புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_lcapமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_voting_barமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_lcapமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_voting_barமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_rcap 
1 Post - 25%
viyasan
மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_lcapமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_voting_barமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_lcapமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_voting_barமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_lcapமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_voting_barமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_lcapமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_voting_barமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_lcapமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_voting_barமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_lcapமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_voting_barமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_lcapமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_voting_barமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_lcapமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_voting_barமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_lcapமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_voting_barமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_lcapமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_voting_barமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_lcapமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_voting_barமாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 17, 2012 9:02 am

சென்னையில் கடத்தப்பட்ட மாணவன் மீட்கப்பட்டது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. கடத்தப்பட்டது முதல், மீட்கப்பட்டதுவரை போலீசாருக்கும், கடத்தல்காரர்களுக்கும் இடையே நடந்த போராட்டம் ஒரு திகில் காட்சிபோல அரங்கேறி உள்ளது.

கடத்தல்

சென்னை கொரட்டூர் பாடி, ஜெகதாம்பிகை நகர், சேக்கிழார் தெருவைச்சேர்ந்தவர் ரஜினிகாந்த்(வயது 45). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி பெயர் உஷாநந்தினி (40). இவர்களுக்கு லோகேஷ்வரன் (12), ஜெயசூர்யா (7) என்ற 2 மகன்கள் உண்டு. திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் லோகேஷ்வரன் 7-ம் வகுப்பும், ஜெயசூர்யா 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் காலையில் பள்ளிக்கு புறப்பட்டபோது வீடு அருகே, லோகேஷ்வரனை காரில் வந்த மர்ம கும்பல் திடீரென்று கடத்தி சென்றுவிட்டனர்.

இந்தசம்பவம் சென்னை நகரை பெரும்புயலை கிளப்பிவிட்டது. இருந்தாலும் போலீசார் 15 மணி நேரம் பெரும் போராட்டம் நடத்தி கடத்தப்பட்ட மாணவன் லோகஷ்வரனை பத்திரமாக மீட்டனர். காலை 7.30 மணிக்கு மாணவன் கடத்தப்பட்டான். இரவு 10.30 மணிக்கு மாணவன் மீட்கப்பட்டு விட்டான்.

மாணவன் கடத்தி மீட்கப்பட்ட சம்பவம் உண்மையிலேயே பயங்கர திகில் காட்சிபோல நடந்துள்ளது.

அது பற்றிய முழு விவரம் வருமாறு:-

கடத்தல் பின்னணி

கடத்தப்பட்ட மாணவன் லோகேஷ்வரனின் தந்தை ரஜினிகாந்த், அவரது அண்ணன் நிரஞ்சன்குமார் ஆகியோர் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். ரஜினிகாந்தைப்போல, நிரஞ்சன்குமாருக்கும் 2 மகன்கள் உள்ளனர். இந்த கடத்தல் பின்னணிக்கு கதாநாயகனாக இருப்பவர் நிரஞ்சன்குமார்தான்.

நிரஞ்சன் குமார் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பழைய கார்களை வாங்கி, விற்கும் தொழிலும், செய்து வந்தார். இவருக்கு தொழில் ரீதியாக சென்னையை சேர்ந்த கார்த்திக், கும்பகோணத்தை சேர்ந்த பாபு ஆகியோர் நண்பர்கள் ஆவார்கள்.

ரூ.3 லட்சம் கடன்

பழைய கார் ஒன்றை விற்பதற்காக பாபுவும், கார்த்திக்கும், நிரஞ்சன்குமாரிடம் கொடுத்தனர். நிரஞ்சன் குமார் அந்த காரை விற்று அதன் மூலம் வந்த பணம் ரூ.3 லட்சத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இந்த பணத்தை திருப்பி கேட்டு கார்த்திக்கும், பாபுவும், நிரஞ்சன்குமாரை வற்புறுத்தினார்கள். அதில் ரூ.90ஆயிரத்தை நிரஞ்சன்குமார் திருப்பி கொடுத்தார். மீதி ரூ.2.10 லட்சத்தை கொடுக்காமல் நிரஞ்சன்குமார் தலைமறைவாகிவிட்டார்.

இதனால் பணத்தை வசூலிக்க கார்த்திக்கும், பாபுவும் திட்டம் போட்டனர். நிரஞ்சன்குமாரை பகலில் வீட்டில் போய் கேட்டால், அவரை பிடிக்க முடியவில்லை. இதனால் அதிகாலை 4.30 மணிக்கு வீட்டுக்குபோய் அவரை பிடித்து செல்வது. இல்லையென்றால் அவரது மகனை கடத்திச்சென்று மிரட்டி பணத்தை பறிப்பது என்று திட்டம் போட்டனர்.

கடத்தினார்கள்

அவர்களது திட்டப்படி பாபு, கார்த்திக் மற்றும் அவர்களது கூலிப்படை ஆட்களான பாலா என்ற பாலசுப்பிரமணியம், பீட்டர் ஆகியோரையும் தங்களுடன் அழைத்து வந்தனர். பாபுவின் இளம்பச்சைநிற ஸ்கார்பியோ காரில் சென்று அதிகாலை 4.30 மணிக்கு நிரஞ்சன்குமாரின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார்கள். நிரஞ்சன்குமாரின் தாயார் ராணி கதவை திறந்தார். நிரஞ்சன்குமார் இரவு வீட்டுக்கு வரவில்லை என்று ராணி கூறினார்.

இதனால் அடுத்தகட்டமாக நிரஞ்சன்குமாரின் மகனை பள்ளிக்கு செல்லும்போது கடத்த திட்டம் போட்டு, அங்கேயே காத்திருந்தனர்.

காலை 7.30 மணி

காலை 7.30 மணி அளவில் மாணவன் லோகேஷ்வரனும், அவனது தம்பி ஜெயசூர்யாவும் பள்ளிக்கூடம் போக முதலில் வீட்டைவிட்டு வெளியே வந்தனர். ராணிதான் அவர்களை அழைத்து வந்து வெளியே தெருவில் விட்டார்.

வேனுக்காக தெருவில் நிற்கும்போது, காத்திருந்த பாபுவின் கும்பல் தங்களது காரில் லோகேஷ்வரனை கடத்திச்சென்று விட்டனர்.

அவனது தம்பி ஜெயசூர்யா கண் முன்னால் இந்த சம்பவம் நடந்தது. அந்த தெருவில் வசிக்கும் பெண் ஒருவரும் இதை நேரில் பார்த்தார். ஜெயசூர்யாவும், அந்த பெண்ணும் கூச்சல் போட்டார்கள். உடனடியாக ராணி வெளியே ஓடி வந்தார். ரஜினிகாந்தும், அவரது மனைவி உஷாநந்தினியும் பதறியபடி ஓடிவந்தனர். இதற்குள் கார் லோகேஷ்வரனை கடத்திக்கொண்டு பறந்துவிட்டது.

காலை 8 மணி

இதுபற்றி உடனடியாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் பறந்தது. கமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில், காலை 8 மணி அளவில், கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் மகேஷ்குமார், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர்கள் நந்தகுமார், அய்யப்பன், மனோகரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் போலீஸ் படையுடன் ரஜினிகாந்த் வீட்டில் குவிந்துவிட்டனர்.

போலீஸ் விசாரணை

முதலில் இளம்பச்சை நிற 9898(தவறான நம்பர்) என்ற எண்ணுள்ள ஸ்கார்பியோ கார் சென்றால் அதை மடக்கி பிடிக்கும்படி சென்னை முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள். ஆனால் அதில் பலன் கிடைக்கவில்லை.

காலை 9 மணி:-அடுத்தகட்டமாக நிரஞ்சன்குமாரை தேடி வந்தவர் தன்னை பாபு என்று ராணியிடம் தெரிவித்தார். அந்த பாபு கும்பல்தான் லோகேஷ்வரனை கடத்திச்சென்றிருக்க வேண்டும் என்று கருதி அவரை பற்றிய தகவல்களை சேகரித்தனர்.

இன்னொரு பக்கம் கடத்தல்காரர்களை நேரில் பார்த்த சிறுவன் ஜெயசூர்யா மூலம், கடத்தல்காரர்களின் படத்தை கம்ப்ïட்டர் மூலம் வரைய ஆரம்பித்தனர். கடந்த 2 மாதமாக கடன் தொல்லைக்கு பயந்து வீட்டுக்கே வராத நிரஞ்சன்குமாரை தேடிக்கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். நிரஞ்சன்குமார் மூலம் பாபு யார்? என்பதை கண்டுபிடித்துவிட்டனர்.

காலை 10 மணி:-பாபு பற்றிய தகவல்களை நிரஞ்சன்குமார் போலீசாரிடம் தெரிவித்தார். பாபு சென்னைக்கு வந்தால், வடபழனியில்தான் தங்குவார். இதனால் அவரை வடபழனி பாபு என்றும் அழைப்பார்கள். பாபுவை வடபழனியில் தேடினார்கள். அங்கு அவரை பிடிக்க முடியவில்லை. அடுத்தகட்டமாக பாபுவோடு நிரஞ்சன்குமாரை செல்போன் மூலம் பேச வைத்தனர். ஆனால் பாபு செல்போனை எடுத்து பேசவில்லை.

பாபுவின் செல்போன் நம்பர் மூலம் அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்காணித்தபடி இருந்தனர். அவர் செல்லும் வழி எல்லாம் போலீசாரை உஷார்படுத்தி மடக்கிப்பிடிக்க பார்த்தார்கள். ஆனால் அதிலும் வெற்றி கிடைக்கவில்லை.

காலை 11 மணி முதல் 12 மணிவரை

போலீசார் பாபுவின் கும்பல்தான் மாணவனை கடத்திச்சென்றுள்ளனர் என்பதை ஓரளவு ïகித்து தெரிந்து கொண்டார்கள். அவரது சொந்த ஊர் கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடி ஆகும்.

அந்த ஊரையும் ரகசியமாக கண்காணிக்கும்படி கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டை போலீசார் உஷார்படுத்தினார்கள். இந்த நிலையில் பகல் 12 மணி அளவில் பாபு, நிரஞ்சன்குமாரிடம் செல்போனில் பேசினார்.

மாணவனை நாங்கள்தான் கடத்தி வந்துள்ளோம். போலீசுக்கு போனால் மாணவனின் பிணம்தான் வீட்டுக்கு வரும். தரவேண்டிய ரூ.2.10 லட்சத்தையும் உடனடியாக தயார் செய். அந்த பணத்தை கொடுத்தால், மாணவனை விட்டு விடுகிறேன் என்று தெரிவித்தார்.

பிற்பகல் 1 மணி முதல் 2 மணிவரை

அதன்பிறகு பலமுறை பாபுவும், நிரஞ்சன்குமாரிடம் பேசினார். மாணவன் கடத்தல் பற்றி தொலைக்காட்சியில் செய்தி வந்தது. போலீஸ் தேடுவதாகவும் தெரிந்தது.

இதைத்தொடர்ந்து போலீஸ் எங்களை தேடினால் மாணவன் உயிரோடு கிடைக்கமாட்டான் என்று பாபு எச்சரித்தார்.

போலீஸ் தேடமாட்டார்கள். பணம் தயாராக இருக்கிறது. நீ வரச்சொல்லும் இடத்துக்கு பணத்தோடு வருகிறேன், பையனை எதுவும் செய்துவிடாதே என்று நிரஞ்சன்குமார் கெஞ்சினார். மாலை 6 மணிக்கு பணத்தோடு எங்கு வரவேண்டும் என்பதை சொல்கிறேன் என்று பாபு சொன்னார். அதனால் போலீசார் நேரடியாக தேடுவதை விட்டு விட்டு பாபுவின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தார்கள். பாபுவின் சொந்த ஊரிலும் போலீசார் கண்காணிப்பதை நிறுத்தினார்கள்.

புதுச்சேரியில் இருந்து...

அடுத்து என்ன நடக்கப்போகிறதோ? என்று பெரும் பதற்றமாக போலீசார் காணப்பட்டார்கள். பாபு அவனது சொந்த ஊருக்கு சென்று அங்குள்ள பண்ணை வீட்டில் சிறிது நேரம் மாணவனோடு இருந்தார். அதன்பிறகு அங்கிருந்தும் சென்றுவிட்டார்.

மாலை 6 மணிக்கு போன் செய்த பாபு புதுச்சேரியில் இருந்து சென்னை வரும் அரசு பஸ் ஒன்றில் மாணவனை ஏற்றி அனுப்பி இருக்கிறோம். கோயம்பேடு பஸ் நிலையத்தில் எனது ஆட்கள் வருவார்கள். அவர்களிடம் பணத்தை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

போலீசார் புதுச்சேரியிலிருந்து சென்னை வரும் பஸ்கள் அனைத்தையும் வழி நெடுக ஆங்காங்கே சோதனை போட்டபடி இருந்தனர். இறுதியில் இரவு 10.30 மணிக்கு சென்னை நீலாங்கரை அருகே அக்கரை செக்போஸ்டில் மாணவன் வந்த பஸ்சை போலீசார் கண்டுபிடித்தனர்.

மாணவனும் பத்திரமாக மீட்கப்பட்டான். இத்தோடு கடத்தல் நாடகத்தின் 15 மணி நேர திகில் காட்சி முடிவுக்கு வந்தது.

3 பேர் கைது

இந்த வழக்கில் கூலிப்படையினர் பாலா என்ற பாலசுப்பிரமணியம், பீட்டர் மற்றும் பாபுவின் சகோதரர் அந்துமணி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாபு மற்றும் அவரது இன்னொரு சகோதரர் ராமசாமி, கார்த்திக் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.



மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 17, 2012 9:02 am

மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! First



மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 17, 2012 9:02 am

மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! Ms06



மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 17, 2012 9:03 am

மாணவர்களை கடத்தினால் கடும் நடவடிக்கை பாயும், கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் எச்சரிக்கை


மாணவர்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக்கண்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

பேட்டி

மாணவனை நல்லபடியாக மீட்டது பற்றி கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக்கண்ணன் நேற்று பகல் 11.30 மணி அளவில் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது மாணவன் லோகேஷ்வரனும், அவனது தந்தை ரஜினிகாந்தும் உடன் இருந்தனர். பேட்டியில் அவர் கூறியதாவது:-

கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக இந்த கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 12 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினோம். நிரஞ்சன்குமாரை வைத்து கடத்தல்காரர்களிடம் பேச வைத்து, நல்லபடியாக மீட்டுவிட்டோம். புதுச்சேரியில் பஸ்சில் மாணவனை ஏற்றி அனுப்புவதாக தகவல் வந்தவுடன், உடனடியாக ஏற்கனவே அங்கு வேறு வேலையாக சென்று இருந்த எங்கள் போலீஸ் படையை அங்கிருந்து சென்னை வரும் பஸ்களை எல்லாம் கண்காணிக்க உத்தரவிட்டோம்.

15 மணி நேரம் போராட்டம்

கிட்டத்தட்ட 15 மணி நேரம் கடும் போராட்டம் நடத்திதான் மாணவனை மீட்டோம். இதற்காக பாடுபட்ட தனிப்படை போலீஸ் படையில் இடம் பெற்றுள்ள இணை கமிஷனர் சங்கர் தலைமையிலான அனைவரையும் பாராட்டுகிறேன்.

தற்போது பாலா என்ற பாலசுப்பிரமணியம், பீட்டர் என்று 2 கூலிப்படையினரை கைது செய்து இருக்கிறோம். மேலும் பாபுவின் சகோதரர் அந்துமணி என்பவரையும் பிடித்து இருக்கிறோம். மற்ற 3 பேரை தேடிவருகிறோம்.

எச்சரிக்கை

இதுபோல் மாணவர்களை கடத்துபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தந்தை கண்ணீர்

மாணவனின் தந்தை ரஜினிகாந்த், நிருபர்களிடம் பேசினார். அப்போது அவருக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி, மற்றொருபக்கம் மகிழ்ச்சி. இதனால் அவர் கண்களில் கண்ணீர் மல்க பேச முடியாமல் தவித்தார். அவர் கூறுகையில், எனது பிள்ளையை நல்லபடியாக மீட்டு கொடுத்ததற்கு, முதல்வர் அம்மா அவர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த அனுபவம் எனக்கு மனதில் ஒருவித பயத்தை கொடுத்துள்ளது. போலீஸ் அதிகாரிகள் கடைசி வரை என்னுடன் இருந்து நல்லபடியாக மீட்டுகொடுத்தார்கள் என்று தெரிவித்தார்.

மாணவன் லோகேஷ்வரனை பேச சொல்லுமாறு நிருபர்கள் கேட்டனர். ஆனால் அவனை பேச அனுமதிக்க அவனது தந்தையும், போலீசாரும் மறுத்துவிட்டனர். அவன் இறுக்கமாகவே காணப்பட்டான்.




மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 17, 2012 9:07 am

`சத்தம் போட்டால் கொன்று விடுவோம்' என்று மிரட்டினார்கள், பயந்தபடியே காரில் சென்றேன் - மாணவன் லோகேஷ்வரன் பரபரப்பு தகவல்


கடத்தல்காரர்களோடு காரில் பயணித்த திகில் அனுபவம் பற்றி மாணவன் லோகேஷ்வரன் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளான். இதுதொடர்பாக மாணவன் போலீஸ் விசாரணையில் கூறியதாவது:-

காரில் என்னை கடத்தியவுடன் அவர்கள் முதலில் சொன்னது, உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம், சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள். நிரஞ்சன்குமார் உனது அப்பா தானே? என்று கேட்டார்கள். அவர் எனது பெரியப்பா என்றேன். அவர் தரவேண்டிய பணத்துக்காகத்தான் உன்னை கடத்தி செல்கிறோம் என்றார்கள்.

பின்னர் என்னை கார் சீட்டில் படுத்து தூங்க சொன்னார்கள். அவர்கள் என்னை ரொம்பவும் தொல்லை கொடுக்கவில்லை. நானும் கார் சீட்டில் படுத்து தூங்கி விட்டேன்.

சாப்பாடு வாங்கி கொடுத்தார்கள்

வழியில் ஒரு இடத்தில் காரை நிறுத்தினார்கள். அங்குள்ள ஓட்டல் ஒன்றில் மதிய சாப்பாடு வாங்கி கொடுத்தனர். அந்த ஊர் திருச்சி என்று அவர்களே சொன்னார்கள். அங்கு வைத்து என் முன்னால்தான், எனது பெரியப்பாவிடம் செல்போனில் பெசினார்கள். உன் பெரியப்பா எவ்வளவு சீக்கிரம் பணத்தை கொடுக்கிறாரோ? அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு விடுவோம் என்றார்கள்.

அதன் பிறகு காரில் ரொம்ப நேரம் சென்றோம். நீண்ட பயணத்துக்கு பிறகு ஒரு கிராமத்தில் தென்னந்தோப்பு நடுவே உள்ள ஒரு வீட்டில் (பாபுவின் சொந்த ஊரில் உள்ள பண்ணை வீடு) சிறிது நேரம் தங்க வைத்தனர். எனக்கு அங்கு இளநீர் வெட்டி கொடுத்தார்கள். அங்கு வைத்தும் எனது பெரியப்பாவிடம் பேசினார்கள்.

பஸ்சில்...

பின்னர் என்னை மீண்டும் காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். மாலை 6 மணி அளவில் புதுச்சேரி பஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு நின்று கொண்டிருந்த சென்னை பஸ்சில் என்னை ஏற்றி அனுப்பி வைத்தனர்.

எனக்கு பின்னால் இன்னொரு சீட்டில் 2 பேர் உட்கார்ந்து என்னை கண்காணித்தபடி வந்தனர். அவர்களது பெயரை பாலு, பீட்டர் என்று சொன்னார்கள். பணத்தை கொடுக்காவிட்டால் மீண்டும் என்னை கடத்தி செல்லும்படி அவர்களுக்கு உத்தரவு போட்டனர்.

வழியில் போலீஸ் மடக்கினால், அவர்களை தப்பி சென்று விடும்படியும் சொன்னார்கள். எனக்கு அவர்கள் தைரியம் சொன்னார்கள். இருந்தாலும் பயந்தபடியே காரில் அவர்களோடு சென்றேன். மேலும் பெரியப்பா செல்போனில் அவர்களிடம் பேசியபடியே இருந்ததால், எனக்கு ஆறுதலாக இருந்தது. போலீசார் என்னை மீட்டபோது, என்னோடு பஸ்சில் வந்த 2 பேரையும் பிடித்துவிட்டனர். எனது பெற்றோரை பார்த்த பிறகுதான் எனக்கு சந்தோஷமாக இருந்தது.

இவ்வாறு மாணவன் லோகேஷ்வரன் போலீசாரிடம் தெரிவித்தான்.

தினதந்தி



மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக