புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள்
Page 1 of 1 •
ஊழலை எதிர்த்து அண்ணா ஹசாரே கொடுக்கும் குரல் புதிதாகத் தெரிவதால், நாடு முழுவதும் ஆதரவு பெருகுகிறது. உண்மையில் இவர் கூறுவதைவிடக் கடுமையான சட்டங்கள் நம் நாட்டில் இருந்திருக்கின்றன. இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்த மிகப் பழைமையான சட்டம்.
இதைக் கேட்கும் அரசியல்வாதிகள் வயிற்றில் கண்டிப்பாகக் கிலி கிளம்பும். அந்தச் சட்ட நெறிமுறைகளின்படி, ஜனநாயக மன்றங்களில் கணக்குக் காட்டாத முன்னாள் உறுப்பினர்களும், பொதுச் சொத்தைச் சுரண்டுபவர்களும் தமது ஆயுள்காலம் முழுவதும் தேர்தலில் நிற்க முடியாது. இவர்களுடன் சேர்த்து அந்த முன்னாள்களின் உறவினர்களுக்கும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அன்றுபோல் இன்று இருந்தால், அரசியல் கட்சிகள் அதை இழுத்து மூடிவிட்டு வேறு வேலை பார்க்க வேண்டி இருக்கும்.
ஜனநாயக நாடான நம் இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆங்கிலேயர் காலத்தில் நடைமுறைக்கு வந்தது என நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தென் இந்தியாவில் மட்டும் உண்மை அதுவல்ல எனத் தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகள் கூறுகின்றன. இதில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம்போல் "சபை' என்ற பெயரில் ஒரு முன்னோடி அமைப்பு இருந்ததற்கான பல சுவையான குறிப்புகள் உள்ளன.
இந்தியாவின் பூர்வீகக் குடிகளான திராவிடர்கள், நம் நாட்டில் நீதி, நேர்மையை நிலைநாட்டும் வகையில் சட்டம் இயற்றி, ஆட்சி புரிந்தவர்கள் என்பதற்கான முக்கிய வரலாற்று ஆதாரம் இது.
கி.மு. 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தகன் காலத்திய மூன்று கல்வெட்டுகள் மிக முக்கியமானவை. இதில் இரண்டு உத்தரமேரூரிலும், மற்றொன்று தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கிடைத்துள்ளன. சுமார் 8 முதல் 16-ம் நூற்றாண்டு வரை தென் இந்தியாவில் சபை என்ற அமைப்பு செயல்பட்டு வந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, பிராமணர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட இடங்களான பிரம்மதேயம் எனப்படும் கிராமங்களில் இன்றைய ஜனநாயக மன்றங்கள்போல் சபைகள் பணியாற்றியுள்ளன.
குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரைப்போல் சோழ, பாண்டியர், பல்லவர் மற்றும் விஜயநகர மன்னர்களின் ஆட்சியின் கீழ் இயங்கி வந்த சபைகளுக்கு முதல் அமைச்சரைப்போல் ஒரு தலைவர் இல்லையே தவிர, கிராமங்களைப் பல பிளாக்குகளாகப் பிரித்து அதற்கு எம்எல்ஏவைப்போல ஓர் உறுப்பினர் இருந்துள்ளார். இவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தாலும், அதற்காகக் கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் இன்றைக்குத் தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கும் விதிகளுக்குப் பொருந்தும்படியாக அமைந்திருந்தன.
இந்தச் சபையின் உறுப்பினர்கள் செய்யும் குற்றங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பிராமணர்களைக் கொன்ற கொலையாளி, போதை தரும் பானத்தைக் குடித்தவன், திருட்டு செய்தவன் மற்றும் தனது குருவின் மனைவியுடன் பாலியல் குற்றம் செய்தவன் ஆகியவர்கள் முதல் வகை குற்றவாளிகளாகக் கருதப்படுகிறார்கள்.
இரண்டாம் வகை குற்றங்களாக, கடந்த முறை கிராம சபையின் உறுப்பினராக இருந்தபோது செய்த செலவிற்கான கணக்கைக் காட்டாதவர்கள் மற்றும் தன் பதவிக் காலத்தில் பொதுச் சொத்தைக் களவாடியவர்கள் ஆகியோர் கருதப்படுகிறார்கள்.
மூன்றாவது வகை குற்றங்களில் கீழ்ச் சாதியினருடன் சாதாரண பழக்கவழக்கங்களில் தொடர்பு வைத்திருப்பவர்கள் மற்றும் சாதியில் இருந்து விலக்கப்பட்டோர் வருகின்றனர்.
இதில், முதல் வகையினர் தங்கள் ஆயுள்காலம் முழுவதும் தேர்தலில் பங்கு கொள்ளும் தகுதியை இழக்கிறார்கள். மூன்றாவது வகையினர், அதற்கான சில பரிகாரங்கள் செய்துவிட்டு மீண்டும் போட்டியிடலாம். ஆனால், இவை அனைத்தையும்விட இரண்டாம் வகையினருக்கான தண்டனை மிகவும் அதிகம்.
இவர்களின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, "கிராமத் துரோகிகள்' என்ற பட்டப் பெயரில் அழைக்கப்பட்டனர். இது மிகப்பெரிய குற்றமாகக் கணக்கில் எடுக்கப்பட்டு, இவர்களுடன் சேர்த்து அந்த முன்னாள் உறுப்பினர்களின் தந்தை, சகோதரர்கள், தாய், தந்தையுடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் சித்தி, அத்தை ஆகியோரின் கணவன்மார்கள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகள் என மூன்று தலைமுறைகளுக்கு நீளும் பட்டியலில் எவருமே நிரந்தரமாகத் தேர்தலில் போட்டியிட முடியாது. தேர்தலில் போட்டியிட நிர்ணயிக்கப்பட்ட இத் தகுதிகளை இப்போது நாம் அமல்படுத்த நினைத்தால் கனவிலும் அது நடக்காத செயலாகும்.
அந்தக் காலத்திலேயே தேர்தலில் போட்டியிடும் பிராமணர்கள் ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களில் ஒன்றைக் கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும் எனத் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் சொந்தமாக வீடு மற்றும் ஒன்றரை ஏக்கர் நிலம் வரி கட்டக் கூடிய நிலையில் இருக்க வேண்டும். ஆனால், இவை வரதட்சிணையாகப் பெற்றிருக்கக் கூடாது.
சேவை மனப்பான்மையில் உறுப்பினர்களாக வருபவர்கள், சுரண்டல் செய்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கடுமையான தகுதி.
அதேபோல், ஒரே குடும்பம் ஆட்சி செய்யாதபடி ஒரு சட்டம் இயற்றப்பட்டிருந்தது. அதன்படி, கடைசி உறுப்பினராக இருந்தவர்கள் இரண்டு முதல் பத்து ஆண்டுகள் வரையிலான இடைவெளிக்குப் பிறகுதான் போட்டியிட முடியும். இவர்களின் உறவினர்களும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடாது.
இத்துடன் புதியவர்களுக்குக் கட்டாய வாய்ப்பளிக்கும் வகையில், அனுபவமில்லாத உறுப்பினர்கள் இருவர் கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியும் உண்டு.
ஆளும் கட்சியில் நடக்கும் தேர்தல், அவர்களுக்குச் சாதகமாகத்தான் அமையும் என இன்று இருக்கும் பொதுவான புகாருக்கு அந்தக் காலத்தில் வழியில்லை. காரணம், தேர்தல் நடத்துவதற்கு முன்பாக சபைகள் கலைக்கப்பட்டு, ஊர் கணக்கு மற்றும் மத்தியஸ்தன் ஆகியோர் தலைமையில் தேர்தல் நடைபெறும்.
கிராமத்தின் பிளாக்குகள் வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள். இது "குடஓலை' முறை என வரலாற்றாளர்களால் அழைக்கப்படுகிறது.
ஜனநாயக நாடான நம் இந்தியாவில் தவறு செய்யும் அரசியல்வாதியைத் தண்டிப்பது அல்லது அபராதம் விதிப்பது என்பது பெரும்பாலும் நடப்பதில்லை. ஆனால், இது 10-ம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் நடந்திருக்கிறது.
திருநெல்வேலியில் உள்ள மண்ணூர் கிராமத்தில் கிடைத்த கல்வெட்டுகளின்படி, சபை நடப்பு விதிமுறைகளில் உறுப்பினர்கள் தவறு செய்தால் அபராதம் எனக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. இந்த முறையை தற்போது கடைப்பிடித்தால் சபை ஒத்திவைப்பு, வெளிநடப்பு மற்றும் மைக் உடைப்பு போன்ற கலாட்டாக்களுக்கு வழியில்லாமல் போய்விடும். அதேநேரத்தில் அரசு கஜானாவும் நிரம்புவது உறுதி.
பிரச்னைகளைக் கையிலெடுக்கும் எதிர்க்கட்சிகள் சபைகளை நடத்த விடாமல் மக்கள் பணத்தை வீண் செய்வதைத் தடுக்கவும் நம் முன்னோர்கள் வழிவகுத்துள்ளனர். தங்களுக்குள் கோஷ்டி அமைத்துக்கொண்டு, சபையின் அன்றாடச் செயல்பாடுகளுக்குத் தடையாக இருப்பவர்கள் மீது, ஒருமுறைக்கு ஐந்து பணம் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. அதேசமயம் சபை நடவடிக்கைகளில் தொடர்ந்து கலந்துகொள்ளும் பொருட்டு அவர்கள் சபையில் இருந்து வெளியேற்றப்படவில்லை. மாறாக, கட்டாயமாக சபை நடப்புகளில் கலந்து கொள்ளும்படியான நிலை இருந்தது.
தற்போது கிளப்பப்படும் அரசியல்வாதிகளுக்கான ஓய்வு வயது அப்போதே நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் 35 முதல் 70 வயது வரையிலானவர்கள் மட்டும் தேர்தலில் போட்டியிட விதி இருந்தது. இதில் குறைந்தபட்ச வயதை பிறகு இரண்டு வயது அதிகமாக்கி 37 ஆகவும் அதிகபட்ச வயது வரம்பை 75 எனவும் மாற்றி அமைக்கப்பட்டது.
இன்று ஆளும் அரசு அமல்படுத்தும் மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரிடம் அனுமதி பெறுவதுபோல், அந்தக் காலங்களில் மன்னரால் போடப்பட்ட ஆணைகளைச் சபைகளில் அமலாக்கினர்.
எந்த ஒரு விஷயத்துக்கும் வெளிநாடுகளை முன் உதாரணமாகக் காட்டிப் பழகிய நாம், சற்று நம் காலடி மண்ணின் வரலாற்றைத் தோண்டினால், உலகுக்கே நாம்தான் வழிகாட்டிகளாக இருக்க முடியும். இதை மீண்டும் அமல்செய்ய ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் தற்போதைய அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா?
(கட்டுரையாளர்: அலிகர் முஸ்லிம்
பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்
துறையின் உதவிப் பேராசிரியர்).
தினமணி
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உண்மையில் வியப்பாக இருக்கிறது. இதில் நல்ல நெறிமுறைகள் பல உள்ளன. ஆனால் ஒரே குறை சாதி அடிப்படையில் தவறுகளை பிரித்தது.
பகிர்வுக்கு நன்றி பகவதி.
பகிர்வுக்கு நன்றி பகவதி.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, "கிராமத் துரோகிகள்' என்ற பட்டப் பெயரில் அழைக்கப்பட்டனர். இது மிகப்பெரிய குற்றமாகக் கணக்கில் எடுக்கப்பட்டு, இவர்களுடன் சேர்த்து அந்த முன்னாள் உறுப்பினர்களின் தந்தை, சகோதரர்கள், தாய், தந்தையுடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் சித்தி, அத்தை ஆகியோரின் கணவன்மார்கள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகள் என மூன்று தலைமுறைகளுக்கு நீளும் பட்டியலில் எவருமே நிரந்தரமாகத் தேர்தலில் போட்டியிட முடியாது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|