புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_m10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_m10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_m10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10 
2 Posts - 3%
jairam
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_m10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10 
2 Posts - 3%
சிவா
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_m10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10 
1 Post - 1%
Manimegala
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_m10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_m10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_m10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_m10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_m10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10 
13 Posts - 4%
prajai
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_m10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10 
9 Posts - 3%
Jenila
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_m10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10 
4 Posts - 1%
jairam
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_m10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_m10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_m10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_m10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_m10அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பேத்கரின் சேரியமும் நீரியமும்


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 21, 2012 7:57 pm

அம்பேத்கரின் சேரியமும் நீரியமும்
அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Images?q=tbn:ANd9GcQa8egFxQ3k64MzkdwvgwC_1xP0sQaLOipyg6jJkOoNjQLCPrKc

நாடு சுதந்திரம் அடைந்தபின் ஒருநாள் நள்ளிரவு அண்ணல் அப்பேத்கரைச் சந்தித்த வெளிநாட்டுச் செய்தியாளர் அந்த நள்ளிரவு நேரத்திலும் படித்துக்கொண்டிருந்த அம்பேத்கர் அவர்களிடம், ”காந்தி, நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம். அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே” என்று வியந்து கேட்டார்.

“அவர்கள் சமுதாயம் விழித்துக் கொண்டிருக்கிறது
ஆகவே அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள்.
என்னுடைய சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது
எனவே நான் விழித்துக் கொண்டிருக்கிறேன்”


என்று பதில் கூறினார் அம்பேத்கர். விழியிருந்தும் ஒளியிழந்து, உயிர் இருந்தும் உணர்விழந்து, மதியிருந்தும் மனிதராகக் கூட மதிக்கப் படாத ஏற்றத் தாழ்வு மிகுந்த சமுதாயத்தில், ஒவ்வொரு விடியலிலும் கையில் கோணியுடன் நாணி நின்ற அந்தச் சிறுவன் தாழ்த்தப்பட்டோர் உயர உயர ஏறிப்போக ஏணியாக மாறுவதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டதில் பெருவியப்பு ஏதுமில்லை. அதனால்தான் ஒரு மேல்தட்டு மனிதனாலும் எட்ட இயலாத அந்த உயரத்தை அக்காலத்தில் தாழ்த்தப்பட்டோர் எனக் கருதப்பட்ட கீழ்த்தட்டு இனத்து அம்பேத்கர் அவர்களால் எட்ட இயன்றது. இது எவரும் கற்பனை கூட செய்திருக்க முடியாத ஒரு ஏற்றம்.

மனிதனை மனிதன் மதிக்கின்ற உறுதியான பண்பாடு அற்ற காலத்தில் அதாவது தன் எச்சிலைக்கூடத் வெளியில் துப்புவதற்கு அனுமதியற்று எச்சில் துப்பும் ஒரு கலயத்தைத் தன் கழுத்தில் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு சென்றுள்ளனர். தெருக்களில் இவர்கள் நடந்தால் பாதை தீட்டாகிவிடும் என்பதால் துடைப்பத்தைத் தம் இடுப்பில் கட்டிக்கொண்டு சென்றுள்ளனர். உயர் சாதிக்காரர்களுக்கு இணையாக முழங்காலுக்குக் கீழ் வேட்டிக் கட்ட அனுமதியற்ற ஆண்களும் மார்பை மறைக்கும் மேலாடையை(ரவிக்கையை) அணிய அனுமதியற்ற பெண்களுமாக அடக்குமுறை நிறைந்த இருட்டுலகில் வாழ்ந்து வந்த இனத்தில் ஓர் ஒளிவிளக்குத் தோன்றி தம் இனத்தின் பண்பாட்டை அடியோடு மாற்றியமைக்கப் போராடியது. அப்போராட்டத்தின் முடிவு வெற்றியா என்பதே இன்றைய கேள்வி?

ஆடு மாடு எங்கு வேண்டுமானாலும் திரியலாம். ஆனால் தலித் என்று அழைக்கப்பெற்ற மனிதனின் மூச்சுக்காற்றும் தீட்டாகப் போனது. மகாராட்டிரத்தில் காற்றுத் தீட்டாகிவிடும் என்று காலை ஒன்பது மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று ஒரு சட்டமும் இருந்த தகவல் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல இவர்கள் வீதியில் நடமாடினால் ஒரு மணியைக் கழுத்தில் கட்டிக்கொண்டு அலைவார்களாம். அந்த ஒலி கேட்டவுடன் பிற இனத்தவர்கள் எதிரில் வராமல் ஒதுங்கிச் செல்வார்களாம். அந்த மகாராட்டிரத்தில் மகார் என்ற இனத்தில் பிறந்த அம்பேத்கர் பட்ட அவமானங்கள் அவர் தலித்திய இயக்கங்களைத் தொடங்கவும் தொடரவும் காரணமாக அமைந்தன.

அம்பேத்கர் பரோடா அரசில் உயர் பதவி வகித்த போதிலும் இவருக்குக் கீழே பணிபுரிந்த உயர்சாதியினர் இவரை நடத்திய விதம் இங்கே குறிப்பிடத்தக்கது. எல்லோரும் பணியாற்றும் அறையில் அமர்ந்து பணியாற்றவும் தண்ணீர் அருந்தவும் இவருக்கு அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. இந்நிலை இவரைச் சாதியத்தை ஒழிக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்னும் எழுச்சியைத் தோற்றுவித்தது. மகார் இன மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த சாதிய அமைப்பைக் கடுமையாகச் சாடும் கபீர்தாசருடைய பக்தி இயக்கமும் பூக்கள் கட்டும் சாதியில் (மாலி) பிறந்த பூலே உருவாக்கிய சத்திய சோதக் சமாஜம் என்னும் இயக்கமும் அதற்கு உதவின என்று கூறலாம்.

இப்பின்னணியில் அம்பேத்கரின் சாதிய ஒழிப்புப் போராட்டம் குறித்த கருத்துகளைப் பல நூல்களில் கண்டாலும் ’இந்தியாவில் சாதிகள்’, ‘சாதி ஒழிப்பு’, ‘சூத்திரர் யார்’, ‘தீண்டத்தகார்’ ஆகிய அவரது நான்கு படைப்புகளில் அவரது அகமனம் ஆற்றிய போராட்டங்கள், அவர் பட்ட வேதனைகள், அதன் காரணமாக அவரது புரிதல்கள், அதனால் மக்களுக்கு அவர் கூறும் அறிவுரைகள் என பெரியதொரு விழிப்புணர்வு எழுத்துப் பிரச்சாரத்தைக் காணலாம்.

வருணாசிரம முறையில் தீண்டத்தகாதவர் உருவாக்கப் படவில்லை. அங்கு அசுத்தமானவர்கள், அடிமைகள் என்ற நிலையே காணப்பட்டது. வருண நிலைக்கு உட்பட்டவர் (வர்ணஸ்தர்) வர்ண நிலைக்கு உட்படாதவர் (அவர்ணஸ்தர்) எனப்பட்டனர். ஒரு குழுவின் குருதிப் புனிதத்தைப் பாதுகாக்க தேவையெனக்கருதிய அகமணமுறை புரோகிதர்களிடம் தோன்றி பின்னர் மெல்ல மெல்ல எல்லாப் பிரிவினரிடமும் பரவியது என்கிறார் அம்பேத்கர்.

செத்த மாட்டின் இறைச்சியை உண்பவர் தீண்டத் தகாதவர் ஆயினர். இவர்கள் தீண்டத் தகாதவர் ஆனதற்கு இதுவே முதன்மைக் காரணம் என்று டாக்டர் அம்பேத்கர் நினைக்கிறார் தலித் என்னும் சொல் தாழ்த்தப்பட்டோர் என்று கருதப் பெற்ற இனத்தின் அடையாளமாகக் கருதப்பெற்றது. அச்சொல் அவ்வின மக்களின் வேதனைக் குறியீடாகவே இன்றும் ஒலிக்கப் படுகிறது. இன்றும் தலித் என்பவர் சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம் என்னும் எல்லா வகையிலும் ஒடுக்கப்பட்டோராகவே இருந்து வருகின்றனர்.

