ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க, ஐந்து விதமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்

3 posters

Go down

தமிழக மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க, ஐந்து விதமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் Empty தமிழக மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க, ஐந்து விதமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்

Post by இளமாறன் Sun Feb 19, 2012 1:16 pm

தமிழக மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க, ஐந்து விதமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வீடுகளுக்கான மின் வெட்டை பெருமளவு குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தினமும் 11 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதில், தற்போது 3,500 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை உள்ளது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க, தமிழகம் முழுவதும் எட்டு மணி நேர மின்வெட்டு அமலாகிறது. மின்வெட்டால், வணிக நிறுவனங்கள், தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., போன்ற பொதுத்தேர்வுகளும், மற்ற வகுப்புகளுக்கு, முழு ஆண்டுத்தேர்வும் வருவதால், மின்வெட்டால் படிக்க முடியாமல், மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தமிழக மின்துறை அதிகாரிகளுடன், முதல்வர் ஜெயலலிதா கடந்த 17ம் தேதி ஆலோசனை நடத்தினார். இதில், தலைமை செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, மின்துறை முதன்மை செயலர் ரமேஷ்குமார் கண்ணா, மின்வாரிய சேர்மன் ராஜிவ் ரஞ்சன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், தமிழகத்தின் மின்சார தேவை எவ்வளவு, தற்போது மின்வாரியத்திடம் உற்பத்தியாகும் அளவு, மத்திய தொகுப்பிலிருந்து வரும் அளவு, தனியார் மற்றும் தன் பயனீட்டு நிலையத்தினர், காற்றாலை, மரபுசாரா எரிசக்தி மூலம் கிடைக்கும் மின்சார அளவு ஆகியவை குறித்து, பவர் பாயின்ட் பிரசன்டேஷன் மூலம் அதிகாரிகள் விளக்கினர். இதையடுத்து, மாணவர்களின் படிப்புக்கு இடையூறு இல்லாத வகையிலும், சாதாரண பொதுமக்களுக்கு ஓரளவாவது மின்சாரம் தர வேண்டும் என்ற அடிப்படையிலும், தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஆலோசனை கூறினார். இதன்படி, பொதுமக்களை பெரிய அளவில் பாதிக்காத வகையில், ஐந்து விதமான திட்டங்கள் மூலம், மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, அரசின் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

* அடிக்கடி முன்னறிவிப்பில்லாமல், மின்சாரம் தடைசெய்வது நிறுத்தப்படும்.

* பொதுமக்களுக்கான வீட்டு மின் பயன்பாடுக்கு, தற்போதைய எட்டு மணி நேர மின்வெட்டை குறைத்து, அதிகளவில் மின் வினியோகம் தரப்படும்.

* சென்னை நகருக்கு இரண்டு மணி நேரமும், சென்னைப் புறநகர் முதல் மற்ற அனைத்து மாவட்ட பகுதிகளுக்கும், ஐந்து மணி நேரத்திற்கு குறைவாகவும் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.

* மாணவர்கள் படிக்கும் நேரமான மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, மிகக்குறைந்த அளவுக்கு மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதற்காக, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, உயரழுத்த வணிகரீதியிலான மின் இணைப்புகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தனியாக கூடுதல் மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதில் சேமிப்பாகும் மின்சாரத்தை, மாணவர்கள் படிப்புக்காக வீடுகளுக்கு தரப்படும்.

* உயரழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக இணைப்புகளுக்கு, 20 சதவீதமாக இருக்கும், மின் பயன்பாடு கட்டுப்பாட்டை, 40 சதவீதமாக உயர்த்தி அமல்படுத்தப்படும்.

* தொழிற்சாலை சங்கங்கள் மற்றும் தொழிலதிபர்களின் கோரிக்கைப்படி, அவர்கள் விருப்பப்படும் வார நாட்களில் ஒரு நாள், 24 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதுதொடர்பாக, தொழிற்சாலை சங்கங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மனு அளித்தால், அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.

* இனி அனைத்து இடங்களுக்கும், குறிப்பிட்ட நேரத்தை அறிவித்து, அதன்படி மட்டுமே மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதன்மூலம், மின்வெட்டு நேரத்தை கணக்கிட்டு, ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் பணிகளை திட்டமிடலாம். இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசின் ஆலோசனைப்படி, மின்துறை அதிகாரிகள் திட்டங்கள் தயாரித்து வருகின்றனர். மின்சார வார விடுமுறை குறித்து, தொழிற்சாலை சங்கங்களிடம் அவர்களது ஆலோசனை மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. இந்த மனுக்களின் முடிவுப்படி, விடுமுறை அமலாகும். கூடுதல் மின்வெட்டு முறை, நாளை முதல் பரீட்சார்த்த முறையில் அமலாக உள்ளது. இதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை ஆய்வு செய்த பின், முழுமையான அளவில் நடைமுறையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

தொழிற்சாலைகளுக்கு "வாட்' சலுகை: தொழிற்சாலைகள் மற்றும் உயரழுத்த வணிக இணைப்பு உள்ளவர்கள், டீசல் ஜெனரேட்டர்களை அதிகளவில் பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். டீசல் விலை அதிகமாக உள்ளதால், அவர்களுக்கு வாட் வரியில், உள் பயனீட்டு சலுகை வழங்கவும், மின்துறையிலிருந்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெரிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களுக்கு வெளிச்சந்தையிலும், தனியார் மின்சார நிலையங்களிடமும், தனியாக மின்கொள்முதல் செய்து கொள்ளவும், மின்துறையிலிருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

- ஹெச்.ஷேக் மைதீன் -

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழக மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க, ஐந்து விதமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழக மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க, ஐந்து விதமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் Empty Re: தமிழக மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க, ஐந்து விதமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்

Post by இரா.பகவதி Sun Feb 19, 2012 6:00 pm

அண்ணா இதெல்லாம் கொதிக்கும் மக்களை கூல் செய்வதற்கான வாய் என்று தான் நினைக்கிறேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழக மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க, ஐந்து விதமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் Empty Re: தமிழக மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க, ஐந்து விதமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்

Post by அருண் Sun Feb 19, 2012 6:13 pm

எல்லாம் சொல்வதொடு சரி..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தமிழக மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க, ஐந்து விதமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் Empty Re: தமிழக மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க, ஐந்து விதமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.80,000 கோடிக்கான பாதுகாப்புத் துறை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
» தமிழக அரசு கடன்களை வாங்கி இலவச திட்டங்களுக்கு செலவிடவில்லை: கலைஞர் விளக்கம் !!
» பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு!
» \ அரசு ஊழியர்கள் சம்பளம், மதுபான விலை உயர்கிறது : தமிழக அமைச்சரவை ஒப்புதல்
» குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் ரூ.400 கோடியில் பணிகள் அதிரடியாக தொடக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum