புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_m10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_m10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10 
5 Posts - 13%
heezulia
வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_m10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_m10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_m10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10 
3 Posts - 8%
Raji@123
வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_m10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_m10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_m10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_m10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_m10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_m10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_m10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_m10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10 
7 Posts - 2%
prajai
வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_m10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_m10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_m10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_m10வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 18, 2012 10:50 pm



பிறப்பின் அருமை பெருமைகளைச் சற்றும் உணராது, புகழீட்டவும் முனையாது, வாழும் முறைமையினை நன்கறிந்து வாழ்ந்திட முற்படாதது மட்டுமின்றி, அறிவார்ந்த மக்களைப் பெற்றும், ஒழுக்கத்தின் வழி நின்று ஒப்புரவு ஓம்பியும், தீமையான பழக்க வழக்கங்களினின்று தம்மைத் தவிர்த்தும் வாழ்ந்திட முனையாது, பிழைப்பினைக் கருதி, சிறுமையுற வாழ்ந்திடும் மக்களினம் தடுமாறிவிடும் நிலை மாறிட, வள்ளுவம் இக்காலத்திற்கு மட்டுமின்றி எக்காலத்திற்கும் துணை நின்றிடல் வெளிப்படை.

வாழ்வாங்கு வாழ்தல்

வாழ்ந்திட உரிய நெறிமுறைகளினின்று பிறழ்ந்திடாது, வாழும் முறைமையினை நன்கறிந்து, மேன்மையுற வாழ்ந்திடுவோர் தெய்வத்திற்கு ஒப்பாக வைத்து மதிக்கப்படுவர் என்று குறள் கூறுவதிலிருந்து பிறப்பின் பயனுடைய புகழினை எய்திடல் வேண்டும் என்பது வள்ளுவரின் விழைவும், வேட்கையுமாகும் என்பதை நன்கு உணரலாம். இக் கருத்தினையே,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

என்ற குறளின் மூலம் தெளிவுற அறியலாம்.

அறிவார்ந்த மக்கட்பேறு

சமுதாயம் நாளும் அறிவின் வயப்பட்டு, முன்னேறுதல் வேண்டும் என்ற பேரவாவினைக் கொண்ட வள்ளுவப் பெருந்தகை,

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது

என்ற குறளின் மூலம் தம்மைக் காட்டிலும் தம்முடைய மக்கள் அறிவில் மேம்பட்டு விளங்கிடல் வேண்டும் என்று தெளிவுறத் தெரிவித்துள்ளார்.

ஒழுக்கத்தின் உயர்வு

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்

என்ற குறளின் மூலம் சமுதாயம் ஒழுக்கத்தின் வழி நடை பயின்று, பிறப்பிற்குப் பெருமை வந்து எய்துமாறு வாழ்ந்திடல் வேண்டும் என்பதுடன், அவ்வொழுக்கமே உடைமையாகும் என்று கூறுவதிலிருந்தும், ஒழுக்கத்தினின்று பிறழ்ந்தால், பிறப்பே இழிவாகும் என்று உறுதிபடக் கூறுவதிலிருந்தும் வள்ளுவம் ஒழுக்கமுள்ள சமுதாயத்தையே பெரிதும் விரும்பியது என்பதை அறியலாம்.

ஒப்புரவு கொண்டொழுகுதல்

சமுதாயம் உயர்ந்தோங்க வேண்டுமெனில், ஒருவருக்கொருவர் உதவிடும் நற்பண்பு கொண்டோராய் ஒழுகுதல் வேண்டும். உதவிடும் நற்பண்பால் துன்பமே வரினும் அதற்கெனத் தன்னையே விலையாகக் கொடுக்கவும் தயங்காது முன் வருதல் வேண்டும் என்பதை,

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து

என்பதை மேற்கூறும் குறள்வழி வள்ளுவம் வலியுறுத்திக் கூறுவதைக் காணலாம். தன்னுயிர் போல் பிற உயிர்களையும் எண்ணிக் கருணை கொண்டு ஒழுகுபவன் எஞ்ஞான்றும் துன்பம் உறுதலில்லை என்பதை,

மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப

தன்னுயிர் அஞ்சும் வினை

என்ற குறளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

புகழ் பெற வாழ்தல்

நிலையாக எதனையும் தன்னகத்தே கொண்டு இயங்காத உலகத்தில் புகழ் ஒன்றே நிலைத்து நிற்கும் பேராற்றலை யுடையது என்பதை உணர்ந்து, புகழீட்டிப் பெருமையுற வாழ்ந்திட முனைதல் வேண்டும்.

புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்

பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்

என்ற புறநானூற்றுக்கு வலிவு சேர்க்குமாறு அமைந்துள்ள

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன்று இல்

என்ற வள்ளுவத்தினை எண்ணிப் புகழீட்டி வாழ்ந்திட முனைதல் வேண்டும். மேலும், தூய மனத்தினை உடையவராய் மனித இனத்தின் வேறுபாடுகளைக் கருத்திற் கொள்ளாது இம் மன்னுயிரைக் காப்பது போன்று ஒழுகுதல் என்ற மாண்பு அமையுமானால் அஃது அனைத்து வகைப் புகழையெல்லாம் அளிக்கவல்லது என்பதையும் கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.

தீய பழக்க வழக்கங்களினின்று விடுபடல்

இளமையும், வளமையும் கொண்ட இன்றையச் சமுதாயம் பெரிதும் ஒழுக்கத்தினின்று பிறழ்ந்து காணப்படுதல் கண்கூடு. மதியினை மயக்கும் மதுவினைத் தொடர்ந்து அருந்துவது என்பது உயிரை மாய்த்துக் கொள்ளச் சிறிது சிறிதாக நஞ்சினை உண்பதற்கு ஒப்பாகும் என்று பொதுவாகக் கூறிய வள்ளுவம் அதை மீறி உண்ணத் தலைப்பட்டால் ஒழுக்கமுடைய அறிஞர்களால் அவர்கள் எண்ணப்படாத வராகும் நிலை ஏற்படும் என்றும் கீழ்க்காணும் தம் குறள்களால் உறுதிபட உணர்த்துவதைக் காணலாம்.

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்

எண்ணப் படவேண்டா தார்

சிறுமை பல எய்துமாறு செய்வதுடன் புகழினை அழித்து, வறுமை எய்திடச் செய்யும் சூதினை அறவே தவிர்த்திடல் வேண்டும் என்பதை,

சிறுமை பலசெய்து žரழிக்கும் சூதின்

வறுமை தருவதொன்று இல்

என்ற குறளின் மூலம் நன்கறியலாம். உடலுறவில் நாட்டம் உள்ளது போல், பொய்யுறக் கூடி பழகும் பொருட் பெண்டிருடன் இன்பம் துய்த்தல் என்பது உறவற்ற பிணத்தினை இருட்டறையில் தழுவுவதற்கு ஒப்பாகும் இதை,

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணந்தழீஇ யற்று

என்ற குறளின் மூலம் உணர்ந்து கொள்ளலாம். ஒழுக்கத்தினை உயிராக எண்ணி, மானிட வாழ்வியலைப் பெரிதும் நெறிப்படுத்தக் கடுமையாகக் கூறும் வள்ளுவத்தின் உயர்வினை எண்ணியெண்ணி இறும்பூதெய்தலாம்.

மாண்புடைய மக்களரசு

ஆட்சி புரிவோர் எதன் பொருட்டும் அஞ்சாத துணிவுடன் இலங்கியும், வறுமையினைக் கண்டு மனமிரங்கி, இன்னார், இனியர் என்று பாராது, எல்லார்க்கும் உதவிடும் ஈகைப் பண்பு கொண்டொழுகியும், அறிவுடைமையுடன் ஊக்கமுடைமை கொண்டும் விளங்கிடுதல் வேண்டும். அத்துடன் நில்லாது, மக்களுக்கு நலம் பயக்கும் பன்னெடுங்காலத் திட்டங்களை வகுத்து, அதற்கான பொருளை நேரிய வழியில் ஈட்டிக் குறைவு நேர்ந்திடா வண்ணம் காத்து, உரிய வழிவகையறிந்து, முறைப்படி செலவீடு செய்து, அரசினை நல்லரசாகவும், வல்லரசாகவும் இயக்குதல் வேண்டும் என்பதையும் கூறிட முனைந்தது. வள்ளுவம் நல்லாட்சியின் அமைதிக்குக் குந்தகம் நேரும் வண்ணம் மிகக் கொடிய குற்றம் புரிவோரைக் கொலைத் தண்டனை மூலமும் தண்டித்துச் சமுதாய நலத்தைக் காக்க வேண்டும் என்பதையும் நமது பல்வேறு அதிகாரங்களில் அறுதியிட்டு உறுதிபடக் கூறுவதைக் கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.

பொருளீட்டலில் மிகவும் நாட்டம் கொண்டு, பொய்ம்மையுற வாழும் இன்றைய மானிடம் வாழ்வாங்கு வாழ்ந்து, அறிவார்ந்த நன் மக்களை ஈன்று, ஒப்புரவு கொண்டொழுகி, தீமை பயத்தலான பழக்கங்களைத் தவிர்த்து ஒழுக்கத்தின் வழிநின்று, புகழீட்டி வாழ்தல் வேண்டும் என்றும், மாண்புடைய மக்களைக் காக்கும் அரசு வளமான நலன்களை நல்குமாறு அமைவதுடன் கொடுமைகளைக் களைந்து, அஞ்சுதலின்றி, அறிவுடைமையுடனும், ஊக்கமுடைமையுடனும் செயல்படுதல் வேண்டும் என்றும் நிலைத்த அறத்தினையே பேசுவதால், ”வள்ளுவம்” இக்காலத்திற்கு மட்டுமின்றி எக்காலத்திற்கும் துணையாக நிற்கும் என்பதை இச்சமுதாயம் ஐயத்திற்கு ஒரு சிறிதும் இடமின்றி அறிந்து, தெளிந்து, ஒரு தலையாக வள்ளுவத்தைப் போற்றி அதன் வழி வாழ்ந்து, ”மண் பயனுற வேண்டும்” என்ற கருத்தினை அகத்தினில் கொண்டு புகழொடு வாழத் தலைப்படுதல் வேண்டும்.

திரு. நாராயண துரைக்கண்ணு



வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக