Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ருசி (குறுநாவல்)
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 7 of 12
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
பெண்ருசி (குறுநாவல்)
First topic message reminder :
இரும்புக்கட்டிலின் படுக்கை விரிப்பில் தூங்கிக்கிடந்த மூர்த்தி அவசரமாக விழித்துக்கொண்டான். அவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கல்லூரி விடுதியில் யாரும் இல்லை. எல்லாரும் படிப்பு விடுமுறைக்காக அவரவர் ஊருக்குப் போய்விட, மூர்த்தியும் இன்னும் கொஞ்சப்பேரும் விடுதியிலேயே தங்கிவிட்டார்கள்.
அவர்களின் கிராமத்து வீட்டில் மின்சாரம் கிடையாது என்பதாலும், அவ்வளவாக அங்கு படிக்க வசதியில்லாததாலும்(வயல்காட்டு வேலைகள், கொசுக்கடி, நண்பர்கள் தொல்லை) அவன் இங்கேயே தங்கிப்படிப்பது என்று முடிவெடுத்திருந்தான்.
அவன் நெகிழ்ந்துகிடந்த கைலியை அவிழ்த்து மீண்டும் சரியாகக் கட்டிக்கொண்டு, வராண்டாவுக்கு வந்தான். விடுதிக்குக் குறுக்காக கருமையாகக் கிடக்கும் தார்ச்சாலையில், மத்தியான வெயில் பாதரசம் போல் உருகி வழிந்தோடிற்று. வராண்டாவைச் சுற்றி அடர்ந்திருந்த புங்கைமரக் கிளைகளில் சில காகங்கள் தியானம்போல் அமைதியாய் துயில்கொண்டிருந்தன. அதிலொன்று, அலகால் தன் றெக்கையை மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டிருந்தது. அங்கிருந்த நுனாமரப் பூக்களுக்கிடையில் தன் சின்னஞ்சிறு வாலை மேலும் கீழுமாய் உயிர்ப்புடன் ஆட்டியபடி, இங்குமங்கும் தாவிக்கொண்டிருந்தது தேன்சிட்டொன்று.
மூர்த்திக்குப் பசியெடுத்தது. அறைக்குத் திரும்பி அலமாரியில் இருந்த அவனது கனமான வெண்ணிற ஹெச்.எம்.டி. கடிகாரத்தை எடுத்து மணிபார்த்தான். ரெண்டாகப் பத்துநிமிடம் இருந்தது.
கல்லூரி மெஸ் மூடிவிட்டபடியால், அங்கிருந்து அரைக்கிலோமீட்டர் தள்ளியிருந்த தனியார் மெஸ்ஸ¤க்குப் போய்த்தான் சாப்பிட்டுவர வேண்டும்... அதுவரை நடக்கவேண்டும் என்பதை நினைத்தாலே மிகவும் அலுப்பாகவும் அசதியாகவும் இருந்தது.
வராண்டாவில் நடந்து சதுரமாய் இருந்த விடுதியிம் ஒரு ஓரத்தில் இருந்த பொதுக்குளியலறைக்குப் போய் முகம்கழுவி வந்து, சிவப்புநிறக் காசித்துண்டை அறையோரமாய் கட்டியிருந்த கம்பிக்கொடியில் இருந்து உருவியெடுத்து, முகத்தைதுடைத்தபடி , கட்டிலில் அமர்ந்தான். அவனது அறைத்தோழன் மனோகரின் கட்டில் எதிரே வெறுமையாகக் கிடந்தது. அதைத்தாண்டி மனோகர் சுவரில் ஒட்டிவைத்திருந்த ரவீணா டாண்டனின் முக்கால் சைஸ் வண்ணப்படம் எங்கேயோ பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தது. அவன் அந்தப்படத்தின் இடைப்பாகத்தில் தன் விழிகளைப் படர்த்தினான். அவனுள் ஒரு உற்சாகம் படர ரம்பித்தது. களைப்பு கொஞ்சம் வடிந்துவிட்டதுபோல் ஆயிற்று.
சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். சட்டைப்பையில் ஏதேனும் சில்லறை இருக்குதா என்று தட்டிப்பார்த்துக்கொண்டான்.
கொஞ்சதூரம் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் தலையில் சுள்ளென்று வெயில் அறைந்தது. சாலையில் மருங்கில் வரிசையாய் கருகியதுபோல் கருவேல மரங்களாய் நின்றபடியால், நிழலில் ஒதுங்கி நடக்க முடியவில்லை. இந்தக் காரைக்குடியே இப்படித்தான். சரளைமண் பூமி. வருஷம்பூரா கோடைபோல்தான் இருக்கும்.
அவன் சாப்பிடப்போகும் அய்யர் மெஸ்ஸில் அவனுக்கு அக்கௌண்ட் இருந்ததால், மாதக்கடைசியில் பணம் கட்டினால் போதும்.
அப்பா கிராமத்தில் விவசாயிதான் என்றபோதும் அவனிடம் அடிக்கடி "நல்லா சாப்ட்டு உடம்பைத் தேத்துடா...இப்பிடியா நோஞ்சாங் கணக்கா இருக்குறது!" என்று அடிக்கடி சொல்வார். அதை இப்போது நினைத்து லேசாகச் சிருத்துக்கொண்டான்...என்ன சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதே... என்ன செய்யிறது என்று தனக்குத்தானே முனகிக்கொண்டான்...அவன் நிழலும் அவன் காலடியில் பதுங்கி அவனோடேயே நடந்தது. சற்றுத் தள்ளியிருந்த கொல்லங்காளி கோயில் பேருந்து நிறுத்த நிழற்குடையில் யாரோ ஒரு பெண் உட்கார்ந்திருந்ததுபோல் பட்டது.
உற்சாகம் பீறிட, அவன் நடையில் வேகம் கூடியது. அவன் நிழலும் அவனோடு வேகமாய் நகர, தலை மிகவும் சூடுகண்டது. தலையில் கைவைத்துப்பார்த்தான். கொதித்தது.
அவனுக்கு திடீரென்று அய்யர் மெஸ் புவனேஸ்வரியின் முகம் காட்சியானது. நேற்றிரவு இவன் சாப்பிடும் பெஞ்சுக்கு எதிரில், அவள் வீட்டின் உள்ளிருந்த ஆட்டுக்கல்லில் கையால் மாவரைத்துக்கொண்டே இவனை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். நல்ல கொழுகொழுவென்று மதர்ப்பாக இருந்தாள். தன் மகள் பி.காம்., அஞ்சல் வழியில் படிப்பதாக அய்யர் அடிக்கடி பரிமாறிக்கொண்டே சொல்வார். அவர் இவனிடம் மட்டும்தாம் இவ்வளவு வாஞ்சையாகப் பேசுவதுபோல் பட்டது. மாமியும் அப்படித்தான். இவனுக்கென்று மேலும் ஒரு அப்பளம் எடுத்துவந்து சத்தமில்லாமல் இலையில் வைத்துவிட்டு, "நன்னா சாப்டூங்கோ...அப்பத்தானே ஒடம்பு தேறும்?" என்று கேட்டுவிட்டு மூக்குத்தி மின்ன சிருத்துக்கொண்டே சமயல்கட்டுக்குப் போவாள்.
பஸ் ஸ்டாப் நெருங்கிவிட்டிருந்தது. அதுவரை குனிந்துகொண்டே நடந்தவன், பஸ் ஸ்டாப் நிழற்குடையை நோக்கி ஆவலுடன் முகத்தைத் திருப்பினான். அவன் அங்கு கண்ட காட்சி அவனுக்கு மகா வெட்கத்தைக் கொடுத்துவிட்டது. தூரத்தில் வரும்போது அவன் பெண் என்று நினைத்த அந்த உருவம், இப்போது நல்ல பூப்போட்ட கைலியைக் கட்டி ஆணாக மாறிவிட்டிருந்தது! அட ராமா! அவனுக்கு யாரோ முகத்தில் ஓங்கி அறைந்ததுபோலாகிவிட, முகத்தைத் திருப்பிக்கொண்டு கிட்டத்தட்ட ஓடாத குறையாக மெஸ்ஸை நோக்கி நடையைக்கட்டினான். அவனுக்கு புவனேஸ்வரியின் சிரித்தமுகம் இப்போது காட்சியாக, அவள் இவனைப்பார்த்து கிண்டலும் கேலியாகவும் சிரிப்பாதுபோல் பட்டது...
முகத்தில் தாறுமாறாக வழிந்துகொண்டிருந்த வேர்வையை, குனிந்து கைலியின் முனையால் துடைத்துக்கொண்டு நடந்தான். இன்று புவனேஸ்வரியைப் பார்க்க முடியுமா?...பார்க்க முடியும்...பார்த்தாக வேண்டும்... மூளையில் ஒருவித வெப்பம் படர மெஸ்ஸை நோக்கி வேகநடைபோட்டான் மூர்த்தி.
இரும்புக்கட்டிலின் படுக்கை விரிப்பில் தூங்கிக்கிடந்த மூர்த்தி அவசரமாக விழித்துக்கொண்டான். அவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கல்லூரி விடுதியில் யாரும் இல்லை. எல்லாரும் படிப்பு விடுமுறைக்காக அவரவர் ஊருக்குப் போய்விட, மூர்த்தியும் இன்னும் கொஞ்சப்பேரும் விடுதியிலேயே தங்கிவிட்டார்கள்.
அவர்களின் கிராமத்து வீட்டில் மின்சாரம் கிடையாது என்பதாலும், அவ்வளவாக அங்கு படிக்க வசதியில்லாததாலும்(வயல்காட்டு வேலைகள், கொசுக்கடி, நண்பர்கள் தொல்லை) அவன் இங்கேயே தங்கிப்படிப்பது என்று முடிவெடுத்திருந்தான்.
அவன் நெகிழ்ந்துகிடந்த கைலியை அவிழ்த்து மீண்டும் சரியாகக் கட்டிக்கொண்டு, வராண்டாவுக்கு வந்தான். விடுதிக்குக் குறுக்காக கருமையாகக் கிடக்கும் தார்ச்சாலையில், மத்தியான வெயில் பாதரசம் போல் உருகி வழிந்தோடிற்று. வராண்டாவைச் சுற்றி அடர்ந்திருந்த புங்கைமரக் கிளைகளில் சில காகங்கள் தியானம்போல் அமைதியாய் துயில்கொண்டிருந்தன. அதிலொன்று, அலகால் தன் றெக்கையை மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டிருந்தது. அங்கிருந்த நுனாமரப் பூக்களுக்கிடையில் தன் சின்னஞ்சிறு வாலை மேலும் கீழுமாய் உயிர்ப்புடன் ஆட்டியபடி, இங்குமங்கும் தாவிக்கொண்டிருந்தது தேன்சிட்டொன்று.
மூர்த்திக்குப் பசியெடுத்தது. அறைக்குத் திரும்பி அலமாரியில் இருந்த அவனது கனமான வெண்ணிற ஹெச்.எம்.டி. கடிகாரத்தை எடுத்து மணிபார்த்தான். ரெண்டாகப் பத்துநிமிடம் இருந்தது.
கல்லூரி மெஸ் மூடிவிட்டபடியால், அங்கிருந்து அரைக்கிலோமீட்டர் தள்ளியிருந்த தனியார் மெஸ்ஸ¤க்குப் போய்த்தான் சாப்பிட்டுவர வேண்டும்... அதுவரை நடக்கவேண்டும் என்பதை நினைத்தாலே மிகவும் அலுப்பாகவும் அசதியாகவும் இருந்தது.
வராண்டாவில் நடந்து சதுரமாய் இருந்த விடுதியிம் ஒரு ஓரத்தில் இருந்த பொதுக்குளியலறைக்குப் போய் முகம்கழுவி வந்து, சிவப்புநிறக் காசித்துண்டை அறையோரமாய் கட்டியிருந்த கம்பிக்கொடியில் இருந்து உருவியெடுத்து, முகத்தைதுடைத்தபடி , கட்டிலில் அமர்ந்தான். அவனது அறைத்தோழன் மனோகரின் கட்டில் எதிரே வெறுமையாகக் கிடந்தது. அதைத்தாண்டி மனோகர் சுவரில் ஒட்டிவைத்திருந்த ரவீணா டாண்டனின் முக்கால் சைஸ் வண்ணப்படம் எங்கேயோ பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தது. அவன் அந்தப்படத்தின் இடைப்பாகத்தில் தன் விழிகளைப் படர்த்தினான். அவனுள் ஒரு உற்சாகம் படர ரம்பித்தது. களைப்பு கொஞ்சம் வடிந்துவிட்டதுபோல் ஆயிற்று.
சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். சட்டைப்பையில் ஏதேனும் சில்லறை இருக்குதா என்று தட்டிப்பார்த்துக்கொண்டான்.
கொஞ்சதூரம் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் தலையில் சுள்ளென்று வெயில் அறைந்தது. சாலையில் மருங்கில் வரிசையாய் கருகியதுபோல் கருவேல மரங்களாய் நின்றபடியால், நிழலில் ஒதுங்கி நடக்க முடியவில்லை. இந்தக் காரைக்குடியே இப்படித்தான். சரளைமண் பூமி. வருஷம்பூரா கோடைபோல்தான் இருக்கும்.
அவன் சாப்பிடப்போகும் அய்யர் மெஸ்ஸில் அவனுக்கு அக்கௌண்ட் இருந்ததால், மாதக்கடைசியில் பணம் கட்டினால் போதும்.
அப்பா கிராமத்தில் விவசாயிதான் என்றபோதும் அவனிடம் அடிக்கடி "நல்லா சாப்ட்டு உடம்பைத் தேத்துடா...இப்பிடியா நோஞ்சாங் கணக்கா இருக்குறது!" என்று அடிக்கடி சொல்வார். அதை இப்போது நினைத்து லேசாகச் சிருத்துக்கொண்டான்...என்ன சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதே... என்ன செய்யிறது என்று தனக்குத்தானே முனகிக்கொண்டான்...அவன் நிழலும் அவன் காலடியில் பதுங்கி அவனோடேயே நடந்தது. சற்றுத் தள்ளியிருந்த கொல்லங்காளி கோயில் பேருந்து நிறுத்த நிழற்குடையில் யாரோ ஒரு பெண் உட்கார்ந்திருந்ததுபோல் பட்டது.
உற்சாகம் பீறிட, அவன் நடையில் வேகம் கூடியது. அவன் நிழலும் அவனோடு வேகமாய் நகர, தலை மிகவும் சூடுகண்டது. தலையில் கைவைத்துப்பார்த்தான். கொதித்தது.
அவனுக்கு திடீரென்று அய்யர் மெஸ் புவனேஸ்வரியின் முகம் காட்சியானது. நேற்றிரவு இவன் சாப்பிடும் பெஞ்சுக்கு எதிரில், அவள் வீட்டின் உள்ளிருந்த ஆட்டுக்கல்லில் கையால் மாவரைத்துக்கொண்டே இவனை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். நல்ல கொழுகொழுவென்று மதர்ப்பாக இருந்தாள். தன் மகள் பி.காம்., அஞ்சல் வழியில் படிப்பதாக அய்யர் அடிக்கடி பரிமாறிக்கொண்டே சொல்வார். அவர் இவனிடம் மட்டும்தாம் இவ்வளவு வாஞ்சையாகப் பேசுவதுபோல் பட்டது. மாமியும் அப்படித்தான். இவனுக்கென்று மேலும் ஒரு அப்பளம் எடுத்துவந்து சத்தமில்லாமல் இலையில் வைத்துவிட்டு, "நன்னா சாப்டூங்கோ...அப்பத்தானே ஒடம்பு தேறும்?" என்று கேட்டுவிட்டு மூக்குத்தி மின்ன சிருத்துக்கொண்டே சமயல்கட்டுக்குப் போவாள்.
பஸ் ஸ்டாப் நெருங்கிவிட்டிருந்தது. அதுவரை குனிந்துகொண்டே நடந்தவன், பஸ் ஸ்டாப் நிழற்குடையை நோக்கி ஆவலுடன் முகத்தைத் திருப்பினான். அவன் அங்கு கண்ட காட்சி அவனுக்கு மகா வெட்கத்தைக் கொடுத்துவிட்டது. தூரத்தில் வரும்போது அவன் பெண் என்று நினைத்த அந்த உருவம், இப்போது நல்ல பூப்போட்ட கைலியைக் கட்டி ஆணாக மாறிவிட்டிருந்தது! அட ராமா! அவனுக்கு யாரோ முகத்தில் ஓங்கி அறைந்ததுபோலாகிவிட, முகத்தைத் திருப்பிக்கொண்டு கிட்டத்தட்ட ஓடாத குறையாக மெஸ்ஸை நோக்கி நடையைக்கட்டினான். அவனுக்கு புவனேஸ்வரியின் சிரித்தமுகம் இப்போது காட்சியாக, அவள் இவனைப்பார்த்து கிண்டலும் கேலியாகவும் சிரிப்பாதுபோல் பட்டது...
முகத்தில் தாறுமாறாக வழிந்துகொண்டிருந்த வேர்வையை, குனிந்து கைலியின் முனையால் துடைத்துக்கொண்டு நடந்தான். இன்று புவனேஸ்வரியைப் பார்க்க முடியுமா?...பார்க்க முடியும்...பார்த்தாக வேண்டும்... மூளையில் ஒருவித வெப்பம் படர மெஸ்ஸை நோக்கி வேகநடைபோட்டான் மூர்த்தி.
Guest- Guest
Re: பெண்ருசி (குறுநாவல்)
தேர்வறையைவிட்டு வெளிவந்து மீண்டும் காலையில் தட்ஷிணியிடம் பேசிக்கொண்டிருந்த அதே சிமெண்ட் ஸ்லாப்புக்கு வந்து அவளுக்காகக் காத்திருந்தான்.எப்படியோ ஒரு வழியாய் முடிந்தது தேர்வு! மூர்த்தி பெருமூச்சு விட்டுக்கொண்டான். புங்கை மரத்தின் அடர்த்தியான நிழலின் ஊடே சுட்டெரிக்கும் சூரியக்கதிர் பாய்ந்து புல் முளைத்திருக்கும் மணல்தரையில் நவீன ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தது. தன் கையில் இருந்த கேள்வித்தாளைப் பார்த்தான். அப்பாடா..கேள்விகள் ஒன்றும் அவன் எதிர்பார்த்ததுபோல் கடுமையாக இல்லை! அறுபது,எழுபது மார்க் வாங்கிவிடலாம்..எப்படியோ அறுபதைத் தாண்டிவிட்டால் முதல்வகுப்பில் பாஸ் பண்ணிவிடலாம்..
அவன் பத்து இருபத்தைந்துக்குத்தான் தேர்வறைக்குள் நுழைந்தான்.. எல்லோரும் மூன்று மணிநேரம் எழுதும் தேர்வை இரண்டரைமணி நேரம்தான் எழுதினான்..அந்த கடைசி அரைமணிநேரத்தில் புரட்டிப்பார்த்த பதில்களே அவன் பாஸ் பண்ண வழிவகுத்தன...அப்படியே, புரட்டிப்பார்க்காமல் உள்ளேபோயிருந்தால் என்னாகியிருக்கும்..
இன்று அதிகாலை கேட்ட சேவலின் உற்சாகக் கூவல் மூர்த்தியின் காதுகளில் எதிரொலித்தது. கையில் இருந்த நீலநிற கேள்வித்தாளில் எண்ணற்ற கேள்விகள் அவற்றின் முடிவில் கேள்விக்குறிகளைத் தாங்கியிருந்தன. அவை அவனுள் ஒருவித புதிரான உணர்வைத் தூண்டிவிட்டன.
வாழ்க்கையிலும்தான் இப்படி எத்தனையெத்தனை கேள்விகள், கேள்விக்குறிகள்! அனைத்துக் கேள்விகளுக்கும் நம்மிடம் பதில் இருக்கிறதா! எல்லாக் கேள்விகளுக்கும் எல்லாராலும் பதிலளிக்க இயலுமா!
தேர்வு முடிந்து எல்லா மாணவமாணவிகளும் கும்பல் கும்பலாக வெளியேறிக்கொண்டிருந்தனர். எல்லார் கையிலும் கேள்வித் தாள்கள்! எல்லாருக்கும் வாழ்க்கை தேர்வு நடத்திக்கொண்டுதான் இருக்கிறது..அவரவரும் அவரவர்க்கு முடிந்த பதில்களை வாழ்க்கை எனும் ஏட்டில் எழுத்தித்தான் ஆகணும்போல!
பெண்கள் விடுதியை நோக்கி வெவ்வேறு வண்ணங்களாலான சுடிதார்களில் ஒரு கும்பல் கைகளில் கேள்வித்தாள்களைப் புரட்டியபடி நகர்ந்துகொண்டிருந்தது. அவர்களின் தலைப்பரப்பு வெயில்பட்டு வெண்ணிறமாகக் காட்சியளித்தது..சிலர் அவனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு சட்டென முகத்தைத் திருப்பிக்கொண்டனர். தட்ஷிணியின் தோழிகள் சிலர் அவனைப் பார்த்து தமக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். ஒருவேளை 'எல்லாவற்றையும்' எல்லாரிடமும் சொல்லிவிட்டாளோ தட்ஷிணி? இந்தக் கும்பலில் தட்ஷிணி ஏன் வரவில்லை? வனஜாவையும் காணோமே!
மிகவும் களைப்பாக இருந்தது மூர்த்திக்கு.சாப்பிட இனி மாமி மெஸ்சுக்குத்தான் போகணும்..இந்த வெயிலில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நடக்கணும். ஒரே அலுப்பக இருந்தது.
அப்படியே அந்த சிமெண்ட் ஸ்லாப்பில் மல்லாக்கப் படுத்துக்கொண்டான். தட்ஷிணியிடமும் வனஜாவிடமும் பேசிவிட்டுப் போனால்தான் களைப்பு தீரும்! இல்லையென்றால் இன்றிரவு தூக்கம் வராது! கடவுளே..எங்கே போய்த் தொலைந்தாள்கள் இவள்கள்!
புங்கை மர கரும்பச்சை இலைகளின் ஊடே ஒரு சின்னஞ்சிறு குருவி அங்கும் இங்கும் தாவிக்கொண்டிருந்தது. அதைப் பார்க்கையில் தட்ஷிணியின் ஞாபகம் வந்தது அவனுக்கு! இந்தக் குருவியிடம் இருக்கும் ஏதோவொன்று அவளிடமும் இருக்கக்கூடும்! இந்தக் குருவி தனியாகவா இருக்குது! கிளைகளூடே கண்களால் துளாவினான்.அதோ..இன்னொரு கிளையில் இன்னொரு குருவி..அதன் அலகில் ஒரு செம்புள்ளி இருந்ததை வைத்து அதன் உருவமும் சற்றே பெரிதாய் இருப்பதாலும் அது ஆண்குருவியாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்குவந்தான். என்ன ஒரு அற்புதமான, ஆனந்தமயமான வாழ்க்கை இந்தக் குருவிகளுக்கு. இந்தக் குருவிகள் எந்தத் தேர்வை எழுதுகின்றன! அப்படியானால் அவற்றின் வாழ்வில் தேர்வுகளும் சோதனைகளும் அறவே இல்லையா! மனிதனுக்கு மட்டும்தான் இத்தனை வலிகளா..சிண்டுகளா..சிக்கல்களா! அவனுக்கு அந்தக் குருவிகளைப் பார்த்து சற்றே பொறாமையாக இருந்தது. எத்தனை சுதந்திரமான இருப்பு!
மூர்த்தியின் மோனநிலை, அறைத்தோழன் மனோகரால் கலைந்தது. "என்னடா மாப்ளே படுத்திட்டே.. ‘ஹோல் நைட்’ அடுச்ச களைப்பா..
"ஹோல் நைட் அடிச்சது உண்மைதான்! எங்கடா படிக்க முடியுது! ஒரே ப்ராப்ளமா இருக்குடா மாப்ளே!" என்றபடி எழுந்து இருபக்கமும் கையை ஊன்றி அமர்ந்துகொகொண்டான்.
"இனி அடுத்த செமெஸ்டரும் மாமிமெஸ் ரூம்தானா..? ஹாஸ்டலுக்கே வரமாட்டியா மாப்ளே..?" மனோகரின் குரலில் ஒருவித சோகம்.
"பாப்போம்டா மாப்ளே..எக்ஸாம் முடிஞ்சு ஒரு மாசம் லீவ் இருக்கே. ஊருக்குப் போயிட்டு அதுக்குப்புறம் முடிவு செஞ்சுக்கலாம்."
"உங்கப்பா ஒன்னையெ வெளிலெல்லாம் விடமாட்டார். ஸ்காலர்ஷிப் போயிடுமே.."
"என்னாகுதுன்னு பாப்போம்!"
சொல்லிக்கொண்டிருக்கையில் கல்லூரியின் முக்கிய வாயில்வழியாக தட்ஷிணியும் வனஜாவும் வெளிப்பட்டார்கள்..
அவன் பத்து இருபத்தைந்துக்குத்தான் தேர்வறைக்குள் நுழைந்தான்.. எல்லோரும் மூன்று மணிநேரம் எழுதும் தேர்வை இரண்டரைமணி நேரம்தான் எழுதினான்..அந்த கடைசி அரைமணிநேரத்தில் புரட்டிப்பார்த்த பதில்களே அவன் பாஸ் பண்ண வழிவகுத்தன...அப்படியே, புரட்டிப்பார்க்காமல் உள்ளேபோயிருந்தால் என்னாகியிருக்கும்..
இன்று அதிகாலை கேட்ட சேவலின் உற்சாகக் கூவல் மூர்த்தியின் காதுகளில் எதிரொலித்தது. கையில் இருந்த நீலநிற கேள்வித்தாளில் எண்ணற்ற கேள்விகள் அவற்றின் முடிவில் கேள்விக்குறிகளைத் தாங்கியிருந்தன. அவை அவனுள் ஒருவித புதிரான உணர்வைத் தூண்டிவிட்டன.
வாழ்க்கையிலும்தான் இப்படி எத்தனையெத்தனை கேள்விகள், கேள்விக்குறிகள்! அனைத்துக் கேள்விகளுக்கும் நம்மிடம் பதில் இருக்கிறதா! எல்லாக் கேள்விகளுக்கும் எல்லாராலும் பதிலளிக்க இயலுமா!
தேர்வு முடிந்து எல்லா மாணவமாணவிகளும் கும்பல் கும்பலாக வெளியேறிக்கொண்டிருந்தனர். எல்லார் கையிலும் கேள்வித் தாள்கள்! எல்லாருக்கும் வாழ்க்கை தேர்வு நடத்திக்கொண்டுதான் இருக்கிறது..அவரவரும் அவரவர்க்கு முடிந்த பதில்களை வாழ்க்கை எனும் ஏட்டில் எழுத்தித்தான் ஆகணும்போல!
பெண்கள் விடுதியை நோக்கி வெவ்வேறு வண்ணங்களாலான சுடிதார்களில் ஒரு கும்பல் கைகளில் கேள்வித்தாள்களைப் புரட்டியபடி நகர்ந்துகொண்டிருந்தது. அவர்களின் தலைப்பரப்பு வெயில்பட்டு வெண்ணிறமாகக் காட்சியளித்தது..சிலர் அவனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு சட்டென முகத்தைத் திருப்பிக்கொண்டனர். தட்ஷிணியின் தோழிகள் சிலர் அவனைப் பார்த்து தமக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். ஒருவேளை 'எல்லாவற்றையும்' எல்லாரிடமும் சொல்லிவிட்டாளோ தட்ஷிணி? இந்தக் கும்பலில் தட்ஷிணி ஏன் வரவில்லை? வனஜாவையும் காணோமே!
மிகவும் களைப்பாக இருந்தது மூர்த்திக்கு.சாப்பிட இனி மாமி மெஸ்சுக்குத்தான் போகணும்..இந்த வெயிலில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நடக்கணும். ஒரே அலுப்பக இருந்தது.
அப்படியே அந்த சிமெண்ட் ஸ்லாப்பில் மல்லாக்கப் படுத்துக்கொண்டான். தட்ஷிணியிடமும் வனஜாவிடமும் பேசிவிட்டுப் போனால்தான் களைப்பு தீரும்! இல்லையென்றால் இன்றிரவு தூக்கம் வராது! கடவுளே..எங்கே போய்த் தொலைந்தாள்கள் இவள்கள்!
புங்கை மர கரும்பச்சை இலைகளின் ஊடே ஒரு சின்னஞ்சிறு குருவி அங்கும் இங்கும் தாவிக்கொண்டிருந்தது. அதைப் பார்க்கையில் தட்ஷிணியின் ஞாபகம் வந்தது அவனுக்கு! இந்தக் குருவியிடம் இருக்கும் ஏதோவொன்று அவளிடமும் இருக்கக்கூடும்! இந்தக் குருவி தனியாகவா இருக்குது! கிளைகளூடே கண்களால் துளாவினான்.அதோ..இன்னொரு கிளையில் இன்னொரு குருவி..அதன் அலகில் ஒரு செம்புள்ளி இருந்ததை வைத்து அதன் உருவமும் சற்றே பெரிதாய் இருப்பதாலும் அது ஆண்குருவியாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்குவந்தான். என்ன ஒரு அற்புதமான, ஆனந்தமயமான வாழ்க்கை இந்தக் குருவிகளுக்கு. இந்தக் குருவிகள் எந்தத் தேர்வை எழுதுகின்றன! அப்படியானால் அவற்றின் வாழ்வில் தேர்வுகளும் சோதனைகளும் அறவே இல்லையா! மனிதனுக்கு மட்டும்தான் இத்தனை வலிகளா..சிண்டுகளா..சிக்கல்களா! அவனுக்கு அந்தக் குருவிகளைப் பார்த்து சற்றே பொறாமையாக இருந்தது. எத்தனை சுதந்திரமான இருப்பு!
மூர்த்தியின் மோனநிலை, அறைத்தோழன் மனோகரால் கலைந்தது. "என்னடா மாப்ளே படுத்திட்டே.. ‘ஹோல் நைட்’ அடுச்ச களைப்பா..
"ஹோல் நைட் அடிச்சது உண்மைதான்! எங்கடா படிக்க முடியுது! ஒரே ப்ராப்ளமா இருக்குடா மாப்ளே!" என்றபடி எழுந்து இருபக்கமும் கையை ஊன்றி அமர்ந்துகொகொண்டான்.
"இனி அடுத்த செமெஸ்டரும் மாமிமெஸ் ரூம்தானா..? ஹாஸ்டலுக்கே வரமாட்டியா மாப்ளே..?" மனோகரின் குரலில் ஒருவித சோகம்.
"பாப்போம்டா மாப்ளே..எக்ஸாம் முடிஞ்சு ஒரு மாசம் லீவ் இருக்கே. ஊருக்குப் போயிட்டு அதுக்குப்புறம் முடிவு செஞ்சுக்கலாம்."
"உங்கப்பா ஒன்னையெ வெளிலெல்லாம் விடமாட்டார். ஸ்காலர்ஷிப் போயிடுமே.."
"என்னாகுதுன்னு பாப்போம்!"
சொல்லிக்கொண்டிருக்கையில் கல்லூரியின் முக்கிய வாயில்வழியாக தட்ஷிணியும் வனஜாவும் வெளிப்பட்டார்கள்..
Guest- Guest
Re: பெண்ருசி (குறுநாவல்)
வனஜா மட்டும் அவனை நோக்கி வந்தாள். அவள் வருவதைப் பார்த்த மனோகர், "அப்ப ரூமுக்குப் போறேண்டா மாப்ளே..அடுத்த செமஸ்டர் ஹாஸ்டலுக்கே வந்துரு பேசாமே.. நீ இல்லாதது ஒரே அலுப்பா இருக்கு.. நீ இருந்தா ஏதாவது பேசிட்டேயிருப்பே, கலகலப்பா இருக்கும்!" என்று சொல்லிக்கொண்டே ஆடவர் விடுதிக்குச் செல்லும் சாலையில் நகர்ந்தான். பெண்கள் விடுதிக்குச் செல்லும் சாலையில் வேகமாய் நடந்துகொண்டிருந்தாள் தட்ஷிணி, மூர்த்தியைத் திரும்பிக்கூடப் பாராமல்.
அவள் வேகமாய்ப் பிரிந்து போவதைப் பார்த்து படபடப்புடன் வனஜாவைப்பார்த்து, "என்னாச்சு. எக்ஸாம் முடிஞ்சு எவ்ளோ நேரமாச்சு..எங்கெ போனீங்க?" என்று கேட்டான் மூர்த்தி.
"ம்ம்? முடிவெட்டிட்டு வர்ரோம்! சும்மா இரு மூர்த்தி! எக்ஸாம்லே நிச்சயம் பெய்ல் ஆகிருவாளாம் தட்ஷிணி..நல்லாவே எழுதலேயாம்! ‘என்னவோ தெரியலே,எழுதவே தோணலே’ங்கறா கேட்டா.. படிச்சது ஒண்ணுகூட மனசிலெ தங்கலையாம்..இன்னவரைக்கும் ஹால்லயே உக்கார்ந்து அழுதுட்டேருந்தா..!"
"நீ எப்டி எழுதிருக்கே?"
"ஏதோ சொதப்பிவச்சிருக்கேன்! மதில்மேல் பூனைதான்! பாஸாவனோ, ·பெய்ல் ஆவனோ தெரியாது! எல்லாம் திருத்துறவன் கையிலெதான் இருக்கு!"
"அப்ப நான் தேவலாம்னு சொல்லு! எப்பிடியும் அறுபதுக்கு மேலதான் வரும்! என்னதான் ஸ்ட்ரிக்ட்டா திருத்தினாலும்!"
"நீ ஒரு ‘செல்·பிஷ்’ மூர்த்தி! உன்னாலெதான் இப்டி ஆயிருச்சாம்,சொல்லிச் சொல்லிப் பொலம்புறா தட்ஸ்..அவளெ அப்பிடியே அந்தரத்துலெ விட்டுட்டு நீபாட்டுக்குப் போயிட்டே..அவ எத்தினிநாள் சாப்டாமே அழுதுக்கிட்டே கெடந்தா தெரியுமா உனக்கு.."
"அவதானே வனஜ் என்னெ திட்டி அனுப்பிச்சா!"
"ஏதோவொரு கோபத்துலெ திட்டினா! அப்டியே அம்போன்னு விட்டுட்டுப் போய்றதா! காலேஜ்க்கு வந்த இந்த ஒன்றரை வருஷத்துலே என்னிக்காவது உன்னெ அவ பாக்காமெ இருந்திருக்காளா?"
தலையைக் குனிந்து புல்தரையில் கண்களைப் பதித்தபடி யோசித்துப்பார்த்தான் மூர்த்தி....ஆம்..விடுமுறைக்கு ஊருக்குப் போன நாட்களைத்தவிர, அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்த நாட்களே இல்லை! சொல்லப்போனால், வகுப்புகளுக்கு ‘மட்டம்’ போடாமல் அவன் ‘ரெகுலராக’ வருவதே அவளைப் பார்க்கவும், அவளிடம் பேசவும்தான்!
மௌனமாக யோசனையில் ஆழ்ந்திருந்த மூர்த்தியிடம், "ஆமா..அவகிட்டே நீ ஏம் மூர்த்தி நந்தினி, கிந்தினின்னு உளர்னே..? அப்றம் அவ டென்ஷனாக மாட்டாளா? அப்பிடியே நீ பண்ணது உண்மையா இருந்தாலும் அதெ அவகிட்டெ ஏன் சொன்னே?"
"ஏதோ எனக்கு அப்போ வாய்ச் சனி! உளறிட்டேன்..இப்ப என்னசெய்யலாம்..அதெச்சொல்லு!"
"என்ன செய்யலாம்னு அப்றம் சொல்றேன்.. இந்த நந்தினி கதையெல்லாம் உண்மைதானா? எங்கிட்டெ உள்ளதைச் சொல்லு! நான் தட்ஷிணிகிட்டெ பேசுறதுக்கு வசதியாயிருக்கும்!"
"அது சத்தியமா பொய்தான் வனஜ்! சும்மா ஜாலியா ஒரு கதைவுட்டுப் பார்த்தேன்! அவ அதெ நம்பிட்டா.. நீதான் வனஜ் அவகிட்டே எடுத்துச் சொல்லணும்!"
"இல்லையே! நீ அன்னிக்குச் சொன்னப்போ உண்மை மாதிரி இருந்துச்சே!"
"இல்லெவே இல்லை! சும்மா கதைதான் விட்டேன்!..ஏதோவொரு ஜாலி மூடுலெ உளறிட்டேன்!"
"சரி..எது,எப்பிடியோ..இப்ப எனக்குத் தலையெ வலிக்குது..பசிவேறெ! நான் போய் சாப்ட்டுத் தூங்கணும்..இனி, நாளான்னிக்குதானே எக்ஸாம்.. அதுக்காவது உருப்படியாப் படிக்கணும்!"
"சரி..தட்ஸ் ஏன் இப்பிடியிருக்கா! ஏன் எங்கிட்டே ஒருவார்த்தைக்கூட பேசாமெப்போறா.. ரொம்ப எனக்கு ·பீலிங்கா இருக்குன்னு அவகிட்டே சொல்லு வனஜ்!"
"சரி சொல்றேன்..அப்றம்..வரட்டுமா.." என்றவள் சற்றே தயங்கி நின்று தன் அகல விழிகளால் அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள்: "உன்னையும் பாத்தா பாவமாத்தான் இருக்கு மூர்த்தி!..இந்த தட்ஷிணி ஏந்தான் இப்டி இருக்காளோ.. ‘அளவுக்குமீறி பொஸஸிவ்வா இருக்கா அவ! இது எங்கேபோயி முடியுமோ தெரியலே! அவ ஒம்மேலே பைத்தியமா இருக்குறது ஹாஸ்டல்லே எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு..ஒருத்திக்குத் தெர்¢ஞ்சாத்தான் போதுமே, ஊதுகுழல் வச்சு ஊதிடுவாளுங்களே..சரி..அப்ப வர்ரேன்..ஏதோ என்னாலே முடிஞ்சவரைக்கும் சமாதானப் படுத்தப்பாக்குறேன்!" ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டுவிட்டு நகர்ந்தாள்.
அந்த சிமெண்ட் பெஞ்ச்சில் மீண்டும் மல்லாக்கப் படுத்துக்கொண்டான் மூர்த்தி. கண்கள் சற்றுமுன் பார்த்த குருவிகளைத்தேடி புங்கைமரக் கிளைகளில் துளாவின. குருவிகள் எங்கோ பறந்துபோய்விட்டிருந்தன.
அவள் வேகமாய்ப் பிரிந்து போவதைப் பார்த்து படபடப்புடன் வனஜாவைப்பார்த்து, "என்னாச்சு. எக்ஸாம் முடிஞ்சு எவ்ளோ நேரமாச்சு..எங்கெ போனீங்க?" என்று கேட்டான் மூர்த்தி.
"ம்ம்? முடிவெட்டிட்டு வர்ரோம்! சும்மா இரு மூர்த்தி! எக்ஸாம்லே நிச்சயம் பெய்ல் ஆகிருவாளாம் தட்ஷிணி..நல்லாவே எழுதலேயாம்! ‘என்னவோ தெரியலே,எழுதவே தோணலே’ங்கறா கேட்டா.. படிச்சது ஒண்ணுகூட மனசிலெ தங்கலையாம்..இன்னவரைக்கும் ஹால்லயே உக்கார்ந்து அழுதுட்டேருந்தா..!"
"நீ எப்டி எழுதிருக்கே?"
"ஏதோ சொதப்பிவச்சிருக்கேன்! மதில்மேல் பூனைதான்! பாஸாவனோ, ·பெய்ல் ஆவனோ தெரியாது! எல்லாம் திருத்துறவன் கையிலெதான் இருக்கு!"
"அப்ப நான் தேவலாம்னு சொல்லு! எப்பிடியும் அறுபதுக்கு மேலதான் வரும்! என்னதான் ஸ்ட்ரிக்ட்டா திருத்தினாலும்!"
"நீ ஒரு ‘செல்·பிஷ்’ மூர்த்தி! உன்னாலெதான் இப்டி ஆயிருச்சாம்,சொல்லிச் சொல்லிப் பொலம்புறா தட்ஸ்..அவளெ அப்பிடியே அந்தரத்துலெ விட்டுட்டு நீபாட்டுக்குப் போயிட்டே..அவ எத்தினிநாள் சாப்டாமே அழுதுக்கிட்டே கெடந்தா தெரியுமா உனக்கு.."
"அவதானே வனஜ் என்னெ திட்டி அனுப்பிச்சா!"
"ஏதோவொரு கோபத்துலெ திட்டினா! அப்டியே அம்போன்னு விட்டுட்டுப் போய்றதா! காலேஜ்க்கு வந்த இந்த ஒன்றரை வருஷத்துலே என்னிக்காவது உன்னெ அவ பாக்காமெ இருந்திருக்காளா?"
தலையைக் குனிந்து புல்தரையில் கண்களைப் பதித்தபடி யோசித்துப்பார்த்தான் மூர்த்தி....ஆம்..விடுமுறைக்கு ஊருக்குப் போன நாட்களைத்தவிர, அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்த நாட்களே இல்லை! சொல்லப்போனால், வகுப்புகளுக்கு ‘மட்டம்’ போடாமல் அவன் ‘ரெகுலராக’ வருவதே அவளைப் பார்க்கவும், அவளிடம் பேசவும்தான்!
மௌனமாக யோசனையில் ஆழ்ந்திருந்த மூர்த்தியிடம், "ஆமா..அவகிட்டே நீ ஏம் மூர்த்தி நந்தினி, கிந்தினின்னு உளர்னே..? அப்றம் அவ டென்ஷனாக மாட்டாளா? அப்பிடியே நீ பண்ணது உண்மையா இருந்தாலும் அதெ அவகிட்டெ ஏன் சொன்னே?"
"ஏதோ எனக்கு அப்போ வாய்ச் சனி! உளறிட்டேன்..இப்ப என்னசெய்யலாம்..அதெச்சொல்லு!"
"என்ன செய்யலாம்னு அப்றம் சொல்றேன்.. இந்த நந்தினி கதையெல்லாம் உண்மைதானா? எங்கிட்டெ உள்ளதைச் சொல்லு! நான் தட்ஷிணிகிட்டெ பேசுறதுக்கு வசதியாயிருக்கும்!"
"அது சத்தியமா பொய்தான் வனஜ்! சும்மா ஜாலியா ஒரு கதைவுட்டுப் பார்த்தேன்! அவ அதெ நம்பிட்டா.. நீதான் வனஜ் அவகிட்டே எடுத்துச் சொல்லணும்!"
"இல்லையே! நீ அன்னிக்குச் சொன்னப்போ உண்மை மாதிரி இருந்துச்சே!"
"இல்லெவே இல்லை! சும்மா கதைதான் விட்டேன்!..ஏதோவொரு ஜாலி மூடுலெ உளறிட்டேன்!"
"சரி..எது,எப்பிடியோ..இப்ப எனக்குத் தலையெ வலிக்குது..பசிவேறெ! நான் போய் சாப்ட்டுத் தூங்கணும்..இனி, நாளான்னிக்குதானே எக்ஸாம்.. அதுக்காவது உருப்படியாப் படிக்கணும்!"
"சரி..தட்ஸ் ஏன் இப்பிடியிருக்கா! ஏன் எங்கிட்டே ஒருவார்த்தைக்கூட பேசாமெப்போறா.. ரொம்ப எனக்கு ·பீலிங்கா இருக்குன்னு அவகிட்டே சொல்லு வனஜ்!"
"சரி சொல்றேன்..அப்றம்..வரட்டுமா.." என்றவள் சற்றே தயங்கி நின்று தன் அகல விழிகளால் அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள்: "உன்னையும் பாத்தா பாவமாத்தான் இருக்கு மூர்த்தி!..இந்த தட்ஷிணி ஏந்தான் இப்டி இருக்காளோ.. ‘அளவுக்குமீறி பொஸஸிவ்வா இருக்கா அவ! இது எங்கேபோயி முடியுமோ தெரியலே! அவ ஒம்மேலே பைத்தியமா இருக்குறது ஹாஸ்டல்லே எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு..ஒருத்திக்குத் தெர்¢ஞ்சாத்தான் போதுமே, ஊதுகுழல் வச்சு ஊதிடுவாளுங்களே..சரி..அப்ப வர்ரேன்..ஏதோ என்னாலே முடிஞ்சவரைக்கும் சமாதானப் படுத்தப்பாக்குறேன்!" ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டுவிட்டு நகர்ந்தாள்.
அந்த சிமெண்ட் பெஞ்ச்சில் மீண்டும் மல்லாக்கப் படுத்துக்கொண்டான் மூர்த்தி. கண்கள் சற்றுமுன் பார்த்த குருவிகளைத்தேடி புங்கைமரக் கிளைகளில் துளாவின. குருவிகள் எங்கோ பறந்துபோய்விட்டிருந்தன.
Guest- Guest
Re: பெண்ருசி (குறுநாவல்)
"அய்யோ!!" என அலற முயற்சித்தாள் தட்ஷிணி..ம்ஹ¤ம்..! குரல் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டது! வெளியில் காற்றுத்தான் வந்தது! மீண்டும் மீண்டும் கத்த முயன்றபடி தன் சக்தி முழுக்கத் திரட்டி விரைந்தோடியும், அந்தக் திமில்கள் பெருத்த கருப்பு கோயில்காளை அவளை விடாமல் துரத்திற்று. வேகம் கூட்டி ஓடஓட அவளை அசுரத்தனமாய் விரட்டிற்று.. ஒருநிமிடம் திரும்பிப்பார்த்தவள்,
அக்காளையின் மதர்ப்பில் திகிலுற்று மீண்டும் அலறினாள்.. தன்னைக் காப்பாற்ற யாராவது வருவார்களா எனச் சுற்றுமுற்றும் பார்த்தாள்..கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெறும் பொட்டல்காடு! யாரும் வருவதாய்த் தெரியவில்லை!
சட்டென அவள் கைகள் இரண்டும் றெக்கைகளாக மாற, இப்போது தரையைவிட்டு எழும்பி அந்தரத்தில் எம்பினாள் தட்ஷிணி. வேகமாய் கால்களையும் கைகளையும் உதைத்து காற்றில் நீந்தி அங்கிருந்த அடர் விருட்சங்களின் மேற்பரப்புகளை உரசியபடிக்கு பறந்து நகர்ந்தாள்! இந்நேரம் அந்தக்காளை தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தன்போக்கில் போயிருக்கும் என நினைத்து பறந்தபடியே மெல்லத் திரும்பினாள்..ஆஹ்! அதுவும் பறந்தபடி துரத்துகிறதே! ஆஹ்ஹ்ஹ்..! அய்யோஓஓ..!!
"ஏண்டி தட்ஸ்! ஏன் இப்பிடி தூங்கிக்கிட்டிருக்கையிலேயே கத்தித்தொலைக்கிறே?" வனஜாவின் குரலில் நிகழ்காலத்துக்கு வந்தவள்,
"அப்போ என்னைக் காளை தொரத்தலையா?" என்று வனஜாவிடம் கேட்டாள்.
"ம்ம்?! மூர்த்திக்காளைதான் உன்னை விடாமெத் தொரத்துது! ஏண்டீ இப்டி ஆய்ட்டே?! ·பர்ஸ்ட் இயர் வரும்போது எப்டி அப்பாவியா நல்லபுள்ளையா இருந்தே! இன்னும் உருப்படியா செகண்ட் இயர் தாண்டலே! அதுக்குள்ளே ஏண்டி இப்டி கிறுக்கா அலையிறே!"
தூக்கக் கலக்கத்துடன் ஆவேசமாய் எழுந்த தட்ஷிணி, அலமாறியோரமாய் நின்றிருந்த வனஜாவைநோக்கி விரைந்து அவள் கன்னத்தில் 'பொளேர்!' என்று ஒரு அறைவிட்டாள்! வனஜா கண்களில் பொறிபறக்க அப்படியே தரையில் தடுமாறி விழுந்தாள்.
"யாரைப் பாத்துடி அலையிறேன்னு சொல்றே! யாருடி அலையிறது? நானா அலையிறேன்! இன்னொருதரம் இப்டிப் பேசினே, கொன்னுடுவேன் கொன்னு!" தட்ஷிணிக்கு மூச்சுவாங்கியது! அவளது கைகள் கோபத்தில் நடுங்கின!
கன்னத்தைப் பிடித்தபடி சுவரோரமாய் நகர்ந்து உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள் வனஜா.
தன் தட்டையும் டம்ளரையும் எடுத்துக்கொண்டு புலம்பியபடியே மெஸ்ஸ¤க்கு நகர்ந்தாள் தட்ஷிணி: "அலையிறேனாம்! யாரைப்பார்த்து அலையிறேங்கிறே! எங்கப்பாவுக்கு நீ சொன்னது தெரிஞ்சது கொன்னே போட்டுருப்பார்!"
தேர்வு முடித்து கல்லூரியிலிருந்து வந்தவள், மெஸ்ஸ¤க்குப்போய் அவசர அவசரமாய் ஏதோ கொஞ்சம் விழுங்கிவிட்டு, ரெண்டுமணிவாக்கில் கட்டிலில் விழுந்து தூங்கிவிட்டாள்! இப்போது மணி ஏழரை! அஞ்சுமணிநேரத்துக்கும் மேலாய் தூங்கியிருக்கிறாள்..ஆக, காளை துரத்தியது இந்த பகல் கனவில்தான்!
விடுதி மெஸ்ஸின் வாஷ் பேசினில் முகத்தையும் தட்டு டம்ளர் ஆகியவற்றையும் கழுவிவிட்டு மெஸ்சில் நுழைந்தாள்.மெஸ்சில் பெண்கள் கூட்டம் களைகட்டியிருந்தது. ஒவ்வொருத்தியும் தத்தமது கூட்டாளிக் கும்பலுடன் சாப்பிட வந்துகொண்டிருந்தாள்கள்!
'அலையிறேனாம்! எவ்வளவு திமிர் இருக்கும் இந்த வனஜா நாய்க்கு!'
அக்காளையின் மதர்ப்பில் திகிலுற்று மீண்டும் அலறினாள்.. தன்னைக் காப்பாற்ற யாராவது வருவார்களா எனச் சுற்றுமுற்றும் பார்த்தாள்..கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெறும் பொட்டல்காடு! யாரும் வருவதாய்த் தெரியவில்லை!
சட்டென அவள் கைகள் இரண்டும் றெக்கைகளாக மாற, இப்போது தரையைவிட்டு எழும்பி அந்தரத்தில் எம்பினாள் தட்ஷிணி. வேகமாய் கால்களையும் கைகளையும் உதைத்து காற்றில் நீந்தி அங்கிருந்த அடர் விருட்சங்களின் மேற்பரப்புகளை உரசியபடிக்கு பறந்து நகர்ந்தாள்! இந்நேரம் அந்தக்காளை தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தன்போக்கில் போயிருக்கும் என நினைத்து பறந்தபடியே மெல்லத் திரும்பினாள்..ஆஹ்! அதுவும் பறந்தபடி துரத்துகிறதே! ஆஹ்ஹ்ஹ்..! அய்யோஓஓ..!!
"ஏண்டி தட்ஸ்! ஏன் இப்பிடி தூங்கிக்கிட்டிருக்கையிலேயே கத்தித்தொலைக்கிறே?" வனஜாவின் குரலில் நிகழ்காலத்துக்கு வந்தவள்,
"அப்போ என்னைக் காளை தொரத்தலையா?" என்று வனஜாவிடம் கேட்டாள்.
"ம்ம்?! மூர்த்திக்காளைதான் உன்னை விடாமெத் தொரத்துது! ஏண்டீ இப்டி ஆய்ட்டே?! ·பர்ஸ்ட் இயர் வரும்போது எப்டி அப்பாவியா நல்லபுள்ளையா இருந்தே! இன்னும் உருப்படியா செகண்ட் இயர் தாண்டலே! அதுக்குள்ளே ஏண்டி இப்டி கிறுக்கா அலையிறே!"
தூக்கக் கலக்கத்துடன் ஆவேசமாய் எழுந்த தட்ஷிணி, அலமாறியோரமாய் நின்றிருந்த வனஜாவைநோக்கி விரைந்து அவள் கன்னத்தில் 'பொளேர்!' என்று ஒரு அறைவிட்டாள்! வனஜா கண்களில் பொறிபறக்க அப்படியே தரையில் தடுமாறி விழுந்தாள்.
"யாரைப் பாத்துடி அலையிறேன்னு சொல்றே! யாருடி அலையிறது? நானா அலையிறேன்! இன்னொருதரம் இப்டிப் பேசினே, கொன்னுடுவேன் கொன்னு!" தட்ஷிணிக்கு மூச்சுவாங்கியது! அவளது கைகள் கோபத்தில் நடுங்கின!
கன்னத்தைப் பிடித்தபடி சுவரோரமாய் நகர்ந்து உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள் வனஜா.
தன் தட்டையும் டம்ளரையும் எடுத்துக்கொண்டு புலம்பியபடியே மெஸ்ஸ¤க்கு நகர்ந்தாள் தட்ஷிணி: "அலையிறேனாம்! யாரைப்பார்த்து அலையிறேங்கிறே! எங்கப்பாவுக்கு நீ சொன்னது தெரிஞ்சது கொன்னே போட்டுருப்பார்!"
தேர்வு முடித்து கல்லூரியிலிருந்து வந்தவள், மெஸ்ஸ¤க்குப்போய் அவசர அவசரமாய் ஏதோ கொஞ்சம் விழுங்கிவிட்டு, ரெண்டுமணிவாக்கில் கட்டிலில் விழுந்து தூங்கிவிட்டாள்! இப்போது மணி ஏழரை! அஞ்சுமணிநேரத்துக்கும் மேலாய் தூங்கியிருக்கிறாள்..ஆக, காளை துரத்தியது இந்த பகல் கனவில்தான்!
விடுதி மெஸ்ஸின் வாஷ் பேசினில் முகத்தையும் தட்டு டம்ளர் ஆகியவற்றையும் கழுவிவிட்டு மெஸ்சில் நுழைந்தாள்.மெஸ்சில் பெண்கள் கூட்டம் களைகட்டியிருந்தது. ஒவ்வொருத்தியும் தத்தமது கூட்டாளிக் கும்பலுடன் சாப்பிட வந்துகொண்டிருந்தாள்கள்!
'அலையிறேனாம்! எவ்வளவு திமிர் இருக்கும் இந்த வனஜா நாய்க்கு!'
Guest- Guest
Re: பெண்ருசி (குறுநாவல்)
கரிய கடப்பைக்கல் ஸ்லாப்பில் தட்டை நங்கென்று தூக்கிப்போட்டாள் தட்ஸ்! டம்ளரையும் அவ்வாறே வைத்தாள்! பக்கத்து ஸ்லாப்புகளில் ஏற்கனவே அமர்ந்திருந்த அவள் விடுத்தித்தோழிகள்,
"என்னாச்சு, இன்னிக்கு ஒரே ம்யூசிக் போடுறே!" என்று அவளைப்பார்த்த்க் கோரஸாய்க் கேட்டார்கள்.
"எல்லாம் ஒரே எளவாருக்கு!"
"ஏன் தட்ஸ்! எக்ஸாம் ஒழுங்காப் பண்ணலியா.." மெட்ராஸ்காரி சுஜாதா கரிசனையாய்க் கேட்டாள்!
"அதெல்லாம் நல்லாப் பண்ணிருக்கேன்! சும்மா தலைவலிக்குது அதான்.."
"தலைவலியா.. இல்லே எக்ஸாம் ·பீவரா! இல்லே, வேறெதும் ·பீவரா!" இப்போது சுஜாதாவின் குரலில் கரிசனம் மறைந்து ஒருவித கிண்டலும் வக்கிரமும் தொனித்தது!
அதை உணர்ந்துகொண்ட தட்ஷிணி, "ப்ளீஸ் லீவ் மீ அலோன்!! எனக்கு பயங்கரமா தலை வலிக்குது..!" தட்ஷிணியின் கோபக்குறியப்பார்த்து கப்சிப் ஆனாள் சுஜாதா.
'வந்துட்டாளுங்க, வம்பளக்குறதுக்குன்னு!'
அதற்குள் மெஸ் ஆயா சுடச்சுட தோசை கொண்டுவந்து அவள் தட்டில் வைத்தாள்..ஹாஸ்டல் வார்டன் லில்லி, தன் பின்புறத்தை 'தழுக் முழுக்' என்று ஆட்டியபடி அந்தப்பக்கம் ஒரு காஸ¤வல் விசிட் அடித்துக் கொண்டிருந்தாள்.
'சனியன்,சனியன்! இந்தச்சனி ஏன் இங்கே வந்துச்சோ!..அவளைப் பாத்தாலே பூதத்தைப் பார்த்தாப்லே இருக்கு'
தோசையை கொஞ்சங்கொஞ்சமாய் விண்டு விழுங்கிய தட்ஷிணிக்கு விக்கலெடுக்க, அவளை நெருங்கியிருந்த ஹாஸ்டல் வார்டன் லில்லி, அருகிலிருந்த ஜக்கிலிருந்து தட்ஷிணியின் டம்ளரில் நீரை ஊற்றினாள். விக்கியபடியே நீரைக்குடித்துவிட்டு, "தாங்க்ஸ் மாம்!" என்றாள் தட்ஷிணி.
"எக்ஸாம் நல்லாப் பண்ணியா?"
"ம்! ஓகே..நல்லாப் பண்ணிருக்கேன்!"
"பின்னே! கம்பைண்டு ஸ்டடியெல்லாம் பண்ணிட்டு நல்லப்பண்ணாமே இருந்தா எப்டி!"
தட்ஷிணிக்கு அடிவயிற்றில் பற்றிக்கொண்டு வந்தது...அதற்குள், ஒரு பெருமூச்சை உதிர்த்துவிட்டு, "பாத்து!'எதிலெயும் 'டிஸ்டன்ஸ்' மெய்ன்டெய்ன் பண்றது நல்லது! நான் உனக்கு சித்தியாட்டம் சொல்றேன்! கேட்டு நடந்துக்கோ!" என்று படபடவெனச் சொல்லிவிட்டு நகர்ந்தாள் லில்லி.
தட்ஷிணி பாதி தோசையை மட்டும் சாப்பிட்டுவிட்டு வேகமாய் எழுந்து மெஸ்ஸைவிட்டு அகன்றாள்.அவளது கோபத்தை உணர்ந்துகொண்ட லில்லி, எதுவும் பேசாமல் அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்துப்போனாள்..
வேகமாய் நடக்க ஆரம்பித்தவளை,மெஸ்ஸ¤க்கும் விடுதியறைக்கும் இடையில் பரவியிருந்த கும்மிருட்டு சட்டெனெச் சூழ்ந்துகொண்டது. அப்பேரிருள், சட்டெனெ உருண்டு, திரட்சியுற்று, சற்றுமுன் கனவில் அவளை உக்கிரமாகத் துரத்திய கரும் கோயில்காளையாக உருமாறி மீண்டும் அவளைத் துரத்த ஆரம்பித்தது.
"என்னாச்சு, இன்னிக்கு ஒரே ம்யூசிக் போடுறே!" என்று அவளைப்பார்த்த்க் கோரஸாய்க் கேட்டார்கள்.
"எல்லாம் ஒரே எளவாருக்கு!"
"ஏன் தட்ஸ்! எக்ஸாம் ஒழுங்காப் பண்ணலியா.." மெட்ராஸ்காரி சுஜாதா கரிசனையாய்க் கேட்டாள்!
"அதெல்லாம் நல்லாப் பண்ணிருக்கேன்! சும்மா தலைவலிக்குது அதான்.."
"தலைவலியா.. இல்லே எக்ஸாம் ·பீவரா! இல்லே, வேறெதும் ·பீவரா!" இப்போது சுஜாதாவின் குரலில் கரிசனம் மறைந்து ஒருவித கிண்டலும் வக்கிரமும் தொனித்தது!
அதை உணர்ந்துகொண்ட தட்ஷிணி, "ப்ளீஸ் லீவ் மீ அலோன்!! எனக்கு பயங்கரமா தலை வலிக்குது..!" தட்ஷிணியின் கோபக்குறியப்பார்த்து கப்சிப் ஆனாள் சுஜாதா.
'வந்துட்டாளுங்க, வம்பளக்குறதுக்குன்னு!'
அதற்குள் மெஸ் ஆயா சுடச்சுட தோசை கொண்டுவந்து அவள் தட்டில் வைத்தாள்..ஹாஸ்டல் வார்டன் லில்லி, தன் பின்புறத்தை 'தழுக் முழுக்' என்று ஆட்டியபடி அந்தப்பக்கம் ஒரு காஸ¤வல் விசிட் அடித்துக் கொண்டிருந்தாள்.
'சனியன்,சனியன்! இந்தச்சனி ஏன் இங்கே வந்துச்சோ!..அவளைப் பாத்தாலே பூதத்தைப் பார்த்தாப்லே இருக்கு'
தோசையை கொஞ்சங்கொஞ்சமாய் விண்டு விழுங்கிய தட்ஷிணிக்கு விக்கலெடுக்க, அவளை நெருங்கியிருந்த ஹாஸ்டல் வார்டன் லில்லி, அருகிலிருந்த ஜக்கிலிருந்து தட்ஷிணியின் டம்ளரில் நீரை ஊற்றினாள். விக்கியபடியே நீரைக்குடித்துவிட்டு, "தாங்க்ஸ் மாம்!" என்றாள் தட்ஷிணி.
"எக்ஸாம் நல்லாப் பண்ணியா?"
"ம்! ஓகே..நல்லாப் பண்ணிருக்கேன்!"
"பின்னே! கம்பைண்டு ஸ்டடியெல்லாம் பண்ணிட்டு நல்லப்பண்ணாமே இருந்தா எப்டி!"
தட்ஷிணிக்கு அடிவயிற்றில் பற்றிக்கொண்டு வந்தது...அதற்குள், ஒரு பெருமூச்சை உதிர்த்துவிட்டு, "பாத்து!'எதிலெயும் 'டிஸ்டன்ஸ்' மெய்ன்டெய்ன் பண்றது நல்லது! நான் உனக்கு சித்தியாட்டம் சொல்றேன்! கேட்டு நடந்துக்கோ!" என்று படபடவெனச் சொல்லிவிட்டு நகர்ந்தாள் லில்லி.
தட்ஷிணி பாதி தோசையை மட்டும் சாப்பிட்டுவிட்டு வேகமாய் எழுந்து மெஸ்ஸைவிட்டு அகன்றாள்.அவளது கோபத்தை உணர்ந்துகொண்ட லில்லி, எதுவும் பேசாமல் அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்துப்போனாள்..
வேகமாய் நடக்க ஆரம்பித்தவளை,மெஸ்ஸ¤க்கும் விடுதியறைக்கும் இடையில் பரவியிருந்த கும்மிருட்டு சட்டெனெச் சூழ்ந்துகொண்டது. அப்பேரிருள், சட்டெனெ உருண்டு, திரட்சியுற்று, சற்றுமுன் கனவில் அவளை உக்கிரமாகத் துரத்திய கரும் கோயில்காளையாக உருமாறி மீண்டும் அவளைத் துரத்த ஆரம்பித்தது.
Guest- Guest
Re: பெண்ருசி (குறுநாவல்)
''மூர்த்தீ..மூர்த்தீ.." குரல்கேட்டு விழித்தான் மூர்த்தி. மாமி கதவை மெதுவாய்த் தட்டியபடி அவனைக் கூப்பிட்டுக்கொண்டிருந்தாள். அறை முழுக்க இருள் அடர்ந்திருக்க, மூர்த்திக்கு ஒருவினாடி தான் எங்கிருக்கிறோம் என்று தெரியவில்லை. மெதுவாக கட்டிலைவிட்டெழுந்து ஸ்விட்ச் போர்டை சுவரில் துளாவி குழல் விளக்கை எரியவிட்டான்.
"ஏண்டாம்பீ..எழுந்துட்டியாடா..என்னமாத் தூங்குறே பேயாட்டம்! வரவர நீயும் புவனேஸ்வரி ஆயிட்டேடா, தூங்கி வழியிறதுலெ!" மாமியின் குரல் கதவைத்தாண்டி கேட்டுக்கொண்டிருந்தது.
"இதோ வர்ரேன் மாமீ.." நெகிழ்ந்திருந்த கைலியை அவிழ்த்து மீண்டும் சரியாய்க் கட்டிக்கொண்டு வெற்றுடம்புடன் கதவைத்திறந்தான் மூர்த்தி.
"மதியமும் நீ சரியாச் சாப்டலே! மணி எட்டாகுது..மூணுமணிக்கு தூங்க ஆரம்பிச்சவன்!"
"உடம்புக்கு சரியில்லே மாமி! அடிச்சுப் போட்டாப்லெ வருது!"
"பாத்தாலே தெரியறது, ஓம் ஒடம்பிருக்கற லட்சணம்! நன்னாச் சாப்டணும்! அப்பத்தான் உடம்பும் தேறும்! நல்லாவும் படிக்கலாம்! நீ ஒரு இட்லி, ரெண்டு இட்லின்னு சாப்ட்டா எப்டி உருப்படும் உடம்பு?"
"உடம்பு தேர்றதுன்னா ஊருக்குப் போய் கறி, மீனெல்லாம் சாப்டணும் மாமீ!"
"டே,கண்ணா! நேக்கு கறிமீன் சமைக்கத் தெரியாதுன்னு நெனைச்சுட்டியாடா...பத்துவருஷம் சமைச்சிருக்கேன், பாத்துக்கோ!"
"அது எங்கே மாமீ!" ஆச்சர்யமாய்க் கேட்டான் மூர்த்தி.
"அதெமட்டும் கேட்காதேடாம்பீ..இந்த அய்யர்கிட்டெ வர்ரதுக்கு முன்னாடி நடந்தது அதெல்லாம்.. அதெல்லாம் அப்றம் சொல்றேன்! இன்னும் நோக்குச் சொல்ல வேண்டியது நெறைய இருக்கு!" அவன் வெற்றுடம்பை உற்றுப் பார்த்தபடியே பேசிக்கொண்டிருந்தாள் மாமி.அறையின் ட்யூப் லைட் ஒளி திறந்திருந்த கதவின்வழி அவள் முகத்தில் படிந்து அவளது கச்சிதமான முக அமைப்பில் மேலும் மெருகூட்டியது.
"சீக்கிரம் வாடா! மெஸ்ஸே காலியாய்டுச்சு..உனக்காகத்தான் காத்திண்டிருக்கேன்!" சொல்லிவிட்டு மெஸ்ஸ¤க்குப் போய்விட்டாள். அவளது சற்றே குலுக்கலான நடையை அவள் பின்புறத்திலிருந்து கவனித்தான். அது அவனுள் ஒரு ரம்மிய உணர்வை எழுப்பிச் சென்றது.
"இந்தா வந்துட்டேன் மாமீ.." என்றவன், ஏதோவொரு வசியத்துக்கு ஆட்பட்டவனாய் ஒரு நீலநிற டீசர்ட்டை மாட்டிக்கொண்டு அவசரமாய் வெளிவந்தான். கதவைப் பூட்டாமல் வெளித்தாழ்ப்பாள் மட்டும் போட்டுவிட்டு, பாத்ரூம் போய் கைகால் முகம் அலம்பிக்கொண்டு மெஸ்சைநோக்கி விரைந்தான்..
வாசலைப் பார்த்தபடி அவனுக்காகவே காத்திருப்பதுபோல் அமர்ந்திருந்தாள் மாமி. ஏற்கனவே இலைபோட்டு தண்ணியெல்லாம் வைத்திருந்தாள்! மெஸ்ஸில் வேறுயாரும் இல்லை.
"புவனா, அய்யர்லாம் காணோம்?" என்றபடி இலைமுன் அமர்ந்தான் மூர்த்தி.
"அவா ஆஸ்பத்ரிக்குப் போயிருக்கா..புவனாவுக்கு இன்னும் வயித்துவலி நிக்கலே!"
"அடக்கடவுளே! ஏம்மாமி இப்டி?"
"நம்ம கையிலே என்னடாம்பீ இருக்கு! எல்லாம் ஆண்டவன் கையிலன்னா இருக்கு!" என்றபடி அவன் இலையில் தண்ணி தெளித்து ஆவிபறக்க நான்கு இட்லிகளை வைத்து கொத்தமல்லிச் சட்னியும் சாம்பாரும் ஊற்றினாள் மாமி: "நீ சுத்த சோம்பேறிடா கண்ணு! இலைக்குத் தண்ணிகூட நான் தெளிக்கவேண்டிருக்கு!"
"இல்லே மாமி..எக்கச்சக்கமா படிச்சு மண்டை கொழம்பிப்போச்சு!"
"ஏண்டாம்பீ..எழுந்துட்டியாடா..என்னமாத் தூங்குறே பேயாட்டம்! வரவர நீயும் புவனேஸ்வரி ஆயிட்டேடா, தூங்கி வழியிறதுலெ!" மாமியின் குரல் கதவைத்தாண்டி கேட்டுக்கொண்டிருந்தது.
"இதோ வர்ரேன் மாமீ.." நெகிழ்ந்திருந்த கைலியை அவிழ்த்து மீண்டும் சரியாய்க் கட்டிக்கொண்டு வெற்றுடம்புடன் கதவைத்திறந்தான் மூர்த்தி.
"மதியமும் நீ சரியாச் சாப்டலே! மணி எட்டாகுது..மூணுமணிக்கு தூங்க ஆரம்பிச்சவன்!"
"உடம்புக்கு சரியில்லே மாமி! அடிச்சுப் போட்டாப்லெ வருது!"
"பாத்தாலே தெரியறது, ஓம் ஒடம்பிருக்கற லட்சணம்! நன்னாச் சாப்டணும்! அப்பத்தான் உடம்பும் தேறும்! நல்லாவும் படிக்கலாம்! நீ ஒரு இட்லி, ரெண்டு இட்லின்னு சாப்ட்டா எப்டி உருப்படும் உடம்பு?"
"உடம்பு தேர்றதுன்னா ஊருக்குப் போய் கறி, மீனெல்லாம் சாப்டணும் மாமீ!"
"டே,கண்ணா! நேக்கு கறிமீன் சமைக்கத் தெரியாதுன்னு நெனைச்சுட்டியாடா...பத்துவருஷம் சமைச்சிருக்கேன், பாத்துக்கோ!"
"அது எங்கே மாமீ!" ஆச்சர்யமாய்க் கேட்டான் மூர்த்தி.
"அதெமட்டும் கேட்காதேடாம்பீ..இந்த அய்யர்கிட்டெ வர்ரதுக்கு முன்னாடி நடந்தது அதெல்லாம்.. அதெல்லாம் அப்றம் சொல்றேன்! இன்னும் நோக்குச் சொல்ல வேண்டியது நெறைய இருக்கு!" அவன் வெற்றுடம்பை உற்றுப் பார்த்தபடியே பேசிக்கொண்டிருந்தாள் மாமி.அறையின் ட்யூப் லைட் ஒளி திறந்திருந்த கதவின்வழி அவள் முகத்தில் படிந்து அவளது கச்சிதமான முக அமைப்பில் மேலும் மெருகூட்டியது.
"சீக்கிரம் வாடா! மெஸ்ஸே காலியாய்டுச்சு..உனக்காகத்தான் காத்திண்டிருக்கேன்!" சொல்லிவிட்டு மெஸ்ஸ¤க்குப் போய்விட்டாள். அவளது சற்றே குலுக்கலான நடையை அவள் பின்புறத்திலிருந்து கவனித்தான். அது அவனுள் ஒரு ரம்மிய உணர்வை எழுப்பிச் சென்றது.
"இந்தா வந்துட்டேன் மாமீ.." என்றவன், ஏதோவொரு வசியத்துக்கு ஆட்பட்டவனாய் ஒரு நீலநிற டீசர்ட்டை மாட்டிக்கொண்டு அவசரமாய் வெளிவந்தான். கதவைப் பூட்டாமல் வெளித்தாழ்ப்பாள் மட்டும் போட்டுவிட்டு, பாத்ரூம் போய் கைகால் முகம் அலம்பிக்கொண்டு மெஸ்சைநோக்கி விரைந்தான்..
வாசலைப் பார்த்தபடி அவனுக்காகவே காத்திருப்பதுபோல் அமர்ந்திருந்தாள் மாமி. ஏற்கனவே இலைபோட்டு தண்ணியெல்லாம் வைத்திருந்தாள்! மெஸ்ஸில் வேறுயாரும் இல்லை.
"புவனா, அய்யர்லாம் காணோம்?" என்றபடி இலைமுன் அமர்ந்தான் மூர்த்தி.
"அவா ஆஸ்பத்ரிக்குப் போயிருக்கா..புவனாவுக்கு இன்னும் வயித்துவலி நிக்கலே!"
"அடக்கடவுளே! ஏம்மாமி இப்டி?"
"நம்ம கையிலே என்னடாம்பீ இருக்கு! எல்லாம் ஆண்டவன் கையிலன்னா இருக்கு!" என்றபடி அவன் இலையில் தண்ணி தெளித்து ஆவிபறக்க நான்கு இட்லிகளை வைத்து கொத்தமல்லிச் சட்னியும் சாம்பாரும் ஊற்றினாள் மாமி: "நீ சுத்த சோம்பேறிடா கண்ணு! இலைக்குத் தண்ணிகூட நான் தெளிக்கவேண்டிருக்கு!"
"இல்லே மாமி..எக்கச்சக்கமா படிச்சு மண்டை கொழம்பிப்போச்சு!"
Guest- Guest
Re: பெண்ருசி (குறுநாவல்)
"ஓஹ்ஹோ! அப்டீங்களா சார்!! நீங்க என்ன படிச்சீங்கன்னு நேக்கு நன்னாத் தெரியும்!" மூர்த்திக்கு 'திக்' என்றாகிவிட்டது.ஒருவேளை நந்தினி கதை இவளுக்கும் தெரிந்துவிட்டதோ! அவளை இங்கு வேலைக்குச் சேர்த்துவிட நான் முயன்றது தவறோ! மாமியும் தன்மீது சந்தேகப் பட்டுவிட்டாளோ! நான் செய்வதெல்லாம் கொஞ்சம் அத்துமீறிய செயலோ!
"எதெவச்சு சொல்றீங்க மாமி, நான் ஒழுங்காப் படிக்கலேன்னு?" மல்லிகைப் பூப்போல் மென்மையாகவும் வெளேரென்றும் இருந்த இட்லியை விண்டு விழுங்கியபடி கேட்டான்.
"ம்ம்! நீ ஊர் சுத்திட்டிருந்தியோன்னோ, புதுக்குடி, அதுஇதுன்னு!அதெவெச்சு சொல்றேன்!"
"எப்டியோ படிச்சு சூப்பரா எழுதிட்டென் மாமி.."
"நாளான்னிக்கு எக்ஸாம் இருக்கோன்னோ! அதுக்குப் படிச்சிட்டியா? நல்லாத் தூங்கிட்டிருந்தா எப்டி பாஸாவே?" என்று கேட்டபடி அவனெதிரில் இருந்த மரப்பெஞ்சில் அட்னக்கால் போட்டு அமர்ந்து கொண்டாள் மாமி.மாமி 'மடிசாரில்' எப்போதும் இருந்ததில்லை. எல்லாரையும் போல் சாதாரணமாகத்தான் சேலைகட்டுவாள் அவள். இப்போது ஒருவித ஊதாநிறப் பூக்களாலான சேலை, அதேநிற சோளியில் அவள் மிகவும் களையாகத் தென்பட்டாள்.
"அடுத்த எக்ஸாமும் கலக்கிடுவேன் மாமி. உங்க ஆசீர்வாதம் இருக்கையிலே எனக்கென்ன பயம்! அதான் நடுவுலே ஒருநாள் 'சாலிடா' இருக்கே!"
"அதெல்லாம் ஓடிடுண்டாம்பீ.சரி, சாப்ட்டுப்போய் சமத்தா படிடா கண்ணூ!"
அவன் சாப்பிடுவதையே கண்கொட்டாமல் பார்த்தபடி எதையாவது பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தாள் மாமி.மூர்த்தி அவள் பேசுவதை உன்னிப்பாகக் கேட்டான். அவளது நிர்மலமான முகம். அதன் மலர்ச்சி.. அதன் உருவ ஒழுங்கு.அதன் நிறம்..அதன் நெகிழ்வு.. அதில் ததும்பும் ப்ரியம்...
"சின்ன வயசிலே இப்ப இருக்கறதைக் காட்டிலும் பலமடங்கு அழகா இருப்பேண்டாம்பீ! ஊர்லே எத்தனைபசங்க என்னை சுத்திசுத்தி வந்தானுங்க தெரியுமா! அதெல்லாம் பெரிய கதை! பேசிண்டிருந்தா விடிஞ்சே போய்டும்! அப்றம் நீ பரீட்சைக்குப் படிக்கமுடியாது!" என்றபடி எழுந்து மெஸ் வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்துவிட்டு திரும்பவும் அவனெதிரில் அட்னக்கால் போட்டு அமர்ந்தாள்: "புவனாவுக்கு வேறே எப்பப் பார்த்தாலும் உடம்பு சரியில்லாமெப் போய்டுதுடா..முன்னாடியே போயிட்டாங்க, இன்னும் காணோம் அவாளை.." அவள் முகத்தில் கவலையின் ரேகை தலைகாட்டியது. அதுவும்கூட அவளது அழகுக்கு அழகுசேர்த்ததைக் கவனித்தான் மூர்த்தி.தரையில் ஊன்றியிருந்த அவளது வலதுகால் விரலில் வெள்ளிமெட்டி மின்னி எதிரொளித்தது.சேலை சற்று மேலேறி, அவளது இடது முழங்காலின் சதைப்பரப்பு பளீரெனப் பளபளத்து அவன் கண்களைக் கூசச்செய்தது.
"இன்னும் ரெண்டு இட்லி வச்சுக்கோடாம்பீ.." மேலும் இரு இட்லிகளை இலையில் வைத்து மீண்டும் கொஞ்சம் கொத்தமல்லிச் சட்னியும் கொஞ்சம் சாம்பாரும் ஊற்றினாள்: "உனக்கு கொத்தமல்லிச் சட்னி ரொம்பப் பிடிக்குமேன்னு தனியா எடுத்து வச்சிட்டேன்..இல்லாட்டி இந்நேரம் தீர்ந்திருக்கும்!"
"ரொம்பத் தாங்க்ஸ் மாமீ.." அவனுக்குக் குரல் திக்கிற்று. இட்லியும் கொத்தமல்லிச் சட்னியின் வாசம்கலந்த ருசியும் அவனது பசியை மேலும்மேலும் தூண்டின.
"இன்னும் ரெண்டு இட்லி வைங்க மாமி!" ஆவலுடன் கேட்டான்.
"அடேங்கப்பா! எங்கண்ணே பட்டுடப் போறது! இன்னிக்கு எட்டு இட்லி சாப்ட்டே!" அவளது கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. அவளது கூரிய நாசிமேட்டில் வெள்ளைக்கல் மூக்குத்தி குழல்விளக்கொளியில் வைரமாய் ஒளிர்ந்தது.
அப்போது வாசலில் யாரோ வரும் அரவம் கேட்க,முதலில் புவனாவும், அவளுக்குப்பின்னே அய்யருமாய் ஆஸ்பத்ரியிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள்.
"எதெவச்சு சொல்றீங்க மாமி, நான் ஒழுங்காப் படிக்கலேன்னு?" மல்லிகைப் பூப்போல் மென்மையாகவும் வெளேரென்றும் இருந்த இட்லியை விண்டு விழுங்கியபடி கேட்டான்.
"ம்ம்! நீ ஊர் சுத்திட்டிருந்தியோன்னோ, புதுக்குடி, அதுஇதுன்னு!அதெவெச்சு சொல்றேன்!"
"எப்டியோ படிச்சு சூப்பரா எழுதிட்டென் மாமி.."
"நாளான்னிக்கு எக்ஸாம் இருக்கோன்னோ! அதுக்குப் படிச்சிட்டியா? நல்லாத் தூங்கிட்டிருந்தா எப்டி பாஸாவே?" என்று கேட்டபடி அவனெதிரில் இருந்த மரப்பெஞ்சில் அட்னக்கால் போட்டு அமர்ந்து கொண்டாள் மாமி.மாமி 'மடிசாரில்' எப்போதும் இருந்ததில்லை. எல்லாரையும் போல் சாதாரணமாகத்தான் சேலைகட்டுவாள் அவள். இப்போது ஒருவித ஊதாநிறப் பூக்களாலான சேலை, அதேநிற சோளியில் அவள் மிகவும் களையாகத் தென்பட்டாள்.
"அடுத்த எக்ஸாமும் கலக்கிடுவேன் மாமி. உங்க ஆசீர்வாதம் இருக்கையிலே எனக்கென்ன பயம்! அதான் நடுவுலே ஒருநாள் 'சாலிடா' இருக்கே!"
"அதெல்லாம் ஓடிடுண்டாம்பீ.சரி, சாப்ட்டுப்போய் சமத்தா படிடா கண்ணூ!"
அவன் சாப்பிடுவதையே கண்கொட்டாமல் பார்த்தபடி எதையாவது பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தாள் மாமி.மூர்த்தி அவள் பேசுவதை உன்னிப்பாகக் கேட்டான். அவளது நிர்மலமான முகம். அதன் மலர்ச்சி.. அதன் உருவ ஒழுங்கு.அதன் நிறம்..அதன் நெகிழ்வு.. அதில் ததும்பும் ப்ரியம்...
"சின்ன வயசிலே இப்ப இருக்கறதைக் காட்டிலும் பலமடங்கு அழகா இருப்பேண்டாம்பீ! ஊர்லே எத்தனைபசங்க என்னை சுத்திசுத்தி வந்தானுங்க தெரியுமா! அதெல்லாம் பெரிய கதை! பேசிண்டிருந்தா விடிஞ்சே போய்டும்! அப்றம் நீ பரீட்சைக்குப் படிக்கமுடியாது!" என்றபடி எழுந்து மெஸ் வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்துவிட்டு திரும்பவும் அவனெதிரில் அட்னக்கால் போட்டு அமர்ந்தாள்: "புவனாவுக்கு வேறே எப்பப் பார்த்தாலும் உடம்பு சரியில்லாமெப் போய்டுதுடா..முன்னாடியே போயிட்டாங்க, இன்னும் காணோம் அவாளை.." அவள் முகத்தில் கவலையின் ரேகை தலைகாட்டியது. அதுவும்கூட அவளது அழகுக்கு அழகுசேர்த்ததைக் கவனித்தான் மூர்த்தி.தரையில் ஊன்றியிருந்த அவளது வலதுகால் விரலில் வெள்ளிமெட்டி மின்னி எதிரொளித்தது.சேலை சற்று மேலேறி, அவளது இடது முழங்காலின் சதைப்பரப்பு பளீரெனப் பளபளத்து அவன் கண்களைக் கூசச்செய்தது.
"இன்னும் ரெண்டு இட்லி வச்சுக்கோடாம்பீ.." மேலும் இரு இட்லிகளை இலையில் வைத்து மீண்டும் கொஞ்சம் கொத்தமல்லிச் சட்னியும் கொஞ்சம் சாம்பாரும் ஊற்றினாள்: "உனக்கு கொத்தமல்லிச் சட்னி ரொம்பப் பிடிக்குமேன்னு தனியா எடுத்து வச்சிட்டேன்..இல்லாட்டி இந்நேரம் தீர்ந்திருக்கும்!"
"ரொம்பத் தாங்க்ஸ் மாமீ.." அவனுக்குக் குரல் திக்கிற்று. இட்லியும் கொத்தமல்லிச் சட்னியின் வாசம்கலந்த ருசியும் அவனது பசியை மேலும்மேலும் தூண்டின.
"இன்னும் ரெண்டு இட்லி வைங்க மாமி!" ஆவலுடன் கேட்டான்.
"அடேங்கப்பா! எங்கண்ணே பட்டுடப் போறது! இன்னிக்கு எட்டு இட்லி சாப்ட்டே!" அவளது கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. அவளது கூரிய நாசிமேட்டில் வெள்ளைக்கல் மூக்குத்தி குழல்விளக்கொளியில் வைரமாய் ஒளிர்ந்தது.
அப்போது வாசலில் யாரோ வரும் அரவம் கேட்க,முதலில் புவனாவும், அவளுக்குப்பின்னே அய்யருமாய் ஆஸ்பத்ரியிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள்.
Guest- Guest
Re: பெண்ருசி (குறுநாவல்)
"ஓஹ்ஹோ! அப்டீங்களா சார்!! நீங்க என்ன படிச்சீங்கன்னு நேக்கு நன்னாத் தெரியும்!" மூர்த்திக்கு 'திக்' என்றாகிவிட்டது.ஒருவேளை நந்தினி கதை இவளுக்கும் தெரிந்துவிட்டதோ! அவளை இங்கு வேலைக்குச் சேர்த்துவிட நான் முயன்றது தவறோ! மாமியும் தன்மீது சந்தேகப் பட்டுவிட்டாளோ! நான் செய்வதெல்லாம் கொஞ்சம் அத்துமீறிய செயலோ!
"எதெவச்சு சொல்றீங்க மாமி, நான் ஒழுங்காப் படிக்கலேன்னு?" மல்லிகைப் பூப்போல் மென்மையாகவும் வெளேரென்றும் இருந்த இட்லியை விண்டு விழுங்கியபடி கேட்டான்.
"ம்ம்! நீ ஊர் சுத்திட்டிருந்தியோன்னோ, புதுக்குடி, அதுஇதுன்னு!அதெவெச்சு சொல்றேன்!"
"எப்டியோ படிச்சு சூப்பரா எழுதிட்டென் மாமி.."
"நாளான்னிக்கு எக்ஸாம் இருக்கோன்னோ! அதுக்குப் படிச்சிட்டியா? நல்லாத் தூங்கிட்டிருந்தா எப்டி பாஸாவே?" என்று கேட்டபடி அவனெதிரில் இருந்த மரப்பெஞ்சில் அட்னக்கால் போட்டு அமர்ந்து கொண்டாள் மாமி.மாமி 'மடிசாரில்' எப்போதும் இருந்ததில்லை. எல்லாரையும் போல் சாதாரணமாகத்தான் சேலைகட்டுவாள் அவள். இப்போது ஒருவித ஊதாநிறப் பூக்களாலான சேலை, அதேநிற சோளியில் அவள் மிகவும் களையாகத் தென்பட்டாள்.
"அடுத்த எக்ஸாமும் கலக்கிடுவேன் மாமி. உங்க ஆசீர்வாதம் இருக்கையிலே எனக்கென்ன பயம்! அதான் நடுவுலே ஒருநாள் 'சாலிடா' இருக்கே!"
"அதெல்லாம் ஓடிடுண்டாம்பீ.சரி, சாப்ட்டுப்போய் சமத்தா படிடா கண்ணூ!"
அவன் சாப்பிடுவதையே கண்கொட்டாமல் பார்த்தபடி எதையாவது பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தாள் மாமி.மூர்த்தி அவள் பேசுவதை உன்னிப்பாகக் கேட்டான். அவளது நிர்மலமான முகம். அதன் மலர்ச்சி.. அதன் உருவ ஒழுங்கு.அதன் நிறம்..அதன் நெகிழ்வு.. அதில் ததும்பும் ப்ரியம்...
"சின்ன வயசிலே இப்ப இருக்கறதைக் காட்டிலும் பலமடங்கு அழகா இருப்பேண்டாம்பீ! ஊர்லே எத்தனைபசங்க என்னை சுத்திசுத்தி வந்தானுங்க தெரியுமா! அதெல்லாம் பெரிய கதை! பேசிண்டிருந்தா விடிஞ்சே போய்டும்! அப்றம் நீ பரீட்சைக்குப் படிக்கமுடியாது!" என்றபடி எழுந்து மெஸ் வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்துவிட்டு திரும்பவும் அவனெதிரில் அட்னக்கால் போட்டு அமர்ந்தாள்: "புவனாவுக்கு வேறே எப்பப் பார்த்தாலும் உடம்பு சரியில்லாமெப் போய்டுதுடா..முன்னாடியே போயிட்டாங்க, இன்னும் காணோம் அவாளை.." அவள் முகத்தில் கவலையின் ரேகை தலைகாட்டியது. அதுவும்கூட அவளது அழகுக்கு அழகுசேர்த்ததைக் கவனித்தான் மூர்த்தி.தரையில் ஊன்றியிருந்த அவளது வலதுகால் விரலில் வெள்ளிமெட்டி மின்னி எதிரொளித்தது.சேலை சற்று மேலேறி, அவளது இடது முழங்காலின் சதைப்பரப்பு பளீரெனப் பளபளத்து அவன் கண்களைக் கூசச்செய்தது.
"இன்னும் ரெண்டு இட்லி வச்சுக்கோடாம்பீ.." மேலும் இரு இட்லிகளை இலையில் வைத்து மீண்டும் கொஞ்சம் கொத்தமல்லிச் சட்னியும் கொஞ்சம் சாம்பாரும் ஊற்றினாள்: "உனக்கு கொத்தமல்லிச் சட்னி ரொம்பப் பிடிக்குமேன்னு தனியா எடுத்து வச்சிட்டேன்..இல்லாட்டி இந்நேரம் தீர்ந்திருக்கும்!"
"ரொம்பத் தாங்க்ஸ் மாமீ.." அவனுக்குக் குரல் திக்கிற்று. இட்லியும் கொத்தமல்லிச் சட்னியின் வாசம்கலந்த ருசியும் அவனது பசியை மேலும்மேலும் தூண்டின.
"இன்னும் ரெண்டு இட்லி வைங்க மாமி!" ஆவலுடன் கேட்டான்.
"அடேங்கப்பா! எங்கண்ணே பட்டுடப் போறது! இன்னிக்கு எட்டு இட்லி சாப்ட்டே!" அவளது கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. அவளது கூரிய நாசிமேட்டில் வெள்ளைக்கல் மூக்குத்தி குழல்விளக்கொளியில் வைரமாய் ஒளிர்ந்தது.
அப்போது வாசலில் யாரோ வரும் அரவம் கேட்க,முதலில் புவனாவும், அவளுக்குப்பின்னே அய்யருமாய் ஆஸ்பத்ரியிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள்.
"எதெவச்சு சொல்றீங்க மாமி, நான் ஒழுங்காப் படிக்கலேன்னு?" மல்லிகைப் பூப்போல் மென்மையாகவும் வெளேரென்றும் இருந்த இட்லியை விண்டு விழுங்கியபடி கேட்டான்.
"ம்ம்! நீ ஊர் சுத்திட்டிருந்தியோன்னோ, புதுக்குடி, அதுஇதுன்னு!அதெவெச்சு சொல்றேன்!"
"எப்டியோ படிச்சு சூப்பரா எழுதிட்டென் மாமி.."
"நாளான்னிக்கு எக்ஸாம் இருக்கோன்னோ! அதுக்குப் படிச்சிட்டியா? நல்லாத் தூங்கிட்டிருந்தா எப்டி பாஸாவே?" என்று கேட்டபடி அவனெதிரில் இருந்த மரப்பெஞ்சில் அட்னக்கால் போட்டு அமர்ந்து கொண்டாள் மாமி.மாமி 'மடிசாரில்' எப்போதும் இருந்ததில்லை. எல்லாரையும் போல் சாதாரணமாகத்தான் சேலைகட்டுவாள் அவள். இப்போது ஒருவித ஊதாநிறப் பூக்களாலான சேலை, அதேநிற சோளியில் அவள் மிகவும் களையாகத் தென்பட்டாள்.
"அடுத்த எக்ஸாமும் கலக்கிடுவேன் மாமி. உங்க ஆசீர்வாதம் இருக்கையிலே எனக்கென்ன பயம்! அதான் நடுவுலே ஒருநாள் 'சாலிடா' இருக்கே!"
"அதெல்லாம் ஓடிடுண்டாம்பீ.சரி, சாப்ட்டுப்போய் சமத்தா படிடா கண்ணூ!"
அவன் சாப்பிடுவதையே கண்கொட்டாமல் பார்த்தபடி எதையாவது பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தாள் மாமி.மூர்த்தி அவள் பேசுவதை உன்னிப்பாகக் கேட்டான். அவளது நிர்மலமான முகம். அதன் மலர்ச்சி.. அதன் உருவ ஒழுங்கு.அதன் நிறம்..அதன் நெகிழ்வு.. அதில் ததும்பும் ப்ரியம்...
"சின்ன வயசிலே இப்ப இருக்கறதைக் காட்டிலும் பலமடங்கு அழகா இருப்பேண்டாம்பீ! ஊர்லே எத்தனைபசங்க என்னை சுத்திசுத்தி வந்தானுங்க தெரியுமா! அதெல்லாம் பெரிய கதை! பேசிண்டிருந்தா விடிஞ்சே போய்டும்! அப்றம் நீ பரீட்சைக்குப் படிக்கமுடியாது!" என்றபடி எழுந்து மெஸ் வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்துவிட்டு திரும்பவும் அவனெதிரில் அட்னக்கால் போட்டு அமர்ந்தாள்: "புவனாவுக்கு வேறே எப்பப் பார்த்தாலும் உடம்பு சரியில்லாமெப் போய்டுதுடா..முன்னாடியே போயிட்டாங்க, இன்னும் காணோம் அவாளை.." அவள் முகத்தில் கவலையின் ரேகை தலைகாட்டியது. அதுவும்கூட அவளது அழகுக்கு அழகுசேர்த்ததைக் கவனித்தான் மூர்த்தி.தரையில் ஊன்றியிருந்த அவளது வலதுகால் விரலில் வெள்ளிமெட்டி மின்னி எதிரொளித்தது.சேலை சற்று மேலேறி, அவளது இடது முழங்காலின் சதைப்பரப்பு பளீரெனப் பளபளத்து அவன் கண்களைக் கூசச்செய்தது.
"இன்னும் ரெண்டு இட்லி வச்சுக்கோடாம்பீ.." மேலும் இரு இட்லிகளை இலையில் வைத்து மீண்டும் கொஞ்சம் கொத்தமல்லிச் சட்னியும் கொஞ்சம் சாம்பாரும் ஊற்றினாள்: "உனக்கு கொத்தமல்லிச் சட்னி ரொம்பப் பிடிக்குமேன்னு தனியா எடுத்து வச்சிட்டேன்..இல்லாட்டி இந்நேரம் தீர்ந்திருக்கும்!"
"ரொம்பத் தாங்க்ஸ் மாமீ.." அவனுக்குக் குரல் திக்கிற்று. இட்லியும் கொத்தமல்லிச் சட்னியின் வாசம்கலந்த ருசியும் அவனது பசியை மேலும்மேலும் தூண்டின.
"இன்னும் ரெண்டு இட்லி வைங்க மாமி!" ஆவலுடன் கேட்டான்.
"அடேங்கப்பா! எங்கண்ணே பட்டுடப் போறது! இன்னிக்கு எட்டு இட்லி சாப்ட்டே!" அவளது கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. அவளது கூரிய நாசிமேட்டில் வெள்ளைக்கல் மூக்குத்தி குழல்விளக்கொளியில் வைரமாய் ஒளிர்ந்தது.
அப்போது வாசலில் யாரோ வரும் அரவம் கேட்க,முதலில் புவனாவும், அவளுக்குப்பின்னே அய்யருமாய் ஆஸ்பத்ரியிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள்.
Guest- Guest
Re: பெண்ருசி (குறுநாவல்)
மாமி வீட்டு மொட்டைமாடியின் டைல்ஸ் தரையில் இரு கைகளையும் தலைக்கு முட்டுக்கொடுத்து வானம் பார்த்துப் படுத்திருந்தான் மூர்த்தி. காலை வானம் மேகங்களற்று நிர்மலமாய் தன் வழக்கமான நீல நிறத்தைத் துறந்து வெண்ணிறமாய் விரிந்து கிடந்தது. வெந்நிற முண்டா பனியன் மூர்த்தியின் மெலிந்த தேகத்தில் தொளதொளத்துக் கிடக்க, நீலக் கட்டம் போட்ட கைலியொன்று அவன் இடைப் பகுதியில் ஏனோதானோவென்று தளர்வாய்க் கிடந்தது.
இரவு அவன் கீழறையில் தங்கவில்லை. படிப்பதற்கான 'மூட்' கீழறையில் அவனுக்கு வராமல்போயிற்று. மாமிதான் 'மேலே போய் தனிமையிலே படிடா கண்ணூ! இங்கேயிருந்தியானா நானும் ஏதாவது தொந்தரவு பண்ணின்டே இருப்பேன்..நா இல்லாட்டி புவனா வந்து உங்கிட்டே அறுப்பா.. பேசாமெ மேலே போயிடு.. அங்கெதான் டேபிள், நாற்காலி, ஒரு பழைய மரக்கட்டில் எல்லாம் கெடக்கே..!' என்று சொல்லிவிட்டு சிரித்தாள். மாமி எப்போது எதற்காகச் சிரிக்கிறாள் என்பதைக் கண்டுபிடிப்பது மூர்த்திக்கு அவ்வளவு சுலபமாயில்லை. அவள் எப்போதும் கனவுலகில் சஞ்சரிப்பவளாயும், எப்போதும் ஒருவித பேரானந்தத்தில் திளைத்திருப்பவளாகவும் அவனுக்குத் தோணிற்று.
"சரி மாமி..இன்னைக்கு அங்கேபோய் படிச்சுப் பார்க்குறேன்..எப்படி எல்லாம் இந்த மரமண்டையில் ஏறுதுன்னு பாப்போம்!" என்று சொல்லிவிட்டு,மொட்டைமாடிக்குப் போனான். அவன் பின்னாலேயே படியேறிவந்த மாமி, குடிசைக்குள்போய் ட்யூப் லைட்டைப்போட்டு, அந்த அறையைக் கூட்டிப்பெருக்கிச் சுத்தமாக்கிவிட்டுப் பிறகுதான் போனாள். அப்போது எட்டு மணியிருக்கும். அந்தக் கீற்றுக் குடிலில் இரவு பனிரெண்டு மணி வரை படித்துக்கொண்டிருந்தான். மாமி சொன்னது சரிதான். கொஞ்சம் சுலபமாகவே பாடங்களின் பகுதிகள் மண்டையில் ஏறின! ஆனாலும் படிப்பின் ஊடான ஓய்வுக் காலத்தில் அவன் கண்கள் வண்ணவண்ணக் கனாக்களுள் மூழ்கிச் சுழன்றன! பாதிநேரம் படிப்பிலும், பாதிநேரம் மொய்க்கும் கனாக்களிலும் கழிந்தது..
தட்ஷிணியைப் பற்றிய நினைவுக் குமிழ்களுள் அவன் மூளைப்பரப்பு வெகுநேரம் அலைந்து அல்லாடிக் கொண்டிருந்தது. தட்ஷிணிக்கும் அவனுக்கும் ஏதோவொரு அடர்த்தியான பூர்வஜென்மத் தொடர்பு இருப்பதாய்ப்பட்டது! அதனால்தானே அவன் இதுவரை பார்த்த அத்தனை பெண்களில், தட்ஷிணி மட்டும் அவனை வலுமிக்க காந்தமாய்க் கவர்ந்திழுத்து அவளை நினைக்கும் க்ஷணத்தில் அவன் உயிரோடு ஒன்றி உறவாட ஆரம்பிக்கிறாள்! அத்தனை பெண்முகங்களில் தட்ஷிணியின் முகம் மட்டும் ஏன் அவனோடு பச்சைப்பசையாய் பச்சென ஒட்டிக்கொள்கிறது? நினைத்தாலே உள் நுழைந்து அனுபவமாகி ருசிக்கும் அவளை எப்படி மறப்பது?
நினைவோட்டத்தின் ஊடாக அவ்வப்போது நந்தினியும் வந்து போகாமல் இல்லை! நந்தினி அவனுக்கு பரிசளித்திருந்த அந்த 'முதல் அனுபவம்' அவனை முழுசாய் ஆட்கொண்டு அலைக்களித்தது. அந்த நினைவு அவன் உடலில் புதிய வேதிமாற்றத்தை நிகழ்த்தியிருப்பதை உணர்ந்தான். அதுவே அவனை மீண்டும் மீண்டும் நந்தினியை நோக்கிச் செலுத்துகிறது என்பதை அவன் உணராமல் இல்லை.
சூரியன் இப்போது இன்னும் மேலேறியிருந்தான். மணி இப்போது ஏழரைக்குமேல் இருக்கும். டைல்ஸ் தரை சூடாக அவன் முதுகுப்பரப்பிலும் கால்களிலும் வெதுவெதுத்தது.
இப்போது நான் எந்தச் சக்தியின் பிடியில்..? என் சுழற்சிக்கான அச்சாணி எது..? மாமி மீது எனக்கும் என் மீது மாமிக்கும் இருக்கும் ஈர்ப்பின் பேர் என்ன..! இதையெல்லாம் யார் 'டி·பைன்' பண்ணுவது! யாராவது இதை வரையறுத்திருக்கிறார்களா!
இப்படி விளங்கிக்கொள்ள முடியாத, கட்டுப்படுத்த இயலாததொரு ஈர்ப்பு எப்படி, எங்கிருந்து, எந்த க்ஷணத்தில் என்னுள் முளைவிட்டது? அதன் மூலவேர் எது? எல்லாம் பூர்வஜென்ம வாசனைகளின் செயல்பாடோ!
அப்படியானால், என் வாழ்வில் நந்தினியின் இடம்தான் என்ன! அவள் ஏன் என்னுள் அதிரடியாய்ப் புகுந்தாள்? அவள்மீது எனக்கிருக்கும் ஈர்ப்பு எத்தனை சதவீதம் உண்மை? அது வெறும் உடல்ரீதியான ஈர்ப்புதானா அதற்கும் மேலா..? நந்தினி மீதான பிடிப்புக்குக் காரணம் அவள் தனக்கு மிக எளிதில் எப்போதும் கிடைத்துவிடக்கூடியவள் என்ற உணர்வுதானோ!
காசு,பணம்,ஜாதி,ஊர்,பேர், வயசு வித்யாசம் இதெல்லாம் பார்த்துக்கொண்டா எல்லாம் வருது!
மூர்த்தி வானத்தை ஆழ்ந்து பார்த்தபடி பெருமூச்சுவிட்டான்.. டைல்ஸ் தரையின் சூடு அவன் நினைவோட்டங்களுக்கு பின்புலமாகி இதமளித்தது. ஒருக்களித்து எழுந்து கைகளைப் பின்னால் ஊன்றி கால்களை நீட்டி ஓய்வாக அமர்ந்துகொண்டான்.
வலது தோள்பட்டையில் சுள்ளிட்டுக் கூசியது ஏறுவெயில். அது அவன் உடம்பின் உள்ளாழத்தில் போதையாய் இறங்கி மொத்த உடலையும் கதகதக்கச் செய்தது.
மாடிப்படியில் கொலுசுச் சத்தம். தலைதிருப்பிப் பார்த்தான்... களைத்தமுகத்துடன் புவனா மெதுவாய்ப் படியேறி வந்தாள். அவள் போட்டிருந்த பழசாகி நைந்திருந்த காவி வண்ணச் சுடிதார் அவள் சோர்ந்த முகத்தை மேலும் சோர்வாக்கிக் காட்டியது. கைப்பிடிச் சுவரில் மெதுவாக அமர்ந்து அவனை நோக்கிப் புன்னகைத்தாள் புவனா,
இரவு அவன் கீழறையில் தங்கவில்லை. படிப்பதற்கான 'மூட்' கீழறையில் அவனுக்கு வராமல்போயிற்று. மாமிதான் 'மேலே போய் தனிமையிலே படிடா கண்ணூ! இங்கேயிருந்தியானா நானும் ஏதாவது தொந்தரவு பண்ணின்டே இருப்பேன்..நா இல்லாட்டி புவனா வந்து உங்கிட்டே அறுப்பா.. பேசாமெ மேலே போயிடு.. அங்கெதான் டேபிள், நாற்காலி, ஒரு பழைய மரக்கட்டில் எல்லாம் கெடக்கே..!' என்று சொல்லிவிட்டு சிரித்தாள். மாமி எப்போது எதற்காகச் சிரிக்கிறாள் என்பதைக் கண்டுபிடிப்பது மூர்த்திக்கு அவ்வளவு சுலபமாயில்லை. அவள் எப்போதும் கனவுலகில் சஞ்சரிப்பவளாயும், எப்போதும் ஒருவித பேரானந்தத்தில் திளைத்திருப்பவளாகவும் அவனுக்குத் தோணிற்று.
"சரி மாமி..இன்னைக்கு அங்கேபோய் படிச்சுப் பார்க்குறேன்..எப்படி எல்லாம் இந்த மரமண்டையில் ஏறுதுன்னு பாப்போம்!" என்று சொல்லிவிட்டு,மொட்டைமாடிக்குப் போனான். அவன் பின்னாலேயே படியேறிவந்த மாமி, குடிசைக்குள்போய் ட்யூப் லைட்டைப்போட்டு, அந்த அறையைக் கூட்டிப்பெருக்கிச் சுத்தமாக்கிவிட்டுப் பிறகுதான் போனாள். அப்போது எட்டு மணியிருக்கும். அந்தக் கீற்றுக் குடிலில் இரவு பனிரெண்டு மணி வரை படித்துக்கொண்டிருந்தான். மாமி சொன்னது சரிதான். கொஞ்சம் சுலபமாகவே பாடங்களின் பகுதிகள் மண்டையில் ஏறின! ஆனாலும் படிப்பின் ஊடான ஓய்வுக் காலத்தில் அவன் கண்கள் வண்ணவண்ணக் கனாக்களுள் மூழ்கிச் சுழன்றன! பாதிநேரம் படிப்பிலும், பாதிநேரம் மொய்க்கும் கனாக்களிலும் கழிந்தது..
தட்ஷிணியைப் பற்றிய நினைவுக் குமிழ்களுள் அவன் மூளைப்பரப்பு வெகுநேரம் அலைந்து அல்லாடிக் கொண்டிருந்தது. தட்ஷிணிக்கும் அவனுக்கும் ஏதோவொரு அடர்த்தியான பூர்வஜென்மத் தொடர்பு இருப்பதாய்ப்பட்டது! அதனால்தானே அவன் இதுவரை பார்த்த அத்தனை பெண்களில், தட்ஷிணி மட்டும் அவனை வலுமிக்க காந்தமாய்க் கவர்ந்திழுத்து அவளை நினைக்கும் க்ஷணத்தில் அவன் உயிரோடு ஒன்றி உறவாட ஆரம்பிக்கிறாள்! அத்தனை பெண்முகங்களில் தட்ஷிணியின் முகம் மட்டும் ஏன் அவனோடு பச்சைப்பசையாய் பச்சென ஒட்டிக்கொள்கிறது? நினைத்தாலே உள் நுழைந்து அனுபவமாகி ருசிக்கும் அவளை எப்படி மறப்பது?
நினைவோட்டத்தின் ஊடாக அவ்வப்போது நந்தினியும் வந்து போகாமல் இல்லை! நந்தினி அவனுக்கு பரிசளித்திருந்த அந்த 'முதல் அனுபவம்' அவனை முழுசாய் ஆட்கொண்டு அலைக்களித்தது. அந்த நினைவு அவன் உடலில் புதிய வேதிமாற்றத்தை நிகழ்த்தியிருப்பதை உணர்ந்தான். அதுவே அவனை மீண்டும் மீண்டும் நந்தினியை நோக்கிச் செலுத்துகிறது என்பதை அவன் உணராமல் இல்லை.
சூரியன் இப்போது இன்னும் மேலேறியிருந்தான். மணி இப்போது ஏழரைக்குமேல் இருக்கும். டைல்ஸ் தரை சூடாக அவன் முதுகுப்பரப்பிலும் கால்களிலும் வெதுவெதுத்தது.
இப்போது நான் எந்தச் சக்தியின் பிடியில்..? என் சுழற்சிக்கான அச்சாணி எது..? மாமி மீது எனக்கும் என் மீது மாமிக்கும் இருக்கும் ஈர்ப்பின் பேர் என்ன..! இதையெல்லாம் யார் 'டி·பைன்' பண்ணுவது! யாராவது இதை வரையறுத்திருக்கிறார்களா!
இப்படி விளங்கிக்கொள்ள முடியாத, கட்டுப்படுத்த இயலாததொரு ஈர்ப்பு எப்படி, எங்கிருந்து, எந்த க்ஷணத்தில் என்னுள் முளைவிட்டது? அதன் மூலவேர் எது? எல்லாம் பூர்வஜென்ம வாசனைகளின் செயல்பாடோ!
அப்படியானால், என் வாழ்வில் நந்தினியின் இடம்தான் என்ன! அவள் ஏன் என்னுள் அதிரடியாய்ப் புகுந்தாள்? அவள்மீது எனக்கிருக்கும் ஈர்ப்பு எத்தனை சதவீதம் உண்மை? அது வெறும் உடல்ரீதியான ஈர்ப்புதானா அதற்கும் மேலா..? நந்தினி மீதான பிடிப்புக்குக் காரணம் அவள் தனக்கு மிக எளிதில் எப்போதும் கிடைத்துவிடக்கூடியவள் என்ற உணர்வுதானோ!
காசு,பணம்,ஜாதி,ஊர்,பேர், வயசு வித்யாசம் இதெல்லாம் பார்த்துக்கொண்டா எல்லாம் வருது!
மூர்த்தி வானத்தை ஆழ்ந்து பார்த்தபடி பெருமூச்சுவிட்டான்.. டைல்ஸ் தரையின் சூடு அவன் நினைவோட்டங்களுக்கு பின்புலமாகி இதமளித்தது. ஒருக்களித்து எழுந்து கைகளைப் பின்னால் ஊன்றி கால்களை நீட்டி ஓய்வாக அமர்ந்துகொண்டான்.
வலது தோள்பட்டையில் சுள்ளிட்டுக் கூசியது ஏறுவெயில். அது அவன் உடம்பின் உள்ளாழத்தில் போதையாய் இறங்கி மொத்த உடலையும் கதகதக்கச் செய்தது.
மாடிப்படியில் கொலுசுச் சத்தம். தலைதிருப்பிப் பார்த்தான்... களைத்தமுகத்துடன் புவனா மெதுவாய்ப் படியேறி வந்தாள். அவள் போட்டிருந்த பழசாகி நைந்திருந்த காவி வண்ணச் சுடிதார் அவள் சோர்ந்த முகத்தை மேலும் சோர்வாக்கிக் காட்டியது. கைப்பிடிச் சுவரில் மெதுவாக அமர்ந்து அவனை நோக்கிப் புன்னகைத்தாள் புவனா,
Guest- Guest
Re: பெண்ருசி (குறுநாவல்)
"இங்கெதான் இருந்தீங்களா.. உங்ககிட்டப் பேசி ரொம்ப நாளாச்சு. நான் செத்துப்போய்ருவேன்னுதான் நெனைச்சேன்! ஏதோ பொழைச்சுக்கிட்டேன்.. பொழைச்சு என்னாகப்போறது! பேசாமெ போயிருந்திருக்கலாம்..!" புவனாவின் வறண்டு வற்றிய அகண்ட கண்களிரண்டும் இப்போது நீர் முட்டும் தருவாய்க்கு வந்திருந்தன.
"ஏம்புவனா இப்டியே பேசுறே! உனக்கென்ன கொறைச்சல் இப்போ?" மூர்த்தி எழுந்து புவனாவுக்கருகில் போய் கைப்பிடிச்சுவரில் உட்கார்ந்து கொண்டான்,"எப்பப்பார்த்தாலும் ஏன் இப்டியே பேசிட்டிருக்கே, கொழந்தையாட்டம்! கொஞ்சம் 'மெச்சூர்டா' இருந்தா என்ன!"
"எனக்கு அதெல்லாம் தெரியாது மூர்த்தி! எனக்கு அம்மா இல்லெ! அப்பாகிட்டெ எதையும் பேசமுடியலெ! உங்களைப் பாத்தா எனக்கு எங்கம்மா ஞாபகம் வர்றது மூர்த்தி!" முகத்தில் கைகளைப் பொத்தி அழுகையில் குழுங்கினாள் புவனா..அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஒரு குழந்தையைப் பார்ப்பதுபோல் இருந்தது!
சட்டென எழுந்து புவனாவ்¢ன் கன்னத்தில் முத்துமுத்தாய் உருண்டோடிய கண்ணீரைத் தன் விரல்களால் துடைத்து விட்டான் மூர்த்தி, "புவனா..கவலைப்படாதே! நான் இங்கேயேதான் இருப்பேன்! திரும்பவும் ஹாஸ்டலுக்குப் போயிடமாட்டேன்!"
"அப்போ! ஹாஸ்டலுக்கு திரும்பிப்போற ஐடியா வேறே இருந்துச்சா மூர்த்தீ..?" சற்று அதிர்ந்தவளாய்க் கேட்டாள் புவனேஸ்வரி.
சட்டெனச் சுதாரித்துக்கொண்டான் மூர்த்தி...தன் உள்மனத்தில் ஒளிந்திருந்த எண்ணம்,இப்போது அப்பட்டமாய் வெளிப்பட்டுவிட்டது! தட்ஷிணிக்காக, பரீட்சை முடிந்து மீண்டும் ஹாஸ்டலுக்கே திரும்பிவிடும் எண்ணம் அவன் அவனுள் முளைவிட்டிருந்ததை இப்போதுதான் அவனே உணர்கிறான்! இந்தப்புவனா அநாதைக்குழந்தையாய் தன் காலை இப்படிச் சுற்றிச்சுற்றி வருகிறாளே!
சிலவினாடிகள் அவன் முகத்தையே உற்றுப்பார்த்தபடி இருந்தாள் புவனா. அவனும் சிறிதுநேரம் புவனாவின் கண்களையும் அதில் பொங்கிவழியும் ஏக்கம், சோர்வு, இயலாமை, வருத்தம், வலி ஆகியவற்றையும் கண்ணுற்றான்! புவனாவுக்கு உடனடியாக வேண்டுவது தாய்ப்பாசம்! இவள் இன்னும் வளர்ச்சியடையாத பச்சிளங் குழந்தைதான்!
"சொல்லுங்கோ ஸார்! ஏன் பேசமாட்டேங்கிறேள்? ஹாஸ்டலுக்குத் திரும்பிப்போற ஐடியா வேறெ இருக்குதா!"
"ம்ம்!? இல்லே..வந்து.."
"நான் வர்றேன் ஸார்."” லேசாய் தடுமாறியபடி எழுந்து மாடிப்படியின் ஓரச்சுவரைப்பிடித்தபடி இறங்கிப்போன்னாள் புவனா. அவள் முகத்தில் ஆக்ரோஷம் முகம் காட்டுவதை உணர்ந்துகொண்டான் மூர்த்தி. 'ஏந்தான் இவள் இப்படியிருக்காளோ' என்று தோணிற்று.. ஒருகணம் மிகவும் குழம்பிப்போனான்.
புவனா ஏன் இப்படியிருக்கிறாள்..? சடக்,சடக்கென்று இவளுக்கு கோபம் வருவதேன்..? மாமியிடமும், அய்யரிடமும் கூட இவள் இப்படித்தானே நடந்துகொள்கிறாள்! ஏன் மாமியை இவள் மாற்றாந்தாயாகவே பார்க்கிறாள்! மாமி இவளுக்கு ஓரவஞ்சனையாக எதுவும் செய்வதாய்த் தெரியவில்லையே! உடம்புக்கு சரியில்லாமல் புவனா படுக்கையில் படுத்துக்கிடந்தபோது கூட இவளை கண்ணுங்கருத்துமாய் நல்லாத்தானே பார்த்துக்கொண்டாள் மாமி! புவனாவுக்கு உண்மையில் வேண்டுவது என்ன?
மாமிக்குத்தான் என்னால் என்ன ஆகப்போகுது? ஏன் அவள் இப்படி பைத்தியகாரத்தனமான ப்ரியத்தை என்மீது பொழிந்து தொலைக்கிறாள்! தட்ஷிணிக்கு என்னிடம் ஏனிந்தப் பிடிப்பு, ஏனிந்த உரிமை..? வனஜாவைப் பார்க்கும்போது எனக்கு ஏன் சகோதரியைப் பார்ப்பதுப்பொல் இருக்கிறது!? அட, அந்தப் புதுக்குடிக்காரி நந்தினியிடம் அப்படியென்ன அழகு கொட்டிக்கிடக்குது? அவள் எலும்பும் தோலுமாய்த்தானே இருக்கிறாள்.. அவளது ஈர்ப்புவட்டத்துக்குள் நான் எப்படி விழுந்தேன்?! அவளை உயிர்பிழைக்கச் செய்ததன் தாத்பர்யம் என்ன?
மூர்த்திக்குத் தலைசுற்றியது..சூரியன் இப்போது இன்னும் தகதகப்புடன் மேலேறி கூரிய புத்தம்புதுக் கதிர்களை அவன் முகத்தில் பாய்ச்சிற்று..மூர்த்தி தன் தலையில் கைவைத்துப் பார்த்தான். அவன் தலை இப்போது நன்கு சூடுகண்டிருந்தது.
எழுந்து பின்கோடியிலிருந்த குடிலுக்கு நடந்தான். அவனுக்கு கிறுகிறுப்பாக வந்தது. தூங்கியெழுந்து இன்னும் முகத்தைக்கூடக் கழுவவில்லை! குடிலில் இருந்த பழைய மரமேசை மீதிருந்த பாடப்புத்தகம், நோட்டுகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். அப்போது மாடிப்படியில் அவனைத்தேடிக்கொண்டு மேலேறிவந்தாள் மாமி. ஏறுவெயில் அவளது மெல்லிய வாடாமல்லி நிற ஜரிகைச்சேலையில்பட்டு அவள் மேனியை ஜ்வலிக்கச் செய்தது. அப்போது அவனுக்கு கோயிலில் பார்த்த மஞ்சள் காப்பிடப்பட்ட அம்மனின் முகம் ஞாபகத்துக்கு வந்தது. மெலிதாய்ப் புன்னகைத்தபடி தன்னை நெருங்கிவரும் மாமியிடமிருந்து ஒருவித வலுவான ஈர்ப்பு அலையடித்து அவன் மீது முழு வேகத்துடன் பாய்வதை அவன் உணர ஆரம்பித்தான்.
"ஏம்புவனா இப்டியே பேசுறே! உனக்கென்ன கொறைச்சல் இப்போ?" மூர்த்தி எழுந்து புவனாவுக்கருகில் போய் கைப்பிடிச்சுவரில் உட்கார்ந்து கொண்டான்,"எப்பப்பார்த்தாலும் ஏன் இப்டியே பேசிட்டிருக்கே, கொழந்தையாட்டம்! கொஞ்சம் 'மெச்சூர்டா' இருந்தா என்ன!"
"எனக்கு அதெல்லாம் தெரியாது மூர்த்தி! எனக்கு அம்மா இல்லெ! அப்பாகிட்டெ எதையும் பேசமுடியலெ! உங்களைப் பாத்தா எனக்கு எங்கம்மா ஞாபகம் வர்றது மூர்த்தி!" முகத்தில் கைகளைப் பொத்தி அழுகையில் குழுங்கினாள் புவனா..அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஒரு குழந்தையைப் பார்ப்பதுபோல் இருந்தது!
சட்டென எழுந்து புவனாவ்¢ன் கன்னத்தில் முத்துமுத்தாய் உருண்டோடிய கண்ணீரைத் தன் விரல்களால் துடைத்து விட்டான் மூர்த்தி, "புவனா..கவலைப்படாதே! நான் இங்கேயேதான் இருப்பேன்! திரும்பவும் ஹாஸ்டலுக்குப் போயிடமாட்டேன்!"
"அப்போ! ஹாஸ்டலுக்கு திரும்பிப்போற ஐடியா வேறே இருந்துச்சா மூர்த்தீ..?" சற்று அதிர்ந்தவளாய்க் கேட்டாள் புவனேஸ்வரி.
சட்டெனச் சுதாரித்துக்கொண்டான் மூர்த்தி...தன் உள்மனத்தில் ஒளிந்திருந்த எண்ணம்,இப்போது அப்பட்டமாய் வெளிப்பட்டுவிட்டது! தட்ஷிணிக்காக, பரீட்சை முடிந்து மீண்டும் ஹாஸ்டலுக்கே திரும்பிவிடும் எண்ணம் அவன் அவனுள் முளைவிட்டிருந்ததை இப்போதுதான் அவனே உணர்கிறான்! இந்தப்புவனா அநாதைக்குழந்தையாய் தன் காலை இப்படிச் சுற்றிச்சுற்றி வருகிறாளே!
சிலவினாடிகள் அவன் முகத்தையே உற்றுப்பார்த்தபடி இருந்தாள் புவனா. அவனும் சிறிதுநேரம் புவனாவின் கண்களையும் அதில் பொங்கிவழியும் ஏக்கம், சோர்வு, இயலாமை, வருத்தம், வலி ஆகியவற்றையும் கண்ணுற்றான்! புவனாவுக்கு உடனடியாக வேண்டுவது தாய்ப்பாசம்! இவள் இன்னும் வளர்ச்சியடையாத பச்சிளங் குழந்தைதான்!
"சொல்லுங்கோ ஸார்! ஏன் பேசமாட்டேங்கிறேள்? ஹாஸ்டலுக்குத் திரும்பிப்போற ஐடியா வேறெ இருக்குதா!"
"ம்ம்!? இல்லே..வந்து.."
"நான் வர்றேன் ஸார்."” லேசாய் தடுமாறியபடி எழுந்து மாடிப்படியின் ஓரச்சுவரைப்பிடித்தபடி இறங்கிப்போன்னாள் புவனா. அவள் முகத்தில் ஆக்ரோஷம் முகம் காட்டுவதை உணர்ந்துகொண்டான் மூர்த்தி. 'ஏந்தான் இவள் இப்படியிருக்காளோ' என்று தோணிற்று.. ஒருகணம் மிகவும் குழம்பிப்போனான்.
புவனா ஏன் இப்படியிருக்கிறாள்..? சடக்,சடக்கென்று இவளுக்கு கோபம் வருவதேன்..? மாமியிடமும், அய்யரிடமும் கூட இவள் இப்படித்தானே நடந்துகொள்கிறாள்! ஏன் மாமியை இவள் மாற்றாந்தாயாகவே பார்க்கிறாள்! மாமி இவளுக்கு ஓரவஞ்சனையாக எதுவும் செய்வதாய்த் தெரியவில்லையே! உடம்புக்கு சரியில்லாமல் புவனா படுக்கையில் படுத்துக்கிடந்தபோது கூட இவளை கண்ணுங்கருத்துமாய் நல்லாத்தானே பார்த்துக்கொண்டாள் மாமி! புவனாவுக்கு உண்மையில் வேண்டுவது என்ன?
மாமிக்குத்தான் என்னால் என்ன ஆகப்போகுது? ஏன் அவள் இப்படி பைத்தியகாரத்தனமான ப்ரியத்தை என்மீது பொழிந்து தொலைக்கிறாள்! தட்ஷிணிக்கு என்னிடம் ஏனிந்தப் பிடிப்பு, ஏனிந்த உரிமை..? வனஜாவைப் பார்க்கும்போது எனக்கு ஏன் சகோதரியைப் பார்ப்பதுப்பொல் இருக்கிறது!? அட, அந்தப் புதுக்குடிக்காரி நந்தினியிடம் அப்படியென்ன அழகு கொட்டிக்கிடக்குது? அவள் எலும்பும் தோலுமாய்த்தானே இருக்கிறாள்.. அவளது ஈர்ப்புவட்டத்துக்குள் நான் எப்படி விழுந்தேன்?! அவளை உயிர்பிழைக்கச் செய்ததன் தாத்பர்யம் என்ன?
மூர்த்திக்குத் தலைசுற்றியது..சூரியன் இப்போது இன்னும் தகதகப்புடன் மேலேறி கூரிய புத்தம்புதுக் கதிர்களை அவன் முகத்தில் பாய்ச்சிற்று..மூர்த்தி தன் தலையில் கைவைத்துப் பார்த்தான். அவன் தலை இப்போது நன்கு சூடுகண்டிருந்தது.
எழுந்து பின்கோடியிலிருந்த குடிலுக்கு நடந்தான். அவனுக்கு கிறுகிறுப்பாக வந்தது. தூங்கியெழுந்து இன்னும் முகத்தைக்கூடக் கழுவவில்லை! குடிலில் இருந்த பழைய மரமேசை மீதிருந்த பாடப்புத்தகம், நோட்டுகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். அப்போது மாடிப்படியில் அவனைத்தேடிக்கொண்டு மேலேறிவந்தாள் மாமி. ஏறுவெயில் அவளது மெல்லிய வாடாமல்லி நிற ஜரிகைச்சேலையில்பட்டு அவள் மேனியை ஜ்வலிக்கச் செய்தது. அப்போது அவனுக்கு கோயிலில் பார்த்த மஞ்சள் காப்பிடப்பட்ட அம்மனின் முகம் ஞாபகத்துக்கு வந்தது. மெலிதாய்ப் புன்னகைத்தபடி தன்னை நெருங்கிவரும் மாமியிடமிருந்து ஒருவித வலுவான ஈர்ப்பு அலையடித்து அவன் மீது முழு வேகத்துடன் பாய்வதை அவன் உணர ஆரம்பித்தான்.
Guest- Guest
Re: பெண்ருசி (குறுநாவல்)
தட்ஷிணியும் வனஜாவும் கல்லூரி வளாகத்தில் ஒரு வேப்ப மர நிழலின் புல்தரையில் உட்கார்ந்து நாளைய தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார்கள்..
"நா சொன்னது உண்மைதானே! அதுக்காடி அப்பிடி செமத்தியா ஒரு அறைவிட்டே?" என்று கேட்டாள் வனஜா.
"ஆமாடி! நீ சொல்றது உண்மைதான்னு இப்பத்தாண்டி தெரியுது! இந்த மூர்த்தி நாய்தான் என்னைப் பேயாப் பிடிச்சு ஆட்டிவைக்குது! இதெல்லாம் உங்கிட்டே எப்பிடிச் சொல்றதுன்னு தெரியாமத்தான் தவிச்சிட்டிருந்தேன்! நீயே கண்டுபிடிச்சிட்டே! அதென்னடி, அவன் கிட்டக்கெ இருந்தா ஒண்ணும் தெரியமாட்டேங்குது.. கொஞ்சநாள் அவன் என்னைவிட்டுப் பிரிஞ்சப்போதாண்டி அவனோட அருமை தெரிஞ்சது!"
"உள்ளதைச் சொன்னதுக்கு எனக்கு இவ்ளோ பெரிய தண்டனையாடீ! இங்கெ பார், அப்பிடியே எங்கன்னம் பழுத்த பழமா வீங்கிப்போச்சு!" தன் இடக்கன்னத்தைத் தடவியவாறு அப்பாவியான குரலில் சொன்னாள் வனஜ்.
"சாரிடி! வெரிமச் சாரிடீ! எனக்கு அப்பப்போ கொரங்குபுத்தி வந்துருதுடி!"
"கொரங்கு இப்படியெல்லாம் அறையுமா!"
"ச்சீ,போ!அதையே பேசிட்டிருக்காதே! நாளைக்கு எக்சாம்!"
"அப்டியாந்தே! நாளைக்கு எக்சா¡மா! நல்லவேளை, ஞாபகப்படுத்தினேந்தே!"
"அய்யோ! அறுக்காதடீ! ஏண்டி இப்பிடி உளறிட்டிருக்கே?!"
"உளறாமெ என்ன பண்ண்றதாம்! நீ மட்டும் அப்டியே முழுமூச்சா படிக்கிறியாக்கும்! அதான் உனக்கு அந்த கோயில் காளை மூர்த்தி இருக்கே! எப்பப்பார்த்தாலும் அதைத்தானெ அசைபோட்டுட்டிருக்கே!"
"அசைபோடுறேனா! அப்போ நா என்ன மாடா!"
"மாடில்லேடீ! கிடேறி! கன்னுபோட்டாத்தான் அது மாடு!"
"ஏய்! எனக்கு இப்போ தாங்கமுடியலெ! பயங்கரமா ப்ளேடு போடுறே! பேசாமே ஓடிடு! இல்லே, கொலைகாரியா மாறிடுவேன்"
"அய்யோ! நீ செஞ்சாலும் செய்வே தாயே! உனக்குத்தான் பேய் பிடிச்சிருக்கே, மூர்த்தி பேய்! சரி, நான் படிக்கிற வேலையைப் பாக்குறேன்!" என்று சொல்லிவிட்டு சற்றுத் தள்ளிப்போய் அமர்ந்து படிப்பைத் தொடர்ந்தாள் வனஜ்.
தட்ஷிணி பாடத்துள் கவனம் செலுத்த முயன்றாள். மனம் பயங்கரமாய் அலைபாய்ந்தது.அங்குமிங்கும் அலைந்தது.புத்தகத்தின் கருப்பு வெள்ளைப் பக்கங்களில் அதிரடியாய் நுழைந்து தன் ஆளுமையைச் செலுத்த ஆரம்பித்தது மூர்த்தியின் பிம்பம். நேற்றிரவு என்னை விடாப்பிடியாக முட்டி மோதி தன் கூரியகொம்பால் என்னைக் குத்திக் குதறிய கோயில்காளை இவன்தானே! அவனை வெறுமனே நினைத்தாலே உள்ளுக்குள் ஏதோவொன்று உடைந்து கலகலக்கிறதே! அவனது அந்த அடர்த்தியான மீசை! அதன் ஒவ்வொரு முடியும் கூரிய கம்பியாய்க் குத்தி தன் மேனிப் பரப்பை வலியெடுக்கச் செய்கிறதே! அவனது அதிர்ந்த சிரிப்பு என்னை என்னமாய் ஈர்த்து ஒரு இசையெனத் தன்னுள் அமிழ்த்திக் கொள்கிறது! அவன் அப்படி வாய்விட்டுச் சிரிக்கையில் அவன் பற்களையும் அடர் மீசையோடுஅகண்டுவிரியும் உதடுகளையும் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது எவ்வளவு சுகம்! சிரிக்கையில் புருவங்கள் அடர்ந்த அவனது கருவிழிகள் பூரித்து ஒளிரும் அழகே அழகு! அப்போது அவன் கண்களின் ஓரத்தில் உண்டாகும் சுருக்கங்கள் ஒருவித போதையாய் என்னுள் இறங்கிப் பாய்ந்து என் அடிவயிற்றைக் கவ்விப்பிடிப்பதை எப்படி மறப்பது!
"ஹாய்!" குரல்கேட்டு நிமிர்ந்தாள் தட்ஷிணி. மூர்த்தி புன்னகைத்தவாறு நின்றுகொண்டிருந்தான்.
"என்ன அப்டிப் பாக்குறே! அய்யா தூண்லேயும் இருப்பேன்! துரும்புலேயும் இருப்பேன்!" என்று சொல்லிவிட்டு கலகலவென குலுங்கிச் சிரித்தான்.
தட்ஷிணி தன் கண்களையே நம்பமுடியாமல் திகைத்தாள்! அதே சிரிப்பு! அதே மீசை! அப்படியே நினைத்த மாத்திரத்தில் வந்து கண்ணெதிரே நிற்கிறானே!
"என்ன அப்டிப் பாக்குறே! நீ இங்கெதான் படிச்சிட்டிருப்பேன்னு தெரியும்! அதான் வந்துட்டேன்!"
"நா சொன்னது உண்மைதானே! அதுக்காடி அப்பிடி செமத்தியா ஒரு அறைவிட்டே?" என்று கேட்டாள் வனஜா.
"ஆமாடி! நீ சொல்றது உண்மைதான்னு இப்பத்தாண்டி தெரியுது! இந்த மூர்த்தி நாய்தான் என்னைப் பேயாப் பிடிச்சு ஆட்டிவைக்குது! இதெல்லாம் உங்கிட்டே எப்பிடிச் சொல்றதுன்னு தெரியாமத்தான் தவிச்சிட்டிருந்தேன்! நீயே கண்டுபிடிச்சிட்டே! அதென்னடி, அவன் கிட்டக்கெ இருந்தா ஒண்ணும் தெரியமாட்டேங்குது.. கொஞ்சநாள் அவன் என்னைவிட்டுப் பிரிஞ்சப்போதாண்டி அவனோட அருமை தெரிஞ்சது!"
"உள்ளதைச் சொன்னதுக்கு எனக்கு இவ்ளோ பெரிய தண்டனையாடீ! இங்கெ பார், அப்பிடியே எங்கன்னம் பழுத்த பழமா வீங்கிப்போச்சு!" தன் இடக்கன்னத்தைத் தடவியவாறு அப்பாவியான குரலில் சொன்னாள் வனஜ்.
"சாரிடி! வெரிமச் சாரிடீ! எனக்கு அப்பப்போ கொரங்குபுத்தி வந்துருதுடி!"
"கொரங்கு இப்படியெல்லாம் அறையுமா!"
"ச்சீ,போ!அதையே பேசிட்டிருக்காதே! நாளைக்கு எக்சாம்!"
"அப்டியாந்தே! நாளைக்கு எக்சா¡மா! நல்லவேளை, ஞாபகப்படுத்தினேந்தே!"
"அய்யோ! அறுக்காதடீ! ஏண்டி இப்பிடி உளறிட்டிருக்கே?!"
"உளறாமெ என்ன பண்ண்றதாம்! நீ மட்டும் அப்டியே முழுமூச்சா படிக்கிறியாக்கும்! அதான் உனக்கு அந்த கோயில் காளை மூர்த்தி இருக்கே! எப்பப்பார்த்தாலும் அதைத்தானெ அசைபோட்டுட்டிருக்கே!"
"அசைபோடுறேனா! அப்போ நா என்ன மாடா!"
"மாடில்லேடீ! கிடேறி! கன்னுபோட்டாத்தான் அது மாடு!"
"ஏய்! எனக்கு இப்போ தாங்கமுடியலெ! பயங்கரமா ப்ளேடு போடுறே! பேசாமே ஓடிடு! இல்லே, கொலைகாரியா மாறிடுவேன்"
"அய்யோ! நீ செஞ்சாலும் செய்வே தாயே! உனக்குத்தான் பேய் பிடிச்சிருக்கே, மூர்த்தி பேய்! சரி, நான் படிக்கிற வேலையைப் பாக்குறேன்!" என்று சொல்லிவிட்டு சற்றுத் தள்ளிப்போய் அமர்ந்து படிப்பைத் தொடர்ந்தாள் வனஜ்.
தட்ஷிணி பாடத்துள் கவனம் செலுத்த முயன்றாள். மனம் பயங்கரமாய் அலைபாய்ந்தது.அங்குமிங்கும் அலைந்தது.புத்தகத்தின் கருப்பு வெள்ளைப் பக்கங்களில் அதிரடியாய் நுழைந்து தன் ஆளுமையைச் செலுத்த ஆரம்பித்தது மூர்த்தியின் பிம்பம். நேற்றிரவு என்னை விடாப்பிடியாக முட்டி மோதி தன் கூரியகொம்பால் என்னைக் குத்திக் குதறிய கோயில்காளை இவன்தானே! அவனை வெறுமனே நினைத்தாலே உள்ளுக்குள் ஏதோவொன்று உடைந்து கலகலக்கிறதே! அவனது அந்த அடர்த்தியான மீசை! அதன் ஒவ்வொரு முடியும் கூரிய கம்பியாய்க் குத்தி தன் மேனிப் பரப்பை வலியெடுக்கச் செய்கிறதே! அவனது அதிர்ந்த சிரிப்பு என்னை என்னமாய் ஈர்த்து ஒரு இசையெனத் தன்னுள் அமிழ்த்திக் கொள்கிறது! அவன் அப்படி வாய்விட்டுச் சிரிக்கையில் அவன் பற்களையும் அடர் மீசையோடுஅகண்டுவிரியும் உதடுகளையும் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது எவ்வளவு சுகம்! சிரிக்கையில் புருவங்கள் அடர்ந்த அவனது கருவிழிகள் பூரித்து ஒளிரும் அழகே அழகு! அப்போது அவன் கண்களின் ஓரத்தில் உண்டாகும் சுருக்கங்கள் ஒருவித போதையாய் என்னுள் இறங்கிப் பாய்ந்து என் அடிவயிற்றைக் கவ்விப்பிடிப்பதை எப்படி மறப்பது!
"ஹாய்!" குரல்கேட்டு நிமிர்ந்தாள் தட்ஷிணி. மூர்த்தி புன்னகைத்தவாறு நின்றுகொண்டிருந்தான்.
"என்ன அப்டிப் பாக்குறே! அய்யா தூண்லேயும் இருப்பேன்! துரும்புலேயும் இருப்பேன்!" என்று சொல்லிவிட்டு கலகலவென குலுங்கிச் சிரித்தான்.
தட்ஷிணி தன் கண்களையே நம்பமுடியாமல் திகைத்தாள்! அதே சிரிப்பு! அதே மீசை! அப்படியே நினைத்த மாத்திரத்தில் வந்து கண்ணெதிரே நிற்கிறானே!
"என்ன அப்டிப் பாக்குறே! நீ இங்கெதான் படிச்சிட்டிருப்பேன்னு தெரியும்! அதான் வந்துட்டேன்!"
Guest- Guest
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
Similar topics
» குறுநாவல் - அசோகவனம்
» ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}
» பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை!
» ‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}
» பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை!
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 7 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|