ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம்

2 posters

Go down

நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Empty நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம்

Post by இரா.பகவதி Fri Feb 17, 2012 6:29 pm




நித்திரவிளை : கேரள கடல் பகுதியில் மீனவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து கப்பல் கேப்டனிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் போது, கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டதாக கேப்டன் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியை சேர்ந்தவர் பிரடி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், கேரளாவில் மீன் பிடிதொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன் கேரள மாநிலம் சக்திக்குளங்கரை என்ற இடத்தில் இருந்து, இந்த விசைப்படகில் பூத்துறையை சேர்ந்த பிரடி, மார்ட்டின், ஆன்டனி, இரையுமன்துறையை சேர்ந்த அஜீஸ்பிங்கி, கிளைமான்ஸ், பிரான்சிஸ், அலெக்சாண்டர், கில்சிறியான், முத்தப்பன், ஜான்சன், கில்லாரி மற்றும் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த செலஸ்டின் என 12 பேர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

நேற்று முன்தினம் மாலை கொல்லம் அடுத்த நீண்டகரை பகுதியில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியே இத்தாலி நாட்டை சேர்ந்த என்ரிகா லக்சி என்ற சரக்கு கப்பல் வந்துள்ளது. கப்பலில் இருந்தவர்கள் திடீரென விசைப்படகில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் படகை ஓட்டி சென்ற கொல்லத்தை சேர்ந்த செலஸ்டின் (45), அருகில் இருந்த இரையுமன்துறையை சேர்ந்த அஜீஸ்பிங்கி ஆகியோர் பலியாகினர். குமரி மாவட்டத்தை சேர்ந்த செலஸ்டின் நீண்டகாலமாக கொல்லத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தவர். இதன்பின், இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்திய இத்தாலி கப்பலை மடக்கினர். அந்த கப்பல் கொச்சி கொண்டு செல்லப்பட்டது. அங்கு கப்பல் கேப்டனிடம் எர்ணாகுளம் போலீசாரும், கடலோர காவல் படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கப்பல் கேப்டனிடம் நடத்திய விசாரணையில், ‘‘எங்கள் கப்பலுக்கு குறுக்கே திடீரென வந்த விசைப்படகை நாங்கள் கொள்ளை கும்பல் என நினைத்து துப்பாக்கியால் சுட்டோம்' என்று கூறியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலியான அஜீஸ்பிங்கியின் பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். 2 தங்கைகள் மட்டுமே உள்ளனர். அஜீஸ்பிங்கியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை உடல் இரையுமன்துறைக்கு கொண்டு வரப்பட்டது.

விமானம் மூலம் தேடுதல்

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, இத்தாலி கப்பல் ஊழியர்களே, ‘கடல் கொள்ளையர்களுக்கு எதிராக நாங்கள் துப்பாக்கிசூடு நடத்தினோம்’ என்று கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், மீன்பிடி தொழிலாளர்கள் அளித்த தகவலை தொடர்ந்து கடலோர காவல் படையினர் விமானம் மூலம் நடத்திய தேடுதலை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு நிவாரணம்

பலியான 2 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி நேற்று அறிவித்தார்.


தினகரன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Empty Re: நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம்

Post by dhilipdsp Sat Feb 18, 2012 9:15 am

அழுகை
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Empty Re: நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம்

Post by இரா.பகவதி Sat Feb 18, 2012 11:30 am

dhilipdsp wrote: அழுகை
என்ன செய்வது அண்ணா எங்கு போனாலும் அடிக்கிறார்கள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Empty Re: நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum