Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே பள்ளியில் ஒரே மாதத்தில் 2வது சம்பவம் விடுதியில் மாணவன் தற்கொலை: அடித்த ஆசிரியர் கைது
3 posters
Page 1 of 1
ஒரே பள்ளியில் ஒரே மாதத்தில் 2வது சம்பவம் விடுதியில் மாணவன் தற்கொலை: அடித்த ஆசிரியர் கைது
உடுமலை : உடுமலை பள்ளி விடுதியில் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். அவன் எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. எனது தற்கொலைக்கு பொருளாதார ஆசிரியரே காரணம் என அதில் எழுதப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து அந்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1700 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்களில் 1,160 மாணவர்கள், 450 மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடைக்கோட்டையை சேர்ந்த அன்பழகன் மகன் அனுஜ் (16), விடுதியில் தங்கி பிளஸ் 1 படித்தான். அவனது தம்பி ஆகாஷ் 9ம் வகுப்பு படிக்கிறான்.
நேற்று காலை விடுதியில் உள்ள மருத்துவ பரிசோதனை அறையில், மின்விசிறியில் அனுஜ் தூக்கில் தொங்கினான். இதைப் பார்த்த சக மாணவர்கள் விடுதி நிர்வாகிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இதற்கிடையில், மாணவன் தூக்கில் தொங்கிய தகவல் அறிந்து, மற்ற மாணவர்களின் பெற்றோரும், பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கட்சியினரும் பள்ளி முன் திரண்டனர். ஏற்கனவே, இதே பள்ளியில் கடந்த மாதம் 19ம் தேதி கிருஷ்ணகுமார் என்ற 10ம் வகுப்பு மாணவன் மர்மமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோரும், உறவினர்களும் மறியல் உள்ளிட்ட போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், மீண்டும் ஒரு மாணவன் இறந்ததால் பதற்றம் ஏற்பட்டது. பள்ளி முன்பு டிஎஸ்பி செந்தில் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். டிஎஸ்பியுடன் மார்க்சிஸ்ட் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘ஏற்கனவே ஒரு மாணவன் இறந்ததற்கு பள்ளி நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது இன்னொரு மாணவன் இறந்துள்ளான். சாவில் மர்மம் உள்ளது. உரிய விசாரணை நடத்த வேண்டும்' என்றனர்.
டிஎஸ்பியின் சமாதானத்தை ஏற்காமல் தொடர்ந்து கோஷமிட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் டிஎஸ்பி செந்தில் தடுமாறி விழுந்தார். மாணவன் சடலத்துடன் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்ட ஆம்புலன்சை மக்கள் மறித்தனர். பின்னர் மக்கள் பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் உடுமலை பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தடியடி நடத்தப்படும் என போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
மாணவன் சாவு குறி த்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாணவன் அனுஜ் சடலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவன் சாவு குறித்து பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் கேரளா சென்றிருந்ததால் தாமதமாக வந்து கதறி அழுதனர். உறவினர்களும் திரண்டனர்.
பள்ளிக்கு விடுமுறை:
மாணவன் சாவை தொடர்ந்து பள்ளிக்கும், அதே வளாகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டது. எஸ்.பி பாலகிருஷ்ணன், ஆர்டிஓ ஜெயமணி, திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி, ஏஎஸ்பி விக்ரமன்ஆகியோர் அங்கு வந்து விசாரித்தனர். பதற்றம் நிலவியதால் பள்ளி முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். மாணவன் சாவுக்கு காரணமாக ஆசிரியர் மகேஸ்வரன் கைது செய்யப்பட்டார்.
‘இறந்தால் ரூ.5 லட்சம் தருவேன்’
தற்கொலை செய்து கொண்ட மாணவன் அனுஜ், அவரது பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நான் இறந்ததற்கு காரணம் பொருளாதார ஆசிரியர் பி.மகேஸ்வரன் தான். ஆசிரியர் என்னை மிரட்டி `நீ இறந்து விட்டால் உன் வீட்டுக்கு ஸி5 லட்சம் தருவேன் என்றார். அதற்கு நான் கூறினேன், அப்படி இறக்க முடியாது என்றேன். அதற்கு அவர் என் காதுக்கு மேலே உள்ள முடியை பிடித்து ஆட்டி என்னை அடித்து அவர் இவ்வாறு செய்ய வைத்தார்.
இவ்வாறு கடிதத்தில் அனுஜ் எழுதி இருக்கிறான். நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு வேண்டுகோள்: இன்னொரு பேப்பரில் உள்ள செய்தியை யாரிடமும் ஒப்படைக்காதீங்க. என் தம்பிக்கிட்டேயோ அல்லது பெற்றோரிடமோ தந்து விடுங்கள். உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத வகையில் இருந்து கொள்ளுங்கள். நான் எங்கேயாவது தான் பிணமாக கிடப்பேன். முக்கியமாக சிக் ரூமில் பாருங்கள். என்னுடைய ஒரேயொரு வேண்டுகோள், இதை எப்படியாவது பெரிய பிரச்னையாக செய்யுங்கள். சும்மா விடாதீங்க. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளான்.
இனம் புரியாத கோபம்
மாணவன் அனுஜூடன் விடுதி அறையில் தங்கியிருந்த மாணவர்களிடம் எஸ்பி., பாலகிருஷ்ணன் விசாரித்தார். மாணவர்கள் கூறுகையில், ‘டை கட்டவில்லை என்பதற்காக அனுஜை ஆசிரியர் மகேஸ்வரன் அடித்தார். அதில் இருந்து அனுஜ் கவலையுடன் இருந்தான். நாங்கள்தான் அவனுக்கு ஆறுதல் கூறினோம். ஆசிரியர் மகேஸ்வரனுக்கு எங்கள் 9 பேர் மீதும் இனம் புரியாத கோபம். எந்த நேரமும் எங்களை காரணமில்லாமல் அடிப்பார் என்றனர். அப்போது ஒரு மாணவன் தனது கையை காண்பித்து அந்த ஆசிரியர் அடித்ததால் ஏற்பட்ட வீக்கம் இன்னும் குறையவில்லை என்று கண்ணீருடன் கூறினான்.
இது குறித்து எஸ்.பி. பாலகிருஷ்ணன், முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி கூறுகையில், ‘கடந்த மாதம் ஒரு மாணவன் இறந்த போது, இனி தவறு ஏதும் நடந்தால் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை கூட்டி பேசுவோம் என்று பள்ளி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அப்படி எந்தவித கூட்டமும் நடத்தப்பட்டதாக தெரியவில்லை. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
thinakaran
Re: ஒரே பள்ளியில் ஒரே மாதத்தில் 2வது சம்பவம் விடுதியில் மாணவன் தற்கொலை: அடித்த ஆசிரியர் கைது
என்ன தான் நடக்குது ஒண்ணும் புரியல
நம்பும் படி இல்லையே
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
தற்கொலை செய்து கொண்ட மாணவன் அனுஜ், அவரது பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நான் இறந்ததற்கு காரணம் பொருளாதார ஆசிரியர் பி.மகேஸ்வரன் தான். ஆசிரியர் என்னை மிரட்டி `நீ இறந்து விட்டால் உன் வீட்டுக்கு ஸி5 லட்சம் தருவேன் என்றார். அதற்கு நான் கூறினேன், அப்படி இறக்க முடியாது என்றேன். அதற்கு அவர் என் காதுக்கு மேலே உள்ள முடியை பிடித்து ஆட்டி என்னை அடித்து அவர் இவ்வாறு செய்ய வைத்தார்.
இவ்வாறு கடிதத்தில் அனுஜ் எழுதி இருக்கிறான். நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு வேண்டுகோள்: இன்னொரு பேப்பரில் உள்ள செய்தியை யாரிடமும் ஒப்படைக்காதீங்க. என் தம்பிக்கிட்டேயோ அல்லது பெற்றோரிடமோ தந்து விடுங்கள். உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத வகையில் இருந்து கொள்ளுங்கள். நான் எங்கேயாவது தான் பிணமாக கிடப்பேன். முக்கியமாக சிக் ரூமில் பாருங்கள். என்னுடைய ஒரேயொரு வேண்டுகோள், இதை எப்படியாவது பெரிய பிரச்னையாக செய்யுங்கள். சும்மா விடாதீங்க. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளான்.
நம்பும் படி இல்லையே
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஒரே பள்ளியில் ஒரே மாதத்தில் 2வது சம்பவம் விடுதியில் மாணவன் தற்கொலை: அடித்த ஆசிரியர் கைது
ஆசிரியர் சாகச் சொன்னா செத்துருவானா அதான் எனக்கு புரியல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஒரே பள்ளியில் ஒரே மாதத்தில் 2வது சம்பவம் விடுதியில் மாணவன் தற்கொலை: அடித்த ஆசிரியர் கைது
கரெக்ட் பாட்டி கூட படிக்கிற பசங்க வாத்தியார் மேல இருக்குற கடுபுல ஏதாவது எக்ஸ்ட்ரா பிடிங்க்ஸ் போடுருபங்கா
Re: ஒரே பள்ளியில் ஒரே மாதத்தில் 2வது சம்பவம் விடுதியில் மாணவன் தற்கொலை: அடித்த ஆசிரியர் கைது
இது என்னமோ தன்னை திட்டிய ஆசிரியரை பழி வாங்க செய்த மாதிரி தெரியுதே
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சேலம் மாணவர் தற்கொலை- : ஆசிரியர் கைது!
» மாணவியிடம் ஆசிரியர் சில்மிசம்? தவறான தகவலால் பள்ளியில் புகுந்த கும்பல் தாக்கியதில் 4 ஆசிரியர் காயம்
» பள்ளி விடுதியில் தூக்குப் போட்டு 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
» பள்ளியில் பெட்டிக்குள் இறந்து கிடந்த மாணவன் கொலை?
» கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை தூக்கில் பிணம்
» மாணவியிடம் ஆசிரியர் சில்மிசம்? தவறான தகவலால் பள்ளியில் புகுந்த கும்பல் தாக்கியதில் 4 ஆசிரியர் காயம்
» பள்ளி விடுதியில் தூக்குப் போட்டு 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
» பள்ளியில் பெட்டிக்குள் இறந்து கிடந்த மாணவன் கொலை?
» கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை தூக்கில் பிணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|