ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_c10 
ayyasamy ram
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_c10 
mohamed nizamudeen
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_c10 
VENKUSADAS
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_c10 

Top posting users this month
heezulia
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_c10 
ayyasamy ram
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_c10 
mohamed nizamudeen
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_c10 
VENKUSADAS
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

+13
ayyamperumal
யினியவன்
நேரு
nandhtiha
சதாசிவம்
krishnaamma
அதி
மகா பிரபு
இரா.பகவதி
ரேவதி
பாலாஜி
dhilipdsp
பிஜிராமன்
17 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Empty வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by பிஜிராமன் Fri Feb 17, 2012 7:36 pm

First topic message reminder :

17 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் மொகலாயப் பேரரசிற்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சிகளுக்கு முக்கிய காரணங்களாக திகழ்ந்தவை யாவை? அவை பெரும்பாலும் சமயம் (ரிலீஜியஸ்) சார்ந்ததாக இருந்ததா? அல்லது பொருளியல் (எக்கனாமிக்) சார்ந்தவையாக இருந்தனவா?



மொகலாயப் பேரரசு ஏப்ரல் 21, 1526 ஆம் ஆண்டில் இருந்து துவங்குகிறது. முகலாயர்கள் டிமுரிட்ஸ் வம்ஸாவழியைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டில் மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்தது, ஆனால் 17 ஆம் நூற்றாண்டில் பிற்பாதியில் வீழ்ச்சி பெற துவங்கி 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தொடர்ந்தது. இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை, அதாவது கிழக்கே பெங்காலிலிருந்து மேற்கே பலோகிஸ்தான் வரையிலும், வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே காவேரி வரை அவர்களின் ஆட்சி பரந்து விரிந்து இருந்தது. இந்திய துணைக்கண்டம் முழுமையும் அவர்கள் ஆட்சி அதிகாரம் இருந்தது எனக் கூறலாம்.

மொகலாயப் பேரரசின் முதல் பேரரசர் ஜாகீருதின் முஹம்மத் பாபர் (1526-1530), எளிதாய் பாபர் என்று அனைவராலும் அறியப்படுபவர். இவரை தொடர்ந்து நிறைய பேரரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள்

  • ஹூமாயூன் (1530-1539) & (1555 - 1556)

  • அக்பர் (1556 - 1605)

  • ஜஹாங்கீர் (1605 -1627)

  • ஷாஜகான் (1627 - 1658)

  • ஔரங்கஷிப் (1658 - 1707)


ஔரங்கஷிப் இன் ஆட்சிக்காலத்தில் மொகலாயப் பேரரசு பெரும் வீழ்ச்சிகளுக்கு உட்பட்டது, அதற்கு முக்கிய காரணங்களாக இருந்ததவை அவருடைய ஆட்சி காலத்தில் நிகழ்ந்த சத்னமி (Rebellion of Satnami) கிளர்ச்சி , ஜேட்ஸ் (Rebellion of Jats) கிளர்ச்சி மற்றும் சீக்ஸ் (Rebellion of Sikhs) கிளர்ச்சி போன்ற கிளர்ச்சிகளே. இப்படி தொடர்ந்த் கிளர்ச்சிகளாலும், பலகீனமான அரசர்களாலும் மொகலாயப் பேரரசு வீழ்ச்சி கண்டு, இறுதியில் ஆங்கிலேயர்களால் நசுக்கப்பட்டு, மொகலாயர் ஆட்சி ஜூன் 20, 1858 இல் முழுதும் முடிவிற்கு வந்தது. பஹதூர் ஷா ஜாஃபர் மொகலாயப் பேரரசின் கடைசி அரசராக திகழ்ந்தார். இவர் ஆட்சி ஆங்கிலேயரால் கைப்பற்றப் பட்டு பர்மாவிற்கு நாடு கடத்தப் பட்டார்.

இதுவே மொகலாயப் பேரரசின் சிறு குறிப்பு, இனி மொகலாயர் ஆட்சி சம்பந்தப் பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆராய்ந்து அலசி, சிறப்பாக இருந்து வந்த மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணத்தை கொணர்வோம்.


குறிக்கோள்:

1. மொகலாயப் பேரரசின் அனைத்து சாராம்ஸங்களையும், அரசர்களின் சிறப்புகளையும் அறிந்து கொள்வது.

2. அரசர்களால் கொண்டு வரப்பட்ட ஆட்சி முறை மாற்றங்களும், கொள்கைகளும் எந்த விட மாற்றங்களை கொண்டு வந்தன என்றும், அந்த மாற்றங்களால் விளைந்த விளைவுகளையும் ஆராய்ந்து தெளிவு பெறுவது.

3. ஆட்சி காலத்தில் நடைபெற்ற கிளர்ச்சிகள் ஒவ்வொன்றையும் தீர ஆராய்ந்து அதற்கு முக்கிய காரணமாக இருந்தவற்றை அறிந்து கொள்வது. .



விதிமுறைகள்

1. அரட்டை கூடாது. அரட்டை பதிவுகள் முன்னறிவிப்புடன் நீக்கப்படும்.

2. யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.

3. கேள்விகளை அடுக்காமல், ஒரு கேள்வியை கேட்டு, அதற்கான விடை பெற்ற பின் அடுத்த கேள்வியை மற்றவர்களோ, அல்லது அவரேவோ கேட்கலாம்.

4. கேள்விக்கான பதில் யாருக்காவது தெரிந்திருந்தாலோ, அல்லது, கேள்விக்கான பதிலை யாராவது கூற விரும்பினாலோ. கேள்விக்கு அடுத்த பதிவில், நான் பதில் கூறுகிறேன் என்று பதிவை தொடங்கி விட்டு, பதிலை அதே பதிவை திருத்தி இணைத்துக் கொள்ளலாம். காரணம், அதே கேள்விக்கு மற்றவரும் விடை தேட வாய்ப்புள்ளது, நேர விரையத்தை தடுப்பதற்காகவே இந்த முறை.

5. அனைவரும் தேடுவதால் தவறில்லை. தேடி பின் மற்றவர் பதில் அளித்திருந்தால், கொஞ்சம் மன சங்கடம் ஏற்படலாம். இதை தவிர்க்கவே இந்த முறை.


அடுத்த ஐந்தாவது நாளில், மொகலாயப் பேரரசைப் பற்றி எந்த கோணத்தில் கேட்டாலும். நாம் பதில் சொல்லும் வகையில் தேரி இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

மிக்க நன்றிகள் உறவுகளே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி .


Last edited by பிஜிராமன் on Mon Feb 27, 2012 10:54 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Empty Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by அசுரன் Tue Feb 28, 2012 1:16 am

உதயசுதா wrote:ஔரங்கஷிப் பத்தி நான் ஒரு கட்டுரை படிச்சு இருக்கேன் ராமன்.
ஆனா நீங்க sonna மாதிரி அவர் கொடுமையானவர் இல்லை என்பது மாதிரி தான் படிச்சு இருக்கேன். அவரோட சாவுக்கு கூட ஆடம்பரமா செலவு பண்ணக்கூடாது என்றும் தான் இறந்த பிறகு தான் குரான் எழுதியும்,மற்ற சிறு வேலைகள் செய்தும் சம்பாதித்த பணத்தில் தான் காரியங்களை செய்யணும் என்று சொன்னதாகவும் படிச்சு இருக்கேன்.
அது மட்டும் இல்லை ஆடம்பரங்களை அடியோடு வெறுத்தவர் என்றும் படிச்சு இருக்கேனே
இறுதியாக உதய சுதா அக்காவின், கேள்வி ஔரங்கஷிப்பை வேறு ஒரு கோணத்தில் காட்டிய கேள்வி, ஆனால், பெரும்பான்மையான வரலாற்று நூலாசிரியர்களும், நூற்களும், ஔரங்காஷிப்பின் அடக்குமுறையை, சமயவெறியை அப்பட்டமாய்க் கூறுகின்றன. அதை எங்கு படித்தீர்கள் என்று நியாபகப் படுத்தி கூறுங்கள் அக்கா......மிக்க நன்றிகள் அக்கா......

வரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும்கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல. எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது. சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.
‘நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறுபட்ட இனங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்… அவர்களிடையே பாலமிட முடியாத பிளவுகள் காலங்காலமாக இருந்திருக்கின்றன…’ என்பவை போன்ற மதவாதக் கருத்துகள் இத்தகைய வக்கரித்த வரலாற்றின் வார்ப்புகள் தாம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டின் வரலாறு சொல்லொணாச் சிதைவுக்கு உள்ளாயிற்று. தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்களைப் பிரித்தாளும் ராஜதந்திரத்தின் அற்புதக் கருவியாக வரலாற்றை ஆங்கிலேயர் பயன்படுத்தினர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை வலியுறுத்த, அதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஆண்ட காலத்தை இருண்டகாலமாகச் சித்தரித்தனர். முஸ்லிம் மன்னர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களென்றும் காட்டி, அவர்களது கொடிய ஆதிக்கத்திலிருந்து இந்துக்களை மீட்கவந்த ரட்சகர்களாகவும் கருணா மூர்த்திகளாகவும் தங்களைச் சித்தரித்துத் தங்கள் ஆதிக்கத்தை நியாயப் படுத்தினர். திட்டமிட்டு, நாசூக்காக வரலாற்றில் விஷத்தைக் கலந்தனர்.
இப்படி விஷமத்தில் பிறந்த வரலாறு, நம் நாட்டின் சில தலைவர்களுக்கும் மதவாதப் பிரச்சாரகர்களுக்கும் மிகச்சிறந்த கருவியாகப் பயன்பட்டது. இன்று நம் நாட்டில் தலை விரித்தாடிக்கொண்டிருக்கும் மதத் துவேஷமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் குடித்துள்ள மதக் கலவரங்களும் இத்தகைய வரலாற்றுத் தத்துவம் மக்களிடையே பரப்பப்பட்டதன்விபரீத விளைவுகள்தாம்.
முஸ்லிம் மன்னர்கள் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்பது இன்று அனைத்து மக்களாலும் நம்பப்படும் ‘உண்மை’யாகிவிட்டது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அதைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வேண்டும். பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் கட்டியும் உள்ளனர். மகதராஷ்டிரத்தின் மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. இப்பகுதியில் மிகப் பெரிய மதவெறியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார். அவர் இப்பகுதியில் கட்டிய மசூதிகளைவிடக் கோயில்கள் தான் அதிகம்.
ஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் மதவெறியல்ல. அக்கோயிலில்பெருமளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான் காரணம் என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார். ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் எழுதி அளித்தார். புனே மாவட்டத்தில் சின்சுவாட் என்னும் இடத்தில் உள்ள கணபதி கோயிலை 16ஆம் நூற்றாண்டில் கட்டியவர் பிஜாப்பூர் சுல்தான் இப்ராஹிம் ஆதில்ஷா. தௌலதாபாத்தில் உள்ள சரஸ்வதி பௌதி என்னும் புண்ணியக் கிணற்றை கி.பி.1335ஆம் ஆண்டு கட்டுவித்தவர் முகமது பின் துக்ளக். இதில் விடுவதற்கான தண்ணீரை துக்ளக் பிரயாகையிலுள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து வருவித்தார். டெல்லி சுல்தானிய அரசை நிறுவிய முகமது கோரி வெளியிட்ட ஒரு நாணயத்தில் லக்ஷ்மி உருவமும் மற்றொன்றில் சிவனின் ரிஷப வாகனமும் பொறிக்கப்பட்டிருந்தன.
முஸ்லிம் மன்னர்கள் பலர் இந்துப் பெண்களை – குறிப்பாக ராஜபுதனத்து அரச குடும்பத்துப் பெண்களை – மணந்து கொண்டனர் என்பது நமது பள்ளிகளில் கூடக் கற்பிக்கும் வரலாற்றுப் பாடம். ஆகவே முஸ்லிம் மன்னர் பரம்பரையிலேயே இந்து ரத்தம் கலந்திருந்தது.
இதே போன்று இந்து மன்னர்களும் மசூதிகளை ஆதரித்தனர்.
சிவாஜியின் பேரன் சத்ரபதி ஷாஹூ குல்தாபாத்தில் இருக்கும் ஔரங்கசீபின் சமாதிக்குப் பெருமளவு தானம் அளித்தார் என்பதைப் பத்திரங்களின் ஆதாரத்துடன் ரானடே கூட்டிக்காட்டுகிறார்.
நாம் நினைவில்கொள்ள வேண்டியது இன்னொன்று.
கோயில்கள் இடிக்கப்பட்டதன் காரணம் மதவெறியல்ல. ஆக்கிரமிக்க முற்படும் மன்னர்கள், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் எதிரியை அவமானப்படுத்தவும் எதிரிநாட்டின் முக்கிய ஸ்தலங்களை நாசப்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மன்னர்களின் ஆளுமையை நிலைநாட்டும் முக்கியச் சின்னங்களாகக் கோயில்கள் திகழ்ந்தன. ஆகவே தான் தங்கள் பெருமையைப் பறைசாற்ற அரசர்கள் கோயில்கள் கட்டினர். இதன் காரணமாகவே கோயில்கள் அந்நியத் தாக்குதல்களுக்கு முக்கிய இலக்குகளாயின. கோயில்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதும் இதன் நோக்கம். இந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்த இந்து மன்னர்களும் உண்டு! எதிரி நாட்டு மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு!
நம் நாட்டில் வரலாற்றுக்கான இலக்கணத்துடன் எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல் என்று கருதப்படுவது கல்ஹனா எழுதிய ராஜதரங்கிணி என்னும் காஷ்மீரத்தின் வரலாறு.அதில் ஹர்ஷர் என்ற இந்து மன்னர் காஷ்மீரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இருந்த எல்லாத் தெய்வச்சிலைகளையும் நொறுக்கி நாசம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மன்னரின் அமைச்சரவையில் சிலைகளை உடைப்பதற்காகவும் அவற்றை உருக்கி, விலையுயர்ந்த ஊலோகத்தைச் சேகரிப்பதற்காகவும் தனிப்பொறுப்பு வகித்த இந்து அமைச்சர் ‘தேவோத்பாதநாயகா’ (தெய்வத்திற்குத் துன்பம் விளைவிக்கும் அதிகாரி) எனப் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார் என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கோசாம்பி குறிப்பிடுகிறார்.
மற்றொரு வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா இன்னொரு உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார். கஜினி முகமது, கோரி முகமது, தைமூர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து, அக்கிரமங்கள் புரிந்ததைப் பற்றிச் சொல்லும்போது, இதே மன்னர்கள் மத்திய ஆசியாவிலிருந்த முஸ்லிம் ராஜ்யங்களின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கிருந்த மசூதிகளை நாசம் செய்ததையும் அந்நாடுகளின் முஸ்லிம் மக்களுக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைவித்ததையும் மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார். இதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும். அரசியல் வரலாற்றின் இத்தகைய வேட்டைகளுக்கும் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் மதச் சாயம் பூச முயல்வது மக்களைப் பிரித்தாளும் சில்லறைத்தனமாகும்.
நமது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வரலாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாடமாகிவிட்டது. ஆனால் வரலாறு இன்றி எந்தச் சமுதாயமும் வாழ இயலாது. கல்வி நிறுவனங்கள் விஞ்ஞானரீதியான வரலாற்றைப் புறக்கணித்ததன் விளைவு மதவாதிகள் இன்று அதை ‘ஹைஜாக்’ செய்யும் நிலை உருவாகிவிட்டது.
- முனைவர் வசந்திதேவி
சக்தி பிறக்கும் கல்வி என்ற நூலில் இருந்து-பக்-111
-நன்றி சமூகநீதி முரசு பிப்ரவரி 2011

இந்த பதிவு தேவையில்லை என்றால் நீக்கிவிடவும். அருமையான தொடரை தந்த தம்பி பிஜிராமனுக்கு பாராட்டுகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Empty Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by பிஜிராமன் Tue Feb 28, 2012 8:21 am

இந்த பதிவு தேவையில்லை என்றால் நீக்கிவிடவும். அருமையான தொடரை தந்த தம்பி பிஜிராமனுக்கு பாராட்டுகள்


உங்களின் பதிவு முக்கியமான பதிவு சார்.......

ஒவ்வொருவரும் தங்களின் சுயத்திற்காக வரலாற்றை மடக்கி நீட்டி கூறியிருக்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மை என்பது இந்த பதிவில் இருந்து தெரிகிறது. மனைவிக்கு கணவன் நல்ல பாதுகாப்பு அளிக்கவில்லை என்றால், மற்றவர்களால் மனைவி சிதைக்கப் பட்டுவிடுவாள், அது போல் தான் வரலாறும் பாதுகாப்பில்லாமல் சிதைக்கப்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மிக்க நன்றிகள் சார்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Empty Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by சதாசிவம் Tue Feb 28, 2012 9:48 am

அழகான பதிவு தொடங்கி அருமையான தகவல்கள் கொடுத்த ராமனுக்கும் கேள்வி கேட்டு திரியை நல்ல திசையில் செலுத்திய உறவுகளுக்கும் நன்றி.
மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் ஐயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


சதாசிவம்
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Empty Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by krishnaamma Wed Feb 29, 2012 11:31 am

ரொம்ப நன்றி ராமன் நன்றி
நல்ல விளக்கமாக எழுதி இருக்கீங்க புன்னகை வாழ்த்துகள் சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Empty Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by krishnaamma Wed Feb 29, 2012 11:39 am

//2. இவருடைய மூத்த மகன் குஷ்ரோ, இவருக்கு எதிராய் கலகம் செய்ய, அதனை ஒடுக்கினார், அதேசமயம் குஸ்ரோவிற்கு (Kushrau) உதவி புரிந்த ஐந்தாம் சீக் குரு குரு அர்ஜூன் டேவ் (Guru Arjun Dev) ஐ ஐந்து நாள் சித்திரவதைக்கு பின் விடுவித்தார். (எப்படி எல்லாம் சித்தரவதை செய்தார் என்பதை படித்தாலே பயம் பற்றிக்கொள்ளும்)//

காதல் கை கூடாதாதால், மென்மையான சலீம் இப்படி கொடுமையாளனாக மாறிவிட்டிருந்தாரா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Empty Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by பிஜிராமன் Wed Feb 29, 2012 12:20 pm

காதல் கை கூடாதாதால், மென்மையான சலீம் இப்படி கொடுமையாளனாக மாறிவிட்டிருந்தாரா?

ஜஹாங்கீர் இற்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக தெரியவில்லை அம்மா. ஆனால், இவருக்கும் மெர் உன் நிஷா (இவர் விதவை, இவர் கணவர் ஷெர் ஆப்கானி) விற்கும் திருமணமாகி நூர் ஜஹான் என்று அழைக்கப்பட்டார்.

ஆனால், இந்த திருமண நிகழ்விற்கு முன்பே, குஷ்ரோ வின் ஜஹாங்கீரிற்கு எதிரான கலகமும், அவர் குஷ்ரோவை குருடாக்கியதும், குரு அர்ஜூன் தேவ் ஐ சித்தரவதை செய்ததும், நிகழ்ந்தேறிவிட்டது.

ஆக அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, அவர் இயல்பிலேயே கொடுமைக்காரராய் இருந்திருக்கலாம்.

நன்றிகள் அம்மா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Empty Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by உதயசுதா Wed Feb 29, 2012 12:31 pm

இன்னொரு விஷயமும் நான் படிச்சு இருக்கேன் ராமன்.ஷாஜகான்
மனைவி மும்தாஜ் இன்னொருவர் மனைவி என்பதும்,அவரை அடைவதற்காக மும்தாஜ் கணவரை ஷாஜகான் கொன்றதாகவும்.
பல லட்சம் செலவு செய்து இறந்து போன ஒருவருக்காக தாஜ்மாஹால் கட்டுவது இஸ்லாமிய மரபுக்கு எதிரானது என்பதால் தான் ஒவ்ரங்கசீப்
தான் தந்தைய வெறுத்து அவரை எதிர்த்ததாகவும் படித்து இருக்கேன்.


வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Uவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Dவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Aவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Yவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Aவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Sவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Uவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Dவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Hவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Empty Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by பிஜிராமன் Wed Feb 29, 2012 12:42 pm

இன்னொரு விஷயமும் நான் படிச்சு இருக்கேன் ராமன்.ஷாஜகான்
மனைவி மும்தாஜ் இன்னொருவர் மனைவி என்பதும்,அவரை அடைவதற்காக மும்தாஜ் கணவரை ஷாஜகான் கொன்றதாகவும்.
பல லட்சம் செலவு செய்து இறந்து போன ஒருவருக்காக தாஜ்மாஹால் கட்டுவது இஸ்லாமிய மரபுக்கு எதிரானது என்பதால் தான் ஒவ்ரங்கசீப்
தான் தந்தைய வெறுத்து அவரை எதிர்த்ததாகவும் படித்து இருக்கேன்.

ஆம், அக்கா நானும் அவற்றை படித்திருக்கிறேன்.....மும்தாஜ் இன்னொருவர் மனைவி என்றும், ஆனால், இதற்காக தான் சிறை வைத்தார் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை, காரணம், அவரின் முக்கிய குறிக்கோள் ஆட்சியை பிடிப்பதே, அதற்காக தான், தான் சகோதரர்களை வெற்றி கொண்டு ஆக்ரா வந்து தந்தையை சிறை வைத்திருக்கலாம். நீங்கள் கூறிய படியும் இருக்கலாம்.

இன்னொன்று நான் படித்தது என்னவென்றால், ஔரங்காஷிப் தந்ததையை சிறையில் அடைத்தாலும், அவர் எழுப்பிய தாஜ் மகாலை அவர் காணும்படியான ஒரு இடத்தில் தான் சிறை வைத்தார் என்றும் கூறப் படுகிறது.

அதேபோல், அப்படியே அவர் எழுப்பிய தாஜ் மாகாளிற்காக தான் சிறை வைத்தார் என்றால், முஸ்லிம் மரபிற்கு எதிராக எழுந்துள்ள, தாஜ் மகாலை அவர் இடித்திருக்கலாமே, ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. இவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

மிக்க நன்றிகள் அக்கா....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Empty Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by யினியவன் Wed Feb 29, 2012 12:45 pm

ஒரே கிசு கிசுவா இருக்கு இங்க.

வாழ்த்துகள் ராமன் - வெற்றிகரமாக தங்கள் வரலாற்றுப் பதிவை பதிந்தமைக்கு.

ஆம், மன்னர்கள் என்றாலே, அந்தப்புரம் இந்தப்புரம் என்று பல கிசுகிசுக்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், போட்டி தேர்விற்கு இவைகள் உபயோகம் ஆகாது என்பதால், நான் அவற்றை சேர்க்கவில்லை. போட்டித் தேர்விற்கு என்ன தேவையோ அதையும், மற்ற முக்கியமான நிகழ்வுகளை மட்டுமே தந்துள்ளேன்.

நன்றிகள் நண்பா. புன்னகை மகிழ்ச்சி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Empty Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by பிரசன்னா Wed Feb 29, 2012 12:52 pm

நமக்கும் வரலாறுக்கும் ரொம்ப தூரம்... அய்யோ, நான் இல்லை

நேரமும் பொறுமையும் இருக்கும் போது படிதுகொள்கிறேன்...

நன்றி பிஜிராமன்... நன்றி

மிக்க நன்றிகள் பிரசன்னா......... மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 5 Empty Re: வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum