பட பல வேலைபாடுகளை செய்கிறார்கள்.
இது தவிர குண்டலினி யோகத்தை முறைப்படி கற்றவர்களுக்கு நீர் மேல் நடக்க முடியும். காற்றில் மிதக்க முடியும். கண்ணுக்கு தெரியாமல் மறையவும் முடியும். ஆனால் அத்தகையவர்கள் அதை வெளியில் காட்டி பிழைப்பு நடத்தமாட்டார்கள்.
நமது சித்தர்களும், ஞானிகளும் செய்கின்ற சித்து விளையாடல்கள் ஆன்மிக நோக்கம் கொண்டதே தவிர இலாப நோக்கம் கொண்டது அல்ல என்பதை நன்கு உணர வேண்டும்.
மேலும் யோக பாதையில் செல்லுகின்ற துவக்க பயிற்சியாளர்களுக்கு இத்தகைய சித்துக்கள் மனதில் தெம்பையும், உற்சாகத்தையும் கொடுத்து அவர்களது முயற்சிக்கு நல்ல ஊக்க மருந்தாக அமையும்.
மேலும் ஒரு யோக பயிற்சியாளனுக்கு இறுதி நோக்கம் என்பது கடவுளை அடைவதை தவிர சித்துக்களை அடைவதில்லை. ஒரு யோகி சித்துக்களை காட்ட துவங்கிவிட்டால் அவன் தன் நிலையிலிருந்து கீழே நிலைக்கு வருகிறான் என்று அர்த்தம். சாதாரண மனிதர்களை திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துவது ஒரு வித வியாபாரமே ஆகும்
http://www.ujiladevi.blogspot.in/2010/12/blog-post_5384.html
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
///ஒரு முறை திபெத் நாட்டிற்கு பண்டிதர் நேரு சென்ற போது அந்த நாட்டை சேர்ந்த ஒரு புத்த மத லாமா தனது மந்திர சக்தியால் நேருவின் தலைக்கு மேல் ஒரு மேக கூட்டத்தை வரவழைத்து பன்னீர் தெளிப்பது போல மழையை பெய்வித்தார்.///
ஏம்பா, தம்பிகளா! இவர் சொல்றது உண்மையா?
ஏம்பா, தம்பிகளா! இவர் சொல்றது உண்மையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
சிவா அவர்களே நீங்களும் நேருவும் நண்பர்கள் என்று கேள்விபட்டேனே ஆதலால் நீகள் தான் இதைப்பற்றி சொல்லவேண்டும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
மெய்யாலுமே சித்தர்கள் செய்வதைப் பற்றி எனக்கு தெரியாது.
ஆனால் டுபாக்கூர் சாமிகள் செய்வது மெய்யாலுமே டுபாக்கூர்தான்.
ஆனால் டுபாக்கூர் சாமிகள் செய்வது மெய்யாலுமே டுபாக்கூர்தான்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
மந்திரத்தால் மாங்காயும் வராது மழையும் வராது அனைத்தும் தந்திரமே...
ஆனால் இந்த காட்சி போல் பாபா படத்தில் வரும்...சிவா wrote:///ஒரு முறை திபெத் நாட்டிற்கு பண்டிதர் நேரு சென்ற போது அந்த நாட்டை சேர்ந்த ஒரு புத்த மத லாமா தனது மந்திர சக்தியால் நேருவின் தலைக்கு மேல் ஒரு மேக கூட்டத்தை வரவழைத்து பன்னீர் தெளிப்பது போல மழையை பெய்வித்தார்.///
ஏம்பா, தம்பிகளா! இவர் சொல்றது உண்மையா?
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
ரா.ரமேஷ்குமார் wrote:மந்திரத்தால் மாங்காயும் வராது மழையும் வராது அனைத்தும் தந்திரமே...
இதுதான் என் கருத்தும். மந்திரம் என்பது மக்களை ஏமாற்றுவது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
நம் மனத்துக்கு அபார சக்தி உண்டு. அதைக் குவித்து புடம் போட்டாலே அபார சக்திகள் தானாக வரும்.. மற்றபடி மீதி அனைத்தும் கட்டுக்கதைகள் தான்..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Similar topics
» விபூதி வைக்கும் முறையே சில நேரங்களில் உங்களுக்கு விபூதி அடித்து விடும்..! எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்..? இத கொஞ்சம் படிங்க..!!
» ஐஸ்கட்டியில் இருந்து நெருப்பு வரவழைப்பது எப்படி?(காணொளி உதவி)
» விபூதி பச்சிலை
» கீதை 10 விபூதி யோகம் !!
» வில்வ ஓடு விபூதி திருநீர்
» ஐஸ்கட்டியில் இருந்து நெருப்பு வரவழைப்பது எப்படி?(காணொளி உதவி)
» விபூதி பச்சிலை
» கீதை 10 விபூதி யோகம் !!
» வில்வ ஓடு விபூதி திருநீர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|