சாதிய ஒழிப்பு முறைகளாக அம்பேத்கர் முன்வைத்தவைகளில் முக்கியமானவை அரசதிகாரத்தில் பங்கு, கலப்பு மணம், சாதியத்துக்குப் புனிதம் கற்பிக்கும் இந்து சாத்திரங்களைத் தகர்த்தல் ஆகியவை. இட ஒதுக்கீடே சாதியத்தை அழிக்கும் வலிமையான ஆயுதம் என நம்பி அதனைச் சட்டமாக்குவதில் தீவரமாக உழைத்தார். நிலமற்ற கூலி விவசாயிகள் பாரம்பரியமாக அடிமைகளாக இருப்பதால், அவர்களுக்கு சிறு நிலங்களைப் பிரித்துக் கொடுத்துப் பயனில்லை என்று எண்ணிய அம்பேத்கர் கூட்டுப் பண்ணை முறையே சிறந்தது என்னும் கருத்தையும் முன்மொழிந்தார். குத்தகை விவசாயிகளின் அடிமைத்தன ஒழிப்பு மசோதாவை முதலில் அறிமுகப் படுத்திய பெருமைக்குரிய சட்ட மனற உறுப்பினர் அம்பேத்கர். பம்பாய் பாரம்பரியப் பணிகள் சட்டம் (1928) குறுநில விவசாயிகள் சிவாரணச்சட்டம் (1927), கோத்தி முறை ஒழிப்புச் சட்டம், வாட்டள் முறை ஒழிப்பு, ஜூடி முறை ஒழிப்பு ஆகியவற்றுக்கான மசோதாக்களை இவரது கரங்களே முன்மொழிந்தன. தகுதியுடைய இந்துக்கள் எவரும் புரோகிதராக இருக்கலாம் என்னும் கருத்தையும் முன்வைத்தார்.

ஊர்ப்புறங்களில் இன்னும் தீண்டாமை முற்றிலும் விலகவில்லை. இன்னும் தலித் இனப்பெண்களை வன்புணர்தல் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

தலித் என்பவர்கள் தமக்கென ஒரு பண்பாடு, தமக்கென ஒரு மொழி தமக்கென ஒரு பாட்டு, தமக்கென ஒரு இசைக்கருவி என்று தம்மை அடையாளப்படுத்திய காலத்தில் இவற்றில் இருந்து வெளியில் வரவேண்டும் என்று குரல் கொடுத்தார் டாக்டர் அம்பேத்கர். ஆனால் இன்றும் சிலர் கொச்சை மொழியே தம் அடையாளம் என்றும் கொச்சையாக எழுதுவதும் பேசுவதுமே தம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று கட்டியம் கட்டிக் கூறுகின்றனர்.

‘வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெறுக்கும்
கவிப்பெறுக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்று பதவி கொள்வார்”

என்று பாரதி கூறுவது போலத் தம் இன மக்கள் கல்வி கற்றால்தான் இவ்விழிநிலையில் இருந்து மீளலாம் என்று உறுதியாக நம்பி அதற்கு ஆவன செய்தவர் அம்பேத்கர்.

ஒரு நாட்டின் வளத்திற்கு மண்வளம் மனித வளம் இரண்டை விடவும் நீர் வளமே மிக முக்கியமானது. நீரின்றி அமையாது உலகு. எல்லையை இழந்து பல தொல்லைகளை அடைந்து இன்று முல்லையையும் இழந்த நிலையில் டாக்டர் அம்பேத்கரின் நீரியம் பற்றி பேசுவதும் நம் கடமையாகிறது.

இயற்கையும் மைய அரசைப் போலவே நீரைத் தருவதில் ஒருபுறம் கஞ்சத்தனமும் ஒரு புறம் தாராளத்தனமும் காட்டுகின்றது என்பது மட்டுமல்ல. தருகின்ற சிறிதளவு நீரையுமே உரிய நேரத்தில் தருவதில்லை. ஆனாலும் நாம் இயற்கையின் மீது பழி சுமத்துவதை விடுத்து அதனைச் சரியான வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதே அன்று, இன்று மட்டுமன்று என்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

இந்திய நாட்டின் மொத்த நீர்வளம் 65,986 டி.எம்.சி. மேற்சொன்ன விவசாயம், வீட்டுப் பயன்பாடு, தொழிற்சாலைகள், மின் உற்பத்தி ஆகிய அனைத்திற்குமாக பயன்படுத்தும் அளவு 21,356 டி.எம்.சி. தான். இது மொத்த நீர்வளத்தில் சுமார் 31 விழுக்காடுதான். மீதமுள்ள 69 விழுக்காடு நீர் கடலில் கலந்து வீணாகிறது. இதனால் பல மாநிலங்களில் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. சில இடங்களில் வெள்ளத்தால் வளம் வீணாகிறது

நீர்வளம், பாசனவசதி அளித்து உணவு உற்பத்தியைப் பெருக்குகிறது. குறைந்த செலவில் போக்கு வரத்திற்குப் பயன்படுகிறது. தொழில் மயமாக நாடு மாறுவதற்குத் தேவையான மின்சார உற்பத்திக்கும் வழிவகுக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு காரணமானது நீர்வளம். ஆகவே இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்று அறைகூவல் எல்லாப் பக்கங்களிலும் எதிரொலிக்கிறது. இந்த ஒலியின் ஆரம்பம் இந்த ஒலியில் துவக்கம் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே டாக்டர் அம்பேத்கர் திருவாய் மலர்ந்து பிறந்தது: ஒலித்தது. பறை சாற்றியது என்பதே உண்மை.

அன்றைய பிரித்தானிய அரசு 1919 ல் செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் கொண்டு வந்து அதில், நதிகள் அவ்வவ் மாநிலங்களின் சொத்து என்று சொன்னது.

1935ல் விவசாயமும் நதிநீர்த்தேக்குதலும் மாநில அரசுகளின் உரிமை அதில் மைய அரசு தலையிடாது என்று சட்டம் இயற்றியது.

இவ்விரு சட்டங்களையும் 1942ல் தொழிளாளர் நலத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கர் கடுமையாகச் சாடினார். எப்படி இந்தியாவை இணைக்கின்ற தொடர் வண்டி போக்குவரத்து மைய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதோ அதே போல பல்வேறு மாநிலங்களைக் கடந்து செல்லும் நதிகளும் மைய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேஎண்டும் என்றார். இந்தியாவில் காணப்படும் ஒரு பகுதியில் பெய்யும் அதிக மழையும் ஒரு பகுதியின் வறட்சியையும் சமநிலைப் படுத்த நீர்த்தேக்கங்கள் வேண்டும் என்ற கருத்தை அன்றே பறைசாற்றினார். அத்துடன் நிற்காது 1945 ஆகஸ்ட் 23 ல் கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் தாமோதர் பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்ட வரைவினை அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக 1945ல் கட்டாக்கில் ஒரிசாவில் பாயும் ஆறுகளின் வளர்ச்சிக்கான பல்நோக்குத் திட்ட மாநாட்டில் அம்பேத்கர் முன்மொழிந்தார். அவரது சிந்தனை செயல் வடிவம் பெற்றது. இன்றய ஒரிஸா மாநிலத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது எனில் அது மிகையன்று. இந்தத் திட்டத்தை அடியொற்றியதே நேருவின் புகழ் வாய்ந்த நதிநீர்த்திட்டங்களான பக்ராநங்கல் திட்டம், சோனே திட்டம், மகாநதி திட்டம் ஆகியவை.

நதிநீர் தேசிய உரிமை. நதிநீர் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள இந்திய மாநிலங்கள் அனைத்தும் இணைந்து கூட்டுத் திட்டங்கள் வகுக்க வேண்டும். அந்தத் திட்டங்கள் மாநிலங்களைத் தாண்டி பெரும்பான்மை மக்களுக்குப் பயன் தரும் பொதுத் திட்டமாக அமைய வேண்டும் என்று அன்று அழுத்தம் திருத்தமாக வாதாடினார். இன்று வருமா நாளை வருமா என்று எதிர்ப்பார்த்து வரும் நதிநீரைப் போலவே நதிநீர் தேசியமயமாக்கல் திட்டமும் தென் மாநில மக்களைத் தொடர்ந்து ஏங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. அவர் அன்று தொடங்கி வைத்த இந்த உரிமைப்போராட்டங்களாகிய சேரியமும் நீரியமும் இன்றும் முழு வெற்றியைக் காணவில்லை என்பது இந்தியர்களின் துர்ப்பாக்கிய நிலை என்றே கூறலாம்.






ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 9:41 pm

சூப்பருங்க அருமையிருக்கு
மிக நல்ல பதிவு...

'அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் ' தலைப்பே அருமை ஆதிரா அவர்களே...

///எப்படி இந்தியாவை இணைக்கின்ற தொடர் வண்டி போக்குவரத்து மைய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதோ அதே போல பல்வேறு மாநிலங்களைக் கடந்து செல்லும் நதிகளும் மைய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேஎண்டும் என்றார்.///

உவமையுடன் கூடிய உயர்ந்த ஒப்பீடு...இப்போதைக்கு அவசியமானது இது...

இந்தப் பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி...



அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் 224747944

அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Rஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Aஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Emptyஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Rஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 22, 2012 12:42 am

மிக்க நன்றி ரா.ரா. நன்றி



அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Aஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Aஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Tஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Hஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Iஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Rஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Aஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Empty
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Thu Mar 22, 2012 11:54 am

பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 22, 2012 10:44 pm

விஜயகுமார் wrote:பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி...
மிக்க நன்றி விஜயகுமார்



அம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Aஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Aஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Tஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Hஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Iஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Rஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Aஅம்பேத்கரின் சேரியமும் நீரியமும் Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக