புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
3 Posts - 7%
heezulia
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat 18 Feb 2012 - 14:51

பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Omsivasiva
ஆடும் தம்பிரானார் கோயில் அழிவுற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்து கல்வெட்டு. - வடவாம்பலத்தில் உள்ள ஸ்ரீ ஆத்மபோதேந்திரர்.

தமிழகத்தில் மாமன்னர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியோர்களைப் பற்றி கூறும் வரலாற்றுச் செய்திகள் மற்றும் தடயங்களில் சில பதிவு செய்யப்படாமல் மறைந்துவிட்டன. மேலும் சில பதிவு செய்யப்பட்டும் காலப்போக்கில் மறைந்து போய்விட்டன.

இவ்வகையில் விழுப்புரம் மாவட்டம் வடவாம்பலம் கிராமத்தில் இருந்த அம்பலத்து ஆடும்தம்பிரானார் கோயில் இருந்து மறைந்ததையும், காஞ்சி முனிவரின் அதிட்டானமம் கண்டுபிடிக்கப்பட்டதையும் கூறுகின்ற 500 ஆண்டுகள் பழமை வாய்ந்து மறைந்துபோய்விட்ட ஒரு வரலாற்று உண்மையை தான் கண்டு பிடித்த ஒரு கல்வெட்டின் மூலம் நிலைநிறுத்தி வரலாறு கூறும் நல்லுலகிற்குத் தெரியப்படுத்தி இருக்கிறார் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன்.

இனி அவர் கூறும் ஆச்சரியம் கலந்த வரலாற்று உண்மையைக் காண்போம்.

தமிழகத்தை ஆண்ட மாமன்னர்கள் நாடு எங்கிலும் எழுப்பிய ஆயிரக்கணக்கான கோயில்கள், மறைந்தும், மறையாமலும் காட்சி அளிக்கின்றன. தென்பழனி முருகன் கோயிலைப் போன்று சென்னையிலும் முருகனுக்கு கோயில் எழுப்பி வடபழனி என்ற பெயரில் புகழ்பெற்றுள்ளது ஒரு உதாரணமாகும்.

இதேபோன்று பல்வேறு ஊர்களில் சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் கோயில்கள் எழுப்பி திசைகளின் பெயரில் ஊர்ப் பெயரை இணைத்து திசைகளைச் சுட்டும் திருத்தலங்களாக அமைந்துள்ளன. காசிக்கு தெற்கில் இருப்பது தென்காசி, தென்கயிலாயம்-வடகயிலாயம், வடதிருப்பதி-தென்திருப்பதி(திருவந்திரபுரம்) என்கிற பெயர்களை போன்று சிதம்பரமான தில்லை அம்பலத்து நடராசப்பெருமான் கோயிலுக்கு நிகராக வடஅம்பலம் என்கிற பெயரில் ஆடும் தம்பிரானார் திருத்தலம் இருந்து மறைந்துவிட்ட வரலாற்று உண்மை நம்மில் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

தென்திசையில் புகழ்பெற்று விளங்கும் தில்லை அம்பலத்து நடராசப்பெருமான் கோயிலுக்கு வடக்கில் நடுநாடான திருமுனைப்பாடி நாட்டுத் தென்பெண்ணை ஆற்றங்கறையில் இத்தலைத்தை அமைத்ததால், வட-அம்பலம்-வடவாம்பலம் என்கிற பெயரைச் சூட்டி உள்ளனர்.


இத்தலம் சோழர் காலத்தில் மிகவும் சிறப்புற்றிருந்து கி.பி.17-ம் நூற்றாண்டுவரை குறையேதுமின்றி ஆறுகால பூஜைகளும் நடைபெற்று வந்துள்ளன. என்ன ஆனதோ தெரியவில்லை இக்கோயிலுக்கு இன்று அடிச்சுவட்டைக் கண்டுபிடிக்க இயலாத அளவிற்கு சிதைந்து ஒரே ஒரு சிவலிங்கம் மட்டும் எஞ்சியிருக்கிறது. கோயிலின் உடைந்த தூண்களும், கருங்கற்களும் வெகு தொலைவுவரை ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.சிவலிங்கத்திற்கு 10 அடி தொலைவில் தலைக்கீழாகப் படுத்து மண்ணுக்கள் மறையக் காத்திருந்த ஒரு கருங்கற் பலகையைப் புரட்டிப்போட்ட போதுதான் ஒரு வரலாறே புரண்டு போய் இருப்பதை கண்டறிய முடிந்தது. புரட்டிய பக்கம் அற்புதமான செய்தியைக் கூறும், கல்வெட்டுப் பொறிப்பு அது. கி.பி.16-ம் நூற்றாண்டில் அரசு புரிந்த விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயருடையது. ரக்தாக்ஷி வருடம், சித்திரை மாதம் 5-ம் தேதி (17.4.1525)-ல் இக்கல்வெட்டு பொறிக்கப்ட்டுள்ளது.

திருவெங்களை என்ற பெயருடைய இவர், கிருஷ்ணதேவராயரின் உறவினராகவோ அல்லது அமைச்சர் போன்ற அரசுப் பொறுப்புகளிலோ இருந்திருக்க வேண்டும். இவர் இறந்து போகிறார். ஆனால் இவர் எப்படி இறந்தார் என்கிற விபரம் காணப்படவில்லை.

இவரின் ஆன்மா புண்ணிய சாந்தி அடைவதற்காக வடவாம்பலத்து ஆடும் தம்பிரானார் கோயிலுக்கு சர்வமானியத் தானமாக தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்த நத்தத்தில் வாழ்ந்த செக்காடுவோர் மற்றும் தறிநெய்வோர் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை அளித்தான் என்பதை விளக்கும் இக்கல்வெட்டில் திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ளது. இப்படி ஓர் கோயில் இருந்ததைக் கூறும் முதல் கல்வெட்டு இதுதான்.

காஞ்சி காமகோடி பீட ஆச்சாரியார்களின் வரிசையில் 58-ஆவது பட்டத்திற்கு உரியவராயிருந்த ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரசுவதி சுவாமிகள் கி.பி.16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர். இவரது காலம் 1586-1638 ஆகும். விருத்தாசலத்தில் பிறந்த இவர் பாரத பூமி முழுவதும் ஆன்மிகச் சுற்றுப் பயணம் செய்தவர். காசியில் சில காலம் தங்கியிருந்த போது உருத்திர மந்திரத்திற்கு உரை எழுதிப் புகழ்பெற்றவர். இவர் தென்னாட்டுத் திருத்தலங்களைத் தரிசித்து வரும் சமயத்தில் வடவாம்பலத்து ஆடும் தம்பிரானார் திருத்தலத்தின் அருமை பெருமைகளை அறிந்து தரிசித்துவிட்டுச் செல்ல வருகை புரிந்தவர், என்ன நினைத்தாரோ... வேறெங்கும் செல்ல மனமின்றி அங்கேயே தங்கிவிட்டார். வாழ்நாளில் இறுதி வரை இங்கேயே தங்கி வாழ்ந்து மறைந்தார்.
இம்மகானைப் பற்றிய செய்திகள் காஞ்சி மடத்தில் குருபரம்பரைக் குறிப்பில் இருந்ததைக் கண்டறிந்த காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சங்கராச்சாரிய சுவாமி அவர்கள் 1926-ஆம் ஆண்டில் புதுச்சேரிக்குச் செல்லுவதற்கு முன்னர் வடவாம்பலத்திற்கு வருகை பரிந்து ஆத்மபோதேந்திரர் சித்தி அடைந்த இடத்தைக் கண்டறிய ஆவல் கொண்டார்.

300 ஆண்டுகள் கடந்து விட்டதால், அந்த இடம் இதுதான் என்று குறிப்பிட முடியாத அளவிற்கு தடயங்கள் தெரியாமல் மறைந்து விட்டிருந்தன. என்றாலும் பெரியவர் தம்முயற்சியைக் கைவிடாமல் அவ்வூரிலேயே முகாமிட்டு வயல் வெளிகள், தோப்புத் துரவுகள், புதர் மண்டியகாடுகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்தார். ஒரு நாள் இரவு பூஜைகளை முடித்துவிட்டு கண்ணயர்ந்த போது இதுவரை பார்த்த இடங்களில்
ஒரு இடத்தை மட்டும் குறிப்பால் உணர்ந்தார். மறுநாள் காலையில் ஊர் மக்களுடன் அந்த இடத்திற்குச் சென்று அகழ்ந்தெடுக்க கூறினார். ஆச்சர்யத்துடன் கூடிய அதிசயம் அங்கு நிகழ்ந்தது. 10 அடி ஆழத்தின் கீழ் மண்டை ஓடு, எலும்பு துண்டுகள் மக்கிய நிலையில் உருத்திராட்சங்கள், கிண்டி மற்றும் பூஜைப் பொருட்கள் கிடைத்தன. இன்னும் சற்று விரிவாக அகழ்ந்தபோது கட்டிடம் மற்றும் கிணறு இருந்ததற்கான தடயங்கள் இருந்தன.

இதுதான் ஆத்மபோதேந்திரர் சித்தியடைந்த இடம் என்பது உறுதி செய்யப்பட்டது.

கிடைத்த பொருட்களை எல்லாம் அங்கேயே வைத்து சிறிய கோயில் கட்டப்பட்டு 17.1.1927-ஆம் நாளில் காஞ்சிப் பெரியவரின் திருக்கரங்களால் சிவலிங்கப் பிரதிட்டை செய்யப்பெற்று, வழிபாடுகள் தொடங்கி இன்று வரை பூஜைகள் நடபெற்று வருகின்றன.

இந்த அதிட்டானத்திற்குத் தெற்கே சற்றுத் தொலைவில் பெண்ணையாற்றின் வடகரையில் ஆடும்தம்பிரானார் கோயில் அழிவுற்று தன் வரலாற்றுப் பெருமைகளை மூடி மறைத்துக்கொண்டிருக்கின்றது.
கோயில் மறைந்தாலும் வடவாம்பலம் என்ற பெயரைமட்டும் இன்றுவரை நிலையாகக் கொண்டிருக்கும் இந்த வரலாற்று மையம், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், கோலியனூர்-கண்டரக்கோட்டைக்கு இடையில் பெண்ணையாற்றின் வடக்கே 3 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக